search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 106488"

    தர்மபுரி அருகே கள்ளத்தொடர்பு காரணமாக மனைவியை கழத்தை நெறித்து கொலை செய்ய முயன்ற கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இண்டூர்:

    தருமபுரி மாவட்டம், இண்டூர் அடுத்துள்ள தளவாய்அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி வள்ளி (வயது37).

    அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் வள்ளிக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த கார்த்திக் தனது மனைவி வள்ளியை கண்டித்துள்ளார். ஆனால் கணவன் கண்டித்த பிறகும் வள்ளி கள்ளத்தொடர்பை கைவிடாமல் இருந்து வந்ததாக தெரிய வந்தது.

    சம்பவத்தன்று வள்ளி ஒரு வாலிபருடன் பேசி கொண்டிருப்பதை கண்டு கார்த்திக் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்கு வந்து வள்ளியை மீண்டும் கண்டித்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் நேற்று வீட்டில் வள்ளியின் கழுத்தை நெறித்து கொல்ல முயன்றார். இதனால் மூச்சு விட முடியாமல் வள்ளி திணறினார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி கிழே விழுந்தார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே ஓடி வந்து மயங்கிய நிலையில் கிடந்த வள்ளியை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக இண்டூர் போலீசார் வள்ளியின் கணவர் கார்த்திக்கிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    கடம்பூர் அருகே மருமகளின் கள்ளத்தொடர்பை கண்டித்த விவசாயி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கட்டிட தொழிலாளியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள மேலபாறைப்பட்டி கீழ தெருவைச் சேர்ந்தவர் அண்ணாத்துரை (வயது 60) விவசாயி. இவருடைய மனைவி ஆனந்தம் அம்மாள். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மகன் அரிகிருஷ்ணன். அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

    நேற்று இரவு 9 மணி அளவில் அண்ணாத்துரை தனது வீட்டில் கட்டிலில் படுத்து கிடந்தார். மனைவி ஆனந்தம் அம்மாள், அருகில் உள்ள மாட்டு தொழுவத்துக்கு சென்றிருந்தார். அப்போது அண்ணாத்துரையின் வீட்டுக்குள் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த மர்மநபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டினர்.

    இதனால் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.இதுகுறித்து கடம்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    கொலை செய்யப்பட்ட அண்ணாத்துரையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில் பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கொலையாளிகளை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    அண்ணாத்துரையின் மகன் அரிகிருஷ்ணனுக்கும், நெல்லையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் ஆனது. திருமணத்திற்கு பின் அரிகிருஷ்ணன் மனைவியை ஊரில் விட்டு விட்டு அமெரிக்கா சென்றுவிட்டார். இதனால் அரிகிருஷ்ணனின் மனைவி அண்ணாத்துரை வீட்டில் வசித்து வந்தார்.

    அப்போது அவருக்கும் கடம்பூர் அருகே உள்ள மும்மலைபட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி முத்து மாரியப்பன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையறிந்ததும் அண்ணாத்துரை கண்டித்தார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. மேலும் ஊருக்கு வந்திருந்த அரிகிருஷ்ணன் இந்த விவகாரத்தை அறிந்து மனைவியை கண்டித்தார். இதனால் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதையடுத்து அரிகிருஷ்ணனின் மனைவி அவரை பிரிந்து நெல்லையில் உள்ள தாய் வீட்டிற்கு வந்து விட்டார். அரிகிருஷ்ணனும் மீண்டும் அமெரிக்காவுக்கு வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் அரிகிருஷ்ணன் தனது மனைவியை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த அவரது கள்ளக்காதலன் முத்து மாரியப்பன் தொடர்ந்து அண்ணாத்துரையிடம் தகராறு செய்து வந்தார்.

    இதுபற்றி அண்ணாத்துரை தரப்பில் கடம்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்நிலையில் முத்து மாரியப்பன் உள்ளிட்ட 3 பேர் சேர்ந்து அண்ணாத்துரையை கொலை செய்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் தொடக்கத்திலேயே முத்து மாரியப்பன் மீது போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த கொலை நடந்திருக்காது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    இதனிடையே முத்து மாரியப்பனை இன்று போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் அண்ணாத்துரை கொலை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலையில் ஈடுபட்ட மேலும் 2 நபர்கள் யார்? என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #tamilnews
    குழந்தையை தன்னிடம் இருந்து பிரித்து கள்ளக்காதலியிடம் சேர்க்க முயன்றதால் தற்கொலை முடிவை எடுத்ததாக தற்கொலைக்கு முன் புஷ்பலதா எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். #AdulteryVerdict #Section497
    சென்னை:

    புஷ்பலதா, தற்கொலைக்கு முன்னர் உருக்கமான கடிதம் எழுதி உள்ளார். அதனை போலீசார் கைப்பற்றினர். அதில் அவர் எழுதி இருப்பதாவது:-

    கணவருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு உள்ளது. இதனால் அவர் காலையில் வெளியில் செல்லும் போது எங்களது 1½ வயது பெண் குழந்தையை வெளியில் அழைத்து சென்று காதலியிடம் கொடுத்து விடுகிறார். மாலையில் வீடு திரும்பும் போது அழைத்து வருகிறார்.

    இதனால் நான் தனிமையில் இருந்தேன். குழந்தையை பார்க்க விடாமல் கணவர் தடுக்கிறார். இது எனக்கு வேதனையை தருகிறது.

    குழந்தையை பறிக்கும் கணவர், என்னிடமும் பிரியமாக இல்லை. எனவே நான் உயிரை விடுகிறேன். என்சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என் மரணத்துக்கு பின்னர் கணவர் சந்தோ‌ஷமாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் எழுதப்பட்டு இருந்தது.


    இதற்கிடையே புஷ்பலதாவின் பெற்றோர் செல்வம்- சரசம்மாள் ஆகியோர் எம்.ஜி.ஆர். நகர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதில், மகளின் கணவர் ஜான்பால் பிராங்கிளினுக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் 4 ஆண்டுக்கு முன்பே பழக்கம் இருந்தது. இதனை மறைத்து எனது மகளை ஏமாற்றி காதலித்து திருமணம் செய்து உள்ளார். பலமுறை எனது மகளை அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்றி இருக்கிறார்.

    என் மகளின் சாவுக்கு கணவர் ஜான்பால் பிராங்கிளினே காரணம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறி உள்ளனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது. #AdulteryVerdict #Section497 

    ×