search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100341"

    சென்னையில் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர் எம்பி உள்ளிட்ட 500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு ராகுல் காந்தி முடிவு எடுத்துள்ளார். அவரது முடிவை காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி ஏற்க மறுத்துவிட்டது. எனினும் ராகுல்காந்தி தனது முடிவில் பிடிவாதமாக இருக்கிறார்.

    இந்த நிலையில் ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்யக்கூடாது, தொடர்ந்து அவர் அப்பதவியில் நீடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை தேனாம்பேட்டை ஏ.ஜி.-டி.எம்.எஸ். மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து காமராஜர் அரங்கம் வரையில் நேற்று பேரணி நடைபெற்றது. பேரணியில் திருநாவுக்கரசர் எம்பி, எச்.வசந்தகுமார் எம்பி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இந்நிலையில், அனுமதியின்றி பேரணி நடத்தியதாக கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர், வசந்தகுமார் உள்ளிட்ட 500 பேர் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், அரசு அதிகாரியின் உத்தரவை மதிக்காதது உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
    அ.தி.மு.க. தொண்டர்கள் அளித்த வாக்கால் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன் என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
    திருச்சி:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பில் திருச்சி தொகுதியில், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் போட்டியிட்டு சுமார் 4.59 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    இதையடுத்து அவர் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., அம்பேத்கர் சிலை, சத்தியமூர்த்தி சிலை, அண்ணாசிலை மற்றும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இதுவரை அ.தி.மு.க.வினர் மட்டும் தான் 3 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் இந்த முறை நான் 4.59 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறேன்.


    அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியாக இருந்த ஸ்ரீரங்கம் தொகுதியில் கூட இந்த முறை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் கை சின்னத்திற்கு கிடைத்துள்ளது. அதே போல புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் அதிகமான வாக்குகள் எனக்கு கிடைத்துள்ளது.

    அதாவது உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் எனக்கு வாக்களித்து இருக்கிறார்கள். நடுநிலையாளர்களும் எனக்கே வாக்களித்து உள்ளனர்.

    மேலும் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை தவிர அ.தி.மு.க.வில் உள்ளவர்களும் எனக்கு வேண்டிய, எனக்கு பழக்கமான, என் நீண்ட நாள் நண்பர்கள் என பலர் மற்றும் ஏராளமான அ.தி.மு.க.வினரும் எனக்கு வாக்களித்துதான் இவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றேன்.

    அ.தி.மு.க. தலைவர்கள் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்து இருந்தாலும் இங்கு உள்ளவர்கள் தே.மு.தி.க. வேட்பாளருக்கு முழுமையான ஒத்துழைப்பு தரவில்லை. இதனால் தான் எனக்கு வெற்றி வாய்ப்பு சரியாக இருந்தது.

    3 மாதங்களுக்கு முன்பு மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தநிலையில் பிற மாநிலங்களில் ஒரு சீட்டு கூட பெற முடியாமல் போனதற்கு என்ன காரணம் என காங்கிரஸ் கட்சி ஆராயும். எதிர்க்கட்சியினர் பெற்றிருக்கும் வெற்றி உரிய முறையில் உள்ளதா? மீண்டும் வாக்குச் சீட்டு முறை சரியாக இருக்குமா? என்றெல்லாம் ஆராய வேண்டும்.

    மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் நிகழவில்லை என்றாலும் வாக்களித்த மக்களின் கோரிக்கைகளை போராடி, வாதாடி மக்களுக்கு பெற்றுத்தருவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகிலுள்ள திருவாமூரில், புகழனாருக்கும், மாதினியாருக்கும் பிறந்தவர், மருள்நீக்கி. இவர் திருநாவுக்கரசர் என்று அழைக்கப்பட்டதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகிலுள்ள திருவாமூரில், புகழனாருக்கும், மாதினியாருக்கும் பிறந்தவர், மருள்நீக்கி. இவரது தமக்கையின் திருநாமம் திலகவதி. பெற்றோர் இறந்து விட தமக்கை திலகவதியின் அரவணைப்பில் வளர்ந்தார் மருள்நீக்கி. இவர் திருப்பாதிரிப்புலியூர் சென்று சமண நூல்களைக் கற்று, சமண சமயத்தைத் தழுவி ‘தருமசேனன்' எனப்பெயர் சூடிக்கொண்டார்.

