என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sharad Pawar"

    • கர்நாடகாவில் 10-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
    • நாட்டின் ஒட்டுமொத்த வரைபடத்தை பார்த்தால் 5 முதல் 6 மாநிலங்களில் மட்டுமே பா.ஜனதா ஆட்சியில் உள்ளது.

    மும்பை :

    கர்நாடகாவில் வருகிற 10-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எனக்கு கிடைத்த தகவலின்படி கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும். நாம் கேரளாவில் இருந்து தொடங்குவோம்.

    கேரளாவில் பா.ஜனதா ஆட்சியில் இருக்கிறதா? தமிழ்நாட்டில்? கர்நாடகாவை பற்றி தற்போது சொல்லி இருக்கிறேன். தெலுங்கானாவில் பா.ஜனதா இருக்கிறதா? ஆந்திராவில்? ஏக்நாத் ஷிண்டேவின் புத்திசாலித்தனத்தால் அவர்களால் மராட்டியத்தில் ஆட்சியை பிடிக்க முடிந்தது.

    மத்தியபிரதேசத்தில் கமல்நாத் முதல்-மந்திரியாக இருந்தபோது சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் விலைக்கு வாங்கப்பட்டதால் அங்கு பா.ஜனதா ஆட்சிக்கு வந்தது.

    ராஜஸ்தான், அரியானா, டெல்லி, பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா இல்லை. நாட்டின் ஒட்டுமொத்த வரைபடத்தை பார்த்தால் 5 முதல் 6 மாநிலங்களில் மட்டுமே பா.ஜனதா ஆட்சியில் உள்ளது. மீதமுள்ள மாநிலங்களில் பா.ஜனதா அல்லாத அரசு தான் உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் என்ன நடக்கும் என்று கணிக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சகிப்பு தன்மை மற்றும் மதச்சார்பின்மை தான் நமது நாட்டின் ஆன்மா
    • பா.ஜனதா மத குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது.

    மும்பை

    மராட்டியத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாவுராவ் பாட்டீலின் 64-வது நினைவு நாளையொட்டி சத்தாராவில் உள்ள அவரது கல்லறையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சகிப்பு தன்மை மற்றும் மதச்சார்பின்மை தான் நமது நாட்டின் ஆன்மா. ஆனால் ஆபரேஷன் தாமரை என்ற பெயரில் இதை அழிக்கும் நிலைப்பாட்டை பா.ஜனதா எடுத்து உள்ளது. 'ஆபரேஷன் தாமரை' நாட்டின் ஆன்மாவை அழிக்கிறது. பா.ஜனதா மத குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது.

    ஆட்சி அதிகாரம் கிடைக்கவில்லை எனில் அதற்காக எதையும் செய்யும் பா.ஜனதாவின் கொள்கை ஆபத்தானது. அது அதிகார மோதலை அதிகரிக்கிறது. பா.ஜனதா மற்ற கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை உடைத்து மராட்டியம், கர்நாடகா, மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைத்து உள்ளது.

    கர்நாடகத்தில் தேசியவாத காங்கிரஸ் குறைந்த தொகுதிகளில் தான் போட்டியிடுகிறது. காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் தான் போட்டியிடுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிலர் எழுதியதற்கு நாங்கள் முக்கியதுவம் கொடுக்க மாட்டோம்.
    • நாங்கள் செய்வது எங்களுக்கு தெரியும்.

    மும்பை :

    உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவில் சரத்பவார் அவரது அரசியல் வாரிசை உருவாக்க தவறிவிட்டதாக கூறப்பட்டு இருந்தது. மேலும் அதில், " சரத்பவார் தேசியவாத காங்கிரசின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க உருவாக்கிய கமிட்டியில் ஆளும் பா.ஜனதா கட்சிக்கு தாவ விருப்பம் உள்ள தலைவர்களின் பெயர்களும் இடம் பெற்று இருந்தது.

    கட்சியினர் கொடுத்த அழுத்தம் காரணமாக அந்த தலைவர்கள் சரத்பவார் தலைவர் பதவியில் தொடர வேண்டும் என்ற முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்" என கூறப்பட்டு இருந்தது.

