என் மலர்
நீங்கள் தேடியது "Sivasakthi"
- இறைவன் எடுக்கும் மேனி போகி, யோகி, வேகி என்று மூன்று வகைப்படும்.
- சிவம் இல்லையேல் சக்தி இல்லை, சக்தி இல்லையேல் சிவம் இல்லை
திருமண யோகம் தரும் தெய்வத் திருமணங்கள்!
ஆலயங்களில் இறைவழிபாடு தவிர அது தொடர்புடைய எத்தனையோ திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.
பழமையான ஆலயங்களில் ஆண்டு முழுவதும் வெவ்வேறு விதமான திருவிழாக்கள் நடைபெறுவதுண்டு.
இந்த திருவிழாக்கள் ஒவ்வொன்றின் பின்னால், பக்தர்களின் வாழ்க்கைக்கு உதவும் பல விஷயங்கள் அடங்கியுள்ளன.
இதனால் தான் ஆலயங்களில் நம் முன்னோர்கள் வகுத்து வைத்தப்படி திருவிழாக்களை நாம் இப்போதும் தொய்வின்றி நடத்தி வருகிறோம்.
சைவக்கோவில், வைணவக்கோவில், சக்தி ஆலயம் என்று எதுவாக இருந்தாலும் விழாக்கள் நடத்தும் போது பக்தர்களிடம் தனி உற்சாகம் ஓடி வந்து ஒட்டிக் கொள்ளும்.
மனதைப் பக்குவ நிலைக்கு உயர்த்தியுள்ள பக்தர்கள் ஆலயத் திருவிழாக்களின் போது தாங்கள் ஆன்மா உருக, உருக விழாக்களில் பங்கேற்பார்கள்.
அத்தகைய விழாக்களில் திருக்கல்யாணத் திருவிழா தனித்துவம் கொண்டது.
தமிழ்நாட்டில் பெரும்பாலான ஆலயங்களில் 10 நாட்கள் பெரிய திருவிழாக்கள் நடத்தும்போது திருக்கல்யாண விழா 6ம் திருநாள் அல்லது 7ம் திருநாளாக நடத்தப்படும்.
சில ஆலயங்களில் தனியாகவும் திருக்கல்யாண விழா நடைபெறுவது உண்டு.
ஆலய வழிபாடுகளில் ஒவ்வொரு மாதத்துக்கும், ஒவ்வொரு விழாவால் சிறப்பு ஏற்படும். அந்த வகையில் பங்குனி மாதம் உத்திரம் நடசத்திரம் திருநாள் மிகுந்த மகத்துவம் கொண்டது.
இந்த நாளில் மிக அதிகமான தெய்வத் திருமணங்கள் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன. அன்று எந்தெந்த தெய்வங்களுக்கு திருமணம் நடந்தது தெரியுமா?
* சிவபெருமான் & பார்வதி திருமணம்
* ஸ்ரீரங்கமன்னார் & ஆண்டாள் திருமணம்
* தேவேந்திரன் & இந்திராணி திருமணம்
* பிரம்மா & சரஸ்வதி திருமணம்
* ஸ்ரீராமர் & சீதை திருமணம்
* விநாயகர் & சித்தி, புத்தி திருமணம்
* முருகன் & வள்ளி திருமணம்
* நந்தி & சுயம்பிரகாசை திருமணம்
இப்படி இறை திருமணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
அதை பிரதிபலிக்கும் வகையில் ஆலயங்களில் தெய்வங்களுக்கு ஆண்டு தோறும் திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது.
ஒரு ஆணும், ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் அதற்கு "கல்யாணம்" என்று பெயர். ஆனால் ஆலயத்தில் இறைவனும், இறைவியும் திருமணம் செய்து கொண்டால் அதற்கு "திருக்கல்யாணம்" என்று பெயர்.
இறைவன் எடுக்கும் மேனி போகி, யோகி, வேகி என்று மூன்று வகைப்படும். இதில் போகம் என்பது இன விருத்தியை குறிக்கும். உலகில் உள்ள 84 லட்சம் ஜீவன்களுக்கும் இறைவன் இந்த சக்தியை கொடுத்துள்ளான்.
சிவம் இல்லையேல் சக்தி இல்லை, சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பதின் அடிப்படையில் சிவசக்தி சங்கமத்தால், இந்த உலகில் அனைத்தும் இயங்குகின்றன. இறைவன் போக வடிவத்தில், அந்த தத்துவத்தில் இல்லாமல் போனால் உலகத்து உயிர்கள் எதுவும் போக வாழ்க்கை வாழ இயலாது.
இதை கருத்தில் கொண்டே ஆலயங்களில் இறைவனுக்கு திருக்கல்யாணம் செய்து வைக்கும் வைபவத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள்.
அதோடு அந்த திருக்கல்யாணத்தை எப்படி நடத்த வேண்டும் என்ற ஆகம விதிகளையும் வகுத்து தந்துள்ளனர்.
நமது பெற்றோர் திருமணத்தை நாம் காண முடிவதில்லை. என்றாலும் சஷ்டியப்பூர்த்தி விழா மூலம் பெற்றோர் திருமணத்தை மகன்களும் மகள்களும் கண்குளிர கண்டுகளிக்க முடிகிறது.
அது போல இறைவனது திருக்கல்யாணத்தை ஆண்டுக்கு ஒரு தடவை நடத்தி அவனது அருளை பக்தர்கள் பெற்று மகிழ்கிறார்கள்.
ஒரு இடத்தில் புதிதாக கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினால், இறைவன், இறைவியின் திருக்கல்யாணத்தையும் நடத்துவார்கள்.
நம் முன்னோர்கள் இதை ஒரு மரபாகவே வைத்திருந்தனர்.
ஆனால் கும்பாபிஷேகம் நடத்தும் போது செய்யப்படும் திருக்கல்யாணமும், ஆண்டுக்கு ஒரு தடவை நடத்தும் திருக்கல்யாணமும் வேறு, வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஆண்டுக்கு ஒரு தடவை இறைவன், இறைவிக்கு நடத்தப்படும் திருக்கல்யாணம், ஆலயத்துக்கு ஆலயம் மாறுபடும்.
ஒவ்வொரு ஆலயத்திலும் உள்ள இறை மூர்த்தத்துக்கு ஏற்ப திருக்கல்யாணம் நடத்தப்படும்.
சிவாலயங்கள் என்றால் மதுரையில் மீனாட்சி & சுந்தரேசுவரர், காஞ்சீபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் & காமாட்சி என்று நடைபெறும். அது போல வைணவத் தலங்கள் என்றால் ஸ்ரீரங்கம் என்றால் ரங்கமன்னாருக்கும் ஆண்டாளுக்கும் திருமணம் நடைபெறும்.
