என் மலர்
நீங்கள் தேடியது "திருநாவுக்கரசர்"
- பார்வதி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடியதால் உலகம் இருளில் மூழ்கியது.
- ஸ்தலவிருட்சம் என போற்றப்படுவது 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம்.
ஏகாம்பரேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. இந்தத் தலம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது. இந்தக் கோவிலின் முக்கிய கடவுளான சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். மொத்தம் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவில், 600ஆம் ஆண்டே கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இங்கு உள்ள சிவபெருமானை பிருத்வி லிங்கம் என்று அழைப்பர். மேலும் இந்த சிவபெருமான் மண்ணால் ஆனவர். இதனை சுயம்பு என்றும் கூறுவது உண்டு. அதனால் இந்த சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் நடப்பது கிடையாது. மாற்றாக லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். மேலும் இங்கு மற்ற கோவில்களைப் போல அம்மனுக்கு என்று தனியாக சந்நிதி கிடையாது.
மற்ற கோவில்களைப் போல் விநாயகர், முருகன் போன்ற கடவுள்களும் இங்கு காட்சி தருகின்றனர். முதல் பிரகாரத்தின் ஈசான மூலையில் நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி அமைந்த்துள்ளது. மேலும் இந்தக் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது.
வரலாறு:
முதன் முதலில் பல்லவர்களே இந்தக் கோவிலை கட்டியுள்ளனர் என்பதற்கு சான்றாக பல்லவர் கால சிற்பங்களும் கல்வெட்டுகளும் இங்கு உள்ளன. பின்னர் சோழர்களால் புனரமைக்கப்பட்டு கோவில் வளர்ச்சியடைந்தது. மேலும் அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற தலம் இது. பழங்கால சமயம் சார்ந்த நூல்களில் இந்தக் கோவில் திருக்கச்சிஏகம்பம் என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டு வந்தது.
இந்தக் கோவிலின் கிழக்கு கோபுரமான இராஜ கோபுரம், 58.5 மீட்டர் உயரமும் ஒன்பது அடுக்குகளையும் கொண்டது. இதனை விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயர் கி.பி. 1509 ஆம் ஆண்டு கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தையும் கிருஷ்ணதேவராயரே கட்டியுள்ளார். இந்தக் கோவிலில் மொத்தம் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.
ஸ்தல விருட்சம்:
ஒவ்வொரு கோவிலுக்கு ஸ்தலவிருட்சம் என்று ஒரு மரம் உண்டு, அந்த வகையில் இந்தக் கோவிலில் ஸ்தலவிருட்சம் என போற்றப்படுவது 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம். இந்த மாமரத்தில் நான்கு கிளைகள் உள்ளன. வெவ்வேறு காலங்களில் இந்த மாமரத்தில் உள்ள நான்கு கிளைகளில் நான்கு விதமான மாம்பழங்கள் உருவாகும் என்பது இதன் சிறப்பு. இந்த நான்கு கிளைகளும் ரிக், யஜுர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களை குறிக்கின்றன.
தல வரலாறு:
பார்வதி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடியதால் உலகம் இருளில் மூழ்கியது. சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து உலகத்துக்கு வெளிச்சம் தந்தார். இந்த தவறால் பார்வதியை பூலோகத்துக்குச் சென்று தன்னை நோக்கி தவம் இருக்கச் சொன்னார் சிவபெருமான். பார்வதியும் காஞ்சிபுரத்தில் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணல் லிங்கம் செய்து பூஜித்தார். பார்வதியின் தவத்தை உலகினுக்கு அறியச் செய்ய சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளத்தை உண்டாக்கினார்.
பார்வதி தனது மணல் லிங்கத்தை வெள்ளம் அடித்து செல்லாமல் இருக்க கட்டி அணைத்துக் கொண்டார். உடனே சிவபெருமான் அந்த மாமரத்தின் அடியில் தோன்று பார்வதிக்கு அருள் புரிந்து, இரண்டு படி நெல்லைக் கொடுத்து காமாட்சி என்ற பெயரில் காமகோட்டத்தில் 32 அறங்களைச் செய்ய பணித்தார். பார்வதி வழிபட்ட மணல் லிங்கம் தான் பிரித்வி லிங்கம், அந்த மாமரம் தான் ஸ்தல விருட்சம். காமகோட்டம் தான் காமாட்சி அம்மன் கோவில். பார்வதி கட்டித் தழுவியதால் இங்கு உள்ள சிவபெருமானை தழுவக் குழைந்தார் என்றும் அழைப்பர்.
சுந்தரமூர்த்தி நாயனார் சங்கிலி நாச்சியாரை மணந்தபோது "உன்னைப் பிரியேன்" என்று சிவனை சாட்சியாக வைத்து சத்தியம் செய்தார். அந்த சத்தியத்தை மீறியதால் அவர் கண் பார்வை இழந்தார். இழந்த பார்வையில் இடக்கண் பார்வையை சுந்தரர் இங்கு பதிகம் பாடி பெற்றதாக வரலாறு உண்டு.
விழாக்கள்:
இந்தக் கோவிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் ஆனித் திருமஞ்சனம், ஆடிக்கிருத்திகை, ஆவணி மூலம், நவராத்திரி, பங்குனி உத்திரம், சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம் போன்ற விழாக்களும் நடைபெறுகின்றன.
கோவில் திறந்திருக்கும் நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.
எப்படி செல்வது:
1) காஞ்சிபுரம் சென்னைக்கு அருகில் உள்ளதால், சென்னை மற்றும் தமிழக்த்தின் பல பகுதிகளில் இருந்து பேருந்து வசதி உள்ளது.
2) காஞ்சிபுரத்திற்கு சென்னை, திருப்பதி, அரக்கோணம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் இருந்து பயணிகள் ரெயில் இயக்கப்படுகின்றன.
3) அருகில் உள்ள விமான நிலையம் - சென்னை 56 கி.மீ தொலைவில்.
- தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்று சுமார் 4 ஆண்டுகள் ஆகிவிட்டன.
- தமிழக அரசியலில் 6 முறை எம்.எல்.ஏ.வாக இருந்திருக்கிறேன்.
அரசியலில் இருப்பவர்களுக்கு தலைவராக வேண்டும், எம்.எல்.ஏ., எம்.பி.யாக வேண்டும், வாய்ப்பு கிடைத்தால் முதல்வராக கூட ஆக வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருப்பதுதான். இதில் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் மட்டும் விதிவிலக்கு ஆகிவிடுவாரா என்ன?
தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்று சுமார் 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்ற பேச்சு ஒருபக்கம் அடிபடுகிறது. இன்னொரு பக்கம் பாராளுமன்ற தேர்தல் முடியும் வரை புதிய தலைவருக்கு வாய்ப்பு இல்லை என்ற பேச்சும் அடிபடுகிறது.
