என் மலர்
நீங்கள் தேடியது "ரவி சங்கர் பிரசாத்"
- அவர்களின் அனைத்து அறிக்கைகளும் பாகிஸ்தானில் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. அங்கு ஒரு ஊடக பிரசாரம் நடந்து வருகிறது.
- நாடு பொதுவான தொனியில் பேச வேண்டிய நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் பாகிஸ்தானுக்கு முன்னால் நாட்டை இழிவுபடுத்துகிறார்கள்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இரு நாடுகளில் படைகளை உஷார்படுத்தி வருகின்றன.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான தலைவர்கள், பஹல்காம் தாக்குதலுக்கு பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை குறைபாடுதான் காரணம். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, பாகிஸ்தானுக்கு எதிராக போருக்கு நாங்கள் ஆதரவாக இல்லை. நாங்கள் போரை விரும்பவில்லை எனத் தெரிவித்திருந்தார்.
சித்தராமையா பேசிய வீடியோவை பாகிஸ்தானின் முக்கிய செய்தி நிறுவனம ஒளிப்பரப்பியது. போருக்கு எதிராக இந்தியாவிற்குள் இருந்து வரும் குரல் என்றும் செய்தி வெளியிட்டது.
இந்த நிலையில் பாஜக எம்.பி. ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:-
ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரால் தங்கள் கட்சியை கட்டுப்படுத்த முடியவில்லையா?. அவர்கள் விரும்பியதை பேச அனைவருக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் அனைத்து அறிக்கைகளும் பாகிஸ்தானில் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. அங்கு ஒரு ஊடக பிரசாரம் நடந்து வருகிறது.
நாடு பொதுவான தொனியில் பேச வேண்டிய நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் பாகிஸ்தானுக்கு முன்னால் நாட்டை இழிவுபடுத்துகிறார்கள். நீங்கள் (ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே) என்ன செய்கிறீர்கள்?. சித்தராமையாவிடம் ஏதேனும் கேள்விகள் கேட்கப்பட்டதா? யாரிடமாவது பொது மன்னிப்பு கேட்கச் சொல்லப்பட்டதா?. இந்த அணுகுமுறையை நாங்கள் கண்டிக்கிறோம்.
இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
- ராகுல் காந்தி தன்னுடைய சொந்த மக்களவை தொகுதியில் நீண்ட நேரம் செலவழிப்பதில்லை.
- திடீரென வியட்நாம் மீது அதிக பாசம் வைப்பதற்கான காரணம் என்ன?
காங்கிரஸ் கட்சி எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அவரது தொகுதியை விட, வியட்நாமில் அதிக நேரம் செலவிட்டுள்ளார். வியட்நாம் மீதான அசாதாரண பாசம் குறித்து விளக்க வேண்டும் என பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான ரவி சங்கர் பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:-
ராகுல் காந்தியை எங்கே? அவர் வியட்நாம் சென்றுள்ளதாக கேள்விப்படுகிறேன். அவர் தன்னுடைய சொந்த மக்களவை தொகுதியில் நீண்ட நேரம் செலவழிப்பதில்லை. திடீரென வியட்நாம் மீது அதிக பாசம் வைப்பதற்கான காரணம் என்ன?
வியட்நாம் மீதான அசாதாரண பாசம் குறித்து ராகுல் காந்தி விளக்க வேண்டியது அவசியம். அவர் அங்கே அடிக்கடி செல்வது மிகவும் வினோதமானது. ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சி தலைவர். அவர் இந்தியாவில் இருக்க வேண்டும்.
இவ்வாறு ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
பாஜக ஐடி துறை தலைவர் அமித் மாள்வியா எக்ஸ் பக்கத்தில் "எதிர்க்கட்சித் தலைவர் என்ற முக்கிய பதவியை ராகுல் காந்தி வகிக்கிறார். மேலும் அவர் மேற்கொண்ட ஏராளமான ரகசிய வெளிநாட்டுப் பயணங்கள், குறிப்பாக நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும்போது தேசியப் பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன." எனத் தெரிவித்துள்ளார்.
- தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க முக்கிய காரணமாக இருந்தார்.
- இன்று மதியம் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.
ஐந்து மாநில தேர்தலில் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க ரேவந்த் ரெட்டிதான் முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. அவரை காங்கிரஸ் இரண்டு தொகுதிகளில் களம் இறக்கியது. கமாரெட்டி தொகுதியில் தோல்வியடைந்தார். மற்றொரு தொகுதியில் வெற்றி பெற்றார்.
ரேவந்த் ரெட்டியை முதலமைச்சராக தேர்வு செய்ய கட்சியில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்த போதிலும் கட்சி மேலிடம் அவரை முதலமைச்சராக தேர்வு செய்தது. இன்று மதியம் அவர் தெலுங்கானா மாநில முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு பத்திரிகை சந்திப்பின்போது, உங்களுடைய டி.என்.ஏ.-வை காங்கிரஸ் டி.என்.ஏ-வாக பார்க்கிறீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரேவந்த் ரெட்டி என்னுடைய டி.என்.ஏ.-வை தெலுங்கானா டி.என்.ஏ.-வாக பார்க்கிறேன் என்றார்.
மேலும், சந்திரசேகர ராவ் குறித்து பேசும்போது "சந்திரசேகர ராவின் டி.என்.ஏ. பீகாரைச் சேர்ந்தது, அவரின் சாதி குர்மி. குர்மிஸ் பீகாரில் இருந்து வந்தவர்கள். பீகாரில் இருந்து விஜயநகரம் குடிபெயர்ந்து பின்னர் அங்கிருந்து தெலுங்கானா வந்தனர். என்னுடைய டி.என்.ஏ. தெலுங்காவில் இருந்து வந்தது. என்னுடைய டி.என்.ஏ. தெலுங்கானா. அது பீகார் டி.என்.ஏ.-வை விட சிறந்தது" என்றார்.
அவர் எம்.பி.யாக இருக்கும்போது இதுகுறித்து பெரியதாக பேசப்படவில்லை. தற்போது தெலுங்கானா களத்தில் சந்திரசேகர ராவை தோற்கடித்து, முதலமைச்சர் பதவிக்கு அவர் பெயர் அடிபட்ட நிலையில் தூசி தட்டி எடுக்கப்பட்டு விமர்சனம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து பா.ஜனதா எம்.பி. ரவி சங்கர் பிரசாத் கூறுகையில் "டி.என்.ஏ. குறித்து ரேவந்த் ரெட்டி கூறிய கருத்து பொறுப்பற்றது. வெட்கக்கேடானது. தெலுங்கானா டி.என்.ஏ.-வை விட பீகார் டி.என்.ஏ. பலவீனமானதா?.
நாட்டை பிளவுப்படுத்தும் வகையிலான இநத் கருத்துக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மவுனம் காப்பது ஏன்?. ரேவந்த் ரெட்டி மன்னிப்பு கேட்க வேண்டும்.
- இந்தியா பங்குகளிலும் பாதுகாப்பான, நிலையான மற்றும் நம்பிக்கைக்குரிய சந்தையாக உள்ளது.
- காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகள் ஹிண்டன்பர்க் அறிக்கைகள் வெளிவராதது ஏன்?
ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக பாஜக எம்.பி. ரவி சங்கர் பிரசாத் விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில்,
இந்திய மக்களால் நிராகரிக்கப்பட்ட பிறகு, காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளும், டூல்கிட் கும்பலும் இணைந்து இந்தியாவில் பொருளாதார அராஜகம் மற்றும் ஸ்திரமின்மையை ஏற்படுத்த சதி செய்துள்ளனர்.
