என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவி சாஸ்திரி"

    • இளம் வீரரான சாய் சுதர்சனை அனைத்து வடிவிலான கிரிக்கெட்டுக்கான வீரராக பார்க்கிறேன்.
    • அவர் ஒரு சிறந்த வீரர் போல் தெரிகிறார். என் கண்கள் நிச்சயமாக அவர் மீது இருக்கும்.

    2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான (World Test Championship cycle) இந்தியாவின் முதல் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் இருந்து தொடங்குகிறது. இங்கிலாந்துக்கு எதிராக ஜூன் 20ஆம் தேதி முதல் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

    இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 0-3 எனத் தொடரை இழந்திருந்தது. ஆஸ்திரேலியா மண்ணில் 1-3 என தோல்வியடைந்திருந்தது. இதற்குப்பின் இந்திய அணியின் தேர்வு எவ்வாறாக இருக்கும் என எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடி வரும் இடது கை பேட்ஸ்மேனான சாய் சுதர்சன், தற்போதைய அணியில் இருப்பவர்களை தவிர வெளியில் இருந்து எடுப்பவர்களில் என்னுடைய தேர்வில் முதல் நபராக இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்து்ளளார்.

    இது தொடர்பாக ரவி சாஸ்திரி கூறியதாவது:-

    இளம் வீரரான சாய் சுதர்சனை அனைத்து வடிவிலான கிரிக்கெட்டுக்கான வீரராக பார்க்கிறேன். அவர் ஒரு சிறந்த வீரர் போல் தெரிகிறார். என் கண்கள் நிச்சயமாக அவர் மீது இருக்கும். இங்கிலாந்தில் இடது கை பேட்ஸ்மேன் மற்றும் இங்கிலாந்து சூழ்நிலையை நன்றாக தெரிந்தவர். அவருடைய டெக்னிக், அவர் விளையாடும் விதம், தற்போதைய அணிக்கு வெளியில் இருந்து வீரர்கள் தேவை என்று விரும்புபோதும் என்னுடைய முதன்மையான தேர்வு சாய் சுதர்சனாகத்தான் இருக்கும்.

    ஷ்ரேயாஸ் அய்யர் அணியில் இடம் பிடிக்க முடியும். ஆனால் அதற்கு போட்டி நிலவும். ஒயிட்பால் கிரிக்கெட்டில் உறுதியாக இடம் உண்டு. டெஸ்ட் கிரிக்கெட் என வரும்போது மற்ற வீரர்கள் யார்? யார்? இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

    இவ்வாறு ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    • அயர்லாந்து தொடரின்போது ராகுல் டிராவிட்டுக்கு ஓய்வு வழங்கப்பட்டது
    • தற்போது நியூசிலாந்து தொடரிலும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் ரவி சாஸ்திரி. அவர் பதவிக்காலம் முடிந்த பிறகு ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவரது தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையை எதிர்கொண்டது. இதில் இநதிய அணி அரையிறுதியில் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தது.

    தற்போது ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. தலா மூன்று டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டி நாளை தொடங்குகிறது.

    நியூசிலாந்து தொடரில் ராகுல் டிராவிட்டுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. லஷ்மண் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் தலைமை பயிற்சியாளர் அடிக்கடி ஓய்வு எடுப்பது சரியாக இருக்காது என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    மேலும் இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறியதாவது:-

    நான் ஓய்வு (Brealks)என்று நம்பவில்லை. ஏனென்றால் நான் எனது அணியை புரிந்து கொள்ள விரும்புகிறேன். அதன்பின் அணியை எனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள விரும்புவேன். இந்த ஓய்வுகள் (Breaks)... நேர்மையாக இருக்க உங்களுக்கு இவ்வளவு ஓய்வுகள் தேவையா?. ஐ.பி.எல். தொடரின்போது 2 அல்லது மூன்று மாதங்கள் கிடைக்கும். இது உங்களுக்கு ஓய்வு எடுக்க போதுமானது. ஆனால் மற்ற நேரங்களில், ஒரு பயிற்சியாளர் பயிற்சியாளராகத்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

    இவ்வாறு ரவி சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார்.

