என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக கோப்பை கிரிக்கெட்"

    • உலக கோப்பை போட்டியை நடத்தும் நாடுகள் குறித்து ஐசிசி அட்டவணை வெளியிட்டுள்ளது
    • 2024ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை போட்டி இலங்கையில் நடைபெறுகிறது.

    துபாய்:

    2024-2027 ஆம் ஆண்டுக்கு இடையில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர்களை நடத்தும் நாடுகள் குறித்து ஐசிசி அட்டவணை வெளியிட்டுள்ளது.

    போட்டிகளை நடத்துவதற்கு இலங்கை, மலேசியா மற்றும் தாய்லாந்து, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா, வங்காளதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒப்புதல் அளித்துள்ளது.

    அதன்படி 2024ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெறுகிறது. தொடர்ந்து 2026ம் ஆண்டு ஜிம்பாப்வே, நமிபியா ஆகிய நாடுகளில் நடக்கின்றன. 2025ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டி மலேசியா மற்றும் தாய்லாந்திலும், 2027ம் ஆண்டு வங்காளதேசம் மற்றும் நேபாளத்திலும் போட்டிகள் நடக்கின்றன.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் சேர்த்தது.
    • அதிரடியாக பென் ஸ்டோக்ஸ், பந்துகளை பவுண்டரிகளாக விளாச இங்கிலாந்து அணியின் ரன்ரேட் உயர்ந்தது.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 8-வது டி20 உலக கோப்பை தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. மெல்போர்னில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஷான் மசூத் 38 ரன்கள் சேர்த்தார். கேப்டன் பாபர் ஆசம் 32 ரன்களும், சதாப் கான் 20 ரன்களும் சேர்த்தனர்.

    இதையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். பில் சால்ட் 10 ரன்கள் மட்டுமே சேர்த்தார். அதன்பின்னர் கேப்டன் ஜாஸ் பட்லர் 26 ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் அதிரடியாக பென் ஸ்டோக்ஸ், பந்துகளை பவுண்டரிகளாக விளாச, அணியின் ரன்ரேட் உயர்ந்தது. ஹென்றி ப்ரூக் 20 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மொயீன் அலி 19 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

    தொடர்ந்து பாகிஸ்தான் பந்துவீச்சை பதம் பார்த்த ஸ்டோக்ஸ் அரை சதம் கடக்க, இங்கிலாந்து அணி 6 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. பென் ஸ்டோக்ஸ் 52 ரன்களுடன் களத்தில் இருந்தார். இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 உலக கோப்பையை இங்கிலாந்து அணி வசமாக்கி உள்ளது. இங்கிலாந்து அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

    இறுதிப் போட்டியில் சாம் கரன் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார். அதுமட்டுமின்றி இந்த தொடர் முழுவதும் சிறப்பாக பந்துவீசி 13 விக்கெட்களை வீழ்த்திய சாம் கரன் "தொடர் நாயகன்" விருதையும் தட்டி சென்றார்.

    • நியூசிலாந்து தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு.
    • உலகக்கோப்பை தொடருக்கு முன் இன்னும் 25 ஆட்டங்களே உள்ளன.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்தியா கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியை சந்தித்தது.

    அடுத்த வருடம் நவம்பர்- டிசம்பரியில் இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி எப்படியும் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என நினைக்கிறது.

    ஆனால், டி20 உலகக் கோப்பை முடிந்த கையோடு சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    நியூசிலாந்து தொடரை தவிர்த்து இன்னும் 25 போட்டிகளில்தான் இந்திய அணி விளையாட உள்ளன. இந்த நிலையில் தற்போதில் இருந்தே தயாராகுவது முக்கியம். இல்லையெனில் டைமண்ட்-ஐ தேடி தங்கத்தை தொலைத்த கதையாகிவிடும் என இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முகமது கைஃப் கூறியதாவது:-

    50 ஓவர் உலகக் கோப்பைக்கு தன்னை தயார்படுத்த இந்திய அணி விரும்பினால் நியூசிலாந்தில் தற்போது நடைபெற்று வரும் தொடரில் இருந்து அதை செய்ய வேண்டியது அவசியம். உலகக் கோப்பைக்கு முன் அதிக அளவிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் இல்லை. உலகக் கோப்பை வரை 25 போட்டிகள் இருக்கலாம்.

