என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்வதேச திரைப்பட விழா"

    • கதைசொல்லல் மற்றும் சமூக மாற்றத்தில் சினிமாவின் சக்தியை வலியுறுத்திய ஆர். டி. பாலாஜி உரையாற்றினார்.
    • மாணவர்கள், படங்களின் வரலாற்று மற்றும் சினிமா அம்சங்களைப் பற்றி விவாதித்தனர்.

    எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் காட்சித் தொடர்பியல் துறை சார்பில் கடந்த 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்களில் சர்வதேசத் திரைப்பட விழா சிறப்பாக நடைபெற்றது.

    சமூக- அரசியல் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சிந்தனையைத் தூண்டும் படங்களுக்குப் பெயர் பெற்ற பிரபல இலங்கைத் திரைப்படத் தயாரிப்பாளர் பிரசன்னா விதானகேயின் படைப்புகளைச் சிறப்பிக்கும் வண்ணம் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

    பாரம்பரிய விளக்கு ஏற்றும் நிகழ்வுடன் இவ்விழா தொடங்கியது. அதைத் தொடர்ந்து கதைசொல்லல் மற்றும் சமூக மாற்றத்தில் சினிமாவின் சக்தியை வலியுறுத்திய ஆர். டி. பாலாஜி உரையாற்றினார்.

    இதில், முதல் நாள் விழாவில், போருக்குப் பிந்தைய இலங்கையில் அமைக்கப்பட்ட ஒரு துடிப்பான காதல் கதையான "உங்களுடன், நீங்கள் இல்லாமல்" (2012) மற்றும் காலனித்துவக் கால இலங்கையில் அடையாளம் மற்றும் ஒடுக்குமுறையை ஆராயும் "காடி" (2019) ஆகிய திரைப்படங்கள் திரையிடப்பட்டன. 

    ஒவ்வொரு திரையிடலுக்குப் பிறகும் ஒரு கேள்வி பதில் அமர்வு நடைபெற்றது. மாணவர்கள், படங்களின் வரலாற்று மற்றும் சினிமா அம்சங்களைப் பற்றி விவாதித்தனர்.

    இரண்டாம் நாள் விழாவில், "பாரடைஸ்" (2023) திரையிடப்பட்டது. இது இடம்பெயர்வு மற்றும் சலுகை பற்றிய சமகால நாடகமாகும்.

    பிரசன்னா விதானகேவுடன் பாட்காஸ்ட் பாணி ஊடாடும் அமர்வு ஒரு சிறப்பம்சமாகும் அங்கு அவர் தனது திரைப்படத் தயாரிப்புப் பயணம் பற்றிய நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு ஒரு தனித்துவமான கற்றல் அனுபவத்தை வழங்கியது.

    முன்னோக்குகளை வடிவமைப்பதில் சினிமாவின் பங்கை வலுப்படுத்தியதோடு, அர்த்தமுள்ள விவாதங்களைத் தூண்டியதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • சென்னையில் 20-வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 15-ம் தேதி தொடங்கியது.
    • இந்த விழாவில் 102 படங்கள் திரையிடப்பட்டது.

    சென்னை 20-வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 15-ம் தேதி தொடங்கியது. 51 நாடுகளில் இருந்து 102 படங்கள் திரையிடப்பட்ட இந்த விழாவானது நேற்று நிறைவு பெற்றது. இதில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான 'மாமனிதன்' திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது நடிகர் விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது.


    மாமனிதன்

    இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, "திரைப்படங்களை பார்த்துவிட்டு கடந்து போய் விடாமல் இயக்குநர்கள் கதையின் வாயிலாக தெரிவிக்க விரும்பும் விஷயங்களை புரிந்துகொள்ளுங்கள். ஆரோக்கியமாக விவாதங்களில் ஈடுபடுங்கள். வாழ்க்கையின் அனுபவங்கள்தான் திரைப்படங்களாகின்றன. அந்த அனுபவத்தின் வழியாக ஒரு இயக்குனர் தன்னுடைய பார்வையை சொல்கிறார். முடிந்த அளவு ஒரு திரைப்படத்தை புரிந்துகொள்ள முயற்சியுங்கள். வாழ்க்கையை புரிந்துகொள்ள திரைப்படங்கள் உதவுகின்றன.


