search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 106670"

    • வெண்டைக்காய் சாப்பிடுவதால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு உயராது.
    • வெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    நமது அன்றாட உணவில் காய்கள் அதிகம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். உடலுக்கு தேவையான பல சத்துகளை அளிக்க கூடிய காய் வகைகள் ஏராளம் உள்ளன. தினமும் ஒவ்வொரு வகையான காய்கறிகளை நாம் சாப்பிடுவதால் நன்மைகள் அதிகம். அந்த வகையில் நாம் "வெண்டைக்காய்" சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    வெண்டைக்காய் ஆங்கிலத்தில் 'லேடிஸ் ஃபிங்கர்ஸ்' என அழைக்கப்படுகிறது. வெண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. வெண்டைக்காய் அதிகமாக சாப்பிட்டால், அதன் காம்பை போலவே நமது புத்திக் கூர்மையும் நீளும். எந்த காரியத்தையும் தெளிவாக அணுகும் ஆற்றல் நமக்கு ஏற்படும் என ஆய்வுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

    கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான ஃபோலிக் அமிலம் வெண்டைக்காயில் நிறையவே உள்ளது. வெண்டைக்காயில் சிறந்த மாவுச்சத்து பொருட்கள் உள்ளன. இதில் உள்ள பெக்டின் என்ற நார்ப்பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும். இதய துடிப்பை சீராக்கும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருள் இதில் உள்ளது.

    வெண்டைக்காயை சாப்பிடுவதன் மூலம் நமது உடலுக்கு 66 % கலோரி கிடைக்கிறது. இதனாலேயே இந்தக்காய் மகத்துவம் நிறைந்ததாக திகழ்கிறது.

    வெண்டைக்காயை நறுக்கும் போது பிசுபிசுவென்று ஒரு திரவம் வெளியேறுதல் அதை சிலர் அறியாமல் தண்ணீரில் கழுவி சமைப்பது உண்டு. இந்த பிசுபிசு திரவம் சமைத்து சாப்பிட்டால் தான் மூளைக்கு புத்துணர்ச்சியும், இதயத்திற்கும் இதத்தையும் தருகிறது.

    இதன் காய், இலை, விதை, வேர் ஆகியவற்றிற்கும் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. இதில் உள்ள நார்ப்பொருள் மலச்சிக்கலை தீர்ப்பதோடு, குடல் புண்ணையும் ஆற்றும், பிஞ்சுகளை நறுக்கி போட்டு மோர்க்குழம்பு செய்து சாப்பிட்டால் காய்ச்சல், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.

    வயதாகும் பலருக்கும் ஞாபக மறதி ஏற்படுவது இயற்கை தான். மூளை செல்களின் வளர்ச்சியை தூண்டவும், அதன் செயல்பாடுகளை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை வெண்டைக்காய் சமைத்து சாப்பிட்டு வருவதால் ஞாபக சக்தியை அதிகம் பெற முடியும்.

    நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவ்வப்போது வெண்டைக்காய் சாப்பிட்டு வந்ததில் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கணிசமாக குறைந்திருப்பதாக கண்டறிந்துள்ளனர். எனவே வாரத்திற்கு குறைந்த பட்சம் இரண்டு அல்லது மூன்று முறையாவது வெண்டைக்காய் சாப்பிடுவதை வழக்கமாக வைத்து கொள்வது நல்லது.

    குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆகிய இரண்டு தரப்பினரும் உடலில் நோயெதிர்ப்பு ஆற்றல் குறைந்த அளவில் பெற்றவர்கள் ஆகின்றனர். வெண்டைக்காயில் உடலுக்கு தேவையான சத்துக்கள் இருப்பதோடு உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. குழந்தைகள், முதியவர்கள் சரியான விகிதத்தில் சாப்பிடுவது அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    இன்றைய காலங்களில் பலருக்கும் வயிற்றில் அல்சர் எனப்படும் குடற்புண், செரிமானமின்மை, வயிற்றில் ஜீரண அமிலங்களின் சமசீரற்ற நிலை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இப்படிப்பட்டவர்கள் அவ்வப்போது வெண்டைக்காய்களை அதிகம் சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளில் நிவாரணம் ஏற்படும்.

    உடலில் ஓடும் ரத்தத்தில் இருக்கும் அனைத்து வகையான நச்சுக்களும் சிறுநீர் வழியாக நமது உடலில் இருந்து வெளியேறுகிறது. ஒரு சிலருக்கு பல காரணங்களால் உடலுக்கு தேவையான சத்துகளும் சிறுநீர் வழியாக வெளியேறி விடுகிறது. இந்த சத்துக்குறைபாடு வெண்டைக்காய் அடிக்கடி சாப்பிட்டு வருவதால் நீங்க பெறலாம்.

    உடலின் தேவைக்கு ஏற்ப கொலஸ்ட்ரால் எனும் கொழுப்பின் அளவு உடலில் சரியான அளவில் இருக்க வேண்டியது அவசியம். வெண்டைக்காய் சாப்பிடுவதால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு உயராது. எனவே உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் வெண்டைக்காயை உடலில் கொலஸ்ட்ரால் அளவு சரியான அளவில் இருக்க விரும்புவார்கள் தாராளமாக சாப்பிடலாம்.

    • உட்கார்ந்தோ, நின்றபடியோ தூங்கும் வழக்கத்தை விலங்குகள் பின்பற்றும்.
    • சிலர் பஸ், ரெயில் பயணங்களில் அமர்ந்த நிலையிலேயே தூங்குவதற்கு பழகி விடுவார்கள்.

    உட்கார்ந்த இடத்திலேயே தூங்கும் வழக்கத்தை சிலர் கடைப்பிடிப்பார்கள். எங்காவது அமர்வதற்கு சிறிது நேரம் கிடைத்துவிட்டால் போதும். சட்டென்று கண்களை மூடிய நிலையில் தூக்க நிலைக்கு சென்றுவிடுவார்கள். பஸ், ரெயில் பயணங்களின்போது அமர்ந்த நிலையிலேயே தூங்குவதற்கு பழகியும் விடுவார்கள்.