இது பற்றி திருநாவுக்கரசர் கூறும்போது, "அழகிரி பொறுப்பேற்று 4 ஆண்டுகள் ஆகி விட்டன. எனவே அவர் மாற்றப்படலாம். அல்லது அவரே தலைவராகவும் தொடரலாம். எதுவாக இருந்தாலும் டெல்லி தலைமைதான் முடிவு செய்யும். அதே நேரம் இங்குள்ள முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் தலா 2 முறை மாநில தலைவராக இருந்துள்ளார்கள்.
நான் ஒருமுறைதான் இருந்திருக்கிறேன். எனவே எனக்கு மீண்டும் கட்சி தலைவர் பதவி கொடுத்தால் உண்மையாக பணியாற்ற தயாராக இருக்கிறேன். தமிழக அரசியலில் 6 முறை எம்.எல்.ஏ.வாக இருந்திருக்கிறேன். துணை சபாநாயகராக பொறுப்பு வகித்துள்ளேன். அமைச்சராக 10 வருடம் பணியாற்றிய அனுபவமும் இருக்கிறது. நான் 30 வயதில் இருக்கும் போதே எனது துறையின் கீழ் 30 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் பணியாற்றினார்கள். மத்திய மந்திரியாகவும் இருந்திருக்கிறேன். 50 வருட அரசியல் அனுபவம் இருந்திருக்கிறது. எனவே முதல்வர் ஆகும் தகுதி கூட எனக்கு உண்டு என்பதை நான் நம்புகிறேன். ஆனால் காங்கிரசில் இருந்து கொண்டு அப்படி ஒரு கனவு காண முடியாது என்கிற யதார்த்தமும் தனக்கு தெரியும்" என்றார் ஆதங்கத்துடன்.
- விழாவில் ஏழை மக்களுக்கு இரவு உணவுடன் 1000 பெண்களுக்கு பேருக்கு சேலைகள் வழங்கப்பட்டது.
- தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் ரூ. 500 கோடிக்கு மேலான காங்கிரஸ் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்தோம்.
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய, மாநில அமைச்சரும் திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான சு. திருநாவுக்கரசர் பிறந்த நாள் விழா சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் அரும்பாக்கம் க.வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. முகப்பேர் மதன்பாலு வரவேற்றுப் பேசினார். மாவட்ட துணை தலைவர்கள் மோகனரங்கம், கணபதி, வி. விஜய், திலிப்குமார், கார்த்திகேயன், தமிழரசன், தமிழ்வாணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கு. செல்வ பெருந்தகை, வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மவுலானா, அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் எஸ். வி. ரமணி, மாநில துணை தலைவர் சொர்ணா சேதுராமன், மாநில பொது செயலாளர்கள் பெனட் அந்தோணி, ஜோதி ராமலிங்கம், மாநில பேச்சாளர் குமரி மகாதேவன், மாநில செயலாளர் ரகுநாதன் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னணி தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், மாவட்ட, சர்க்கிள் தலைவர்கள், வட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் ஏழை மக்களுக்கு இரவு உணவுடன் 1000 பெண்களுக்கு பேருக்கு சேலைகள் வழங்கப்பட்டது.
விழாவில் சட்ட மன்ற காங்கிரஸ் தலைவர் கு. செல்வப் பெருந்தகை பேசுகையில், தலைவர் திருநாவுக்கரசு சிறந்த பண்பாளர். எல்லோரது மனதிலும் இடம் பிடிக்கும் பன்முகத் தன்மை கொண்டவர். அவர் 74 வயதிலும் ஒரு இளைஞரை போன்று செயல்படுகிறார். அவர் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய முகவரி. அவரைப் பற்றி நான் பேச வேண்டும் என்றால் எங்களுக்குள் எதிர்மறை கருத்துக்கள் இருந்தாலும் அதை பேசி உடனே புரிந்து கொண்டு செயல்படக்கூடிய தன்மை எங்கள் இருவருக்கும் அமைந்தது. இதை பார்த்து சில தலைவர்கள் எங்கள் மீது பொறாமை கொள்வதுண்டு. அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தபோது சொத்துப் பாதுகாப்பு குழு ஒன்றை ஏற்படுத்தி அதில் என்னை தலைவராக நியமித்து நீங்கள் தான் இதை செய்து முடிப்பீர்கள் என்று என் மீது நம்பிக்கை வைத்து கொடுத்தார். அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் ரூ. 500 கோடிக்கு மேலான காங்கிரஸ் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்தோம். இது பற்றி ராகுல்காந்தி அறிந்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் சொத்துக்களை மீட்க டெல்லியில் ஒரு கமிட்டி அமைத்து அதை அந்தந்த மாநிலத்திற்கு பார்வையாளர்களை போட்டு சொத்துக்களை பராமரிக்கவும் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுக்க ஆணையிட்டார். அதற்கு வழி வகுத்தவர் திருநாவுக்கரசர். ஜெயலலிதாவை போன்ற பெரிய ஆளுமைகளை உருவாக்கி அவர் வளர்ச்சிக்கு வித்திட்டவர் இது வரலாற்று உண்மை. அவர் வெள்ளந்தி மனம் படைத்தவர். எல்லோரையும் நம்ப கூடியவர். முதலமைச்சராக வரக்கூடிய தகுதி வாய்ந்த தலைவர் அவர். கல்வி சார்ந்த அறிவு சார்ந்த நிறுவனங்களை தொடங்கும் போது அதில் காமராஜர் என்ற பெயரை உச்சரிக்காமல் எந்த நடிகரும் எந்த அரசியல்வாதிகளும் தமிழ்நாட்டில் பயணிக்க முடியாது என்றார். முடிவில் மிதுன் சக்கரவர்த்தி நன்றி கூறினார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் அரும்பாக்கம் க.வீரபாண்டியன் செய்திருந்தார்.
- வருகிற பாராளுமன்ற தேர்தலில் அந்த தொகுதியை தி.மு.க. விட்டுக்கொடுக்காது.
- திருச்சி தொகுதியில் போட்டியிட கட்சி எனக்கு வாய்ப்பு கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் அந்த தொகுதியை தி.மு.க. விட்டுக்கொடுக்காது.
தி.மு.க.வின் முக்கிய புள்ளி ஒருவரை அந்த தொகுதியில் களமிறக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதையடுத்து தொகுதியில் தேர்தல் பணிகளையும் தொடங்கிவிட்டதாக உடன்பிறப்புகள் உற்சாகமாக கூறுகிறார்கள்.
அப்படியானால் திருச்சி தொகுதி காங்கிரசிடம் இருந்து கை நழுவுகிறதா என்று திருநாவுக்கரசரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- "கடந்த முறை 4.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். தொகுதிப் பணிகளைச் சிறப்பாக மேற்கொண்டு வருகிறேன். தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரை கடந்த முறை யார் யார், எங்கே போட்டியிட்டார்களோ... பெரும்பாலும் அதுவே இந்த முறையும் தொடர வாய்ப்புகள் இருக்கின்றன. ஆகவே திருச்சி தொகுதியில் போட்டியிட கட்சி எனக்கு வாய்ப்பு கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது!"
