என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shubman Gill"

    • நியூசிலாந்து அணிக்கு எதிராக தனிநபர்கள் எடுத்த அதிகபட்ச ரன்னாக 186 ரன்கள் இருந்தது.
    • 24 வருடங்களுக்கு பிறகு சச்சினினின் இந்த சாதனை தகர்க்கப்பட்டுள்ளது.

    நியூசிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி 208 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் 24 வருட சாதனையை சுப்மன் கில் தகர்த்துள்ளார்.

    நியூசிலாந்து அணிக்கு எதிராக தனிநபர்கள் எடுத்த அதிகபட்ச ரன்னாக 186 ரன்கள் இருந்தது. இதனை 1999-ல் நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் அடித்திருந்தார்.

    இந்நிலையில் 24 வருடங்களுக்கு பிறகு சச்சினினின் இந்த சாதனை தகர்க்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஆஸ்திரேலிய அணியின் மேத்யூ ஹேடன் 181 ரன்களும், கேலகன் 169 ரன்களும் முன்னாக எடுத்திருந்தனர். இவை அனைத்தையும் சுப்மன் கில் முறியடித்துள்ளார்.

    • இன்னும் ஒரு ரன் அடித்திருந்தால் பாபர் ஆசமின் சாதனையை முறியடித்து உலக சாதனை படைத்திருப்பார்.
    • 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 350 ரன்களுக்கு மேல் எடுத்த இரண்டாவது வீரர் ஷுப்மன் கில்

    நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் இளம் வீரர் ஷுப்மன் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். முதல் போட்டியில் 208 ரன்களும், இரண்டாவது போட்டியில் ஆட்டமிழக்காமல் 40 ரன்களும் எடுத்தார். இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 112 ரன்கள் குவித்தார்.

    இதன்மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசமின் உலக சாதனையுடன் (360 ரன்) இணைந்துள்ளார். இன்னும் ஒரு ரன் அடித்திருந்தால் பாபர் ஆசமின் சாதனையை முறியடித்து உலக சாதனை படைத்திருப்பார்.

    3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 350 ரன்களுக்கு மேல் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் கில் பெற்றுள்ளார்.

    அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் ஷுப்மன் கில்லைத் தொடர்ந்து வங்காளதேச வீரர் இம்ரல் கயீஸ் (349), தென் ஆப்பிரிக்காவின் குயின்டன் டி காக் (342), நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் (330) ஆகியோர் உள்ளனர். 

    • மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் தான் டிராவிட் பிறந்தார்.
    • தொடர் நாயகனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது. ஆட்டநாயகனாக ஷர்துல் தாகூரும் தொடர் நாயகனாக சுப்மன் கில்லும் தேர்வு செய்யப்பட்டனர்.

    போட்டி முடிந்தவுடன் தொடர் நாயகன் விருது பெற்ற சுப்மன் கில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார்.

    அதில் இந்தூர் ஸ்டேடியத்தில் உங்கள் பெயர் வைக்கப்பட்டுள்ள டிரெஸ்ஸிங் ரூமுக்குள் நுழைவதை எப்படி பார்க்கிறீர்கள் என்று ராகுல் டிராவிட்டிடம் கில் கேட்டார்.


    அதற்கு ராகுல் டிராவிட், "இதற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இதை நான் பெருமையாக கருதுகிறேன். சில நேரங்களில் சங்கடமாகவும் இருக்கும். நீண்ட ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாட முடிந்ததை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்" என்றார்.

    மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் தான் டிராவிட் பிறந்தார். பின்னர், அவரது குடும்பத்தினர் பெங்களூருக்கு குடிபெயர்ந்தனர். அங்கிருந்துதான் கிரிக்கெட் பயணத்தை ராகுல் தொடங்கினார்.

    இந்தூரில் டிராவிட் பிறந்ததை கொண்டாடும் வகையில், அவரது பெயரை அங்குள்ள மைதானத்தின் டிரெஸ்ஸிங் ரூமிற்கு சூட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சுப்மன் கில் 6 இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
    • கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ரோகித் 9 இடத்துக்கு முன்னேறினார்.

    துபாய்:

    நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியை இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் கைப்பற்றியது. இதன் மூலம் அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியதுடன் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்டில் அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா முதல் இடத்துக்கு முன்னேறியது. இந்த தொடர முடிவடைந்த பின்னர் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர், ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது.


    இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 2 இடம் உயர்ந்து 6 இடத்துக்கு முன்னேறி உள்ளார். விராட் கோலி ஒரு இடம் இறங்கி 7 வது இடத்துக்கு வந்துள்ளார். கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ரோகித் 9 இடத்துக்கு முன்னேறினார். பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீரர் முகமது சிராஜ் முத்ல் இடத்துக்கு முன்னேறினார். ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் முதல் 10 இடங்களில் ஒரு இந்திய வீரர் கூட இடம் பெறவில்லை . ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் முதல் இடத்திலு, தென் ஆப்பிரிக்கா வீரர்கள் வான் டெர் டுசென், டிகாக் 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ளனர்.

    • சுப்மான் கில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார்.
    • இதுவரை ஐந்து டி20 போட்டிகளில் விளையாடிய சுப்மன் கில் 76 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணியும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

    ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அசத்தி வரும் சுப்மன் கில், டி20 போட்டிகளில் சுமாராகவே விளையாடி வருகிறார். நியூசிலாந்துக்கு எதிரான கடந்த இரண்டு டி20 போட்டிகளில் கில் 7 மற்றும் 11 ரன்கள் எடுத்துள்ளார். இதனால் அவருக்கு பதிலாக பிரித்வி ஷா-வை களமிறக்க வேண்டும் என விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது.

    இந்நிலையில் கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்கலாம் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கம்ரான் அக்மல் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சுப்மான் கில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் டி20 போட்டிகளில் அவர் இதுவரை அதை செய்யவில்லை. அவர் இன்னும் ஒரு போட்டியில் விளையாடி சொதப்பினாலும் கூட நம்பிக்கையை இழந்துவிடுவார்.

    மற்ற 2 வடிவங்களில் சிறப்பாக விளையாடி வரும் ஃபார்மும் பாதிபடைந்துவிடும். இதுபோன்ற ஒரு வீரர் டி20 கிரிக்கெட்டில் ஆட வேண்டும் தான். ஆனால் அவருக்கு கடைசி போட்டியில் ஓய்வு கொடுத்து வைத்தால் மட்டுமே புத்துணர்ச்சியுடன் இருப்பார். அடுத்த போட்டிகளிலாவது பழைய ஃபார்முடன் இருப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுவரை ஐந்து டி20 போட்டிகளில் விளையாடிய சுப்மன் கில் 76 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுப்மன்கில் பேட்டிங் செய்யும் விதத்தை பார்த்து நான் அவரது ரசிகனாகி விட்டேன்.
    • அனைத்து வடிவ போட்டியில் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுப்பது காலப்போக்கில் நடக்கும்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் இளம்பேட்ஸ்மேன் சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

    சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் முதல் ஆட்டத்தில் இரட்டை சதமும், 3-வது போட்டியில் சதமும் அடித்தார்.

    அதே போல் நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் 3-வது மற்றும் கடைசி போட்டியில் சதம் அடித்து அசத்தினார். ரன்களை குவித்து வரும் சுப்மன்கில்லை பலர் பாராட்டி வருகிறார்கள்.

    இந்த நிலையில் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் விராட் கோலி போல் சுப்மன் கில் ஆதிக்கம் செலுத்துவார் என்று இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் தெரிவித்தார்.

    சுப்மன்கில் பேட்டிங் செய்யும் விதத்தை பார்த்து நான் அவரது ரசிகனாகி விட்டேன். அவர் அனைத்து வடிவ வீரராக உருவாக முடியும் என்று அடிக்கடி கூறி வருகிறேன்.

    விராட் கோலி பல ஆண்டுகளாக அனைத்து வடிவங்களிலும் ஆதிக்கம் செலுத்தினார். அது போன்ற அதிக திறமை சுப்மன் கில்லிடம் இருக்கிறது. விராட் கோலி போல் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சுப்மன் கில் ஆதிக்கம் செலுத்துவார்.

    அனைத்து வடிவ போட்டியில் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுப்பது காலப்போக்கில் நடக்கும். அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது முதல் சதத்தை அடித்தார். தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் ஆறு சதங்களை அடித்து உள்ளார். சுப்மன் கில் தனது ஆட்டத்தை மேம்படுத்தி கொண்டிருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு 2 இந்திய வீரர்கள் பரிந்துரை செய்யப்பட்டனர்.
    • இதில் ஷுப்மன் கில் ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீரர் விருதை வென்றார்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவுரவித்து வருகிறது.

    கடந்த ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலுக்கான 3 வீரர்களில் 2 இந்திய வீரர்கள் தேர்வாகினர்.

    அதன்படி, சிறந்த வீரர் விருதுக்கு நியூசிலாந்தின் டேவான் கான்வே, இந்தியாவின் ஷுப்மன் கில், முகமது சிராஜ் ஆகியோர் தேர்வாகினர்.

    இந்நிலையில், ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை இந்தியாவின் ஷுப்மன் கில் வென்றார்.