    முக்கியமான பிரச்சினை பந்து வீச்சில் உள்ளது. நீங்கள் ஷர்துல் தாகூரை பார்த்தீர்கள் என்றால், அவர் நியூசிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியில் விளையாடவில்லை. முகமது சிராஜ் இந்தியாவிற்கு திரும்பியதை பார்த்து இருப்பீர்கள். அவர் ஒருநாள் போட்டியில் விளையாடியிருக்க வேண்டும்.

    ஏன் புவனேஷ்வர் குமார் அணியில் இல்லை. அதற்கான எந்த காரணமும் என்னிடம் இல்லை. அவர் சிறந்த பந்து வீச்சாளர். ஆனால், அணியில் இடம் பெறவில்லை. புது வீரர்களை தேடுவதற்கான பழைய வீரர்களை இழந்து கொண்டு வருகிறோம். டைமண்ட்-ஐ தேடுவதற்கான தங்கத்தை தொலைத்த கதையாக இருக்கிறது.

    உலகக் கோப்பைக்கு தயார் படுத்துதல் தொடங்கிவிட்டால், அதன்பின் பரிசோதனை என்ற பேச்சுக்கே நேரமில்லை. ஒன்றிரண்டு மாதங்கள் கடந்து விட்டால், உலகக் கோப்பைக்கான அணுகுமுறைகளை தேட வேண்டிய நிலை ஏற்படும். ஆகவே, வீரர்கள் யார் என்பதை முடிவு செய்து, அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்'' என்றார்.

    • 2-3 வீரர்கள் உலகக் கோப்பையை வெல்வார்கள் என்று நீங்கள் நினைத்தால், அது ஒருபோதும் நடக்காது.
    • இந்தப் போக்கை உடைத்து குறைந்தது 5-6 மேட்ச் வின்னர்களை உருவாக்க வேண்டும்.

    ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. 2011ம் ஆண்டுக்கு பின்னர் இந்திய அணி மீண்டும் உலக கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

    இந்நிலையில் உலக கோப்பை தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியதாவது:-

    2023 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டுமெனில் ரோகித் சர்மா, விராட் கோலி அல்லது 2-3 வீரர்களை, தனிப்பட்ட வீரர்களை நம்பிப் பயனில்லை உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமானால், பயிற்சியாளர், தேர்வாளர்கள் மற்றும் அணி நிர்வாகம் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். தனிப்பட்ட நலன்கள் புறந்தள்ளப்பட வேண்டும். அவர்கள் அணியைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

    விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் 2-3 வீரர்கள் உலகக் கோப்பையை வெல்வார்கள் என்று நீங்கள் நினைத்தால், அது ஒருபோதும் நடக்காது. உங்கள் அணியை நீங்கள் நம்ப வேண்டும். நம்மிடம் அப்படி ஒரு அணி இருக்கிறதா? என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ள வேண்டும். அதற்குக் கண்டிப்பாக எங்களிடம் குறிப்பிட்ட மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்களா? ஆமாம் கண்டிப்பாக! உலகக் கோப்பையை வெல்லக் கூடிய வீரர்கள் எங்களிடம் உள்ளனர் என்று அவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொண்டு தன்னம்பிக்கையுடன் ஒரு அணியை தேர்வு செய்ய வேண்டும். எப்போதும் 2-3 வீரர்கள் அணியின் தூண்களாகத் தங்களை உருவாக்கிக் கொண்டுள்ளார்கள். அவர்களைச் சுற்றியே அனைத்தும் பின்னப்படுகிறது, தேர்வு செய்யப்படுகிறது, இப்படி இருக்கக் கூடாது. ஆனால், நாம் இந்தப் போக்கை உடைத்து குறைந்தது 5-6 மேட்ச் வின்னர்களை உருவாக்க வேண்டும்.