    அப்படி ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று திரும்பிய பிறகு முதுகுவலி, கழுத்து வலி, தோள்பட்டையில் அசவுகரியம் போன்ற பிரச்சினைகளை அனுபவித்திருக்கிறீர்களா? அவை நீண்ட நேரம் உட்கார்ந்தபடி அசையாமல் இருப்பதால் ஏற்படும் பாதிப்புகளாகக்கூட இருக்கலாம். உட்கார்ந்தோ, நின்றபடியோ தூங்கும் வழக்கத்தை விலங்குகள் பின்பற்றும். ஆனால் மனித உடல் அத்தகைய நடைமுறைக்கு பழக்கப்படவில்லை.

    உட்கார்ந்த நிலையில் தூங்கும்போது, உடல் செயலற்ற நிலையில் இருப்பதால், மூட்டுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம். அவை விறைப்பு தன்மையும் அடையலாம். இது 'வெயின் திரோம்போசிஸ்' எனப்படும் ரத்த உறைவு பிரச்சினைக்கு வழிவகுத்து விடும். அதாவது உடலில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நரம்புகளில், பொதுவாக கால்களில் ரத்தம் உறைய தொடங்கி விடும். அதன் காரணமாக கால்களில் வலி அல்லது வீக்கம் ஏற்படும்.

    நீண்ட நேரம் அசைவில்லாமல் இருப்பதும், ஒரே நிலையில் இருப்பதும் முதுகு வலி மற்றும் உடல் வலிகளை உண்டாக்கும், உடல் தோரணையும் பாதிப்புக்குள்ளாகும். அசைவில்லாத தன்மையில் இருப்பது மூட்டுகள் விறைப்பு அடைவதற்கு வழிவகுக்கும். வலி அதிகரிக்கும். பக்க விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடும்.

    ரத்த உறைவின் ஒரு அங்கமாக நுரையீரல் அல்லது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் சிக்கல் நேர்ந்தால் பெரும் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும். ரத்த உறைவு காரணமாக தினமும் 20-க்கும் மேற்பட்டவர்கள் இறப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

    கால் தசைகள், கணுக்கால் அல்லது பாதத்தில் வீக்கம் மற்றும் காயம் ஏற்படுதல், சருமம் சிவத்தல், திடீரென்று கணுக்கால் அல்லது கால்களில் வலி ஏற்படுதல் போன்றவை 'வெயின் திரோம்போசிஸ்' எனப்படும் ரத்தம் உறைதல் பிரச்சினைக்கான அறிகுறிகளாகும்.

    உட்கார்ந்த நிலையில் தூங்க விரும்பினால், சாய்வான நிலையில் இருக்கும் இடத்தை நாடுவது நல்லது. இருப்பினும் கர்ப்பிணி பெண்களுக்கு உட்கார்ந்த நிலையில் தூங்குவது பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் கர்ப்ப காலத்தில் படுத்து உறங்குவது கடினமானது. மேலும் மூச்சுத்திணறல், தூக்கத்தின்போது சுவாசம் தடைபடும் பிரச்சினையை எதிர்கொள்பவர்களும் உட்கார்ந்த நிலையில் தூங்கலாம்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • காரமான உணவை விரும்புபவர்கள் மிளகாயின் சுவையை ரசிப்பார்கள்.
    • பச்சை மிளகாய் செரிமானத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டது.

    உணவுக்கு காரமும், சுவையும் சேர்ப்பதில் மிளகாய்க்கு முக்கிய பங்கு இருக்கிறது. காரமான உணவை விரும்புபவர்கள் மிளகாயின் சுவையை ரசிப்பார்கள். பச்சை மற்றும் சிவப்பு நிற மிளகாய்கள் அதிகமாக புழக்கத்தில் இருக்கின்றன. இவற்றில் வைட்டமின் ஏ, பி 6, சி, இரும்பு, தாமிரம், பொட்டாசியம், புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதுமட்டுமின்றி பீட்டா கரோட்டின், கிரிப்டோக்சாண்டின், லுடீன்சாந்தின் போன்ற உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் பொருட்களும் உள்ளடங்கி இருக்கின்றன. பச்சை மிளகாய் உணவில் காரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டாலும் அதனை சாப்பிடுவதால் பல்வேறு உடல்நல பிரச்சினைகளில் இருந்தும் விடுபடலாம் என்றும் ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. பச்சை, சிவப்பு இவற்றில் எந்த வகை மிளகாய் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும் என்பது குறித்து பார்ப்போம்.

    * பச்சை மிளகாய் செரிமானத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டது. அதில் நார்ச்சத்து இருப்பதால் செரிமான செயல்முறை எளிதாக நடைபெற உதவும். மேலும் குடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

    * பச்சை மிளகாய் எடையை குறைக்கவும் உதவுகிறது. ஏனெனில் இதில் கலோரிகள் இல்லை. அதேநேரத்தில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் துணை புரியும். இதில் இருக்கும் வைட்டமின் ஏ, கண்களுக்கும், சருமத்திற்கும் நன்மை தரும்.

    * பச்சை மிளகாயில் இருக்கும் பீட்டா கரோட்டின் இதயம் நன்றாக செயல்பட உதவுகிறது. மேலும் பச்சை மிளகாய் சிறந்த ஆன்டி ஆக்சிடெண்ட் கொண்டது.

    *பச்சை மிளகாயில் இருக்கும் வைட்டமின் சி சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக விளங்குகிறது. புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் தன்மை கொண்டது. ஆன்டி ஆக்சிடெண்ட் பண்புகளை கொண்டிருப்பதால் நுரையீரல் புற்றுநோய், வாய்வழி புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைவு. பச்சை மிளகாய் நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக பாதுகாப்பு கவசமாக செயல்படுவதாக பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

    * சமையலில் சிவப்பு மிளகாய் தூள் சேர்ப்பது உணவின் சுவையையும், நிறத்தையும் மேம்படுத்தும். பச்சை மிளகாய் மற்றும் சிவப்பு மிளகாயின் ஊட்டச்சத்துக்களில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை. சிவப்பு மிளகாயை உலர்த்தும்போது, அதில் உள்ள நீரின் அளவு குறைந்துவிடுகிறது.