    இதனால் மனம் நொந்த திலகவதி அருகிலுள்ள திருவதிகை பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் திருக்கோவில் வந்தடைந்தார். அங்கேயே தங்கியிருந்து அனுதினமும் ஆலயத்தை தூய்மை செய்து, ஈசனுக்கும் அம்பாளுக்கும் மலர் தொடுத்து சாத்தி வழிபட்டு வந்தார். அதோடு தன் தம்பியை நல்வழிப் படுத்துமாறு இறை வனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்.

    ஒரு நாள் தரும சேனனை சூலை நோய் (வயிற்றுவலி) தாக்கியது. சமணத் துறவிகளால் தரும சேனனின் நோயைத் தீர்க்க முடியவில்லை. இதனை அறிந்த திலகவதி, தனது தம்பியை தன்னோடு அழைத்துக் கொண்டு ஈசனின் சன்னிதிக்குச் சென்று, திருநீற்றை எடுத்து தருமசேனனின் அடிவயிற்றில் தடவி விட்டார். அதோடு வாயில் உண்பதற்கும் கொடுத்தார். என்ன ஆச்சரியம். அதுவரை எந்த மருந்து கொடுத்தும் தீராத அந்த நோய், உடனடியாக தீர்ந்தது. தேவாரப் பதிகமும் பாடத் தொடங்கினார். அந்த பாடலின் இனிமையில் கரைந்த இறைவன், “இன்று முதல் நீ திருநாவுக்கரசர் என்று அழைக்கப்படுவாய்” என்று அசரீரியாக அருளினார்.

    அதன்பிறகு சிவதல யாத்திரை தொடங்கினார் திருநாவுக்கரசர். பிற சமயத்தவர்களால் பல இன்னல்களை அடைந்து, ‘சிவாய நம’ என்ற மந்திரத்தால் அதில் இருந்து மீண்டு வந்தார். மறைந்து போயிருந்த பல ஆலயங்களை மீட்டெடுத்தார். பல சிவாலயங்களை தரிசித்து, இறுதியில் திருப்புகலூர் வந்தடைந்தார். அவரது பற்றற்ற நிலையையும், பக்தியையும் உலகிற்கு காட்ட விரும்பினார் சிவபெருமான். அதன்படி அவர் உழவாரப் பணிகள் செய்த இடத்தில் எல்லாம், பொன்னும், நவமணிகளும் கிடைக்கும்படிச் செய்தார். ஆனால் அதையெல்லாம் சிறிதும் மனசஞ்சலம் இல்லாமல் ஆலய தடாகத்துக்குள் வீசி எறிந்தார், திருநாவுக்கரசர்.

    பின்னர் நடன மங்கைகளை வரச் செய்தார். அவர்கள் வந்து திருநாவுக்கரசரின் முன்பாக நின்று, கூந்தல் அவிழவும், ஆடைகள் நழுவும் படியாகவும் ஆடிப்பாடி அவரை மயக்க முற்பட்டனர். ஆனாலும் மனம் பிறழாத திருநாவுக்கரசர், உழவாரப் பணியில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். இதையடுத்து இனி செய்வதற்கு ஏதுமில்லை என்று கருதி பெண்கள் அங்கிருந்து அகன்றனர்.

    ஒரு கட்டத்தில் சித்திரை மாத சதயம் நட்சத்திர நன்னாளில், திருப்புகலூர் ஈசனுடன் ஒன்றிப் போனார் திருநாவுக்கரசர். இந்த விழா திருப்புகலூர் சூளிகாம்பாள் சமேத அக்னி புரீஸ்வரர் திருத்தலத்தில் ஐதீக விழாவாக நடைபெறுகிறது.

    திருநாவுக்கரசரின் அற்புதம்

    திருவையாறு அருகிலுள்ள திங்களூரில் வாழ்ந்து வந்தார் அப்பூதியடிகள் எனும் சிவபக்தர். இவர் திருநாவுக்கரசரின் சிவபக்திச் சிறப்பினையும், சிவபெருமான் அவருக்கு அருளிய அருட்திறத்தையும் கேட்டு, திரு நாவுக்கரசரை நேரில் காணாமலேயே அவர் மேல் பெரும் பக்தி கொண்டார்.

    தனது ஊரில் தான் அமைத்த நூலகத்திற்கு ‘திருநாவுக்கரசர் வாசக சாலை’ எனவும், தண்ணீர் பந்தலுக்கு ‘திருநாவுக்கரசர் தண்ணீர் பந்தல்’ எனவும், திருமடத்திற்கு ‘திருநாவுக்கரசர் திருமடம்’ எனவும், அன்னதான சத்திரத்துக்கு ‘திருநாவுக்கரசர் அன்னதான சத்திரம்’ எனவும், தன்னுடைய பிள்ளைகள் இருவருக்கும் ‘பெரிய திருநாவுக்கரசு’, ‘சின்ன திரு நாவுக்கரசு’ எனவும் பெயரிட்டிருந்தார்.

