என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருத்து கணிப்பு"

    • புதிய கருத்துக்கணிப்பின் மூலம் பிரதமர் மோடி இந்தியாவில் தொடர்ந்து புகழ்பெற்ற தலைவராக இருந்து வருவது தெரியவந்துள்ளது.
    • நாடு முழுவதும் மோடி அலை ஆக்கிரமித்துள்ள போதிலும் ராகுல் காந்திக்கும் ஆதரவு அதிகரித்து இருப்பது அக்கட்சியினருக்கு புது தெம்பை கொடுத்து இருக்கிறது.

    புதுடெல்லி:

    மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதையடுத்து ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தற்போது யாருக்கு ஆதரவு அதிகம் இருக்கிறது என்பதை அறிய பொதுமக்களிடம் புதிதாக கருத்துக்கணிப்பை நடத்தியது.

    கடந்த 10-ந்தேதி 19-ந்தேதி வரை நாடு முழுவதும் 19 மாநிலங்களில் 71 பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுமார் 7,202 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது.

    இந்த கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடி இன்னும் செல்வாக்கு மிக்க தலைவராக திகழ்ந்து வருகிறார் என்பது தெரியவந்தது. அதேசமயத்தில் காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வரும் ராகுல் காந்திக்கு பாரத ஒற்றுமை யாத்திரைக்கு பிறகு 15 சதவீதம் செல்வாக்கு அதிகரித்து உள்ளதும் தெரியவந்து இருக்கிறது.

    43 சதவீத பொதுமக்கள் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கூட்டணி 3- வது முறையாக வெற்றி பெறும் என தெரிவித்து உள்ளனர். 38 சதவீதம் பேர் இந்த ஆட்சி வேண்டாம் என சொல்லி இருக்கிறார்கள்.

    இன்று தேர்தல் நடந்தாலும் பாரதிய ஜனதாவை ஆதரிப்போம் என 40 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர். காங்கிரஸ் கட்சியை 29 சதவீதம் பேர் ஆதரித்து உள்ளனர். பாரதிய ஜனதாவுக்கு 2019-ம் ஆண்டு 37 சதவீதம் இருந்தது. இது தற்போது 39 சதவீதமாக அதிகரித்து உள்ளது. காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு 19 சதவீதத்தில் இருந்து 29 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.

    2019-ம் ஆண்டு யார் பிரதமராக வர வேண்டும்? என நடந்த கருத்துக்கணிப்பில் மோடிக்கு 44 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து இருந்தனர். தற்போது இது 43 சதவீதமாக குறைந்து இருக்கிறது. அதேசமயம் ராகுல் காந்திக்கு இருந்த ஆதரவு 24 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக உயர்ந்து உள்ளது. இருந்த போதிலும் பிரமதர் மோடியின் செல்வாக்கு இன்னும் குறையவில்லை என்பதை இந்த கருத்துக்கணிப்பு காட்டுகிறது.

    25 சதவீதம் பேர் மோடியின் பேச்சுதிறமையை விரும்புவதாகவும், 20 சதவீதம் பேர் அவரது வளர்ச்சி திட்டங்களை ஆதரிப்பதாகவும், 13 சதவீதம் பேர் அவரது கடுமையான உழைப்பை பாராட்டுவதாகவும் தெரிவித்து உள்ளனர். மேலும் அவரது கவர்ச்சி தங்களை வெகுவாக ஈர்த்து இருப்பதாக 13 சதவீதம் பேரும் அவரது கொள்கை தங்களுக்கு பிடித்து உள்ளதாக 11 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர்.

    இம்மாதம் நடந்த கர்நாடக தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த சூழ்நிலையில் அக்கட்சியினருக்கு மேலும் உற்சாகத்தை கொடுக்கும் வகையில் ராகுல் காந்தியின் செல்வாக்கும் கடந்த தேர்தலை விட தற்போது சற்று அதிகரித்து உள்ளது.

    ராகுல் காந்தி சமீபத்தில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டார். இந்த யாத்திரைக்கு பிறகு அவரது செல்வாக்கு 15 சதவீதம் அதிகரித்து உள்ளது. 55 சதவீத மக்கள் மத்திய அரசின் திட்டங்களில் திருப்தி அடைந்துள்ளதாக தெரிவித்து இருக்கிறார்கள்.

