என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போப் பிரான்சிஸ்"

    • 80 வயதிற்கு உட்பட்ட 133 கார்டினல்கள் மட்டுமே புதிய போப்பை தேர்வு செய்யும் தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள்.
    • ஜாமர் கருவிகள் கொண்டு சிற்றாலயத்தை சுற்றி தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டு உள்ளன.

    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88) கடந்த மாதம் 21-ந்தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது உடல் அடக்கம் கடந்த 26-ந்தேதி நடந்தது. 9 நாட்கள் வாடிகனில் துக்கம் அனுசரிக்கப்பட்ட நிலையில், புதிய போப் பிரான்சிஸை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின. அதன்படி நேற்று வாடிகனில் உள்ள சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் கார்டினல்கள் பங்கேற்ற ரகசிய வாக்கெடுப்பு நடந்தது. இதற்காக வாடிகனில் 250 கார்டினல்கள் குவிந்துள்ள நிலையில் 80 வயதிற்கு உட்பட்ட 133 கார்டினல்கள் மட்டுமே புதிய போப்பை தேர்வு செய்யும் தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள்.

    புதிய போப் பிரான்சிஸ் தேர்வு செய்யப்படும் வரை கார்டினல்கள் அங்கேயே தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இதற்காக அவர்களது செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டும், அவர்களை எந்தவிதத்திலும் தொடர்பு கொள்ளாமல் இருப்பதற்காக ஜாமர் கருவிகள் கொண்டு சிற்றாலயத்தை சுற்றி தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டு உள்ளன.

    இதற்கிடையே சிறப்பு திருப்பலி நடந்த பின்னர் வாக்கெடுப்பில் ரகசியம் காப்பது தொடர்பாக பீடத்தின் முன்பு நின்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதைத் தொடர்ந்து புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியது. அதில் 3-ல் 2 பங்கு ஆதரவு (89 வாக்குகள்) பெறும் கார்டினல் புதிய போப் ஆண்டவராக தேர்வு செய்யப்படுவார்.

    போப்பின் அதிகாரப்பூர்வ இல்லமான அப்போஸ்தலிக் அரண்மனையில் உள்ள சிஸ்டைன் சேப்பலில், 80 வயதுக்குட்பட்ட அனைத்து கார்டினல்களும் ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்றனர். முதல் நாள் நடைபெற்ற வாக்கெடுப்பில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

    இதனை தெரிவிக்கும் விதமாக மரபுபடி கார்டினல்கள் எழுதி வைத்திருந்த காகிதங்கள் அனைத்தும் எரிக்கப்பட்டு ஆலய சிம்னி வழியாக கரும்புகை வெளியேற்றப்பட்டது. இதன் மூலம் புதிய போப் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. புதிய போப் தேர்வு செய்யப்படும் வரை வாக்கெடுப்பு தொடர்ந்து நடைபெறும். புதிய போப் தேர்வு செய்யப்பட்டால் ஆலய சிம்னி வழியாக வெண்புகை மூலம் வெளியுலகுக்கு தெரிவிக்கப்படும்.

    இன்று 2-வது முறையாக கார்டினல்கள் கூடி புதிய போப்பை தேர்வு செய்யும் பணியில் ஈடுபடுகிறார்கள்.

    • திய போப் ஆக தேர்வு செய்யப்படுபவருக்கு 3-ல் 2 பங்கு பெரும்பான்மை கிடைக்க வேண்டும்.
    • கருப்பு நிற புகை வெளியிடப்பட்டால் போப் தேர்வு செய்யப்படவில்லை என்பதை குறிக்கும்.

    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ்(வயது 88) கடந்த மாதம் 21-ந்தேதி உடல்நல குறைவால் மரணம் அடைந்தார். அவரது உடல் கடந்த 26-ந் தேதி ரோமில் உள்ள புனித மேரி பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

    போப் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து புதிய போப்பை தேர்வு செய்யும். மாநாடு மே 7-ந்தேதி தொடங்கும் என்று வாடிகன் அறிவித்தது. அதன்படி இன்று போப் தேர்வு தொடங்குகிறது. வாடிகனில் உள்ள 16-ம் நூற்றாண்டை சேர்ந்த பாரம்பரியமிக்க சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் புதிய போப்பை தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய ஆலோசனை கூட்டமும், வாக்கெடுப்பும் நடக்கிறது.