- மதுரையை கூன்பாண்டியன் என்ற மன்னர் ஆண்டு வந்தான்.
- தற்போது கடலூர் என்று அழைக்கப்டும் ஊர் அப்போது பாடலிபுத்திரம் என்று அழைக்கப்பட்டது.
சுமார் ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன் தமிழகம் எங்கும் சமண மதமே பரவி இருந்தது. காஞ்சிபுரத்தை பல்லவ மன்னர்கள் ஆண்டு வந்தனர். அந்த மன்னர்கள் சமண மதத்தையை தழுவி வந்தனர்.
மதுரையை கூன்பாண்டியன் என்ற மன்னர் ஆண்டு வந்தான். அவனும் சமணத்தையே தழுவி வந்தான். தமிழகம் எங்கும் சமணர்கள் சமண பள்ளிகள், மடங்கள், மருத்துவமனைகள் என்று அமைத்து செல்வாக்குடன் இருந்தனர்.
தற்போது கடலூர் என்று அழைக்கப்டும் ஊர் அப்போது பாடலிபுத்திரம் என்று அழைக்கப்பட்டது. அது சமணர்களின் முக்கிய ஊராக விளங்கியது. தற்போதைய கடலூர் மாவட்டம் முழுவதும் அப்போது தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்டது. அது காஞ்சிபுரம் பல்லவர்களின் கீழ் இருந்து வந்தது.
சுமார் ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு திருவாமூர் என்ற ஊரில் புகழனார்-மாதினியார் தம்பதிகளுக்கு மகனாக மருள்நீக்கியர் (திருநாவுக்கரசர்) அவதரித்தார். அவருக்கு திலகவதியார் என்ற சகோதரி இருந்தார்.
திருவாமூர், திருவதிகையில் இருந்து எட்டு மைல் தொலைவில் மேற்காக உள்ளது. திருநாவுக்கரசரின் குடும்பம் வேளாளர் குடும்பமாகும். அவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவருமே சிவபக்தர்களாக விளங்கினார்.
திருவாமூரில் உள்ள பசுபதீஸ்வரர் மீது அவர்கள் அனைவரும் பக்தி கொண்டு விளங்கினார்.திருமண வயது வந்ததும் திலகவதியாருக்கு மாப்பிள்ளைப்பார்த்து நிச்சயம் செய்தனர். மாப்பிள்ளை, மன்னரிடம் படைத்தலைவராக இருந்தார்.
நிச்சயதார்த்தத்தின் பின்னர் ஏற்பட்ட போருக்கு மாப்பிள்ளை சென்றார். அங்கே போரில் அவர் மரணம் அடைந்தார். இதன் பிறகு வேறு மாப்பிள்ளையை மணம் புரிந்து கொள்ள திலகவதியார் மறுத்து விட்டார். இந்த சோகத்தினால் புகழனாரும், மாதினியாரும் ஒருவர் பின் ஒருவராக இறந்துவிட்டனர்.
இவ்வாறு தந்தையும் தாயும் ஒருவர் பின் ஒருவராக இறந்ததும், தமக்கையின் திருமணம் நின்று போனதும் மருள்நீக்கியாரின் மனதில் பெரும் துன்பத்தையும், விரக்தியையும் ஏற்படுத்தியது. இதனால் அவருக்கு தெய்வத்தின் மீது இருந்த பக்தி குறைந்தது. அச்சமயம் பாடலிபுத்திரத்தில் சிறப்புடன் விளங்கிய சமணப்பள்ளியில் சேர்ந்து, சமணராக மாறினார் மருள்நீக்கியார்.
சமண மதத்தில் சேர்ந்த மருள்நீக்கியார் தருமசேனர் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார். அங்கிருந்த நூல்கள் அனைத்தையும் கற்று பெரும் புலமை பெற்று விளங்கினார். அத்துடன் பாடலிபுத்திரத்திலேயே பெரும் புகழ் பெற்று விளங்கினார். அவரது புகழ் காஞ்சிபுரம் அரண்மனை வரை பரவி இருந்தது.
திலகவதிக்கு தன் ஒரே தம்பி சமண மதம் தழுவியது பெரும் கவலையாக இருந்தது.
இதனால் பெரும் துன்பம் அடைந்த திலகவதி தன் சொந்த ஊரான திருவாமூரை விட்டு அருகில் இருந்த திருவதிகை திருத்தலத்திற்கு குடிபெயர்ந்தார். திருவதிகையில் இருந்த வீராட்டானேஸ்வரரிடம் தினமும் இதுபற்றி முறையிட்டார்.
ஒருநாள் திலகவதியின் கனவில் தோன்றிய ஈசன் கவலைப்பட வேண்டாம். உன் தம்பி மருள்நீக்கியாருக்கு சூலை நோயை தரப்போகிறேன். அதன்பின் அவன் உன்னை வந்தடைவான் என்று கூறினார். இதனால் பெருமகிழ்ச்சி அடைந்தார் திலகவதியார்.
பாடலிபுத்திரத்தில் இருந்து தருமசேனருக்கு வயிற்றில் கடும் வலி ஏற்பட்டது. சமணர்கள் எவ்வளவோ வைத்தியம் செய்தும் அந்த வலி நிற்கவில்லை. இதனால் கடும் துயரம் அடைந்த மருள்நீக்கியார் திலகவதியாரை காண புறப்பட்டார். அதற்கு சமணர்கள் அனுமதிக்காததால் இரவோடு இரவாக அங்கிருந்து புறப்பட்டு ஒருவரிடமும் சொல்லிக்கொள்ளாமல் திருவதிகையை அடைந்தார்.
தம்பியைக் கண்ட திலகவதி மிகுந்த மனமகிழ்ச்சி அடைந்தார். ஆனால் மருள்நீக்கியாரோ மிகுந்த மனவருத்தத்தில் இருந்தார். நோய் அவரை அந்த அளவிற்கு வருத்தியது. அதற்காக கவலைப்பட வேண்டாம் என்று கூறிய திலகவதியார் தம்பியை அழைத்துக்கொண்டு கோவிலுக்குள் சென்றார்.
கோவிலின் முன் மண்டபத்தில் வைத்து (தற்போது இந்த மண்டபம் திருநீறு மண்டபம் என அழைக்கப்படுகிறது) தம்பிக்கு திருநீறு தந்தார். இருவரும் உள்ளே சென்று இறைவனைத் தரிசித்தனர்.
தான் மதம் மாறியதை நினைத்து வருந்திருய மருள்நீக்கியார் பாடினார்.
கூற்றாயின வாறு விலக்க கிலீர்
கொடுமை பல செய்தன நானறியேன்
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன் எப்போதும்
தோற்றாதுமுன் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கிட
ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட்டானத்துறை அம்மானே...!