    • இந்தியாவில் அதிவேகமாக பந்து வீசும் வீரராக உள்ளார்
    • ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணிக்காக விளையாடி முத்திரை பதித்தார்

    ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்துள்ளது. இந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் உள்ளார். உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வியடைந்ததும் பேட்டிங் அணுகுமுறை, அதிவேக பந்து வீச்சாளர் ஆகியோர் இல்லாததே தோல்விக்கு காரணம என சொல்லப்படுகிறது.

    இதனால் உம்ரான் மாலிக் மீது அனைவருடைய கவனமும் உள்ளது. நியூசிலாந்து ஆடுகளங்கள் ஏற்கனவே வேகப்பந்து வீச்சு சாதகமாக இருக்கும். இந்த நிலையில் உம்ரான் மாலிக் சிறப்பாக பந்து வீசினால் அவர் தொடர்ந்து இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. ஆகவே, அவர் எப்படி பந்து வீச்சை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.

    இந்த நிலையில் உம்ரான் மாலிக் அற்புதமான திறமைசாலி என ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார்.

    உம்ரான் மாலிக் குறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் ''உம்ரான் மாலிக் இந்தியாவின் அதிவேக பந்து வீச்சாளர்களில் ஒருவர். உலகக் கோப்பையில் அதிவேக வேகப்பந்து வீச்சாளர்கள் எதிரணியை கலங்கடித்தார்கள் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதற்கு உதாரணம் ஹாரிஷ் ராஃப், நசீம் ஷா, அன்ரிச் நோர்ஜே. ஆகவே, உண்மையாக வேகத்திற்கு மாற்று இல்லை.

    குறைந்த ஸ்கோர் எடுத்தாலும் கூட எதிரணியை சமாளிக்க முடியும். ஆகவே, உம்ரான் மாலிக்கிற்கு இது சிறந்த வாய்ப்பு. இந்த வெளிப்பாட்டில் இருந்து அவர் கற்றுக் கொள்வார் என நம்புகிறேன்'' என்றார்.

    • டி20 கிரிக்கெட்டை விட ஒருநாள் போட்டி இரண்டரை மடங்கு பெரியது ஆகும்.
    • என்னதான் சிறந்த ஃபார்மில் இருந்தாலும், அந்த களத்திற்கான மரியாதையை கொடுக்க வேண்டும்.

    மும்பை:

    நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடர் 1 - 0 என வெற்றி பெற்ற சூழலில், ஒருநாள் தொடரில் 1 - 0 என தோல்வியடைந்தது.

    இந்த ஒருநாள் தொடரில் சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் இருந்தார். அவர் முதல் ஒருநாள் போட்டியில் 4, அதன்பின்னர் 34*, 6 என சொற்ப ரன்களையே அடித்தார். அந்த 34 ரன்களும் ௨-வது போட்டி 29 ஓவர்களாக குறைக்கப்பட்ட பின்னர் தான் அடித்தார். உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் ஒருநாள் கிரிக்கெட்டில் இப்படியா சொதப்புவார் எனும் அளவிற்கு ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

    இந்நிலையில் சூர்யகுமாரின் பிரச்சினை குறித்து ரவி சாஸ்திரி அறிவுரை கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் பேசியதாவது:-

    சூர்யகுமார் யாதவ் முதலில் ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள வேண்டும். டி20 கிரிக்கெட்டை விட இது இரண்டரை மடங்கு பெரியது ஆகும். அவர் நிறைய பந்துகளை எதிர்கொள்ளவேண்டியது இருக்கும். அந்த அளவிற்கு அவர் பொறுமை காக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட ரன்களை வழக்கத்தை விட 30 - 40 பந்துகளுக்கு முன்னதாகவே ஒருநாள் கிரிக்கெட்டில் அடித்துவிடுகிறார். இதனை சரிசெய்ய சற்று அவருக்கு நேரத்தை கொடுக்க வேண்டும்.