    அதனால்தான் சொல்கிறேன், விராட் மற்றும் ரோகித்தை நம்பி இருக்க முடியாது. தங்களின் ஒவ்வொரு பொறுப்புகளையும் நிறைவேற்றும் வீரர்கள் தேவை. இளைஞர்கள் முன்வந்து 'இது எங்கள் நேரம்' என்று சொல்ல வேண்டும்.

    இவ்வாறு கபில் தேவ் கூறினார்.

    • இந்திய அணியை வழிநடத்துவதில் கேப்டன் ரோகித் சர்மா உற்சாகமாக உள்ளார்.
    • இந்தியாவின் வரலாற்று வெற்றியை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நினைவு கூர்ந்துள்ளார்.

    இந்தியாவில் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆடவருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இப்போட்டிக்கான லோகோவை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.

    2011ம் ஆண்டு இதே நாளில் டோனி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்றது. உலகக் கோபபையை 12 ஆண்டு ஆனதை கொண்டாடும் வகையில் ஐசிசி இன்று லோகோவை வெளியிட்டிருக்கிறது.

    லோகோ வெளியிடப்பட்டுள்ள நிலையில், 2023 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியை வழிநடத்துவதில் கேப்டன் ரோகித் சர்மா உற்சாகமாக உள்ளார். கிரிக்கெட்டில் தொடர்புடைய அனைவருக்கும் இந்த உலக கோப்பை சிறப்பு வாய்ந்த போட்டி என கூறிய ரோகித், கோப்பையை வெல்வதற்கு அடுத்த சில மாதங்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட உள்ளதாக கூறினார்.

    2011-ல் கோப்பை வென்ற இந்தியாவின் வரலாற்று வெற்றியை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நினைவு கூர்ந்துள்ளார். அத்துடன், 2023ல் நடக்கும் உலக கோப்பை தொடரை நடத்துவதை பிசிசிஐ ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

    • 15 ஆண்டுகளுக்கும் மேலாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஹூப்பர் விளையாடி உள்ளார்.
    • உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தகுதி சுற்றுக்கு முன்னதாக அணியில் இணையவுள்ளார்.

    10 அணிகள் இடையிலான 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடக்கிறது.

    இந்த போட்டிக்கு சூப்பர் லீக் மூலம் புள்ளிபட்டியலில் டாப்-8 இடங்களை பிடித்த நியூசிலாந்து, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுவிட்டன. மீதமுள்ள இரு அணிகளை தேர்வு செய்வதற்கு தகுதி சுற்று போட்டி நடத்தப்படுகிறது.

    அதன்படி தகுதி சுற்று போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 18-ந்தேதி முதல் ஜூலை 9-ந்தேதி வரை ஜிம்பாப்வேயில் 4 மைதானங்களில் நடைபெறுகிறது. இதில் 10 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, நேபாளம், அமெரிக்கா, 'பி' பிரிவில் முன்னாள் சாம்பியன் இலங்கை, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 6 சுற்றை அடையும்.

    இந்நிலையில் இதை கருத்தில் கொண்டு வெண்ட் இண்டீஸ் அணியின் துணை பயிற்சியாளராக முன்னாள் வீரர் ஹூப்பர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தகுதி சுற்றுக்கு முன்னதாக அணியில் இணையவுள்ளார்.

    15 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கிந்திய தீவுகளுக்காக விளையாடி உள்ளார். 329 சர்வதேச போட்டிகளில் விளையாடி 10,500 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். ஹூப்பர் பல்வேறு நிலைகளில் பயிற்சியாளராகவும் வழிகாட்டியாகவும் இருந்துள்ளார்.

    56 வயதான அவர் பிக் பாஷ் லீக்கில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராகவும் கரீபியன் பிரீமியர் லீக்கில் ஆன்டிகுவா ஹாக்ஸ்பில்ஸ் மற்றும் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். 

    • 2011 உலக கோப்பையில் சென்னையில் 4 லீக் ஆட்டம் நடைபெற்றது. நாக்அவுட் போட்டிகள் நடைபெறவில்லை.
    • 2016-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் சென்னையில் ஒரு ஆட்டம் கூட ஒதுக்கப்படவில்லை.

