search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாஸ்க்"

    • லிஃப்ட் மற்றும் டாடா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.
    • வெற்றிமாறன் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான விக்ரனன் அசோக் இயக்கத்தில் மாஸ்க் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் பட்டியலில் முதன்மை இடத்தில் இருக்கிறார் நடிகர் கவின். அவர் நடிப்பில் வெளிவந்த லிஃப்ட் மற்றும் டாடா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

    இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த பியார் பிரேமா காதல் திரைப்படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் 'ஸ்டார்' திரைப்படத்தில் நடித்தார். ஸ்டார் திரைப்படம் கடந்த மாதம் மே 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. படம் இதுவரை 25 கோடி ரூபாய் வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    ஸ்டார் திரைப்படத்தை தொடர்ந்து கவின் நடன இயக்குனரான சதிஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கிஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து நெல்சன் திலிப்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கத்தில் ப்ளடி பெக்கர் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

     

    தற்பொழுது வெற்றிமாறன் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான விக்ரனன் அசோக் இயக்கத்தில் மாஸ்க் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார். நடிகை ஆண்டிரியா நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். தெலுங்கு நடிகையான ருஹானி ஷர்மா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • எஸ்.பி. சொக்கலிங்கம்  தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.
    • இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

    'காக்கா முட்டை' ,'விசாரணை', 'கொடி' ,'வட சென்னை' உட்பட பல வெற்றி படங்கள்ளை தயாரித்த கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பனி பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் உடன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் "மாஸ்க்". இந்த படத்தின் மூலம் நிர்வாக தயாரிப்பாளர் எஸ்.பி. சொக்கலிங்கம்  தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

    இத்திரைப்படத்தை விகர்ணன் அசோக்  இயக்குகிறார். இவர் 'தருமி' என்ற குறும்படத்திற்காக தனியார் நிறுவனம் வழங்கிய சிறந்த குறும்படத்திற்கான கோல்ட் மெடல் விருதை பெற்றுள்ளார்.

    இத்திரைப்படத்தின் கவின் கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் ஆண்ட்ரியா, சார்லி, ருஹானி ஷர்மா, பாலா சரவணன், வி.ஜே. அர்ச்சனா, சந்தோஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

    இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார், ராமர் படத்தொகுப்பு கவனிக்கிறார், கலை இயக்குனராக ஜாக்கியும் ,ஆடை வடிவமைப்பாளர்களக பூர்த்தி மற்றும் விபின் ஆகியோரும் பணியாற்றுகின்றனர். மாஸ்க் திரைப்படம் பூஜையுடன் துவங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாத இறுதியில் சென்னையில் துவங்குகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
    • பொது இடங்களில் அனைவரும் மாஸ்க் அணியவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சண்டிகர்:

    இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இன்று புதிதாக 640 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,997 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் அதிகபட்சமாக 265 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஒருவர் உயிரிழந்துள்ளார். 

    இதற்கிடையே, அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கேரளா உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி உள்ளன.

    இந்நிலையில், பொது இடங்களில் இனி அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என சண்டிகர் நிர்வாகம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

    • சுவாசக் குழாய் மூலமாகத்தான் இந்த வைரஸ் உடலுக்குள் செல்கிறது.
    • ஒருவர் இருமும் போதும், தும்மும் போதும் மற்றவருக்கு பரவுகிறது.

    கோவை:

    கோவையில் ஃபுளூ வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதன் காரணமாக உள்நோயாளியாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    கோவை மாவட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சராசரியாக காய்ச்சல் பாதிப்புக்காக ஒரு நாளைக்கு உள்நோயாளியாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையானது 100-ஐ கடந்துள்ளது.

    காலநிலை மாற்றம், பண்டிகை காலத்தை முன்னிட்டு கூட்ட நெரிசல் அதிகம் உள்ள இடங்களுக்கு மக்கள் சென்று வந்தது ஆகியவை ஃபுளூ வைரஸ் பரவ காரணங்கள் ஆகும். குழந்தைகள், முதியவர்களுக்கு விரைவாக இந்த வைரஸ் பரவுகிறது.