    இதே போல என்னதான் சிறந்த ஃபார்மில் இருந்தாலும், அந்த களத்திற்கான மரியாதையை கொடுக்க வேண்டும். இது ஒரு சிறந்த ஃபார்மெட். யாரின் மரியாதைக்காகவும் காத்துக்கொண்டிருக்காது. எனவே களத்திற்கு மரியாதை கொடுத்து பொறுமை காக்க வேண்டும். சூர்யகுமாரும் புரிந்துக்கொண்டு வருவார் என நம்புகிறேன்.

    வங்கதேசத்துடனான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் சூர்யகுமார் விளையாடவில்லை. இந்த நேரத்தை பயன்படுத்திக்கொண்டு அவர் 50 ஓவர் வடிவத்திற்கு ஏற்றார் போல மாறி வர வேண்டும். அவர் 5ம் இடத்தில் களமிறங்கும் போது ஸ்கோர் நன்றாக இருக்கும். அப்போது வேண்டுமானால் அதிரடி காட்டிக்கொள்ளலாம் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

    • கவாஸ்கர், கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், தோனி போன்றவர்கள் கூட பார்மை இழந்து தவித்த காலம் எல்லாம் உண்டு.
    • எந்த ஒரு வீரரும் தங்களது பார்மை இழப்பது என்பது நடக்கக் கூடிய ஒன்றுதான்.

    பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தின் முதலாவது ஒருநாள் போட்டியானது நாளை டிசம்பர் நான்காம் தேதி (டிசம்பர் 4) டாக்கா நகரில் நடைபெற உள்ளது.

    இந்த போட்டியில் டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் ஓய்வில் இருந்த சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல் ராகுல், முகமது ஷமி ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்புவதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

    அதே வேளையில் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரானது நெருங்கி வரும் வேளையில் அதற்கு தயாராகும் வகையில் இந்த சுற்றுப்பயணம் இந்திய அணிக்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டி20 உலக கோப்பையின் போது ஃபார்முக்கு திரும்பிய விராட் கோலி இந்த தொடரிலும் அவரது சிறப்பான பார்மை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதேபோல டி20 உலக கோப்பை தொடரில் சொதப்பிய ரோகித் சர்மா இழந்த தனது பார்மை மீட்டெடுப்பாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களின் மத்தியில் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது தற்போதைய பார்ம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி அளித்த பதிலில் கூறியதாவது:-

    எந்த ஒரு வீரரும் தங்களது பார்மை இழப்பது என்பது நடக்கக் கூடிய ஒன்றுதான். பார்மை இழக்காத வீரர் என்று கிரிக்கெட்டில் யாருமே கிடையாது. அனைவருக்குமே இது நடந்துள்ளது. கவாஸ்கர், கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், தோனி போன்றவர்கள் கூட பார்மை இழந்து தவித்த காலம் எல்லாம் உண்டு. ஒரு வீரரால் எப்பொழுதுமே அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ய இயலாது, அது மனித இயல்பு தான்.

    அவர்களும் ஒரு கட்டத்தில் பார்மில் சறுக்களை சந்தித்து இருந்தார்கள். அதேபோலத்தான் விராட் கோலி மற்றும் ரோஹித்துக்கு பார்மில் சறுக்கல் ஏற்பட்டது. ஆனாலும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற பெரிய வீரர்களுக்கு இழந்த பார்மை மீட்டெடுக்க ஒரு சிறிய இடைவெளியும், ஒரு முழுவதுமான தொடருமே போதுமானது.

    என்று ரவி சாஸ்திரி கூறினார்.

    • நீங்கள் போட்டியில் தோற்பது தவறில்லை ஆனால் போராடாமல் தோற்பது அசிங்கமாகும் என்று சரமாரியாக திட்டினார்.
    • நீங்கள் யாராக இருந்தாலும் அடுத்த போட்டியில் இது போன்ற நிலைமையில் வெற்றிக்கு போராடாமல் விளையாடக்கூடாது.

    3 விதமான உலக கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக இருந்தவர் எம்எஸ் டோனி. இவர் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக சாதனை படைத்து ஓய்வு பெற்றார். மேலும் பினிஷர்களில் ஒருவராகவும் போற்றப்படுகிறார். மிகச் சிறந்த பினிஷர் என்று ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களால் போற்றப்படும் அவர் சில தருணங்களில் சொதப்பலாகவும் செயல்பட்டு தோல்விக்கு காரணமாகவும் அமைந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2 - 1 (3) என்ற கணக்கில் வென்ற இந்திய அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 2- 1 (3) என்ற கணக்கில் தோற்றது.

    இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது போட்டியில் 323 ரன்களை துரத்தும் போது டாப் ஆர்டர் சரிந்த நிலையில் களத்தில் நின்ற தோனி 66 பந்துகளில் 133 ரன்கள் தேவைப்பட்ட போது அதிரடி காட்டாமல் 37 (59) ரன்கள் எடுத்து மெதுவாக விளையாடி 47-வது ஓவரில் அவுட்டானது தோல்விக்கு காரணமாக அமைந்தது.

    அதனால் கடுப்பான அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மெதுவாக விளையாடியதற்காக தோனியை மறைமுகமாக திட்டியதாக அப்போதைய பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.

    விராட் கோலி, ரவி சாஸ்திரியுடன் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் 
    விராட் கோலி, ரவி சாஸ்திரியுடன் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் 

    இது பற்றி தனது சுயசரிதை புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு:-

    விராட் கோலி - சுரேஷ் ரெய்னா ஆகியோர் பேட்டிங் செய்யும் வரை நாங்கள் வெற்றியை நோக்கி நடந்தோம். ஆனால் அதன் பின் விக்கெட்டுகளை இழந்த போது களத்தில் நின்ற டோனிக்கு கடைசி 10 ஓவரில் எதிர்ப்புறம் பேட்ஸ்மேன்கள் இல்லாமல் டெயில் எண்டர்கள் மட்டுமே கைகொடுக்க காத்திருந்தனர்.

    அந்த சமயத்தில் 10 ஓவரில் ஓவருக்கு 13 ரன்ரேட் தேவைப்பட்ட போது 5 - 6 ஓவரில் 20 ரன்கள் மட்டுமே எடுத்தோம். அந்த இன்னிங்சில் தான் டோனியும் ஒருநாள் கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் கடந்தார். அதற்காக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தாலும் அவர் இலக்கை சேசிங் செய்வதற்கு கொஞ்சமும் முயற்சிக்கவில்லை.

    அதனால் ரவி சாஸ்திரி கோபமடைந்தார். ஏனெனில் நாங்கள் கொஞ்சமும் எதிரணிக்கு அச்சுறுத்தலை கொடுக்காமல் தோற்றோம். அதைத்தொடர்ந்து நடைபெற்ற 3-வது போட்டிக்கு முன்பாக நடந்த அணி மீட்டிங்கில் நீங்கள் யாராக இருந்தாலும் அடுத்த போட்டியில் இது போன்ற நிலைமையில் வெற்றிக்கு போராடாமல் விளையாடக்கூடாது.

    அப்படி விளையாடினால் அதுவே எனது தலைமையில் அவர்கள் விளையாடும் கடைசி போட்டியாக இருக்கும். நீங்கள் போட்டியில் தோற்பது தவறில்லை ஆனால் போராடாமல் தோற்பது அசிங்கமாகும் என்று சரமாரியாக திட்டினார். அந்த இடத்தில் டோனியும் இருந்தார்.

    அப்போது ரவி சாஸ்திரியின் வார்த்தைகள் மொத்த அணிக்கானது என்றாலும் அவரை டோனி தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்குமிங்கும் பார்க்காமல் நேராக ரவி சாஸ்திரியை பார்த்த அவர் அந்த வார்த்தைகளை ஏற்றுக் கொண்டார். ஏனெனில் அது போன்ற நேரங்களில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற வைப்பது அவரது திறமைகளில் ஒன்றாகும்.

    இவ்வாறு அவரது சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது.

    • சுப்மன் கில் போன்ற இளம் வீரர்கள் ரன் குவிப்பதுடன், வாய்ப்புக்காக கதவை தட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்டில் சோபிக்கவில்லை. கடைசியாக ஆடிய 8 இன்னிங்சில் முறையே அவர் 10, 22, 23, 10, 2, 20, 17, 1 ரன் வீதமே எடுத்துள்ளார். இதனால் முதல் இரு டெஸ்டுக்கு துணை கேப்டனாக செயல்பட்ட அவர் எஞ்சிய இரு டெஸ்டுக்கான அணியில் நீடிக்கிறாரே தவிர துணைகேப்டன் பதவி பறிக்கப்பட்டது.

