என் மலர்
நீங்கள் தேடியது "Sims Park"
- முதற்கட்டமாக பால்சம் செடிகள் நடவு செய்யப்பட்டன.
- இந்த ஆண்டு இரண்டாம் சீசனுக்காக ஒரு லட்சத்து 91 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளன.
குன்னூர்,
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2-வது சீசனுக்காக 75 வகைகளில் ஒரு லட்சத்து 91 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி நேற்று தொடங்கியது.
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மரங்கள் மற்றும் பல்வேறு வகையான மலர் செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றைக் காண உள்ளூர் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பூங்காவுக்கு வந்து செல்கின்றனர்.
கடந்த ஆண்டு மட்டும் 6 லட்சம் சுற்றுலா பயணிகள், சிம்ஸ் பூங்காவுக்கு வந்து மரங்களையும், மலர்களையும் பார்த்து சென்றுள்ளனர்.
இந்த நிலையில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள இரண்டாவது சீசனில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி நேற்று தொடங்கியது.
நீலகிரி மாவட்ட தோட்டக்கலை துறை இணை இயக்குநர் சிபிலாமேரி தலைமையில், மலர் நாற்றுகளை பூங்கா ஊழியர்கள் நடவு செய்தனர். முதற்கட்டமாக பால்சம் செடிகள் நடவு செய்யப்பட்டன. மேலும், அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மன் போன்ற நாடுகளை தாயகமாக கொண்ட சால்வியா பெக்கோனியா, பேன்சிடேலியா, டெல்பினியம் ஜெரோனியம் உட்பட 75 வகையான நாற்றுகள் நடவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு இரண்டாம் சீசனுக்காக ஒரு லட்சத்து 91 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளன.
- பழ கண்காட்சியில் ஐந்து டன் எடையிலான ஆன பல்வேறு ரகங்களில் பழங்கள் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- நாளை தொடங்கும் பழக்கண்காட்சி வருகிற 26-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி நாளை (24-ந் தேதி) தொடங்குகிறது.
பழ கண்காட்சியையொட்டி ஏற்கனவே 3 லட்சத்து 14 ஆயிரம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு தற்போது அவை அனைத்தும் பூத்துக் குலுங்கி வருகின்றன. சால்வியா, குட்டி ரக மேரி கோல்ட், மேரி கோல்ட், டேலியா உள்ளிட்ட பல்வேறு வகை மலர்கள் சுற்றுலா பயணிகளை வரவேற்க தயாராக உள்ளது.
மேலும் இந்த முறை பூங்கா நுழைவாயில் இருந்து மினி படகு இல்லம் வரை மலர் தொட்டிகள் வைக்க ப்பட்டுள்ளது. கண்ணாடி மாளிகையிலும் அரிய வகை மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பழ கண்காட்சியில் ஐந்து டன் எடையிலான ஆன பல்வேறு ரகங்களில் பழங்கள் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மூலிகை வகை பழங்கள் மட்டுமல்லாமல், அடர்ந்த வனப் பகுதியில் கிடைக்கும் மருத்துவ குணம் கொண்ட அரிய வகை பழங்களும் கண்காட்சியில் இடம் பெற உள்ளது. சிம்ஸ் பூங்கா தொடங்கி 150 ஆண்டுகள் நிறைவு பெற்றதை நினைவுபடுத்தும் வகையில் 150 கிலோ எடையில் பல்வேறு வகை பழங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட உள்ளது.
குன்னூரில் அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் பூங்கா ஊழியர்கள் தொடர்ந்து பழ கண் காட்சிக்கு உண்டான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். நாளை காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் அருணா தலைமை தாங்கி பழ கண்காட்சியை திறந்து வைக்கிறார்.
நாளை தொடங்கும் பழக்கண்காட்சி வருகிற 26-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. கண்காட்சி காரணமாக மினி படகு இல்லத்தில் படகு சவாரி ரத்து செய்யப்படுகிறது. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் இன்னிசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
- சுற்றுலா பயணிகள் பார்ப்பதற்காக பூங்காவில் 3.14 லட்சம் மலர் செடிகள் மலர் மாடங்களில் வைக்கப்பட்டிருந்தன.
- பழ கண்காட்சியை கலெக்டர் அருணா தொட ங்கி வைத்து பார்வையிட்டார்.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டு கோடை விழாவையொட்டி சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழ கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, காய்கறி கண்காட்சி உள்பட பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான கோடைவிழா கடந்த 10-ந் தேதி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியுடன் தொடங்கியது. அன்றைய தினம் ரோஜா கண்காட்சியும் தொடங்கி நடைபெற்றது. ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி நிறைவடைந்து விட்டது.
