என் மலர்
நீங்கள் தேடியது "பள்ளி கல்வித்துறை"
- புயலால் ஏற்பட்ட பாதிப்பினால் நாளையும் (டிசம்பர் 6) சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- நாளை வரை பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் மறு நாளே அரையாண்டு தேர்வு முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மிச்சாங் புயல் வட தமிழக கடலோரப் பகுதியான சென்னையை ஒட்டிய பகுதிகளில் நேற்று வளைந்து கடந்து சென்றதால், அதன் வேகம் குறைந்து, வெகுநேரம் சென்னைக்கு அருகில் மழை மேகங்களுடன் பயணித்தது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை இடைவிடாமல் மழை கொட்டியது.
சென்னையில் பெய்த மழை காரணமாக மாநகர் முழுவதும் வெள்ளக்காடானது. புயல் உருவாவதற்கு முன்பே சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், கடந்த வியாழக்கிழமை முதலே பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதேபோல், புயலால் ஏற்பட்ட பாதிப்பினால் நாளையும் (டிசம்பர் 6) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வரும் 7ம் தேதி முதல் 22ம் தேதி வரை 10ம், 11ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும், 11ம் தேதி முதல் 21ம் தேதி வரை 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
நாளை வரை பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் மறு நாளே அரையாண்டு தேர்வு முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வரும் 7ம் தேதி முதல் 10ம், 11ம், 12ம் வகுப்புகளுக்கு நடைபெற இருந்த அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- தேவை உள்ள பள்ளிகளுக்கு பணியிட மாறுதல் செய்ய வேண்டும்.
- புதிய விதிமுறைகளை பள்ளி கல்வித்துறை செயலாளர் வெளியிட்டார்.
புதிய ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டால் 5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது என பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகமாக உள்ளன.
ஆண்டுதோறும் ஜூன் 1ம் தேதி முதல் 30ம் தேதிக்குள் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களை, தேவை உள்ள பள்ளிகளுக்கு பணியிட மாறுதல் செய்ய வேண்டும்.
இதற்கு பிறகு பணியிட மாறுதல் பொது கலந்தாய்வை நடத்த வேண்டும் போன்ற புதிய விதிமுறைகளை பள்ளி கல்வித்துறை செயலாளர் வெளியிட்டார்.
- வடமதுரை ஒன்றியத்தில் 19 நாட்களுக்கு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் உத்தரவு.
அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாட்களுக்கு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், போராட்டத்தில் கலந்துகொண்ட நாட்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
19 நாட்களுக்கு உரிய ஊதியம், பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை போராட்டம்.
- சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை என 19 நாட்களுக்கு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
மேலும், போராட்டத்தில் கலந்துகொண்ட நாட்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
19 நாட்களுக்கு உரிய ஊதியம், பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வௌியானது.
இந்நிலையில், அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் கிடையாது என தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "19 நாட்களும் விடுமுறை நாட்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும், சம்பளம் படித்தம் செய்ய உத்தரவிட்டு சுற்றறிக்கை வெளியிட்ட அலுவலர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் கூறினார்.
- படிக்கும் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு.
- பள்ளிக் கல்வித் துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
சென்னை:
படிக்கும் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்குகளை பள்ளிகளிலேயே தொடங்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
1-ம் வகுப்பு முதல் 12-ம் வப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக உதவி தொகைகள் மற்றும் ஊக்க தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த உதவித்தொகைகள் மாணவ-மாணவிகளுக்கு குறித்த நேரத்தில் நேரடியாக வழங்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் மாணவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் செலுத்திடும் முறை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு வங்கி கணக்கு கட்டாயம் தேவைப்படுவதால் இந்த சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்தந்த பகுதியில் உள்ள தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களின் மேற்பார்வையில் வங்கி கணக்குகள் தொடங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முதல் நாளே பாடப் புத்தகங்கள் வழங்க ஏற்பாடு.
- மாணவர்கள் கட்டணமின்றி அரசு பஸ்களில் சீருடையுடன் பயணிக்கலாம்.
சென்னை:
கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாளே பாடப் புத்தகங்கள் வழங்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 8-ந் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலும் வந்ததால், இதர வகுப்புகளுக்கும் வழக்கத்தைவிட முன்கூட்டியே ஆண்டு இறுதித்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.
