என் மலர்
நீங்கள் தேடியது "Sikhs"
- சீக்கியர்களை குறைந்த அறிவுத்திறன் கொண்டவர்கள், முட்டாள்கள் என்று சித்தரிக்கின்றன
- பள்ளியில் சீக்கிய அடையாளத்துக்காகக் கேலி செய்யப்பட்ட சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை குறிப்பிட்டார்
சர்தார்ஜி ஜோக்குகள் என்பது இந்தியா முழுவதிலும் பிரபலமான ஒன்றாக உள்ளது. சீக்கிய மதத்தை பின்பற்றும் குறிப்பாக பஞ்சாபி மற்றும் அரியானா ஆண்கள் சர்தார்ஜி என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களை முன்னிறுத்தி கூறப்படும் ஜோக்குகள் சர்தார்ஜி ஜோக்குகள் எனப்படும்.
வெகு காலமாவே மக்கள் மத்தியில் புழங்கி வரும் இந்த ஜோக்குகள் குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக சில சர்தார்ஜி ஜோக்குகள் மனதை புண்படுத்தும் வகையாக அமைந்துவிடுகிறது. எனவே இந்த முறையற்ற சர்தார்ஜி ஜோக்குகளுக்கு தடை விதிக்க கோரி சீக்கிய வழக்கறிஞர் ஹர்விந்தர் சௌத்ரி கடந்த 2015 தாக்கல் பொது நல வழக்கு (பிஐஎல்) தற்போது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பூஷன் ஆர் கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்துள்ளது.

அப்போது பேசிய வழக்கறிஞர் ஹர்விந்தர் சௌத்ரி, இத்தகைய நகைச்சுவைகள் சீக்கியர்களை குறைந்த அறிவுத்திறன் கொண்டவர்கள், முட்டாள்கள் என்று சித்தரிக்கின்றன. ஆண்கள் மற்றும் பெண்கள் அவர்களின் உடைக்காக கேலி செய்யப்படுகின்றனர், சீக்கிய குழந்தைகள் பள்ளி தோழர்களால் கேலி செய்யப்படுகின்றனர். நகைச்சுவைகள் அடிப்படை சிந்தனையையே மாற்றியமைக்கிறது. இந்த நகைச்சுவைகள் மனித மனதை பாதிக்கின்றன என்று அவர் கூறினார்.
மேலும் பள்ளியில் சீக்கிய அடையாளத்துக்காகக் கேலி செய்யப்பட்ட சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தையும் சவுத்ரி எடுத்துக்காட்டினார். சமூகத்திற்கு இந்த ஸ்டீரியோடைப்கள் ஏற்படுத்தும் தீங்குகளை மேற்கோள் காட்டி, டிஜிட்டல் தளங்களில் புண்படுத்தும் உள்ளடக்கத்தை கொண்ட இந்த ஜோக்குகள் கையாளப்படுவதைத் தடுக்க அரசுக்கு உத்தரவிடுமாறு சௌத்ரி தெரிவித்தார்.
இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், இது ஒரு முக்கியமான பிரச்சினை, சீக்கிய சமூகத்தை குறிவைத்து பரவி வரும் புண்படுத்தும் நகைச்சுவைகளைப் பற்றியும், இதை கட்டுப்படுத்த எடுக்கக்கூடிய நடவடிக்கைகளைக் குறித்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பாக பள்ளிகளில் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கு குறித்த மேலதிக விசாரணையை 8 வாரங்களுக்குப் பிறகு ஒத்தி வைத்தனர்.
- குருநானக் பிறந்த ஊர் பாகிஸ்தானில் லாகூர் அருகே உள்ள நன்கனாசாகிப் என்ற இடத்தில் உள்ளது.
- குருநானக் தேவின் 555-வது பிறந்த நாளை சீக்கியர்கள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடினர்.
சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவரான குருநானக் தேவின் 555-வது பிறந்த நாளை கடந்த நவம்பர் 15 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்கள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடினர்.
இந்நிலையில், குருநானக்கின் 555வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நினைவு நாணயத்தை பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது.
சிறப்பு நாணய வெளியீட்டு நிகழ்ச்சியில் 2,500க்கும் மேற்பட்ட இந்திய சீக்கிய யாத்ரீகர்கள் கலந்து கொண்டனர்.
30 மிமீ விட்டம் மற்றும் 13.5 கிராம் எடை கொண்ட இந்த சிறப்பு நாணயம் 79 சதவீதம் பித்தளை, 20 சதவீதம் துத்தநாகம் மற்றும் 1 சதவீதம் நிக்கலால் செய்யப்பட்டுள்ளது.
இந்த நினைவு நாணயம் ஸ்டேட் பாங்க் ஆப் பாகிஸ்தானின் அனைத்து கிளைகளிலும் உள்ள எக்ஸ்சேஞ்ச் கவுண்டர்களில் கிடைக்கும் என்று பாகிஸ்தானின் ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
குருநானக்கின் 550வது பிறந்தநாளை முன்னிட்டு பாகிஸ்தான் இதேபோன்ற சிறப்பு நாணயத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
- அரசு செய்த குற்றங்களுக்காக சீக்கிய குருமார்கள் அடங்கிய அகால் தக்த் பீடம் தண்டனை வழங்கியது
- பொற்கோவில் வாசலில் சக்கர நாற்காலியில் அமர்ந்து கழுதில் தண்டனை தட்டை தொங்கவிட்டிருந்தார்
பஞ்சாபில் கடந்த 2007 முதல் 2017 வரை ஆட்சி செய்த சிரோமணி அகாலி தள அரசு செய்த குற்றங்களுக்காக சீக்கிய குருமார்கள் அடங்கிய அகால் தக்த் பீடம் அக்கட்சியினருக்கு மத முறைப்படி தன்கா [tankhah] தண்டனையை வழங்கியது.
2015 ஆம் ஆண்டு பஞ்சாப் துணை முதல்வராக இருந்தபோது சிரோமணி அகாலி தல முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுக்பீர் சிங் பாதல், சீக்கியர்களுக்கும் தேரா சச்சா அமைப்பின் ஆதரவாளர்களுக்கும் இடையே வன்முறை மோதல்களைத் தூண்டிய வழக்கில் ராம் ரஹீமுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக சுக்பீர் சிங் பாதல் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி அகால்தக்த் அவருக்கு இந்த தண்டனையை விதித்துள்ளது.
இதன்படி அம்ரிஸ்தரில் பொற்கோவிலில் சேவாதார் ஆக சேவை செய்ய முடிவானது. நேற்று முன் தினம் முதல் இந்த தண்டனையை ஏற்று சுக்பீர் சிங் பாதல் சேவத்தார் நீல நிற உடையுடன் பொற்கோவில் வாசலில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி கழுதில் தண்டனை தட்டை தொங்கவிட்டுக்கொண்டு கையில் ஈட்டியோடு கோவிலுக்கு காவல் இருந்து மத தண்டனையை நிறைவேற்ற தொடங்கினார்.

