என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஸ்திரேலியா-இந்தியா தொடர்"

    • இந்திய அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.
    • முதல் டெஸ்டில் இந்தியாவும், 2வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியாவும், அடிலெய்டில் ஆஸ்திரேலியாவும் வென்று 1-1 என சமனிலை வகிக்கிறது. பிரிஸ்பேனில் நடந்த 3வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.

    இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் மெல்போர்னில் இன்று தொடங்குகிறது.

    இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

    இந்திய அணியில் சுப்மன் கில்லுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளார்.

    இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு:

    ஆஸ்திரேலியா: உஸ்மான் கவாஜா, சாம் கோண்டாஸ், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் சுமித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஸ்காட் போலண்ட்.

    இந்தியா: ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, ரிஷப் பண்ட், ஜடேஜா, நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், பும்ரா, சிராஜ், ஆகாஷ் தீப்.

    • அதிரடியாக விளையாடிய அறிமுக வீரர் கான்ஸ்டாஸ் 60 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
    • 2021-ம் ஆண்டுக்கு பிறகு பும்ராவிற்கு எதிராக சிக்சர் அடித்த வீரர் என்ற பெருமையை கான்ஸ்டாஸ் பெற்றுள்ளார்.

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியாவும், அடிலெய்டில் ஆஸ்திரேலியாவும் வென்று 1-1 என சமனிலை வகிக்கிறது. பிரிஸ்பேனில் நடந்த 3வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.

    இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் மெல்போர்னில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

    ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அறிமுக வீரர் சாம் கான்ஸ்டாஸ் உடன் கவாஜா களமிறங்கினர். இதில் அதிரடியாக விளையாடிய கான்ஸ்டாஸ் 65 பந்துகளில் 60 ரன்கள் அடித்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

    இப்போட்டியின் மூலம் அறிமுகமான 19 வயது இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் பும்ராவின் ஓவரில் 2 சிக்சர்களை பறக்கவிட்டார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் பும்ராவிற்கு எதிராக குறிப்பாக 4,483 பந்துகளுக்கு பிறகு சிக்சர் அடித்த வீரராக மாறி சாதனை படைத்துள்ளார்.

    2021-ம் ஆண்டுக்கு பிறகு பும்ராவிற்கு எதிராக சிக்சர் அடித்த வீரர் என்ற பெருமையை கான்ஸ்டாஸ் பெற்றுள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் பும்ராவின் முதல் 33 பந்துகளில் அதிக ரன்கள் அடித்த ஓபனர் பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் கான்ஸ்டாஸ் படைத்துள்ளார். பும்ராவின் முதல் 33 பந்துகளில் கான்ஸ்டாஸ் 34 ரன்களை அடித்துள்ளார்.

    • இந்திய பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை கான்ஸ்டாஸ் நாலாபக்கமும் சிதறிடித்தார்.
    • கான்ஸ்டாஸ் நடந்து கொண்டிருக்கும்போது கோலி வேண்டுமென்றே அவரின் தோள்பட்டையில் இடித்தார்.

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியாவும், அடிலெய்டில் ஆஸ்திரேலியாவும் வென்று 1-1 என சமனிலை வகிக்கிறது. பிரிஸ்பேனில் நடந்த 3வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.

    இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் மெல்போர்னில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

    ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அறிமுக வீரர் சாம் கான்ஸ்டாஸ் உடன் கவாஜா களமிறங்கினர். இதில் அதிரடியாக விளையாடிய கான்ஸ்டாஸ் 65 பந்துகளில் 60 ரன்கள் அடித்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

    இப்போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை கான்ஸ்டாஸ் நாலாபக்கமும் சிதறிடித்தார். குறிப்பாக பும்ராவின் ஓவரில் பவுண்டரிகளை விளாசினார்.

    அப்போது கான்ஸ்டாசுக்கும் கோலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவர்களுக்கு இடையே கான்ஸ்டாஸ் நடந்து கொண்டிருக்கும்போது கோலி வேண்டுமென்றே அவரின் தோள்பட்டையில் இடித்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே கவாஜா அங்கு வந்து இருவரையும் சமாதானப்படுத்தினார்.

    இந்த வாக்குவாதம் முடிந்தவுடன் பும்ரா வீசிய ஓவரின் முதல் பந்திலேயே கான்ஸ்டாஸ் பவுண்டரி அடித்தார். இதனையடுத்து கோலியின் முகம் வாடியது குறிப்பிடத்தக்கது.

    • அதிரடியாக விளையாடிய கான்ஸ்டாஸ் 60 ரன்கள் அடித்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
    • மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கவாஜா 57 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியாவும், அடிலெய்டில் ஆஸ்திரேலியாவும் வென்று 1-1 என சமனிலை வகிக்கிறது. பிரிஸ்பேனில் நடந்த 3வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.

    இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் மெல்போர்னில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

    ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அறிமுக வீரர் சாம் கான்ஸ்டாஸ் உடன் கவாஜா களமிறங்கினர். இதில் அதிரடியாக விளையாடிய கான்ஸ்டாஸ் 65 பந்துகளில் 60 ரன்கள் அடித்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

    இப்போட்டியின் மூலம் அறிமுகமான 19 வயது இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் பும்ராவின் ஓவரில் 2 சிக்சர்களை பறக்கவிட்டார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் பும்ராவிற்கு எதிராக குறிப்பாக 4,483 பந்துகளுக்கு பிறகு சிக்சர் அடித்த வீரராக மாறி சாதனை படைத்தார்.

    நிதானமாக விளையாடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கவாஜா 57 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து களமிறங்கிய மார்னஸ் லாபுசாக்னே 72 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட், பும்ரா பந்துவீச்சில் டக் அவுட்டாகி வெளியேறினார். மிட்சல் மார்ஸ் 4 ரன்களிலும் அலெக்ஸ் கேரி 31 ரன்களையும் ஆட்டமிழந்தனர்.

    இறுதியாக முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களை குவித்துள்ளது. நிதானமாக விளையாடி அரைசதம் கடந்த ஸ்மித் 68 ரன்களுடனும் பேட் கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளும் ஜடேஜா, ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்திய பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை கான்ஸ்டாஸ் நாலாபக்கமும் சிதறிடித்தார்.
    • கான்ஸ்டாஸ் நடந்து கொண்டிருக்கும்போது கோலி வேண்டுமென்றே அவரின் தோள்பட்டையில் இடித்தார்.

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியாவும், அடிலெய்டில் ஆஸ்திரேலியாவும் வென்று 1-1 என சமனிலை வகிக்கிறது. பிரிஸ்பேனில் நடந்த 3வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.

    இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் மெல்போர்னில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

    ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அறிமுக வீரர் சாம் கான்ஸ்டாஸ் உடன் கவாஜா களமிறங்கினர். இதில் அதிரடியாக விளையாடிய கான்ஸ்டாஸ் 65 பந்துகளில் 60 ரன்கள் அடித்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

    இப்போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை கான்ஸ்டாஸ் நாலாபக்கமும் சிதறிடித்தார். குறிப்பாக பும்ராவின் ஓவரில் பவுண்டரிகளை விளாசினார்.

    அப்போது கான்ஸ்டாசுக்கும் கோலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவர்களுக்கு இடையே கான்ஸ்டாஸ் நடந்து கொண்டிருக்கும்போது கோலி வேண்டுமென்றே அவரின் தோள்பட்டையில் இடித்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே கவாஜா அங்கு வந்து இருவரையும் சமாதானப்படுத்தினார்.

    இந்நிலையில், கான்ஸ்டாஸ் மீது வேண்டுமென்றே மோதிய விவகாரத்தில் விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 20% அபராதம் விதிக்கப்பட்டதுடன் 1 டிமெரிட் புள்ளி வழங்கப்பட்டது.

    கிரிக்கெட் மைதானத்தில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் வீரர்களை கண்டிக்கும் வகையில் டிமெரிட் புள்ளி வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

    இந்திய அணி கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 3-வது ஆண்டாக அதிக ரன்கள் குவித்து சாதனைப் படைத்துள்ளார். #ViratKohli #TeamIndia
    இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 3-வது ஆண்டாக அதிக ரன் குவித்து சாதனை படைத்து இருக்கிறார். டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டி ஆகிய 3 வடிவிலான போட்டிகளையும் சேர்த்து இந்த ஆண்டு அவர் 2653 ரன் எடுத்துள்ளார். 69.81 சராசரி வைத்துள்ளார்.

    2016-ம் ஆண்டு 2595 ரன்னும், 2017-ம் ஆண்டு 2818 ரன்னும் எடுத்து இருந்தார். தொடர்ந்து அவர் 3 ஆண்டுகளாக ரன் வேட்டையில் முதல் இடத்தை தக்க வைத்து அசத்தி வருகிறார்.
    கடந்த 2014-ம் ஆண்டைவிட தற்போதைய மெல்போர்ன் ‘பிட்ச்’ உயிரோட்டமாக உள்ளது என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் நாளை மெல்போர்னில் தொடங்குகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் முடிவுகள் கிடைத்தன. மெல்போர்ன் ஆடுகளம் கடந்த சில வருடங்களாக பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளது. மேலும், போட்டிகளில் முடிவு கிடைக்காமல் ‘டிரா’விலேயே முடிந்துள்ளன.