    ஷுப்மன் கில்லுக்கு கடந்த மாதம் மிகச்சிறப்பாக அமைந்தது. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரட்டை சதமும், டி20 தொடரில் சதமும் அடித்து அசத்தினார். கடந்த மாதம் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் இந்திய அணியில் தனது இடத்தை தக்கவைத்தார்.

    இதேபோல், ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு இங்கிலாந்தின் கிரேஸ் ஸ்க்ரிவன்ஸ் வென்றார்.

    • ஐசிசி ஆடவர் ஒருநாள் போட்டி பேட்மேன்ஸ்கள் தரவரிசைப் பட்டியல் வெளியானது.
    • இதில் இந்திய இளம் வீரர் ஷுப்மன் கில் 4-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.

    துபாய்:

    ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் புதிய தரவரிசைபட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது.

    இந்தப் பட்டியலில் இந்தியாவின் இளம் வீரர் ஷுப்மன் கில் 4-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.

    முன்னாள் கேப்டன் விராட் கோலி 6-வது இடத்திலும், கேப்டன் ரோகித் சர்மா 8-வது இடத்திலும் உள்ளனர்.

    பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் ராஸி வான் டெர் டுசன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். மற்றொரு பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் 3-ம் இடத்தில் உள்ளார்.

    பந்துவீச்சில் இந்தியாவின் முகமது சிராஜ் 3-வது இடத்தில் நீடிக்கிறார்.

    • நடப்பு ஐபிஎல் தொடரில் ஷுப்மன் கில் இதுவரை 3 ஆட்டத்தில் ஆடி 116 ரன்கள் எடுத்துள்ளார்.
    • இவர் விராட் கோலி சாதனையை முறியடிப்பார் என ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்தவர் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. அவர் 2016-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் 16 ஆட்டங்களில் ஆடி 4 சதம் உள்பட 973 ரன்கள் சேர்த்தார்.

    இந்நிலையில், கோலி சாதனையை முறியடிக்க யாருக்கு வாய்ப்புள்ளது என இந்திய முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ரவி சாஸ்திரியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:

    என்னைப் பொறுத்தவரை விராட் கோலியின் சாதனையை தகர்ப்பது மிகவும் கடினம். ஏனெனில் ஒரு சீசனில் 900 ரன்களுக்கு மேல் எடுப்பது எளிதான விஷயம் அல்ல. ஆனால் இச்சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு இருந்தால் அது ஒரு தொடக்க ஆட்டக்காரரால் தான் முடியும். ஏனெனில் தொடக்க ஆட்டக்காரருக்கு தான் அதிகமான ஆட்டங்களில் விளையாட வாய்ப்பு கிடைக்கும்.

    அந்த வகையில் கோலியின் சாதனையை முறியடிக்கும் திறமை குஜராத் டைட்டன்ஸ் வீரர் ஷுப்மன் கில்லுக்கு இருப்பதாக கருதுகிறேன். ஏனெனில் அவர் தொடக்க ஆட்டக்காரர். நல்ல பார்மில் உள்ளார். ஆடுகளங்களும் பேட்டிங்குக்கு சாதகமாக உள்ளன.

    அவர் அடுத்த 2-3 இன்னிங்சில் தொடச்சியாக 80-100 ரன்கள் வீதம் எடுத்தால் மொத்தம் 300-400 ரன்கள் சேர்த்து விடுவார். தொடக்க ஆட்டக்காரர் கூடுதலாக இரண்டு ஆட்டங்கள் ஆடும்போது இச்சாதனையை முறியடிக்க சாத்தியம் உண்டு என தெரிவித்தார்.

    நடப்பு ஐபிஎல் தொடரில் ஷுப்மன் கில் இதுவரை 3 ஆட்டத்தில் ஆடி 116 ரன்கள் எடுத்துள்ளார்.

    • அனைத்துவிதமான போட்டிகளிலும் அவர் அபாரமாக ஆடி வருகிறார்.
    • தற்போது ஐ.பி.எல். போட்டியிலும் அபாரமாக ஆடி வருகிறார்.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பிரபல அதிரடி தொடக்க வீரர் மேத்யூ ஹைடன் கூறியதாவது:-

    இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் மிக சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். அனைத்துவிதமான போட்டிகளிலும் அவர் அபாரமாக ஆடி வருகிறார்.

    அவர் சமீபத்தில் டெஸ்ட்டில் 2 சதமும் ஒரு நாள் போட்டியில் 4 சதமும், 20 ஓவர் சர்வதேச போட்டியில் ஒரு சதத்தையும் அடித்தார். தற்போது ஐ.பி.எல். போட்டியிலும் அபாரமாக ஆடி வருகிறார். அடுத்த 10 ஆண்டுகள் வரை அவர் கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்துவார் என்பதில் சந்தேகமில்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • குறிப்பாக பந்து நேராக வரும் போது சுப்மன் கில் ஆபத்தான வீரர் என்பதில் சந்தேகமில்லை.
    • 2018-ல் இதே லண்டன் ஓவல் மைதானத்தில் கேஎல் ராகுல் சதமடித்து 149 ரன்கள் அடித்தார்.