    *சிவப்பு மிளகாயில் இருக்கும் கேப்சைசின் உடலில் உள்ள கொழுப்பை எரிக்கும் செயல்முறையை துரிதப்படுத்தும். மனநிலையை மேம்படுத்தும் மகிழ்ச்சியான ஹார்மோன்கள் உருவாகவும் தூண்டும். மேலும் சிவப்பு மிளகாயில் போதுமான அளவு வைட்டமின் சி உள்ளது. இது மற்ற வைட்டமின்கள் உடலில் போதுமான அளவு உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்கவும், நோய்களுக்கு எதிராக போராடவும் துணைபுரியும்.

    * சிவப்பு மிளகாயில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்த அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். சமீபத்திய ஆய்வுகளின்படி, ரத்த சர்க்கரையை குறைக்க சிவப்பு மிளகாய் பயனுள்ளதாக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது.

    * இதய நோய்களின் அபாயத்தை குறைப்பதிலும் சிவப்பு மிளகாய் முக்கிய பங்கு வகிக்கிறது. ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன் ரத்த உறைவை தடுக்கவும் செய்யும்.

    * சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய் இரண்டுமே ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளன. அவற்றை முறையாக உட்கொள்ள வேண்டும். உதாரணமாக, பச்சை மிளகாய் எப்போதும் பச்சையாக பயன்படுத்தப்படுகிறது. பச்சையாகவும் சாப்பிடலாம். ஆனால் உலர்ந்த சிவப்பு மிளகாய் பெரும்பாலும் மசாலா பொருட்களுடன் கலக்கப்படுகிறது. சிவப்பு மிளகாயை தூளாக பயன்படுத்துவதை விட நேரடியாக உலர்ந்த மிளகாயாக பயன்படுத்துவது நல்லது.

    • 'குறட்டை' தீவிரமான உடல்நலக் கோளாறின் அறிகுறியாக இருக்கலாம்.
    • குறட்டை பிரச்சினையை தீர்ப்பதற்கு இயற்கை வழிகள் சிலவற்றைக் காண்போம்.

    தூங்கும்போது, மூச்சுக்காற்று தொண்டைப் பகுதியில் உள்ள மெல்லிய தளர்வான திசுக்களின் வழியாகச் செல்வதால் ஏற்படும் அதிர்வு ஒலியையே 'குறட்டை' என்கிறோம். குறட்டை வருவது இயல்பானதுதான் என்றாலும், பலருக்கு இது மிகப்பெரிய பிரச்சினையாக மாறிவிடுகிறது. சில நேரங்களில், 'குறட்டை' தீவிரமான உடல்நலக் கோளாறின் அறிகுறியாகவும் இருக்கலாம். அதிகப்படியான உடல் எடையைக் குறைத்தல், மதுப்பழக்கத்தை தவிர்த்தல், பக்கவாட்டு நிலையில் படுத்து உறங்குதல், சற்று உயரமான தலையணையைப் பயன்படுத்துதல் போன்ற ஒரு சில வாழ்வியல் மாற்றங்களை மேற்கொள்வதன் மூலமாக குறட்டை விடுவதை நிறுத்த முடியும். இதுதவிர குறட்டை பிரச்சினையை தீர்ப்பதற்கு இயற்கையான வழிகள் சிலவற்றைக் காண்போம்.

    நீராவி பிடித்தல்: குறட்டைக்கான காரணங்களில் ஒன்று மூக்கில் ஏற்படும் அடைப்பு. இதனால், தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும். இதற்கு ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் தண்ணீரை எடுத்துக்கொண்டு, அதில் இருந்து வரும் நீராவியை 10 நிமிடங்களுக்கு மூக்கு வழியாக உள்ளிழுக்க வேண்டும். படுக்கைக்குச் செல்லும் முன்பு இவ்வாறு செய்யலாம். இதனால், மூக்கில் உண்டாகும் அடைப்பு நீங்கி, குறட்டை விடுவது நிற்கும்.

    புதினா மற்றும் வெந்தயம்: செரிமானப் பிரச்சினைகளாலும் குறட்டை ஏற்படலாம். இதற்கு, புதினா மற்றும் வெந்தயம் சிறந்த தீர்வாகும். வெந்தயம் தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறலுக்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டது. சிறிதளவு வெந்தயத்தை தண்ணீரில் அரைமணி நேரம் ஊற வைத்து, அதை தூங்கச் செல்வதற்கு முன்பு சாப்பிடலாம். அதேபோல், ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் வெந்தயப் பொடி மற்றும் சிறிதளவு புதினா இலைகளைப் போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இந்த நீரை வடிகட்டி, அதில் சிறிது தேன் கலந்து குடிக்கலாம். இதனால், செரிமான பிரச்சினை நீங்குவதுடன், இரவில் நிம்மதியான உறக்கமும் கிடைக்கும்.

    ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன்: அரை டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் அரை டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் இரண்டையும் நன்றாகக் கலந்து, படுக்கைக்குச் செல்லும் முன்பு சாப்பிடலாம். இதுதவிர ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து தூங்கச் செல்வதற்கு முன்னர் குடிக்கலாம். இது தொண்டைக்கு இதமாக இருப்பதுடன், குறட்டையையும் தடுக்கும்.

    பூண்டு: பூண்டில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. இது சுவாச மண்டலத்தைச் சுத்தப்படுத்தி, நாசி பாதையில் சளி படிவதைத் தடுத்து குறட்டையைக் குறைக்கும். 2 அல்லது 3 பூண்டு பற்களை எடுத்து மென்று சாப்பிடவும். பின்னர் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கவும். படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், நாளடைவில் குறட்டை நிற்கும்.

    • கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போனை அதிக நேரம் பார்வையிடுவது கண் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
    • கண் பார்வையை மேம்படுத்துவதற்கும் சாப்பிட வேண்டிய உணவுகளின் பட்டியல் உங்கள் பார்வைக்கு...

    எல்லாமே தொழில்நுட்பம் சார்ந்ததாக மாறிக்கொண்டிருக்கும் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன், டேப்லெட், டி.வி. போன்ற சாதனங்களுடன் பல மணி நேரங்களை செலவிட வேண்டியுள்ளது. அப்படி அதிக நேரம் பார்வையிடுவது கண் ஆரோக்கியத்தை பாதிக்கும். தலைவலி, இரட்டை பார்வை, மங்கலான பார்வை, கண் எரிச்சல், கண் உலர் வடைதல், கண் சோர்வு போன்ற பாதிப்புகள் உண்டாகும். கண்களின் நலன் பேணுவதற்கும், கண் பார்வையை மேம்படுத்துவதற்கும் சாப்பிட வேண்டிய உணவுகளின் பட்டியல் உங்கள் பார்வைக்கு...

    * நட்ஸ் வகைகளில் பாதாம் கண் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். பாதாமில் வைட்டமின் ஈ உள்ளது. பொதுவாக வைட்டமின் ஈ உள்ளடக்கிய உணவு பொருட்களை உட்கொள்வது கண்புரை மற்றும் மாகுலர் சிதைவைத் தடுக்க உதவும். பாதாமை எந்த நேரத்திலும் உட்கொள்ளலாம். சாலடுகளுடன் சேர்த்து சாப்பிடலாம். நட்ஸ் வகைகளுடன் கலந்தும் உட்கொள்ளலாம்.

    * கேரட், கண் பார்வை திறனை அதிகரிக்கச்செய்யும் சக்தி கொண்டது. அதில் வைட்டமின் ஏ உடன் பீட்டா கரோட்டின்களும் அதிகம் நிரம்பப்பெற்றுள்ளன. வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் இவை இரண்டுமே கண் தொடர்பான ஆபத்துக்களை தவிர்க்க உதவும். கேரட்டை மாலை நேர சிற்றுண்டியாக உட்கொள்ளலாம். சாலட்டுகள், சூப்களாக தயாரித்தும் பருகலாம். உணவிலும் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

    * பச்சை இலை காய்கறிகளில் லுடீன் மற்றும் ஜியாசாந்தின் உள்ளன. இவை இரண்டுமே ஆன்டி ஆக்சிடெண்டுகள் கொண்டவை. தெளிவான பார்வை திறனுக்கு வித்திடுபவை. மாகுலர் சிதைவை தடுக்கக்கூடியவை. பெர்ரி பழங்கள், குடை மிளகாய், சர்க்கரைவள்ளி கிழங்கு, அவகொடா, கீரை, ப்ரோக்கோலி, பட்டாணி போன்வைகளில் இந்த ஆன்டி ஆக்சிடெண்டுகள் ஏராளமாக உள்ளன. மேலும் வைட்டமின்கள் ஏ, சி, கே, போலேட், இரும்பு மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்களும் நிரம்பியுள்ளன.

    * ஆரஞ்சு, எலுமிச்சை, தக்காளி மற்றும் திராட்சைப்பழங்கள் போன்றவை கண்களுக்கு நன்மை பயக்கும் வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்களுள் முக்கியமானவை. இந்த சிட்ரஸ் பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடெண்டுகள் அதிகம் உள்ளன. அவை ப்ரீ ரேடிக்கல் களால் ஏற்படும் சேதத்தில் இருந்து உடலைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், செல்கள் சேதம் அடையாமல் தடுப்பதற்கும், புதிய திசுக்களின் வளர்ச்சிக்கும் உதவும்.

    * கண் பார்வையை மேம்படுத்த உணவில் சேர்க்க வேண்டிய சில சத்தான முழு தானியங்கள்: ஓட்ஸ், பார்லி. மேலும் டுனா, சால்மன், கானாங்கெளுத்தி, நெத்திலி, மத்தி மற்றும் ட்ரவுட் போன்ற மீன் வகைகளில் லீன் புரதங்கள் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை கண் களுக்கு நலம் சேர்ப்பவை.

    * முட்டையும் கண் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவாகும். முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் ஏ, லுடீன், ஜியா சாந்தின், துத்தநாகம் ஆகியவை காணப்படுகின்றன. அவை கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த வல்லவை. கண்ணில் இருக்கும் கார்னியா வைட்டமின் ஏ மூலம் பாதுகாக்கப்படுகிறது. கண்ணின் வெளிப்பகுதியில் அமைந்திருக்கும் கார்னியா, கண்புரை, மாகுலர் சிதைவு உள்ளிட்ட கண் நோய் அபாயத்தை குறைக்கின்றன. காலை, மதியம் மற்றும் இரவு உணவில் முட்டை சேர்த்துக்கொள்ளலாம்.

    • தினமும் ஏதாவது ஒரு கீரையை சாப்பிடுவது உடலுக்கு நல்லது.
    • எந்த கீரையில் என்னென்ன சத்துக்கள், எந்தெந்த அளவுகளில் உள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம்.

    கீரை வகைகள் மனிதனுக்கு எண்ணற்ற பயன்களை அளிக்கின்றன. இதில் என்னென்ன சத்துக்கள், எந்தெந்த அளவுகளில் உள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம்.

    புதினா, கொத்தமல்லி... புதினா கீரையில் போலிக் அமிலம் 114 மைக்ரோ கிராம், கால்சியம் 200 மி.கி., இரும்புச் சத்து 15.6 மி.கி., வைட்டமின்கள் ஏ,பி,சி சிறிதளவு உள்ளன. இது ரத்த சோகையைப் போக்க வல்லது.

    கொத்தமல்லி கீரையில் கால்சியம் 184 மி.கி., இரும்புச் சத்து 1042 மி.கி., வைட்டமின் ஏ 8,918 மைக்ரோகிராம் உள்ளன. பாஸ்பரஸ், வைட்டமின் பி,சி, உள்ளன. இது பார்வைக்கோளாறு, ரத்த சோகை ஆகியவற்றைப் போக்கும்.

