search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பும்ரா"

    • சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை நாளை எதிர் கொள்கிறது.
    • டி20 உலகக் கோப்பை தொடர் முடிவடைந்தவுடன் இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

    பிரிட்ஜ்டவுன்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் உள்ள போட்டிகள் முடிவடைந்த நிலையில் சூப்பர் 8 சுற்று போட்டிகள் வெஸ்ட் இண்டீசில் இன்று தொடங்குகிறது.

    குரூப் 1 பிரிவில் இடம் பெற்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை நாளை (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு எதிர்கொள்கிறது. அரை இறுதியில் நுழைய 2 ஆட்டத்தில் வெல்ல வேண்டும். இதனால் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி முன்னேற இந்திய அணி முயற்சிக்கும்.

    இந்த தொடர் முடிவடைந்தவுடன் இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் மூத்த வீரர்கள் ரோகித், கோலி, பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், சாம்பியன்ஸ் டிராஃபி தொடர்களில் கவனம் செலுத்த ஓய்வு வழங்கப்பட உள்ளதாகவும், புதுமுக, இளம் வீரர்களை உள்ளடக்கிய அணி ஜிம்பாப்வேவுக்கு செல்லும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

    • கிரிக்கெட் போட்டி 19-வது நூற்றாண்டில் டெஸ்ட் வடிவில் சர்வதேச போட்டியாக மாறியது.
    • 16-வது நூற்றாண்டில் இங்கிலாந்தால் கண்டுபிடிக்கப்பட்ட விளையாட்டு போட்டியாக கருதப்படுகிறது.

    இந்தியாவின் நட்சத்திர பந்து வீச்சாளராக திகழ்பவர் ஜேஸ்பிரிட் பும்ரா. யார்க்கர், ஸ்விங், பவுன்ஸ் என பந்து வீச்சில் கிங்-ஆக திகழ்கிறார். டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இதனால் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    இந்த நிலையில் பாலிவுட் நடிகரான ரித்தஷ் தேஷ்முக் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு போட்டோ அனைவரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது.

    அந்த படம் 10-ம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பம் ஆகும் இந்த சிற்பத்தை பார்க்கும்போது பும்ரா பந்து வீசும் சைகை பிரதிபலிப்பது போல் உள்ளது.

    கிரிக்கெட் போட்டி 16-வது நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 19-வது மற்றும் 20-வது நுற்றாண்டில் உலககளில் பல்வேறு நாடுகளில் விளையாடப்பட்டது. 19-வது நூற்றாண்டில் முதன்முறையாக டெஸ்ட் முறையில் கிரிக்கெட்டில் விளையாடப்பட்டது.

    ஆனால் 10-ம் நூற்றாண்டு படத்தை பதிவிட்டுள்ளதாக குறித்து ரசிகர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

    • டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
    • 120 ரன்களை இலக்காக துரத்திய பாகிஸ்தான் அணி கடைசி ஓவர் வரை போராடி தோல்வியை தழுவியது.

    டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 119 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இதைத் தொடர்ந்து 120 ரன்களை இலக்காக துரத்திய பாகிஸ்தான் அணி கடைசி ஓவர் வரை போராடி தோல்வியை தழுவியது. இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான் அணி போட்டியில் தோற்றது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரான ஷோயப் அக்தர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வீடியோ ஒன்றை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில் "இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்தியா 11 ஓவர்கள் முடிவில் 82 ரன்களில்தான் இருந்தார்கள். 160 ரன்கள் அடிக்க நினைத்த இந்திய அணியால் அதை செய்ய இயலவில்லை. ஆனால் பாகிஸ்தானிற்கு அப்படி கிடையாது அவர்கள் எளிதில் வெற்றி பெற்றிருக்கலாம், ரிஸ்வான் இன்னும் கூடுதலாக 20 ரன்கள் எடுத்து இருந்தால் போதுமானதாக இருந்திருக்கும்."