    இதற்கு பதிலளிக்கும் வகையில் சரத்பவார் கூறியதாவது:-

    நாங்கள் புதிய தலைமையை உருவாக்கினோமா இல்லையா என்பது குறித்து சிலர் எழுதியதற்கு நாங்கள் முக்கியதுவம் கொடுக்க மாட்டோம். அது அவர்களின் எழுத்து. அதை நாங்கள் நிராகரிக்கிறோம். நாங்கள் செய்வது எங்களுக்கு தெரியும். அது எங்களுக்கு திருப்தியாக உள்ளது.

    நான் இணை மந்திரியாக இருந்து பின்னர் கேபினட் மந்திரியானேன். ஆனால் 1999-ம் ஆண்டு காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்த போது நான் இளைஞர்களாக இருந்த ஜெயந்த் பாட்டீல், அஜித் பவார், திலீப் வால்சே பாட்டீல், ஆர்.ஆர். பாட்டீலை கேபினட் மந்திகளாக ஆக்கினேன். அவர்களின் பணியை ஒட்டுமொத்த மராட்டியமும் பார்த்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த நிதிஷ்குமார் முயற்சித்து வருகிறார்.
    • இதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

    மும்பை:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் பணியில் பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் ஈடுபட்டு வருகிறார்.

    மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரை நிதிஷ்குமார் சந்தித்தார். அகிலேஷ் யாதவுடன் சேர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்தார். அப்போது, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்ட உறுதி பூண்டனர்.

    சமீபத்தில் ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை நிதிஷ்குமார் சந்தித்தார். மேலும், ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சிக்கு சென்ற நிதிஷ்குமாரும், பீகார் மாநில துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவும் முதல் மந்திரி ஹேமந்த் சோரனைச் சந்தித்துப் பேசினர்.

    இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் சென்ற நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ் உத்தவ் தாகரே மற்றும் சரத் பவார் ஆகியோரைச் சந்தித்துப் பேசினர். அப்போது பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிய்னர் ஆற்ற வேண்டிய செயல்பாடுகள் குறித்து விவாதித்தனர்.

    • கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது.
    • இது எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக அமைந்துள்ளது.

    மும்பை:

    கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடித்து 5 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி மீட்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த வெற்றி எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக அமைந்துள்ளது.

    இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் புனேவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    வயநாடு தொகுதியின் முன்னாள் எம்.பி.யான ராகுல் காந்தி நடத்திய பாதயாத்திரைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது கர்நாடக தேர்தல் வெற்றி.

    ராகுல் காந்தி சித்தாந்தத்தை மக்கள் வலுப்படுத்துவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

    கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் படிப்படியாக நிலைமை மாறி வருவதை நமக்கு காட்டுகிறது. அங்கு சாமானிய மக்களின் அரசு பதவியேற்றுள்ளது.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் நாம் பார்த்ததை நாட்டின் பிற இடங்களிலும் பிரதிபலிக்க முடியும் என தெரிவித்தார்.

    ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாராளுமன்ற ஜனநாயகத்தை காக்க போராட வேண்டிய நேரம் இது.
    • டெல்லி அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.

    மும்பை :

    டெல்லியில் அதிகாரிகள் மாற்றம், நியமனம் போன்றவற்றில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக டெல்லி அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கே அதிகாரம் இருப்பதாக சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு அளித்தது.

    இதையடுத்து அதிகாரிகள் நியமனம் மற்றும் மாற்றத்தில் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லியில் உள்ள சிவில் சர்வீசஸ் ஆணையத்துக்கு அதிகாரம் அளிப்பதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

    சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நீர்த்து போகச் செய்யும் மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பா.ஜனதா அல்லாத கட்சி தலைவர்களை சந்தித்து, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு திரட்டி வருகிறார்.