இறை மூர்த்தி ராமபிரானாக இருந்தால் அந்த ஆலயத்தில் சீத்தாராமக் கல்யாணம் நடத்துவார்கள். மூலவர் கண்ணனாக இருந்தால் கண்ணனுக்கும் ருக்மணிக்கும் திருமணம் நடைபெறும்.
- திருமண வைபவத்தில் கன்னிகாதானம் அளிக்கும் சடங்குதான் முக்கியமானது.
- மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்!
ஆண்டுக்கு ஒருமுறை பல்வேறு ஆலயங்களில் இறைவன் மற்றும் இறைவிக்கு திருமணங்கள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் பிரசித்தி பெற்றது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணமாகும்.
ஒவ்வொரு ஆலயத்திலும் உள்ள இறை மூர்த்தத்துக்கு ஏற்ப திருக்கல்யாணம் நடத்தப்படும்.
சிவாலயங்கள் என்றால் மதுரையில் மீனாட்சி & சுந்தரேசுவரர், காஞ்சீபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் & காமாட்சி என்று நடைபெறும். அது போல வைணவத் தலங்கள் என்றால் ஸ்ரீரங்கம் என்றால் ரங்கமன்னாருக்கும் ஆண்டாளுக்கும் திருமணம் நடைபெறும்.
இறை மூர்த்தி ராமபிரானாக இருந்தால் அந்த ஆலயத்தில் சீத்தாராமக் கல்யாணம் நடத்துவார்கள். மூலவர் கண்ணனாக இருந்தால் கண்ணனுக்கும் ருக்மணிக்கும் திருமணம் நடைபெறும்.
இத்தகைய திருமணங்களை நடத்த ஊருக்கு ஊர் பழக்க & வழக்கம் வித்தியாசமாக இருக்கும். அந்த வகையில் பழமை மரபு மாறாமல் பல நூற்றாண்டுகளாக மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விழாவில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலய அர்ச்சகர்களே ஆண் & பெண் வேடமிட்டு திருக்கல்யாணத்தை நடத்துவார்கள். இந்த சேவைக்காகவே இக்கோவிலில் இரண்டு விதமான அர்ச்சக பரம்பரையினர் காலம், காலமாக பணிபுரிந்து வருகிறார்கள்.
குலசேகர பட்டர் பரம்பரையைச் சேர்ந்த அர்ச்சகர் மாப்பிள்ளை வேடம் ஏற்பார். உக்கிரப்பாண்டி பரம்பரையைச் சேர்ந்த அர்ச்சகர் மணமகள் வேடம் ஏற்பார். அவர்களை இறைவன், இறைவியாகக் கருதி திருக்கல்யாணம் நடத்தப்படும்.
விழாவின் தொடக்கமாக விக்னேசுவர பூஜை நடத்துவார்கள் பிறகு பிரம்மஹோமம், மாங்கலய பூஜைகள் நடைபெறும். இதைத் தொடர்ந்து மீனாட்சி, சுந்தரேசுவரருக்கு காப்பு கட்டுவார்கள்.
அதன்பிறகு திருக்கல்யாணத்தின் முக்கியச் சடங்கான மங்கல நான் அணிவிக்கும் நிகழ்ச்சியும், மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடைபெறும். இறைவிக்கு திருமாங்கல்யம் கட்டப்படும் போது, பெண்கள் தாங்களும் தங்களுக்கு திருமாங்கல்யத்தை அணிந்து கொள்வார்கள்.
மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாணம் நடைபெறும் போது திருமால் கன்னிகாதானம் செய்து வைக்க, பிரம்மன் வேள்வி நடத்த, சொக்கநாதரான சிவன், மீனாட்சியம்மையை மணக்கிறார்.
திருமண வைபவத்தில் கன்னிகாதானம் அளிக்கும் சடங்குதான் முக்கியமானது. அதை மதுரை தலத்தில் சிறப்புற காணலாம்.
இந்த திருக்கல்யாணத்தின் போது பக்தர்கள் இறைவன், இறைவிக்கு பட்டுப்புடவைகள் திருமாங்கல்யம் மற்றும் மொய்ப்பணம் கொடுப்பது வழக்கமாக உள்ளது. கோவில் சார்பாக திருமாங்கல்யம், மஞ்சள் கிழங்கு, விபூதி, குங்குமம் கொண்ட பிரசாதபையை பக்தர்களுக்கு கொடுப்பார்கள்.
தனி நபர்களும் வேண்டுதலின் பேரில், பக்தர்களுக்கு மாங்கல்யப் பிரசாதம் கொடுப்பார்கள். இறைவன், இறைவிக்கு நடைபெறும் திருக்கல்யாணத்தை நேரில் பார்த்து தரிசனம் செய்பவர்களுக்கு கல்யாண யோகம் உண்டாகும்.
மதுரையைப் போலவே காஞ்சீபுரத்தில் காமாட்சி & ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் நடக்கும் திருக்கல்யாண விழாநடைபெறும் போது அதே மண்டபத்தில் ஏராளமான பக்தர்கள் திருமணம் செய்து கொள்வார்கள். இறைவனும், இறைவியும் மாலை மாற்றி கொள்ளும் போது இவர்களும் மாலை மாற்றிக் கொள்வார்கள்.
திருமாங்கல்யம் கட்டப்பட்ட பிறகு இறைவன், இறைவி சார்பாக மணக்கோலத்தில் உள்ள சிவாச்சாரியார்கள் அக்னி வலம் வருதல், பொரி தூவுதல், அம்மி மிதித்தல் போன்ற சடங்குகளை நடத்தி காட்டுவார்கள்.
வைணவத் தலங்களான திருப்பதி, ஸ்ரீரங்கம், காஞ்சீபுரம் ஆகிய ஊர்களிலும் இறைவன், இறைவிக்கு பதிலாக அர்ச்சர்களே மணமக்கள் வேடம் அணிந்து மாலை மாற்றி கொள்வது கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பரிவாரத் தெய்வங்களாக வரதராஜ பெருமாள், நரசிங்க பெருமாள் இருப்பதால், இத்தலத்தில் ஆண்டுக்கு மூன்று தடவை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மார்கழி மாதம் பார்த்தசாரதி & ஆண்டாள் திருமணம், மாசி மாதம் ரங்கநாதர் & வேதவல்லி தாயார் திருமணம் மற்றும் பங்குனி உத்திர நாளில் நடக்கும் திருமணம் என 3 தடவை திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது.
தமிழ் நாடு முழுவதும் பெரும்பாலான ஆலயங்களில் பங்குனி உத்திரம் தினத்தன்று தான் திருக்கல்யாண விழாக்கள் நடத்தப்படுகிறது. அன்று பக்தர்கள் விரதம் இருப்பது காலம், காலமாக நடந்து வருகிறது. இந்த விரதத்துக்கு திருமண விரதம் என்று பெயர்.