    "இந்த போட்டியில் வெற்றி எளிமையாகவே இருந்தது, கொஞ்சம் மூளையை உபயோகப்படுத்தி இருந்தால் ஜெயித்திருக்கலாம், 47 பந்துகளில் 46 ரன்கள் தேவை. ஃபகர் இன்னும் ஆட்டமிழக்காமல் இருக்கிறான் அப்படி இருந்தும் நம்மால் ஜெயிக்க முடியவில்லை. இது மிகவும் வருத்தமாக இருக்கிறது" என்று அவரது வேதனையையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தி உள்ளார்.

    இந்த வீடியோவுக்கு அவர், "ஏமாற்றப்பட்டேன், காயமுற்றேன்" போன்ற வார்த்தைகளை நான் பதிவிட தயாராக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்," என தலைப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    • ஹர்திக் பாண்ட்யா 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.
    • பும்ரா 3 ஓவரில் 6 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

    டி20 உலகக் கோப்பையில் நியூயார்க்கில் நடைபெற்றும் வரும் போட்டியில் இந்தியா- அயர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி அயர்லாந்து அணி முதலில் களம் இறங்கியது. தொடக்க வீரர்களான ஆண்ட்ரூ பால்பிரைன் (5), பால் ஸ்டிர்லிங் (2) ஆகியோரை அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் டக்கர் 10 ரன்னில் ஹர்திக் பாண்ட்யா பந்தில் வெளியேறினார்.

    அதன்பின் அயர்லாந்து இந்தியாவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் ஒரு கட்டத்தில் 50 ரன்களை தாண்டுமா? என்ற நிலை இருந்தது.

    கர்ட்டிஸ் கேம்பர் 12 ரன்களும், டெலானி 26 ரன்களும், லிட்டில் 14 ரன்களும் எடுக்க அயர்லாந்து 70 ரன்களை கடந்தது. இறுதியாக 16 ஓவரில் 96 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    ஹர்திக் பாண்ட்யா 4 ஓவரில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். அர்ஷ்தீப் சிங், பும்ரா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். சிராஜ், அக்சர் பட்டேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • ரோகித் சர்மா 14 போட்டிகளில் விளையாடி 417 ரன்கள் அடித்துள்ளார்.
    • பும்ரா 13 போட்டிகளில் 20 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த வருட ஐபிஎல் சீசன் சிறப்பாக அமையவில்லை. 14 போட்டிகளில் நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

    முதல் மூன்று போட்டிகளில் தோல்வியடைந்த மும்பை இந்தியன்ஸ், அதற்கு பின் தொடரந்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. என்றபோதிலும் அதன் உத்வேகத்தை தொடர்ந்து எடுத்துச்செல்ல முடியவில்லை. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன் பதவிதான். அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டதால் அணியில் இரு பிரிவு உண்டானதாக கூறப்பட்டது.

    மேலும் ஹர்திக் பாண்ட்யா இந்த சீசனில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்படவில்லை. ஒட்டுமொத்தமாக கடைசி இடத்தை பிடித்து ஏமாற்றம் அடைந்துள்ளது.

    ரோகித் சர்மா 14 போட்டிகளில் விளையாடி 417 ரன்கள் சேர்த்து அதிக ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்கள் வரிசையில் முதல் இடம் பிடித்துள்ளார். இவரது ஸ்கோரில் ஒரு சதம், ஒரு அரைசதம் அடங்கும்.

    திலக் வர்மா 13 போட்டிகளில் விளையாடி 416 ரன்கள் அடித்துள்ளார். இவரது ஸ்கோரில் 3 அரைசதம் அடங்கும். சூர்யகுமார் யாதவ் 11 போட்டிகளில் விளையாடி 345 ரன்கள் அடித்துள்ளார். இஷான் கிஷன் 320 ரன்களும், டிம் டேவிட் 241 ரன்களும் சேர்த்தனர்.