    சுவாசக் குழாய் மூலமாகத்தான் இந்த வைரஸ் உடலுக்குள் செல்கிறது. ஒருவர் இருமும் போதும், தும்மும் போதும் மற்றவருக்கு பரவுகிறது.

    பொதுமக்கள் மருந்து கடைகளில் சுயமாக மருந்து வாங்கி உட்கொள்ளக் கூடாது. மருத்துவரின் ஆலோசனை பெற்றே மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

    இந்நிலையில், ஃபுளூ காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக கோவையில் வெளியில் செல்லும்போது முக கவசம் அணிந்துகொள்ள வேண்டும். முடிந்தவரை கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • முகத்துக்கு டீடாக்ஸ் மிக மிக முக்கியம்.
    • அழுக்குகளைப் போக்கி சருமத்தை புத்துணர்ச்சியாக்கும்.

    டீடாக்ஸ் என்பது சமீபத்தில் அதிகமாக காதில் கேட்கிற வார்த்தையாக இருக்கலாம். டீடாக்ஸ் என்பது தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி சுத்தப்படுத்துதல் என்று பொருள். உடல் டீடாக்ஸை போலவே முகத்தை டீடாக்ஸ் செய்யும் சில வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்.

    முகத்துக்கு டீடாக்ஸ் மிக மிக முக்கியம். இது சருமத்தில் உள்ள இறந்த செல்கள், கழிவுகள், அழுக்குகளைப் போக்கி சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். இதன் மூலம் சருமத்துக்குள் இருக்கும் அழுக்குகள், அதிகப்படியான எண்ணெய் சுரப்பு ஆகியவற்றைக் குறைத்து ஆரோக்கியமான சருமத்தை கொடுக்கும்.

    சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்க முகத்தை நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டியது மிக அவசியம். முகத்தை சோப்பு போட்டு முகத்தைக் கழுவுவோம். அது சருமத்தின் மேல்புறத்தில் இருக்கிற அழுக்குகள் மட்டும் தான் வெளியேறும். அதனால் டபுள் க்ளன்சிங் முறையை பின்பற்றுவது மிக முக்கியம். அதாவது இரண்டு முறை முகத்தை கழுவ வேண்டும்.

    இப்படி இரண்டு முறை க்ளன்சிங் செய்யும்போது சருமத் துளைகளுக்குள் உள்ளே சென்றிருக்கிற மேக்கப் பொருள்கள், சன்ஸ்க்ரீன் உள்ளிட்ட லோஷன்கள், அதிகப்படியான சீபம் சுரப்பு ஆகியவற்றை நீக்கும்.

    சருமத்தை க்ளன்சிங் செய்து விட்டால் மட்டும் போதுமா என்றால் போதாது. அதன்பிறகு சருமத்தில் தினமும் தேங்குகிற இறந்த செல்களை நீக்கி சருமத்தில் புதிய செல்கள் உற்பத்தியை அதிகரிக்கவும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் எக்ஸ்ஃபோலியேட் செய்வது முக்கியம். இதற்கு நல்ல ஸ்கிரப் ஒன்றை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி மென்மையாக சருமத்தை ஸ்கிரப் செய்து கழுவுங்கள். வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை இதை செய்தால் போதுமானது.

    க்ளே மாஸ்க்கை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்துங்கள். இப்படி செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் மாசுக்கள் முழுமையாக வெளியேறும். கடைகளில் முகத்துக்குப் பயன்படுத்துகிற க்ளே மாஸ்க்குகள் கிடைக்கும். அதை வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது அதற்கு பதிலாக முல்தானி மட்டியும் பயன்படுத்தலாம்.

    சருமத்தை டீடாக்ஸ் செய்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் அதற்கு சருமம் நீர்ச்சத்துடன் இருக்க வேண்டியது மிக அவசியம். அதனால் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். அப்படி குடிக்கும்போது உடல் மற்றும் சருமத்திலுள்ள கழிவுகளை வெளியேற்றும்.

