search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநிலங்களவை"

    • மாநிலங்களவையில் தற்போதைய உறுப்பினர்கள் எண்ணிக்கை 237 ஆகும்.
    • மெஜாரிட்டிக்கு 119 தேவை. பாஜக 96 உறுப்பினர்களை கொண்டுள்ளது.

    இந்திய பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 245. தற்போது 8 இடங்கள் காலியாக உள்ளன. நான்கு உறுப்பினர்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். நான்கு பேர் நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட வேண்டும்.

    பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள உறுப்பினர் இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் 12 எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

    பாஜக-வைச் சேர்ந்த 9 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பாஜக கூட்டணியில் உள்ள அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய லோக் மாஞ்ச் ஆகிய இரண்டு கட்சிகளில் இருந்து தலா ஒரு உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒரு உறுப்பினரும் தேர்வு செய்யப்பட்டனர்.

    தற்போது மாநிலங்களவையில் இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 237. மெஜாரிட்டிக்கு 119 தேவை. பாஜக உறுப்பினர்கள் 96 பேர் உள்ளனர். அந்த கூட்டணியில் 112 மாநிலங்களவை எம்.பி.க்கள் உள்ளனர். அத்துடன் 6 நியமனம் எம்.பி.க்கள், ஒரு சுயேட்சை எம்.பி. ஆகியோர் பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    தற்போது இரண்டு கூட்டணி கட்சி எம்.பி.க்கள், நியமன எம்.பி.க்கள், சுயேட்சை எம்.பி.க்கள் என பாஜக கூட்டணிக்கு 119 எம்.பி.களுக்கு மேல் பெற்றுள்ளது.

    காங்கிரஸ் கட்சிக்கு 85 மாநிலங்களை எம்.பி.க்கள் உள்ளனர். தெலுங்கானாவில் இருந்து அபிஷேக் சிங்வி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    மாநிலங்களவையில் மெஜாரிட்டி பெற கடந்த 10 வருடங்களாக பாஜக முயற்சி பெற்று வந்த நிலையில் தற்போது கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் தனி மெஜாரிட்டி பிடித்துள்ளது. இதன் மூலம் மசோதாக்களை தடங்கல் இல்லாமல் நிறைவேற்ற முடியும்.

    மோடி 2-வது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்டபோது, பல்வேறு மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது கூட்டணியில் அல்லாத பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகியவற்றின் ஆதரவால் மசோதாக்களை நிறைவேற்றி வந்தது.

    • தெலுங்கானா மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த கேஷவ் ராவ் பதவியை ராஜினாமா செய்தார்.
    • செப்டம்பர் 3-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வேட்பாளரை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தில் பிஆர்எஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தவர் கேஷவ ராவ். இவர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதனைத்தொடர்ந்து மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. செப்டம்பர் 3-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி அபிஷேக் சிங்வியை வேட்பாளராக நியமித்துள்ளது. இவர் ஏற்கனவே இமாச்சல பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற மாநிலங்களவை எம்.பி.க்கான தேர்தலில் போட்டியிட்டார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் மாறி வாக்களித்ததால் தோல்வியை தழுவினார்.

    கேஷவ ராவ் ஆந்திர பிரதேச மாநில காங்கிரஸ் கட்சி தலைவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அபிஷேக் சிங்வி மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுப்பதற்கு போதுமான எம்.எல்.ஏ.-க்கள் எண்ணிக்கை காங்கிரஸ் கட்சியிடம் உள்ளது.

    • நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை ஜூலை 23-ந்தேதி தாக்கல் செய்தார்.
    • எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 22-ந்தேதி தொடங்கியது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2024-2025-ம் நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை 23-ந்தேதி தாக்கல் செய்தார். அதன்பின் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.

    இந்த விவாதத்தின்போது ராகுல் காந்தி மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.

    நேற்று வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

    இன்று மாநிலங்களவையில் ஜெயா பச்சன்- மாநிலங்களவை தலைவர் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டதில் ஒரு அமர்வுக்கு முன்னதாகவே பட்ஜெட் கூட்டம் நிறைவடைந்துள்ளது.

    • முல்லை பெரியாறு அணையால் அருகிலுள்ள பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
    • தண்ணீர் தமிழகத்திற்கு, பாதுகாப்பு கேரளத்திற்கு என்பதே எங்களின் கோஷம்.