    பந்து வீச்சில் பும்ரா 13 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இந்த சீசனில் இதுவரை பஞ்சாப் அணி வீரர் ஹர்ஷல் பட்டேல் 13 போட்டிகளில் 22 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்.

    சாவ்லா மற்றும் கோயேட்சே தலா 13 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா 11 விக்கெட்டுகளும், நுவான் துஷாரா 8 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.

    மும்பை இந்தியன்ஸ் கடந்த முறை பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருந்தது. 2022-ல் கடைசி இடத்தை பிடித்தது. 2021-ல் ஐந்தாவது இடத்தையும், 2020-ல் முதல் இடத்தையும், 2019-ல் முதல் இடத்தையும், 2018-ல் ஐந்தாவது இடத்தையும், 2017-ல் முதல் இடத்தையும், 2015-ல் 2-வது இடத்தையும், 2014-ல் ஐந்தாவது இடத்தையும், 2013-ல் 2-வது இடத்தையும், 2012-ல் 3-வது இடத்தையும், 2011-ல் 3-வது இடத்தையும், 2010-ல் முதல் இடத்தையும், 2009-ல் 7-வது இடத்தையும், 2008-ல் ஐந்தாவது இடத்தையும் பிடித்திருந்தது.

    • டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை டக் அவுட் ஆன வீரர் என்ற சாதனையை நரைன் படைத்துள்ளார்.
    • ஐபிஎல் கிரிக்கெட்டில் 16 முறை சுனில் நரைன் டக்அவுட் ஆகியுள்ளார்.

    ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

    அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 16 ஓவர் முடிவில் 157 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் பும்ரா வீசிய ஓவரின் முதல் பந்திலேயே சுனில் நரைன் கிளீன் போல்டு ஆனார். இதன்மூலம் நரைன் டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை டக்அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

    அவர் 44-வது முறையாக டக்அவுட் ஆகி முதலிடம் பிடித்துள்ளார். இதற்கு முன் அலெக்ஸ் ஹால்ஸ் 43 முறை டக்அவுட் ஆகி 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். சுனில் நரைன் அதேபோல் ஐபிஎல் கிரிக்கெட்டில் 16 முறை சுனில் நரைன் டக்அவுட் ஆகியுள்ளார்.

    அதிகமுறை டி20-யில் டக்அவுட் ஆன வீரர்கள்:

    சுனில் நரைன் (44)

    அலெக்ஸ் ஹால்ஸ் (43)

    ரஷீத் கான் (42)

    பால் ஸ்டிர்லிங் (32)

    கிளென் மேக்ஸ்வெல் (31)

    ஜேசன் ராய் (31)  

    • ரன் சேசிங்கில் ரோகித், இஷான் கிஷன் பேட்டிங் செய்த விதம், ஆட்டத்தை முன் கூட்டியே முடிப்பது எங்களுக்கு முக்கியமானதாக இருந்தது.
    • மும்பை அணியில் பும்ரா இருப்பது எனது அதிர்ஷ்டம். நான் அவரிடம் கேட்கும் ஒவ்வொரு முறையும் அவர் விக்கெட்டுகளைப் எடுத்து தருகிறார்.

    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று மும்பையில் நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் தோற்கடித்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது. கேப்டன் டு பிளிசிஸ் 61 ரன்னும், படிதார் 50 ரன்னும், தினேஷ் கார்த்திக் 53 ரன்னும் எடுத்தனர். மும்பை தரப்பில் பும்ரா 5 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் விளையாடிய மும்பை, 15.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து வென்றது. தொடர்ந்து இஷான் கிஷன் 69 ரன்னும், ரோகித் சர்மா 38 ரன்னும், சூர்ய குமார் யாதவ் 52 ரன்னும் எடுத்தனர்.