ஹிண்டன்பர்க் அறிக்கை சனிக்கிழமை வெளியிடப்பட்டது, ஞாயிற்றுக்கிழமை சலசலப்பு ஏற்பட்டது. அதனால் திங்களன்று மூலதனச் சந்தை சீர்குலைந்துள்ளது. இந்தியா பங்குகளிலும் பாதுகாப்பான, நிலையான மற்றும் நம்பிக்கைக்குரிய சந்தையாக உள்ளது.
பங்கு சந்தை சீராக இயங்குவதை உறுதி செய்வது செபியின் சட்டப் பொறுப்பு. ஹிண்டன்பர்க்கிற்கு எதிராக செபி நோட்டீஸ் அனுப்பியபோது, ஜூலையில் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடந்த முழு விசாரணையையும் முடித்துவிட்டு, அதன் தற்காப்புக்கு ஆதரவாக எந்த பதிலும் சொல்லாமல், இந்தத் தாக்குதலை ஆதாரமற்ற தாக்குதலாக ஆக்கிவிட்டனர்.
ஹிண்டன்பர்க் அறிக்கைக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்புள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகள் ஹிண்டன்பர்க் அறிக்கைகள் வெளிவராதது ஏன்? இந்திய பங்குச்சந்தைகளை சீர்குலைக்க காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சதி செய்வதாக அவர் கூறினார்.
- ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தில் இருக்கும் 'யு' என்பது, மோடி அரசின் பல 'யு டர்ன்'களை குறிப்பிடுவதாகும்- கார்கே.
- வாக்குறுதி அளித்தபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தினீர்களா என்று நாட்டு மக்களுக்குச் சொல்லுங்கள்- ரவி சங்கர் பிரசாத்.
கடந்த இரு தினங்களுக்கு முன் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஓய்வூதிய திட்டமானது, மத்திய அரசு ஊழியராக, குறைந்தபட்சம் 10 ஆண்டு பணியாற்றியவர்கள் தகுதியானவர்கள் என்று தெரிவித்துள்ளது. 10 ஆண்டு பணியாற்றிய ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.10,000 வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் குறித்து காங்கிரஸ் தேசிய தலைவர் மால்லிகார்ஜூன கார்கே விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 'ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தில் இருக்கும் 'யு' என்பது, மோடி அரசின் பல 'யு டர்ன்'களை குறிப்பிடுவதாகவும், இன்டெக்சேசன் தொடர்பான பட்ஜெட் அறிவிப்பு, வக்பு மசோதாவை கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பியது, ஒலிபரப்பு மசோதா வாபஸ், லேட்ரல் என்ட்ரி வாபஸ், இப்போது ஒருமித்த ஓய்வூதியம் என அடுத்தடுத்து மத்திய அரசு தன் முடிவுகளில் இருந்து பின்வாங்கியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் கார்கே-வின் விமர்சனத்திற்கு பா.ஜ.க. மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் பதில் கொடுத்துள்ளார். காங்கிரஸ் விமர்சனத்திற்கு ரவி சங்கர் பிரசாத் அளித்தள்ள பதில் வருமாறு:-
இமாச்சல் பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு அதனை நிறைவேற்றாமல் காங்கிரஸ் தற்போது யு-டர்ன் அடித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பழைய ஓய்வூதிய திட்டத்தை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்து வருகிறது. மக்கள் வாக்களித்து ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என பிரியங்கா தேர்தலின்போது வாக்குறுதி கொடுத்திருந்தார்.
இந்த காங்கிரஸ் அறிவிப்புகளை மட்டும் வெளியிடுமா அல்லது அதையும் செயல்படுத்துமா? பொதுவாக காங்கிரசும், குறிப்பாக ராகுல் காந்தியும், இமாச்சலப் பிரதேசத்தில் வாக்குறுதி அளித்தபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தினீர்களா என்று நாட்டு மக்களுக்குச் சொல்லுங்கள். வாக்குகளுக்காக பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களி ஏமாற்றி வருகின்றனர்.