    முகத்தை மசாஜ் செய்ய வேண்டியது மிக மிக அவசியம். இது ஆயில் மசாஜாகவும் இருக்கலாம். அல்லது க்ரீம் அல்லது வீட்டு வைத்தியங்களின் மூலம் மசாஜ் செய்யலாம். தயிர், மஞ்சள் கலந்து முகத்துக்கு மசாஜ் செய்தால் முகம் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். அதேபோல பேஷியல் ஆயில் பயன்படுத்தியும் மசாஜ் செய்யலாம்.

    கிரீன் டீயில் ஏராளமான ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் அதிக அளவில் இருக்கின்றன. இந்த கிரீன் டீயை சருமத்துக்கு அப்ளை செய்வதன் மூலம் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதோடு சருமத்தை டீடாக்ஸ் செய்து பளிச்சென்று மாற்றும்.

    கிரீன் டீயை நன்கு நீரில் கொதிக்க வைத்து அதை வடிகட்டி ஒரு ஸ்பிரே பாட்டிலில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதை முகத்தில் ஸ்பிரே செய்து விட்டு முகத்தை மென்மையாகத் தேய்த்து மசாஜ் செய்து கழுவுங்கள். இப்படி செய்வதன் மூலம் சுற்றுச்சூழுல் மாசுக்களால் ஏற்படும் சருமப் பிரச்சினைகள் மற்றும் அழுக்குகளை சுத்தம் செய்ய முடியும்.

    சருமத்தில் அழகை பாதுகாக்க வீட்டிலேயே முகத்திற்கு இயற்கை முறையில் மாஸ்க் போடுவது எப்படி என்று பார்க்கலாம்.
    * பார்லரில் செய்பவர்கள் முகத்தை கிளென்சிங் மில்கையும், வீட்டில் செய்பவர்கள் தேங்காய் எண்ணெய் அல்லது காய்ச்சாத பாலையும் பஞ்சில் தொட்டு முகத்தை துடைத்து சுத்தம் செய்யவும். கண் அடியில், வாய்பகுதியைச் சுற்றி மாஸ்க் போடுவதை தவிர்க்கவும். மாஸ்க் போட்டவர்கள் ஒரே நிலையில் இருக்க வேண்டும். ஆடவோ, அசையவோ கூடாது. அப்படிச் செய்தால் முகம் விர்ரென்று பிடித்து சருமம் பாதிக்கப்படும்.

    * மற்றவர்களுடன் பேசக்கூடாது.

    * மாஸ்க்கை துடைக்கும்போது வெதுவெதுப்பான நீரிலோ அல்லது ஒரு காட்டன் துணியில் ஐஸ் க்யூப் வைத்தோ துடைக்கவேண்டும்.

    வீட்டிலேயே செய்யும் ஃபேஸ்மாஸ்க்

    பிரட் மாஸ்க் : ஒரு பிரட் ஸ்லைஸ் எடுத்துக் கொண்டு 2 டீஸ்பூன் பால், 1 டீஸ்புன் தேன் கலந்து அரை மணிநேரம் ஊற வைத்து முகம் முழுவதும் தடவவும். பதினைந்து நிமிடம் கழித்து முகத்தில் ஊறிய பிரட்டை மசாஜ் பண்ணி தேய்த்து எடுக்கவும். இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்திற்கு நல்ல நிறத்தையும் பொலிவையும் கொடுக்கும்.

    பாதாம் மாஸ்க் : மிகவும் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு பாதாம் மாஸ்க் மிகவும் நல்லது. எட்டு பாதாம் பருப்புகளை வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும். மறுநாள் அரைத்து ஒரு டீஸ்பூனும் பாலோடு கலந்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளபளப்பாகும். கரும்புள்ளிகள் மறையும். இந்த மாஸ்க்கை வாரம் இருமுறை செய்து வந்தால் நல்ல பலனை தரும். 
    ×