அதன்படி 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஏப்ரல் 2 முதல் 5-ந் தேதி வரையும், 4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2 முதல் 23-ந் தேதி வரையும் ஆண்டு இறுதித்தேர்வுகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 24-ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.
வழக்கமாக பள்ளி மாணவர்களுக்கு மே மாதத்தில் கோடை விடுமுறை விடப்பட்டு, ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த 4-ந் தேதி வெளியாக இருந்ததால், 6-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்து இருந்தது.
இதனிடையே கடும் கோடை வெயில் மற்றும் வெப்ப அலை காரணமாக பள்ளிகள் திறப்பை தள்ளிப்போடுமாறு எழுந்த கோரிக்கைகளை அடுத்து, 10-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி தமிழ்நாட்டில் இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டன.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் இன்றே வழங்கப்பட உள்ளன. அந்த வகையில் 70 லட்சத்து 67 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படுவதோடு, 60 லட்சத்து 75 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு நோட்டுகளும், 8 லட்சத்து 22 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு புவியியல் வரைபடமும் வழங்கப்பட உள்ளன.
கல்வியாண்டை உற்சாகமாக தொடங்க உதவும் வகையில், கல்வியாண்டின் முதல் நாளிலேயே இவை வழங்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. இவை தவிர்த்து, தமிழக அரசின் சார்பில் புத்தகப்பை, காலணி, மழைக்கோட்டு, சீருடைகள், வண்ண பென்சில் மற்றும் கிரையான்கள், ஜாமின்ட்ரி பாக்ஸ் உள்ளிட்டவையும், அவை அவசியப்படும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளன.
மேலும், புதிய இலவச பஸ் பயண அட்டைகள் வழங்கப்படும் வரை ஏற்கனவே உள்ள பழைய அட்டையை பயன்படுத்தி மாணவர்கள் கட்டணமின்றி அரசு பஸ்களில் சீருடையுடன் பயணிக்கலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
- முதல் நாளே பாட புத்தகங்கள் வழங்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு.
- தமிழ்நாட்டில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.
கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாளே பாட புத்தகங்கள் வழங்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திரும்பும் குழந்தைகள் அனைவருக்கும் இக்கல்வியாண்டு இனிதே அமைய வாழ்த்துகிறேன்!
பெற்றோர்களும், ஆசிரியர்களும் மீண்டும் வகுப்பறைக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்களின் மனநிலை - உடல்நிலை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வாசிப்பிலும் விளையாட்டிலும் மாணவர்களுக்கு ஊக்கமூட்டி மகிழ்ச்சியோடு இருக்கும்படி பார்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அரசு பள்ளிகளில் என்சிசி, சொற்பொழிவு உள்ளிட்ட எந்த வகையிலும் வெளியாட்கள் நிகழ்ச்சி நடத்துவதற்கு தடை.
- சர்ச்சையை தொடர்ந்து மகா விஷ்ணு தலைமறைவானதாக தகவல் பரவியது.
சென்னை எம்.ஜி.ஆர் நகரில் உள்ள அரசு பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நடத்திய மகாவிஷ்ணு சர்ச்சையாக கருத்துகளை பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவன்பில் மகேஷ் கடும் கண்டனம் தெரிவித்ததோடு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், அரசு பள்ளிகளில் என்சிசி, சொற்பொழிவு உள்ளிட்ட எந்த வகையிலும் வெளியாட்கள் நிகழ்ச்சி நடத்துவதற்கு தடை விதித்தும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.
தொடர்ந்து, மகாவிஷ்ணு விவகாரத்தில், சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள பள்ளியில் பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் விசாரணை நடத்தினார்.
இதற்கிடையே, இந்த சர்ச்சையை தொடர்ந்து மகா விஷ்ணு தலைமறைவானதாக தகவல் பரவியது.
இந்நிலையில், மகா விஷ்ணு தற்போது ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருப்பதாகவும், இப்பிரச்னை குறித்து விரைவில் அவர் விளக்கம் அளிப்பார் எனவும் திருப்பூரில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
- கல்வி சாராத நிகழ்ச்சி எதையும் பள்ளிகளில் நடத்தக்கூடாது என்று அந்த அறிக்கையில் உத்தரவிடப்பட்டுள்ளது.
- பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் நேற்று உடனடியாக விசாரணையை தொடங்கினார்.
சென்னை:
சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கடந்த மாதம் 28-ந்தேதி சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. காலையில் அசோக்நகர் பள்ளியிலும், மாலையில் சைதாப்பேட்டை பள்ளியிலும் இந்த சொற்பொழிவு நடத்தப்பட்டது.
பரம்பொருள் அறக்கட்டளை என்ற அமைப்பை நடத்தி வரும் மகாவிஷ்ணு என்பவர் இந்த இரு பள்ளிகளிலும் சொற்பொழிவு நிகழ்த்தினார். காலையில் அசோக்நகர் பள்ளியில் அவர் சொற்பொழிவு நடத்திய போது வேத மந்திரங்கள் பற்றி பேசியதாக தெரிய வந்துள்ளது.
அந்த வேத மந்திரங்களை அவர் மாணவிகளை திரும்ப சொல்ல சொல்லி பேசியதாகவும் கூறப்படுகிறது.
மாலையில் சைதாப்பேட்டை அரசு பள்ளியில் பேசும்போது, "பாவம், புண்ணியம், மறுபிறவி, குருகுல கல்வி" ஆகியவை பற்றி மகாவிஷ்ணு பேசினார். முன் ஜென்மங்களில் பாவங்கள் செய்தவர்கள் தான் மறுபிறவியில் மாற்றுத்திறனாளிகளாக பிறக்க நேரிடுகிறது என்று பேசினார்.
இதற்கு அந்த பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருக்கும் மாற்றுத்திறனாளி ஆசிரியரான சங்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவுக்கும், ஆசிரியர் சங்கருக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது. மாணவிகளை நல்வழிப்படுத்துவது பற்றியே சொற்பொழிவாளர் பேச வேண்டும் என்று ஆசிரியர் சங்கர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
28-ந்தேதி சைதாப்பேட்டை பள்ளியில் நடந்த இந்த சர்ச்சை முதலில் வெளியில் தெரியவில்லை. இந்த நிலையில் பரம்பொருள் அறக்கட்டளையை சேர்ந்த நிர்வாகிகள் அசோக் நகர், சைதாப்பேட்டை பள்ளிகளில் மகாவிஷ்ணு பேசியதை எடிட் செய்து கடந்த 4-ந்தேதி சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
அதன் பிறகுதான் மகா விஷ்ணுவின் பேச்சு சர்ச்சையாக வெடித்தது. நேற்று முன்தினம் இதுபற்றி சமூக வலைதளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று அசோக் நகர் பள்ளியில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்க பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி சென்றிருந்தார்.
அப்போது அவரிடம் இந்த சர்ச்சை குறித்து கேட்கப்பட்டது. இதையடுத்து நிருபர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , "இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரித்து தகவல் அளித்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே மகா விஷ்ணுவை சர்ச்சைக்குரிய வகையில் பேச அனுமதித்ததற்காக அசோக்நகர் அரசு பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி, சைதாப்பேட்டை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் ஆகிய இருவரும் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். அதோடு தமிழ்நாடு முழுக்க பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது.
கல்வி சாராத நிகழ்ச்சி எதையும் பள்ளிகளில் நடத்தக்கூடாது என்று அந்த அறிக்கையில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த விவகாரம் கடும் சர்ச்சையாக உருவெடுத்து இருக்கிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சென்னை சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த புகார் மனு மீது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே பள்ளி கல்வித்துறை செயலாளர் மதுமதி சென்னை பள்ளிகளில் நடந்த சர்ச்சைக்குரிய சொற்பொழிவு நிகழ்ச்சிகள் பற்றி விரிவான விசாரணை நடத்துமாறு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பனுக்கு அறிவுறுத்தினார். மேலும் விசாரணை அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதையடுத்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் நேற்று உடனடியாக விசாரணையை தொடங்கினார். அசோக்நகர் அரசு பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசியிடம் முதலில் விசாரணை நடத்தினார். சுமார் ஒரு மணி நேரம் இந்த விசாரணை நீடித்தது.
