search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏலச்சீட்டு"

    கோவையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 8 லட்சம் மோசடி செய்ததாக கணவன்-மனைவி மீது புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    கோவை:

    கோவை வெள்ளலூர் ஆர்.கே. கார்டன் பகுதியை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் (60), இவரது மனைவி சுப்புலட்சுமி (58). இவர்கள் இருவரும் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர்.

    இவர்களிடம் வெள்ளலூர் தேனீஸ்வரர் கோவில் வீதியை சேர்ந்த தனராஜ் மற்றும் அவரது உறவினர்கள் சீட்டு கட்டி வந்துள்ளனர்.

    ஆனால் சீட்டு முடிந்த பின்னரும் கணவன் - மனைவி பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்து வந்துள்ளனர். இது குறித்து தனராஜ் போத்தனூர் போலீசில் புகார் செய்தார்.

    அதில் பாலகிருஷ்ணனும் அவரது மனைவி சுப்பு லட்சுமியும் ரூ. 8 லட்சம் வரை மோசடி செய்து உள்ளதாக தெரிவித்து இருக்கிறார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுவையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.5 லட்சம் மோசடி செய்த கணவன்- மனைவி குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    கோரிமேடு ராம்நகரை சேர்ந்த சூரியகுமார். இவரது மனைவி உஷாராணி (வயது 45) ஜிப்மர் ஊழியர். கணவன்-மனைவி இருவரும் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர்.

    இவர்களிடம் புதுவை லப்போர்த் வீதியை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் சாமிஜோசப் (60) என்பவர் 3 சீட்டுகள் போட்டிருந்தார். மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் 3 சீட்டுக்கு பணம் கட்டி வந்தார்.

    சீட்டு காலம் முடிந்ததும் சாமிஜோசப் தான் செலுத்திய சீட்டுக்கான பணம் ரூ.5 லட்சத்து 10 ஆயிரத்தை கேட்டார். அதற்கு உஷா ராணியும், சூரியகுமாரும் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

    பலமுறை நேரில் சென்று கேட்டும் அவர் பணத்தை கொடுக்காததால் இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்தார். அப்போது போலீசார் புகாரை வாங்க மறுத்து விட்டனர். இதையடுத்து சாமிஜோசப் புதுவை கோர்ட்டில் முறையிட்டார். இதை விசாரித்த நீதிபதி இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

    கோர்ட்டு உத்தரவின் பேரில் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ் பெக்டர் கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியகுளம் அருகே ஏலச்சீட்டு நடத்தி பணம் மோசடி செய்த நபர் குடும்பத்துடன் மாயமானார். புகாரின் பேரில் மாயமான செந்தில்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
    தேனி:

    பெரியகுளம் அருகே அட்டணம்பட்டி நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் அழகிரிசாமி (வயது 65). இவர் கூலி வேலை செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 35) என்பவர் ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். அழகிரிசாமி செந்தில்குமாரிடம் 1 லட்சம் மதிப்புள்ள 3 ஏலச்சீட்டுகள் போட்டு கடந்த 16 மாதங்களாக பணம் கட்டி வந்துள்ளார்.

    செந்தில்குமாரிடம் தன்னுடைய பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். ஆனால் செந்தில் குமார் பின்பு தருவதாக கூறி அவரை அலைக்கழித்துள்ளார்.

    சம்பவத்தன்று செந்தில் குமாரிடம் பணத்தை கேட்பதற்காக அழகிரிசாமி சென்றுள்ளார். ஆனால் அவர் குடும்பத்துடன் மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தில் விசாரிக்கும்போது இது போன்று பல நபர்களிடம் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து அழகிரிசாமி தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மாயமான செந்தில்குமார் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    கோவையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.1½ கோடி மோசடி செய்து தலைமறைவான தனியார் நிதி நிறுவன உரிமையாளர் குறித்து போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    கோவை:

    கோவை சரவணம் பட்டியை தலைமையிடமாக கொண்டு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்திற்கு பூ மார்க்கெட், துடியலூர் உள்ளிட்ட மாநகரில் 5 கிளைகளும், அன்னூர் உள்பட புறநகரில் பல கிளைகளும் உள்ளன.

    இந்த நிறுவனத்தினர் மாதத் தவணையில் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இதில் ஏராளமானோர் வாடிக்கையாளர்களாக சேர்ந்து பணம் கட்டினார்கள்.

    கடந்த 2010-ம் ஆண்டு முதல் இந்த நிறுவனம் செயல்பட்டு வந்தது. முதலில் பணம் கட்டியவர்களுக்கு அதனை வட்டியுடன் திரும்பி கொடுத்து வந்துள்ளனர்.

    பின்னர் பணம் கொடுக்காமல் இழுத்தடித்து உள்ளனர். இது குறித்து நிதி நிறுவன உரிமையாளரிடம் கேட்ட போது, சில மாதங்களில் பணத்தை திருப்பி தந்து விடுவதாக கூறி உள்ளார்.

    கடந்த மே மாதம் முதல் சரவணம்பட்டி தலைமை அலுவலகம் மற்றும் கோவை மாநகர் மற்றும் புறநகரில் உள்ள நிதி நிறுவனத்தில் அனைத்து கிளைகளும் திடீரென மூடப்பட்டது. அங்கு வேலை பார்த்தவர்களும் வேலைக்கு வரவில்லை.

    இந்த நிதி நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களது செல்போனை தொடர்பு கொண்டது போது சுவிட்ஆப் என வந்தது. நிதி நிறுவன உரிமையாளர் ரூ. 1½ கோடி வரை மோசடி செய்துவிட்டு தலைமறைவாகி விட்டது தெரிய வந்தது.

    இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இன்று கோவை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். ஒண்டிப்புதூரை சேர்ந்த சதிஷ், பூமார்க்கெட் ராஜேஷ், சரவணம் பட்டி விநாயகபுரம் சேதுராமன், விஜயகுமார் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 20 பேர் வந்தனர். அவர்கள் போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யாவை சந்தித்து மனு அளித்தனர்.

    அதில் நிதி நிறுவன உரிமையாளரிடம் இருந்து பணத்தை தங்களுக்கு பெற்று தர வேண்டும் என கூறி உள்ளனர். மனு கொடுக்க வந்தவர்களில் ஒண்டிப்புதூரை சேர்ந்த சதிஷ் ரூ.4½ லட்சம் ஏமாந்ததாக கூறினார்.

    இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறும் போது, நாங்கள் குடும்ப செலவு மற்றும் கல்வி, தொழில் உள்ளிட்டவைகளுக்காக சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தை நிதி நிறுவனத்தில் கட்டி இருந்தோம்.

    சுமார் 100-க்கும் மேற்பட்டோரிடம் ரூ. 1½ கோடி வரை நிதி நிறுவன உரிமையாளர் ஏமாற்றி தலைமறைவாகி விட்டார். எங்கள் பணத்தை மீட்டு தருமாறு போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் அளித்து உள்ளோம் என்றனர்.
    ×