என் மலர்
நீங்கள் தேடியது "Sharath Kamal"
- டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், கேல் ரத்னா விருதை வென்றுள்ளார்.
- 2019 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது அவருக்கு வழங்கப்பட்டது.
இந்தியா சார்பாக 5 முறை ஒழும்பிக் போட்டிகளில் விளையாடிய தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் ஓய்வை அறிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று நடந்த WTT ஸ்டார் போட்டியாளர் போட்டியின் 16வது சுற்றில் தோல்வியடைந்த பிறகு ஓய்வு பெறுவதாக சரத்கமல் அறிவித்தார்.
42 வயதானால் சரத்கமல் 20 ஆண்டுக்கும் மேலாக இந்திய டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆதிக்கம் செலுத்திவந்தார்.
சரத் கமல், இதுவராவ் ஐந்து காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்று 7 தங்கம், 3 வெள்ளி மற்றும் பல வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.
டேபிள் டென்னிஸ் விளையாட்டில் சிறப்பாக விளையாடியதற்காக கேல் ரத்னா விருதை அவர் வென்றுள்ளார், மேலும் 2019 ஆம் ஆண்டில், இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த விருதான பத்மஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார்.
- இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா சக நாட்டு வீராங்கனையான கிருத்விகா ராய்யிடம் சரண் அடைந்தார்.
- தமிழகத்தை சேர்ந்த சரத் கமல் ஆஸ்திரேலியாவின் நிகோலஸ் லுமை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
சென்னை:
உலக டேபிள் டென்னிஸ் ஸ்டார் கன்டென்டர் போட்டித் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழகத்தை சேர்ந்த சரத் கமல் 11-8, 11-8, 11-9 என்ற நேர் செட்டில் ஆஸ்திரேலியாவின் நிகோலஸ் லுமை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வைல்டு கார்டு ஜோடியான இந்தியாவின் சரத்கமல்-சினேஹித் சுரவஞ்ஜிலா ஜோடி அரை இறுதியில் போராடி தோற்றது. தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள கொரியாவின் லிம் ஜொங் ஹூன்-ஆன்கே ஹியூன் ஜோடியிடம் 11-9, 8-11, 9-11, 6-11 என்ற கணக்கில் தோற்றது.
பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய முன்னணி வீராங்கனை மணிகா பத்ரா 7-11, 10-12, 11-7, 9-11 என்ற செட் கணக்கில் ஹூவாங் யூ ஜியிடம் (சீனதைபே) அதிர்ச்சி தோல்வி கண்டார்.
மற்றொரு ஆட்டத்தில் ஸ்ரீஜா அகுலா 6-11, 9-11, 11-6, 11-4, 7-11 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனையான கிருத்விகா ராய்யிடம் சரண் அடைந்தார்.
- நிகழ்ச்சியில் சரத்கமலுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
- ஒலிம்பிக்கில் தேசிய கொடியை ஏந்திச் செல்லும் சரத்கமல், 5 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளார்.
உலக தரம் வாய்ந்த சில நிறுவனங்களின் தயாரிப்புகளை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனமாக டைம்லிங்க்ஸ், பாரிஸ் ஒலிம்பிக் 2024-க்கான அதன் பிராண்ட் தூதராக டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமலை பெருமையுடன் அறிவித்துள்ளது.
இதற்கான நிகழ்ச்சி டைம்லிங்க்ஸ் நிர்வாக இயக்குநர்கள் சிவகுமார், சித்ரா சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சரத்கமலுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அவரும், இந்திய அணியும் ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்பட டைம் லிங்க்ஸ் வாழ்த்து தெரிவித்தது.
ஒலிம்பிக்கில் தேசிய கொடியை ஏந்திச் செல்லும் சரத்கமல், 5 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளார். 10 முறை தேசிய சாம்பியனும் ஆவார். பத்மஸ்ரீ, கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளையும் பெற்றவர்.
- ஒலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்கி ஆகஸ்டு 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.
- இம்முறை இந்தியா இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்லவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
புதுடெல்லி:
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நாளை தொடங்கி ஆகஸ்டு 11-ம்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 16 விளையாட்டுகளில் சுமார் 112 இந்திய வீரர்கள், வீராங்கனைகள் களமிறங்குகிறார்கள்.
இந்நிலையில் பாரிசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா அணிவகுப்பில் இந்தியா சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் தொடரில் இந்திய அணியின் தலைவராக ககன் நரங் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ககன் நரங் 5 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்.
கடந்த முறை டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை இந்தியா வென்றிருந்தது. இம்முறை இந்திய அணி இரட்டை இலக்கத்தில் பதக்கங்கள் வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- ஒரு தங்கம், மூன்று வெள்ளி, மூன்று வெண்கலம் என காமன்வெல்த் போட்டிகளில் ஏழு பதக்கங்கள் வென்றுள்ளார்.
- இந்தியாவுக்காக ஐந்து முறை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளார்.
இந்தியாவின் முன்னணி டேபிள் டென்னிஸ் வீரரான சரத் கமல், இந்த மாதம் சென்னையில் நடைபெறும் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது.
சென்னையை சேர்ந்த 42 வயதாகும் சரத் கமல் இந்தியாவுக்காக ஐந்து முறை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளார். ஆசிய போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்கள் வென்றுள்ளார்.
ஒரு தங்கம், மூன்று வெள்ளி, மூன்று வெண்கலம் என காமன்வெல்த் போட்டிகளில் ஏழு பதக்கங்கள் வென்றுள்ளார். 2004-ம் அண்டு நடைபெற்ற காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் முதன்முறையாக சர்வதேச அளவில் பதக்கம் வென்றார்.