    அடுத்த பிரதமராக யாரை ஆதரிக்கிறீர்கள் என்பதற்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோரை தவிர மேற்குவங்க முதல்- மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு 4 சதவீதம் பேரும், உத்தரபிரதேச முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவுக்கு 3 சதவீதம் பேரும், நிதிஷ் குமாருக்கு 1 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

    இந்த புதிய கருத்துக்கணிப்பின் மூலம் பிரதமர் மோடி இந்தியாவில் தொடர்ந்து புகழ்பெற்ற தலைவராக இருந்து வருவது தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் மோடி அலை ஆக்கிரமித்துள்ள போதிலும் ராகுல் காந்திக்கும் ஆதரவு அதிகரித்து இருப்பது அக்கட்சியினருக்கு புது தெம்பை கொடுத்து இருக்கிறது.

    • 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணிக்கு 353 இடங்கள் கிடைத்திருந்தன.
    • மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணிக்கு 296 முதல் 326 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு அடுத்த ஆண்டு (2024) மே மாதம் வரை பதவி காலம் உள்ளது. என்றாலும், பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்த நிலையில் பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று 3-வது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தீவிரமாக உள்ளார். இதற்காக அவர் டெல்லியில் தொடர் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார்.

    இதற்கிடையே பா.ஜனதாவை வீழ்த்த வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகளும் தீவிரமாக உள்ளன. இதற்காக மாறுபட்ட கொள்கைகள் உடைய எதிர்க்கட்சிகள் ஓரணியில் ஒருங்கிணைந்து உள்ளன. அவர்களது கூட்டணிக்கு 'இந்தியா' என்று பெயரிடப்பட்டுள்ளது.

    எதிர்க்கட்சி கூட்டணி தலைவர்கள் முதலில் பாட்னாவில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். பிறகு பெங்களூரில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அடுத்து மும்பையில் இந்த மாத இறுதியில் மீண்டும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளனர்.

    எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் அடுத்தகட்ட நடைபயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதை முறியடிக்கும் வகையில் பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை அமைந்திருந்தது.

    டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி பேசுகையில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அதை உறுதிபடுத்தும் வகையில் அதற்கு மறுநாளே (16-ந்தேதி) புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில் பா.ஜனதா கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்று 3-வது முறையாக ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    ஆங்கில தொலைக்காட்சி சேனல் நடத்திய அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் விவரம் வருமாறு:-

    பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடத்தினால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று நாடு முழுவதும் மக்களிடம்கேள்விகள் கேட்கப்பட்டு கருத்துக் கணிப்பு செய்யப்பட்டது. அதில் பெரும்பாலானவர்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே பா.ஜனதா 3-வது முறையாக ஆட்சி அமைக்க மக்களிடம் ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது.

    மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணிக்கு 296 முதல் 326 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் பா.ஜனதா தனி பெரும்பான்மை பெறவும் வாய்ப்பு இருக்கிறது. என்றாலும், பா.ஜனதா கூட்டணிக்கு கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் சற்று சறுக்கல் என்றே சொல்ல வேண்டும்.

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணிக்கு 353 இடங்கள் கிடைத்திருந்தன. கருத்துக் கணிப்பில் 326 இடங்கள் கிடைக்கவே வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. எனவே 27 இடங்கள் குறையக்கூடும் என்று தெரிய வந்துள்ளது.

    காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு மக்களிடம் அதிகளவு ஆதரவு இல்லை என்பது கருத்துக்கணிப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தேர்தல் நடந்தால் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு மொத்தம் 160 முதல் 190 இடங்கள் கிடைக்கவே வாய்ப்புகள் உள்ளது.

    எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தென் மாநிலங்களில் பா.ஜ.க.வை விட அதிக ஆதரவு இருப்பதும் கருத்துக் கணிப்பில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

    தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 இடங்களில் தற்போது தேர்தல் வைத்தால் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு 57.2 சதவீத வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் தி.மு.க. கூட்டணிக்கு 30 முதல் 34 தொகுதிகளில் வெற்றி கிடைக்கலாம். அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு 27.8 சதவீத வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அந்த கூட்டணிக்கு 4 முதல் 8 தொகுதிகளில் வெற்றி கிடைக்கலாம்.

    கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டு இருப்பது கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. பா.ஜ.க. கூட்டணிக்கு 20 இடங்களிலும், இந்தியா கூட்டணிக்கு 10 இடங்களிலும் வெற்றி கிடைப்பது கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

    மகாராஷ்டிராவிலும், பீகாரிலும் பா.ஜ.க. கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவ வாய்ப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. பீகாரில் பா.ஜ.க. கூட்டணிக்கு 22 முதல் 24 இடங்களும், இந்தியா கூட்டணிக்கு 16 முதல் 18 இடங்களிலும் வெற்றி வாய்ப்பு உள்ளது.

    மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. அங்கு பா.ஜனதா மிக மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அதிக வெற்றிகளை தவறவிட வாய்ப்பு இருப்பதாக மக்கள் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ராகுலின் இந்தியா ஒற்றுமை யாத்திரை மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. அதே சமயத்தில் பிரதமர் மோடியின் வளர்ந்த இந்தியா கோஷம் மக்களை கவர்ந்துள்ளது.

    இதன் காரணமாகவே இந்தி பேசும் மாநிலங்களில் பா.ஜனதாவுக்கு 80 சதவீத வெற்றி விகிதம் இருப்பதை கருத்துக்கணிப்பில் தெரிந்து கொள்ள முடிந்தது. இதன் மூலம் தென் மாநிலங்களை விட வடமாநிலங்களில் பா.ஜனதாவுக்கு அமோக ஆதரவு இருப்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது.
    • ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்த இடங்கள் 199 ஆகும்.

    மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

    தெலுங்கானாவில் மாலை 5 மணி நிலவரப்படி 63.94 சதவீத வாக்குப்பதிவாகியுள்ள நிலையில் மொத்த வாக்குப்பதிவு விவரம் இன்னும் வெளியாகவில்லை.

    இந்நிலையில், 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது.

    இதில், ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்த இடங்கள் 199 ஆகும். இதில், பெரும்பான்மையாக பிடிக்க வேண்டிய இடங்கள் 101.

    கருத்துக் கணிப்பு முடிவுகளின் விவரம் வருமாறு:

    ராஜஸ்தானில் பாஜக கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

    சிஎன்என் நியூஸ் 18: பாஜக- 111, காங்கிரஸ்- 74, மற்றவை-14

    ஜன் கி பாத்: பாஜக 100- 122, காங்கிரஸ் 62- 85, மற்றவை 14- 15

    பி- மார்க்யூ: பாஜக 101- 125, காங்கிரஸ் 69- 81, மற்றவை 05- 15

    பால்ஸ்டிராட்: பாஜக 100- 110, காங்கிரஸ் 90- 100, மற்றவை 05-15

    டைம்ஸ் நவ்: பாஜக 108- 128, காங்கிரஸ் 56- 72, மற்றவை 13- 21

    இதையடுத்து, ராஜஸ்தானில் பாஜக கட்சி முன்னிலையில் இருப்பதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

    • 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது.
    • மிசோரம் மாநிலத்தில் மொத்த இடங்கள் 40 ஆகும்.

    மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

    இந்நிலையில், 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது.

    இதில், மிசோரம் மாநிலத்தில் மொத்த இடங்கள் 40 ஆகும். இதில், பெரும்பான்மையாக பிடிக்க வேண்டிய இடங்கள் 21.

    கருத்துக் கணிப்பு முடிவுகளின் விவரம் வருமாறு:

    ஜன் கி பாத்: மி.தே.மு 10- 14, ஜோ.ம.இ 15- 25, காங்கிரஸ் 05- 09, மற்றவை 00- 02.

    இந்தியா டிவி மற்றும் சிஎன்எக்ஸ்: மி.தே.மு 14- 18, ஜோ.ம.இ 12- 16, காங்கிரஸ் 08- 10, மற்றவை 00- 02.