அசோக்நகர் பள்ளியில் இந்த நிகழ்ச்சியை நடத்த சொன்னது யார்? என்ன நோக்கத்துக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது? என்று 2 கேள்விகள் அடிப்படையில் விசாரணை நடந்தது. அப்போது தலைமை ஆசிரியை தமிழரசி, "வழக்கமாக வாரம் தோறும் மாணவிகளுக்கு நல்வழி சொற்பொழிவு நடத்தப்படுவது உண்டு. அந்த அடிப்படையில்தான் இந்த சொற்பொழிவு நடத்தப்பட்டது. ஆன்மிகம் சார்ந்து எதுவும் பேசவில்லை" என்று விளக்கம் அளித்தார்.
அதுபோல சைதாப்பேட்டை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சண்முக சுந்தரம், மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் சைதாப்பேட்டை பள்ளி ஆசிரியர் சங்கர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. நிகழ்ச்சியின் போது என்ன நடந்தது என்பது பற்றி பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் முழுமையாக கேட்டறிந்தார்.
இதைத் தொடர்ந்து மேலும் 2 அல்லது 3 பேரிடம் அவர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளார். இன்றும் நாளையும் விடுமுறை என்பதால் அடுத்த வாரம் தொடக்கத்தில் அவர் விசாரணையை தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் அவர் 2 அரசு பள்ளிகளில் நடந்த ஆன்மிக சொற்பொழிவுகள் பற்றி அறிக்கை தயார் செய்ய உள்ளார்.
தமிழக அரசிடம் அந்த அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டு இருப்பதால் 3 நாட்களில் அவர் அறிக்கையை சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டமிட்டு உள்ளார்.
எனவே இந்த சர்ச்சை விவகாரத்தில் அடுத்த வாரம் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. பள்ளி கல்வித்துறை வட்டாரத்தில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் இதுவரை நடத்திய விசாரணை மற்றும் ஆய்வுகள் மூலம் பள்ளி கமிட்டியில் உள்ள ஒரு நபர் பரிந்துரை செய்ததன் மூலம் மகா விஷ்ணு சென்னையில் உள்ள 2 அரசு பள்ளிகளில் பேச வாய்ப்பு பெற்றது தெரியவந்துள்ளது. அது பற்றியும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் பள்ளிகளில் பேசுவதற்கு சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு பணம் கொடுத்தது தெரிய வந்துள்ளது. யூடியூப் சேனலில் பிரபலம் ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் பணம் கொடுத்து சொற்பொழிவு செய்ததாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
இதுபற்றியும் பள்ளி கல்வித்துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு புதிய அறிவுறுத்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், "பள்ளிகளில் சொற்பொழிவாற்ற தகுதியானவர்களை மட்டுமே அழைக்க வேண்டும். கல்லூரிகளில் அறிவார்ந்த பேராசிரியர்கள் உள்ளனர். அவர்களை அழைத்து பேச வைக்கலாம்.
விஞ்ஞானிகளை அழைக்க வேண்டும் என்றால் இஸ்ரோவில் இருக்கும் விஞ்ஞானிகளை அழைத்து வந்து பேச வைக்கலாம். பேச வருபவர்கள் யார் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்" என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று சென்னை திரும்புவதாக வெளியான தகவலையடுத்து போலீசார் விமான நிலையத்துக்கு சென்று நேற்று இரவு விசாரித்தனர்.
- ஒருவேளை மகாவிஷ்ணு இன்று சென்னை திரும்பாவிட்டால் அவரிடம் விசாரணை நடத்துவது எப்படி? என்பது பற்றியும் ஆலோசித்து வருகிறார்கள்.
சென்னை:
சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகரில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் என்கிற அமைப்பை சேர்ந்த மகா விஷ்ணு என்கிற சொற்பொழிவாளர் மாணவ-மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதாக கூறி உரையாற்றினார்.