அவருடன் ஆதரவாளர்களும் உடன் இருந்தனர். அகாலிதளத்தின் மூத்த தலைவரும், பாதலின் மைத்துனருமான பிக்ரம் சிங் மஜிதியா, பொற்கோவிலில் பாத்திரங்களைக் கழுவித் தனது தண்டனையை நிறைவேற்றி வந்தார்.
இந்நிலையில் பொற்கோவில் வாசலில் அமர்ந்திருந்த சுக்பீர் சிங் பாதல் மீது இன்று [ புதன்கிழமை] காலை திடீர் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த சுக்பீர் சிங் அருகே நெருங்கிய நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அவரை நோக்கி சுட்டார். ஆனால் அருகில் இருந்த ஆதரவாளர் ஓடிச்சென்று அந்த நபரின் கையை தட்டி விட்டதால் சுக்பீர் சிங் உயிர்பிழைத்தார்.
சுற்றியிருந்த மக்கள் அந்த நபரை மடக்கிப்பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். துப்பாக்கிச்சூடு நடந்திய நபர் நரேன் சிங் சௌரா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் பபர் கால்ஸா இன்டர்நேஷனல் (BKI) என்ற பயங்கரவாத அமைப்போடு தொடர்புடையவர் என்று தெரியவந்துள்ளது.

- மத நிகழ்விற்காக சுமார் 300 பேர் கூடியிருந்தபோது, ஒரு மகேந்திரா தார் மாடல் கார் ஊர்வலத்தில் புகுந்தது
- கண்ணாடியை தனது காலால் உதைத்ததும் பதிவாகி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அரசு அதிகாரியின் மைனர் மகன் ஓட்டிவந்த கார் சீக்கிய வழிபாட்டு ஊர்வலத்தில் புகுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
ஜெய்ப்பூரில் உள்ள ராஜா பார்க் பகுதியில் நேற்று இரவு 8:30 மணியளவில் பஞ்சவடி வட்டம் அருகே கோவிந்த் மார்க் பகுதியை ஊர்வலம் கடக்கும் போது இந்த விபத்து நடந்துள்ளது.
மத நிகழ்விற்காக சுமார் 300 பேர் கூடியிருந்தபோது, ஒரு மகேந்திரா தார் மாடல் கார் ஊர்வலத்தில் புகுந்தது. இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று காவல்துறை கூறிய போதிலும், ஒரு முதியவர் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவத்தின் போது ஆத்திரமடைந்த சீக்கியர் கூட்டம் ஒன்று விபத்து ஏற்படுத்திய கார் மீது தாக்குதல் நடத்தியது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோவில், ஒரு நபர் கார் பானட்டின் மீது ஏறி அதை தடியால் தாக்குவதும், கண்ணாடியை தனது காலால் உதைத்ததும் பதிவாகி உள்ளது.
அரசு அதிகாரி ஒருவரின் மைனர் மகன் கார் ஒட்டி வர அவனுடன் மேலும் 3 சிறுவர்கள் இருந்துள்ளனர். விபத்தின் பின் அங்கிருந்து அவர்கள் தப்பியுள்ளனர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆதர்ஷ் நகர் காவல் நிலையம் முன்பு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்களிடம் போலீசார் உறுதியளித்தனர்.=