(மத்திய அரசு) ஊழியர்களின் கவலைகளைக் கேட்டு புரிந்துகொண்டு, அதுகுறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்து, அர்த்தமுள்ள முடிவை எடுத்ததற்காக பிரதமர் மோடிக்காக பெருமைப்படுகிறோம். இதற்காக அரசுக்கு, குறிப்பாக பிரதமருக்கு கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
ராகுல் காந்தி என்ன செய்கிறீர்கள்? நீங்கள் எவ்வளவுதான் பொய்யை உண்மை என மக்களை நம்பவைப்பீர்கள். எப்போதாவது உண்மையைச் சொல்லுங்கள். மேலும் நீங்கள் ஏதாவது சொன்னால், அதைச் செய்ய வேண்டும். உங்களால் முடியவில்லை என்றால் சொல்லக்கூடாது.
கவனமாக பரிசீலித்த பிறகு முடிவுகளை எடுக்க வேண்டும். அடிமைத்தனம் இங்கு வேலை செய்யாது.
இவ்வாறு ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
- மெகா கூட்டணியின் முதலமைச்சராக நிதிஷ்குமார் இன்று பிற்பகல் பதவியேற்பு.
- ஆதரவு கொடுத்தற்காக சோனியா, ராகுலுக்கு, நிதிஷ்குமார் நன்றி.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, முதலமைச்சராக நிதிஷ்குமாரும், துணை முதலமைச்சராக பாஜகவின் சுஷில் குமார் மோடியும் பதவியேற்றனர்.
அண்மை காலமாக இரு கட்சிகள் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்த நிலையில், பாஜகவுடனான கூட்டணியில் இருந்து விலவதாக நேற்று நிதிஷ்குமார் அதிரடியாக அறிவித்தார். தொடர்ந்து முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அவர், ஆளுநர் பாகு சவுகானை நேரில் சந்தித்து கடிதம் வழங்கினார்.
இதனையடுத்து ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் ஆகியவை சேர்ந்து மகா பந்தன் எனப்படும் மெகா கூட்டணியை அமைத்தன. பாட்னாவில் நடைபெற்ற இந்த கூட்டணியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதலமைச்சராக நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன்பின், மீண்டும் ஆளுநரை சந்தித்த நிதிஷ்குமார், புதிய ஆட்சி அமைக்க 164 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் வழங்கினார். இந்நிலையில் இன்று பிற்பகல் நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் அம்மாநிலத்தின் முதலமைச்சராக 8-வது முறை பதவியேற்கிறார்.

துணை முதலமைச்சராக லாலுபிரசாத் யாதவ் மகனும், அம்மாநில எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவருமான தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்கிறார். இதனிடையே, தமக்கு ஆதரவு அளித்ததற்காக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருடன் தொலைபேசி மூலம் பேசிய நிதிஷ்குமார் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மதச்சார்பற்ற சக்திகளை வலுப்படுத்த பாஜக அல்லாத அரசை ஆதரிப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. பீகாரில் அரசியலில் ஒரே நாளில் ஏற்பட்ட இந்த மாற்றம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், நிதிஷ்குமாரின் முடிவை பாஜக கடுமையாக சாடி உள்ளது.

பீகார் மக்கள் பாஜக-ஐக்கிய ஜனதாதள கூட்டணி ஆட்சிக்கே வாக்களித்ததாகவும், ஆனால் மக்களின் ஆணையை நிதீஷ் குமார் மதிக்கவில்லை என்றும், பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய ஜனதாதளத்தை அழிக்க பாஜக முயற்சிக்கிறது என்ற நிதிஷ்குமாரின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும் அவர் கூறியுள்ளார். பாஜக அவரை பலமுறை பீகார் முதலமைச்சராக்கியதும் என்றும் தெரிவித்தார்.