    பாராளுமன்ற மாநிலங்களவையில் கேரளா எம்.பி. ஹிபி ஏடன் பேசும்போது, "முல்லை பெரியாறு அணையில் புதிய அணை கட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

    மேலும், "முல்லை பெரியாறு அணையால் அருகிலுள்ள பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தண்ணீர் தமிழகத்திற்கு, பாதுகாப்பு கேரளத்திற்கு என்பதே எங்களின் கோஷம். மத்திய அரசு புதிய அணை கட்டி கேரளத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" என்றார்.

    முல்லை பெரியாறு அணையில் நீர் மட்டத்தை உயர்த்தக் கூடாது என கேரளா தெரிவித்து வந்த நிலையில், தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்று அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அனுமதி பெற்றது. தமிழ்நாட்டின் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்கள் பயனடைகின்றன.

    தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கேரளா எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணை பலமாகவே இருக்கிறது என உச்சநீதிமன்றமும் வல்லுநர்கள் குழுவும் திட்டவட்டமாக தெரிவிததுவிட்ட நிலையிலும் கேரளா மீண்டும் மீண்டும் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

    முல்லைப் பெரியாறு அணையை பல ஆண்டுகளாக கேரளா எதிர்த்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகிவிட்டதாக கூறி புதிய அணை கட்ட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    • மாநிலங்களவை தலைவர் அதிகார தொனியில் பேசியதால் ஜெயா பச்சன் கடுங்கோபம்.
    • மாநிலங்களவை தலைவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மனைவி ஜெயா பச்சன சமாஜ்வாடி கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.

    இந்த கூட்டத்தொடரின்போது மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் மற்றும் சில பாஜக எம்.பி.க்கள் ஜெய பச்சன் என்பதற்கு பதிலாக ஜெயா அமிதாப் பச்சன் என்று அழைத்தனர். இவ்வாறு தன்னை அழைப்பதற்கு ஜெயா பச்சனுக்கு உடன்பாடு இல்லை.

    தன்னை ஜெயா பச்சன் என்று அழைத்தால் போதும், ஜெயா அமிதாப் பச்சன் என்று அழைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், சொந்த சாதனைகள் படைக்காத பெண்களுக்குதான் கணவர் பெயரால் அங்கீகாரம் தேவை. அதனால் தன்னை அவ்வாறு அழைக்க வேண்டாம் எனக் கூறியிருந்தார்.

    இருந்தபோதிலும் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் உள்ளிட்டவர்கள் ஜெயா அமிதாப் பச்சன் என்றே அழைத்து வந்தனர். இன்றும் அதுபோல் அழைக்கப்பட்டதால் ஜெயா பச்சன் அதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தார். ஆனால், ஜெக்தீப் தன்கர் எனக்கு அறிவுரை சொல்ல வேண்டாம் என்ற தொனியில் பதில் அளித்தார்.

    இதனால் ஜெகதீப் தன்கர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜெய பச்சன் கடும் வாக்குவாதம் செய்தார். மாநிலங்களவை தலைவரிடம் இருந்து எனக்கு மன்னிப்பு தேவை என்றார். ஜெயா பச்சனுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆதரவாக அமளியில் ஈடுபட்டனர். பின்னர், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர்.

    வெளிநடப்பு செய்த ஜெயாபச்சன் கூறுகையில் "ஒவ்வொரு முறையும் பாராளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது. தொல்லை கொடுப்பது போன்ற வார்தைகள். நீங்கள் பிரபலங்களாக (celebrity) இருக்கலாம். ஆனால் எனக்கு கவலை இல்லை போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவர்களை கவலைப்பட வேண்டும் என நான் கேட்கவில்லை. நாடாளுமன்றத்தில் இப்போது பேசுவதுபோல் யாரும் பேசியதில்லை. இது பெண்களுக்கு மிகவும் அவமரியாதை" இவ்வாறு ஜெயா பச்சன் தெரிவித்தார்.

    • எதிர்க்கட்சியினர் நடவடிக்கைக்கு மாநிலங்களவை அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் எதிர்ப்பு தெரிவித்தார்.
    • இதையடுத்து, மாநிலங்களவையில் இருந்து ஜெகதீப் தன்கர் வெளியேறினார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மாநிலங்களவை இன்று காலை கூடியது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இருந்து வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து, இதன் பின்னணியில் யார் உள்ளார்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் அனுமதி தரவில்லை.

    மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் டெரிக் ஓ பிரையன் எழுந்து இன்னும் சில பிரச்சனைகளை எழுப்பினார். இதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

    அப்போது டெரிக் ஓ பிரையனை எச்சரித்த ஜெகதீப் தன்கர், நீங்கள் அவைத்தலைவரை நோக்கி சத்தம் போடுகிறீர்கள். அவையில் உங்கள் நடவடிக்கை மோசமாக உள்ளது. உங்கள் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். அடுத்த முறை வாசல் கதவை காட்டுகிறேன் என தெரிவித்தார்.

    இதையடுத்து, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.

    இந்நிலையில், எதிர்க்கட்சியினர் நடவடிக்கைக்கு கடும் அதிருப்தி தெரிவித்த ஜக்தீப் தங்கர், சில நேரங்களில் நான் இங்கு அமர முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. அவையை விட்டு கனத்த மனதுடன் வெளியேறுகிறேன் எனக்கூறி அவையில் இருந்து வெளியேறினார்.

    இதைத்தொடர்ந்து, அவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் சிங் மாநிலங்களவையை நடத்தினார்.

    • 20 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்து நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு என எச்சரிக்கை கொடுத்தோம்- அமித் ஷா
    • மாநிலங்களவையில் அமித் ஷா சொன்னது தவறு என்பது நிரூபணமாகியுள்ளது- ஜெய்ராம் ரமேஷ்

    கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 29-ந்தேதி நள்ளிரவு கனமழை மற்றும் மேக வெடிப்பு காரணமாக மழை கொட்டித்தீர்த்தது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.

    இதனால் சில கிராமங்கள் மண்ணில் புதைந்தன. தற்போது வரை பலி எண்ணிக்கை 340-ஐ தாண்டியுள்ளது. இதற்கிடையே வயநாடு நிலச்சரிவு தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசும்போது, கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் கேரள அரசு எச்சரிக்கையை செயல்படுத்தவில்லைத் தெரிவித்திருந்தார்.

    இதை கேரள மாநில முதல்வர் பினராயி விஜய் மறுத்திருந்தார். 30-ந்தேதி காலையில்தான் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எனத் தெரிவித்திருந்தார்.

    அந்த நிலையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறியதை மறுத்து காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

    ஜெய்ராம் ரமேஷ் வழங்கிய நோட்டீஸில் "மத்திய அரசின் முன்னெச்சரிக்கை குறித்த மத்திய உள்துறை மந்திரியின் அறிக்கைகள் பொய் என நிரூபிக்கப்பட்டதன் மூலம் ராஜ்யசபாவை தவறாக வழி நடத்தியது தெளிவாகிறது. ஒரு அமைச்சர் அல்லது உறுப்பினர் சபையை தவறாக வழி நடத்துவது சிறப்புரிமையை மீறுவதாகவும், அவையை அவமதிப்பதாகவும் அமைகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

    கடந்த புதன்கிழமை அமித் ஷா மாநிலங்களவையில் "நிலச்சரிவு ஏற்படுவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பாக ஜூலை 23-ந்தேதி மத்திய அரசு முன்னெச்சரிக்கை கொடுத்தது. ஜூலை 24 மற்றும் 25-ந்தேதி மீண்டும் எச்சரித்தோம். ஜூலை 26-ந்தேதி 20 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. மேலும் நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டது" என அமித் ஷா தெரிவித்தார்.

    • மாநிலங்களவையில் பாஜக எம்.பி எம்.பி பீம் சிங் தனி நபர் மசோதா கொண்டுவந்துள்ளார்.
    • இந்த மசோதா மீதான விவாதம் இன்றைய மாநிலங்களவை கூட்டத்தில் நடக்க உள்ளது.

    நாடு முழுவதும் நகரமயமாக்கலை அதிகரித்து ஹை- டெக் நகர்களை உருவாக்கி அதற்கு நமோ நகர்கள் என்று பெயரிட வேண்டும் என மாநிலங்களவையில் பாஜக எம்.பி தனி நபர் மசோதா கொண்டுவந்துள்ளார்.

    இந்த மசோதா மீதான விவாதம் இன்றைய மாநிலங்களவை கூட்டத்தில் நடக்க உள்ளது. பீகாரைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை எம்.பி பீம் சிங்கொண்டுவந்துள்ள இந்த மசோதாவில் , நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக கிராமங்களை விட நகர மக்கள் அதிக முன்னேற்றம் அடைத்துள்ளன.