    விஜய் சேதுபதி - சீனுராமசாமி

    எந்தவொரு படத்தையும் விமர்சனங்களின் வாயிலாக புரிந்துகொள்ள முயற்சிக்காதீர்கள். அது நல்லதல்ல. இப்போதெல்லாம் யூடியூப்பில் கெட்டது பேசினால் வியூஸ் கூடுகிறது அதனால் பணம் வருகிறது. விமர்சகர்கள் பார்வையில் திரைப்படங்கள் சரியாக பார்க்கப்படுகின்றதா எனத் தெரியவில்லை. உங்களுடைய பார்வையில் உங்களுடைய வாழ்க்கையுடன் சம்பந்தப்படுத்தி ஒரு திரைப்படத்தை பாருங்கள். நடிகர் பூ ராமுவுடன் இணைந்து இந்த விருதை பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி" எனத் தெரிவித்தார். மேலும் விஜய் சேதுபதி விருதுக்கான பரிசுத்தொகையை விழாக்குழுவிற்கு நன்கொடையாக வழங்கினார்.

    • 11-வது சர்வதேச ஆவணப்பட, குறும்பட திருவிழா அலையன்ஸ் பிரான்சே கலையரங்கில் தொடங்கியது.
    • நாளை வரை நடைபெறும் இவ்விழாவில் விருது பெற்ற சர்வதேச அளவிலான சிறந்த படங்கள் திரையிடப்படுகிறது.

    புதுவை திரை இயக்கம், அலையன்ஸ் பிரான்சே, மும்பை மத்திய திரைப்பட பிரிவு, தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம், தமிழ்நாடு முற்பாக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் இணைந்து 11-வது சர்வதேச ஆவணப்பட, குறும்பட திருவிழா அலையன்ஸ் பிரான்சே கலையரங்கில் தொடங்கியது.


    விழாவை அமைச்சர் லட்சுமிநாராயணன் தொடங்கி வைத்தார். தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழக பொது மேலாளர் ராமகிருஷ்ணன், எழுத்தாளர் சங்கம் ஆதவன்தீட்சண்யா, எழுத்தாளர் தமிழ்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.

    விழாவில் திரைப்பட குறிப்பு புத்தகத்தை அலையன்ஸ் பிரான்சே, இயக்குனர் லொரேன்ஜலிகு வெளியிட்டார். நாளை (6-ந்தேதி) வரை நடைபெறும் இவ்விழாவில் விருது பெற்ற சர்வதேச அளவிலான சிறந்த படங்கள் திரையிடப்படுகிறது. 9 நாடுகளை சேர்ந்த படங்களுடன் 32 படங்கள் திரையிடப்படுகிறது. தமிழகம், புதுவையை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட இளம் படைப்பாளிகளின் இலக்கிய படைப்புகளும் இடம்பெறுகிறது.

    • இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் வரும் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறுகிறது.
    • மத்திய அரசு சிறந்த வாழ்நாள் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கோவாவில் வரும் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் இந்திய பனோரமா பிரிவில் திரைப்படம் மற்றும் குறும்படங்களை திரையிடுவதற்கான விண்ணப்பங்களை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம் வரவேற்றது.

    இதில், திரைப்படங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 10ம் தேதி வரை வழங்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், கோவாவின் 54வது சர்வதேச திரைப்பட விழாவில் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸுக்கு சத்யஜித் ரே சிறந்த வாழ்நாள் விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இதுகுறித்து இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான மைக்கேல் டக்ளஸுக்கு, 54வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில், புகழ்பெற்ற சத்யஜித் ரே திரைப்பட வாழ்நாள் விருது வழங்கி கௌரவிக்கப்படுவார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    நமது நாட்டின் மீது அவருக்குள்ள ஆழ்ந்த அன்பு நன்கு அறியப்பட்டதாகும். மேலும், நமது செழுமையான சினிமா கலாச்சாரம் மற்றும் தனித்துவமான பாரம்பரியங்களை வெளிப்படுத்த தெற்காசியாவின் மிக முக்கியமான திரைப்பட விழாவிற்கு அவரை, கேத்தரின் ஜீட்டா ஜோன்ஸ் மற்றும் அவர்களது மகனை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.

