என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநிலங்களவை"

    • நிதியின் நிர்வாகத்தில் எந்த அரசியல் கட்சித் தலைவரும் ஈடுபடவில்லை.
    • யாருக்கு அதிக பொறுப்பு உள்ளது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.

    புதுடெல்லி:

    மாநிலங்களவையில் உள்துறை மந்திரி அமித் ஷா பேரிடர் மேலாண்மை (திருத்தம்) மசோதா 2024 மீதான விவாதத்திற்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது பிரதமரின் நிவாரண நிதி உருவாக்கப்பட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் போது பி.எம்.கேர் நிதி நிறுவப்பட்டது.

    காங்கிரஸ் ஆட்சியின் கீழ் பிரதமரின் நிவாரண நிதியின் மீது ஒரு குடும்பம் மட்டுமே கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தது. காங்கிரஸ் கட்சித் தலைவர் பிரதமர் நிவாரண நிதியின் உறுப்பினராக இருந்தார். இந்த நாட்டு மக்களுக்கு நீங்கள் என்ன பதில் அளிப்பீர்கள்?

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ராஜீவ்காந்தி அறக்கட்டளை பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து நிதியைப் பெற்றது

    பொதுத்துறை நிறுவனங்கள் கூட அறக்கட்டளைக்கு நிதி அளித்தன. அவர்களின் காலத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. நிதியைப் பயன்படுத்துவதை ஆராய எந்தக் குழுவும் இல்லை.

    மாறாக, பி.எம்.கேர் நிதியின் நிர்வாகத்தில் நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் உள்பட முதல் ஐந்து அமைச்சர்கள் அறங்காவலர்களாக உள்ளனர்.

    5 செயலாளர்களைக் கொண்ட குழு அதன் செலவினங்களை மதிப்பாய்வு செய்து அங்கீகரிக்கிறது. பி.எம்.கேர் நிதி வென்டிலேட்டர்கள் மற்றும் தடுப்பூசி போன்ற முக்கியமான COVID-19 உள்கட்டமைப்பிற்கு பயன்படுத்தப்பட்டது.

    நிதியின் நிர்வாகத்தில் எந்த அரசியல் கட்சித் தலைவரும் ஈடுபடவில்லை. யாருக்கு அதிக பொறுப்பு உள்ளது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.

    காங்கிரஸ் கட்சி அதன் முந்தைய நிதி மேலாண்மை நடைமுறைகளை விளக்குமா என சவால் விடுத்தார்.

    • மக்களவையில் நீதிபதி வீட்டில் பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் எழுப்பப்பட்டது.
    • மாநிலங்களவையில் பா.ஜ.க.வினர் அமளியில் ஈடுபட்டனர்.

    பாராளுமன்றத்தில் இன்று காலை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இன்றைய அலுவல் நேரத்தில் பல்வேறு மசோதாக்கள் குறித்த விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

    தி.மு.க. எம்.பி. வில்சன் மாநிலங்களவை செயலாளரிடம் கடிதம் ஒன்றை கொடுத்து இருந்தார். அதில் அவர், "மாநிலங்களவையில் இன்று நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விட்டு தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும். 2026-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ள நிலையில் இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

    எனவே சட்டவிதி 267-ன்கீழ் அனைத்து அலு வல்க ளையும் ரத்து செய்து தொகுதி மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க வேண்டும். பிரதமர் மோடி இதற்கு பதில் அளிக்க அளிக்க வேண்டும் கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறப்பட்டு இருந்தது. இதை வலியுறுத்தி தி.மு.க. எம்.பி.க்கள் குரல் எழுப்பினார்கள்.

    அப்போது மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா பேசினார். அப்போது, கர்நாடகா மாநிலத்தில் மத ரீதியிலான இட ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீதம் இடம் ஒதுக்கீடு அளிக்க அம்மாநில அரசு முடிவு செய்து இருக்கிறது. மத ரீதியிலான இந்த இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. கர்நாடகா காங்கிரஸ் கட்சி சட்டத்துக்கு எதிராக நடந்து வருகிறது.