பாஜகவுடன் இருந்தபோது நிதிஷ்குமாருக்கு கிடைத்த மரியாதை இனிமேல் ராஷ்டிரிய ஜனதா தளத்திடம் இருந்து கிடைக்காது என பாஜகவை சேர்ந்த சுஷில் குமார் மோடி கூறியுள்ளார்.

பீகாரில் பாஜகவுக்கு அதிக இடங்கள் கிடைத்தும், அவரை முதல்வராக்கினோம் என்றும், அவரது கட்சியை உடைக்க நாங்கள் முயன்றதில்லை, எங்களுக்கு துரோகம் செய்தவர்களின் கட்சிகளை மட்டுமே உடைத்தோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வரும் ஏப்ரல் மாதம் துவங்கி பல்வேறு கட்டமாக நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு, மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தல் கமிஷனும் இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பல்வேறு கட்சிகளில் உள்ளோர் வெவ்வேறு கட்சிகளுக்கு மாறியும் வருகின்றனர்.

இது குறித்து டாம் வடக்கண் கூறியிருப்பதாவது:
புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சியின் கருத்து ஏற்புடையதல்ல. காங்கிரசின் கருத்து நாட்டு நலனுக்கு எதிரானது. இதனால் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளானேன். கட்சிக்காக நான் 20 ஆண்டுகளாக என் வாழ்க்கையை அர்ப்பணித்தேன். ஆனால், இப்போது என்னை தூக்கி எறிகிறார்கள். பரம்பரை அரசியல் காங்கிரஸில் உச்சத்தினை பெற்றுள்ளது. இதன் காரணமாகவே நான் பாஜகவில் இணைந்துள்ளேன். நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவார் என பிரதமர் மோடியின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராகவும் செய்தித் தொடர்பாளராகவும் செயல்பட்டு வந்த டாம் வடக்கண் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் விலகியது கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
பாஜகவில் இணைந்த டாம் வடக்கண்ணிற்கு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில், கேரளாவில் சீட் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #CongressSpokesperson #TomvadakkanJoinsBJP
மத்திய சட்டத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைகளின் மந்திரியாக ரவிசங்கர் பிரசாத் இருந்து வருகிறார். இவருக்கு திங்கள் இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எய்ம்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கும் பிரிவில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பின் கீழ் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. #RaviShankarPrasad #DelhiAIIMSHospital
பாஜக அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களுள் ஒன்று ஆதார் அட்டை. தனி மனித அடையாளமாக அறிவிக்கப்பட்ட இந்த ஆதார் வங்கி கணக்கு முதல் அனைத்திலும் இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இதன்மூலம் மக்கள் பல்வேறு சிரமத்துக்கு உள்ளான நிலையில், ஆதார் எண்ணை கொண்டு ஊழல் செய்ய பா.ஜ.க அரசு முயற்சிப்பதாகவும், தனி மனித விவரங்களை அரசு கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு அளித்து வருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், ஓட்டுனர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து மத்திய மந்திரி நிதின் கட்கரியுடன் மத்திய சட்டத்துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். சுமார் ஒரு ஆண்டாக இந்த பேச்சு வார்த்தை குறித்த தகவல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், இன்று, செய்தியாளர்களை சந்தித்த மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத், ஓட்டுனர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து மத்திய மந்திரி நிதின் கட்கரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் இதுதொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சாலைகளில் மதுபோதையிலோ அல்லது வேறு காரணங்களினால் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடும் ஓட்டுனர்களை இதன் மூலம் எளிதில் பிடித்து விட முடியும் என்றும், மாநிலம் விட்டு வேறு மாநிலத்துக்கு தப்பிச்சென்றாலும் ஓட்டுனரை கைது செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.
மேலும், ஒருவர் தன் பெயர் உள்ளிட்ட அடையாளங்களை மட்டுமே மாற்றியமைக்க முடியும் என்றும் கைரேகையினை மாற்ற முடியாது எனவும் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார். #aadhaarcard #ravishankarprasad