என் மலர்
நீங்கள் தேடியது "புல்வாமா தாக்குதல்"
- என்.சி.சி.மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி தாக்குதல் நடந்தது
நாகர்கோவில்:
ஜம்மு காஷ்மீரின் தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் லெத்போராவில் கடந்த 2019-ம்ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.
இதில் சி.ஆர்.பி.எப்.வீரர்கள் 40 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனாலேயே ஆண்டுதோறும் பிப்ரவரி 14-ந்தேதி இந்தியாவின் கருப்பு தின மாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலை யில் பிப்ரவரி 14-ந்தேதி யான இன்று நாடு முழுவதும் சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இதேபோல் குமரி மாவட்ட ராணுவ வீரர்களின் அமைப்பான ஜவான்ஸ் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சி.ஆர்.பி.எப். வீரர்களின் உருவப்படம் அச்சிடப்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை மற்றும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
அந்த வகையில் கன்னியாகுமரி, மாதவபுரம், குளச்சல், திங்கள்சந்தை, திக்கணங்கோடு, தக்கலை மற்றும் நாகர்கோவில் உள்பட பல இடங்களில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சுமார் 150 ராணுவ வீரர்கள் பங்கேற்று பலியான சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தினர்.இதில் என்.சி.சி.மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து வடசேரியில் இருந்து புத்தேரி வரை சாலையின் இருபுறமும் மரக்கன்றுகளை ராணுவ வீரர்கள் நட்டு வைத்தனர்.
- விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கேட்டால் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது
- 144 தடை உத்தரவை அமல்படுத்துவது, இணையச் சேவைகளை தடை செய்வது, இதுதான் உங்களின் ஜனநாயகமா?
விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு, X கணக்குகள் முடக்கம், இதுதான் ஜனநாயகமா: ராகுல்காந்தி ட்வீட்
மோடி அவர்களே..! நீங்கள் ஜனநாயகத்தை கொலை செய்கிறீர்கள் என மக்களுக்கு தெரியும். அவர்கள் அதற்கு பதில் அளிப்பார்கள் என ராகுல்காந்தி தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கேட்டால் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது. இளைஞர்கள் வேலைவாய்ப்பு கேட்டால், அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பது கிடையாது. முன்னாள் ஆளுநர் உண்மையை கூறினால், அவரின் வீட்டிற்கு சி.பி.ஐயை அனுப்புவது. எதிர்க்கட்சியினரின் வங்கிக்கணக்கை முடக்குவது. 144 தடை உத்தரவை அமல்படுத்துவது, இணையச் சேவைகளை தடை செய்வது, இதுதான் உங்களின் ஜனநாயகமா?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு தொடர்புடைய 30 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. சி.ஆர்.பி.எப் வீரர்கள் செல்ல விமானம் கொடுத்திருந்தால் புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நடந்திருக்காது என தான் கூறியதற்கு வாயை மூடி அமைதியாக இருக்குமாறு மோடி சொன்னதாக மாலிக் பேட்டியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14-ந்தேதி பாதுகாப்புபடை வீரர்கள் வாகனங்களில் சென்றபோது பயங்கரவாதி ஒருவன் தற்கொலை படை தாக்குதல் நடத்தினான்.

இதற்கிடையே இன்று மோடி பிரதமராக பதவி ஏற்கும் விழாவில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் கலந்து கொள்கிறார்கள். மேற்குவங்காள மாநிலம் நாடியாவை சேர்ந்த ராணுவ வீரர் சுதீப் புல்வாமா தாக்குதலில் மரணம் அடைந்தார். அவருக்கு பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.
இதையடுத்து சுதீப்பின் தாயார் மம்தா பிஸ்லாஸ், டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். சுதீப்பின் தந்தை உடல்நிலை குறைவால் பங்கேற்கவில்லை. இதே போல புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த மற்றொரு வீரரான மேற்கு வங்காள மாநிலம் ஹவ்ரக்சை சேர்ந்த பப்லூ சாந்த்ராவின் குடும்பத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் பஞ்சாப், இமாச்சலபிரதேச மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் குடும்பத்தினர் தங்களுக்கு மோடி பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு வரவில்லை என்றும் அழைப்பு வந்தால் மகிழ்ச்சியுடன் பங்கேற்போம் என்றும் தெரிவித்தார்.
மோடி பிரதமராக பதவி ஏற்கும் விழாவில் கலந்துகொள்ள மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முதலில் மோடி விழாவில் பங்கேற்க இருப்பதாக மம்தாபானர்ஜி அறிவித்து இருந்தார். ஆனால் திடீரென தனது முடிவை மாற்றிக் கொண்டார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா தொண்டர்கள் 56 பேர் அரசியல் படுகொலை செய்யப்பட்டதாக பா.ஜனதாவினர் குற்றம் சாட்டி வருகிறார்கள். இங்கு அரசியல் கொலைகள் எதுவும் நடைபெறவில்லை. எனவே இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் என்னை உங்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் தடுத்து விட்டது’ என்றார்.
இதற்கிடையே தான் மேற்குவங்காள மாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பா.ஜனதா தரப்பில் கூறும் போது, ‘உயிரிழந்த ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பெருமை அளிக்கும் வகையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வீரர்களின் உயிர் தியாகத்தை மோடி அரசு எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதை காட்டுகிறது. மேலும் மோடி பதவி ஏற்பு விழாவுக்கு அரசியல் சாயம் பூச முயலும் மம்தா பானர்ஜிக்கு பதிலடியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-2-2019 அன்று மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் சென்ற வாகன வரிசையின் மீது தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய கார் குண்டு தாக்குதலில் 44 வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த வீரர்களில் ஒருவரான இக்பால் சிங் என்பவர் ஸ்ரீநகரில் உள்ள நவகடால் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, தனது வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை பிற்பகல் வேளையில் சாப்பிட தொடங்கினார்.
அப்போது எதிரே உள்ள ஒரு கடை வாசலில் அமர்ந்திருக்கும் சிறுவன் அவரைப் பார்த்து தனக்கும் பசிக்கிறது என்று சைகை காட்டவே மனமிரங்கிய இக்பால் சிங், சிறுவனை நோக்கிச் சென்றார்.

