என் மலர்
நீங்கள் தேடியது "Shama Mohammed"
- காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு எம்.பி.யுமான ராகுல்காந்தி, அரசியலில் அதிக பெண்கள் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கூறி வருகிறார்.
- பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
திருவனந்தபுரம்:
பாராளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள பட்டியலில் கேரள மாநிலத்தில் 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் பெண் வேட்பாளர்.
51 சதவீதம் பெண்கள் கொண்ட கேரள மக்கள் தொகையில், ஒரே ஒரு பெண் வேட்பாளர் மட்டுமே அறிவிக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்று அகில இநதிய காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ஷாமா முகமது தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு எம்.பி.யுமான ராகுல்காந்தி, அரசியலில் அதிக பெண்கள் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கூறி வருகிறார். ஆனால் கேரளாவில் உள்ள கட்சித் தலைவர்கள் இதற்கு செவி சாய்க்கவில்லை என்று தெரிகிறது. பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு, சட்டம் நிறை வேற்றப்பட்ட பிறகும், மாநிலத்தில் ஒரு பெண் வேட்பாளரை மட்டுமே கட்சி நிறுத்தியுள்ளது. அதுவும் ஆலத்தூர் தனித் தொகுதி என்பதால் மட் டுமே ரம்யா ஹரிதாசுக்கு சீட் கிடைத்துள்ளது. இல்லை யென்றால் அவரும் கைவிடப்பட்டு இருப்பார்.
வேட்பாளர்களை இறுதி செய்யும்போது தலைவர்கள், பெண்களுக்கு உரிய முக்கியத்துவத்தை அளித்திருக்க வேண்டும். வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள இடங்களில் பெண்களை நிறுத்தியிருக்க வேண்டும். கடந்த தேர்தலில் 2 பெண்கள் போட்டியிட்டனர். ஆனால் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு இந்த முறை ஒருவர் மட்டுமே களத்தில் இருப்பது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது. கேரளாவில் போட்டியிடும் 12 வேட்பாளர்கள் கொண்ட பாரதிய ஜனதாவின் ஆரம்ப பட்டியலில் 3 பெண் வேட்பாளர்களும், எல்.டி.எப். அறிவித்த 20 வேட்பாளர்களின் பட்டியலில் 2 பெண்களும் இடம் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள முன்னாள் முதல்-மந்திரி கருணாகரனின் மகள் பத்மாஜா வேணுகோபால், தான் புறக்கணிக்கப்படுவதாக கூறி காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜனதாவில் இணைந்த நிலையில், ஷாமாவின் கருத்து தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இது தொடர்பாக காங் கிரஸ் கட்சியின் தேசிய நிர்வாகி ஓருவர் கூறுகையில், ஷாமா புகார் அளிக்கவில்லை. பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் பெண்களின் வாக்குகள் மற்ற கட்சிகளுக்குச் செல்கிறது என்றும், அவர்களை திரும்ப பெற கட்சிக்கு அதிக பெண் வேட்பாளர்கள் தேவை என்றும் தெரிவித்துள்ளார் என்றார்.
- எடை குறைந்த வீரர்கள் மட்டும் வேண்டுமென்றால், அனைத்து மாடல்களையும்தான் தேர்வு செய்ய வேண்டும் என கவாஸ்கர் கூறினார்.
- ஒரு ஐசிசி போட்டியில் விளையாடி கொண்டிருக்கும், அவரை உடல் ரீதியாக அவமானப்படுத்துவது முற்றிலும் தேவையற்றது.
மும்பை:
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தனது உடல் எடையை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் டாக்டர் ஷமா முகமது தெரிவித்தார்.
ரோகித் சர்மா உடல் பருமனான விளையாட்டு வீரர். அவர் தனது உடல் எடையை குறைக்க வேண்டும். நிச்சயமாக இந்தியா இதுவரை கண்டிராத மிகவும் ஈர்க்க முடியாத கேப்டன் என்று ஷமா முகமது கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு முன்னாள் கேப்டன் கவாஸ்கர் மற்றும் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கவாஸ்கர் கூறும்போது, எடை குறைந்த வீரர்கள் மட்டும் வேண்டுமென்றால், நீங்கள் ஒரு மாடலிங் போட்டிக்குச் சென்று அனைத்து மாடல்களையும்தான் தேர்வு செய்ய வேண்டும்.
இதை நான் ஏற்கனவே கூறியுள்ளேன். இது உடல் எடையை பொறுத்தது அல்ல. நீங்கள் எவ்வளவு சிறப்பாக கிரிக்கெட் விளையாட முடியும் என்பது பற்றியது. சர்பிராஸ்கான் உடல் எடை அதிகமாக இருப்பதால் விமர்சிக்கப்பட்டார். ஆனால் அவர் ஒரு டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்காக 150 ரன்கள் எடுத்தார். அதன்பின் அரைசதங்களும் அடித்தார்.
நான் விளையாடிய காலத்தில் என்னால் மைதானத்தை 2 முறை சுற்றி ஓட முடியாது. ஆனால் நான் நாள் முழுவதும் நின்று பேட்டிங் செய்தேன். உடல் எடைக்கும், மனவலிமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கிரிக்கெட் உடற்பயிற்சி மற்றும் உடல் தகுதி இரண்டும் வெவ்வேறு விஷயங்கள் ஆகும். நீங்கள் நீண்ட தூரம் நீடிக்க முடியுமா என்பதுதான் மிக முக்கியமான விஷயம் என்றார்.
வெங்கடேஷ் பிரசாத் கூறும்போது, ஒரு கேப்டனாக ரோகித் சர்மா மிகுந்த கண்ணியத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். 8 மாதங்களுக்கு முன்பு 20 ஓவர் உலகக் கோப்பையை வென்றார்.
வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஒரு ஐசிசி போட்டியில் விளையாடி கொண்டிருக்கும், அவரை உடல் ரீதியாக அவமானப் படுத்துவது முற்றிலும் தேவையற்றது. பல ஆண்டுகளாக தனது திறமைகள் மற்றும் தலைமைத்துவத்தின் மூலம் சாதித்த ஒரு நபருக்கு கொஞ்சம் மரியாதை கொடுக்க வேண்டும் என்றார்.