இந்த பாடல்தான் மருள்நீக்கியார் பாடிய முதல் பாடலாகும். இந்த பாடல் பாடிய பிறகு மருள்நீக்கியாரின் வயிற்றுவலி நீங்கியது. அத்துடன் அவர் பாடல்களின் இனிமையை உணர்ந்த இறைவன் இன்றில் இருந்து நீ `நாவுக்கரசர்' என்று அழைக்கப்படுவாய் என்று அசரீரியாக கூறினார்.
வீரட்டானேஸ்வரர்க்கு செய்யும் தொண்டே சிறந்தது என்ற மனமகிழ்ச்சியுடன் சகோதரி திலகவதியுடன் சேர்ந்து உழவாரப்பணி செய்து வந்தார் மருள்நீக்கியார்.
இதற்குள் அவர் மேல் கோபமும் பொறாமையும் கொண்ட சமணர்கள் காஞ்சிபுரத்திற்கு சென்று அங்கிருந்த மன்னனிடம் மருள்நீக்கியார் பற்றி பல பொய்களை சொல்லி, போட்டுக்கொடுத்து கோபத்தை உண்டாக்கினார்கள்.
மருள்நீக்கியாருக்கு வயிற்றுவலியே வரவில்லை என்றும் கூறினர். அவர் சைவம் சேர்வதற்காகவும், தன் சகோதரியுடன் சேர்வதற்காகவும் பொய் சொல்லியதாக பல்லவ மன்னனிடம் உரைத்தனர். இதனால் கோபம் கொண்ட மன்னன், உடன் மருள்நீக்கியாரை அழைக்க திருவதிகைக்கு தன்னுடைய ஆட்களை அனுப்பினார்.
திருவதிகை வந்து சேர்ந்து காவலர்கள், மன்னனின் கட்டளையை கூறினர். இதைக்கேட்டு திலகவதியார் அஞ்சினார்.
ஆனால் இதைக்கண்டு சிறிதும் அஞ்சாத திருநாவுக்கரசர் யார் மன்னர்? எனக்கு மன்னன் வீரட்டானேஸ்வரர்தான் பல்லவ மன்னன் அல்ல என்றும் தான் யாருக்கும் அஞ்சமாட்டோன் என்றும் பொருள்படும்படி......
நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்!
நரசுத்தி லிடர்ப்படோம் நடலையில்லோம்
ஏமாப்போம் பிணியறிவோம் பணிவோமல்லோம்
இன்பமே என்னாளுத் துன்பமில்லை
தாமார்ககுங் குடியல்லாத் தன்மையான
சங்கரன் நற்சங்க வெண்குழையோர் காதிற்
கோமார்க்கே நாமென்றும் மீளா அளாய்க்
கொய்ம் மலர்ச்சே வடியினையே குறுகினாமே
என்ற பாடலை பாடினார்.
பின்னர் தன் சகோதரியை சமாதானப்படுத்திவிட்டு காவலர்களுடன் காஞ்சிபுரம் நோக்கி சென்றார்.
காஞ்சிபுரத்தை அடைந்த திருநாவுக்கரசரை நம்பாமலும், சமணர்களின் பேச்சை கேட்டுக்கொண்டும், பல்லவ மன்னன் திருநாவுக்கரசருக்கு பல்வேறு துன்பங்களை தண்டனை என்ற பெயரில் வழங்கினான்.
சுண்ணாம்பு அறையில் வைத்து தீ மூட்டிய போதும் திருநாவுக்கரசர் அதைக்கண்டு அஞ்சாமல் சிவபெருமானையே நினைத்தார்.
மாசில் வீனையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கு இளவேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணைபடி நிழலே
என்று பாடினார்.
மறுபடி வந்து மூடிய அறையை திறந்து பார்த்த சமணர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே திருநாவுக்கரசர், துன்பம் ஏதும் இல்லாமல் அப்படியே இருந்தார்.
மன்னனிடம் கூறி மறுபடியும் பல்வேறு துன்பங்களை அவருக்கு அளித்தனர். எதிலும் திருநாவுக்கரசர் துன்பப்படாமல் இருந்தார். அவரை இறுதியாக கடலில் தள்ளிவிடுவது என்று முடிவு செய்தனர்.
பல்லவர்களின் துறைமுக நகரமான மகாபலிபுரத்திற்கு அருகில் நடுக்கடலில் பாறையில் திருநாவுக்கரசரை கட்டி கடலில் தள்ளிவிட்டனர்.
இறைவனை நினைத்து திருநாவுக்கரசர் பாடினார்
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சிவாயவே
என்று திருநாவுக்கரசர் பாடியதும் கற்பாறை, மரக்கட்டையாக மாறி கடலில் மிதந்த வண்ணம் திருப்பாதிரிபுலியூரை (தற்போதைய கடலூர் நகர்) அடைந்தது.
கரையேறிய திருநாவுக்கரசர் மக்கள் புடைசூழ திருவதிகை திருத்தலத்தை வந்தடைந்தார்.
இந்த செய்தி நாடெங்கும் பரவ பல்லவ மன்னன் மனம் மாறினான் தன் பரிவாரங்களுடன் திருவதிகையை வந்தடைந்தான்.
திருநாவுக்கரசரிடம் மன்னிப்பு கேட்டான். திருநாவுக்கரசரும் அவனை மன்னித்தார். திருவதிகை திருத்தலத்தில் இருக்கும் ஈசனின் பெருமையை உணர்ந்த மன்னன் சமணம் விடுத்து சைவ மதத்திற்கு மாறினார். சமணர்கள் நாட்டை விட்டு ஓடினார்கள். பாடலிபுத்திரத்தில் இருந்த சமண மடங்கள் இடிக்கப்பட்டன. அந்த கற்களை கொண்டு இதே திருவதிகையில் பல்லவ மன்னன் குணபராச்வரம் என்ற கோவிலை கட்டினான்.
இவ்வாறு சைவ மதத்திற்கு மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது இந்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலாகும்.
- திருக்கருகாவூர் பஞ்சாரண்ய தலங்களுள் ஒன்றாகும்.
- முல்லைக்கொடி படர்ந்திருந்தமைக்கான வடுவை இன்றும் காணலாம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் ரெயில் நிலையத்தில் இருந்து தெற்கே 6 கி.மீ. தொலைவிலும் அய்யம்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து தென்கிழக்கே 6 கி.மீ தொலைவிலும் திருக்கருனாவூர் தலம் உள்ளது.
சுவாமி : கர்ப்பபுரீசுவரர், முல்லைவனநாதர், மாதவி வனேசுவரர்
அம்பிகை : கருக்காத்த நாயகி, கர்ப்பரட்சாம்பிகை
தலமரம் : முல்லை
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், க்ஷீரகுண்டம், சத்திய கூபம், விருத்த காவிரி, திருப்பாற்குளம்.