    சென்னை:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) கடைசியாக 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடந்தது. இலங்கை, வங்காளதேசம் ஆகியவை இணைந்து நடத்தியது.

    12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் உலக கோப்பை போட்டி நடைபெறுகிறது. 13-வது உலக கோப்பை போட்டியான இதை அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான போட்டி அட்டவணை அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    இதற்கிடையே 10 நாடுகள் கலந்து கொள்ளும் இந்த உலக கோப்பை போட்டிக்கான வரைவு அட்டவணை வெளியாகி உள்ளது. இந்த வரைவு அட்டவணையை ஐ.சி.சி.க்கு (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) அனுப்பியுள்ளது.

    அதன்படி அக்டோபர் 5-ந் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அக்டோபர் 8-ந்தேதி நடைபெறும் என்று உத்தேச அட்டவணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டியை அகமதாபாத்தில் அக்டோபர் 15-ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் அணி மோதும் 2 ஆட்டங்களும் சென்னையில் நடக்கிறது. ஆப்கானிஸ்தானுடன் அக்டோபர் 23-ந்தேதியும், தென்ஆப்பிரிக்காவுடன் அக்டோபர் 27-ந்தேதியும் அந்த அணி மோதுகிறது.

    உலக கோப்பை இறுதி ஆட்டம் நவம்பர் 19-ந்தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. அரைஇறுதி ஆட்டங்கள் நவம்பர் 15 மற்றும் 16-ந்தேதிகளில் நடக்கிறது. ஆனால் இதற்கான இடங்கள் இன்னும் முடிவாகவில்லை.

    இந்த நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஒரு அரைஇறுதி ஆட்டம் சென்னையில் நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 15-ந்தேதி முதல் அரை இறுதியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    2011 உலக கோப்பையில் சென்னையில் 4 லீக் ஆட்டம் நடைபெற்றது. நாக்அவுட் போட்டிகள் நடைபெறவில்லை. மேலும் 2016-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் சென்னையில் ஒரு ஆட்டம் கூட ஒதுக்கப்படவில்லை. இதன் காரணமாக இந்த உலக கோப்பையின் ஒரு அரைஇறுதியை சென்னையில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது.

    2-வது அரைஇறுதி ஆட்டத்தை மும்பை வான்கடே மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • உலக கோப்பை போட்டியில் மொத்தம் 10 நாடுகள் பங்கேற்கின்றன.
    • முன்னாள் சாம்பியன்களான வெஸ்ட்இண்டீஸ், இலங்கை அணிகள் நேரடியாக நுழையும் வாய்ப்பை இழந்தன.

    ஹராரே:

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் நடக்கிறது.

    உலக கோப்பை போட்டிக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை இன்னும் வெளியாகவில்லை.

    உலக கோப்பை போட்டியில் மொத்தம் 10 நாடுகள் பங்கேற்கின்றன. ரவுண்டு ராபின் முறையில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். 'லீக்' முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். போட்டியை நடத்தும் இந்தியா, ஆஸ்திரே லியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நேரடியாக விளையாடுகின்றன.

    முன்னாள் சாம்பியன்களான வெஸ்ட்இண்டீஸ், இலங்கை அணிகள் நேரடியாக நுழையும் வாய்ப்பை இழந்தன. அந்த அணிகள் தகுதி சுற்றில் விளையாடுகிறது.

    எஞ்சிய 2 அணிகளை தேர்வு செய்வதற்கான உலக கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.

    ஜூலை 9-ந் தேதி வரை நடைபெறும் தகுதி சுற்று ஆட்டத்தில 10 நாடுகள் பங்கேற்கின்றன.

    அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் வெஸ்ட்இண்டீஸ், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, அமெரிக்கா, நேபாளம் அணிகளும், 'பி' பிரிவில் இலங்கை, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஏமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகளும் இடம்பெற்று உள்ளன.

    இந்தப் போட்டியில் முதல் 2 இடங்களை பிடிக் கும் அணிகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும். நாளைய தொடக்க ஆட்டங்களில் 'ஏ' பிரிவில் உள்ள ஜிம்பாப்வே-நேபா ளம், வெஸ்ட்இண்டீஸ்-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.

