search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிஎஸ்ஜி"

    சாம்பியன்ஸ் லீக்கில் காலிறுதிக்கு முந்தைய சுற்றின் முதல் லெக்கில் மான்செஸ்டர் யுனைடெட்டை 2-0 என வீழ்த்தியது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன். #PSG
    ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் தற்போது காலிறுதிக்கு முந்தைய சுற்று நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு அணிகளும் தங்களுடைய சொந்த மைதானத்தில் தலா ஒருமுறை மோத வேண்டும். இரண்டு போட்டியில் அதிக கோல் அடிக்கும் அணி காலிறுதிக்கு முன்னேறும்.

    இன்று நடைபெற்ற முதல் லெக் ஒன்றில் மான்செஸ்டர் யுனைடெட் - பி.எஸ்.ஜி. அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நெய்மர், கவானி இல்லாமல் பி.எஸ்.ஜி. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.



    2-வது பாதி நேரத்தில் பி.எஸ்.ஜி. வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 53-வது நிமிடத்தில் அந்த அணியின் ப்ரெஸ்னெல் கிம்பெம்பே முதல் கோல் அடித்தார். 60-வது நிமிடத்தில் கிலியான் மப்பே ஒரு கோல் அடித்தார். இதனால் பி.எஸ்.ஜி. 2-0 என முன்னிலை பெற்றது. இதற்கு மான்செஸ்டர் அணியால் பதில் கோல் அடிக்க இயலவில்லை. ஆகவே பி.எஸ்.ஜி. 2-0 என வெற்றி பெற்றது.
    யூரோ சாம்பியன்ஸ் லீக் தொடரின் நாக்அவுட் சுற்றில் மான்செஸ்டர் யுனைடெட் - பிஎஸ்ஜி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #UCLdraw
    யூரோ சாம்பியன்ஸ் லீக் தொடரின் லீக் ஆட்டத்தின் முடிவில் 1. பார்சிலோனா, 2. ரியல் மாட்ரிட், 3. மான்செஸ்டர் யுனைடெட், 4. மான்செஸ்டர் சிட்டி, 5. அட்லெடிகோ மாட்ரிட், 6. யுவான்டஸ், 7. லிவர்பூல், 8. பிஎஸ்ஜி, 9. ஸ்கால்கே, 10. டோட்டன்ஹாம், 11. புருஸ்சியா டார்ட்மண்ட், 12. லியோன், 13. ரோமா, 14. போர்ட்டோ, 15. அஜாக்ஸ், 16. பேயர்ன் முனிச் ஆகிய 16 அணிகள் காலிறுதிக்கு முந்தைய நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியன.

    நாக்அவுட் சுற்று போட்டிக்கான அட்டவணை குலுக்கல் முறையில் இன்று தேர்வு செய்யப்பட்டது. இதில் ஒரு ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் - பிஎஸ்ஜி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் இரண்டு முறை மோத வேண்டும். இதில் வெற்றி பெறும் அணி காலிறுதிக்கு முன்னேறும். இதனால் நாக்அவுட் சுற்றிலேயே முன்னணி அணி ஒன்று வெளியேறிவிடும்.



    மற்றொரு ஆட்டத்தில் கடந்த முறை 2-வது இடம் பிடித்த லிவர்பூல் பேயர்ன் முனிச் அணியை எதிர்கொள்கிறது. அட்லெடிகோ மாட்ரிட் யுவான்டஸை எதிர்கொள்கிறது. பார்சிலோனா லியோன் அணியையும், ரியல் மாட்ரிட் அஜாக்ஸ் அணியையும் எதிர்கொள்கிறது.