    பாரத்திற்கும், 54வது இந்திய சர்வதேச விழாவிற்கும் அன்புடன் வரவேற்க்கிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெறுகிறது.
    • இதில் தமிழ் படங்கள் திரையிட தேர்வாகியுள்ளது.

    மத்திய அரசின் தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் சார்பில் 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை கோவாவில் நடைபெறுகிறது.

    இந்த விழாவில் தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியான 'விடுதலை' திரைப்படம் மற்றும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடிப்பில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், சம்யுக்த விஜயன் இயக்கிய நீல நிற சூரியன், காதல் என்பது பொதுவுடமை உள்ளிட்ட படங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. Non feature film பிரிவில் பிரவீன் செல்வம் இயக்கிய 'நன்செய் நிலம்' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    • படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
    • அப்படியொரு மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது இயக்குநர் ராம் இயக்கியிருக்கும் “ஏழு கடல் ஏழு மலை”

    படங்கள் திரைக்கு வரும் முன்பே அதற்கு அங்கீகாரம் கிடைப்பது என்பது மிக பெரிய விஷயம் மட்டுமல்லாது இயக்குனர் மற்றும் அதில் பணியாற்றி அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் மாபெரும் வெற்றி ஆகும். அப்படியொரு மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது இயக்குநர் ராம் இயக்கியிருக்கும் "ஏழு கடல் ஏழு மலை",

    கடந்த 2024 ஜனவரியில் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராமின் படைப்பான 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம் 53 வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' தேர்வாகி மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது.


    இந்நிலையில் 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம் மற்றுமொரு விழாவான ரொமேனியாவின் ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.

    ராம் இயக்கி இருக்கும் ஏழு கடல் ஏழு மலை படத்தில் நிவின் பாலி, அஞ்சலி நடித்துள்ளனர். இதையடுத்து படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அயலி கடந்த ஜனவரி 26ம் தேதி அன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.
    • பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் உள்ள அயலி ஜீ5 தளத்தில் வெளியானது.

    இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் உருவான வெப்தொடர் 'அயலி'. எட்டு எபிசோடுகள் அடங்கிய இந்த தொடரில் அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மதன், லிங்கா மற்றும் சிங்கம்புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

    அயலி கடந்த ஜனவரி 26ம் தேதி அன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி திரையுலகினர், சினிமா விமர்சகர்கள், ரசிகர்கள் என பலரின் பாராட்டுக்களை அயலி இணையத் தொடர் பெற்றது.

    இந்நிலையில், பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் ஜீ5 தளத்தில் வெளியாகி பாரட்டுக்களை குவித்த அயலி இணையத் தொடர், சிறந்த இணைய தொடருக்கான விருதுக்கு அயலி பிரந்துரை செய்யப்பட்டுள்ளது.

    கோவாவில் நடைபெறும் 55வது சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த இணைய தொடருக்கான விருதுக்கு தமிழில் வெளியான அயலி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    மேலும், இதில், காலாபாணி, கோட்டா ஃபேக்டரி, லாம்பான், ஜூப்ளி ஆகிய மற்ற மொழி இணைய தொடர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

    கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் ஹேம மாலினிக்கு இந்த ஆண்டின் சிறந்த இந்திய ஆளுமை விருது வழங்கப்பட்டது.
    பனாஜி:

    கோவாவில் 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழா இன்று கோலாகலமாக தொடங்கியது. திரைப்பட விழாவில் சர்வதேச பிரிவில் சுமார் 73 நாடுகளில் இருந்து 148 படங்கள் இடம்பெறுகின்றன. 28ம் தேதி வரை விழா நடைபெறுகிறது. ஓடிடி தளங்களான நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜீ 5, வூட், சோனி லைவ் ஓடிடி தளங்கள் விழாவில் கலந்து கொள்கின்றன.