    இந்தூரில் வருகிற 1-ந்தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டுக்கான இந்திய அணியில் லோகேஷ் ராகுலை நீக்கிவிட்டு சூப்பர் பார்மில் உள்ள சுப்மன் கில்லை களம் இறக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் சிலர் குரல் எழுப்பியுள்ளனர்.

    இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் எஞ்சிய இரு டெஸ்டில் ராகுலுக்கு பதிலாக சுப்மன் கில்லை சேர்க்க வேண்டும் என்பதை சூசகமாக கூறியுள்ளார்.

    இது தொடர்பாக ரவி சாஸ்திரி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    துணை கேப்டன் குறித்து அணி நிர்வாகம் தான் முடிவு எடுக்கும். அவர்களுக்கு லோகேஷ் ராகுலின் ஆட்டத்திறன் தற்போது எப்படி உள்ளது. அவர் எத்தகைய மனநிலையில் உள்ளார் என்பது நன்கு தெரியும். என்னை கேட்டால் இந்திய அணிக்கு துணை கேப்டனையே நியமிக்க வேண்டாம் என்று தான் சொல்வேன்.

    போட்டிக்கு மிகச்சிறந்த 11 வீரர்களுடன் தான் செல்ல வேண்டுமே தவிர, துணை கேப்டன் என்ற பொறுப்பை கொண்டு சிக்கலை உருவாக்கிக் கொள்ள கூடாது. களத்தில் துணை கேப்டன் சரியாக செயல்படாவிட்டால் அவரது இடத்திற்கு இன்னொருவரை கொண்டு வரலாம்.

    நேர்மையாக சொல்வது என்றால், இந்தியாவில் நடக்கும் போட்டிகளுக்கு துணை கேப்டன் பதவியை நான் ஒரு போதும் விரும்புவது இல்லை. ஆனால் வெளிநாட்டில் நிலைமை வேறு. இங்கு நீங்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டும். சுப்மன் கில் போன்ற இளம் வீரர்கள் ரன் குவிப்பதுடன், வாய்ப்புக்காக கதவை தட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

    லோகேஷ் ராகுல் அற்புதமான வீரர் தான். அவரிடம் நிறைய திறமை இருக்கிறது. ஆனால் அதை களத்தில் தொடர்ச்சியாக வெளிப்படுத்த வேண்டியது அவசியம். சில நேரம் சிறிய இடைவெளி எடுத்து விட்டு வரும் போது நல்ல பலனை கொடுக்கும். எனது பயிற்சி காலத்தில் புஜாரா நீக்கப்பட்டார். அவர் மீண்டும் அணிக்கு திரும்பிய போது சதங்கள் அடித்தார்.

    இதே போல் ராகுலும் நீக்கப்பட்டு, வலுவாக திரும்பி வந்தார். ஆனால் நீங்கள் 20 ஓவர் கிரிக்கெட்டுக்குரிய ஆட்டத்திறனை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கொண்டு வர முடியாது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இறுதிப்போட்டி நடக்க உள்ள இங்கிலாந்தின் சூழல் இதை விட வித்தியாசமானதாக இருக்கும்.

    ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் முழு உடல்தகுதியுடன் கூடுதல் உற்சாகத்தில் களம் இறங்குவார்கள். ஆனால் மனரீதியாக பார்க்கும் போது ஆஸ்திரேலியாவை விட இந்தியாவுக்கே அனுகூலமாக இருக்கும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வந்து விடுவார்.

    ஏற்கனவே முகமது ஷமியும், முகமது சிராஜிம் அபாரமாக பந்து வீசி வருகிறார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் வெல்லும் போது, அது மனதளவில் நம்மை வலுப்படுத்தும்.

    இவ்வாறு ரவி சாஸ்திரி கூறினார்.