பதிகம் : திருநாவுக்கரசர் - 1, திருஞானசம்பந்தர் -1
பஞ்சாரண்ய தலங்களுள் ஒன்றாகும். பஞ்ச ஆரண்யதல வழிபாட்டை செய்பவர்கள் முதன் முதலில் இத்தலத்தில் இருந்து தான் வழிபாட்டை தொடங்கவேண்டும்.
இத்தலம் நன்மகப்பேறு வாய்த்தற்குரிய பிரார்த்தனைத் தலமாக சிறப்பிக்கப்படுகிறது. இத்தலத்தில் உள்ள சிவலிங்கத் திருமேனியில் முல்லைக்கொடி படர்ந்திருந்தமைக்கான வடுவை இன்றும் காணலாம்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் பாடல் பெற்ற காவிரி தென்கரை தலம். இத்தலத்திற்கு முல்லைவனம், மாதவி வனம், கர்ப்பபுரி என்பன போன்ற பெயர்களும் உண்டு.
சிவபெருமான் உமாதேவியுடனும், முருகனுடனும் இருக்கும் திருக்கோலத்தை சோமஸ்கந்தர் அருட்கோலம் என்பவர்கள். அவ்வாறு சோமஸ்கந்த வடிவில் அமைந்துள்ள கோவில்களில் திருக்கருகாவூர் முல்லைவன நாதர் கோவிலும் ஒன்றாகும்.
இத்தலத்தில் இறைவனுக்கும், இறைவிக்கும் இடையில் வள்ளி, தெய்வானையுடன் உள்ள முருகன் சந்நிதி உள்ளது. இக்கோவிலுக்கு கிழக்காக ஒரு கோபுரமும், தெற்காக மற்றொரு நுழைவு வாயிலும் இருக்கிறது.
கிழக்கு நோக்கி காட்சி தரும் இத்தலத்து இறைவன் முல்லைவனநாதர் சுயம்புவாக தோன்றியவர். முல்லைவனத்தில் முல்லைக் கொடிகளால் சூழப்பட்டு இருந்ததால் இன்றும் சிவலிங்கத் திருமேனியில் முல்லைக்கொடியின் வடு இருப்பதை காணலாம். புற்று ரூபத்தில் லிங்கம் இருப்பதால் இவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. புனுகு மட்டுமே சாத்தி வழிபாடு செய்யப்படுகிறது.
இங்கு கௌதமேசர் என்னும் தனிக் கோயில் உள்ளது. இங்குள்ள நந்தி விடங்க மூர்த்தமாக உள்ளது. பிரகாரத்தில் விநாயகர், இரட்டை நந்தி, இரண்டு பலி பீடங்கள், அறுபத்து மூவர், சந்தானாசாரியார்கள், முருகர், கஜலட்சுமி, நிருத்துவ முனிவர் பூசித்த லிங்கம், நவக்கிரகம், நடராஜர் சபை முதலிய சந்நிதிகள் உள்ளன.
திருக்கருகாவூர் கர்ப்பத்தை ரட்சிக்கும் அம்பிகை கருத்தரிக்கும் பெண்களுக்கு தங்களுக்குப் பிரசவம் நல்லபடியாக ஆகவேண்டும், இடையில் எந்த பிரச்னையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற கவலை எப்போதும் இருக்கும்.
அந்த பயத்தைப் போக்கி, கர்ப்பத்தை ரட்சித்து, சுகப்பிரசவம் ஆக்கிக் கருணைமழை பொழிகிறாள் கர்ப்பரட்சாம்பிகை.
ஆலயம் அமைந்திருக்கும் இந்தப் பகுதி ஒரு காலத்தில் முல்லைக்கொடிகள் நிரம்பிய வனப்பகுதியாக இருந்தது. இங்கே சுயம்புவாகத் தோன்றிய ஈசன், முல்லைவனநாதர் என்று அழைக்கப்படுகிறார். வடமொழியில் `மாதவி' என்றால் முல்லை என்று அர்த்தம். எனவே, மாதவிவனேஸ்வரர் என்ற பெயரும் இவருக்கு உண்டு.
முல்லைக் கொடிகளுக்கு மத்தியில் புற்று மண்ணில் தானாகத் தோன்றியவர் என்பதால் முல்லைவனநாதருக்கு அபிஷேகம் கிடையாது. புனுகு மட்டுமே சாத்துவார்கள்.
இவருக்குப் புனுகு சாத்தினால் தீராத தோல் நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.
அவருக்கு எதிரே கர்ப்பக விநாயகர் (கற்பக?) சுயம்பு நந்தி, சோமாஸ்கந்தர் ஆகியோர் காட்சி தருகிறார்கள்.
தட்சணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், மகாலட்சுமி, முருகன், பிரம்மன், மகிஷாசுரமர்த்தினி, சண்டீசர் ஆகியோரும் இந்த சிவாலயத்தில் தரிசனம் தருகிறார்கள்.
சுவாமி கோயிலுக்கு வடக்குப் பக்கத்தில் நந்தவனம் இருக்கிறது. அதற்கு அடுத்ததாக அன்னை கர்ப்பரட்சாம்பிகையின் இக்கோயில் அமைந்திருக்கிறது.
பத்மபீடத்தில், அமைதியே உருவாக அன்னை எழுந் தருளி இருக்கிறாள். லேசான புன்னகை வேறு. அன்னையின் நான்கு கரங்களுள் ஒன்று அவளது வயிற்றின் கீழே தொடுவது போல் உள்ளது. கர்ப்பத்தை ரட்சிக்கும் கோலம் போலும்! பார்த்தாலே பரவசம் ஏற்படுகிறது.
மறு கரம், அபயம் அளிக்கிறது. மேல் நோக்கி உயர்த்திய மூன்றாவது கரம் அக்கமாலையையும், அடுத்த கரம் தாமரையையும் தரித்துள்ளன.
கர்ப்பரட்சாம்பிகையை ஒரு தடவை பார்த்தாலே குழந்தை பாக்கியம் ஏற்படும் என்ற உணர்வு, நம்பிக்கை, பார்க்கும் பக்தர்களுக்கெல்லாம் ஏற்படுகிறது.
இவள் கர்ப்பத்தை ரட்சிப்பவள் சரி, திருமணமே ஆகாதவர்களுக்கு? அதற்கும் இவளிடம் மருந்து இருக்கிறது. திருமணம் கூடிவராத பெண்கள், அன்னையின் சன்னதியில் நெய்யினால் படி மெழுகிக் கோலமிட்டால், திருமணம் கூடிவருவதாகச் சொல்கிறார்கள்.
மகப்பேறு இல்லாதவர்கள், 48 நாட்கள் பிரசாத நெய்யை உண்டால் மகப்பேறு உண்டாகும் என்றும் சுகப்பிரசவம் ஆக அம்பாள் பிரசாதமான விளக்கெண்ணெயை நம்பிக்கையுடன் தடவி வந்தாலே போதும் என்று பலன் அடைந்தவர்கள் சொல்கிறார்கள்.
திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப் பெற்ற புண்ணியத்தலம் இது. பிரம்மன், கவுதமர் ஆகியோர் இங்கே தங்கி இறைவனை பூஜித்திருக்கிறார்கள். அம்மன் கோயில் அருகில் இருக்கும் கவுதம லிங்கத்தை நிறுவியவர் கவுதம முனிவரே என்கிறது புராணம்.
இந்தத் திருக்கருகாவூர் ஆலயத்தில் நவகிரகங்கள் எல்லாம் வித்தியாசமாக அமைந்திருக்கின்றன. சூரியனைச் சுற்றி மற்ற எல்லா கிரகங்களும் சூரியனையே பார்த்தவாறு அமைந்திருக்கின்றன. நவகிரகங்கள் அபய வரத முத்திரையுடன் காட்சி தருவதும் சிறப்பானது.
பிரதோஷம், வைகாசி விசாகம், ஆடிப்பூரம், நவராத்திரி போன்ற தினங்களில் இங்கே சிறப்பு வழிபாடு உண்டு. ராஜகோபுரத்தின் எதிரில் உள்ள ஷீரகுண்டம் என்னும் பால் குளத்தில் சிவராத்திரி அன்று ஈசன், தீர்த்தமாடுகிறார். இந்தக் குளம், காமதேனுவின் கால் குளம்பால் ஏற்படுத்தப்பட்டதாகும்.
- பால் குளத்தில் நீராடுவோர் மகப்பேறு எய்துவர்.
- சிதறியிருந்த கருவை எடுத்து குடத்தினுள் இட்டு காத்து ரட்சித்தாள் கர்ப்பரட்சாம்பிகை.
ஆதிகாலத்தில் திருக்கருகாவூர், முல்லைவனமாக இருந்த காலம். அமைதி தவழும் அந்த பிரதேசத்தில் கௌதமர் போன்ற முனிவர்கள் தவம் செய்து கொண்டிருந்தார்கள்.
தவம் செய்யும் முனிவர் பெருமக்களுக்கு உதவியாக நித்ரூபர்- வேதிகை என்ற தம்பதியர் இருந்து வந்தனர். குழந்தை பாக்கியம் இல்லாத அந்த தம்பதிகளுக்கு இவ்வாறு தொண்டு செய்தாலாவது இறைவன் தங்களை கண்திறந்து பார்க்க மாட்டானா? என்ற ஆதங்கம் இருந்தது.சிவனடியார்களுக்கு தொண்டு மற்றும் சிவனையும், பார்வதியையும் வழிபடுவது என்றே அந்த தம்பதியினரின் நாட்கள் கழிந்தன.
ஒருநாள், வேதிகை கர்ப்பவதியானாள். அவளுக்கும், நித்ருபருக்கும் சந்தோஷம் பிடிபடவில்லை, அகமகிழ்ந்தனர். கரு மெல்ல வளர்ந்து வந்தது. அன்றைய தினம் நித்ருபர், பணி காரணமாக வேறு ஊருக்கு சென்றிருந்தார்.
அன்றைக்கு ஏனோ தெரியவில்லை, வேதிகை மிகவும் சோர்வாக இருந்தாள். பலவீனமாக உணர்ந்தாள். ஐந்து மாத கர்ப்பம் காரணமான அசதி. கிறுகிறுவென மயக்கம் வரும் போலிருந்தது.
பேசாமல் ஒரு மூலையில் சுருண்டு படுத்துக்கொண்டாள். பிறக்கப் போகும் குழந்தையை நினைத்தபடி கண் அயர்ந்து கொண்டிருந்தாள்.
அதேநேரம் வாசலில் வந்து நின்றார் ஊர்த்துவபாதர் என்ற கோபக்கார முனிவர். முனிவருக்கு நல்ல பசி, `அம்மா, பிச்சை போடுங்கள்' என்று குரலெழுப்பினார். வேதிகைதான் மயக்கத்தில் இருக்கிறாளே, முனிவரின் பசிக்குரல் அவள் காதுகளில் விழவில்லை.
பசி மிகுதியில் கோபமும் மிகுந்தது முனிவருக்கு. ஏ பெண்ணே, நான் பிச்சைக்காக வந்திருப்பதை கூட கவனிக்காமல், உன் நினைவு வேறு எங்கே இருக்கிறது? நீ எதை நினைத்துக் கொண்டிருக்கிறாயோ அது அழிந்து போகட்டும்' என்று சாபமிட்டுவிட்டார்.
வேதிகை துடித்தாள். காரணம், அவள் அப்போது நினைத்துக் கொண்டிருந்தது தன் வயிற்றில் உள்ள கருவைத்தான். அதை போய் அழியுமாறு சாபம் கொடுத்துவிட்டாரே?
அடிவயிற்றிலே `சுருக்'கென்று ஓர் அபாய வலி வலித்தது. வேதிகை அழுதாள், புரண்டாள்... ஆம்... அவள் கர்ப்பம் கலைந்து போய் விட்டது. கரைந்து போய்விட்டது.
வேதிகை நடுநடுங்கினாள். ``அன்னையே, தாயே, தேவியே, கர்ப்பரட்சாம்பிகையே, என் நிலை இப்படி ஆகிவிட்டதே. உன் அருளால் கிடைத்த கர்ப்பம் இப்போது இல்லை என்று ஆகிவிட்டதே. நீ தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்'' என்று முறையிட்டாள். கதறினாள்.
உடனே கர்ப்பரட்சாம்பிகை அவள்முன் தோன்றினாள். கீழே சிதறியிருந்த கருவை எடுத்து ஒரு குடத்தினுள் இட்டாள். அது மட்டுமல்ல, அது குழந்தையாக உருவாகும் வரை காத்திருந்து, அதற்கு நைதுருவன் என்ற பெயரையும் சூட்டி வேதிகையிடம் தந்துவிட்டு மறைந்தாள். மெய்சிலிர்த்துப் போனாள் வேதிகை.
குழந்தை மெல்ல வளர்ந்தது. தெய்வக் குழந்தையாயிற்றே. அதற்கு சாதாரணப் பால் பிடிக்கவில்லை, சம்பந்தர் போல் சுவையான பாலுக்காக கதறியது.
பார்த்தார் சிவபெருமான். தேவலோகத்தில் இருந்து காம தேனுவை அழைத்து குழந்தையை பாலூட்டி வளர்க்குமாறு ஆணையிட்டார்.
காமதேனு தன் சுவையான பாலை குழந்தைக்கு தந்தது. அதோடு விட்டதா? தன் கால் குளம்பால் ஒரு குளத்தையே தோண்டியது. அதனுள் தன் பாலை நிரப்பிற்று. குழந்தை பாலில் விளையாடிற்று. (அந்த பால்குளம் இப்போதும் உள்ளது. இதில் நீராடுவோர் மகப்பேறு எய்துவர் என்கிறது புராணம்).