    அந்த வகையில் பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோரை சந்தித்து மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிரான ஆம் ஆத்மியின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

    இந்நிலையில், 2 நாள் பயணமாக அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பகவந்த் மான் ஆகியோர் மும்பை வந்தனர். நேற்று முன்தினம் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் தலைவரும், மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரேயை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

    இந்தநிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பகவந்த் மான் ஆகியோர் நேற்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு தேசியவாத காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்தது.

    அப்போது மத்திய அரசின் அவசர சட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மியின் போராட்டத்துக்கு தனது கட்சி துணை நிற்கும் என்று அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சரத்பவார் உறுதியளித்தார். இதையடுத்து சரத்பவாருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்தார்.

    பின்னர் சரத்பவார் நிருபர்களிடம் கூறுகையில், "டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக போராடும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எங்களது கட்சி முழு ஆதரவு தெரிவிக்கிறது. இந்த விவகாரத்தில் பா.ஜனதா அல்லாத அனைத்து கட்சிகளும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு அளிப்பது நமது கடமை. பாராளுமன்ற ஜனநாயகத்தை காக்க போராட வேண்டிய நேரம் இது" என்றார்.

    • அரசியல் வல்லுனர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே இடத்தில் திரளும் நிகழ்ச்சி வருகிற 12-ந்தேதி நடத்தப்பட உள்ளது.
    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தல் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளுக்கு வாழ்வா? சாவா? என்ற மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தி இருக்கிறது.

    மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே பாரதிய ஜனதாவை தேசிய அளவில் வீழ்த்த முடியும் என்று மம்தா பானர்ஜி, பரூக் அப்துல்லா, நிதிஷ்குமார், லாலு பிரசாத், சரத்பவார் போன்ற தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    ஆனால் மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி ஒன்றிணைந்து செயல்படுவதில் பல மாநிலங்களில் பல்வேறு பிரச்சனைகள் காணப்படுகின்றன. அவற்றுக்கு தீர்வு கண்டு காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் ஒன்று திரட்டும் முயற்சியில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார்.

    இதுவரை அவர் மம்தா பானர்ஜி, சரத்பவார், சந்திரசேகர், அகிலேஷ் யாதவ், கெஜ்ரிவால் உள்பட பல்வேறு மாநில கட்சி தலைவர்களை சந்தித்து பேசி உள்ளார். காங்கிரஸ் தலைவர் கார்கேவையும் அவர் சந்தித்து பேசினார். இதையடுத்து எதிர்க்கட்சிகளை ஓரணிக்கு கொண்டு வரும் முயற்சிகள் இறுதி வடிவம் பெற்று வருகின்றன.

    இந்த நிலையில் அரசியல் வல்லுனர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே இடத்தில் திரளும் நிகழ்ச்சி வருகிற 12-ந்தேதி நடத்தப்பட உள்ளது. பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் பிரமாண்டமான கூட்டம் நடைபெற உள்ளது.

    எதிர்க்கட்சி தலைவர்களை இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு நிதிஷ்குமார் அழைத்து உள்ளார். மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், கெஜ்ரிவால், சரத்பவார் உள்பட எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இந்த கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 16 கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்பதை உறுதிபடுத்தி உள்ளன. மம்தா பானர்ஜி இந்த கூட்டத்தில் பங்கேற்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    என்றாலும் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் விஷயத்தில் சில சிக்கல்களை நிதிஷ்குமார் சந்தித்து வருகிறார். பாரத் ராஷ்டீரிய சமிதி தலைவர் சந்திரசேகரராவ், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோரை இன்னமும் நிதிஷ்குமாரால் சமரசம் செய்ய இயலவில்லை.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, ராகுல் இருவரும் வருகிற 12-ந்தேதி பாட்னாவில் நடக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஜூன் 12-ந்தேதி வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க ஏற்கனவே ஒப்புதல் அளித்து விட்டதால் பாட்னாவில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று கார்கேவும் ராகுலும் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

    அவர்கள் இருவரையும் எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு வருமாறு நிதிஷ்குமார் பல தடவை தொடர்ந்து வலியுறுத்தி அழைத்து விட்டார். என்றாலும் கார்கே, ராகுல் இருவரும் சரியான பதில் சொல்லவில்லை என்று தெரிகிறது.