இன்று குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சி தொடங்கியது. இதனையொட்டி பூங்கா முழுவதும், பல்வேறு வகையான பழ வகைகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக, பூங்காவின் நுழைவு வாயிலில் கண்காட்சியின் 64-வது ஆண்டை நினைவூட்டும் வகையில் ஆப்பிள், அன்னாசி, மாதுளை, வாழைப்பழம், பலாப்பழம், ஆரஞ்சு உள்பட அனைத்து வகை பழ வகைகளையும் கொண்டு நுழைவு வாயில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. சிம்ஸ் பூங்கா தொடங்கி 150-வது ஆண்டு ஆவதையொட்டி அதனை கொண்டாடும் விதமாக பூங்காவில் மாதுளை, டிராகன், ஆரஞ்சு பழங்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
சுற்றுலா பயணிகள், குழந்தைகளை கவர்ந்திழுக்கும் வகையில் பழ வகைகளை கொண்டு பல்வேறு வனவிலங்குகளின் உருவங்கள், கார்ட்டூன் பொம்மைகளும் வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.
சாத்துக்குடி, திராட்சை, ஸ்ட்ராபெரி பழங்களால் டைனோசர் உருவமும், எலுமிச்சை பழங்களை கொண்டு வாத்து உருவமும் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.

இதுதவிர, பேரிச்சம் பழம், ஸ்ட்ராபெரி, முந்திரி பழங்களால் நத்தை உருவமும், பூசணிக்காய், மாம்பழங்களை கொண்டு கார்ட்டூன் உருவமும் வடிவமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இதுமட்டுமின்றி, சுற்றுலா பயணிகள் பார்ப்பதற்காக பூங்காவில் 3.14 லட்சம் மலர் செடிகள் மலர் மாடங்களில் வைக்கப்பட்டிருந்தன.
மேலும் கண்காட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு ஸ்டால்கள், அரங்குகளும் அமைக்கப்பட்டு இருந்தன. அங்கு தோட்டக்கலைத்துறை மற்றும் உள்ளூர் வியாபாரிகள் பல்வேறு வகையான பழங்கள், அரிய வகை பழங்களையும் கண்காட்சியில் காட்சிப்படுத்தி இருந்தனர்.
பழ கண்காட்சியை கலெக்டர் அருணா தொடங்கி வைத்து பார்வையிட்டார். கண்காட்சி தொடங்கியதை அடுத்து இன்று காலை முதலே குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
சுற்றுலா பயணிகள், பூங்காவில் பூத்துக்குலுங்கிய மலர் செடிகளை கண்டு ரசித்தனர். மேலும் பூங்காவில் பல்வேறு பழங்களை கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டிராகன், கிங்காங், முயல், வாத்து, டைனோசர் போன்ற உருவங்களை பார்த்து ரசித்தனர்.
குழந்தைகள் கார்ட்டூன் பொம்மைகள், வனவிலங்குகளின் உருவங்களை பார்த்ததும் துள்ளிக்குதித்து மகிழ்ச்சியடைந்தனர். அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த அரிய வகை பழங்களையும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். இன்று தொடங்கிய பழ கண்காட்சி வருகிற 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது.
கண்காட்சியை காண வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் குன்னூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் குன்னூர் சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகள் வருகையால் பூங்கா அருகே உள்ள கடைகளிலும் வியாபாரம் களைகட்டியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டிக்கு அடுத்தபடியாக குன்னூர் முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் ஊட்டி, கூடலூருக்கு செல்ல குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலை பிரதானமாக இருக்கிறது.
இங்கு சிம்ஸ் பூங்கா முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. இந்த பூங்கா காப்புக்காடு அருகில் உள்ளதால், வனவிலங்குகளின் நடமாட்டம் இருக்கிறது. குறிப்பாக காட்டெருமைகள் அடிக்கடி புகுந்து, மலர் நாற்றுகளை மிதித்து நாசம் செய்கின்றன. மேலும் சுற்றுலா பயணிகளையும் தாக்குகின்றன. எனவே பூங்காவுக்குள் இரவு நேரத்தில் வனவிலங்குகள் புகுவதை தடுக்க சோலார் மின்விளக்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் செலவில் படகு இல்லம் உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 6 சோலார் மின்விளக்குகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.