வீட்டில் மங்கலகாரியம் நடப்பதற்கு துணை புரிவதால், எல்லா தலங்களிலும் திருக்கல்யாண விழாக்கள் ஆண்டு தோறும் தவறாமல் நடத்தப்படுகிறது.
எந்த ஊரில் உள்ள ஆலயத்தில் இறைவனுக்கும் இறைவிக்கும் மிகச் சிறப்பாக திருக்கல்யாணம் நடத்தப்படுகிறதோ அந்த ஊரில் உள்ள பெண்கள் திருமண யோகத்தை உரிய காலத்தில் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
ஆனால் பெரும்பாலான பக்தர்கள் இந்த ஐதீகத்தை புரிந்து கொள்ளாமல் ஆலயங்களில் நடத்தப்படும் திருக்கல்யாண விழாக்களில் கலந்து கொள்ளாமல் உள்ளனர்.
எனவே இனியாவது ஆலய திருக்கல்யாணங்களில் உள்ள ரகசியத்தை புரிந்து கொண்டு அதில் பங்கேற்று இறைவழிபாடு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் உள்ள சில தலங்கள், இறைவன், இறைவி திருக்கல்யாணத்துக்கு மிகவும் சிறப்புப் பெற்றவை. இல்வாழ்க்கைக்கு அதிக பலன்களை அள்ளித்தரும் ஆற்றல் பெற்றவை. அவற்றை தெரிந்து கொண்டு வழி பட்டால் உரிய பலனை பெற முடியும்.
உலகமும், உயிர்களும் தொடர்ந்து இயங்க, இறைவன் நமக்கு ஆற்றும் பேரருளை நினைவுப்படுத்தும் விதமாக திருக்கல்யாணங்கள் நடத்தப்படுகிறது என்ற உண்மையை நமது வாரிசுகளுக்கு நாம் அவர்களை ஆலயங்களுக்கு அழைத்து செல்லும் போது எடுத்துச் சொல்ல வேண்டும்.
திருக்கல்யாண நிகழ்ச்சிகளை வெறும் சடங்காக கருதாமல் அதில் உள்ள தாத்பர்யங்களை அனைவரும் அறிந்து கொள்ள செய்தால்தான் திருக்கல்யாண நிகழ்வுகள் மூலம் வெற்றியும் பலனும் கிடைக்கும்.
இதே போல ஆலயங்களில் கார்த்திகை மாதம் நடத்தப்படும் சங்காபிஷேகத்தால் சிவபெருமான் மனம் மகிழ்ந்து வற்றாத செல்வத்தை வழங்குவார் என்பது ஐதீகம். அது பற்றி அடுத்த வாரம் விரிவாக காணலாம்.
- உலகம் அனைத்தும் சக்தி மயம் என்பதை விளக்குவதே நவராத்திரியின் தத்துவம்.
- நவராத்திரி என்றாலே சக்தியை வழிபடுவது என்பதுதான் அர்த்தம்.
நவராத்திரி என்றாலே சக்தியை வழிபடுவது என்பதுதான் அர்த்தம்.
உலகம் அனைத்தும் சக்தி மயம் என்பதை விளக்குவதே நவராத்திரியின் தத்துவம்.
தேவியானவள் அனைத்து உருவத்திலும் எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கிறாள் என்பதைக் குறிக்கும் விதமாகவே,
அனைத்து உருவ பொம்மைகளையும் கொலுவாக வைத்து வணங்கும் கலாச்சாரம் காணப்படுகிறது.
நவராத்திரி நாளான ஒன்பது இரவுகள் தனி சக்தியாக விளங்கும் ஜகன்மாதா, பத்தாம் நாளன்று ஈசுவரனை வணங்கி
சிவசக்தியாக ஐக்கிய ரூபிணியாக அர்த்த நாரீசுவரராக மாறுகிறாள் என்பதே இந்த பண்டிகையின் புராண வரலாறு.
இந்த 9 நாட்களிலும் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி தேவியரை ஒன்பது அவதாரங்களாக அலங்கரித்து போற்றி பூஜித்து வழிபடுதல் வேண்டும்.
முதல் மூன்று நாட்கள் மகேஸ்வரி கவுமாரி, வராஹி என துர்காதேவியாகவும், அடுத்த மூன்று நாட்களில் மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி என லட்சுமி தேவியாகவும்,
நிறைவுறும் மூன்று தினங்களில் சரஸ்வதி, நரசிம்மீ, சாமுண்டி என சரஸ்வதி தேவியாகவும் சித்தரித்து வணங்குவது நல்லது.
இந்த நாட்களில் நைவேத்யங்களைப் படைத்து கலைக்கு ஆதாரமாகத் திகழும் கலைமகளை
பாடி, ஆடி பரவசமுடன் வணங்குவோருக்கு கேட்ட வரத்தை சக்தியானவள் கைமேல் நல்குவாள் என்பது ஐதீகம்.
- திருக்கார்த்திகை தோன்றுவதற்கு இரண்டு விதமான காரணங்கள் கூறப்படுகின்றன.
- இறைவன் தேவிக்கு காட்சியளித்து, இடப்பாகத்தில் ஏற்று அருள்புரிந்தார்.
திருக்கார்த்திகை தோன்றுவதற்கு இரண்டு விதமான காரணங்கள் கூறப்படுகின்றன.
அதில் ஒன்று ஒரு முறை உமாதேவி சிவனின் கண்களை விளையாட்டாக கைகளால் மறைத்தாள்.
அப்போது பிரபஞ்சமே இருள்மயமானது.
உயிர்கள் அனைத்தும் துயரில் ஆழ்ந்தன. இச்செயலால், தேவிக்கு பாவம் உண்டானது.
விமோசனம் தேடி காஞ்சிபுரம் சென்று சிவனை நோக்கி தவத்தில் ஆழ்ந்தாள்.
இறைவனும் தேவிக்கு காட்சியளித்து திருக்கார்த்திகை நாளில் திருவண்ணாமலை வரும்படி அருள்புரிந்தார்.
தேவியும் அண்ணாமலையிலுள்ள பவழக்குன்று மலையில் இருந்த கவுதம் மகரிஷி உதவியுடன் பர்ணசாலை அமைத்து தவம் செய்தாள்.
பௌர்ணமி சந்திரன் கார்த்திகையில் சஞ்சரிக்கும் வேளை வந்தது.
இறைவன் தேவிக்கு காட்சியளித்து, இடப்பாகத்தில் ஏற்று அருள்புரிந்தார்.
அந்த தினமே கார்த்திகை தீப திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தத் திருக்கார்த்திகை விழா பிறந்ததற்கு மற்றொரு காரணம்,
ஒரு சமயம் திருக்கயிலாயத்தில் பரமேஸ்வரனும் அம்பிகையும் எழுந்தருளி இருக்கும் போது,
அங்கே நெய்யிட்ட திருவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது.