அதிகாரியின் மைனர் மகன் போலீசால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கிறது. காரின் கண்ணாடியில் எம்எல்ஏ ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர், அது சரிபார்க்கப்பட்டு வருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
- இந்திரா காந்தி படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெடித்தது.
- டெல்லியில் மட்டும் 2100 சீக்கியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கடந்த 31-10-1984 அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இதில் 2800 சீக்கியர்கள் பலியாகினர். டெல்லியில் மட்டும் 2100 சீக்கியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் போது சரஸ்வதி விஹார் பகுதியில் 2 பேர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமார் குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
பிப்ரவரி 18 அன்று சஜ்ஜன் குமாருக்கு விதிக்கப்பட்ட தண்டனை விவரங்கள் வெளியிடப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
இவ்வழக்கை முதலில் பஞ்சாப் போலீசார் விசாரித்து வந்தாலும், பின்னர் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:
சீக்கிய மதத்தை தோற்று வித்த குருநானக் பிறந்த ஊர் பாகிஸ்தானில் லாகூர் அருகே உள்ள நன்கனாசாகிப் என்ற இடத்தில் உள்ளது.
அங்கு புகழ் பெற்ற குருத்துவாரா அமைந்துள்ளது. இது சீக்கியர்களின் புனித இடமாக கருதப்படுகிறது. குருநானக்கின் பிறந்த நாளையொட்டி சீக்கியர்கள் இந்த கோவிலுக்கு புனித யாத்திரை செல்வது வழக்கம்.
இந்தியாவில் இருந்து ஏராளமான சீக்கியர்கள் அங்கு செல்வார்கள். ஆனால் அவர்களுக்கு விசா வழங்குவதற்கு பாகிஸ்தான் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஏற்கனவே சில நேரங்களில் இந்திய சீக்கியர்களுக்கு பாகிஸ்தான் அனுமதி தர மறுத்து இருக்கிறது.
இந்த நிலையில் குருநானக்கின் 552-வது ஆண்டு பிறந்தநாள் விழா வருகிற 17-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு புனித யாத்திரை செல்ல ஏராளமான சீக்கியர்கள் விசா கேட்டு விண்ணப்பித்து இருந்தனர்.
உலகம் முழுவதும் இருந்து 8 ஆயிரம் சீக்கியர்கள் இதில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் அரசு விசா வழங்கி உள்ளது.
ஆனால் இந்தியாவில் இருந்து 3 ஆயிரம் பேருக்கு மட்டுமே விசா வழங்கப்பட்டுள்ளது. மற்ற சீக்கியர்கள் பல்வேறு நாடுகளில் வசிப்பவர்கள் ஆவர்.
இந்தியாவில் இருந்து செல்லும் சீக்கியர்கள் வாகா எல்லை வழியாக சென்று பாகிஸ்தான் செல்வார்கள். பின்னர் அங்குள்ள வாகனங்கள் மூலம் அவர்கள் கோவிலுக்கு செல்வார்கள்.
இதையும் படியுங்கள்...18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் தடுப்பூசி - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

முஸ்லிம் நாடான ஆப்கானிஸ்தானில் சீக்கியர் மற்றும் இந்துக்களும் குறைந்த எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். இவர்களை குறிவைத்து அங்கு அடிக்கடி தாக்குதல் நடந்து வருகிறது. அந்தவகையில் நேற்று முன்தினமும் இவர்கள் மிகப்பெரும் தாக்குதலுக்கு இலக்காகினர்.
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியை சந்திப்பதற்காக ஜலாலாபாத்தில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சிறுபான்மையினரின் பிரதிநிதிகள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இந்த வாகனத்தை குறிவைத்து தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தார்.

இதில் 19 பேர் உடல் சிதறி பலியானார்கள். இவர்களில் பெரும்பாலானோர் சீக்கியர் மற்றும் இந்துக்கள் ஆவர். அங்கு சீக்கிய குழுக்களின் தலைவராக நீண்ட காலமாக பதவி வகித்து வந்த அவதார் சிங் கல்சாவும் இதில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்துக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்காத நிலையில், நேற்று ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்றது. இது தொடர்பாக அந்த இயக்கம் சார்பில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டு இருந்தது. #Afghanistan #SikhsHindus #Tamilnews