    இதற்காக வாடிகனில் 250 கார்டி னல்கள் குவிந்துள்ளனர். ஆனால் 80 வயதிற்குட்பட்ட 133 கார்டினல்கள் மட்டுமே புதிய போப்பை தேர்வு செய்யும் தேர்தலில் பங்கேற்று வாக்களிப்பார்கள். வாக்கெடுப்பில் பங்கேற்க உள்ள கார்டி னால்கள் சிஸ்டைன் தேவா லயத்திற்குள் செல்வதற்கு முன்னர், பைபிள் மீது கை வைத்து ரகசிய காப்பு உறுதி மொழி எடுத்துக்கொள்வார்கள்.

    கார்டினல்களை தவிர இரண்டு அவசர கால மருத்துவர்கள், கார்டினால்களுக்கு சமைக்கும் நபர்கள் மட்டுமே சிஸ்டைன் தேவாலயத்திற்குள் அனுமதிக் கப்படுவார்கள். கார்டினல்கள் உள்பட சிஸ்டைன் தேவாலயத்தி்ற குள் செல்லும் அனைவரும் வெளி உலக தொடர்பை துண்டித்துக் கொள்ள வேண்டும்.

    இதையடுத்து வாடிகனில் தொலைத் தொடர்பு சேவை துண்டிக் கப்படும். சிஸ்டைன் தேவா லயத்திற்கு உள்ளேயும் வெளி பகுதியிலும் தொலை பேசி மற்றும் இணைய சிக்னல்களை தவிர்க்க ஜாமர்கள் பொருத்தப்பட்டிருக்கும். கார்டினல்கள் தங்கும் மாளிகையிலும் தொலைக்காட்சி, வானொலி, செய்திதாள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    புதிய போப் ஆக தேர்வு செய்யப்படுபவருக்கு 3-ல் 2 பங்கு பெரும்பான்மை கிடைக்கும் வரை பல்வேறு கட்ட வாக்கெடுப்பு நடை பெறும். ஒவ்வொரு கார்டி னல் வாக்காளரும் தாம் விரும்பும் வேட்பாளரின் பெயரை வாக்குச் சீட்டுகளில் எழுதி தங்களது வாக்குகளை அளிப்பார்கள்.

    இந்த நடைமுறைகளுக்கு பின்னர் சிஸ்டைன் தேவா லயத்தில் அண்மையில் பொருத்தப்பட்ட புகை போக்கியில் கருப்பு நிற புகை வெளியிடப்பட்டால் போப் தேர்வு செய்யப்படவில்லை என்பதை குறிக்கும்.

    வெள்ளை நிற புகை வந்தால் புதிய போப் தேர்வு செய்யப்பட்டதை குறிக்கும். போப் தேர்வு செய்ய கர்டினல்கள் வாக்கு செலுத்திய சீட்டுகள் உடனடியாக எரிக்கப்படும்.

    புதிய போப் தேர்வு போட்டியில் இத்தாலியை சேர்ந்த பியட்ரோ பரோலின்(வயது 70), ஹங்கேரியை சேர்ந்த பீட்டர் எர்டோ (72), பிலிப்பைன்ஸை சேர்ந்த லூயிஸ் அன்டோனியோ டாக்லே (67), உள்பட 8 பேர் உள்ளனர்.

    போப் தேர்தலில் இந்தியாவைச் சேர்ந்த பிலிப் நேரி பெராவ், பசேலியோஸ் கிளீமிஸ், அந்தோணி பூலா, ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காட் ஆகிய 4 கார்டினல்கள் வாக்களிக்க உள்ளனர்.

    • போப் பிரான்சிசின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
    • நான் அடுத்த போப்பாக இருக்க விரும்புகிறேன் என்று கிண்டலாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.

    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21-ந் தேதி வாடிகனில் மரணம் அடைந்தார்.

    வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    இந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசினார். அப்போது அடுத்த போப் ஆக யாரை வரவேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு, நானே அடுத்த போப்பாக இருக்க விரும்புகிறேன். அதுவே என்னுடைய முதல் தேர்வாக இருக்கும் என்று கிண்டலாக டிரம்ப் தெரிவித்தார்.