    டோட்டன்ஹாம் - புருஸ்சியா டார்ட்மண்ட், மான்செஸ்டர் சிட்டி - ஸ்கால்கே, ரோமா - போர்ட்டோ அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    முறைகேடு செய்தால் சாம்பியன்ஸ் லீக் தொடரில் இருந்து தூக்கி எறியப்படுவீர்கள் என்று லா லிகா லீக்கின் தலைவர் பிஎஸ்ஜி-க்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். #PSG #Laliga
    கால்பந்து கிளப் அணிகளில் ஸ்பெனில் உள்ள பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் உலகின் தலைசிறந்த அணியாக திகழ்ந்து வருகிறது. அதேபோல் பிரான்ஸில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணி பணக்கார கிளப்பாக திகழ்ந்து வருகிறது.

    பார்சிலோனா அணியில் இடம்பிடித்திருந்த நெய்மரை பிஎஸ்ஜி 222 மில்லியன் யூரோவிற்கு கால்பந்து வரலாற்றில் இதுவரை இல்லாத தொகைக்கு வாங்கியது. அத்துடன் மட்டுமல்லாம் மொனாக்கோ அணியில் விளையாடிய கிலியான் மப்பேவை 180 மில்லியன் யூரோவிற்கு வாங்கியது.



    இது கால்பந்து சங்கங்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நெய்மர் டிரான்ஸ்பரில் பிஎஸ்ஜி விதிமுறையை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளன.

    இதற்கிடையே பிஎஸ்ஜி அணி குறித்த விமர்சனங்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று லா லிகா தலைவர் சேவியர் டெபாஸிடம் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கேட்டுக்கொண்டது. ஆனார், சேவியர் டெபாஸ் அந்த கோரிக்கையை நிராகரித்து ‘‘முறைகேடு செய்தால் நீக்கப்படுவீர்கள்’’ என்ற எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    பாதுகாப்பு வளையத்தை மீறி அழுது கொண்டு மைதானத்திற்குள் ஓடிவந்த சிறுவனை கட்டியணைத்து ஜெர்சியை வழங்கினார் நெய்மர். #Neymar #PSG
    பிரேசில் அணியின் முன்னணி கால்பந்து வீரர் நெய்மர். இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்றிரவு பிஎஸ்ஜி ரேன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. 90 நிமிடத்தில் பிஎஸ்ஜி 3-1 முன்னிலைப் பெற்றிருந்தது.

    அதன்பின் இன்ஜூரி நேரமாக 3 நிமிடங்கள் அதிகமாக கொடுக்கப்பட்டது. அப்போது நெய்மருக்குப் பதிலாக மாற்று வீரர் களம் இறக்கப்பட்டார். இதனால் நெய்மர் மைதானத்தை விட்டு வெளியேறினார். அப்போது திடீரென ஒரு சிறுவன் பாதுகாப்பு அதிகாரிகளை மீறி நெய்மரை நோக்கி அழுதுகொண்டே ஒடிவந்தான்.

    அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அந்த சிறுவனை பிடித்து வெளியேற்ற முயற்சி செய்தனர். இதை கவனித்த நெய்மர், அந்த சிறுவனை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று கூறி தன்னுடன் அணைத்து மைதானத்தை விட்டு வெளியேறினார். அப்போது அந்த சிறுவன் நெய்மரின் ஜெர்சியை பிடித்து ஜெர்சி வேண்டும் என சைகை காட்டினார். உடனே நெய்மர் ஜெர்சியை கழற்றி கொடுத்து அந்த சிறுவனை மகிழ்ச்சிப்படுத்தினார்.
    பார்சிலோனா மிட்பீல்டரான இவான் ராக்கிடிச்சை வாங்க பிரான்ஸ் கிளப் பிஎஸ்ஜி விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Barcelona
    குரோசியா அணியின் மிட்பீல்டர் இவான் ராக்கிடிச். 30 வயதாகும் இவர் 2014 முதல் பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். இவரது ஒப்பந்தம் 2021 வரை இருக்கிறது. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் முன்னணி கிளப் அணியான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் 81 மில்லியன் பவுண்டிற்கு ராக்கிடிச்சை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது.