    இந்திய அணி கடந்த 2014-ம் ஆண்டு மெல்போர்னில் விளையாடியபோது, உயிரோட்டமில்லாத ஆடுகளமாக இருந்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 530 ரன்கள் குவித்தது. ஸ்டீவ் ஸ்மித் 192 ரன்களும், ரியாஸ் ஹாரிஸ் 74 ரன்களும், கிறிஸ் ரோஜர்ஸ் 57 ரன்களும், பிராட் ஹட்டின் 55 ரன்களும், ஷேன் வாட்சன் 52 ரன்களும் சேர்த்தனர்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா விராட் கோலி (169), ரகானே (147) ஆகியோரின் சதத்தால் 465 ரன்கள் குவித்தது. அதனைத்தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

    384 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 19 ரன்கள் என்ற நிலையில் தத்தளித்தபோது விராட் கோலி (54), ரகானே (48) அட்டத்தால் இந்தியா போட்டியை டிரா செய்தது. ஆஷஸ் தொடரில் மெல்போர்ன் டெஸ்ட் மட்டும் டிராவில் முடிந்தது. உள்ளூர் தொடரில் அதிக அளவில் சதங்கள் விளாசப்பட்டன.

    இதனால் நாளை தொடங்கும் போட்டியிலும் முடிவு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், நேற்று ஆடுகளத்தை பரிசோதித்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி, தற்போதைய ஆடுகளம் உயிரோட்டமாக இருக்கிறது. முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.



    தற்போதைய மெல்போர்ன் ஆடுகளம் குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘நான் ஆடுகளத்தை நேற்று பார்த்தபோது, அதன் அடிப்பகுதி உலர்ந்து காணப்பட்டது. ஆனால், மேற்பகுதி புற்கள் நிறைந்து காணப்படுகிறது. இது அப்படியே இருக்க வேண்டும். இந்த புற்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் உற்சாகமாக பந்து வீச போதுமானதாக இருக்கும் என நினைக்கிறேன். கடந்த முறையை (2014) விட தற்போதைய ‘பிட்ச்’ போதுமான அளவு உயிரோட்டமாக இருக்கும் என நம்புகிறேன்.

    முதல் இரண்டு போட்டிகளில் ஆடுகளம் என்ன செய்ததோ, அதை இந்த ஆடுகளமும் செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. எப்போதும் நாங்கள் வெற்றியை எதிர்நோக்கிதான் செல்வோம்’’ என்றார்.
    வார்த்தைப் போர் விளையாட்டின் ஒரு பகுதி, அது கட்டாயம் இருக்க வேண்டும் என்று 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கள் சாய்த்த முகமது ஷமி தெரிவித்துள்ளார். #AUSvIND
    தென்ஆப்பிரிக்கா தொடரின்போது ஆஸ்திரேலியா அணி பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கியது. இந்த விவகாரத்தால் பான்கிராப்ட் 9 மாதம் தடையும், வார்னர் மற்றும் ஸ்மித் 12 மாதத்தடையும் பெற்றுள்ளனர்.

    இந்த பிரச்சினையால் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டிற்கு களங்கம் ஏற்பட்டதாக நிர்வாகிகள் எண்ணினார்கள். இதனால் ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான தொடரின்போது வீரர்கள் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

    அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டின்போது ஸ்லெட்ஜிங் ஏதும் இல்லை. ஆனால் தற்போது பெர்த்தில் நடைபெற்று வரும் டெஸ்டில் இரு அணி வீரர்களும் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டனர். பொதுவாக இரு அணி கேப்டன்களான டிம் பெய்ன் மற்றும் விராட் கோலி ஒருவருக்கொருவர் வார்த்தைப் போரில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இருவரும் நேருக்குநேர் மோதும் சூழ்நிலைக்கூட ஏற்பட்டது. நடுவர்கள் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தனர்.



    இன்று ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தபோது, மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் ஏதும் இழக்கவில்லை. உணவு இடைவேளைக்குப்பிறகு முகமது ஷமி அபாரமாக பந்து வீசினார். ஒரு கட்டத்தில் 192 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுக்கள் என இருந்த ஆஸ்திரேலியா, 207 ரன்னிற்குள் 9 விக்கட்டுக்களை இழந்தது. 5 விக்கெட்டில் நான்கு விக்கெட்டுக்களை ஷமி சாய்த்தார்.

    இவரது பந்து வீச்சால் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 243 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இன்றைய ஆட்டத்திற்குப்பின் முகமது ஷமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘ஸ்லெட்ஜிங் விளையாட்டின் ஒரு அங்கம். அது கட்டாயம் இருக்க வேண்டும்’’ என்றார்.
    ×