    * முளைக்கீரையில் இரும்புச் சத்து 22.9 மி.கி., கால்சியம் 397 மி.கி., பாஸ்பரஸ், வைட்டமின்கள் ஏ, பி, சி சிறிதளவு உள்ளன. ரத்த சோகையைப் போக்கும் திறனுள்ளது.

    * அகத்திக் கீரையில் கால்சியம் 1,130 மைக்ரோ கிராம், இரும்புச் சத்து 3.9 மி.கி., வைட்டமின் ஏ 5,400 மைக்ரோ கிராம் உள்ளன. வைட்டமின்கள் பி, சி சிறிதளவு உள்ளன.

    * பொன்னாங்கண்ணி கீரையில் இரும்புச் சத்து 1.63 மி.கி, கால்சியம் 510 மி.கி, பாஸ்பரஸ், வைட்டமின்கள் ஏ, பி, சி உள்ளன.

    * பசலைக் கீரையில் வைட்டமின் ஏ 5,580 மைக்ரோ கிராம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து 1.14 மி.கி., பொட்டாசியம் 306 மி.கி போன்றவை உள்ளன.

    * வெந்தயக் கீரையில் கால்சியம் 395 கிராம், வைட்டமின் ஏ 2,340 மைக்ரோ கிராம், இரும்புச் சத்து 1.93 மி.கி. உள்ளன.

    * புளிச்ச கீரையில் இரும்புச் சத்து 2.28 மி.கி, வைட்டமின் ஏ 2,898 மைக்ரோ கிராம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி உள்ளன.

    * முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ 6,780 மைக்ரோ கிராம், வைட்டமின் சி 200 மி.கி. இரும்புச் சத்து, கால்சியம் 440 மி.கி., பாஸ்பரஸ் மற்றும் சிறிதளவு வைட்டமின் பி போன்றவை உள்ளன. முருங்கைக் கீரையைப் போன்று கறிவேப்பிலையிலும் வைட்டமின் ஏ அதிகம். இது பார்வைக் கோளாறுகளை தடுக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாரடைப்பு குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
    • ஆண்டுக்கு ஒருமுறையாவது இதயப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    நீரிழிவு நோயை போல இதய நோயால் பாதிக்கப்படும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனால் 'சைலண்ட் ஹார்ட் அட்டாக்' எனப்படும் கடுமையான அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் ஏற்படும் மாரடைப்பு குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் கை, கழுத்து, தாடை பகுதியில் வலி, மார்பில் குத்துவது போன்ற வலி, தலைச்சுற்றல், பதற்றம், வியர்வை போன்ற மாரடைப்புகளுக்கான அறிகுறிகள் எதுவும் வெளிப்படாது.

    இரைப்பை பகுதியில் அசவுகரியம் ஏற்படுவதுபோல் சாதாரணமாக தெரியும். அதனை கவனத்தில் கொள்ளாவிட்டால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். ஒரு சில அறிகுறிகள் வெளிப்பட்டாலும் சாப்பிட்ட உணவு ஏதோ ஒத்துக்கொள்ளவில்லை என்று வாயு தொல்லை, அஜீரணம் போன்ற வயிற்று பிரச்சினையாகத்தான் பலரும் கருதுகிறார்கள்.

    பெரும்பாலும் நீரிழிவு நோயாளிகள் இத்தகைய அறிகுறிகளை எளிதில் உணரமாட்டார்கள். ஏனெனில் அவர்களின் நரம்புகள் வலி பற்றிய அறிகுறிகளை சட்டென்று வெளிப்படுத்தாது. ஆண்களை விட பெண்களுக்குத்தான் சைலண்ட் ஹார்ட் அட்டாக் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைப்படுவது மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுவது போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தாமலேயே சில சமயங்களில் மாரடைப்பு ஏற்படக்கூடும்.

    'சைலண்ட் ஹார்ட் அட்டாக்' ஏற்படுவது எப்படி தெரியும்?

    வயிற்றின் மேல் பகுதியிலோ அல்லது மார்பின் மையப் பகுதியிலோ இதுவரை இல்லாத அளவுக்கு அசாதாரண அறிகுறிகளோ, வலியோ 20 முதல் 25 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டியது அவசியம். ஈ.சி.ஜி. பரிசோதனை எடுத்துக்கொள்வதும் முக்கியமானது. அதன் மூலமே நோய் பாதிப்புக்கான அறிகுறிகளை கண்டறிந்துவிடலாம். டிரோபோனின் டி பரிசோதனை செய்து கொள்வதும் நல்லது.

    இது இரத்தத்தில் உள்ள டிரோபோனின் ஐபுரோடீன்களின் தன்மையை அளவிடும். இந்த புரதங்கள் இதய தசை சேதமடைவதை சுட்டிக்காட்டும். இதயம் எவ்வளவு சேதமடைகிறதோ, அந்த அளவுக்கு ரத்தத்தில் ட்ரோபோனின் டி அளவு அதிகமாக இருக்கும்.

    இதுபோன்ற அசவுகரியம் தோன்றினாலோ, சிறிது நேரத்திற்கு பிறகு மறைந்தாலோ இவை இதயத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு தொடர்பான எச்சரிக்கை அறிகுறிகள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

    தடுப்பு நடவடிக்கைகள் என்ன?