    • நடப்பு ஐபிஎல் தொடரில் ஷுப்மன் கில் இதுவரை 3 ஆட்டத்தில் ஆடி 116 ரன்கள் எடுத்துள்ளார்.
    • இவர் விராட் கோலி சாதனையை முறியடிப்பார் என ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்தவர் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. அவர் 2016-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் 16 ஆட்டங்களில் ஆடி 4 சதம் உள்பட 973 ரன்கள் சேர்த்தார்.

    இந்நிலையில், கோலி சாதனையை முறியடிக்க யாருக்கு வாய்ப்புள்ளது என இந்திய முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ரவி சாஸ்திரியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:

    என்னைப் பொறுத்தவரை விராட் கோலியின் சாதனையை தகர்ப்பது மிகவும் கடினம். ஏனெனில் ஒரு சீசனில் 900 ரன்களுக்கு மேல் எடுப்பது எளிதான விஷயம் அல்ல. ஆனால் இச்சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு இருந்தால் அது ஒரு தொடக்க ஆட்டக்காரரால் தான் முடியும். ஏனெனில் தொடக்க ஆட்டக்காரருக்கு தான் அதிகமான ஆட்டங்களில் விளையாட வாய்ப்பு கிடைக்கும்.

    அந்த வகையில் கோலியின் சாதனையை முறியடிக்கும் திறமை குஜராத் டைட்டன்ஸ் வீரர் ஷுப்மன் கில்லுக்கு இருப்பதாக கருதுகிறேன். ஏனெனில் அவர் தொடக்க ஆட்டக்காரர். நல்ல பார்மில் உள்ளார். ஆடுகளங்களும் பேட்டிங்குக்கு சாதகமாக உள்ளன.

    அவர் அடுத்த 2-3 இன்னிங்சில் தொடச்சியாக 80-100 ரன்கள் வீதம் எடுத்தால் மொத்தம் 300-400 ரன்கள் சேர்த்து விடுவார். தொடக்க ஆட்டக்காரர் கூடுதலாக இரண்டு ஆட்டங்கள் ஆடும்போது இச்சாதனையை முறியடிக்க சாத்தியம் உண்டு என தெரிவித்தார்.

    நடப்பு ஐபிஎல் தொடரில் ஷுப்மன் கில் இதுவரை 3 ஆட்டத்தில் ஆடி 116 ரன்கள் எடுத்துள்ளார்.

    • மும்பைக்கு எதிரான போட்டியில் தீபக் சாஹர் காயம் காரணமாக 1 ஓவர் மட்டுமே வீசி பாதியிலேயே வெளியேறினார்.
    • அடிக்கடி காயத்தை சந்தித்து பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்லும் நீங்கள் பேசாமல் அங்கேயே ஒரு வீடு வாங்கி குடிபெயருங்கள் என ரவி சாஸ்திரி கூறினார்.

    ஐபிஎல் 2023 தொடரில் 5-வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில் மும்பைக்கு எதிரான போட்டியில் தீபக் சாஹர் காயம் காரணமாக 1 ஓவர் மட்டுமே வீசி பாதியிலேயே வெளியேறினார். அவருடைய காயம் சற்று அதிகமாக இருப்பதால் இன்னும் ஓரிரு வாரங்கள் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

    இப்படி அடிக்கடி காயத்தை சந்தித்து பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்லும் நீங்கள் பேசாமல் அங்கேயே ஒரு வீடு வாங்கி குடிபெயருங்கள் என ரவி சாஸ்திரி கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

    இதை இனிமேல் இந்த வழியில் பாருங்கள். அதாவது சில வீரர்கள் என்சிஏ'வில் நிரந்தரமாக குடியிருப்பவர்களாக மாறிவிட்டார்கள். விரைவில் அவர்களுக்கு அங்கே நிரந்தரமாக குடியிருக்கும் உரிமை கிடைக்கப் போகிறது. அப்போது தான் அவர்களால் எந்த நேரத்திலும் அங்கு செல்ல முடியும். இவ்வாறு தொடர்ந்து நடப்பது நல்லதல்ல. இது நம்ப முடியாததாக இருக்கிறது. அதாவது நீங்கள் அதிகமான கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை ஆனாலும் மீண்டும் மீண்டும் காயமடைகிறீர்கள்.