    பார்சிலோனாவும் இந்த தொகைக்கு கொடுக்க தயராக இருக்கிறது. அதேவேளையில் இவான் ராக்கிடிச்சியின் விருப்பத்தையும் கேட்க இருக்கிறது. மேலும் பவுலினோ, இனியஸ்டோ ஆகியோரை வெளியேற்றியுள்ளது. அவர்களுக்கான மாற்று வீரர்களை ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது. இந்நிலையில் ராக்கிடிச்சை வெளியேற்றினால் மூன்று வெற்றிடம் ஏற்படும் என்பதால் பார்சிலோனா யோசித்து வருகிறது.



    பார்சிலோனா தங்களது வருமானத்தில் 70 சதவிகிதத்திற்கு மேல் சம்பளமாக வழங்கக்கூடாது என்று திட்டமிட்டுள்ளது. இதனால் அதிக அளவில் சம்பளம் பெறும் வீரர்களை விற்க ஆர்வம் காட்டி வருகிறது.
    சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து தொடரில் அர்செனல் 5-1 என பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியை வீழ்ததியது. #Arsenal #PSG
    சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் அர்செனல் - பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிகள் மோதின.

    இதில் அர்செனல் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மெசுட் ஒசில் 13-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அலெக்சாண்டர் 67-வது நிமிடத்திலும், 71-வது நிமிடத்திலும் கோல் அடித்தார்.

    பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு 60-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி கிறிஸ்டோபர் கோல் அடித்தார்.

    அதன்பின் அர்செனல் அணியின் ராப் ஹோல்டிங் 87-வது நிமிடத்திலும், எட்டி 90+4 நிமிடத்தில் கோல் அடிக்க அர்செனல் 5-1 என வெற்றி பெற்றது. யுவான்டஸ் பென்பிகாவையும், செல்சி இன்டர் மிலனையும் பெனால்டி சூட்டில் வீழ்த்தியது.
    நான் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில்தான் இருக்கிறேன் என்று பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் உறுதிபட தெரிவித்துள்ளார். #PSG #Neymar
    பிரேசில் கால்பந்து அணியின் முன்னணி வீரர் நெய்மர். பார்சிலோனாவிற்காக விளையாடி வந்த இவர், கடந்த சீசனில் பிரான்ஸில் உள்ள பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு டிரான்ஸ்பர் ஆனார். இதற்காக பிஎஸ்ஜி அணி 222 மில்லியன் யூரோ பார்சிலோனாவிற்கு கொடுத்தது. இதுதான் கால்பந்து வரலாற்றிலேயே அதிகமான டிரான்ஸ்பர் பீஸ் ஆகும்.

    பிஎஸ்ஜி-க்கு சென்ற நெய்மர் இந்த சீசனில் ரியல் மாட்ரிட் அணிக்கு மாறலாம் என்ற செய்திகள் வந்த வண்ணமே இருக்கிறது. இதற்கு ஏற்றாற்போல் தற்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் இருந்து வெளியேறியுள்ளார்.



    இதனால் நெய்மர் டிரான்ஸ்பர் செய்தி உண்மையாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ‘‘எனக்கு பிஎஸ்ஜி அணியுடன் ஒப்பந்தம் இருக்கிறது. நான் இங்குதான் தங்கியிருக்கிறேன்’’ என்று நெய்மர் கூறியுள்ளார்.

    இதனால் நெய்மர் இந்த சீசனிலும் பிஎஸ்ஜி அணிக்காகத்தான் விளையாட இருக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.
    பிலிப்பே கவுட்டினோவிற்கு 239 மில்லியன் பவுண்டு கொடுக்க தயாராக இருக்கும் பிஎஸ்ஜி விருப்பத்தை ஏற்க மறுத்தது பார்சிலோனா. #Barcelona #PSG
    பிரான்ஸ் நாட்டின் கால்பந்த் கிளப் அணியான பிஎஸ்ஜி மிகப்பெரிய பணக்கார கிளப் அணியாகும். இந்த அணி கடந்த சீசனில் கால்பந்து வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 200 மில்லின் பவுண்டு கொடுத்து பிரேசில் வீரர் நெய்மரை பார்சிலோனாவில் இருந்து வாங்கியது.