    • பாகிஸ்தான் அணி விளையாடும் 2 ஆட்டங்களின் இடத்தை மாற்றுமாறு கூறி இருந்தாலும் அது எந்த இடம் என்று தெரியவில்லை.
    • அகமதாபாத்தில் விளையாட விருப்பம் இல்லை என்று பாகிஸ்தான் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் நடக்கிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியின் அதிகாரப்பூர்வ அட்டவணை இன்னும் வெளியாகவில்லை.

    இதற்கிடையே உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வரைவு அட்டவணை சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதன்படி தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து-நியூசிலாந்து மோதுகின்றன.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8-ந்தேதி சென்னையில் சந்திக்கிறது. இந்தியா- பாகிஸ்தான் மோதும் ஆட்டம் அக்டோபர் 15-ந்தேதி அகமதாபாத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் 2 இடங்களை மாற்ற வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.), பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பாகிஸ்தான் அணி விளையாடும் 2 ஆட்டங்களின் இடத்தை மாற்றுமாறு கூறி இருந்தாலும் அது எந்த இடம் என்று தெரியவில்லை. அகமதாபாத்தில் விளையாட விருப்பம் இல்லை என்று பாகிஸ்தான் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

    பாகிஸ்தான் அணி ஐதராபாத், அகமதாபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா ஆகிய 5 இடங்களில் விளையாட போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணி மோதும் அனைத்து ஆட்டங்களும் பகல்-இரவாக நடக்கிறது.
    • மொத்தம் உள்ள 48 ஆட்டங்களில் 6 போட்டிகள் மட்டுமே பகல் ஆட்டமாக நடக்கிறது.

    மும்பை:

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர்-நவமபர் மாதங்களில் நடக்கிறது. இதில் 10 நாடுகள் பங்கேற்கின்றன.

    உலக கோப்பை போட்டிக்கான அதிகாரப்பூர்வ அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியமும் (பி.சி.சி.ஐ.), சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் (ஐ.சி.சி.) இணைந்து நேற்று வெளியிட்டது.

    50 ஓவர் கொண்ட ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பை கிரிக்கெட் அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை நடைபெறுகிறது. அகமதாபாத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் அக்டோபர் 8-ந் தேதி சந்திக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 15-ந் தேதி அகமதாபாத்தில் மோதுகின்றன.

    முதல் அரைஇறுதி ஆட்டம் நவம்பர் 15-ந் தேதி மும்பையிலும், 2-வது அரை இறுதி போட்டி 16-ந் தேதி கொல்கத்தாவிலும் நடக்கிறது. இறுதிபோட்டி அகமதாபாத் மைதானத்தில் நவம்பர் 19-ந் தேதி நடக்கிறது.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 5 ஆட்டங்கள் நடக்கிறது. இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் மோதும் போட்டி இங்குதான் நடக்கிறது. இதேபோல நியூசிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியும் சென்னையில் தலா 2 ஆட்டங்களில் விளையாடுகிறது.

    உலக கோப்பை போட்டிகள் அகமதாபாத், ஐதராபாத், தர்மசாலா, சென்னை, டெல்லி, லக்னோ, புனே, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா ஆகிய 10 இடங்களில் நடக்கிறது. இதில் ஐதராபாத் தவிர மற்ற 9 நகரங்களிலும் இந்திய அணி 9 ஆட்டத்தில் விளையாடுகிறது.

    இந்திய அணி மோதும் அனைத்து ஆட்டங்களும் பகல்-இரவாக நடக்கிறது. பகல்-இரவு போட்டி 2 மணிக்கு தொடங்குகிறது. மொத்தம் உள்ள 48 ஆட்டங்களில் 6 போட்டிகள் மட்டுமே பகல் ஆட்டமாக நடக்கிறது. பகல் நேர போட்டிகள் காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.

    இந்த நிலையில் உலக கோப்பை போட்டிக்கான இடங்கள் தொடர்பாக பஞ்சாப், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு கிரிக்கெட் சங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. பிரபல இடங்களான மொகாலி, இந்தூர், ராஜ்கோட் ராஞ்சி, நாக்பூர் போன்ற நகரங்கள் விடுபட்டுள்ளன.