    பி- மார்க்யூ: மி.தே.மு 14- 20, ஜோ.ம.இ 15- 25, காங்கிரஸ் 05- 09, மற்றவை 00- 02.

    (மி.தே.மு- மிசோ தேசிய முன்னணி, ஜோ.ம.இ- சோரா மக்கள் கட்சி)

    • பாஜக கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறும் கருத்துக் கணிப்பு.
    • 290 முதல் 295 தொகுதிகளை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜூன் 1-ந்தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் பெரும்பாலான டிவி சேனல்கள் கருத்துக் கணிப்ப நடத்தும் நிறுவனங்களுடன் இணைந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட்டது.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பெரும்பாலான நிறுவனங்கள் பாஜக தலைமயிலான கூட்டணி 450 இடங்களை பிடிக்கும் எனத் தெரிவித்தனர்.

    ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் (Axis My India) பாஜக கூட்டணி 400 இடங்களை பிடிக்கும என கருத்து கணிப்பில் தெரிவித்திருந்தது.

    இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் ஆங்கில செய்தி சேனல் இந்தியா டுடே நேரலை விவாதம் நடத்தியது. இதில் ஆக்சிஸ் மை இந்தியா நிர்வாக இயக்குனர் பிரதீப் குப்தா கலந்து கொண்டார்.

    தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் பா.ஜனதா முதலில் சற்று அதிகமான முன்னிலை பெற்றது. அதன்பின் இந்தியா கூட்டணி சலைக்காமல் பல இடங்களில் முன்னிலை பெற்றது.

    பெரும்பாலான மாநிலங்களில் பாஜக சரிவை சந்தித்துள்ளது. இதனால் கருத்துக் கணிப்பு பொய்யாகியுள்ளது. நேரடி விவாதத்தின்போது கருத்து கணிப்பு குறித்து பிரதீப் குப்தாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. தொடர்ந்து பதில் அளித்த வந்த நிலையில், ஒரு கட்டத்தில் தனது நிறுவனத்தின் கருத்து கணிப்பு தவறாகிவிட்டதே... என எண்ணி கதறி அழுதத் தொடங்கிவிட்டார். விவாதத்தை நடத்தியவர் ஆறுதல் கூறிய போதிலும் பிரதீப் குப்தாவால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    • இரு மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.
    • ஆளும் பாஜக மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதால், ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    காஷ்மீரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

    அரியானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

    அரியானாவில் சட்டபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.

    அதன்படி, அரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் 56-66 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று டைம்ஸ் ஆப் இந்தியா கணித்துள்ளது.

    பாஜக 18- 24, ஜேஜேபி 0- 3 தொகுதிகளிலும், மற்றவை 2- 5 தொகுதிகளையும் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.

    இதனால், ஆளும் பாஜக மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதால், ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுபோல், சிஎன்என் நியூஸ் 18 தகவலின்படி காங்கிரஸ் 59, பாஜக 21, ஆம் ஆத்மி 0, மற்றவை 6 இடங்களை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.

    காஷ்மீரில் மொத்தமுள்ள 90 இடங்களில், காங்கிரஸ் கூட்டணி 49- 61 இடங்களை கைப்பற்றி வெற்றிபெறும் என என்டிடிவி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாஜக 20- 32 இடங்களையும், பிடிபி 7-11 இடங்களையும், மற்றவை 4-6 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • நாங்கள் முழு மெஜாரிட்டி மட்டுமல்லாமல், அதிக இடங்களை பிடித்து ஆட்சியை அமைத்துள்ளோம்.
    • பிப்ரவரி 8-ந்தேதி வரை அனைவரும் காத்திருக்க வேண்டும்.

    டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி 57.70 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

    மாலை 6 மணி வரை வாக்கு மையம் வந்தடைந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. பதிவான மொத்த வாக்கு சதவீதம் இன்றிரவு அல்லது நாளை காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

    இந்த நிலையில்தான் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தையை கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது. இதில் பெரும்பாலான கருத்து கணிப்புகள் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் வெளியிடப்பட்டுள்ளது.