விளக்கு ஒளி இழக்கும் தருணம் எலி ஒன்று அங்கு வந்தது.
நெய்யின் வாசனை அறிந்து அதை உண்ண நினைத்து திரியை இழுத்தது.
தூண்டி விடப்பட்டதால் தீபம் பிரகாசமாக எரிந்தது. ஒளி மிகுந்ததனால் எலி ஓட ஆரம்பித்தது.
ஒளியைத் தூண்டிய எலிக்கு இறைவன் அருள் கிடைத்தது. எலிக்கு அவர் மானிடப் பிறவி கொடுத்தார்.
அதற்கு அரச போகமும் அரண்மனை வாழ்வும் தந்தருளினார்.
முன்ஜென்மத்தில் எலியாய் இருந்தது, அடுத்த பிறவியல் மகாபலி சக்கரவர்த்தியா பிறந்தார்.
எண்ணற்ற செல்வங்களுக்கு அதிபதியானார். கூடவே செருக்கும் வளர்ந்தது.
ஒருநாள் அகங்காரத்துடன் திருக்கோவிலுக்குச் சென்றார்.
பட்டாடைகள் தரையில் புரள அலட்சியத்தோடு நட ந்து சென்றதால், அங்கிருந்த அகல் விளக்கின் தீப்பொறி
சக்கரவர்த்தியின் மீது பட்டுப் பற்றி எரிந்தது, உடல் புண்ணாயிற்று.
செருக்கு அடங்கிய சக்கரவர்த்தி இருகை கூப்பி ஆண்டவனை நோக்கிப் பிரார்த்தித்தார்.
தனது உடம்பில் ஏற்பட்ட ரணத்தைப் போக்கி அருளுமாறு வேண்டினார்.
"தீபப்பொறியால் ஏற்பட்ட ரணத்திற்கு நாள்தோறும் திருக்கோவிலில் தீப வரிசைகளை ஏற்றித் தொழுது கொண்டு வா.
காலப் போக்கில் உன் நோய் நீங்கும்" என்று இறைவன் அசரீரியாக சொல்ல, மன்னன் மகிழ்ச்சியுற்றான்.
நாள்தோறும் கோவிலுக்கு சென்று வரிசை வரிசையாக நெய்த் தீபங்கள் ஏற்றி வழிபட்டான்.
இவ்வாறு திருவிளக்கு ஏற்றி வந்த காலத்தில் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரம் கூடிய
பௌர்ணமி திதியில் இறைவன் திருவுள்ளம் இரங்கியது.
இறைவன் ஜோதி வடிவில் வந்து, ஒளிப்பிழம்பாக நின்றான். மன்னனின் நோய் நீங்கியது.
இவ்வாறு தொடங்கிய தீப வரிசை வழிபாடே கார்த்திகை தீபத் திருவிழாவாக உயர்ந்தது என்பர்.
காலப்போக்கில் அனைத்து இனத்தவர்களும் இத்தகைய ஒளி வழிபாட்டில் ஈடுபட, இது பொது வழிபாடாக உருவானது.
சோதியே, சுடரே, சூழ் ஒளி விளக்கே என்று இறைவனைப் போற்றுகின்றார் மாணிக்கவாசகப் பெருமான்.
ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்க செய்யும்
வேத புராணங்களும் கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும்.
எத்தனை எத்தனையோ அரசர்கள், கோவில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாக செய்துள்ளனர்.
எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும்.
என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும்
எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.
கார்த்திகை மாதம் முழுவதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது,
அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அபிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது.
தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது
கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும்.
கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும் முடிவிலுமாக இரு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வருமாயின்,
இரண்டாவதாக வரும் நாளில் கொண்டாடுவது மரபு.
- கார்த்திகைத் திருநாள் கார்த்திகேயனுக்கும் உகந்த நாள்.
- விரதம் இருந்து பெருமானின் பேரருளால் தோஷ நிவர்த்தி கிடைத்ததாக தேவி புராணம் கூறுகிறது.
கார்த்திகைத் திருநாள் கார்த்திகேயனுக்கும் உகந்த நாள்.
சிவபெருமானின் நெற்றிக் கண்ணினின்றும் தோன்றிய ஆறு அருட்சுடர் சரவணப் பொய்கையில் வந்து தங்கி
ஆறு குழந்தைகளாக உருமாறி நிற்க அக்குழந்தைகளைக் கார்த்திகைப் பெண்கள் பாலூட்டிச் சீராட்டித் தாலாட்டினர்.
சிவபெருமான் பிராட்டியாருடன் சரவணப் பொய்கைக்கு எழுந்தருளி உமாதேவியார்
அக்குழந்தைகளை வாரி அணைக்க, ஆறு உருவங்களும் ஓருருவாய் ஆறுமுகக் குழந்தையாய்
தேவியின் திருக்கரங்களில் பேரொளிப் பிரகாசமாய் எழுந்தருளியது.
அவ்வமயம் கார்த்திகைப் பெண்டிர் சிவபெருமானைப் பணிந்து போற்றி நின்றனர்.
சிவபெருமான் அவர்களை அருள் நோக்கி உங்களுக்கு மங்களம் உண்டாகுக உங்களால் வளர்க்கப்பட்ட
இப்பாலகனுக்கு கார்த்திகேயன் என்ற திருநாமத்தைச் சூட்டுகிறோம்.
உங்களுக்கு உகந்த இக்கார்த்திகை நன்னாளில் கந்தனைப் போற்றி வழிபடுவோருக்கு
அனைத்து நலங்களும் கிட்டுவதாகுக என்று திருவாய் மலர்ந்தருளினார்.
இறைவனை விளக்கேற்றி வழிபடுவது தொன்றுதொட்டு வந்த பழக்கமாயினும், அது என்றென்றும் நலம் தரும் வழிபாடாகவும் கருதப்படுகிறது.
வைஷ்ணவ ஆலயங்களிலும் விளக்கொளிப் பெருமாள் என்று ஒரு பெருமானைக் கொண்டாடுகின்றனர்.
அகல், எண்ணெய், திரி, சுடரொளி ஆகிய நான்கும் அறம், பொருள், இன்பம், வீடு என்ற தத்துவங்களை உணர்த்துவது போலாகும்.
பலிமகராஜன் தனது உடம்பிலே தோன்றிய வெப்பத்தைக் கார்த்திகை விரதமிருந்து தீர்த்துக்கொண்டார் என்று புராணம் கூறுகிறது.
எம்பெருமான் தன்மீது திருவடி சாதித்து ஆட்கொண்ட போது தனது மறைவு நாளை தீபங்களை ஏற்றி உலகோர் அனைவரும் கொண்டாட வேண்டும் என்று அனந்தனைப் பணிந்து கேட்டான்.