    இந்நிலையில், போப் தோற்றத்தில் டிரம்ப் இருக்கும் இருக்கும் AI புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

    • அடுத்து வரும் பத்து தலைமுறை உக்ரேனியர்களை பொருளாதார ரீதியாக பாதிக்கும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மாட்டேன் என ஜெலன்ஸ்கி மறுத்தார்.
    • அமெரிக்கா அதிக வரிவிதித்ததால் அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதியை சீனா நிறுத்தியது.

    அமெரிக்காவும் உக்ரைனும் ஒரு பெரிய கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. உக்ரைனின் அரியவகைக் கனிம வளங்களை வெட்டியெடுக்கும் உரிமை தங்களுக்கு காலவரையில்லாமல் வழங்கப்பட வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தி வந்தார்.

    இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசெட் மற்றும் உக்ரைன் துணைப் பிரதமர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    இந்த ஒப்பந்தம் அமெரிக்கா உக்ரைனின் மதிப்புமிக்க அரிய பூமி தாதுக்களான டைட்டானியம், யுரேனியம் மற்றும் லித்தியம் ஆகியவற்றை பெற அனுமதிக்கும்.

    உக்ரைன் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளைத் தொடர விரும்பினால், ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு உக்ரைனை அமெரிக்கா நிர்பந்தித்து வந்தது.

    உக்ரைன் தொடர்ந்து அமெரிக்க இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளைப் பெறுவதற்கு இந்த ஒப்பந்தம் மிகவும் முக்கியமானது.

    கடந்த பிப்ரவரியில் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் உக்ரைன் பிரதமர் ஜெலென்ஸ்கி இடையே நடந்த சந்திப்பின் போது வாக்குவாதம் வெடித்தது.

    அடுத்து வரும் பத்து தலைமுறை உக்ரேனியர்களை பொருளாதார ரீதியாக பாதிக்கும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மாட்டேன் என ஜெலன்ஸ்கி மறுத்தார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைய வழிவகுத்தது.

    அதுமுதல் ரஷியாவுக்கு ஆதரவாக டிரம்ப் பேசி வந்தார். ஆனால் கடந்த வாரம் வாடிகனில் போப் ஆண்டவர் இறுதிச் சடங்கில் வைத்து டிரம்ப், ஜெலன்ஸ்கி பேசிக்கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து கடந்த வாரம் உக்ரைனில் நடந்த ஏவுகணைத் தாக்குதல்களைக் கண்டித்த டிரம்ப், ரஷிய அதிபர் புதினை விமர்சித்தார்.

    இந்நிலையில் அமெரிக்கா - உக்ரைன் இடையே கனிம ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அமெரிக்கா அதிக வரிவிதித்ததால் அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதியை சீனா நிறுத்தியது. இதனால் உக்ரைனுடனான கனிம ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.  

    • மறைந்த போப் ஆண்டவருக்கு இதயப்பூர்வ அஞ்சலி செலுத்துகிறேன்.
    • போப் பிரான்சிஸ் அனைவராலும் போற்றி மதிக்கத்தக்க மாமனிதராக திகழ்ந்தவர்.

    சென்னை லயோலா கல்லூரியில் மறைந்த போப் பிரான்சிஸ் அவர்களின் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்வில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போப் பிரான்சிஸ் அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்னர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

    மறைந்த போப் ஆண்டவருக்கு இதயப்பூர்வ அஞ்சலி செலுத்துகிறேன்.

    போப் பிரான்சிஸ். அனைவராலும் போற்றி மதிக்கத்தக்க மாமனிதராக திகழ்ந்தவர்.

    கிறிஸ்தவ மதத் தலைவராக இருந்தாலும், அனைவராலும் போற்றப்பட்டவர், எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர்.

    இரு மதங்களுக்கு இடையேயான மோதல்களை நிறுத்தியவர் போப் பிரான்ஸிஸ்.

    மதங்களை கடந்த தன்மை அனைத்து மதங்களையும் ஒன்றாக கருதும் தன்மை கொண்டவர்.

    அணு ஆயுதங்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர். முற்போக்கு சிந்தனைகளுடன் வாழ்ந்தவர்.