    ஒருமுறை திருநாவுக்கரசர் திங்களூர் பெரியநாயகி சமேத கயிலாசநாதர் ஆலயத்திற்கு வந்தார். அப்போது அங்கு அவர் பெயரில் அமைந்திருந்த அனைத்தையும் கண்டு வியப்புற்றார். அதற்கு காரணம் யார் என்று விசாரிக்க, அப்பூதியடிகள் பற்றி தெரியவந்தது. உடனே திருநாவுக்கரசர், அப்பூதியடிகள் வீட்டிற்குச் சென்றார். அங்கு திருநாவுக்கரசருக்கு இன்னொரு ஆச்சரியமும் காத்திருந்தது. அந்த வீடும் கூட ‘திருநாவுக்கரசர் இல்லம்’ என்று பெயரிடப்பட்டிருந்தது.

    வீட்டின் முன்பு நின்று “அப்பூதியாரே! அடியேன் திருநாவுக்கரசு வந்திருக்கிறேன்” எனக்கூறி அழைத்தார்.

    வந்திருப்பவர் திருநாவுக்கரசர் என்பதனை அறிந்த அப்பூதியடிகள், தம் கைகளைத் தலைமேல் குவித்துக் கண்களில் ஆனந்தக்கண்ணீர் வழிய அவர் திருப்பாதங்களைப் பணிந்து தொழுதார். பின்னர் திருநாவுக்கரசரை இருக்கையில் அமரச் செய்து தமது குடும்பத்துடன் பூஜித்து வழிபட்டார். திருநாவுக்கரசரைத் தமது இல்லத்தில் அமுதுண்ண வேண்டினார். திருநாவுக்கரசரும் அதற்கு இசைந்தார்.

    அறுசுவை உணவு தயாரானது. திருநாவுக்கரசர் அமுதுண்ண வாழை இலை அரிந்து வரும்படி, தன்னுடைய மூத்த மகனை அனுப்பினார் அப்பூதியடிகள். ஆனால் வாழை இலையை எடுத்துவரும் வழியில் அவனை பாம்பு தீண்டிவிட்டது. இருப்பினும் வாழை இலையை கொண்டு வந்து பெற்றோரிடம் கொடுத்து விட்டு, தன்னை பாம்பு தீண்டிய விஷயத்தை சொல்லி விட்டு இறந்து போனான்.

    அப்பூதியடிகளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ‘சிவனடியார் தன் வீட்டில் உணவருந்தும் வாய்ப்பை தான் இழந்து விடுவோமே’ என்று கருதிய அப்பூதியடிகள், மகன் இறந்ததை மறைத்து, திருநாவுக்கரசருக்கு உணவளிக்க முன்வந்தார்.

    உணவருந்தும் முன் ‘சிவாய நம’ என்று ஓதி, அனைவருக்கும் திருநீறு வழங்கினார், திருநாவுக்கரசர். அப்போது அப்பூதியடிகளின் மூத்த மகனைக் காணவில்லை. அது குறித்து கேட்டார் திருநாவுக்கரசர். ஆனால் அப்பூதியடிகள், “இனி அவன் உதவமாட்டான்” என்று கூறினார்.

    என்ன ஏதென்று திருநாவுக்கரசர் வலியுறுத்தி கேட்கையில் தான், அவனை பாம்பு தீண்டியதும், அவன் இறந்து போனதும் தெரியவந்தது.

    அதைக் கேட்டு அதிர்ந்த திருநாவுக்கரசர், “எங்கே பிள்ளை? அவனை உடனே திங்களூர் கயிலாசநாதர் ஆலய மண்டபத்திற்கு கொண்டுவாரும்' எனக்கூறினார்.

    அனைவரும் இறந்த சிறுவனின் உடலோடு ஆலயத்திற்குச் சென்றனர். அங்கு, “ஒன்று கொலாம் அவர்சிந்தை உயர்வரை' எனத் தொடங்கும் ‘விடம் தீர்த்தப் பதிகம்’ பாடி, சிறுவனின் உயிரைக் காப்பாற்றினார், திருநாவுக்கரசர்.

    அனைவரது கண்களிலும் ஆனந்தக்கண்ணீர் வழிந்தது. அப்பூதியடிகள் தன் குடும்பத்தோடு, திருநாவுக்கரசரின் திருவடிபணிந்து தொழுதார்.

