என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sickles"

    • காணும் பொங்கலையொட்டி களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் வருகிற ஜனவரி 11-ந் தேதி முதல் தலையணையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட உள்ளது.
    • காணும் பொங்கல் கொண்டாட வருவோர் வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. வனப்பகுதியில் கூச்சல் எழுப்பக் கூடாது, வனத்துறை விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்.

    களக்காடு:

    களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காணும் பொங்கலை யொட்டி களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் வருகிற ஜனவரி 11-ந் தேதி முதல் தலையணையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட உள்ளது.

    காணும் பொங்கல் கொண்டாட வருவோர் வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. வனப்பகுதியில் கூச்சல் எழுப்பக் கூடாது, வனத்துறை விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள், மதுபாட்டில்கள், கத்தி, அரிவாள் போன்றவைகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தலையணை சோதனை சாவடியில் யாரேனும் தடை செய்யப்பட்ட பொருட்களுடன் பிடிபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காலை 8 மணி முதல் மாலை 4-30 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும். சுற்றுலா பயணிகள் நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும்.

    அசம்பாவிதங்களை தடுக்க கூடுதல் வனத் துறையினர், போலீசார், என்.சி.சி மாணவர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். தலையணையில் வாகன நெரிசல்களை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைவரும் குளிப்பதற்கு ஏதுவாக சுற்றுலா பயணிகள் குளிக்க குறிப்பிட்ட நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்படும். அனுமதி இல்லாமல் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைவோர் வன பாதுகாப்பு சட்டத்தின் படி கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாங்குநேரி பெரியகுளத்தின் தடுப்பு சுவரில் 3 பேர் அரிவாள்களுடன் இருப்பதாக நாங்குநேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசாரை பார்த்ததும் அவர்கள் அவமரியாதையாக திட்டினர்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்தவர்கள் பெருமாள் மகன் செல்வம் (வயது20), செல்லத்துரை மகன் வான்மகேஷ் (22), நாங்கு நேரியை சேர்ந்த மனோகரன் மகன் உமாபதி (25). இவர்கள் 3 பேரும் நாங்குநேரி பெரியகுளத்தின் தடுப்பு சுவரில் அரிவாள்களுடன் இருப்பதாக நாங்குநேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர். இதில் 3 பேரும் அரிவாள்களை தீட்டிய படி இருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்களை அவமரியா தையாக திட்டினர். போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×