என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "shirt"
- சுதந்திர தின விழாவின் போது பாளை ஆயுதப்படை மைதானத்தில் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது.
- சுதந்திர தின விழா நிகழ்ச்சியின் போது ஆயுதப்படை மைதானத்திற்கு கருப்பு உடைகள் அணிந்தபடி மாணவ மாணவிகள் சிலர் மைதானத்திற்குள் வந்தனர்.
நெல்லை:
சுதந்திர தின விழாவின் போது பாளை ஆயுதப்படை மைதானத்தில் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்று கொண்டி ருந்தது. அப்போது திடீரென அங்கிருந்த ஸ்பீக்கர் சிலவற்றில் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக வேறு ஸ்பீக்கர்கள் புதிதாக கொண்டுவரப்பட்டு மீண்டும் கலை நிகழ்ச்சி தொடங்கியது.இதன் காரணமாக கலை நிகழ்ச்சி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
சுதந்திர தின விழா நிகழ்ச்சியின் போது ஆயுதப்படை மைதானத்திற்கு கருப்பு உடைகள் அணிந்தபடி மாணவ மாணவிகள் சிலர் மைதானத்திற்குள் வந்தனர். அப்போது அங்கு நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் நின்று கொண்டிருந்த போலீசார் சுதந்திர தின விழாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உடை அணிந்து வந்ததாக நினைத்து அந்த மாணவ- மாணவிகளை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அவர்களிடம் விசாரித்த போது அவர்கள் கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கருப்பு நிற உடைகள் அணிந்து வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் உள்ளே அனுமதித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்