    அமைவிடம்

    மயிலாடுதுறையில் இருந்து 25 கி.மீ. தூரத்திலும், கும்பகோணத்தில் இருந்து 35 கி.மீ தூரத்திலும், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினத்தில் இருந்து 20 கி.மீ. தூரத்திலும், திருநள்ளாறிலிருந்து 11 கி.மீ தூரத்திலும் திருப்புகலூர் அமைந்துள்ளது.
    திருச்சி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் முதல் சுற்று முடிவின்படி 22 ஆயிரத்து 618 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
    திருச்சி:

    திருச்சி பாராளுமன்ற தொகுதியில் 7,39,241 ஆண்கள், 7,68,940 பெண்கள் மற்றும் 148 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 15,08,963 வாக்காளர்கள் உள்ளனர்.

    இது திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.

    அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவன், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர், அ.ம.மு.க. வேட்பாளர் சாரு பாலா தொண்டைமான், மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஆனந்த்ராஜ், நாம் தமிழர் கட்சியில் வினோத் உள்பட மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 10 லட்சத்து 39 ஆயிரத்து 144 வாக்காளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்திருந்தனர். இது 68.89 சதவீதமாகும்.

    வாக்குப்பதிவு முடிந்ததும் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபேட் எந்திரங்கள் அனைத்தும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான திருச்சியை அடுத்த பஞ்சப்பூர் சாரநாதன் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

    இன்று காலை வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் அடுத்ததாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. மொத்தம் 25 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. வாக்கு எண்ணும் பணியில் மத்திய அரசில் பணியாற்றும் நுண் பார்வையாளர் ஒருவரும், மாநில அரசில் பணியாற்றும் கண்காணிப்பாளர் ஒருவரும், ஒரு மேஜைக்கு 3 பணியாளர்கள் வீதம் 252 பேரும், 36 மாற்றுப் பணியாளர்களும் சேர்த்து மொத்தம் 288 பேர் பணியில் இருந்தனர்.

    முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு வருமாறு:-

    திருநாவுக்கரசர் (காங்கிரஸ்)-29,742

    இளங்கோவன் (தே.மு.தி.க.)-7,124

    சாருபாலா (அ.ம. மு.க.)-4,991

    முதல் சுற்று முடிவின்படி 22 ஆயிரத்து 618 வாக்குகள் வித்தியாசத்தில் திருநாவுக்கரசர் முன்னிலையில் இருந்தார்.
    கோவையில் இருந்து தேனிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றியதில் முறையான விசாரணை தேவை என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #thirunavukkarasar #votemachineissue

    கோவில்பட்டி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் கோவில்பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாடு முழுவதும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. இதுவரை நடந்து முடிந்த அனைத்து தேர்தல்களிலும், நடக்க உள்ள தேர்தல்களிலும் பாரதிய ஜனதாவுக்கு எதிரான அலை வீசுகிறது. இதனால் மத்தியில் பாரதிய ஜனதா அகற்றப்படுவது உறுதி. 23-ந் தேதிக்கு பின்னர் ராகுல் காந்தி பிரதமராக வருவார்.

    தமிழகத்தை பொறுத்த வரை மதச்சார்பற்ற கூட்டணி தான் வெற்றி பெறும். சட்டமன்ற இடைத்தேர்தலை பொறுத்தவரை எப்படி மத்தியில் ஆட்சி மாற்றம் வேண்டும் என வாக்களிக்கிறார்களோ அதேபோல் தமிழகத்தில் மோடியை ஆதரித்து கொண்டிருக்கிற பாரதிய ஜனதாவின் பினாமியாக இருக்கக்கூடிய எடப்பாடி தலைமையிலான ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற உணர்வோடு தான் மக்கள் வாக்களித்துள்ளனர். அந்த வகையில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு மக்கள் வெற்றியை தருவார்கள்.

    காங்கிரசை பொறுத்த வரை தலைவர் ராகுல் காந்தி தேவையான நேரத்தில் தேவையான மாற்றத்தை செய்வார். கோவையில் இருந்து தேனிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஏன் கொண்டு செல்லப்பட்டது என்பது மர்மமாக உள்ளது. இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    பெட்டிகளை மாற்றவே துணை முதல்வர் வாரணாசி சென்று, அங்கு பிரதமரை சந்தித்தார் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. எனவே இது குறித்து அங்கு ஏதாவது பேசப்பட்டதா?, அங்கு சென்றதற்கும், பெட்டிகள் மாற்றப்படவும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா? என இதையெல்லாம் ஆராயப்பட வேண்டிய வி‌ஷயம்.

    அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணிக்கு தோல்வி உறுதியானது. அந்த பயத்தில் இதுபோன்ற தில்லுமுல்லுகள் செய்ய முயற்சிக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

    தேர்தல் ஆணையர், தேர்தல் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு தான் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டியது, தேர்தல் சட்டம் மற்றும் விதிமுறைகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது. எனவே கண்ணியத்தோடு அந்தப் பணிகளை செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இல்லையென்றால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

    இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.

    நான் பாராளுமன்ற உறுப்பினரானால் திருச்சி தொகுதியில் தொழில் வளத்தை பெருக்க நடவடிக்கை எடுப்பேன் என்று காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் பேசியுள்ளார். #thirunavukkarasar

    திருச்சி:

    திருச்சி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக திருநாவுக்கரசர் போட்டியிடுகிறார். நேற்று அவர் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கிராமம், கிராமமாக திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். திருவளர்ச்சிப்பட்டி என்ற கிராமத்தில் தனது பிரசாரத்தை அவர் தொடங்கினார்.

    பிரசாரத்தின்போது திருநாவுக்கரசர் பேசுகையில், ‘பிரதமர் நரேந்திர மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமானால் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும். அதற்கு கை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள். கடந்த தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு வேலை தருவோம் என்று வாக்குறுதி அளித்த மோடி அதனை நிறைவேற்றாமல் 5 ஆண்டுகளை முடித்து விட்டார்.

    மோடி அறிவித்த பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பல குறு, சிறு தொழில்கள் நசுங்கி விட்டன. இந்த பகுதியில் படித்த இளைஞர்கள் ஏராளமானவர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். நான் பாராளுமன்ற உறுப்பினரானால் இந்த தொகுதியில் தொழில் வளத்தை பெருக்க நடவடிக்கை எடுப்பேன்’ என்றார்.

    இன்று திருநாவுக்கரசர் திருச்சி அந்தநல்லூர் பகுதியில் வாக்கு சேகரிப்பை கம்பரசம்பேட்டையில் தொடங்கினார். தொடர்ந்து அவர் முத்தரசநல்லூர் ஊராட்சி, பழுர் ஊராட்சி, அல்லூர், திருச்செந்துறை, ஜீயபுரம் கடைவீதி, அந்தநல்லூர் ஊராட்சி, கொடியாலம், திருப் பராய்த்துறை, பெருக மணி, சிறுகமணி, பேட்டை வாய்த்தலை கடைவீதி, தேவஸ்தானம் பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

    மாலையில் பெரிகருப்பூர், மேக்குடி, குழுமணி, கோப்பு, பேரூர், மருதாண்டகுறிச்சி, மல்லியம்பத்து, முல்லிக்கருப்பூர், எட்டரை, போசம்பட்டி, வியாழன்மேடு, புலியூர், போதாவூர், கீரிக்கல்மேடு ஆகிய பகுதிகளில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கிறார்.

    அவருடன் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் அப்சரா ரெட்டி, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, குடருட்டி சேகர், காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், குடமுருட்டி ஆறுமுகம், கம்பரசம்பேட்டை தர்மராஜ் மற்றும் பலர் சென்றனர். #thirunavukkarasar

    கார்த்தி சிதம்பரத்தின் தேர்தல் வெற்றிக்காக சுதர்சன நாச்சியப்பன் உள்பட அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறினார். #LSPolls #congress #Thirunavukkarasar #KartiChidambaram
    திருச்சி:

    திருச்சி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று திருச்சி தொகுதியில் போட்டியிட அவர் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

    இதற்காக இன்று காலை ரெயில் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சி ஜங்சனுக்கு வந்தார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    திருச்சி என்னுடைய சொந்த தொகுதி. நான் வெளியூர்க்காரன் அல்ல. திருச்சிக்கு அடிக்கடி வந்து செல்பவன். திருச்சி தொகுதியில் வெற்றி பெற்று மக்கள் பணியாற்றுவேன். திருச்சி தொகுதியில் தொழில் வளங்களை ஏற்படுத்தி வேலை வாய்ப்பை உருவாக்குவது தான் எனது முதல் பணி.


    சிவகங்கை தொகுதியில் கார்த்திக் சிதம்பரத்தை வேட்பாளராக ராகுல்காந்தி அறிவித்துள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டபிறகு அவர் மீது தனிப்பட்ட விமர்சனம் செய்வது, குற்றச்சாட்டுகள் சுமத்துவது ஏற்புடையது அல்ல.