    சுமார் 27 வருடங்கள் கழித்து டெல்லியில் மீண்டும் பாஜக ஆட்சி அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் கருத்து கணிப்பு குறித்து ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கார் கூறியதாவது:-

    ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் எப்போதும் தவறானவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. நாங்கள் முழு மெஜாரிட்டி மட்டுமல்லாமல், அதிக இடங்களை பிடித்து ஆட்சியை அமைத்துள்ளோம்.

    இந்த முறையில் அதில் வேறுபாடு இருக்காது. சில கருத்து கணிப்பகள் நாங்கள் வெற்றி பெறுவதாக வெளியிட்டுள்ளன. என்றபோதிலும் பிப்ரவரி 8-ந்தேதி வரை அனைவரும் காத்திருக்க வேண்டும் என கூற விரும்புகிறேன். மிகப்பெரிய மெஜாரிட்டியுடன் கெஜ்ரிவால் ஆட்சி அமைப்பார்.

    இவ்வாறு பிரியங்கா கக்கார் தெரிவித்துள்ளார்.

    • தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் பாஜக ஆட்சி அமைக்கும் என வெளியீடு.
    • கருத்து கணிப்பின்படி முடிவு அமைந்தால் 27 வருடத்திற்குப் பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்கும்.

    டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி 57.70 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

    மாலை 6 மணி வரை வாக்கு மையம் வந்தடைந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. பதிவான மொத்த வாக்கு சதவீதம் இன்றிரவு அல்லது நாளை காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

    இந்த நிலையில்தான் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தையை கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது. இதில் பெரும்பாலான கருத்து கணிப்புகள் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் வெளியிடப்பட்டுள்ளது.

    சுமார் 27 வருடங்கள் கழித்து டெல்லியில் மீண்டும் பாஜக ஆட்சி அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் கருத்து கணிப்பு குறித்து புது டெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா கூறுகையில் "பிப்ரவரி 8-ந்தேதி உறுதியாக டெல்லியில் தாமரை மலரும். நாங்கள் சிறந்த ஆட்சியை வழங்குவோம். யமுனை ஆறு சுத்தம் செய்யப்படும். வேலைவாய்ப்பு வழங்கப்படும். அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியடைந்து கொண்டிருக்கிறார் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்" என்றார்.

    • டெல்லி சட்டமன்ற தேர்தல் 60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
    • பாஜக ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

    70 தொகுதிகளை கொண்ட டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், பல்வேறு நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தையை கருத்து கணிப்பை வெளியிட்டது. இதில் பெரும்பாலான கருத்து கணிப்புகள் பாஜக ஆட்சியை பிடிக்கும். அதுவும் தனி மெஜாரிட்டியுடன் பெரும்பான்மையான இடங்களை பிடிக்கும் என வெளியிட்டுள்ளது.

    கடந்த இரண்டு தேர்தல்களிலும் இதுபோன்றுதான் கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால் கருத்து கணிப்பை பொய்யாக்கி ஆட்சியை பிடித்தோம் என ஆம் ஆத்மி கட்சி தலைவரகள் தெரிவித்துள்ளனர். அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கார் "ஆத்மி ஆத்மிக்கு எதிராக கருத்து கணிப்புகள் எப்போதும் தவறானவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 8-ந்தேதி (நாளைமறுதினம்) வரை காத்திருக்க வேண்டும் என சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் கூறியதாவது:-

    மசாஜ், ஸ்பா நடத்தும் நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தை கருத்து கணிப்புகள் நடத்தினால், கணிப்பின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதை உங்களுக்கு தெரியும். பிப்ரவரி 8-ந்தேதி வரை காத்திருக்க வேண்டும் என எல்லோருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

    மிகப்பெரிய மெஜாரிட்டியுடன் டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும். எங்களால் பேசிய விசயங்களை மக்கள் ஏற்றுக்கொண்டனர்.