    குறிப்பாக முழுமையாக நீங்கள் 4 போட்டிகளில் கூட விளையாடவில்லை. பின்னர் ஏன் என்சிஏவுக்கு செல்கிறீர்கள்? அதாவது அங்கே இருந்து தான் வந்த நீங்கள் 3 போட்டிகளில் விளையாடியதும் ஏன் மீண்டும் அங்கே செல்கிறீர்கள். எனவே என்சிஏவில் அனைத்து அம்சங்களிலும் தேர்வாகி ஃபிட்டான பின் களமிறங்கி விளையாடுகிறோம் என்பதை உங்களுக்கு நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள். இது இந்திய அணிக்கு மட்டுமல்லாமல் வீரர்களுக்கும் பிசிசிஐ மற்றும் பல்வேறு அணிகளின் கேப்டன்களுக்கும் கடுப்பேற்றுகிறது.

    அது மிகவும் எரிச்சல் ஊட்டுகிறது. கடினமான காயங்களை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் ஒவ்வொரு 4 போட்டிக்கும் ஒரு முறை தசைப்பிடிப்பு காயம் ஏற்படும் போது அங்கு என்ன தான் நடக்கிறது என்பதை நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். இத்தனைக்கும் சில வீரர்கள் வேறு எந்த கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை. அதாவது 3 மணி நேர போட்டியில் வெறும் 4 ஓவர்கள் வீசியதும் காயமடைகிறீர்கள் என்பது அபத்தமானது.

    என்று கூறினார்.

    • அவர்கள் மீண்டும் அடுத்த முறை சந்திக்கும்போது இது மாதிரி வார்த்தகைளால் மோதிவிடக்கூடாது.
    • இருவரையும் ஒரே இடத்தில் அமர வைத்து மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதை சிறந்த விஷயமாக நான் கருதுகிறேன்.

    புதுடெல்லி:

    கிரிக்கெட் ஜென்டில்மேன் விளையாட்டு என்று சொல்வார்கள். ஆனால் ஐ.பி.எல். போட்டியில் விராட் கோலியும், காம்பீரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.

    லக்னோவில் நேற்று முன்தினம் ராயல் சேலஞ்சர்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் நடந்தது. இதில் பெங்களூர் அணி 18 ரன்னில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

    இந்தப் போட்டி முடிந்த பிறகு பெங்களூர் அணி வீரர் விராட்கோலியும், லக்னோ அணியின் ஆலோசகருமான காம்பீரும் மோதிக் கொண்டனர். இருவரும் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    லக்னோ அணி வீரர்கள் கெய்ல்மேயர்ஸ், நவீன்-உல்-ஹக், அமித் மிஸ்ரா ஆகியோருடனும் கோலி ஆக்ரோஷத்துடன் நடந்துக் கொண்டார். ஏற்கனவே பெங்களூருவில் நடந்த போட்டியில் காம்பீர் நடந்து கொண்டதற்கு விராட்கோலி பதிலடியாக அப்படி ஆக்ரோஷமாக நடந்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. விராட்கோலி லக்னோ அணி வீரர்களையும், காம்பீர் குடும்பத்தினரையும் கெட்ட வார்த்தைகளால் திட்டியதால் காம்பீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக காம்பீர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வாக்கு வாதத்தில் ஈடுபட்டதற்கு இருவருக்கும் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் விராட் கோலிக்கும், காம்பீருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்து வைக்க தயார் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், டெலிவிசன் வர்ணனையாளருமான ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    இருவரும் டெல்லிக்காக ஆடியவர்கள். போதுமான கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்கள். காம்பீர் 2 உலக கோப்பையை வென்றுள்ளார். விராட் கோலி நட்சத்திர வீரர் ஆவார். இருவரையும் ஒரே இடத்தில் அமர வைத்து மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதை சிறந்த விஷயமாக நான் கருதுகிறேன்.