திருஞானசம்பந்தர், மயிலையில் அங்கம் பூம்பாவைக்கு புத்துயிர் அளிப்பதற்காய்ப் பாடிய திருப்பதிகத்தில் 'கார்த்திகை விளக்கீடு காணாத போதியோ' என்று பாடியுள்ளார்.
ஒருமுறை அம்பிகை மகிஷாசுரனுடனும் போர்புரியும் போது தவறுதலாக சிவலிங்கம் ஒன்றை உடைத்துவிட்டார்
என்றும், அதனால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்குக் கார்த்திகை தினத்தன்று தீபம் ஏற்றி
விரதம் இருந்து பெருமானின் பேரருளால் தோஷ நிவர்த்தி கிடைத்ததாக தேவி புராணம் கூறுகிறது.
இவ்வாறு பெருமையும் மேன்மையும் கொண்ட கார்த்திகைத் திருநாளை திருச்செங்கோடு, வேதாரண்யம்,
பழனி, திருச்செந்தூர் முதலிய கோவில்களில் திருவண்ணாமலைக் கோவிலைப் போன்றே கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.
சில ஊர்களில் மந்தாரை இலையில், தீபம் ஏற்றுகிறார்கள். வடநாட்டில் தீபத்தை தீப ஓடங்களில் ஏற்றி நீரில் விடுவது உடன்பிறப்பிற்கு நன்மை பயக்கும் என்று கருதுகிறார்கள்.
- மாணிக்க வாசகர் அருளிய திருவாசகத்தில் ஒரு பகுதி தரப்பட்டுள்ளது.
- இதை தினமும் படித்து வந்தால் இம்மை, மறுமை பலன்கள் கிடைக்கும்.
மாணிக்க வாசகர் அருளிய திருவாசகத்தில் ஒரு பகுதி தரப்பட்டுள்ளது.
இதை தினமும் படித்து வந்தால் இம்மை, மறுமை பலன்கள் கிடைக்கும்.
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க!
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமனிதன்தாள் வாழ்க!
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க!
வேகங் கொடுத்தாண்ட வேந்தனடி வெல்க!
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க!
கரங்கு விவார் உள் மகிழுங் கோன்கழல்கள் வெல்க!
சிரங்கு விவா ரோங்குவிக்குஞ் சீரோன் கழல் வெல்க!
ஈசனடி போற்றி எந்தையடி போற்றி!
தேசனடி போற்றி சிவன்சே வடிபோற்றி!
நேயத்தே நின்ற நிமலனடி போற்றி!
மாயப்பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி!
சீரார் பெருந்துறைநம் தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளுமலை போற்றி!
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை
மகிழச் சிவபுராணந்தன்னை
முந்தை வினைமுழுவதும் ஓயவுரைப்பன்யான்
கண்ணுதலான் தன் கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழல் இறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந்தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயராய்க் கணங்களாய்
வல் அசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத் தேன் எம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யஎன் னுள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்ய விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா பெனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே
வெய்யாய் தணியாய் இயமான னாம் விமலா
பொய்யா யின வெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற - மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
ஆக்கம் அளவிறுதி யில்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழுப்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே
கறந்தபால் கன்னலோடு நெய்கலந்தாற்போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டி
புறந்தோல் போர்த் தெங்கும் புழுஅமுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைனந்துன் வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்துள்ளுருகும்
நலந்தானில்லாத சிறியேற்கு நல்கி
நிலந்தன் மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனார் அமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப்பாரிக்கும் சூரியனே
நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சங்கெடப்
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா வமுதே அளவிலாப் பெருமானே
ஓராதா ருள்ளத் தொளிக்கு மொளியானே
நீராயுருகியென் ஆருயிராய் நின்றானே
இன்பமுந்துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக்கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ்
சோதியனே துன்இருளே தோன்றாப் பெருமைனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய்ஞ்ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின்
நோக்கரிய நாக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப்புண்ணியனே
காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக்காய்நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவேயென் சிந்தனையுள்
ஊற்றானே உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப என்று
ஆற்றேன் எம்ஐயா அரனேயோ என்றென்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யனார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லற்பிறவி அறுப்பானே ஓவென்று
சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லியபாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிகீழ்ப்
பல்லோரு ஏத்தப்பணிந்து.
- நெய் அபிஷேகம் செய்தவுடன் ஆறிய வெந்நீர் அபிஷேகம் செய்ய வேண்டும்.
- ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் வகை வகையான மலர்கள் சிரசில் வைக்க வேண்டும்.
நல்லெண்ணை-சுகம் அளிக்கும், பஞ்சகவ்யம்- தூய்மையை அளிக்கும், பால்-ஆயுளை வளர்க்கும்,
தேன்-மகிழ்ச்சி, இன்குரல் கொடுக்கும், சர்க்கரை- திருப்தியைக் கொடுக்கும்,
எலுமிச்சை ரசம்-ஞானம் அளிக்கும், இளநீர்- ஆனந்தத்தையும் சிவபோகத்தையும் கொடுக்கும்,
பஞ்சாமிருதம்- ஜயம் கொடுக்கும், தயிர்-செல்வம் அளிக்கும், கருப்பஞ்சாறு- பலம்,
ஆரோக்கியம் கொடுக்கும், மஞ்சள் தூள்- ராஜவசியத்தைக் கொடுக்கும்,
திராட்சை ரசம்-பணம் கொடுக்கும், மாதுளை-அரச பதவி கொடுக்கும்,
நெய்- மோட்சத்தைக் கொடுக்கும், அன்னம்- வயிற்று நோயை நீக்கும், அரிசி மாவு- கடனைப் போக்கும்,
நெல்லிக்கனி-பித்தம் நீக்கும், பழ ரசங்கள்- வறட்சியைப் போக்கும்,
கங்காஜலம்-சாந்தியைக் கொடுக்கும், பன்னீர் கலந்த சந்தனம்- பக்தியையும், ஞானத்தையும் கொடுக்கும்,
ஆவாகன கலச தீர்த்தம்- மந்திர சித்தியைக் கொடுக்கும், விபூதி- செல்வத்தைக் கொடுக்கும்,
சொர்ணாபிஷேகம்- மோட்ச சாம்ராஜ்யத்தைக் கொடுக்கும்.
நெய் அபிஷேகம் செய்தவுடன் ஆறிய வெந்நீர் அபிஷேகம் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் வாசனை கலந்த சுத்த தண்ணீரால் அபிஷேகம் செய்து, அடுத்தது தொடங்க வேண்டும்.
ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் வகை வகையான மலர்கள் சிரசில் வைக்க வேண்டும்.
ஈசனுக்கு அபிஷேகம் செய்யும் போது சல்லடைக் கண்கள் உள்ள தாராபாத்திரத்தில் அபிஷேகம் செய்யதால் நன்மைகள் பல உண்டு. சத்ருத்ரம், ஏகாதச ருத்ரம், ருத்ரம், புருஷசூக்தம், ம்ருத்யுஞ்ஜம், காயத்ரி, சிவநாமாக்கள் ஆகியவை சொல்லி அபிஷேகம் செய்வது நல்லது.