    கார்கே, ராகுல் இருவரும் 12-ந்தேதி கூட்டத்துக்கு வரமாட்டார்கள் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை ஜூன் 23-ந்தேதி நடத்தலாம் என்று கேட்டுக்கொண்டனர்.

    ஆனால் அதை எதிர்க்கட்சி தலைவர்கள் ஏற்கவில்லை. ஜூன் 12-ந்தேதி கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டதால் கூட்டத்தை ஒத்தி வைக்க இயலாது என்று தெரிவித்துள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகள் ஒன்றுசேரும் முதல் ஆலோசனை கூட்டம் இது தான். முதல் கூட்டத்திலேயே காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, ராகுல் இருவரும் பங்கேற்காதது நிதிஷ்குமார், சரத்பவார் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

    குறிப்பாக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து வரும் பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதிஷ் குமார் விரக்தி நிலைக்கு சென்றுள்ளார். இதையடுத்து அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பேசி வருகிறார்கள்.

    கார்கே, ராகுலுக்கு பதில் காங்கிரசில் உள்ள மிக முக்கிய மூத்த தலைவரை 12-ந்தேதி கூட்டத்துக்கு அனுப்புமாறு எதிர்க்கட்சிகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் முதல்-மந்திரிகளில் ஒருவரை ஆலோசனை கூட்டத்துக்கு அனுப்புமாறு சரத்பவார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

    எனவே காங்கிரஸ் சார்பில் ராகுலுக்கு பதில் யார் கலந்துகொள்வார்கள் என்பதில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டமே ராகுலால் முழுமை பெறாமல் போய்விடுமோ என்று பேசப்படுகிறது.

    குறிப்பாக மாநில கட்சிகள் வலுவாக உள்ள இடங்களில் பொது வேட்பாளரை நிறுத்தும் திட்டம் நடைமுறைக்கு வருமா என்பதில் சிக்கல் உருவாகி இருக்கிறது.

    • ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரெயில் உள்பட 3 ரெயில்கள் விபத்தில் சிக்கின.
    • இந்த கோர விபத்தில் சிக்கி 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மும்பை:

    ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரெயில் உள்பட 3 ரெயில்கள் தடம்புரண்டு மோதியதில் பயங்கர விபத்து நிகழ்ந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் பதவி விலகவேண்டும் என்றார் தேசியவாத கட்சி தலைவர் சரத் பவார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், லால் பகதூர் சாஸ்திரி ரெயில்வே மந்திரியாக இருந்தபோது ஒரு விபத்து நடந்து, அது மீண்டும் நடந்தது. அதன்பிறகு, ராஜினாமா செய்யும் முடிவை ஜவகர்லால் நேரு எதிர்த்தார். ஆனால் அதற்கு எனது தார்மீக பொறுப்பு என்று சாஸ்திரி கூறிவிட்டு ராஜினாமா செய்துள்ளார். இதேபோன்ற சம்பவத்தை நாடு எதிர்கொள்கிறது, அரசியல்வாதிகள் சாத்தியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • நாட்டில் பா.ஜனதாவுக்கு எதிரான அலை வீசுகிறது.
    • நிதின் கட்காரி கட்சியின் கோணத்தில் சிந்திப்பதில்லை.

    சரத்பவார், பாஜக, பாராளுமன்ற தேர்தல், BJP, Sharad Pawar, parliament election

    மும்பை :

    கர்நாடகாவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. ஆளும் பா.ஜனதாவிற்க எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தற்போதைய சூழ்நிலையை பார்க்கும்போது நாட்டில் பா.ஜனதாவுக்கு எதிரான அலை வீசுவதாக நான் கருதுகிறேன். கர்நாடக தேர்தல் முடிவை பார்க்கும்போது மக்கள் மாற்றத்திற்கான மனநிலையில் இருப்பது தெரிகிறது. மக்களின் மனநிலை இதேபோல தொடர்ந்தால் நாட்டில் புதிய மாற்றம் ஏற்படும். இதை கூறுவதற்கு வருங்காலத்தை கணிக்கும் ஜோதிடம் தெரிந்திருக்க அவசியம் இல்லை.