    35 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது இதயப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ரத்தப் பரிசோதனை, ரத்த அழுத்தப் பரிசோதனை மற்றும் எக்கோ கார்டியோகிராம் ஆகியவை அதில் உள்ளடங்கி இருக்க வேண்டும். நீரிழிவு நோய், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் பாதிப்பு கொண்டவர்கள், புகைப்பழக்கம், மதுப்பழக்கம் கொண்டவர்கள், ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து பணிபுரிபவர்கள், ஏற்கனவே இதய நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் குடும்ப பின்னணியைக் கொண்டவர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. முதல் முறை 'சைலண்ட் ஹார்ட் அட்டாக்' ஏற்பட்டது தெரியாமலேயே கடந்து சென்றுவிட்டால், இரண்டாவது முறை ஏற்படும்போது கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். இதய செயலிழப்புக்கு வழிவகுக்கும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • உருளைக்கிழங்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டிருக்கிறது.
    • உருளைக்கிழங்கு சாறு பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

    உருளைக்கிழங்கு அதிகம் சேர்த்துக்கொள்வது உடல் பருமன் பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்ற கருத்து நிலவுகிறது. அது உண்மைதான் என்றாலும் உருளைக்கிழங்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டிருக்கிறது. உருளைக்கிழங்கை சாறு எடுத்தும் பருகலாம். அது காரத்தன்மை வாய்ந்தது என்றாலும் உடலில் அமிலத்தன்மையை குறைக்க உதவும். கருவளையம், கண் வீக்கம் போன்ற பிரச்சினைகளையும் போக்கும் தன்மை கொண்டது. உருளைக்கிழங்கு சாறு பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

    * உருளைக்கிழங்கு சாறு வயிற்றில் அமிலத்தன்மையை சீராக்கும் திறன் கொண்டது. அசிடிட்டி பிரச்சினை ஏற்படும்போது 50 மி.லி முதல் 100 மி.லி வரை உருளைக்கிழங்கு சாறு பருகலாம்.

    * அல்சர் பாதிப்புக்கு நிவாரணம் தரும் தன்மை உருளைக்கிழங்கு சாறுக்கு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    * கருவளையத்தால் பாதிக்கப் படுபவர்கள் உருளைக்கிழங்கு சாறு பருகி வரலாம். கண்களுக்கு அடிப்பகுதியிலும் உருளைக்கிழங்கு சாறை தடவி வரலாம். அல்லது மெல்லிய உருளைக்கிழங்கு துண்டுகளை கண்களின் மேல் அரை மணி நேரம் வைத்திருக்கலாம்.

    * கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தப்படுத்துவதற்கு உருளைக்கிழங்கு சாறு உதவும்.

    * முகம் மற்றும் கண்கள் வீங்கி இருந்தால் உருளைக்கிழங்கு சாறை உபயோகிக்கலாம். அதில் இருக்கும் நீர்ச்சத்து வீக்கத்தை குறைக்கும். சருமத்திற்கு இயற்கையான பளபளப்பையும் கொடுக்கும்.

    * உருளைக்கிழங்கில் வைட்டமின் பி சத்து நிறைந்துள்ளது. அது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவி புரியும்.

    * ஒரு டம்ளர் உருளைக்கிழங்கு சாறு பருகுவதன் மூலம் ஒருநாளைக்கு தேவையான வைட்டமின் சி சத்தை ஏறக்குறைய பெற்றுவிடலாம். சாப்பிடும் உணவில் வைட்டமின் சி இருப்பது உடலில் இரும்புச் சத்தை உறிஞ்சுவதை மேம்படுத்த உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

    * துத்தநாகம், கால்சியம் மற்றும் வைட்டமின் கே ஆகியவை உருளைக்கிழங்கில் உள்ள மற்ற அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள். இந்த வைட்டமின்கள் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

    * தோல் அழற்சி உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு சாறு உதவியாக இருக்கும். பொடுகு பிரச்சினை கொண்டவர்கள் உருளைக்கிழங்கு சாறை உச்சந்தலையில் தடவி வருவதன் மூலம் நிவாரணம் பெறலாம்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • உணவு பழக்கத்தில் செய்யும் சில தவறுகளும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கக்கூடும்.
    • வாழ்க்கைமுறையில் சில எளிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் நீரிழிவு நோய் வராமல் தற்காத்துக்கொள்ளலாம்.

    நீரிழிவு நோய் பாதிப்புக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டிருக்கிறது. உணவு பழக்கத்தில் செய்யும் சில தவறுகளும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கக்கூடும். உண்ணும் உணவை உடலானது ஆற்றலாக மாற்றுவதற்கு உள்ளுறுப்புகளின் செயல்பாடுகள் சீராக நடைபெற வேண்டும்.

    குறிப்பாக கணையத்தால் இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாத போது அல்லது அது உற்பத்தி செய்யும் இன்சுலினை உடலால் சரியாக பயன்படுத்த முடியாத போது நீரிழிவு நோய் உண்டாகிறது. வாழ்க்கைமுறையில் சில எளிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் நீரிழிவு நோய் வராமல் தற்காத்துக்கொள்ளலாம்.

    தினமும் தயிர் சாப்பிடுவது

    தயிர் ஆரோக்கியமான புரோபயாடிக் உணவாகக் கருதப்பட்டாலும், அதை தினமும் உணவில் சேர்க்க முயற்சிப்பது தவறானது. தினமும் தயிர் சாப்பிடும்படி ஆயுர்வேதம் பரிந்துரைக்கவில்லை.

    தினமும் தயிர் சாப்பிடுவது உடல் பருமனுக்கு வழிவகுக்கும். மோசமான வளர்சிதை மாற்றத்திற்கும் வித்திடும்.

    தாமதமாக சாப்பிடுவது

    இரவு உணவை தாமதமாக சாப்பிடும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். அதனால் செரிமான அமைப்புக்கு போதிய நேரம் கொடுக்க முடியாத நிலை ஏற்படும். இரவு உணவை அதிகமாக சாப்பிடுவதும் செரிமானம் தாமதமாக நடைபெறுவதற்கு வழிவகுக்கும். இரவில் அதிக உணவு உட்கொள்வது கல்லீரலுக்கும் சுமையை உண்டாக்கும். வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும். இறுதியில் ஊட்டச்சத்து குறைபாடு உள்பட பல்வேறு உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்.