சுத்தமான நீரால் செய்யப்படும் தாராபிஷேகத்தால் கஷ்டங்கள் நீங்கும்.
சுகம், சந்தான விருத்தி ஏற்படும். நெய் அபிஷேகம் செய்ய சர்வரோகங்களும் நீங்கி வம்சவிருத்தி ஏற்படும். சர்க்கரை கலந்த பாலாபிஷேகம் செய்ய மந்திர லோபங்களால் பாதிப்பு ஏற்படாது.
வாசனைத் திரவியங்களோடு கூடிய தயிர் அபிஷேகம் சத்ருக்களை அழிக்கும். தேன், வியாதிகளை நீக்கும்.
கருப்பஞ்சாறு துக்கங்களை நீக்கி சந்தோஷத்தைக் கொடுக்கும்.
- ஈஸ்வரனை சாதாரண நாளில் இடமிருந்து வலமாக மூன்று முறை வலம் வந்தால் போதுமானது.
- பிரதோஷ நாளில் “சோமசூக்த பிரதட்சன” முறையை கையாள வேண்டும்.
ஈஸ்வரனை சாதாரண நாளில் இடமிருந்து வலமாக மூன்று முறை வலம் வந்தால் போதுமானது.
ஆனால் பிரதோஷ நாளில் அப்படி வலம் வருதல் கூடாது.
பிரதோஷ நாளில் "சோமசூக்த பிரதட்சன" முறையை கையாள வேண்டும்.
சோமசூக்த பிரதட்சணம் என்றால் என்ன?
ஆலால விசமானது தேவர்களை துரத்தியது. தேவர்கள் ஈசனை வலமாக ஓடி வந்தனர்.
ஆலால விசம் இடமாக வந்து எதிர்த்தது. விசம் எதிர்ப்பதை கண்டு தேவர்கள் அப்படியே திரும்பி இடமாக வந்தனர்.
ஆலாலம் வலமாக வந்து எதிர்த்தது. ஆக ஆலாலம் முன்னும், பின்னும் தேவர்களை எதிர்த்ததால் பிதோஷ நாளன்று ஈஸ்வரனை வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் தரிசனம் செய்ய வேண்டும்.
இந்த முறையே "சோம சூக்த பிரதட்சணம்".
- இதே போல் பவுர்ணமியிலிருந்து 13-வது நாளன்றும் வரும். இதையும் திரயோதசி நாள் என்பர்.
- நந்திதேவருக்கு பின்பு நின்று கொண்டு கொம்புகளுக்கிடையே லிங்கத்தை தரிசிப்பதே சிறந்த முறை.
1. பிரதோஷ நாள் அமாவாசையிலிருந்து 13-வது நாளன்று வரும். அதை திரயோகதசி நாள் என்பர்.
இதே போல் பவுர்ணமியிலிருந்து 13-வது நாளன்றும் வரும். இதையும் திரயோதசி நாள் என்பர்.
அமாவாசையிலிருந்து 13-வது நாளாக வரும் திரயோதசி திதியை வளர்பிறை பிரதோஷம் என்றும், பவுர்ணமியிலிருந்து 13-வது நாளாக வரும் திரயோதசி திதியை "தேய் பிறை பிரதோஷம்" என்றும் அழைப்பர்.
2. பிரதோஷ நாளன்று உடல் சுத்தம் செய்து கொண்டு ஆலயத்தில் பிரவேசிக்க வேண்டும்.
முதலில் ரிஷப தேவருக்கு நெய் தீபம் போட்டு அருகம்புல் கொடுத்து வாலைத்தொட்டு வணங்க வேண்டும்.
பிறகுதான் கணபதியை வணங்க வேண்டும்.
நந்திதேவருக்கு பின்பு நின்று கொண்டு கொம்புகளுக்கிடையே லிங்கத்தை தரிசிப்பதே சிறந்த முறை.
ஆலயத்தில் கூட்டம் அதிகமாக இருந்தால் மனதால் லிங்கத்தை தியானிக்கலாம்.
தியானித்து விட்டு அப்பிரதட்சனமாக (வலம் கை ஓரமாக) சண்டகேஸ்வரர் சந்நிதி வரை சென்று சண்டகேஸ்வரரை வணங்கி விட்டு, அப்படியே திரும்பி வந்து முன்பு போல நந்தீஸ்வரர் பின்பு நின்று லிங்கத்தை தியானித்துக் கொண்டு, வழக்கம் போல இடமிருந்து வலமாக பிரதட்சனமாக வர வேண்டும்.
பிரகாரத்தில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் நீர் வருவதற்கு ஒரு தொட்டி அமைந்து இருக்கும். அதை கோமுகி நீர் தொட்டி என்பர். அந்த தொட்டி வரை வரவும்.
அந்த தொட்டியை கடக்க கூடாது. அப்படியே வந்த வழியே செல்லவும்.
நந்தியையும், லிங்கத்தையும் தியானிக்கவும். மறுபடியும் அப்பிரதட்சணமாக சென்று சண்டகேஸ்வரரை வணங்கவும்.
வணங்கிவிட்டு வந்த வழியே வந்து கோமுகி நீர் தொட்டி வரை வரவும்.
அந்த வழியே திரும்பவும். இவ்வாறு மூன்று முறைகள் செய்து சிவனை வணங்க வேண்டும்.
இவ்வாறு பிரதோஷ நாளன்று சிவனை வணங்க பாபம் நீங்கி "அஸ்வமேதயாகம்" செய்த பலன் கிடைக்கும்.
3. பிரதோச நாளன்று நந்தி தேவருக்கு சிவப்பு அரிசியில் வெல்லம் சேர்த்து நைவேத்யம் செய்யலாம்.
4.பிரதோஷ நாளன்று உபவாசம் இருப்பவர்கள் ஆலய தரிசனம் முடித்துவிட்டு வெறும் தரையில் படுத்து உறங்க வேண்டும்.
5.ஒவ்வொரு மாலை வேளையான 4.30 முதல் 6 மணி வரை உள்ள காலம் தினப்பிரதோஷம் என்று அழைக்கப்படுகின்றது. இதில் ஈசனை தரிசனம் செய்ய பாவம் விலகும்.
6.பிரதோஷ வேளை 4.30 மணிக்கும்மேல் 7 மணிக்குள்.
7. பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் ஒரு வருடம் ஆலயத்திற்கு சென்று வந்த பலனை பெறுவார்கள்.
8. சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் மிக விசேஷமானது. அன்று சனி பகவானின் தோஷத்துக்கு ஆளானவர்கள் ஈசனை வழிபட அனைத்து தோஷங்களும் நீங்கி சுக வாழ்வு பெறுவார்கள்.