    யார் அதை செய்தாலும் விரைவில் செய்வது நல்லது. அவர்கள் மீண்டும் அடுத்த முறை சந்திக்கும்போது இது மாதிரி வார்த்தகைளால் மோதிவிடக்கூடாது. இருவருக்கும் இடையே சமாதானம் செய்து வைக்க நான் தயாராக இருக்கிறேன்.

    இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார்.

    • 11 பேரை தேர்ந்தெடுக்க மிகவும் கடினமாக இருந்தது.
    • என்ன பொறுத்தவரைக்கும் பேட் கம்மின்ஸ் டாப் கிளாஸ் ஆபரேட்டர்.

    ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி லண்டனில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

    இரண்டு ஆண்டுகள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளின் அடிப்படையில் இரு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

    இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி அணி முன்னேறாத நிலையில், இன்று விராட் கோலி சிராஜ் உள்ளிட்ட ஏழு பேர் இங்கிலாந்து புறப்பட்டு விட்டனர்.

    இந்த நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை இணைத்து ஒரு லெவன் அணியை ரவி சாஸ்திரி அறிவித்து உள்ளார். அந்த அணியில் அஸ்வின், புஜாராவுக்கு அவர் இடம் கொடுக்கவில்லை.

    அந்த அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    ரோகித் சர்மா (கேப்டன்), உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபஸ்சேன், விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜடேஜா, அலேக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், முகமது ஷமி.

    11 பேரை தேர்ந்தெடுக்க மிகவும் கடினமாக இருந்தது. ஏனென்றால், அஸ்வின் தலைசிறந்த உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர். அதேபோல் ஹசில்வுட், புஜாராவும் மிரட்டக் கூடியவர்கள். ஆகவே, அது எளிதானது அல்ல.

    என்ன பொறுத்தவரைக்கும் பேட் கம்மின்ஸ் டாப் கிளாஸ் ஆபரேட்டர். முகமது ஷமி வின்டேஜே் போன்றவர். அவர் மேலும் மேலும் சிறந்த ஆட்டத்தை பெற்று வருகிறார். நாம் ஐ.பி.எல். போட்டியில் அதை பார்த்திருப்போம். இதனால் அவருக்கு அணியில் இடம் என ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

    • கடந்த முறை சவுதாம்டனில் வானிலை மிகவும் முக்கிய பங்காற்றியது.
    • வானிலைக்கு ஏற்றார்போல் நான் 12 வீரர்களை தேர்வு செய்கிறேன். எனது 12 வீரர்கள் பட்டியல் மிகவும் தெளிவானது.

    டெல்லி:

    இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக யார்இடம்பெற வேண்டும் என்ற விருப்பத்தை இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    மேலும், அணியில் எந்த வீரர்கள் இடம்பெற வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ரவி சாஸ்திரி கூறியதாவது:-

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை பார்க்கும்போது கடந்த முறை இறுதிப்போட்டியில் இருந்து நிறைய கற்றுக்கொள்வது முக்கியது. கடந்த முறை சவுதாம்டனில் வானிலை மிகவும் முக்கிய பங்காற்றியது.

    ஆகையால், அதற்கு ஏற்றார்போல் நான் 12 வீரர்களை தேர்வு செய்கிறேன். எனது 12 வீரர்கள் பட்டியல் மிகவும் தெளிவானது. அதில், ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, கோலி, ரஹானே, அடுத்த வீரர்களில் கேஎஸ் பரத்தா அல்லது இஷான் கிஷனா என்பதில் எதிர் அணி 2 சுழப்பந்து வீச்சாளர்களுடன் சென்றால் நான் கேஎஸ் பரத்தை சேர்ப்பேன்.

    ஆனால், எதிர் அணி 4 வேகப்பந்து வீச்சாளர்கள் 1 சுழற்பந்து வீச்சாளருடன் விளையாடினால் நான் இஷான் கிஷனை தேர்வு செய்வேன். அடுத்து ஜடேஜா, ஷமி, சிராஜ், ஷர்துல் தாகூர், அஸ்வின், உமேஷ் ஆகியோர் என் தேர்வு செய்யும் வீரர்கள் என ரவி சாஸ்திரி கூறினார்.

    ×