    கர்நாடகா மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அரசியல் சாசனத்தை மாற்ற நினைக்கிறார். தங்கள் கட்சிக்கு சாதகமாக இட ஒதுக்கீட்டை செய்ய இருப்பது சரியானது அல்ல. இதை காங்கிரஸ் தலைவர் கார்கே ஏற்கிறாரா? என்பதை தெரிவிக்க வேண்டும்," என்றார்.

    ஜே.பி.நட்டா பேசியதும் காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் தலைவர் கார்கே பேசும் போது, "நட்டாவின் பேச்சுகளை ஏற்க இயலாது. இஸ்லாமியர்களுக்கு நன்மை தரும் இட ஒதுக்கீட்டை யாராலும் அகற்றி விட முடியாது," என்று கூறினார்.

    இதற்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்குரல் கொடுத்தனர். இதனால் மாநிலங்களவையில் கடும் கூச்சல்-அமளி ஏற்பட்டது. இதையடுத்து மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

    பாராளுமன்ற மக்களவை இன்று 11 மணிக்கு கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுந்து டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக கோடிக்கணக்கில் பணம் சிக்கியது பற்றி விவாதிக்க வேண்டும் என்றனர். ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை.

    அப்போது சமாஜ்வாடி எம்.பி.க்கள் எழுந்து உத்தர பிரதேசத்தில் கொலை-கொள்ளை அதிகரித்து விட்டது. அதுபற்றி விவாதிக்க வேண்டும் என்றனர். ஆனால் சபாநாயகர் அதை ஏற்க மறுத்தார். உடனே சமாஜ்வாடி எம்.பி.க்கள் உத்தரபிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டதாக எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி பிடித்தனர்.

    இதை கண்டதும் சபாநாயகர் ஓம்பிர்லா கோபம் அடைந்தார். இப்படி நடந்து கொண்டால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். இதையடுத்து மக்களவையில் கடும் கூச்சல்-அமளி ஏற்பட்டது. இதனால் மக்களவையை மதியம் 12 மணி வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

    • உலகம் முழுவதும் விண்வெளியை அடைந்து, அதன் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்கும் வேளையில், நீங்கள் ஒரு கல்லறையைத் தோண்டுவதில் மும்முரமாக இருக்கிறீர்கள்.
    • தலித்துகள் நம்மோட உட்கார்ந்து சாப்பிட முடியாது, கோவிலுக்குப் போக முடியாதுன்னு எந்த முஸ்லிம் சொன்னாருன்னு எங்களுக்குக் சொல்லுங்க பார்ப்போம்.

    ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் இன்று உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்த விவாதத்தின் போது குற்றம் முதல் சட்டம் வகுப்புவாத வன்முறைகள் அதிகரிப்பு குறித்து ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார். 

    மகாராஷ்டிராவில் அமைந்துள்ள முகலாய மன்னர் அவுரங்கசீப் கல்லறையை இடிப்பது தொடர்பாக இந்து அமைப்புகள் தீவிரம் காட்டி  வந்த நிலையில் இதன் தொடர்ச்சியாக நாக்பூரில் கலவரம் ஏற்பட்டது.

    இதை முன்வைத்து அவையில் பேசிய சஞ்சய் சிங், 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் வகுப்புவாத வன்முறை சம்பவங்கள் 94 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கூறிய அவர், உங்கள் ஆட்கள் (பாஜகவினர்) நாடு முழுவதும் ஆத்திரமூட்டும், வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசுகிறார்கள்.

    உலகம் முழுவதும் விண்வெளியை அடைந்து, அதன் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்கும் வேளையில், நீங்கள் ஒரு கல்லறையைத் தோண்டுவதில் மும்முரமாக இருக்கிறீர்கள்.

