search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shivaji Statue"

    • எல்லா ஒப்பந்தங்களும் அதானிக்கும் அம்பானிக்கும் மட்டும் ஏன் கொடுக்கப்படுகிறது?
    • விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டதற்கு பிரதமர் மன்னிப்பு கேட்கவில்லை என்றார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் சாங்க்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    சத்ரபதி சிவாஜி சிலையை உருவாக்கும் ஒப்பந்தம் தகுதி இல்லாத ஆர்.எஸ்.எஸ்.காரருக்கு கொடுக்கப்பட்டதா அல்லது இந்த முறைகேட்டில் நடந்த ஊழலுக்கு என்ன வருத்தம் என பிரதமரிடம் கேட்க விரும்புகிறேன்.

    சிவாஜி சிலை சேதமடைந்த விவகாரத்தில் சிவாஜியிடம் மட்டும் மன்னிப்பு கேட்டதை ஏற்கமுடியாது. மகாராஷ்டிரா மாநில மக்கள் ஒவ்வொருவரிடமும் மோடி மன்னிப்பு கேட்கவேண்டும்.

    எல்லா ஒப்பந்தங்களும் அதானிக்கும் அம்பானிக்கும் மட்டும் ஏன் கொடுக்கப்படுகிறது? ஏன் இரண்டு பேருக்காக மட்டும் ஆட்சி நடத்துகிறார் என மோடி பதில் சொல்ல வேண்டும்.

    போராட்டங்கள் நடத்தியதால் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டதற்கு பிரதமர் மன்னிப்பு கேட்கவில்லை.

    பணமதிப்பு நீக்கம் மற்றும் தவறான சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவற்றுக்கு மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்..

    வடகிழக்கு மாநிலத்தை பா.ஜ.க.வே தீயிட்டுக் கொளுத்தியதால் உள்நாட்டுப் போர் போன்ற சூழலை எதிர்கொள்ளும் மணிப்பூருக்கு மோடி செல்லவில்லை.

    சிறு, குறு தொழில்கள் 2 பேரின் நலனுக்காக முடிக்கப்பட்டன. அதானி, அம்பானி குழுக்களால் வேலைவாய்ப்பை உருவாக்க முடியாது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் சித்தாந்தத்தின் அடித்தளமும் டி.என்.ஏ.வும் உள்ளது. இன்றைய அரசியல் என்பது இரு சித்தாந்தங்களுக்கு இடையிலான சண்டை.

    நாங்கள் சமூக முன்னேற்றத்தை விரும்புகிறோம். அனைவரையும் அழைத்துச் செல்ல விரும்புகிறோம். அதே நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரின் வளர்ச்சியை பா.ஜ.க. விரும்புகிறது என தெரிவித்தார்.

    • 'இந்த கட்டுமானங்கள் அனைத்திலும் நடந்துள்ள ஊழல்களில் மோடியின் கை உள்ளது'
    • 'தனது ஊழலை மறைக்கவே அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்'

    மகாராஷ்டிரா மாநிலம் மால்வனில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் கடந்த டிசம்பர் 4-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைத்த மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை எட்டே மாதத்தில் கடந்த 26-ந்தேதி இடிந்து விழுந்தது. இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மோடி, இந்த அசம்பாவிதத்துக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்தார்.

    இந்நிலையில் மகா விகாஸ் அகாதி கூட்டணி எதிர்க்கட்சிகள் இன்று தெற்கு மும்பையில் உள்ள ஹூதாமா சவுக்கு முதல் கேட் வே ஆப் இந்தியா வரை கண்டன பேரணியில் ஈடுபட்டனர். இதில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் (எஸ்.பி.) சரத் பவார், சிவசேனா தலைவர் (யூ.பி.டி.) உத்தவ் தாக்கரே, மாநில காங்கிரஸ் தலைவர் நானே படோல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஊர்வலத்தில் சென்றவர்கள் சிவாஜி சிலை இடிந்து விழுந்ததைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

    இந்த பேரணியில் பேசிய உத்தவ் தாக்கரே, ராமர் கோவில், புதிய பாராளுமன்ற கட்டடத்தில் மழை நீர் ஒழுகுவது, சத்ரபதி சிவாஜி சிலை உடைந்தது என இந்த கட்டுமானங்கள் அனைத்திலும் நடந்துள்ள ஊழல்களில் மோடியின் கை உள்ளது. சிலை உடைந்ததற்காக மோடி கேட்ட மன்னிப்பைக் கவனித்தீர்களா? அந்த மன்னிப்பில் ஆணவம் தெரிகிறது. மோடி மன்னிப்பு கேட்டது எதற்காக?, தனது ஊழலை மறைக்கவே அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.அதை மகாராஷ்டிர மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

     

    மாநிலத்தில் பல இடங்களில் மன்னர் சிவாஜியின் சிலை உள்ளது , ஆனால் மால்வனில் உள்ளது கீழே விழுந்துள்ளது, இந்த திட்டத்தில் நடந்துள்ள ஊழலை மக்கள் உணர்கின்றனர். இது சிவாஜி மகாராஜ் -கு இழைக்கப்பட்ட அவமானம், சிவாஜி மன்னர் மட்டும் கிடையாது, அவர் எங்களுக்கு கடவுள், சிவாஜியை அவமதித்தவர்களை மகாவிகாஷ் கூட்டணி ஒன்றிணைந்து தோற்கடிக்கும் என்று தெரிவித்தார். 

    • மாநில காங்கிரஸ் தலைவர் நானே படோல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    • தெற்கு மும்பையில் உள்ள ஹூதாமா சவுக்கு முதல் கேட் வே ஆப் இந்தியா வரை கண்டன பேரணியில் ஈடுபட்டனர்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் ராஜ்கோட் கோட்டையில் கடந்த டிசம்பர் 4-ந்தேதி மகாராஷ்டிரா மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    சிலை நிறுவப்பட்டு 8 மாதங்களே ஆன நிலையில் கடந்த மாதம் 26-ந்தேதி சிலை இடிந்து விழுந்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மீது எதிர்க்கட்சிகள் சரமாரியாகக் குற்றம் சாட்டின. கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த சிலையை வடிவமைத்த கட்டிட பொறியாளர் சேதன் பட்டீல் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

    இந்த நிலையில் சிவாஜி சிலை இடிந்து விழுந்ததை கண்டித்து மகாராஷ்டிராவில் எதிர்கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் (எஸ்.பி.) சரத் பவார், சிவசேனா தலைவர் (யூ.பி.டி.) உத்தவ் தாக்கரே இந்த ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பங்கேற்றனர். மாநில காங்கிரஸ் தலைவர் நானே படோல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தெற்கு மும்பையில் உள்ள ஹூதாமா சவுக்கு முதல் கேட் வே ஆப் இந்தியா வரை கண்டன பேரணியில் ஈடுபட்டனர். ஊர்வலத்தில் சென்றவர்கள் சிவாஜி சிலை இடிந்து விழுந்ததை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

    ×