    வெற்றி குறித்து மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-

    வெற்றி பெறுவது எப்போதும் அற்புதமானது. நாங்கள் வெற்றி பெற்ற விதம் சிறப்பாக இருந்தது. இம்பாக்ட் பிளேயர் விதியால் கூடுதல் பந்து வீச்சாளரைப் பயன்படுத்த முடிகிறது. இது எனக்கு கூடுதல் பயனை அளித்தது. ரன் சேசிங்கில் ரோகித் சர்மா, இஷான் கிஷன் பேட்டிங் செய்த விதம், ஆட்டத்தை முன் கூட்டியே முடிப்பது எங்களுக்கு முக்கியமானதாக இருந்தது.

    இந்த ஆடுகளத்தில் இலக்கு குறைவாக இருந்ததால், ரன் ரேட்டை உயர்த்த நினைத்தோம். மும்பை அணியில் பும்ரா இருப்பது எனது அதிர்ஷ்டம். நான் அவரிடம் கேட்கும் ஒவ்வொரு முறையும் அவர் விக்கெட்டுகளைப் எடுத்து தருகிறார். அவருக்கு அனுபவமும் நம்பிக்கையும் அதிகம். பெங்களூரு கேப்டன் டு பிளிசிஸ் சில இடங்களில் பந்தை அடித்தார். அது போன்று வேறு வீரர்கள் அடித்து நான் பார்த்ததில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பெங்களூரு கேப்டன் டு பிபெலிசிஸ் கூறும்போது, ஆட்டத்தில் பனி ஒரு பெரிய பங்கை வகிக்கும் என்று எங்களுக்குத் தெரியும். எங்களுக்கு 215-220 ரன்கள் தேவைப்பட்டது. 190 ரன் போதுமானதாக இல்லை. பனி படிந்தவுடன் மிகவும் கடினமாக இருந்தது. பந்தை பலமுறை மாற்றினோம். மும்பை அணி வீரர்கள் எங்கள் பந்துவீச்சாளர்களை நிறைய தவறுகளைச் செய்ய வைத்தார்கள். முக்கியமான கட்டங்களில் முக்கிய விக்கெட்டுகளை இழந்தோம். பும்ரா சிறப்பாக பந்து வீசினார். மலிங்கா போன்ற ஒருவர் 20 ஓவர் கிரிக்கெட டில் சிறந்த பந்துவீச்சாளராக இருந்தார். அதை தற்போது பும்ரா வைத்துள்ளார் என்றார்.

    மும்பை அணி 2-வது வெற்றியை பெற்றது. பெங்களூரு 5-வது தோல்வியை சந்தித்தது.

    • இந்த போட்டியில் நடுவர்கள் மும்பை அணிக்கு சாதகமாக வழங்கிய முடிவுகள் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.
    • மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டும் 12 வீரர்கள் களத்தில் விளையாடுவதாக ரசிகர்கள் கிண்டல் செய்வது வழக்கம்.

    மும்பை:

    ஐபிஎல் தொடரில் நேற்றிரவு நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 196 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் நடுவர்கள் மும்பை அணிக்கு சாதகமாக வழங்கிய முடிவுகள் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.

    மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதும் போட்டியில், நடுவர்கள் சர்ச்சைக்குரிய முடிவுகளை வழங்குவது தொடர்கதையாகவே இருந்துவருகிறது. ஐபிஎல்லில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையே முட்டிய நோ-பால் சர்ச்சை தான், சர்வதேச அளவ் டி20 போட்டிகளில் கூட முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

    2019-ம் ஆண்டு மும்பை மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய போட்டியில் கடைசி 1 பந்துக்கு 7 ரன்கள் அடிக்கவேண்டிய இடத்தில், லசித் மலிங்கா கடைசி பந்தை நோ-பாலாக வீசியும் நோ-பால் வழங்கப்படாமல் போட்டியில் மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறும். பவுலிங் லைனை தாண்டி வந்து மலிங்கா பந்தைவீசியது ரீப்ளேவில் எளிதாகவே தெரிந்தது. ஆனால் அதை நடுவர் ஏன் நோ-பாலாக வழங்கவில்லை என்ற சர்ச்சை அப்போது பெரிதாக வெடித்தது.