    நெய்மர் சென்றதால் லிவர்பூல் அணியில் விளையாடிய மற்றொரு பிரேசில் வீரரான பிலிப்பே கவுட்டினோவை 142 மில்லியன் பவுண்டு கொடுத்து பார்சிலோனா வாங்கியது.

    கவுட்டினோ கடந்த 2-வது பாதி நேரத்தில் 22 போட்டிகளில் 10 கோல் அடித்துள்ளார். 6 கோல் அடிக்க துணைபுரிந்துள்ளார். தற்போது கவுட்டினோவை வாங்க பிஎஸ்ஜி விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்காக 239 மில்லியன் பவுண்டு கொடுக்க தயாராக இருப்பதாக பார்சிலோனாவிற்கு ஆசை தூதுவிட்டது.



    6 மாதத்திலேயே சுமார் 100 மில்லியன் டாலர் வருமானம் கிடைக்கும் என்றாலும், பார்சிலோனா மறுத்துவிட்டது. தற்போது கவுட்டினோவின் டிரான்ஸ்பர் விலை 352 மில்லியன் பவுண்டு எனவும் உயர்த்திவிட்டது.

    ஏற்கனவே பிஎஸ்ஜி அணி வீரர்கள் டிரான்ஸ்பரில் விதிமுறையை மீறியதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனால் இந்த டிரான்ஸ்பர் நடப்பதில் சந்தேகமே.
    நெய்மரை 2480 கோடி ரூபாய் கொடுத்து வாங்க விருப்பம் தெரிவித்ததாக வந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை என ரியல் மாட்ரிட் தெரிவித்துள்ளது. #Neymar
    பிரேசில் கால்பந்து அணியின் முன்னணி வீரராக திகழ்ந்து வருபவர் நெய்மர். இவர் 2017 வரை பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்தார். அவர் ரியல் மாட்ரிட் அணிக்கு மாற விரும்பினார். இதற்கு பல பிரச்சினைகள் இருந்ததால் பிரான்ஸ் நாட்டின் முன்னணி அணியான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு கடந்த சீசன் போது மாறினார். இதற்காக பிஎஸ்ஜி அணி 222 மில்லியன் யூரோ டிரான்ஸ்பர் தொகையாக வழங்கியது. கால்பந்து வரலாற்றில் ஒரு வீரருக்கான அதிகப்படியான டிரான்ஸ்பர் தொகை இதுவாகும்.

    இந்நிலையில் ஓராண்டு முடிந்துள்ள நிலையில், ரியல் மாட்ரிட் அணி நெய்மரை வாங்க விருப்பம் தெரிவிப்பதாக தகவல் வெளியானது. ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரெனால்டோ, பென்சிமா போன்ற வீரர்கள் வெளியேற இருப்பதாக கூறப்பட்ட தகவலே காரணம்.



    நெய்மரை ரியல் மாட்ரிட் வாங்குவது எளிதான காரியம் அல்ல. அவருக்காக சுமார் 310 மில்லியன் யூரோ ரியல் மாட்ரிட் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியானது. நேற்று பிரேசில் அணி வெற்றி பெற்றதும் இந்த செய்தி தீயாக பரவியது. இந்த மதிப்பில் 2480 கோடி ரூபாயாகும். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே யூரோப்பா கால்பந்து அசோசியேசனும் பிஎஸ்ஜிக்கு நெருக்கடி கொடுத்தது.