    துவக்க விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாகூர், மத்திய இணை மந்திரி எல்.முருகன், பாலிவுட் நட்சத்திரங்கள் சல்மான் கான் மற்றும் ரன்வீர் சிங், மத்திய  ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சுமார் 75 திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சர்வதேச திரைப்பட விழாவையொட்டி இந்திய திரைப்பட ஆளுமை விருது வழங்கப்படுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான இந்திய திரைப்பட ஆளுமை விருது ஹேம மாலினிக்கு வழங்கப்பட்டது. விருதை மத்திய மந்திரி அனுராக் தாகூர், இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் வழங்கினர். இதேபோல், சிறந்த பாடலாசிரியரும், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரிய தலைவருமான பிரசூன் ஜோஷிக்கும் இந்த விருது வழங்கப்பட உள்ளது.

    ஹாலிவுட் பிரபலம் மார்ட்டின் ஸ்கோர்செஸி மற்றும் புகழ்பெற்ற ஹங்கேரிய திரைப்பட தயாரிப்பாளர் இஸ்டெவன் சாபோ ஆகியோருக்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
    சென்னையில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவிற்கு ரூ.75 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். #TNCM #Edappadipalaniswami
    சென்னை:

    சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 50 லட்சம் ரூபாயை, இந்த ஆண்டு 75 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

    இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்பிரிசியே‌ஷன் பவுன்டே‌ஷன் பொதுச் செயலாளர் தங்கராஜிடம் ரூ.75 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    2018-19ம் கல்வியாண்டில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதலாமாண்டு முதுகலைத் தமிழ்ப் பயிலும் மாணவர்களுள் தெரிவு செய்யப்பட்ட 15 மாணவர்களுக்கு கல்வித் தொகையாக மாதந்தோறும் 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைத்து, மாணவர்களுக்கு காசோலைகளை வழங்கினார்.


    தமிழ் வளர்ச்சித் துறையின் 2018-19-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், தமிழ்க்குடிமகன், மேலாண்மை பொன்னுச்சாமி மற்றும் முனைவர் பொன். சௌரிராசன் ஆகிய தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களின் குடும்பத்தினருக்கு அதற்கான பரிசுத் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க, முனைவர் மு. தமிழ்க்குடிமகன், மேலாண்மை பொன்னுச்சாமி மற்றும் முனைவர் பொன். சௌரிராசன் ஆகிய தமிழறிஞர்களின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய்க்கான பரிவுத் தொகையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.

    சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் தமிழ்பிராமி எழுத்தில் அணியமாக்கப்பட்டுள்ள ‘திருவள்ளுவர் கால எழுத்தில் திருக்குறள்’ என்ற நூலினையும் வெளியிட்டார். #TNCM #Edappadipalaniswami
    65-வது தேசிய விருது பட்டியலில் சிறந்த தமிழ் படத்துக்கான விருதை வென்ற ‘டூலெட்’ திரைப்படம் பல்வேறு விழாக்களில் பங்கேற்று வரும் நிலையில், 26 சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளது. #TOLET #Chezhiyan
    65-வது தேசிய விருது பட்டியலில் சிறந்த தமிழ் படத்துக்கான விருதை ‘டூலெட்’ படம் வென்றது. இன்னும் திரைக்கு வராத இந்த படம் ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. 26 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்டுள்ளது.

    நமது ஊரில் வாடகை வீடு தேடி அலைவது பெரிய வி‌ஷயம். இதில் உள்ள சிக்கல்கள், சிரமங்கள் என்ன என்பதை யதார்த்தமாக சொல்வதே ‘டூலெட்’ படத்தின் கதை. படம் குறித்து நமது குடும்பத்தில் எத்தனையோ வி‌ஷயங்கள் நடக்கின்றன. இதை மற்ற நாட்டினரும் அறிய வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளதை உள்ளபடியே திரைப்படமாக்கி இருப்பதாக இயக்குநர் செழியன் கூறினார்.



    இந்தப்படத்தில் சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா ராஜ்குமார் இணைந்து நடித்துள்ளனர். வரும் டிசம்பரிலோ அல்லது பொங்கலுக்கு பின்னரோ படத்தை தியேட்டர்களில் வெளியிட இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. #TOLET #Chezhiyan

    ×