    அப்போது தொடங்கிய நடுவர்கள் சர்ச்சையானது, நேற்றைய ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் போட்டியிலும் பெரிதாக வெடித்தது. நேற்றைய போட்டியில் நடுவர்களின் மோசமான முடிவுகளை பார்த்த ரசிகர்கள் "Umpires Indians" என்ற ஹேஷ்டேக்கை எக்ஸ் தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

     

    நேற்றைய போட்டியில் மும்பை அணிக்கு சாதகமாக நடுவர்கள் அளிக்கப்பட்ட முடிவுகள்:-

    தினேஷ் கார்த்திக்கு எதிராக நோ-பால் வழங்காமல் விட்டது. பவுண்டரி லைனில் பீல்டிங் செய்த மத்வால் பந்தை பிடிக்கும்போது பவுண்டரி லைனில் டச் செய்ததை பார்க்காமல் 1 ரன் வழங்கியது.

    மும்பை அணிக்கு இருந்த ரிவியூ தீர்ந்தபிறகும் களநடுவர் நாட்-அவுட் கொடுத்த பிறகும் மும்பை அணிக்காக ரிவியூ எடுக்கப்பட்டது. ஒயிடு இல்லாத பந்துக்கு ஆர்சிபி அணிக்கு ஒயிடு வழங்கியது. 

    என நடுவர்கள் வழங்கிய பல முடிவுகள் சர்ச்சையாக மாறி போட்டியின் முடிவில் பெரிய பங்காற்றின. அதைப்பார்த்த ரசிகர்கள் "Umpires Indians" என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து மும்பை இந்தியன்ஸ் அணியை ட்ரோல் செய்து வருகின்றனர்.

    முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டும் 12 வீரர்கள் களத்தில் விளையாடுவதாக ரசிகர்கள் கிண்டல் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கும் நிலையில் இந்த சம்பவம் அதை உண்மையாக்கும் வகையில் உள்ளது.

    • பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • மும்பை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 4 ஓவர்களில் 21 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

    மும்பை:

    10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 196 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 53 ரன்களுடன் (23 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 4 ஓவர்களில் 21 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

    இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி அதிரடியாக விளையாடி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 69 ரன்கள் எடுத்தார்.

    இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் பும்ரா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். பெங்களூருவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கபளீகரம் செய்த முதல் பவுலர் என்ற பெருமையை பும்ரா பெற்றார். பும்ரா 21 ரன் வழங்கி 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

    • ஒவ்வொரு பையனுக்கும் கிரிக்கெட்டில் பெரிதாக சாதித்து விளையாட வேண்டும் என்பது கனவாக இருக்கும்.
    • இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தெருவிலும் 25 வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவதற்கு விரும்புவார்கள்.

    இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக பும்ரா திகழ்ந்து வருகிறார். மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் அசத்தி வருகிறார். இவரது படிப்பு முடிந்த உடன் குடும்பத்துடன் கனடாவுக்கு சென்று, அங்கேயே குடியேற விரும்பியதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் அவரது தயார் கனடா செல்ல விருமபாததால் இந்தியாவிலேயே தங்கியதாகவும், அதன்பின் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்து இந்திய அணியில் நட்சத்திர பந்து வீச்சாளராக மாறியதாகவும் தெரிவித்துள்ளார்.

    நீங்கள் கனடா சென்று, அங்கு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்பினீர்களா? என்று அவரது மனைவி சஞ்சனா கேட்டதற்கு பும்ரா அளித்த பதில் வருமாறு:-

    ஒவ்வொரு பையனுக்கும் கிரிக்கெட்டில் பெரிதாக சாதித்து விளையாட வேண்டும் என்பது கனவாக இருக்கும். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தெருவிலும் 25 வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவதற்கு விரும்புவார்கள். அதனால் நீங்கள் மாற்றுத்திட்டத்தை வைத்திருக்க வேண்டியது அவசியம். படிப்பை முடித்ததும் கனடாவுக்கு செல்லலாம் என்று முடிவெடுத்தேன். அங்கே என்னுடைய மாமா இருக்கின்றார்.

