search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shrubs"

    • வாய்க்காலை சூழ்ந்து புதர்கள் மண்டியதால் இந்த வாய்க்கால் வழியே தண்ணீர் எளிதில் வெளியே செல்ல முடியாது நிலை ஏற்பட்டது.
    • 40 விவசாயிகள் ஒன்று சேர்ந்து தங்களுக்குள் நிதியை திரட்டி வாய்க்காலில் மண்டி கிடக்கும் கோரை புற்களை கடந்த மூன்று நாட்களாக அகற்றி வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே குன்னம், பெரம்பூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 3000 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிர் செய்துள்ளனர்.

    இந்தப் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் பயிர்களைச் சுற்றி மழை நீர் தேங்கியுள்ளது.

    பயிர்களை சுற்றி தேங்கியுள்ள மழை நீர் வடிவதற்கு வடிகால் வசதி சரிவர இல்லாததாலும், இந்தப் பகுதிக்கு வடிகாலாக திகழும் அழிஞ்சியாறு சென்ற வருடம் தூர்வாரப்பட்ட நிலையில், மீண்டும் வாய்க்காலை சூழ்ந்து புதர்கள் மண்டியதால் இந்த வாய்க்கால் வழியே தண்ணீர் எளிதில் வெளியே செல்ல முடியாது நிலை ஏற்பட்டது.

    சுமார் 5 கிலோமீட்டர் தொலைவிற்கு உள்ள இந்த அழிஞ்சியாறு வாய்க்காலில் தண்ணீர் சீராக சென்று சேர முடியாத அளவுக்கு புல் மற்றும் செடிகள் மண்டி கிடந்தன.

    இதனால் தற்போதுள்ள சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட விவசா யிகளே ஒன்றிணைந்து கோரை புற்களை அகற்றி வாய்க்காலை சீரமைக்க முடிவு செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 40 விவசாயிகள் ஒன்று சேர்ந்து தங்களுக்குள் நிதியை திரட்டி வாய்க்காலில் மண்டி கிடக்கும் கோரை புற்களை கடந்த மூன்று நாட்களாக அகற்றி வருகின்றனர்.

    தற்போது விவசாயிகள் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த வாய்க்காலில் மண்டி கிடக்கும் கோரை புற்களை அகற்றி உள்ளனர்.

    இந்த வாய்க்காலை தூர் வாரிய செலவினத்தை அதிகாரிகள் வழங்கவும், மேலும் தொடர்ந்து வாய்க்காலை முழுவதுமாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    • காங்கயம் ஒன்றியக் குழு தலைவா் டி.மகேஷ்குமாா் தலைமை வகித்தாா்.
    • ஊராட்சித் தலைவா்கள், ஊராட்சி செயலா்கள், கவுன்சிலா்கள் கலந்து கொண்டனா்.

    காங்கயம்:

    அரசுத் துறை அலுவலா்களுக்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, காங்கயம் ஒன்றியக் குழு தலைவா் டி.மகேஷ்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜீவிதா ஜவஹா் முன்னிலை வகித்தாா்.

    காங்கயம் பகுதியில் அண்மைக் காலங்களில் திருட்டு மற்றும் வழிப்பறிச் சம்பவங்கள், கொலை உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.காங்கயத்தில் உள்ள நொய்யல் ஆற்றங்கரையோரத்தில் முள்வேலி மரங்கள் அடங்கிய புதா்களை சமூக விரோதிகள் பதுங்குவதற்கும், சாராயம் காய்ச்சுவது உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கும் பயன்படுத்தி வருவதாக காங்கயம் காவல் துறையில் பொதுமக்கள் புகாா் தெரிவித்து வந்தனா். திருப்பூா், ஈரோடு மாவட்ட எல்லைப் பகுதியாக நொய்யல் ஆறு இருப்பதால், குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்களைப் பிடிப்பதில் காவல் துறையினருக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் காங்கயம் ஒன்றியப் பகுதியில் கத்தாங்கண்ணி பகுதி முதல் பழையகோட்டை ஊராட்சி வரையிலான 12 கி.மீ. தொலைவுக்கு நொய்யல் ஆற்றங்கரையோரத்தில் உள்ள முள்வேலி புதா்கள் மற்றும் முள் மரங்களை தன்னாா்வலா்களின் உதவியோடு வெட்டி அப்புறப்படுத்துவதற்கு காங்கயம் காவல் துறை முன்வந்துள்ளதாக இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    மேலும், காங்கயம் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டும், சந்தேக நபா்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் ஒன்றியத்தில் உள்ள 15 ஊராட்சிகளிலும் தலா 30 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த தீா்மானிக்கப்பட்டது. பிரதம மந்திரியின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், காங்கயம் ஒன்றியப் பகுதியில் பணி மேற்கொள்வதற்கான சாலைகளைத் தோ்ந்தெடுக்கும் பணியும் நடைபெற்றது.

    கூட்டத்தில் காங்கயம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விமலாதேவி, ராகவேந்திரன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊராட்சித் துறைகளின் உதவிப் பொறியாளா் வசந்தாமணி, காங்கயம் ஊராட்சி ஒன்றியப் பொறியாளா்கள் சரவணன், கோகுல், காவல் உதவி ஆய்வாளா் சந்திரன் மற்றும் ஊராட்சித் தலைவா்கள், ஊராட்சி செயலா்கள், கவுன்சிலா்கள் கலந்து கொண்டனா்.

    ×