    தனது அரசியல் வளர்ச்சியை தடுத்தது ப.சிதம்பரம் தான் என்று சுதர்சன நாச்சியப்பன் கூறியதும் ஏற்கத்தக்கதல்ல. எனவே கருத்து வேறுபாடுகளை மறந்து சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தின் தேர்தல் வெற்றிக்காக சுதர்சன நாச்சியப்பன் உள்பட அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #congress #Thirunavukkarasar #KartiChidambaram
    காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி மீண்டும் தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளதாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #Congress #RahulGandhi #thirunavukkarasar
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் வலுவான, பலமான கூட்டணி அமைந்துள்ளது. ஒத்த கருத்துடைய தலைவர்கள் இடம் பெற்றுள்ள கூட்டணி 39 தொகுதிகளிலும், இக்கூட்டணி மகத்தான வெற்றி பெறும். மக்கள் பிரச்சனைக்காக போராடுகிற இந்த கூட்டணியில் நான் திருச்சியில் போட்டியிட தலைவர் ராகுல் காந்தி வாய்ப்பு கொடுத்துள்ளார். அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மோடி எதுவும் செய்யவில்லை. மக்களுக்கு அவர் மீது வெறுப்பு தான் அதிகம் உள்ளது. ராகுல் தலைமையில் ஆட்சி அமையும் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி.



    காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி மீண்டும் தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக அவர் விரைவில் வர இருக்கிறார். பிரியங்கா வருவது பற்றி ராகுல்தான் முடிவு செய்வார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #RahulGandhi #thirunavukkarasar
    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேனி தொகுதியில் இளங்கோவன் போட்டியிடுகிறார். #LSPolls #congress #congressCandidates
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான அணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், ஐ.ஜே.கே., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

    தமிழ்நாடு-புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் தி.மு.க. 20 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ்-10, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளுக்கு தலா 2 இடங்களும், ம.தி.மு.க., முஸ்லிம் லீக், ஐ.ஜே.கே., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவைக்கு தலா ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன.

    தி.மு.க. கூட்டணியில் கடந்த வாரம் தொகுதி பங்கீடு நடந்து முடிந்ததும் மறுநாளே தி.மு.க., வேட்பாளர்களை அறிவித்தது. விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இடது சாரிகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட மற்ற கூட்டணி கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கின.

    காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் போட்டியிடும் 9 தொகுதி வேட்பாளர்கள் மற்றும் புதுச்சேரி வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவு செய்ய டெல்லி மேலிடத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடந்த சில தினங்களாக ஆலோசனை நடத்தி வந்தனர். ஒவ்வொரு தொகுதியையும் 3 முதல் 5 பேர் பிடிவாதமாக கேட்டதால் காங்கிரஸ் வேட்பாளர்களை முடிவு செய்வதில் நீண்ட இழுபறி நீடித்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை காங்கிரஸ் உயர்மட்ட குழு கூட்டம் ராகுல் தலைமையில் நடந்தது. அதில் தமிழ்நாட்டில் 9 தொகுதிகளில் யார்-யாரை வேட்பாளர்களாக அறிவிப்பது என்பது பற்றி தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. இரவு வரை இந்த ஆலோசனை நீடித்தது.

    தமிழக காங்கிரஸ் தலைவர்கள் எப்படியாவது தொகுதியை பெற்று விட வேண்டும் என்று தீவிரமாக இருந்ததால் கடும் சவால்களுக்கு மத்தியில்தான் காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்ய முடிந்தது.

    இதையடுத்து நேற்று இரவு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

    கன்னியாகுமரி- எச்.வசந்த குமார்

    விருதுநகர்- மாணிக் தாகூர்

    திருச்சி - திருநாவுக்கரசர்

    ஆரணி-விஷ்ணு பிரசாத்

    திருவள்ளூர் (தனி)- ஜெயக்குமார்

    தேனி- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

    கரூர்- ஜோதிமணி

    கிருஷ்ணகிரி- டாக்டர் செல்லக்குமார்

    புதுச்சேரி- வைத்திலிங்கம்


    சிவகங்கை தொகுதிக்கு மட்டும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. அங்கு யாரை நிறுத்துவது என்பது பற்றி தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு அந்த தொகுதி கேட்கப்பட்டது.