    இவ்வாறு சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

    மேட்ரைஸ் கருத்துக்கணிப்பில், பாஜக 35-40 இடங்களையும், ஆம் ஆத்மி 32-37 இடங்களையும், காங்கிரஸ் 0-1 இடங்களையும் வெல்லும் என்றும் பீப்பிள்ஸ் பல்ஸ் கருத்துக்கணிப்பில் பாஜக 51-60 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 10-19 இடங்களையும், காங்கிரஸுக்கு 0 இடங்களையும் வெல்லும் என்றும் என்.டி டிவி கருத்து கணிப்பில் பாஜக 35-40, ஆம் ஆத்மி 32-37, காங்கிரஸ் 0-2 தொகுதிகளில் வெல்லும் என்றும் ரிபப்ளிக் டிவி கருத்து கணிப்பில் பாஜக 35-40, ஆம் ஆத்மி 32-37, காங்கிரஸ் 0-1 இடங்களை பிடிக்கும் என்றும் டைம்ஸ் நவ் கருத்து கணிப்பில் டெல்லியில் பாஜக 37-43, ஆம் ஆத்மி 32-37, காங்கிரஸ் 0-2 இடங்களை பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பீப்பிள்ஸ் இன்சைட் கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 40-44 இடங்களும், ஆம் ஆத்மிக்கு 25-29 இடங்களும், காங்கிரசுக்கு 0-1 இடங்களும் கிடைக்கும் என்றும் பி-மார்க் கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 39-49 இடங்களும், ஆம் ஆத்மிக்கு 21-31 இடங்களும், காங்கிரசுக்கு 0-1 இடங்களும் கிடைக்கும் என்றும் ஜேவிசி கருத்துக்கணிப்பில் பாஜக 39-45 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 22-31 இடங்களையும், காங்கிரஸ் 0-2 இடங்களையும் பெறும் என்றும் சாணக்யா கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 39-44 இடங்களும், ஆம் ஆத்மிக்கு 25-28 இடங்களும், காங்கிரசுக்கு 2-3 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குஜராத்தில் ஆம் ஆத்மியும் தங்கள் களத்தை தயார்படுத்தி வருகிறது.
    • இமாசல பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.

    புதுடெல்லி :

    குஜராத் மற்றும் இமாசல பிரதேச மாநிலங்களில் தற்போதைய சட்டசபைகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவடைகிறது. எனவே இந்த மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறுகிறது.

    இதற்காக இரு மாநிலங்களிலும் ஆளும் பா.ஜனதா மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் போன்ற கட்சிகள் தீவிர பிரசாரங்களை முன்னெடுத்து உள்ளன. குஜராத்தில் ஆம் ஆத்மியும் தங்கள் களத்தை தயார்படுத்தி வருகிறது.

    அரசியல் நோக்கர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள இந்த தேர்தலை முன்னிட்டு இரு மாநிலங்களிலும் ஏ.பி.பி. நியூஸ் மற்றும் சி வோட்டர் இணைந்து கருத்துக்கணிப்புகளை நடத்தி உள்ளன. இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

    இதில் முக்கியமாக குஜராத்தில் மீண்டும் பா.ஜனதாவே ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், இமாசல பிரதேசத்திலும் ஆட்சியை தக்க வைக்கும் என்றும் தெரிய வந்து இருக்கிறது.

    பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தை பொறுத்தவரை, மொத்தமுள்ள 182 இடங்களில் ஆளும் பா.ஜனதா 135 முதல் 143 இடங்கள் வரை கைப்பற்றும் என தெரிய வந்துள்ளது. தற்போது 99 உறுப்பினர்களையே வைத்திருக்கும் அந்த கட்சி வருகிற தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

    காங்கிரஸ் கட்சிக்கு 36 முதல் 44 இடங்கள் வரையும், ஆம் ஆத்மிக்கு 2 இடங்கள் வரையும் கிடைக்கும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    68 இடங்களை கொண்ட இமாசல பிரதேசத்தில் 37 முதல் 45 இடங்கள் வரை பா.ஜனதா பெறும் எனவும், காங்கிரசுக்கு 21 முதல் 29 இடங்கள் வரை கிடைக்கும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

    இரு மாநிலங்களிலும் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் மின்சாரம், குடிநீர், சாலை வசதி போன்ற அடிப்படை கட்டமைப்புகளில் குறைபாடு முக்கிய பிரச்சினைகளாக உள்ளன.

    இதை கடந்தும் பெருவாரியான வாக்காளர்கள் இரு மாநிலங்களிலும் ஆளுங்கட்சியை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டியுள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்து உள்ளன.