இதை கண்ட காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி உள்ளிட்ட பலர் இக்பால் சிங்கின் மனிதநேயத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர்.
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 26-ந் தேதி பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பயங்கரவாத முகாமை இந்திய விமானப்படை விமானங்கள் தாக்கி அழித்தன.
இந்த சம்பவத்துக்கு பிறகு, பாகிஸ்தான் தனது வான்வழி பாதையை முற்றிலுமாக மூடிவிட்டது. பின்னர், மார்ச் 27-ந் தேதி, மீண்டும் திறந்தது. ஆனால், டெல்லி, தாய்லாந்து தலைநகர் பாங்காக், மலேசியா தலைநகர் கோலாலம்பூர் ஆகிய நகரங்களில் இருந்து வரும் மற்றும் செல்லும் விமானங்களுக்கு மட்டும் வான்வழி பாதையை பயன்படுத்த தடை விதித்தது.
இந்த தடை காரணமாக, பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த விமானங்கள், கோலாலம்பூருக்கு 4 விமானங்களும் பாங்காக், டெல்லி ஆகியவற்றுக்கு தலா 2 விமானங்களும் தினந்தோறும் இயக்கப்பட்டு வந்தன. இவை லாபகரமான வழித்தடம் என்பதால், இவற்றை நிறுத்தியதால், பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்வழி பாதையை மீண்டும் திறந்து விடுவது குறித்து 15-ந் தேதி முடிவு செய்யப்படும் என்று பாகிஸ்தான் சிவில் விமான போக்குவரத்து ஆணைய செய்தித்தொடர்பாளர் முஜ்தாபா பைக் தெரிவித்தார்.

ஆனால், பிரதமர் இம்ரான் கானுக்கு நெருக்கமானவரும், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரியுமான பவத் சவுத்ரி, ‘‘இந்தியாவில் தேர்தல் முடிந்து, புதிய அரசு பதவி ஏற்கும் வரை இருநாட்டு உறவில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. ஆகவே, தேர்தல் முடியும் வரை, வான்வழி பாதை விஷயத்தில் தற்போதைய நிலையே நீடிக்கும்’’ என்றார்.
புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் ராணுவ வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் அருகே பிஜ்பெஹாரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை இந்திய பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
#JKEncounter #MilitantsKilled



காஷ்மீர் மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி, பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றதாக கூறப்பட்ட நிலையில், இந்தியா சில ஆதாரங்களை, பாகிஸ்தான் அரசிற்கு சமர்ப்பித்தது. இந்த கோப்புகளை ஆராய்ந்த பின்னர் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.#PulwamaAttack #PakistanGovernment
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த மாதம் 14-ந்தேதி பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் கார் குண்டு தாக்குதல் நடத்தினார்கள். இதில் 44 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
மனித குண்டாக செயல்பட்டு இந்த தாக்குதலை நடத்தியது அகில்தார் என்ற பயங்கரவாதி என்பது தெரியவந்தது . தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட முதாசிர் கான் என்பவன் தரல் என்ற இடத்தில் பதுங்கி இருந்த போது பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
அதில்தார், முதாசிர்கான் இருவருமே ஸ்மார்ட் போன் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத இயக்க தலைவர்களுடன் தொடர்பில் இருந்தனர்.
அந்த போனுக்கு அவர்கள் அமெரிக்கா விர்ச்சுவல் சிம்கார்டை பயன்படுத்தி உள்ளனர். இதை புலனாய்வுத் துறையினர் கண்டுபிடித்து உள்ளனர். அந்த போனில் இணைய தளம், பேஸ்புக், வாட்ஸ்- அப் சேவைகளையும் பெற்று இருக்கிறார்கள்.

இதேபோல இப்போதும் பயங்கரவாதிகளுக்கு உதவியவர்களையும் கண்டுபிடிக்க புலனாய்வுத் துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். #PulwamaAttack