பணிக்காக வெளியூர் சென்றிருந்த நித்ருபர் ஊர் திரும்பினார். நடந்ததையெல்லாம் அறிந்து மெய்சிலிர்த்தார். கர்ப்பரட்சாம்பிகையைத் துதித்தார். அவருக்கும் காட்சி தந்தாள் அம்பிகை.
``நித்ருபனே, உனக்கு என்ன வேண்டும் கேள்...''
நமஸ்கரித்தார் நைத்ருபர். ``தாயே எங்களுக்கு அருள் பாலித்தது போல் இந்தத் தலத்திற்கு வந்து யார் வேண்டினாலும் நீங்கள் அவர்களின் கருவை காத்து சுகப்பிரசவம் நடக்க அருள் தர வேண்டும். அதுவே எனக்குப் போதும்.'' என்றார்.
அம்பிகை புன்னகைத்தாள், ``அப்படியே ஆகுக'' என்று ஆசி புரிந்தாள். அன்று முதல், அன்னையை வணங்கிய பெண்கள் எல்லாம் பலன் பெற்று வருகிறார்கள்.
- சிவ வழிபாட்டின் மூலம் புகழ் அடைந்தவர்கள்தான் நாயன்மார்கள்.
- அறுபத்துமூன்று நாயன்மார்களில் மூவர் பெண்கள்.
அறுபத்து மூன்று நாயன்மார்கள்
சிவ வழிபாட்டின் மூலம் புகழ் அடைந்தவர்கள்தான் நாயன்மார்கள்.
இவர்கள் 63 பேர் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
சைவத் திருமுறைகள் என அழைக் கப்படும் 12 திருமுறைகளின் தொகுதியில் நாயன்மார்களின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
முதல் மூன்று திருமுறைகள் திருஞான சம்பந்தராலும், திருமுறைகள் 4,5,6 திருநாவுக்கரசராலும், 7ஆம் திருமுறை சுந்தரராலும் ஆக்கப்பட்ட பண்ணோடு அமைந்த இசைப்பாடல்களாகும்.
நாயன்மார்களில் சிலரே சமய நூல்களில் புலமை உடையவர்கள். மற்றவர்கள் மிகச் சிறந்த பக்தர்கள் மட்டுமே.
பலரும் பல்வேறு தொழில்கள் செய்து உயிர்வாழ்ந்தவர்கள்.
இறையருள் பெற பக்தி மட்டுமே போதுமானது என்பதும் எல்லோரும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதுமே இவர்கள் வாழ்க்கை தரும் பாடமாக உள்ளது.
அறுபத்துமூன்று நாயன்மார்களில் மூவர் பெண்கள். கி.பி. மூன்று நான்காம் ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையார் நாயன்மார்களில் காலத்தால் மூத்தவர்.
தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார் ஆகும்.
மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாற நாயனார் என்ற அறியப்படுகிறார்.
அவர் மனைவி மங்கையர்கரசியார் என்பவர் நாயன்மார்களில் மற்றொரு பெண் ஆவார்.
திருநாவலுரைச் சேர்ந்த சடையனார் என்ற நாயன்மாரின் மனைவி இசைஞானியார் மூன்றாவது பெண் நாயன்மார் ஆவார்.
இவர்களின் மகன் சுந்தரமூர்த்தியார் சைவக்குரவர் நால்வருள் ஒருவரும் நாயன்மார்களில் ஒருவரும் ஆவார்.
63 நாயன்மார்கள் விவரம் வருமாறு
1.அதிபத்தர்
2.அப்பூதியடிகள்
3.அமர்நீதியார்
4.அரிவட்டாயர்
5.ஆனாயர்
6.இசைஞானியர்
7.இடங்கழியார்
8.இயற்பகையார்
9.இளையான்குடி மாறன்
10.உருத்திரபசுபதியார்
11.எறிபத்தர்
12.ஏயர்கோன்கலிக்காமர்
13.ஏனாதி நாதர்
14.ஐயடிகள் காடவர் கோன்
15.கணநாதர்
16.கணம் புல்லர்
17.கண்ணப்பர்
18.கலிக்கம்பர்
19.கலியர்
20.கழறிற்றறிவார்
21.கழட்சிங்கர்
22.காரியார்
23.குங்கிலியக்கலயர்
24.காரைக்கால்
25.குலச்சிறையார்
26.கூற்றுவார்
27.கோச்செங்கட்சோழர்
28.கோட்புலியார்
29.சடையனார்
30.சண்டேசுரர்
31.சத்தியார்
32.சாக்கியர்
33.சிறுப்புலியார்
34.சிறுத்தொண்டர்
35.சுந்தரர்
36.செருத்துணையார்
37.சோமாசிமாறர்
38.தண்டியடிகள்
39.திருக்குறிப்புத்தொண்டர்
40.திருஞானசம்பந்தர்
41.திருநாவுக்கரசர்
42.திருநாளைபோவார்
43.திருநீலகண்டர்
44.திருநீலகண்டயாழ்பாணர்
45.திருநீலநக்கர்
46.திருமூலர்
47.நமிநந்தியடிகள்
48.நரசிங்கமுனையாரையர்
49.நின்றசீர்நெடுமாறர்
50.நேசர்
51.புகழ்ச்சோழர்
52.புகழ்த்துனையார்
53.பூசலார்
54.பெருமிழவககுரும்பர்
55.மங்கயற்கரசியார்
56.மானக்கஞ்சாறர்
57.முருகர்
58.முனையடவார்
59.மூர்க்கர்
60.மூர்த்தியார்
61.மெய்ப்பொருளார்
62.வாயிலார்
63.விறண்மிண்டர்
- அடுத்து தேர்தலை எதிர்பார்த்து வர்றீங்களா? என சரமாரி கேள்வி எழுப்பினர்.
- பீமநகர்-ஆழ்வார்தோப்பு பாலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் சென்று வருகிறார்கள்.
திருச்சி:
திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதிக்கு காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் நேற்று மக்கள் குறைகேட்க வந்தார். அப்போது, அப்பகுதி எஸ்டிபிஐ கட்சியின் கிளைத் தலைவர் அப்துல் ரகுமான் தலைமையில் அக்கட்சியினர் திருநாவுக்கரசரை முற்றுகையிட்டு, ''4 வருஷத்துக்கு அப்புறம் இப்பத்தான் இங்கு வர்றீங்க. நன்றி சொல்லக்கூட வரல. அடுத்து தேர்தலை எதிர்பார்த்து வர்றீங்களா? என சரமாரி கேள்வி எழுப்பினர்.
மேலும் பீமநகர்-ஆழ்வார்தோப்பு பாலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் சென்று வருகிறார்கள். மிகவும் சேதமடைந்த இந்த பாலத்தை சீரமைத்து தர வேண்டும். இந்தப் பகுதி மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் காஸ் சிலிண்டர் குடோனை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என பலமுறை மனு அளித்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. உங்களையும் பார்க்க முடியவில்லை'' என சரமாரியாக குற்றம்சாட்டினர்.