    ஆனால் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் கார்த்தி சிதம்பரத்துக்கு அந்த தொகுதியை ஒதுக்க மறுத்து விட்டனர். இதையடுத்து அங்கு களம் இறங்க காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    இன்று இரவுக்குள் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் விவரம் தெரிய வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் செயல் தலைவர்கள் மற்றும் வாரிசுகளுக்கு இடம் வழங்கப்பட மாட்டாது என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் அதை வேட்பாளர் தேர்வின்போது காங்கிரஸ் மூத்த தலைவர்களால் உறுதியாக கடைபிடிக்க இயலவில்லை.

    செயல் தலைவர்களில் வசந்தகுமார், விஷ்ணுபிரசாத் இருவரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை போராடி பெற்றுள்ளனர். அதுபோல திருநாவுக்கரசர், டாக்டர் செல்லக்குமார் ஆகியோரும் தங்கள் தொகுதியை கடைசி வரை போராடியே இறுதி செய்ய முடிந்ததாக கூறப்படுகிறது.

    காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழக தேர்தல் களம் மேலும் சூடு பிடித்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பால் சில தொகுதிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளன.

    கன்னியாகுமரியில் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணனை எதிர்த்து எச்.வசந்தகுமார் போட்டியிடுவதால் அந்த தொகுதி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுபோல தேனி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இறங்கி இருப்பதும் விறுவிறுப்பை உருவாக்கி இருக்கிறது.

    தேனி தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுகிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் நிறுத்தப்பட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் தேனி தொகுதியில் கணிசமான அளவுக்கு செல்வாக்கு இருக்கிறது.

    இந்த நிலையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை அந்த தொகுதியில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி இறக்கி விட்டுள்ளது. இது அந்த தொகுதியை பரபரப்பான தொகுதியாக மாற்றி இருக்கிறது. அ.தி.மு.க. வாக்குகளையும், ஜாதி வாக்குகளையும் ரவீந்திரநாத்தும், தங்க தமிழ்ச்செல்வனும் பிரிக்கும் நிலையில் இளங்கோவன் களம் இறங்கி இருப்பதால் வாக்குகள் எப்படி மாறும் என்பதில் அதிர்ச்சி கலந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வாக்குகள் பிரியாது என்பதாலும் இளங்கோவன் செல்வாக்கு மிக்க தலைவர் என்பதாலும் அவருக்கு எதிராக நிற்கும் ஓ.பி.எஸ். மகன் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் கடும் சவாலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதேநிலைதான் திருநாவுக்கரசர் போட்டியிடும் திருச்சி தொகுதியிலும், டாக்டர் செல்லக்குமார் போட்டியிடும் கிருஷ்ணகிரி தொகுதியிலும், ஜோதிமணி போட்டியிடும் கரூர் தொகுதியிலும் ஏற்பட்டுள்ளது.

    காங்கிரஸ் வேட்பாளர்கள் செவ்வாய்க்கிழமை மனுதாக்கல் செய்வார்கள் என்று தெரிய வந்துள்ளது. #LSPolls #congress #congressCandidates
    பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி-திருவள்ளூர் தொகுதிகளுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இளங்கோவன், நடிகை குஷ்பு போட்டியிட மனு கொடுத்துள்ளனர். #kushboo #elangovan #parliamentelection

    சென்னை:

    காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளுக்கும் விருப்ப மனு கொடுப்பது இன்றுடன் முடிவடைகிறது. கடைசி நாளான இன்று ஏராளமானோர் மனு கொடுத்தனர். தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. என்றாலும் திருவள்ளூர், கன்னியாகுமரி ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் தான் போட்டியிட வாய்ப்பு கேட்டு அதிக எண்ணிக்கையில் மனு கொடுத்துள்ளனர்.

    கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட ராபர்ட் புரூஸ், பொன்ராபட்சிங், ரூபிமனோகரன், வசந்த குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. ராமசுப்பு, ஊர்வசி அமிர்தராஜ், அசோகன், சாலமன், அனீசா பிரைட் உள்பட 26 பேர் மனு செய்துள்ளனர்.

    இதே போல் திருவள்ளூர் தொகுதிக்கும் கடும் போட்டி உள்ளது. இதுமட்டும்தான் தனி தொகுதி என்பதால் இதற்கும் கடும் போட்டி இருக்கிறது. முன்னாள் எம்.பி.க்கள் விஸ்வநாதன், ராணி, முன்னாள் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை, விக்டரி ஜெயக்குமார், ரஞ்சன் குமார், ஜான்சிராணி, ஜெயக்குமார் உள்பட 10 பேர் மனு கொடுத்துள்ளனர்.