    உலக டெஸ்ட் கிரிக்கெட்டின் 2-வது சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் இறுதிப்போட்டி வரும் ஜூன் 7 முதல் 11 வரை லண்டனில் இருக்கும் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

    அதில் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் மோதுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்த இறுதி போட்டியில் ரோகித் சர்மாவுடன் தற்போது உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் இளம் வீரர் சுப்மன் கில் தொடக்க வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் ஸ்விங் பந்துகளை எதிர்கொள்ளும் அளவுக்கு சுப்மன் கில்லிடம் டெக்னிக்கல் அளவில் குறைபாடுகள் இருப்பதாகவும் கோப்பையை வெல்ல ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக ராகுல் தான் விளையாட வேண்டுமென்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    வரலாற்றை மறந்து விட்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்காக சிறந்த 11 பேர் அணியை தேர்வு செய்யுங்கள். குறிப்பாக பந்து நேராக வரும் போது சுப்மன் கில் ஆபத்தான வீரர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவருடைய டெக்னிக்கில் சில குறைபாடுகளை நான் பார்த்துள்ளேன்.

    குறிப்பாக பந்து நகரும் போது அவர் தன்னுடைய கைகளை பந்தை நோக்கி சற்று அதிகமாக எடுக்கிறார். அதனால் அடிக்கடி எட்ஜ் கொடுக்கிறார். எனவே கில்லுக்கு பதிலாக ராகுல் தேர்வு செய்யப்படுவாரா என்பது எனக்கு தெரியாது. ஏனெனில் நான் இந்திய அணியின் தேர்வு குழுவில் இல்லை.

    ஆனால் ஃபைனலுக்கு பின்பாக நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை கருத்தில் கொண்டு அந்த போட்டிக்கான அணியை தேர்வு செய்யாதீர்கள். நீங்கள் இறுதிபோட்டி எனும் ஒரு போட்டியில் வெல்வதற்கான சிறந்த அணியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    என்று அவர் கூறினார்.

    அவர் கூறுவது போல 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கிய கில் 28, 8 என 2 இன்னிங்சிலும் சுமாராகவே செயல்பட்டார்.

    மறுபுறம் 2021-ல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரராக சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருது பெற்ற ராகுல் 2018-ல் இதே லண்டன் ஓவல் மைதானத்தில் சதமடித்து 149 ரன்கள் விளாசிய அனுபவத்தை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • குஜராத் அணி வீரர் சுப்மன் கில் தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார்.
    • புவனேஸ்வர் குமார் ஐந்து விக்கெட்டுகளை எடுத்து பேட்டிங்கில் 27 ரன்களை எடுத்துள்ளார்.

    ஐபிஎல் தொடரில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஏராளமான சாதனைகள் படைக்கப்பட்டு முறியடிக்கப்பட்டன.

    குஜராத் அணி வீரர் சுப்மன் கில் தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார். குஜராத் அணிக்காக முதல் சதம் அடித்த வீரரும் கில். ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஐந்து விக்கெட்டுகளை எடுத்து பேட்டிங்கில் 27 ரன்களை எடுத்துள்ளார்.

    இதன் மூலம் ஐபிஎல் தொடரில் ஒரே இன்னிங்சில் சதம் அடித்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் எதிரணி ஜோடி சுப்மன் கில் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆவர். ஐபிஎல் வரலாற்றில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை.

    ஆண்கள் டி20 கிரிக்கெட்டில் கூட, இதற்கு முன் இரண்டு முறை மட்டுமே இது நடந்துள்ளது. சையது முஷ்டாக் அலி டிராபியில் கர்நாடகாவின் கருண் நாயர் (111), தமிழகம் சார்பில் அதிசயராஜ் டேவிட்சன் (5/30) இந்த சாதனையை படைத்தனர்.

    2021-ல் பெல்ஜியம் மற்றும் ஆஸ்திரியா இடையேயான டி20 சர்வதேச ஆட்டத்தில் இதுபோன்ற மற்றொரு நிகழ்வு நடந்தது. பெல்ஜியத்தின் சபர் ஜாகில் (100*) மற்றும் ஆஸ்திரியாவின் அகிப் இக்பால் (5/5) ஜோடி சில ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற ஒரு தனித்துவமான சாதனை படைக்கப்பட்டது.

    ×