    அப்போது குடும்பமாக செல்லலாம் என்று நாங்கள் முடிவெடுத்தோம். ஆனால் கனடா போன்ற வேறு கலாச்சாரத்தை கொண்ட நாட்டுக்கு நான் செல்வதை அவர் விரும்பவில்லை என எனது தயார் தெரிவித்தார். அதிர்ஷ்டவசமாக அது எனக்கு வேலை செய்தது. மாறாக கனடா அணிக்காக விளையாட முயற்சி செய்திருப்பேனா? அல்லது ஏதாவது செயதிருப்பேனா? என்பது தெரியவில்லை. இருப்பினும் அது வேலை செய்ததால் தற்போது இந்தியா மற்றும் மும்பை அணிக்காக விளையாடுகிறேன்" என்று கூறினார்.

    • 4-வது ஓவர் வீசிய பும்ரா ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
    • அதன்பின் 13-வது ஓவரில்தான் பும்ரா பந்து வீச அழைக்கப்பட்டார்.

    ஐதராபாத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 277 ரன்கள் குவித்தது. மும்பை இந்தியன்ஸ் பந்து வீசும்போது பும்ராவிற்கு முதல் ஓவர் வழங்கப்படவில்லை. 4-வது ஓவர்தான் அவருக்கு வழங்கப்பட்டது. அந்த ஓவரில் அவர் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதன்பின் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    6-வது ஓவர் அவருக்குப் பதிலாக கோட்சிக்கு வழங்கப்பட்டது. இதில் கோட்சி 23 ரன்கள் வாரி வழங்கினார். அதன்பின் 12 ஓவரில் 173 ரன்கள் குவித்த நிலையில் பும்ராவிற்கு மீண்டும் 13-வது ஓவர் வழங்கப்பட்டது.

    ஏன் முதல் ஓவருக்குப் பிறகு பும்ராவிற்கு 13-வது ஓவர் வரை வாய்ப்பு வழங்கப்படவில்லை என தான் குழப்பம் அடைந்ததாக வர்ணனையாளராக செயல்படும் ஆஸ்திரேலிய நடசத்திர வீரர் ஸ்டீவன் சுமித் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சுமித் கூறியதாவது:-

    மும்பை இந்தியன்ஸ் அணி அவர்களுடைய பந்து வீச்சை மாற்றியது குறித்து நான் குழப்பம் அடைந்தேன். பும்ரா 4-வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் அவர் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதன்பின் அவரை 13-வது ஓவர் வரை பார்கக் முடியவில்லை. அதற்குள் ஐதராபாத் அணி 173 ரன்கள் விளாசிவிட்டது.

    அதற்குள் அனைத்து சேதாரங்களும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஏற்பட்டு விட்டது. நீங்கள் உங்களுடைய சிறந்த பந்து வீச்சாளரை உடனே பந்து வீச அழைப்பது அவசியம். அந்த நேரத்தில் அவர் சில விக்கெட் எடுத்திருக்க முடியும். 13-வது ஓவரில் கொண்டு வந்ததன் மூலம் அவர்களது யுக்தியை தவற விட்டுவிட்டார்கள் என நினைக்கிறேன்.

    சில விசயங்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தவறாக அமைந்தது. அதில் முக்கியமான ஒன்று இது. உலகின் சிறந்த பந்து வீச்சாளரை ஒரு ஓவருடன் நிறுத்த முடியாது.