    பாராளுமன்ற தேர்தலுடன் மராட்டிய சட்டமன்ற தேர்தலையும் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்று கேட்டதற்கு, "எங்களது கூட்டணி கட்சியை சேர்ந்த பலரும் இதே கருத்தை கொண்டுள்ளனர். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. ஆளும் கட்சியினர் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகளை கவனத்தில் கொள்வார்கள். எனவே சட்டசபை தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தி குழப்பத்திற்கு ஆளாக ஆட்சியாளர்கள் கருதமாட்டார்கள். அவர்கள் பாராளுமன்ற தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள்" என்று பதிலளித்தார்.

    பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு ஆட்சியில் பிடித்த மத்திய மந்திரி யார் என்ற கேள்விக்கு பதில் அளித்த சரத்பவார், " சிலரின் சீரிய பணிகளை ஒருபோதும் மறுத்துவிட முடியாது. உதாரணத்திற்கு நிதின் கட்காரி கட்சியின் கோணத்தில் சிந்திப்பதில்லை. நாம் ஒரு பிரச்சினையை அவரிடம் கொண்டு சென்றால் அவர் அதன் முக்கியத்துவத்தை மட்டுமே பார்ப்பார்" என்றார்.

    மராட்டியத்தில் சமீப காலமாக சட்டம்- ஒழுங்கு நிலை மற்றும் வன்முறைகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு உள்ளது. ஆனால் ஆளும் கட்சியினரும் சாலையில் இறங்கி இரு மதத்தினரிடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டால் அது நல்ல அறிகுறியாக தெரியவில்லை.

    அவுரங்காபாத்தில் ஒரு பேரணியில் சில நபர்களின் படங்களை பயன்படுத்தியதற்கு, புனேயில் வன்முறை நடக்க வேண்டிய தேவை என்ன உள்ளது. ஆனால் அப்படி செய்யப்படுகிறது.

    சமீபத்தில் அவுரங்காபாத்தில் இதுபோன்ற சம்பவத்தை கேள்விப்பட்டோம். இன்று கோலாப்பூரில் இருந்து ஒரு செய்தியை பார்தேன். மக்கள் சாலைக்கு வருவதும், தொலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பும் ஒரு சிறிய சம்பவத்திற்கு மத சாயம் பூசுவதும் நல்ல அறிகுறியாக தெரியவில்லை. ஆளும் கட்சி இதுபோன்ற விஷயங்களை ஊக்குவிக்கிறது" என்றார்.

    • பா.ஜனதா எதிர்ப்பு அலை நாட்டில் தற்போது உள்ளது.
    • ஆளும் கட்சியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

    தானே :

    தேசிவயாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், " கர்நாடக தேர்தல் முடிவு அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலின் முடிவை பிரதிபலிக்கிறது. பா.ஜனதா எதிர்ப்பு அலை நாட்டில் தற்போது உள்ளது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்" என்றார்.

    இந்தநிலையில் நவிமும்பை புதிய விமான நிலைய பணிகளை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.

    பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது சரத்பவாரின் விமர்சனத்துக்கு பதில் அளித்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், "2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் சரத்பவாரின் கணிப்புகள் அனைத்து தவறாகி உள்ளன. இனியும் அவரது கணிப்புகள் அனைத்து பொய்யாகிவிடும். ஆளும் கட்சியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அப்படி இருக்கையில் பிரதமர் மோடியின் செல்வாக்கு குறைந்து வருவதாக எப்படி கூற முடியும்" என்றார்.

    மேலும் நவிமும்பை விமான நிலைய பணிகள் குறித்து பேசிய அவர், " இந்த புதிய விமான நிலையம் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 9 கோடி பயணிகள் பயன் அடைவார்கள். இந்த திட்டத்தின் பணிகளை விரைவுபடுத்த மாநில அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும். புனே மற்றும் கோவாவை தவிர்த்து மும்பை பெருநகர பகுதியின் தேவையும் இந்த விமான நிலையம் பூர்த்தி செய்யும்" என்றார்.