ஆசிய போட்டிகளில் இரண்டு முறை வெண்கல பதக்கமும், ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் 4 பதக்கமும் வென்றுள்ளார்.
42 வயது ஆனாலும் சரத் கமல் டேபிள் டென்னிஸ் உலகத் தரவரிசையில் 42-வது இடத்தில் உள்ளது. இளம் வீரரான மனவ் தக்காரை விட 18 இடங்கள் முன்னிலை பெற்றுள்ளார்.
முதல் சர்வதேச தொடரை சென்னையில் தொடங்கிய சரத் கமல், சென்னையிலேயே தனது கடைசி போட்டியில் விளையாட இருக்கிறார்.
- டேபிள் டென்னிசில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சரத் கமல் தங்கம் வென்றார்
- இதன்மூலம் காமன்வெல்த் போட்டியில் இந்தியா 21 தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
பர்மிங்காம்:
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், டேபிள் டென்னிசில் ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் தமிழக வீரர் சரத் கமல், இங்கிலாந்து வீரர் லியாம் பிட்ச்போர்டை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்
இதன்மூலம் இந்தியா 21 தங்கம், 15 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 59 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.
- இறுதி ஆட்டத்தில் இந்திய ஜோடி, மலேஷிய ஜோடியை எதிர் கொண்டது.
- ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
பர்மிங்காம்:
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. நேற்றைய போட்டிகளில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களை குவித்தனர்.
இந்நிலையில், டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய ஜோடி சரத் கமல், ஸ்ரீஜா அகுலா, மலேசிய ஜோடியான சூங் ஜாவன் மற்றும் லைன் கரேன் ஆகியோரை எதிர்கொண்டது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய கலப்பு ஜோடி 11-4, 9-11, 11-5, 11-6 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.
முன்னதாக டேபிள் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரத் கமல், ஜி.சத்யன் ஜோடி, வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.
இந்தோனேஷியாவில் நடந்த 18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் சரத் கமல், ஹர்மீத் தேசாய், அமல்ராஜ், சத்யன் ஆகியோர் அடங்கிய இந்திய ஆண்கள் அணியும், கலப்பு இரட்டையர் பிரிவில் சரத் கமல்-மனிகா பத்ரா ஆகியோரை கொண்ட இந்திய ஜோடியும் வெண்கலப்பதக்கம் வென்றது. 1958-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் டேபிள் டென்னிஸ் ஆட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு இந்தியா பதக்கம் வென்று இருப்பது இதுவே முதல்முறையாகும்.
ஆசிய விளையாட்டு போட்டியில் 2 வெண்கலப்பதக்கம் வென்ற தமிழக வீரர் சரத் கமல் நேற்று அதிகாலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட விளையாட்டு அதிகாரி பிரேம்குமார், வேளச்சேரி நீச்சல் வளாக அதிகாரி கந்தசாமி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பதக்கம் வென்று சாதனை படைத்த 36 வயதான சரத் கமல் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆசிய விளையாட்டு போட்டியில் டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் ‘டாப்-10’ இடங்களில் உள்ள 7 நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். நமது ஆண்கள் அணி சிறப்பாக செயல்பட்டது. அதேபோல் கலப்பு இரட்டையர் பிரிவில் என்னுடன் ஜோடி சேர்ந்த மனிகா பத்ராவும் அருமையாக விளையாடினார்.
சவால் நிறைந்த ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்றதன் மூலம் டோக்கியோவில் (ஜப்பான்) 2020-ம் ஆண்டில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பதக்கம் வெல்லும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. என்னுடைய இந்த வெற்றியில் எனது பயிற்சியாளர்கள், தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம், இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் எனது குடும்பத்தினரின் பங்களிப்பு முக்கியமானதாகும். எனது பதக்கத்தை பயிற்சியாளர்கள் இருவருக்கும் அர்ப்பணிக்கிறேன்.
2004-ம் ஆண்டு முதல் நான் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்று வருகிறேன். இதே உத்வேகமும், உடல் தகுதியும் நீடித்தால் 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி வரை கூட என்னால் விளையாட முடியும். அடுத்த ஒலிம்பிக் போட்டிக்காக கடினமாக தயாராகுவதே எனது அடுத்த இலக்காகும்
இவ்வாறு சரத் கமல் தெரிவித்தார்.
ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று டேபிள் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நடந்தன.
இதில் இந்திய வீரர் சரத்கமல் சீனதைபேயின் சியுயாக் சுவாங்கை சந்தித்தார். முதல் செட்டை சரத்கமல் 7-11 என்ற செட் கணக்கில் இழந்தார்.
2-வது செட்டை அவர் 11-9 என்ற கணக்கில் கைப்பற்றினார். 3-வது செட்டை (10-12)பறிகொடுத்த சரத்கமல் 4-வது செட்டில் கடுமையாக போராடினார். இதில் இருவரும் மாறிமாறி புள்ளிகளை எடுத்தனர். முடிவில் அந்த செட்டை சரத்கமல் 16-14 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
இதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டில் சரத்கமல் 9-11 என்ற கணக்கில் பறிகொடுத்தார்.
இதனால் 3-2 என்ற கணக்கில் சீனதைபே வீரர் வெற்றி பெற்றார்.

இதேபோல் பெண்களுக்கான ஒற்றை பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் மனிகா பத்ரா, சீனாவின் மன்யூவுடன் தோல்வியடைந்தார். #asiangames #tabletennis #sharathkamal