    ஆனாலும் நகரமயமாக்கல் குறைந்த அளவே நடந்துள்ளது. எனவே இந்தியா முழுவதும் 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க வேண்டும் என்று கடந்த 2015 ஆம் ஆண்டு [பாஜக]அரசு கொண்டுவந்த திட்டத்தைச் செயல்படுத்தி, நகரமயமாக்கலை அதிகரித்து பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும். உதாரணமாக சண்டிகர் மாநிலத்தில்  சமீப காலங்களாக நகரமயமால் மூலம் அதிக பொருளாதார நன்மைகள் கிடைத்து வருகிறது.

    அவ்வாறு நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் உருவாக்கப்படும் ஹை- டெக் நகரங்களுக்கு நமோ நகர் என்று பெயரிடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்தியப் பிரதமர் 'ந'ரேந்திர 'மோ'டியின் பெயரை சுருக்கி நமோ என பாஜவினர் குறிப்பிடுவது வழக்கமாக உள்ளது.  

     

    • வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது.
    • கேரளாவிற்கு சிறப்பு நிவாரண தொகுப்பு வழங்க வேண்டும் என்றார்.

    புதுடெல்லி:

    கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 200-க்கு மேற்பட்டோரை காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பலர் மாயமான நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில், பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் அ.தி.மு.க.வின் தம்பிதுரை வயநாடு நிலச்சரிவு குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:


    பாதிக்கப்பட்டவர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    மீட்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை மத்திய அரசு ஏற்கனவே இந்த அவையில் கூறி இருக்கிறது.

    ஆனால், எங்களது கோரிக்கை மறு சீரமைப்புகளுக்கான தொகையினையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதுதான்.

    இதை தேசிய பேரிடராக அறிவிப்பதோடு, சிறப்பு நிவாரண தொகுப்பும் கேரளாவிற்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    • என் பெயரை “ஜெயா பச்சன் என குறிப்பிட்டாலே போதுமானதாக இருக்கும்.
    • கணவரின் பெயரை குறிப்பிட்டு பெண்களை அழைக்கும் நடைமுறை புதியதாக உள்ளது.

    பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.

    மாநிலங்களவையில் எம்.பி. ஜெயா பச்சனை பேச அழைக்கும்போது 'ஜெயா அமிதாப் பச்சன்' என அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் குறிப்பிட்டார்.

    இதனை கேட்டதும் கடுப்பான ஜெயா பச்சன், என் பெயரை "ஜெயா பச்சன் என குறிப்பிட்டாலே போதுமானதாக இருக்கும். கணவரின் பெயரை குறிப்பிட்டு பெண்களை அழைக்கும் நடைமுறை புதியதாக உள்ளது. கணவனின் பெயரை தவிர பெண்களுக்கு எந்தவொரு சுயமான சாதனையும் இல்லாதது போல பார்க்கின்றனர்" என அதிருப்தி தெரிவித்தார்.

    இதனையடுத்து உங்களது ஆவணங்களில் அதிகாரப்பூர்வமாக உள்ள பெயரையே குறிப்பிட்டதாக ஹரிவன்ஷ் விளக்கம் அளித்தார்.

    பின்னர் மாநிலங்களவையில் பேசிய ஜெயா பச்சன், டெல்லியில் உள்ள பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தது மிகவும் வேதனையான சம்பவம், இந்த விஷயத்தில் நாம் அரசியலை கொண்டு வரக்கூடாது என்று தெரிவித்தார். 

    • மாநிலங்களவையில் வழக்கமாக நடைபெறும் விவாதங்களைச் சற்று ஒத்திவைத்து சுமார் இரண்டரை மணி நேரம் இந்த விவகாரம் குறித்த விவாதங்கள் நடந்தேறின.
    • . தினந்தோறும், செய்தித்தாள் பக்கங்களில் கோச்சிங் சென்டர்களின் பெரிய பெரிய விளம்பரங்களையே பார்க்கமுடிகிறது.

    தலைநகர் டெல்லியில் பெய்த கனமழையில் பல்வேறு இடங்களில் நீர்த் தேக்கம் ஏற்பட்டது. இதனால் டெல்லியின் மேற்குப் பகுதியில் ஓல்ட் இந்திரா நகரில் செயல்பட்டு வரும் ரவு ஸ்டடி சர்க்கிள் என்ற ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைதளத்திற்குள் புகுந்த தண்ணீரில் சிக்கி அங்கு படித்து வந்த 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. கோச்சிங் சென்டர்கள் மற்றும் மாநகராட்சியின் அலட்சியத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

     

    மேலும் கட்டிடத்தின் தரைதளத்தில் சட்டவிரோதமாக நூலகங்களை இயக்கி செயல்பட்டு வந்த ரவு உட்பட 13 கோச்சிங் சென்டர்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க மத்திய அரசு சிறப்பு குழு ஒன்றையும் அமைத்துள்ளது. இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில் மாணவர்கள் இதுநாள்வரை கோச்சிங் சென்டர்களில் சந்தித்துவந்த இன்னல்கள் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளன. நேற்று நடந்த மாநிலங்களவை மற்றும் மக்களவைக் கூட்டத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்துள்ளது.