    அதிகமாக சாப்பிடுவது

    உணவை அளவோடுதான் உட்கொள்ள வேண்டும். வயிற்றுக்கு போதுமான அளவு சாப்பிட்டதாக உணர்ந்தாலும் தட்டில் இருக்கும் உணவை வீணாக்காமல் உட்கொள்ளும் பழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். அது அதிகமாக உணவு உட்கொள்வதற்கு காரணமாகிவிடுகிறது. ஆரம்பத்திலேயே குறைவாக உணவை தட்டில் வைத்து சாப்பிடும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும்.

    அதன் பிறகு தேவைக்கு ஏற்ப உணவை பரிமாறிக்கொள்ளலாம். அதனால் உணவு வீணாகாது. அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டிய நிர்பந்தமும் ஏற்படாது. பசி நீங்கிய பிறகும் அதிகமாக சாப்பிடுவது உடல் பருமன், கொலஸ்ட்ரால், செரிமான கோளாறு போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும்.

    பசியின்றி உண்பது

    உடலின் சமிக்ஞைகளை கவனிக்காமல் சாப்பிடும் பழக்கத்தை நிறைய பேர் கொண்டிருக்கிறார்கள். பசி எடுக்காவிட்டாலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஸ்நாக்ஸ், ஜூஸ், பலகாரம் சாப்பிடுவார்கள். உணவும் அப்படித்தான். ஏற்கனவே வயிறு நிரம்பி இருந்து பசி எடுக்காவிட்டாலும் சாப்பிடும் வழக்கத்தை சிலர் கொண்டிருப்பார்கள்.

    இரண்டு மூன்று மணி நேரத்திற்கு இடையே பசி எடுக்காவிட்டாலும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். அப்படி சாப்பிடுவது இன்சுலின் உணர்திறனை குறைத்துவிடும். ஊட்டச்சத்து உறிஞ்சுதல் செயல்பாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தும். குடல் வீக்கத்தை அதிகரிக்கும். இறுதியில் நீரிழிவு நோய்க்கு வழிவகுத்துவிடும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இது மரபியல் கோளாறு காரணமாக ஏற்படும் நோய்.
    • இதை பரம்பரை நோய் என்கிறார்கள்.

    காயம் ஏற்படும்போது ரத்தம் வழியும். சில நிமிடங்களில் ரத்தம் வெளியேறுவது தானாகவே நின்றுவிடும் அல்லவா? அப்படி ரத்தம் வெளியேறுவது நிற்காமல், தொடர்ந்து வெளியேறினால்? அதுதான் ரத்தம் உறையாமை நோய். ஒருவருக்குக் காயம் ஏற்பட்டு ரத்தம் தொடர்ந்து வெளியேறிக்கொண்டே இருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டுவிடும்.

    இது மரபியல் கோளாறு காரணமாக ஏற்படும் நோய். உலகில் 10 ஆயிரம் பேரில் ஒருவருக்கு இந்நோய் ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கும் இந்த நோய் ஏற்படலாம். எனவே, இதை பரம்பரை நோய் என்கிறார்கள். ரத்த உறவில் திருமணம் செய்வதன் மூலம், இந்நோய் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    தாயின் கருவில் உருவாகும் குழந்தையின் பாலினத்தை தீர்மானிக்கும் குரோமோசோம்களில் ஏற்படும் குறைபாடே இந்நோய் ஏற்படக் காரணம். இந்த நோய் உள்ளவர்கள் பல பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். உடலில் எங்கும் காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காயம் காரணமாக ஏற்படும் ரத்தக்கசிவு சிக்கலை உண்டாக்கிவிடும். சிலருக்கு எந்தக் காரணமும் இல்லாமல்கூட ரத்தக்கசிவு ஏற்படலாம் என்கிறார்கள், நிபுணர்கள்.

    இந்த நோயை எப்படி கண்டுபிடிப்பது? எனக்ேகட்டால், பிறந்த குழந்தைக்கு தொப்புள்கொடி விழுந்த பிறகு ரத்தம் நிற்காமல் வெளியேறுவது, பல் விழுந்த பிறகு அல்லது பல் எடுத்த பிறகு தொடர்ந்து ரத்தக்கசிவு ஏற்படுவது, உடலில் எங்கேயாவது காயம் ஏற்பட்டு ரத்தக்கசிவு நிற்காமல் இருப்பது, உடலில் நீல நிற தழும்புகள் தோன்றி மறைவது, கால் மூட்டுகள் மீண்டும் மீண்டும் வீங்கி வலிப்பது போன்ற அறிகுறிகள் இருந்தால் ரத்தம் உறையாமை நோய் இருக்கலாம். இந்நோயைக் குணப்படுத்துவது மிகவும் கடினம். ரத்தம், பிளாஸ்மா செலுத்துவது மற்றும் உறை நிலை மருந்துகளைச் செலுத்துவது என முறையான சிகிச்சையின் மூலம் நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

    • நீரிழிவு நோயால் ஏறக்குறைய உடம்பில் அனைத்து உறுப்புகளும் பாதிப்படைகின்றன.
    • கீழ்க்கண்ட பாதிப்புகள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

    நீரிழிவு நோயால் ஏறக்குறைய உடம்பில் அனைத்து உறுப்புகளும் பாதிப்படைகின்றன. கீழ்க்கண்ட பாதிப்புகள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது:

    இதய பாதிப்பு: நீரிழிவு நோயாளிகளுக்கு இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து மாரடைப்பு, இதய தசை நோய் (Cardiomyopathy), உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.

    மன ஆரோக்கிய பாதிப்பு: நீரிழிவு நோயாளிகளுக்கு மன அழுத்தத்தினால் கோபம், எரிச்சல், வெறுப்பு, சலிப்பு போன்றவை ஏற்படலாம்.

    கண் பாதிப்பு: கண் விழித்திரை பாதிப்பு, கண் அழுத்த நோய் (Glaucoma), கண் புரை போன்ற கண் பார்வை குறைபாடு பிரச்சினைகள் வரலாம்.