    பஞ்சாப், மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகி கூறும்போது, '2011 உலக கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் மோதிய அரை இறுதி மொகாலியில் தான் நடந்தது. 1996 உலக கோப்பை போட்டிகளும் இங்கு நடைபெற்றது. தற்போது உலக கோப்பை போட்டிக்கான இடங்களை ஒதுக்காதது அதிருப்தி அளிக்கிறது' என்றார்.

    மத்திய பிரதேச கிரிக்கெட் சங்க தலைவர் அபிலாஷ் கண்டேகர் கூறியதாவது:-

    1987-ம் ஆண்டு இந்தியா-நியூசிலாநது அணிகள் மோதிய உலக கோப்பை போட்டி இந்தூரில் தான் நடந்தது. இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியும் இங்கு சமீபத்தில் நடைபெற்றது.

    தற்போது உலக கோப்பை போட்டியை நாங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தோம். ஆனால் எங்களுக்கு போட்டி ஒதுக்காதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

    2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பையில் 11 இடங்களில் போட்டிகள் நடந்தது. தற்போது 10 இடங்களில் தான் போட்டிகள் நடக்கிறது. இதை அதிகரித்து இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாங்கள் அங்கு செல்லும் போது அது அவர்களது சொந்த மைதானமாக இருக்கும். ரசிகர்கள் கூட்டம் எங்களுக்கு எதிராக இருக்கும்.
    • என்னை பொறுத்தரை இந்தியாவிடம் தோற்றாலும் இறுதியில் கோப்பையை வெல்வதே எங்களது முக்கிய நோக்கமாக இருக்கும்.

    இஸ்லாமாபாத்:

    50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது.

    10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டித் தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 15-ந்தேதி அகமதாபாத்தில் நடக்கிறது.

    இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த நிலையில் உலக கோப்பை போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் ஆல்-ரவுண்டர் ஷதாப் கான் கூறியதாவது:-

    இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது வித்தியாசமான மகிழ்ச்சியுடன் இருக்கும். இதில் ஒட்டு மொத்த அழுத்தமும் வித்தியாசமானது. நாங்கள் அங்கு செல்லும் போது அது அவர்களது சொந்த மைதானமாக இருக்கும். ரசிகர்கள் கூட்டம் எங்களுக்கு எதிராக இருக்கும்.

    ஆனால் நாங்கள் அங்கு உலக கோப்பையில் விளையாட செல்கிறோம். எனவே அதுபற்றிதான் யோசிக்க வேண்டும். ஏனென்றால் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று விட்டு உலக கோப்பையை வெல்லவில்லை என்றால் அதில் எந்த பலனும் இல்லை.

    என்னை பொறுத்தரை இந்தியாவிடம் தோற்றாலும் இறுதியில் கோப்பையை வெல்வதே எங்களது முக்கிய நோக்கமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் எப்போது அனுப்புவது என்பதை அமைச்சகம் முடிவு செய்யும்.
    • பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதித்துவத்துடன் பாதுகாப்பு குழு இந்தியா செல்கிறது.

    லாகூர்:

    இந்தியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாடும் சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய இடங்களை ஆய்வு செய்ய பாகிஸ்தான் பாதுகாப்பு குழு இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகிறது. இந்தியாவுக்கு பாகிஸ்தான் அணி செல்ல அரசாங்கம் அனுமதி வழங்குவதற்கு முன்பு மைதானங்களை ஆய்வு செய்வதற்காக அக்குழு அனுப்பப்பட உள்ளது.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் பாதுகாப்பு குழுவை இந்தியாவுக்கு எப்போது அனுப்புவது என்பதை வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சகம் முடிவு செய்யும். பாகிஸ்தான் விளையாடும் இடங்கள் மற்றும் அணிக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு, பிற ஏற்பாடுகளை ஆய்வு செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதித்துவத்துடன் பாதுகாப்பு குழு இந்தியா செல்கிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    ×