    மாநிலங்களவையில் வழக்கமாக நடைபெறும் விவாதங்களைச் சற்று ஒத்திவைத்து சுமார் இரண்டரை மணி நேரம் இந்த விவகாரம் குறித்த விவாதங்கள் நடந்தேறின. இந்த விவாதத்தில் பேசிய துணைக் குடியரசுத் தலைவரும் மாநிலங்களவை சபாநாயகருமான ஜெகதீப் தன்கர், இந்த பயிற்சி மையங்கள் கேஸ் சேம்பர் அறைகளுக்கு [இன அழைப்புக்காக ஹிட்லர் வதை முகாம்களில் பயன்படுத்தியதற்கு] சற்றும் குறைந்ததல்ல. தினந்தோறும், செய்தித்தாள் பக்கங்களில் கோச்சிங் சென்டர்களின் பெரிய பெரிய விளம்பரங்களையே பார்க்கமுடிகிறது.

    இதற்கெல்லாம் அவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது. மாணவர்களிடமிருந்து தானே. போட்டித்தேர்வு பயிற்சி என்பது [லாபம் கொழிக்கும்] வியாபாரமாகியுள்ளது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

     

    இதற்கிடையில் மாநிலங்களவை விவாதத்தில் கோச்சிங் சென்டர் மாணவ மாணவிகளின் இறப்பு குறித்து பேசும்போது, அமிதாப் பச்சன் மனைவியும் சமாஜ்வாதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயா பச்சன் கண்கலங்கி வருந்திய வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு கொள்ள உறுப்பினர்களுக்கு சுதந்திரம் உள்ளது.
    • ஆனால் மற்ற கண்ணோட்டங்களை புறக்கணிப்பது பாராளுமன்ற செயல்பாடுகளின் ஒரு பகுதி அல்ல.

    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. பாஜக தனி மெஜாரிட்டி பெறாத நிலையில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. பிரதமர் மோடிக்கு மீண்டும் ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை மக்கள் வழங்கவில்லை. மக்களவை தேர்தலில் அவர் தார்மீக தோல்வியை அடைந்துள்ளார் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

    அத்துடன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடுமையான அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் மாநிலங்களவை தலைவரான ஜெக்தீப் தன்கர், கண்ணியமற்ற நடத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது என வேதனை அடைந்துள்ளார்.

    இது தொடர்பாக ஜெக்தீப் தன்கர் கூறியதாவது:-

    மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு கொள்ள உங்களுக்கு (மாநிலங்களவை உறுப்பினர்கள்) சுதந்திரம் உள்ளது. ஆனால் மற்ற கண்ணோட்டங்களை புறக்கணிப்பது பாராளுமன்ற செயல்பாடுகளின் ஒரு பகுதி அல்ல.

    சில உறுப்பினர்கள் செய்தித்தாள்களில் இடம் பிடிக்க முயற்சி செய்கிறார்கள். அவையைவிட்டு வெளியேறிய உடனே மீடியா அறிக்கைகளை வெளியிடுகின்றனர். பிரபலம் அடைய சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றன.

    உறுப்பினர்கள் அவர்களுடைய பேச்சுக்கு சற்று முன் அவைக்குள் வருகிறார்கள். பின்னர் உடனடியாக வெளியேறுகின்றனர். அவைக்குள் இருக்காமல் வந்தோம் சென்றோம் யுக்தியை கடைபிடிக்கிறார்கள்.

    அரசியலமைப்பு மதிப்புகள் மற்றும் சுதந்திரங்களின் கோட்டையாக பாராளுமன்றம் உள்ளது. சில சமயங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டபோது, அவைத் தலைவர்கள் தங்களது சமயோஜித செயலால் அதை சிறப்பாக கையாண்டுள்ளனர்.

    ஆனால் நிலைலை தற்போது மிகவும் மோசடைந்துள்ளது. கண்ணியமற்ற நடத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. இது ஜனநாயக ஆன்மாவுக்கான அடியாகும்.

    இவ்வாறு ஜெக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

    ×