    இந்நிலையில் நெய்மருக்கு நாங்கள் 2480 கோடி ரூபாய் கொடுக்க விருப்பம் தெரிவித்ததாக வந்த செய்தியில் துளியளவும் உண்மையில்லை என்று ரியல் மாட்ரிட் தெரிவித்துள்ளது.
    ரியல் மாட்ரிட் அணிக்கு டிரான்ஸ்பர் ஆகலாம் என்று எதிர்பார்த்த நிலையில் அடுத்த வருடம் பிஎஸ்ஜிதான் என நெய்மர் சூசகமாக தெரிவித்துள்ளார். #neymar
    பிரேசில் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரர் நெய்மர். இவர் கால்பந்து வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தொகைக்கு பார்சிலோனாவில் இருந்து பிரான்ஸ் கிளப் ஆன பாரிஸ் ஜெயின்ட் ஜெர்மைன் அணிக்கு சென்றார்.

    அந்த அணியில் இருந்து ரியல் மாட்ரிட் அணிக்கு செல்லலாம் என்று யூகம் அடிப்படையில் செய்திகள் வெளியாகின. ரியல் மாட்ரிட் நெய்மரை மிகப்பெரிய தொகைக்கு வாங்க இருக்கிறது என்றும் கூறப்பட்டது. இதற்கான நான்கு வீரர்களை வெளியேற்றவும் அந்த அணி முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.



    தற்போது நெய்மர் காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். பிரேசிலில் இருந்து பிரான்ஸ் சென்றுள்ளதால் உலகக்கோப்பையில் விளையாடுவார் என்று தெரிகிறது.

    இந்நிலையில் பிஎஸ்ஜி அணி அடுத்த சீசனுக்கான புது ஜெர்ஸியை வெளியிட்டுள்ளது. இதை அணிந்து கொண்டு, தனது டுவிட்டர் பக்கத்தில், புதிய ஜெர்ஸியை அணிவதற்கு பெருமையாக இருக்கிறது எனக்குறிப்பிட்டுள்ளார். இதனால் 2018-19 சீசனிலும் பிஎஸ்ஜி அணிக்காகத்தான் விளையாடுவார் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார்.
    நெய்மருக்காக நான்கு முன்னணி வீரர்களை வெளியேற்ற ரியல் மாட்ரிட் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Neymar #RealMadrid
    ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் லா லிகா கால்பந்து லீக்கில் விளையாடும் முன்னணி அணி ரியல் மாட்ரிட். அதேபோல் பார்சிலோனா அணியும் முக்கியத்துவம் வாய்ந்த அணி. ரியல் மாட்ரிட்டிற்கு முக்கிய எதிரி பார்சிலோனாதான்.



    பார்சிலோனா அணியில் பிரேசில் நாட்டின் தலைசிறந்த வீரரான நெய்மர் விளையாடி கொண்டிருந்தார். அவரை வாங்குவதற்கு ரியல் மாட்ரிட் விரும்பியது. ஆனால், அதில் பல சிக்கல்கள் இருந்ததால் நெய்மர் பிஎஸ்ஜி-க்கு சென்றார். கால்பந்து கிளப் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு 200 மில்லியன் பவுண்டுக்கு டிரான்ஸ்பர் ஆனார்.



    பிஎஸ்ஜி-க்கு சென்ற நெய்மர் 30 போட்டியில் 20 கோல்கள் அடித்தார். தற்போது நெய்மர் ரியல் மாட்ரிட் அணிக்கு செல்ல விரும்புகிறார். ரியல் மாட்ரிட் அணியும் அவரை வாங்க விரும்புகிறது. நெய்மர் வேண்டுமென்றால் ரியல் மாட்ரிட் ஏராளமான பணத்தை இழக்க வேண்டியிருக்கும்.



    இதை சரிகட்டும் வகையில் காரேத் பெலே, கரின் பென்சிமா, ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ், இஸ்கோ ஆகியோரை 1745 மில்லியன் பவுண்டு அளவிற்கு விற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நெய்மர் ரியல் மாட்ரிட் அணிக்கு வந்தால் நீண்ட காலமாக அந்த அணிக்காக விளையாடுவார்.
    ×