    அன்பு தான் மதங்களின் அடையாளமாக மாற வேண்டும் என்று விரும்பியவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலகம் முழுவதும் 252 கர்தினால்கள் உள்ளனர்.
    • போப்பை தேர்வு செய்வதற்கான வாக்களிக்கும் தகுதி படைத்த 80 வயதுக்கு உட்பட்டவர்கள் 135 பேர் ஆவர்.

    கத்தோலிக்க திருச்சபை தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் (வயது 88) உடல் நலக்குறைவால் கடந்த 21-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் 26-ந் தேதி ரோமில் அடக்கம் செய்யப்பட்டது.

    போப் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து புதிய போப் யார்? என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் எழுந்துள்ளது. இதற்கு விடை காணும் முயற்சியில் வாடிகன் இறங்கி இருக்கிறது.

    அதன்படி கார்டினல் எனப்படும் கர்தினால்கள் கூட்டம் இது குறித்து ஆலோசனை நடத்தினர். அதன்படி புதிய போப்பை தேர்வு செய்வதற்கான கர்தினால்களின் கான்கிளேவை (மாநாடு) அடுத்த மாதம் (மே) 7-ந் தேதி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    உலகம் முழுவதும் 252 கார்டினல்கள் உள்ள நிலையில், போப்பை தேர்வு செய்வதற்கான வாக்களிக்கும் தகுதி படைத்த 80 வயதுக்கு உட்பட்டவர்கள் 135 பேர் ஆவர். அவர்கள் தங்களுக்குள்ளே இருந்து ஒருவரை புதிய போப் ஆக தேர்வு செய்வார்கள்.

    இந்த சூழலில் அடுத்த போப் ஆண்டவருக்கான போட்டியில், ஹங்கேரியை சேர்ந்த கார்டினல் பீட்டர் எர்டோ (72), பிலிப்பைன்ஸை சேர்ந்த கார்டினல் லூயிஸ் அன்டோனியோ டாக்லே (67), ஆப்பிரிக்காவின் கானாவை சேர்ந்த கார்டினல் பீட்டர் டர்க்சன்(76), இத்தாலியைச் சேர்ந்த கார்டினல் பியட்ரோ பரோலின்(70) ஆகியோர் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இவர்களில் கார்டினல் பியட்ரோ பரோலின் அடுத்த போப் ஆக அதிக வாய்ப்பு இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. பியட்ரோ பரோலினுக்கு 41 சதவீத ஆதரவு இருப்பதாகவும், அடுத்ததாக லூயிஸ் அன்டோனியோ டாக்லே-க்கு 29 சதவீத ஆதாரவும் இருப்பதாக கணிப்புகள் வெளியாகி உள்ளன.

    • போப் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து புதிய போப் யார்? என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் எழுந்துள்ளது.
    • கார்டினல் எனப்படும் கர்தினால்கள் நேற்று கூடி இது குறித்து ஆலோசனை நடத்தினர்.

    வாடிகன் சிட்டி:

    கத்தோலிக்க திருச்சபை தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் (வயது 88) உடல் நலக்குறைவால் கடந்த 21-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் 26-ந் தேதி ரோமில் அடக்கம் செய்யப்பட்டது.

    போப் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து புதிய போப் யார்? என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் எழுந்துள்ளது. இதற்கு விடை காணும் முயற்சியில் வாடிகன் இறங்கி இருக்கிறது.

    அதன்படி கார்டினல் எனப்படும் கர்தினால்கள் நேற்று கூடி இது குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது புதிய போப்பை தேர்வு செய்வதற்கான கர்தினால்களின் கான்கிளேவை (மாநாடு) அடுத்த மாதம் (மே) 7-ந் தேதி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    உலகம் முழுவதும் 252 கர்தினால்கள் உள்ள நிலையில், போப்பை தேர்வு செய்வதற்கான வாக்களிக்கும் தகுதி படைத்த 80 வயதுக்கு உட்பட்டவர்கள் 135 பேர் ஆவர். அவர்கள் தங்களுக்குள்ளே இருந்து ஒருவரை புதிய போப் ஆக தேர்வு செய்வார்கள்.