அதற்கு பதிலளித்த திருநாவுக்கரசர், ''இந்தப் பாலத்தை கட்டுவதற்கு குறைந்தது ரூ.50லட்சம் ஆகும். இதை நான் செய்ய முடியாது. இங்கு அமைச்சருங்க இருக்காங்க, எம்எல்ஏ இருக்காங்க. அவங்களப் போய் பாருங்கள். என்னோட ஆபீஸ்ல 24 மணி நேரமும் ஆட்கள் இருங்காங்க. அவங்ககிட்ட மனு கொடுங்க. நான் 4 நாட்களாக இங்கேதான் இருக்கிறேன். எதுவாக இருந்தாலும் மனுவாக எழுதிக் கொடுங்கள். உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சிக்கிறேன்'' என்றார்.
இதனால் அதிருப்தியடைந்த அவர்கள் திருநாவுக்கரசருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் தரையில் அமர்ந்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் ஒரு வழியாக மனு அளித்து விட்டு போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
இதையடுத்து அங்கிருந்து திருநாவுக்கரசர் புறப்பட்டுச் சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- மகளிர் உரிமை மாநாடு பெரியார், அண்ணா காலத்தில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது.
- பா.ஜ.க.விலிருந்து அ.தி.மு.க. பிரிந்துள்ளதால் சிறுபான்மையினர் வாக்குகள் சிறிது அக்கட்சிக்கு செல்ல வாய்ப்புள்ளது.
புதுக்கோட்டை:
திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் ஏற்பாட்டின் பேரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் புதுக்கோட்டை அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை திருநாவுக்கரசர் எம்.பி. வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டிலேயே நம்பர் ஒன் மற்றும் பெரிய கட்சி தி.மு.க. தான், தி.மு.க.வை வளர்க்க காங்கிரஸ் பாடுபடுகிறது என்று அண்ணாமலை கூறுவது அர்த்தமற்ற குற்றச்சாட்டு.
மகளிர் உரிமை மாநாடு பெரியார், அண்ணா காலத்தில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. இன்று நாட்டில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்க்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த மாநாடு நடைபெறுகிறது.
கட்சி தலைவர் பதவிகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் மாற்றப்படுவது எல்லா அகில இந்திய கட்சியிலும் உள்ள நடைமுறை. அதே போல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் பதவியும் மாற்றப்படாலாம்.
அடுத்ததாக யாருக்கு வேண்டுமானாலும் அந்த பதவி வழங்கப்படலாம், அப்படி எனக்கு அந்த பதவியை கொடுத்தாலும் வேண்டாம் என்றா சொல்வேன், அதே வேளையில் இளைஞர்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கலாம்.
நான் மீண்டும் திருச்சி தொகுதி பாராளுமன்ற தொகுதியில் தான் போட்டியிட விரும்புகிறேன். அதற்கான முடிவை கட்சியின் தலைமை தான் எடுக்கும். அதற்கான வாய்ப்பை தி.மு.க. வழங்கும் என நம்புகிறேன்.
நான் இங்கு இருந்து இருந்தால் புதுக்கோட்டை எம்.பி. தொகுதியை பறிபோனதை தடுத்து இருப்பேன்.
பா.ஜ.க.விலிருந்து அ.தி.மு.க. பிரிந்துள்ளதால் சிறுபான்மையினர் வாக்குகள் சிறிது அக்கட்சிக்கு செல்ல வாய்ப்புள்ளது.
5 மாநில தேர்தல் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்ட தேர்தல் தான். காங்கிரஸ் அதிக மாநிலங்களில் இந்த தேர்தலில் வெற்றி அடையும் என்று அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் முருகேசன், முன்னாள் எம்எல்ஏ சுப்புராம், துரை.திவியநாதன், திருச்சி ரெக்ஸ், வழக்கறிஞர் சந்திரசேகரன், சூர்யா பழனியப்பன், துரைசிங்கம், மதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஜவகர் ஆதரவாளர்களான காங்கிரஸ் நிர்வாகிகளின் ஒரு பிரிவினர் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போராட்டம் மாவட்ட துணைத் தலைவர் சிக்கல் சண்முகம் தலைமையில் நடைபெற்றது.
திருச்சி:
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த ஜவகர் திடீரென மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக மாநகராட்சி கவுன்சிலர் எல் ரெக்ஸ் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் திருச்சி மாநகர், மாவட்ட காங்கிரஸ் தலைவர் மாற்றத்தை கண்டித்து, திருச்சி காங்கிரஸ் அருணாச்சலம் மன்றத்தில் ஜவகர் ஆதரவாளர்களான காங்கிரஸ் நிர்வாகிகளின் ஒரு பிரிவினர் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாவட்ட துணைத் தலைவர் சிக்கல் சண்முகம் தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் புத்தூர் சார்லஸ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மலைக்கோட்டை கோட்டத் தலைவர் ரவி , பொன்மலை கோட்ட தலைவர் செல்வகுமார், முன்னாள் கோட்ட மாவட்ட தலைவர்கள் கள்ளத்தெரு குமார், அப்துல் குத்தூஸ், ஜெகதீஸ்வரி, கலைசெல்வி, அண்ணா சிலை விக்டர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் போராட்டக்காரர் திடீரென்று காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தின் கதவை பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு, திருச்சி பாரளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசரை கண்டித்து கோஷமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
- இந்த 8 தலங்கள் ஒவ்வொன்றிலும் சிவபெருமான் ஒவ்வொரு வகையில் தனது வீரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
- இந்த 8 தலங்களும் விழுப்புரம், கடலூர், தஞ்சை, நாகை ஆகிய மாவட்டங்களில் உள்ளன.
திருநாவுக்கரசர் தனது பாடல் ஒன்றில் இந்த 8 வீரட்ட தலங்களை முறையே திருக்கண்டியூர், திருக்கடவூர்,திருவதிகை, திருக்குறுக்கை, திருவழுவூர், திருப்பறியலூர், திருக்கோவிலூர் மற்றும் திருவிற்குடி என்று வகைப்படுத்தியுள்ளார்.
இந்த 8 தலங்கள் ஒவ்வொன்றிலும் சிவபெருமான் ஒவ்வொரு வகையில் தனது வீரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த 8 தலங்கள் பற்றி யார் ஒருவர் சிறப்புற தம் நாவால் சொல்கிறார்களோ... அவர்களை நெருங்க எமன் கூட பயப்படுவான் என்பது வரலாறாகும்.
இந்த 8 வீரட்ட தலங்களுக்கும் உள்ள மற்றோரு சிறப்பு என்னவெனில், இந்த 8 தலங்களும் தேவார காலத்துக்கும் முன்பே இருந்த பழம்பெருமை கொண்டவை.
இந்த 8 தலங்களும் விழுப்புரம், கடலூர், தஞ்சை, நாகை ஆகிய மாவட்டங்களில் உள்ளன.