    சிறுநீரக பாதிப்பு: நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த நாளங்கள் மற்றும் சிறுநீரக செல்கள் பாதிப்படைவதால் சிறுநீரகங்கள் வீக்கம் அடைகின்றன. ரத்தம் வடிகட்டும் செயல்பாடு குறைவதால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது.

    நரம்பு மண்டல பாதிப்பு: ரத்த சர்க்கரை அதிகமாகும்போது மூளையில் உள்ள நரம்பு செல்கள் பாதிப்படைந்து டிமென்ஷியா, பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

    சரும பிரச்சினைகள்: நீரிழிவு நோயாளிகள் சருமத்தில் கருமையாதல், சருமத்தில் தடிப்பு உருவாகுதல் (அகான்த்தோஸிஸ் நைக்ரிகன்ஸ்), தோல் தொற்று, கொப்பளங்கள், தோல் வறட்சி, அரிப்பு போன்றவை ஏற்படலாம்.

    நோய் எதிர்ப்பு மண்டல பாதிப்பு: ரத்த சர்க்கரை அதிகமாகும்போது நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவிழந்து தொற்றுகள் ஏற்பட வழி வகுக்கிறது.

    நீரிழிவு மாத்திரைகளை சரியான நேரத்திலும் அளவிலும் உட்கொண்டால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்பட்டு இந்த பாதிப்புகள் பெருமளவு குறையும்.

    • குழந்தைகளின் உடல் நலனில் அக்கறை கொள்வது மிகவும் அவசியம்.
    • குழந்தைகளுக்கு மெல்லிய பருத்தி ஆடைகளை உபயோகிப்பதே நல்லது.

    நட்சத்திரம் ஆரம்பித்து விட்டதால் முன்பை விட வெயில் அதிகமாக வாட்டி வதைக்கின்றது.குழந்தைகளுக்கும் கோடை விடுமுறை என்பதால் அவர்களை வீட்டில் அதிக நேரம் பூட்டி வைக்க முடியாது.அதற்கு மேல் பூட்டி வைத்தால் அவர்களின் விளையாட்டு மொபைல் போன்களிலும்,தொலைக்காட்சிகளிலும் கழியும். ஆனால்,அது குழந்தைகளின் உடல் நலனை பாதிக்கும்.அதனால் குழந்தைகளை காலை மற்றும் மாலை நேரங்களில் வெளியில் விளையாட அனுமதிப்பதே சிறந்தது.அதே நேரம் குழந்தைகளின் உடல் நலனில் அக்கறை கொள்வது மிகவும் அவசியம்.

    குழந்தைகள் பொதுவாக விளையாடும் ஆர்வத்தில் உடலுக்கு தேவையான தண்ணீர் அருந்துவதை மறக்கின்றனர்.அதே நேரம் விளையாடும் பொழுது உடலில் உள்ள தண்ணீர் வியர்வையாக அதிகம் வெளியேறுகின்றது.எனவே உடலுக்குள் செல்வதைவிட அதிக அளவு திரவம் வெளியேறும்போது உடலில் நீர் வறட்சி ஏற்படுகின்றது. அதிக தாகம் எடுத்தல்,சிறுநீர் சிறிது சிறிதாக வெளியேறுதல் மற்றும் அடர்மஞ்சள் நிறத்தில் வெளியேறுதல் ஆகியவை இதற்கான அறிகுறிகள் ஆகும்.இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு குடிக்க அதிக அளவில் தண்ணீர்,இளநீர் மற்றும் ஓ. ஆர் .எஸ் பவுடர் முதலியவற்றை கொடுக்கலாம். இது உடலுக்கு தேவையான மினெரல் மற்றும் உப்பு ஆகியவற்றை தக்க வைத்துக்கொள்ள உதவும்.

    வெப்பத்தின் தாக்கம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அதிகமாக இருக்கும். எனவே,அந்த நேரத்தில் குழந்தைகளை வெளியில் அழைத்து செல்வதை தவிர்க்கலாம்.ஆறு மாதத்திற்கு கீழ் உள்ள குழந்தைகளை வெளியில் அழைத்து செல்லாமல் இருப்பதே சிறந்தது. ஏ.சி அறை என்றால், குளிர் 24 டிகிரி அளவில் இருப்பது போல் வைக்க வேண்டும். எப்போதும் ஏ.சி அறையிலேயே வைத்திருப்பதும் கூடாது.குழந்தைகள் வெளியில் செல்ல நேர்ந்தால் 15 நிமிடங்களுக்கு முன்பே சன் ஸ்கிரீன் பூசி விட வேண்டும்.

    வெயில் காலத்தில் குழந்தைகளை அதிகமான துணிகள் கொண்டு சுற்றினால் உடலின் வெப்பநிலை அதிகரிக்ககூடும். எனவே, குழந்தைகளுக்கு மெல்லிய பருத்தி ஆடைகளை உபயோகிப்பதே நல்லது.மிக மிருதுவான ஒரு பருத்தித் துணியால் போர்த்தினால் போதும். குழந்தைகளின் உடலுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் கனமான கவுன் முதலியவைகளை அணிய கூடாது.இரவு நேரத்தில் இன்னும் கூடுதலாக கவனம் தேவை.

    கோடை காலத்தில் குளிர்ச்சியான உணவுபொருட்களை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். ராகி, கம்பு,பார்லி போன்ற உணவு பொருட்கள் கோடை காலத்தில் உண்பதற்கு ஏற்றவை.அதே போல சீரகம், கொத்துமல்லி முதலியவற்றையும் சாப்பிடலாம்.குழந்தைகளுக்கு 6 மாதத்திற்கு பின் திட உணவு கொடுக்க ஆரம்பிக்கும் பொழுது மேற்கண்ட பொருட்களை உணவுடன் சேர்த்து பார்லி வாட்டர், ராகி கஞ்சி, கம்பு கஞ்சி போன்ற வித விதமாவிதமான ரெசிபிக்களை சமைத்து கொடுக்கலாம். அதே போல் தண்ணீர்ச்சத்து அதிகமுள்ள, பழங்களையும் சாப்பிட அடிக்கடி கொடுக்க வேண்டும்.

    ×