    முன்னாள் மாநில தலைவர் இளங்கோவன் ஈரோடு தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அந்த தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிய வில்லை.

    இந்த நிலையில் அவர் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட வலியுறுத்தி அந்த மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் மாவட்ட தலைவர்கள் 3 பேர் மற்றும் அகில இந்திய காங் கமிட்டி உறுப்பினர் ரகு உள்பட பலர் மனு கொடுத்தனர்.

    தேனி தொகுதியில் இளங்கோவன் போட்டியிடுவதற்காக சென்னையை சேர்ந்த சிவராமன், ரங்க பாஷ்யம், நாஞ்சில் பிரசாத் ஆகியோர் மனு கொடுத்தனர். இதுபோல் விருதுநகர், கரூர், திருச்சி ஆகிய தொகுதிகளில் அவர் போட்டியிடவும் மனு கொடுத்துள்ளனர்.

    ஆரணி தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்.எல்.ஏ. அருள் அன்பரசு, கரூர் தொகுதிக்கு ஜோதிமணி, திருச்சிக்கு பட்டுக்கோட்டை ராஜேந்திரன் உள்பட பலர் மனு கொடுத்தனர்.

    திருச்சி தொகுதியில் போட்டியிட முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பெயரில் அவருடைய மகன் ராமசந்திரன், மனு கொடுத்தார். இதே தொகுதியில் போட்டியிட நடிகை குஷ்பு பெயரில் காங்கிரஸ் கலைப்பிரிவு மாநில துணை தலைவர் மயிலை அசோக்குமார் மனு கொடுத்தார். இன்று மாலைவரை மனுக்கள் பெறப்பட்டன.  #kushboo #elangovan #parliamentelection

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது. #LSPolls #Congress
    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் போட்டியிட விரும்புவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களும் பெறப்பட்டுள்ளன.

    கடந்தமுறை போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள் முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    1. திருவள்ளூர் (தனி)- காங்கிரஸ் மாநில எஸ்.சி. பிரிவு தலைவர் செல்வப் பெருந்தகை அல்லது விக்டரி ஜெயக்குமார், முன்னாள் எம்.பி. விஸ்வநாதன்.

    2. கிருஷ்ணகிரி- டாக்டர் செல்லகுமார் அல்லது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

    3. ஆரணி- முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி அல்லது அவரது மகன் விஷ்ணு பிரசாத்.

    4. கரூர்- ஜோதிமணி

    5. திருச்சி- திருநாவுக்கரசர்

    6. சிவகங்கை- கார்த்தி சிதம்பரம்

    7. தேனி- ஜே.எம்.ஆரூண்

    8. விருதுநகர்- மாணிக்கம் தாகூர்

    9.கன்னியாகுமரி- எச்.வசந்தகுமார், ரூபி மனோகரன், ராபர்ட் ப்ரூஸ்.

    10. புதுச்சேரி- ஏ.வி.சுப்பிரமணியம் #LSPolls #Congress
    காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி அனுமதி கொடுத்தால் திருச்சி தொகுதியில் போட்டியிடுவதாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #Thirunavukkarasar #RahulGadhi
    சென்னை:

    சென்னை சத்தியமூர்த்திபவனில் நடந்த தமிழக காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரசாரக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் போட்டியிடுபவர்கள் விருப்ப மனு வாங்கி பணம் செலுத்துவார்கள். அதற்கு பிறகு, 15 பேர் கொண்ட மாநில தேர்தல் பரிந்துரைக்குழுவினர் பார்த்து, ஒரு பட்டியல் தயார் செய்து டெல்லிக்கு அனுப்புவார்கள். டெல்லியில் தேர்தல் குழு ஒன்று இருக்கிறது. மாநில தேர்தல் பரிந்துரைக்குழுவினர் பரிந்துரைத்தவர்களை பார்த்து வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்வார்கள். ராகுல்காந்தி அனுமதியுடன் அந்த பட்டியல் வெளியாகும். திருச்சி தொகுதியில் என் பெயர் வந்தால் நான் போட்டியிடுவேன். நான் நிற்க விருப்பப்படுகிறேன். விருப்ப மனு கொடுப்பேன். ராகுல்காந்தி அனுமதி கொடுத்தால் தேர்தலில் நிற்பேன்.



    தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளும் காங்கிரஸ் விரும்புகிற தொகுதிகள் தான். எங்கள் வேட்பாளர்கள் உள்பட தோழமை கட்சி வேட்பாளர்களும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தான். எல்லோரும் வெற்றி பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thirunavukkarasar #RahulGadhi
    ×