    • சுமார் 250,000 பேர் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.
    • 50 நாடுகளின் தலைவர்கள் உள்பட 150 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    மறைந்த போப் பிரான்சிஸ் உடல் அவரது விருப்பப்படியே வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி பசிலிக்காவில் அடக்கம் செய்யப்பட்டது.

    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் 266வது தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21-ந் தேதி வாடிகனில் மரணம் அடைந்தார்.

    அவரது உடல் கடந்த 23-ந் தேதி முதல் வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். நேற்று முன்தினம் மாலை வரை 90 ஆயிரத்துக்கு அதிகமானோர் போப் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    3-வது நாளாக நேற்றும் போப் பிரான்சிஸ் உடலுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல மணி நேரம் அஞ்சலி செலுத்தினர். இதனால் புனித பீட்டர் சதுக்கம் நிரம்பி வழிந்தது.  

    பின்னர் மாலையுடன் பொதுமக்கள் அஞ்சலி நிகழ்ச்சி நிறைவடைந்தது. பின்னர் போப் பிரான்சிஸ் உடல் வைக்கப்பட்ட பெட்டி மூடி சீல் வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கு வாடிகன் நகரில் தொடங்கியது. அவரது உடலுக்கு பாரம்பரிய முறைப்படி இறுதிச்சடங்கு நடைபெற்றது.

    செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஏராளமான மக்கள் கூடி உள்ளனர். உலகம் முழுவதிலும் இருந்து கிறிஸ்துவ பேராயர்கள் பங்கேற்றனர்.

    பின்னர் வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. அவரது விருப்பப்படியே அவருக்கு மிகவும் பிடித்தமான புனித மேரி பசிலிக்காவில் அடக்கம் செய்யப்பட்டது.

    போப் பிரான்சிஸ் உடல் புனித பீட்டர் பேராலயத்தில் இறுதிச்சடங்குகளை முடித்து புனித மேரி பசிலிக்காவுக்கு கொண்டு வந்ததும், ஏழைகள் மற்றும் கைவிடப்பட்டோரை கொண்ட ஒரு குழுவினர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்

    போப் பிரான்சிஸ், தனது பதவிக்காலம் முழுவதும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டதை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக வாடிகன் தெரிவித்தது. சுமார் 250,000 பேர் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்றனர். 50 நாடுகளின் தலைவர்கள் உள்பட 150 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது மனைவி மெலனியா, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் கெயிர் ஸ்டார்மர், இளவரசர் வில்லியம், பிரேசில் அதிபர் லூலா டா சில்வா என பல நாடுளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்றனர். 

    • கடந்த நாட்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்ட அவரின் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு நடத்தப்படுகிறது.
    • வெள்ளை மாளிகை மற்றும் ஜெலென்ஸ்கியின் அலுவலகம் உறுதிப்படுத்தின.

    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21-ந் தேதி வாடிகனில் மரணம் அடைந்தார். கடந்த நாட்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்ட அவரின் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு நடத்தப்படுகிறது.

    வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.

    இந்நிலையில் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள மனைவி மெலினா டிரம்புடன் அமரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஒருவரையொருவர் சந்தித்துக்கொண்டனர்.

    போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கிற்கு முன்பு அதிபர் டொனால்ட் டிரம்ப் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சிறிது நேரம் சந்தித்தார் என்பதை வெள்ளை மாளிகை மற்றும் ஜெலென்ஸ்கியின் அலுவலகம் உறுதிப்படுத்தின.

    வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குனர் ஸ்டீவன் சியுங், அவர்கள் "இன்று தனிப்பட்ட முறையில் சந்தித்து மிகவும் பயனுள்ள விவாதம் நடத்தினர்" என்றும் மேலும் விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் கூறினார்.

    உக்ரைன் - ரஷியா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பில் டொனால்டு டிரம்ப் - ஜெலன்ஸ்கி இடையே கருத்து வேறுபாடு மற்றும் வாக்குவாதம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.  

    • செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஏராளமான மக்கள் கூடி உள்ளனர்.
    • போப் பிரான்சிஸ் விருப்பப்படியே அவருக்கு மிகவும் பிடித்தமான புனித மேரி பசிலிக்காவில் அடக்கம் செய்யப்படுகிறது.