    எந்த வரலாற்றை நீங்கள் கற்பிக்க விரும்புகிறீர்கள், தலித்துகள் முன்னாடி பானை கட்டிக்கிட்டு நடக்கணும், தலித்துகள் நம்மோட உட்கார்ந்து சாப்பிட முடியாது, கோவிலுக்குப் போக முடியாதுன்னு எந்த முஸ்லிம் சொன்னாருன்னு எங்களுக்கு சொல்லுங்க. எந்த முஸ்லிம், விலங்குகள் குளத்தில் தண்ணீர் குடிக்கலாம், ஆனால் ஒரு தலித் குடிக்க கூடாது என்று சொன்னான் என்று எனக்கு  சொல்லுங்க பார்ப்போம்.

     

    நீங்கள் வங்கதேசம்-வங்கதேசம் என்ற பாடலைத் திரும்பத் திரும்பப் பாடுகிறீர்கள். நாட்டில் நரேந்திர மோடியின் அரசு 11 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது, அமித் ஷா உள்துறை அமைச்சர் ஆக இருக்கிறார். இரு நாட்டின் எல்லை மேற்கு வங்காளத்துடனும் அசாமுடனும் உள்ளது. அப்படியிருக்க ஊடுருவல்காரர் எல்லையைக் கடந்து டெல்லிக்கு எப்படி வருகிறார்?.

    பிரதமர், ஜனாதிபதி, உள்துறை அமைச்சர் வசிக்கும் டெல்லி குற்றங்களின் கோட்டையாக மாறிவிட்டது. இங்குள்ள காவல்துறை நேரடியாக உள்துறை அமைச்சரின் கீழ் வருகிறது.

    பெண்கள், குழந்தைகள் மற்றும் எஸ்சி-எஸ்டி சமூகத்தினருக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்பான அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்தப் புள்ளிவிவரங்கள் அனைத்தும் இரட்டை எஞ்சின் அரசு செயலிழந்துவிட்டதையே காட்டுகிறது என்று தெரிவித்தார்.      

    • வாசகங்களுடன் கூடிய டி-சர்ட் அணிந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதனால் பிற்பகல் 2 மணிவரை சபாநாயகர் மக்களவையை ஒத்திவைத்தார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றம் இன்று காலை கூடியதும் மக்களவைக்கு வாசகங்களுடன் கூடிய டி-சர்ட் அணிந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் வந்திருந்தனர்.

    அவை தொடங்கியதும் சபாநாயகர் ஓம் பிர்லா பேசுகையில், எம்.பி.க்களை டி-சர்ட் அணிந்து வரவேண்டாம் என கேட்டுக் கொண்டார். இதையடுத்து, நண்பகல் 12 மணிவரை அவை ஒத்திவைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.

    இதேபோல், பாராளுமன்ற மாநிலங்களவையில் சபாநாயகர் ஜெகதீப் தன்கர் அவையை நண்பகல் 12 மணிவரை ஒத்திவைத்து உத்தரவிட்டார். அவையில் தான் பார்த்த விஷயங்களைப் பற்றி பேசவேண்டும் எனக்கூறி அரசியல் கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்திப்பதற்காக அழைப்பு விடுத்தார்.

    இந்நிலையில், மக்களவை மீண்டும் கூடியதும் வாசகங்களுடன் கூடிய டி-சர்ட் அணிந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல், மாநிலங்களவை கூடியதும் முதலில் 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

    தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து தி.மு.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    • மேற்கு வங்க வாக்காளர் அட்டையில் இடம் பிடித்துள்ள எபிக் எண், மற்ற மாநிலங்களில் உள்ள வாக்காளர் அட்டையில் இடம் பெற்றுள்ளது.
    • இது தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள. தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    பாராளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு, போலி வாக்காளர் அடையாள அட்டை எண் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என திமுக, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இரு அவைகளிலும் விவாதம் நடத்த அவைத் தலைவர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபடுவதுடன், வெளிநடப்பு செய்த வண்ணம் உள்ளனர்.