    • சரத்பவார் மகள் உள்பட பலர் போலீஸ் கமிஷனரிடம் புகார்
    • தபோல்கர் போன்று கொல்லப்படுவார் என மிரட்டல்

    நாடாளுமன்ற உறுப்பினரும், சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் குழு ஒன்று, மும்பை போலீஸ் கமிஷனர் விவேக் ஃப்ன்சல்கரிடம், சரத் பவாருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்தனர்.

    அப்புகாரில், மூட நம்பிக்கைகளுக்கு எதிராக போராடியவரான நரேந்திர தபோல்கர், 2013-ம் ஆகஸ்ட் 20ம்தேதி காலை நடைபயிற்சி மேற்கொள்ளும் பொழுது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    நரேந்திர தபோல்கருக்கு ஏற்பட்ட அதே கதிதான் சரத் பவாருக்கும் ஏற்படும்", என முகநூலில் கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது. இதுபற்றி உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

    அந்த பதிவுகளின் ஆதாரங்களையும் புகாருடன் இணைத்துள்ளனர்.

    காவல்துறை அதிகாரி இதுபற்றி கருத்து கூறுகையில், "நாங்கள் இந்த புகாரை தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். விசாரணையையும் தொடங்கி விட்டோம். இது சம்பந்தமாக தெற்கு பகுதி சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவிருக்கிறோம்", என தெரிவித்தார்.

    மூத்த அரசியல்வாதியான ஷரத் பவாருக்கு விடப்பட்ட கொலை மிரட்டல் மிகுந்த பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது. 82 வயதாகும் சரத் பவார்  ஒரு மூத்த அரசியல்வாதி. பல வருடங்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிறகு மகாராஷ்டிர மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை நிறுவினார்.

    • தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் புதிய நியமனங்களை சரத் பவார் அறிவித்துள்ளார்.
    • வேட்பாளர்களை தேர்வு செய்யும் பெருமளவு அதிகாரம் சுப்ரியா சுலேவுக்கு கையில் இருக்கும்.

    புதுடெல்லி:

    தேசியவாத காங்கிரசின் 25-வது ஆண்டு நிறுவன நாள் விழா நேற்று டெல்லியில் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் சரத்பவார், கட்சியின் தேசிய செயல் தலைவர்களாக தனது மகள் சுப்ரியா சுலே எம்.பி. மற்றும் முன்னாள் மத்திய மந்திரி பிரபுல் பட்டேல் ஆகியோரை அறிவித்தார். தேர்தல் பணி, மாநிலங்களவை, மக்களவை பணிகள் பிரிக்கப்பட வேண்டும் என்பதற்காக, அவர்கள் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சுப்ரியா சுலேவை கட்சியின் மத்திய தேர்தல் குழு தலைவராகவும் சரத் பவார் நியமித்தார். தேர்தல் குழு தலைவர் என்பதால், தேர்தல் நேரங்களில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பெருமளவு அதிகாரம் சுப்ரியா சுலேவுக்கு கையில் இருக்கும். 

    சுப்ரியா சுலேக்கு மராட்டியம், அரியானா, பஞ்சாப் மாநில பொறுப்புகள் மற்றும் பெண்கள் அணி, இளைஞர் அணி, மாணவர் அணி பொறுப்புகளும் வழங்கப்பட்டு உள்ளன. பிரபுல் படேலுக்கு மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், ஜார்கண்ட், கோவா, மாநிலங்களவையின் பொறுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.

    அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் புதிய நியமனங்களை சரத் பவார் அறிவித்துள்ளார். அதேசமயம், அவரது அண்ணன் மகனும் மகாராஷ்டிர சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான அஜித் பவாருக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகள் எதுவும் வழங்கவில்லை. அவரது முன்னிலையிலேயே புதிய நியமனங்கள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×