சனி பிரதோஷம் அன்று வழிபட்டவர்கள் ஐந்து வருட காலம் கோவிலுக்கு சென்று வந்த பாக்கியத்தை பெறுவார்கள்.
9. பிரதோஷ நாளன்று ஈசனுக்கு பால் அபிஷேகத்திற்கு பால் தானம் செய்ய சகல பாவங்களையும் போக்கி கொள்ளலாம்.
10. பிரதோஷ நாளன்று ரிஷப வாகனத்தில் ஈஸ்வரர் எழுந்தருளி பிரகாரத்தை மும்முறை வலம் வருவார். அப்பொழுது நாமும் அவர் பின்னால் வலம் வர முக்தி கிடைக்கும்.
ஏனெனில் ஈஸ்வரர் பிரகாரத்தை ஒரு சுற்று வரும்போது வேத பாராயணம் ஓதப்படுகின்றது.
இரண்டாவது சுற்றில் திருமுறை பாராயணம் ஓதப்படுகின்றது. மூன்றாவது சுற்றில் நாதங்கள் முழங்கப்படுகின்றன.
- திருவாதிரை நட்சத்திரத்துக்கு ஆர்த்ரா என பெயர். அதுவே ஆருத்ரா என மாறியது.
- பார்வதிதேவியின் தவத்துக்கு மெச்சி அவளை மணப்பதாக வாக்கு கொடுத்தது இந்நாளில்தான்.
திருவாதிரை நட்சத்திரத்துக்கு ஆர்த்ரா என பெயர்.
அதுவே ஆருத்ரா என மாறியது.
அறுபத்து நான்கு நாயன்மார்களில் ஒருவரான சேந்தனார் என்பவர் அரசபதவியிலிருந்து சிவனின் திருவிளையாடலால் ஏழையாகினாலும் தன்னுடைய சிவத்தொண்டான அடியவருக்கு உணவளிக்காமல், தான் உண்பதில்லை என்ற கொள்கையிலிருந்து மாறாமல் இருந்தார்.
கடும் வறுமையில் வாழ்ந்து வந்தபோது, ஒரு மழைநாளில் சமைக்க ஏதுமில்லாதபோதும், கோலமிட வச்சிருந்த பச்சரிசி மாவில், சிறிதளவு வெல்லம் சேர்த்து களியாய் கிளறி அடியவருக்காக காத்திருந்தனர்.
இரவுப்பொழுது ஆகியும் யாரும் வராததால் பசியோடு உறங்க சென்றனர்.
இதனால், சிவனே அடியவர் வேடம் போட்டு சேந்தனார் வீட்டு வாயிலில் நின்று பிச்சை கேட்டார்.
அவருக்கு களி பரிமாறி பசியாத்தினர் சேந்தனார் தம்பதியினர்.
களி மிக ருசியாயுள்ளது என சொல்லி நாளைக்கும் வேண்டுமென கூறி மிச்சம் மீதி களியையும் பெற்று சென்றார்.
மறுநாள் கோவிலில் சென்று இறைவனை காணும்போது, கருவறையில், முதல் நாள் அடியவருக்கு கொடுத்தனுப்பிய களி அங்கு சிதறி இருந்தது.
அப்படி சேந்தனார், களியமுது படைத்திட்ட நாள் மார்கழி திருவாதிரை நட்சத்திரம் நாளாகும்.
அன்றிலிருந்து, ஆருத்ரா தரிசனம் நாளன்று களி சமைத்து படைப்பது வழக்கமாகிவிட்டது.
களின்ற வார்த்தைக்கு உணவு பண்டம்ன்னு மட்டும் பொருள் இல்லை.
களின்னா ஆனந்தம்ன்னும் பொருள் தரும்.
அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் தோன்றிய நிலையில் ஆன்மா ஆனந்த நிலையில் இருக்கும்.
சத், சித் ஆனந்தம் கிட்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாக வைத்துதான் திருவாதிரைக்களி நிவேதனம் செய்விக்கப்படுகிறது.
இந்த ஆருத்ரா தரிசன நாளில்தான், மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடல்களை எழுதி முடித்தார்.
கேரளத்தில் இந்நாளை ஈசன் காமனை எரித்த நாளாக கொண்டாடுகின்றனர்.
பார்வதிதேவியின் தவத்துக்கு மெச்சி அவளை மணப்பதாக வாக்கு கொடுத்தது இந்நாளில்தான்.
அதனால்தான், இந்நாளில் விரதமிருந்து ஈசனை வழிபட்டால் சிறந்த கணவன் கிடைக்கும், தாலிபலம் கூடும்.
பிரிந்திருக்கும் கணவன் மனைவி ஒன்று சேர்வர்.
- உத்தரகோசமங்கை கோவிலில் நடராஜருக்கு தனி சன்னதி கோவில் உள்ளது.
- என்னுடன் போட்டி நடனம் ஆடிப்பாரும் என பார்வதி தேவி சவால் விட்டாள்.
உத்தரகோசமங்கை கோவிலில் நடராஜருக்கு தனி சன்னதி கோவில் உள்ளது.
இக்கோவிலின் மத்தியில் இராஜகோபுரம் மிக சிறப்பாக அமைந்துள்ளது. இதைச் சுற்றி அகழியுள்ளது.
அகழியை சுற்றிலும் தீப்பிழம்பை மலைபோல் வளர்த்துக் கொண்டு ஈசன், ஈஸ்வரி அக்கினி கோளத்தில் யாரும் அறியாமல் மூலஸ்தனத்தின் ரகசிய அறைக்குள் முதல் பெண் பார்வதி தேவிக்கு பரத நாட்டிய கலையையும், அந்தரங்க கலை முழுவதையும் கற்றுக் கொடுத்துள்ளார்.
மற்றும் தேவ ரகசியத்தை தன்னில் பாதியாகக் கொண்ட பார்வதி தேவிக்கு சிவபெருமான் பிரணவ மந்திரத்தை உபதேசித்த இடமாகும்.
இந்த அந்தரங்க அறையில் அம்பாள் சிலை உள்ளது. இந்த அறைக்கு யாரும் செல்ல மாட்டார்கள்.
ஆதியில் அந்தரங்க அறையில் ஈசன் ஈஸ்வரி பரதநாட்டியம் ஆடியதற்குத்தான் ஆதி சிதம்பரம் என்ற உத்தரகோசமங்கை என்று வழங்கப்படுகிறது.
முதலில் அறையில் ஆடிய பிறகுதான் பின்பு அம்பலத்தில் ஆடினார் என்று சொல்லப்படுகிறது.
எனவே இந்த மரகத நடராஜர் சன்னதிக்கு தெற்குபுறமாக வாசல் அமைந்துள்ளது.
ஈசன் ஈஸ்வரி பரதநாட்டியம் ஆடிய மரப்பலகை ஐந்தை இப்பொழுதும் காணலாம்.