    இந்த நிலையில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை {EPIC (Electoral Photo Identity Card)} தொடர்பாக குறுகிய கால விவாதத்திற்கு அனுமதிக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் உங்களுடைய பரிந்துரை மிகவும் சிறந்த பரிந்துரை. இது தொடர்பாக நான் பரிசீலனை செய்வேன் என ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

    திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுவேந்து சேகர் ராய் "மாநிலங்களவையில் 267 விதியின் கீழ் வழங்கப்படும் நோட்டீஸ் 176 ஆவது விதியின் கீழ் மாற்றப்படுவதற்கான முன் நிகழ்வுகள் நடந்தள்ளது. இதனால் 267 விதியின் கீழ் உள்ள நோட்டீஸை 176 விதியின் கீழ் உங்களுடைய விருப்ப அதிகாரத்தை பயன்படுத்தி குறுகிய கால விவாத்திற்கு அனுமிக்க வேண்டுகோள் வைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

    அதற்கு ஜெகதீப் தன்கர் "எம்.பி.யின் திறமையை பாராட்டுகிறேன். சிறந்த பரிந்துரையை வழங்கியுள்ளார். இதை பரிசீலனை செய்து முடிவு எடுப்பேன்" என்றார்.

    மேற்கு வங்கத்தில் உள்ள வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள எபிக் நம்பர், மற்ற மாநிலங்களில் உள்ள வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் இடம் பிடித்துள்ளது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருந்தார்.

    வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு ஒரே மாதிரியான எபிக் எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை 25 ஆண்டுகளாக உள்ளது. இதை இன்னும் மூன்று மாதங்களில் சரி செய்வோம். இந்த எண்ணை பொருட்படுத்தாமல் அதில் உள்ள தொகுதி, வார்டு ஆகியவற்றை கொண்டு மக்கள் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

    இந்த விளக்கம் போதுமானதாக இல்லை. இது தொடர்பாக பாராளுமன்ற இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்பட வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இன்று பிரதமர் மோடியை சந்தித்து இசைஞானி இளையராஜா வாழ்த்துப் பெற்றார்.
    • சிம்பொனி குறித்து இளையராஜாவிடம் உரையாற்றியதாக மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இசைஞானி இளையராஜா தனது நீண்ட இசைப்பயணத்தில் சுமார் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்துள்ளார்.

    மேற்கத்திய இசை மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவரான இளையராஜா மொசார்ட் உள்ளிட்ட மேற்கத்திய இசை ஜாம்பவான்களின் சிம்பொனி இசைக் கூறுகளை தனது பாடல்களில் பயன்படுத்தி பாமர மக்களும் அவற்றை ரசிக்கும் வகையில் மெட்டுகளை அமைத்தார். அவரது இசையால் பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக மாறியுள்ளன. அவரது பாடல்கள் அனைத்தும் இன்றைய தலைமுறையையும் கவரும் வகையில் அமைந்துள்ளன.

    சமீபத்தில் லண்டனில் 'வேலியண்ட்' (Valiant) சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா மற்றொரு சாதனையைப் படைத்துள்ளார்.

    இந்நிலையில், இன்று பிரதமர் மோடியை சந்தித்து இசைஞானி இளையராஜா வாழ்த்துப் பெற்றார். சிம்பொனி குறித்து இளையராஜாவிடம் உரையாற்றியதாக மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதனையடுத்து மாநிலங்களைவை எம்.பி.யான இளையராஜா மாநிலங்களவையில் பங்கேற்றார்.

    அப்போது, சிம்பொனி அரங்கேற்றம் செய்த இளையராஜாவை பாராட்டிய மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர், "சிம்பொனியை இசையமைத்து, பதிவு செய்து, அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை இளையராஜா படைத்துள்ளார். அவரால் ஒட்டுமொத்த நாடும் பெருமை கொள்கிறது" என்று தெரிவித்தார். 

    • மேக் இன் இந்தியா திட்டம் உற்பத்திக்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது.
    • மேக் இன் இந்தியா திட்டத்தில் நம்பிக்கை வையுங்கள் என தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    மாநிலங்களவையில் மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டம் தோல்வி அடைந்துவிட்டது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

    இதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்துப் பேசியதாவது:

    மேக் இன் இந்தியா திட்டம் தோல்வி அடையவில்லை. ஆனால் உற்பத்திக்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது.

    மேக் இன் இந்தியாவில் நம்பிக்கை வையுங்கள், அது நல்ல பலன்களைத் தருகிறது.