    பாராளுமன்ற தேர்தலுக்கு பின்பு நடத்தப்பட்ட பெரும்பாலான கருத்து கணிப்புகளை உறுதி செய்யும் வகையில் இன்றைய தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போது மத்தியில் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்று பெரும்பாலான நிறுவனங்கள் கருத்து கணிப்புகளை நடத்தி முடிவுகளை வெளியிட்டன.

    அந்த முடிவுகளில் பாரதிய ஜனதா கட்சிதான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே 7 கட்ட தேர்தல்கள் முடிந்த பிறகு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. 9 நிறுவனங்கள் சார்பில் கருத்து கணிப்புகள் வெளியானது. அவை அனைத்திலும் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.

    ஆனால் பெரும்பாலானவர்கள் இந்த கருத்து கணிப்புகளை நம்ப இயலாது என்று கூறியிருந்தனர். பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பு இல்லை என்று பேசி வந்தனர். எனவே கருத்து கணிப்புகள் துல்லியமாக இருக்குமா? என்ற சந்தேகம் எல்லோரது மனதிலும் இருந்தது.

    இந்த நிலையில் இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. மதியம் 300-க்கும் மேற்பட்ட இடங்களை பாரதிய ஜனதா கடந்தது.

    542 தொகுதிகளில் முன்னிலை நிலவரம் அதிகாரப்பூர்வமாக தெரிய வந்தபோது பாரதிய ஜனதா கூட்டணி 328 இடங்களில் முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் கூட்டணி 106 இடங்களிலும், மாநில கட்சிகள் 108 இடங்களிலும் முன்னிலை பெற்று இருந்தன.

    தேர்தலுக்கு பின்பு நடத்தப்பட்ட பெரும்பாலான கருத்து கணிப்புகள் இதே ரீதியில்தான் சரியாக இருந்தன.


    தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் என்பது வெறும் புரளியாகும். இந்த புரளிகளை நம்பி நீங்கள் நம்பிக்கையை இழக்காதீர்கள் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

    இந்த கருத்து கணிப்புகள் சரியானது அல்ல. அவை மாற வாய்ப்புள்ளது என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

    காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்களும் இந்த கருத்து கணிப்புகளை நம்ப வேண்டாம் என்று அறிவித்துள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும் கருத்து கணிப்புகள் தொடர்பாக தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

    காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவர் தனது கருத்தை ஆடியோவில் பதிவு செய்து வெளியிட்டு இருக்கிறார். அந்த ஆடியோ பதிவில் பிரியங்கா கூறி இருப்பதாவது:-

    காங்கிரஸ் தொண்டர்களே... எனது அருமை சகோதர, சகோதரிகளே... தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் என்பது வெறும் புரளியாகும். இந்த புரளிகளை நம்பி நீங்கள் நம்பிக்கையை இழக்காதீர்கள். உங்கள் தைரியத்தை உடைப்பதற்காகவே இத்தகைய வதந்தி பரவி உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள் ஒருபோதும் தைரியத்தை இழக்கக்கூடாது.

    மிக முக்கியமாக இந்த சமயத்தில்தான் நீங்கள் மிகமிக உஷாராக இருக்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் நீங்கள் தொடர்ந்து விழிப்புடன் இருந்து பணியாற்ற வேண்டும். உங்கள் கடின உழைப்பு நிச்சயமாக வீண் போகாது. உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் உறுதியாக கிடைக்கும். நம்பிக்கையோடு இருங்கள்.

    இவ்வாறு அந்த ஆடியோ பதிவில் பிரியங்கா கூறியுள்ளார்.



    ராகுல்காந்தியும் கருத்து கணிப்புகளை நம்ப வேண்டாம் என்று கருத்து தெரிவித்துள்ளார். மாநில கட்சி தலைவர்களில் மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு ஆகியோர் கருத்து கணிப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை திசை திருப்புவதாக குற்றம்சாட்டி உள்ளனர்.

    கருத்து கணிப்பு என்ற பெயரில் பரபரப்பு வதந்தியை ஏற்படுத்தி விட்டு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு நடக்க வாய்ப்பு இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
    ×