என் மலர்
நீங்கள் தேடியது "slashed"
- ராஜேஷ் பொட்டிரெட்டிப்பட்டி வார சந்தை அருகே சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இவரை கை மற்றும் வாய்ப்பகுதியில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனர்.
- சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார். மேலும் இதுகுறித்து எருமப்பட்டி போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எருமப்பட்டி:
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி இந்திரா காலனியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் ராஜேஷ்(24). இவர் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று இவர் பொட்டிரெட்டிப்பட்டி வார சந்தை அருகே சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இவரை கை மற்றும் வாய்ப்பகுதியில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனர்.
இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் ராஜேஷை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார். மேலும் இதுகுறித்து எருமப்பட்டி போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.