    இந்தியாவின் வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரம் சில வளர்ந்த நாடுகளை விட மிகச் சிறந்தவை.

    மணிப்பூர் மற்றும் பிற மாநிலங்கள் மீது மோடி அரசாங்கம் அதிக அக்கறை கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

    • குளிர்கால கூட்டத்தொடரில் 16 புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
    • மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியுடன் யாத்திரையைத் தொடர முடிவு செய்துள்ளதாக தகவல்

    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் புதன்கிழமை தொடங்குகிறது. குஜராத் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு கூட்டத்தொடர் ஒரு மாதம் தாமதமாக தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில், பல மாநில கூட்டுறவுச் சங்கங்களில் பொறுப்புணர்வை அதிகரிக்கவும், தேர்தல் செயல்முறையை சீர்திருத்தவும் வகை செய்யும் மசோதா உள்ளிட்ட 16 புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஜெய்ராம் ரமேஷ், திக்விஜய் சிங் உள்ளிட்ட பல்வேறு மூத்த தலைவர்கள் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பங்கேற்கமாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த தலைவர்கள் அனைவரும் தற்போது ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் தொடர்ந்து பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாத யாத்திரையில் இருந்து வேறு நிகழ்ச்சியில் கவனம் செலுத்துவதை கட்சித் தலைமை விரும்பவில்லை என்றும் அதனால்தான் மூத்த தலைவர்கள் குளிர்கால கூட்டத்தொடரைத் தவிர்த்துவிட்டு ராகுல் காந்தியுடன் யாத்திரையைத் தொடர முடிவு செய்துள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    கட்சியின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜூன கார்கே, கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கையின்படி, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். சோனியா காந்தி தலைமையில் இன்று மாலையில் நடைபெற உள்ள கூட்டத்தில், மாநிலங்களவையின் புதிய எதிர்க்கட்சித் தலைவர் குறித்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் காங்கிரசின் செயல்பாடுகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

    அதேசமயம் காங்கிரஸ் தலைவர் கார்கேவையே மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக தொடர அனுமதிக்கலாமா? என்று கட்சி தலைமை ஆலோசித்து வருகிறது. இது குறித்து சோனியா காந்தி, கட்சியின் மற்ற மூத்த தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து இன்று இறுதி முடிவு எடுக்கலாம்.

    ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கையை கடைப்பிடிக்க முடிவு செய்தால், ப.சிதம்பரமும், திக்விஜய சிங்கும் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு பரிசீலனை செய்யப்படலாம். 

    • வன விலங்குகள் பாதுகாப்பு திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
    • காப்புக் காடுகளை சிறப்பாக பராமரித்து, வன விலங்குகளைப் பாதுகாக்க இந்த மசோதா வகை செய்கிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மாநிலங்களவையில் வன விலங்குகள் பாதுகாப்பு திருத்த மசோதா நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. காப்புக் காடுகளை சிறப்பாக பராமரித்து, வன விலங்குகளைப் பாதுகாக்கவும், அந்தப் பகுதிகளில் கால்நடைகளை மேய்த்தல், குடிநீர் வசதி போன்ற குறிப்பிட்ட செயல்பாடுகளை அனுமதிக்கவும் இந்த மசோதா வகை செய்கிறது.

    இந்நிலையில், நேற்று இந்த மசோதா குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு விட்டதால், இரு அவைகளின் ஒப்புதலை பெற்று விட்டது.

    மேலும், மாநிலங்களவை கேள்வி நேரத்தில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியதாவது:

    நைஜீரிய கடல் பகுதியில் கடந்த ஆகஸ்டு மாதம் ஒரு வர்த்தக கப்பல் சிறைபிடிக்கப்பட்டது. அதில் இருந்த 16 இந்திய மாலுமிகள் உள்பட 26 பேர் கைது செய்யப்பட்டனர். அவர் கினியாவில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்கள் மீது சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர்களை மீட்க நைஜீரியா மற்றும் கினியா அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளோம். கொேரானா பரவல் காரணமாக, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளுக்கு செல்ல இந்தியர்கள் விசா பெறுவதில் சவால்களை சந்தித்து வருவது மத்திய அரசுக்கு தெரியும். விசா வழங்குவதை எளிமைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அரசுகளை வலியுறுத்தி வருகிறோம் என தெரிவித்தார்.

    • அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்து விட்டு விவாதிக்க அரசுக்கு கோரிக்கை.
    • தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையை விவாதிக்க அரசு மறுப்பதாக புகார்.

    அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டர் பகுதியில் அத்து மீறிய சீனா ராணுவ வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து கடந்த 13ந் தேதி பாராளுமன்ற மக்களவையில் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்தார். இந்நிலையில் மாநிலங்களவையில் சீன விவகாரம் தொடர்பாக விவாதிக்க, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

    விதி எண் 267 இன் கீழ் சீன விவகாரம் குறித்து விவாதிக்க கோரி மேலும் பல காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று நோட்டீஸ் அளித்திருந்தனர். மாநிலங்களவை நிகழ்ச்சி தொடங்கியதும், அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்து விட்டு விவாதிக்குமாறு எதிர்க்கட்சிகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்தன. ஆனால் அவைத் தலைவர் பொறுப்பில் இருந்த ஹரிவன்ஷ் அதை அனுமதிக்கவில்லை. இதனால் கூச்சல் குழப்பம் நிலவியதால் அவை  சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.

    பின்னர் அவை கூடியபோது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசிய பாதுகாப்பு தொடர்பான மிகக் கடுமையான இந்த பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் கோரும் விவாதங்களுக்கு அரசு அனுமதி வழங்க மறுப்பதாக குற்றம் சாட்டினார். அப்போது குறுக்கிட்ட ஹரிவன்ஷ், விதி எண் 267ன் கீழ் விவாதம் நடத்த கோருவதை ஏற்க இயலாது என்று மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டினார்.

    மேலும் எதிர்க்கட்சிகள் அளித்துள்ள நோட்டீஸ்கள் அவை தலைவரின் பரிசீலனையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும் விவாதம் நடத்தக்கோரி காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பினர். மேலும் அவையின் மையப் பகுதிக்கு சென்று அவர்கள் முற்றுகையிட்டதால் நண்பகல் 12 மணிவரை மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது.

    • கடந்த 5 ஆண்டுகளில் 177 வெளிநாட்டு செயற்கை கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன.
    • இதில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 19 நாடுகளின் செயற்கைக்கோள்களும் அடங்கும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கடந்த 5 ஆண்டுகளில் 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது.

    இஸ்ரோவின் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி-எம்கே3 ராக்கெட்டுகள் மூலம் கடந்த 2018 முதல் 2022 வரை என 5 ஆண்டுகளில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 19 நாடுகளின் 177 செயற்கைக்கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

    இதுபோன்ற வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் மூலம் 94 மில்லியன் அமெரிக்க டாலரும், 46 மில்லியன் யூரோவும் அந்நியச் செலாவணியாக இந்தியாவுக்கு கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

    • சீன அத்துமீறல் பிரச்சினை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை.
    • அவை நடவடிக்கையை ஒத்தி வைத்து விவாதிக்க கோரி நோட்டீஸ்

    அருணாச்சல பிரதேச மாநில எல்லை பகுதியில் சீன ராணுவத்தினரின் அத்துமீறல் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று பாராளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக பல்வேறு கட்சிகள் சார்பில் வழங்கப்பட்ட ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீஸ்கள் அவைத் தலைவரின் பரிசீலனையில் இருந்தன. 

    இந்நிலையில் இன்று காலை பாராளுமன்றம் கூடியதும், மாநிலங்களவையில் சீன பிரச்சினையை எழுப்பிய எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது 267 விதியின் கீழ் எதிர்க்கட்சிகள் அளித்த நோட்டீஸ்கள் சரியான முறையில் இல்லை என்று கூறிய அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், அவற்றை நிராகரித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக, இடதுசாரி கட்சிகளின் எம்.பி.க்கள் வெளிநடப்புச் செய்தனர்.

    ×