பரத நாட்டியத்தை முதல் முதலில் உத்திரகோசமங்கையில் ஆடல் அரசன் என்ற தெய்வம் சிவபெருமான் தான் அறிமுகம் செய்தார்.
முதல் நாளில் சிவனும், பார்வதியும் "ஆனந்த தாண்டவம்" ஆடுகின்றார்கள்.
இரண்டாவது நாள் "சந்தியா தாண்டவம்". மூன்றாவது நாள் "சம்ஹாரத் தாண்டவம்" ஆடுகின்றார்கள்.
இந்த மூன்று நாட்களும் நடந்த நாட்டியத்திற்கு சிவபெருமான், பார்வதி ஆகியோரின் நடனம் ஒரே மாதிரியாக இருந்ததால் நடுவர்களால் சரியான தீர்ப்பு கூற முடியவில்லை.
எனவே திருமால், பிரம்மன், இந்திரன் ஆகியோரிடம் பெரும் குழப்பம் ஏற்பட்டு விட்டது.
நான்காவது நாள் ஊர்த்துவதாண்டவம் நடந்தது.
ஆடவல்லான் நடராஜரின் கால் சதங்கை சப்தம் ரம்மியமாய் ஒலித்தது.
பார்வதி, நடராஜன் ஆடும் சபையை நோக்கி நடந்தாள். நடராஜனின் அருகே சென்றாள்.
சுவாமி ஆடல், கலை பெண்களுக்கே உரியது.
நீர் ஆடி ஆட வல்லான் என்று பெயர் பெறுவது நல்லது அல்ல.
என்னுடன் போட்டி நடனம் ஆடிப்பாரும் என பார்வதி தேவி சவால் விட்டாள்.
ஈசனும் போட்டி நடனம் ஆட சம்மதித்தார். ஒருபுறம் பார்வதி, இன்னொருபுறம் சிவபெருமானான, நடராஜன் ஆட்டம் தொடங்கியது.
இந்த போட்டி நடனத்துக்கு நாரதர் யாழை இசைத்தார்.
மகா விஷ்ணு மத்தளம் கொட்டினார். நந்திய பெருமான் தாளமிட்டார்.
பிரம்மா ஜதி சொல்லத் தொடங்கினார். ருத்திரன் நாதசுரம் வாசித்தார். சரஸ்வதி வீணையை மீட்டினாள்.
வெற்றி யாருக்கு எனப் புரியாத நிலையில் திகைத்து இருந்தார்கள் தேவர்கள்.
இந்த நாட்டியத்தில் பார்வதி சுழன்றாடினாள்.
வெற்றி யாருக்கு என்று புரியாத நிலையில் அனைவரும் சிவதாண்டவத்தையும், பார்வதி ஆட்டத்தையும் கண்டு களித்தனர்.
ஆட்டம் சூடு பிடித்தது. இருவரும் சுழன்று சுழன்று ஆடினர். பார்வதியின் கால் சலங்கை கழன்று கீழே விழுந்தது.
ஆடலரசன் தன் காதிலிருந்த ஒரு குண்டலத்தை கீழே விழச் செய்தார்.
பார்வதி கால் சதங்கையை சரி செய்து சிவபெருமானின் செயல்களைக் கூர்ந்து கவனித்தார்.
சக்கரமாய் ஆடிவந்த சிவபெருமானின் ஒரு காலின் விரல்கள் கீழே கிடந்த குண்டலத்தை மெல்லக் கவ்வியது.
சிவபெருமான் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று புரியாது பார்வதி ஆடிக்கொண்டே நடப்பதைக் கவனித்தாள்.
கூடி இருந்தவர்களுக்கு ஈசனின் இந்த செய்கை புரியவில்லை.
புரியாத குழப்பத்திலேயே ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அடுத்த கணம் நடராஜர் தன் இடது காலை அழுந்த ஊன்றி வலது காலை நாட்டியமண்டபத்துக்கு அருகில் மரங்கள் சூழ்ந்த வனம் பகுதியை நோக்கி தில்லையின் எல்லையை நோக்கி நடந்தார்.
பின்னர் நடராஜன் தன் வலது காலை தூக்கி இடது காதை தொட்டார்.
ஆனால் அது போன்று பார்வதிதேவி செய்ய முடியவில்லை.
தள்ளாடி கீழே விழுந்து மயக்கம் நிலையை அடைந்து தோல்வியுற்றாள்.
இந்த "தலம்" ஊர்த்துவ தாண்டவம் ஆடி தன்னுடன் போட்டி நடனம் ஆடிய பார்வதியை ஈசன் வென்ற "தலம்" தான் உத்திரகோசமங்கை திருத்தலமாகும்.
இந்தப் போட்டி நடனத்திற்கு திருமால், பிரம்மன், இந்திரன் ஆகியோர்கள் நடுவர்களாக இருந்து பார்வதி தோல்வியுற்றதாகத் தீர்ப்பு வழங்கிய திருத்தலமாகும்.
- இந்த சாபத்தினால்தான் ஈசனுடைய உருவச்சிலை மரகத கல்லால் அமைந்துள்ளது என்கிறார்கள்.
- இந்த சிலை ஒலி, ஒளி, சப்தம் தாங்காத தன்மை கொண்டது.
உத்தரகோசமங்கை திருத்தலத்தில் ஈசன், ஈஸ்வரியை பர்வத மகளாகவும், காளியாகவும், போகும்படி சாபம்
இட்டத்தையும் இத்திருத்தலத்தில் ஈசனோடு ஆடிய நாட்டிய போட்டியில்தான் தோல்வியுற்றதையும் எண்ணி
மிகுந்த மனவேதனைப்பட்டு தன் கணவர் என்று பாராமல் பார்வதி உத்தரகோசமங்கை திருத்தலத்தில் "தன்னுடைய
உருவ விக்கரகத்துக்கு பக்தர்கள் தினந்தோறும் பூ, பழம், தேங்காய், மேளதாளங்கள், இசை, சப்தம், ஒலி, ஒளியுடன்
வழிபட்டு செல்வார்கள் ஆனால் இத்திருத்தலத்தில் ஈசனுடைய உருவ விக்கிரகத்துக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டும்
ஆருத்திர தரிசனம் பக்தர்கள் வழிபட்டு செல்ல வேண்டும்.
எனவே உத்தரகோசமங்கை திருத்தலத்தில் சக்திக்குத்தான் அதிக சக்தியுண்டு" என்று ஈசனுக்கே ஈஸ்வரி சாபம் விடுத்தாளாம்.
இந்த சாபத்தினால்தான் ஈசனுடைய உருவச்சிலை மரகத கல்லால் அமைந்துள்ளது என்கிறார்கள்.
இந்த சிலை ஒலி, ஒளி, சப்தம் தாங்காத தன்மை கொண்டது.