    பும்ராவை முன்னதாக பந்து வீச அழைத்து, ஒரு ரிஸ்க் எடுத்திருந்தால் 277 ரன்கள் என்பது கண்டிப்பாக 240 ஆக குறைந்திருக்கும். ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் இதை சேஸிங் செய்திருக்கலாம். ஆகவே, 13 ஓவர் வரை ஒரு ஓவர்தான் அவர் வீசியது எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.

    இவ்வாறு சுமித் தெரிவித்துள்ளார்.

    • 2015-ல் பும்ராவை மும்பை விடுவிக்க விரும்பிய போது அதை ரோகித் நிராகரித்தார்.
    • இதேபோல 2016-ல் பாண்ட்யாவை மும்பை விடுவிக்க விரும்பிய போது அதையும் ரோகித் நிராகரித்தார்.

    மும்பை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 16 சீசன்கள் முடிந்துவிட்டன. 17-வது ஐ.பி.எல். போட்டி வருகிற 22-ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.

    இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஐ.பி.எல். கோப்பையை அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், தலா 5 தடவை கைப்பற்றியுள்ளன. சென்னை அணிக்கு டோனியும், மும்பை அணிக்கு ரோகித் சர்மாவும் 5 முறை கோப்பையை பெற்றுக் கொடுத்தனர்.

    இந்த ஐ.பி.எல் . சீசனில் மும்பை அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக இல்லை. அவரை நீக்கிவிட்டு ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் கேப்டனாக நியமித்துள்ளது.

    இந்த நிலையில் ரோகித் சர்மா குறித்து மும்பை இந்தியன்ஸ் ஆகியவை அணிக்காக ஆடிய விக்கெட் கீப்பர் பார்தீவ் படேல் மனம் திறந்து உள்ளார்.

    பும்ரா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோரை மும்பை அணி விடுவிக்க விரும்பிய போது அவர்களுக்கு ஆதரவாக ரோகித் சர்மா இருந்தார் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பார்த்தீவ் படேல் கூறியதாவது:- 

    ரோகித் சர்மா எப்போதுமே வீரர்களுக்கு ஆதரவாக இருப்பார். அதற்கு மிகப்பெரிய உதாரணம், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா ஆவார்கள். பும்ரா 2014-ம் ஆண்டு முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்தார். 2015-ல் அவர் முதல் சீசனை விளையாடிய போது சிறப்பாக அமையவில்லை.

    இதனால் அவரை விடுவிக்க மும்பை அணி நிர்வாகம் விரும்பியது. ஆனால் அந்த வீரர் பிரகாசிப்பார். இதனால் அவரை அணியில் தொடர்ந்து வைத்து இருக்க வேண்டும் என்று பும்ராவுக்கு ஆதரவாக ரோகித் சர்மா தெரிவித்தார். அதற்கான பலனை நாங்கள் அடுத்த சீசனில் பார்த்தோம். பும்ரா அபாரமாக பந்து வீசினார்.

    இதே நிலைதான் ஹர்திக் பாண்ட்யாவுக்கும் இருந்தது. 2015-ல் இணைந்தார். 2016-ல் அவருக்கு மோசமாக இருந்தது. அவரை நீக்க மும்பை அணி விரும்பியது. அப்போது ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆதரவாக ரோகித்சர்மா செயல்பட்டார்.

    இவ்வாறு பார்த்தீவ் படேல் கூறியுள்ளார்.

    குஜராத் டைட்டன்ஸ் அணி ஐ.பி.எல்லில் அறிமுகமானபோது ஹர்திக் பாண்ட்யா மும்பை அணியில் இருந்தது. குஜராத்துக்கு கேப்டன் ஆனார். குஜராத் அணி முதல் சீசனிலேயே கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார். கடந்த சீசனில் இறுதிப் போட்டி வரை நுழைந்தது. தற்போது இந்த சீசனில் அங்கிருந்து மீண்டும் மும்பை அணிக்கு மாற்றமாகி கேப்டனாக பணியாற்ற உள்ளார்.

    ×