அவரது பேச்சில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்கள் இடம்பெற்றிருந்தது. கடந்த பிறவியில் பாவம் செய்தவர்களே மாற்றுத்திறனாளிகளாக பிறக்கிறார்கள் என்கிற மகாவிஷ்ணுவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இதை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மகாவிஷ்ணுவின் பேச்சுக்கு சைதாப்பேட்டை பள்ளியில் வைத்து மாற்றுத்திறனாளியான பார்வையற்ற ஆசிரியர் சங்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மகா விஷ்ணுவுக்கும், ஆசிரியர் சங்கருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இது தொடர்பான வீடியோக்கள் வெளியான நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டியில் சர்ச்சைக்குரிய சொற்பொழிவு தொடர்பாக மகா விஷ்ணு மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க தலைவர் வில்சன் சைதாப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதில் மகாவிஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகள் வன்கொடுமை சட்டப்படியும், ஊனமுற்றோர் உரிமைகள் சட்டப்பிரிவு 72(அ)-வின் படியும் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே மகா விஷ்ணு வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் நான் தப்பி ஓடிவிட்டதாக தகவல் பரப்புகிறார்கள். எங்கேயும் நான் ஓடி ஒளியவில்லை. ஆஸ்திரேலியாவில் இருக்கும் நான் இன்று சென்னை வருகிறேன். போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து மகாவிஷ்ணுவின் வருகைக்காக காத்திருக்கும் போலீசார் அவர் சென்னை வந்து இறங்கியதும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதன்பிறகு அவர் மீது கைது நடவடிக்கை பாயுமா? என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட புகார் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க முடியும்? என்பது பற்றி சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.
மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று சென்னை திரும்புவதாக வெளியான தகவலையடுத்து போலீசார் விமான நிலையத்துக்கு சென்று நேற்று இரவு விசாரித்தனர். அப்போது மகாவிஷ்ணு என்கிற பெயரில் வெளிநாடுகளில் இருந்து யாரும் வருவதற்கான எந்த விவரங்களும் கிடைக்கவில்லை என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.
ஒருவேளை மகாவிஷ்ணு இன்று சென்னை திரும்பாவிட்டால் அவரிடம் விசாரணை நடத்துவது எப்படி? என்பது பற்றியும் ஆலோசித்து வருகிறார்கள். மதுரையை சேர்ந்த இவரது இயற்பெயர் மகா. பரம்பொருள் பவுண்டேசன் என்கிற அமைப்பை தொடங்கியுள்ள இவர் தனது பெயருக்கு பின்னால் விஷ்ணு என்கிற பெயரை சேர்த்துக் கொண்டு சொற்பொழிவாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
- மாற்றுத்திறனாளிகள் சமூக நீதி இயக்கத்தின் மாநில தலைவர் சரவணன், மகாவிஷ்ணு மீது புகார் அளித்துள்ளார்.
- சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் டிசம்பர்-3 இயக்கத்தின் தலைவர் தீபக் புகார் அளித்துள்ளார்.
அரசு பள்ளிகளில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ள சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் திருவொற்றியூர் போலீஸ் நிலையம் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் ஆகிய 2 இடங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் சமூக நீதி இயக்கத்தின் மாநில தலைவர் சரவணன், மகாவிஷ்ணு மீது புகார் அளித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் டிசம்பர்-3 இயக்கத்தின் தலைவர் தீபக் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் மனுக்களில், மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சட்டப்படி மகாவிஷ்ணு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- பள்ளிகள் திறப்பு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
- சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில் பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு டிச. 23-ந்தேதியுடன் அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்தது. டிச. 24-ந்தேதி முதல் அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. தற்போது அனைத்து பள்ளி மாணவர்களும் அரையாண்டு விடுமுறையில் உள்ளனர்.
அனைத்து பள்ளிகளும் ஜனவரி 2-ந்தேதி (நாளை) மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. இதன் மூலம் மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை கிடைத்தது.
2024-ம் ஆண்டு விடைபெற்று இன்று 2025 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது.
இந்நிலையில் ஜன.2-ந்தேதியான நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் அரையாண்டு விடுமுறை முடிந்து திறக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், மாணவர்கள் அரையாண்டு தேர்வு விடுமுறையில் உள்ள நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
இந்த வாரத்தில் பள்ளி வேலை நாள் 2 நாட்கள் மட்டுமே எஞ்சி உள்ளதால் வியாழன், வெள்ளி விடுமுறை அறிவித்தால் தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதுதொடர்பான தகவல் இணையத்தில் பரவி வந்தது.
இந்நிலையில், அரையாண்டு விடுமுறை முடிந்து நாளை ஜனவரி 2ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கும் என பள்ளி கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
விடுமுறை நீட்டிக்க வாய்ப்பு என சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில் பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.