    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21-ந் தேதி வாடிகனில் மரணம் அடைந்தார்.

    அவரது உடல் கடந்த 23-ந் தேதி முதல் வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். நேற்று முன்தினம் மாலை வரை 90 ஆயிரத்துக்கு அதிகமானோர் போப் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    3-வது நாளாக நேற்றும் போப் பிரான்சிஸ் உடலுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல மணி நேரம் அஞ்சலி செலுத்தினர். இதனால் புனித பீட்டர் சதுக்கம் நிரம்பி வழிந்தது.

    பின்னர் மாலையுடன் பொதுமக்கள் அஞ்சலி நிகழ்ச்சி நிறைவடைந்தது. பின்னர் போப் பிரான்சிஸ் உடல் வைக்கப்பட்ட பெட்டி மூடி சீல் வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கு வாடிகன் நகரில் தொடங்கியது. அவரது உடலுக்கு பாரம்பரிய முறைப்படி இறுதிச்சடங்கு நடைபெற்றது.

    செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஏராளமான மக்கள் கூடி உள்ளனர். உலகம் முழுவதிலும் இருந்து கிறிஸ்துவ பேராயர்கள் பங்கேற்றனர்.

    பின்னர் வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. அவரது விருப்பப்படியே அவருக்கு மிகவும் பிடித்தமான புனித மேரி பசிலிக்காவில் அடக்கம் செய்யப்படுகிறது.

    போப் பிரான்சிஸ் உடல் புனித பீட்டர் பேராலயத்தில் இறுதிச்சடங்குகளை முடித்து புனித மேரி பசிலிக்காவுக்கு கொண்டு வந்ததும், ஏழைகள் மற்றும் கைவிடப்பட்டோரை கொண்ட ஒரு குழுவினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    போப் பிரான்சிஸ், தனது பதவிக்காலம் முழுவதும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டதை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருப்பதாக வாடிகன் கூறியுள்ளது.

    போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அந்தவகையில் 50 நாடுகளின் தலைவர்கள் உள்பட 150 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது மனைவி மெலனியா, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் கெயிர் ஸ்டார்மர், இளவரசர் வில்லியம், பிரேசில் அதிபர் லூலா டா சில்வா என பல நாடுளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்றுள்ளார்.

    • ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
    • வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் போப் பிரான்சிஸ் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21-ந் தேதி வாடிகனில் மரணம் அடைந்தார். அவரது உடல் கடந்த 23-ந் தேதி முதல் வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

    இன்று போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதிச்சடங்கு நடக்கிறது. இதற்காக சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

    பின்னர் வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. அவரது விருப்பப்படியே அவருக்கு மிகவும் பிடித்தமான புனித மேரி பசிலிக்காவில் அடக்கம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் போப் பிரான்சிஸூக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் விதமாக மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள 48 கிராம மீனவர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம், சின்னமுட்டம் துறைமுகங்களில் 8,000 பைபர் படகுகள், 1,800 விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

    • கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் கடந்த 21-ம் தேதி உயிரிழந்தார்.
    • ஜனாதிபதி திரவுபதி முர்மு வாடிகனில் போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    வாடிகன் சிட்டி:

    கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் (88), கடந்த 21-ம் தேதி காலை 7.35 மணிக்கு உயிரிழந்தார். கல்லீரல் அழற்சி நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், பக்கவாதம் மற்றும் மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது.

    போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு இன்று காலை 10:00 மணிக்கு நடைபெறுகிறது. வாடிகனில் திரண்டுள்ள மத குருக்கள், பொதுமக்கள் போப் ஆண்டவருக்கு இறுதி விடை கொடுக்கத் தயாராகி வருகிறார்கள்.

    போப் பிரான்சிஸ் இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவியுடன் பங்கேற்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

    இதற்கிடையே, ஜனாதிபதி திரவுபதி முர்மு வாடிகன் சிட்டி சென்று போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜுவும் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    இந்நிலையில், கடந்த 3 நாட்களில் போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தியவர்களின் எண்ணிக்கை இரண்டரை லட்சத்தைக் கடந்துள்ளது என வாடிகன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×