என் மலர்
நீங்கள் தேடியது "டீசல் விலை உயர்வு"
- போராட்டத்தை தீவிரப்படுத்துவதாக லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
- 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் தடைபட்டுள்ளது.
டீசல் விலை உயர்வு மற்றும் சுங்கசாவடி கட்டண உயர்வை திரும்ப பெறுவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் கடந்த 2 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 3-வது நாளாக வேலைநிறுத்தம் தொடர்கிறது.
இதனால் கர்நாடக மாநிலத்தில் தண்ணீர், கியாஸ் உள்பட அத்தியாவசிய பணிகள் முடங்கி உள்ளது. இது தொடர்பாக கர்நாடகாவில் முதலமைச்சர் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த வித உடன்பாடும் இல்லாததால் இன்று முதல் போராட்டத்தை தீவிரப்படுத்துவதாக லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் கர்நாடக மாநிலம் வழியாக வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் தடைபட்டுள்ளது.
இதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கர்நாடக மாநிலம் வழியாக வட மாநிலங்களுக்கு செல்லும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகளும் செல்ல முடியாமல் கர்நாடக எல்லை பகுதி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தால் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் இரும்பு தளவாடங்கள், கனிம வளங்கள், முட்டைகள், கறிக்கோழிகள், வெல்லம், கோழித்தீவனம், கயிறு பண்டல்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், சின்டெக்ஸ் டேங்குகள், பி.வி.சி. பைப்புகள், மஞ்சள், ஜவ்வரிசி, ஜவுளி, கல்மாவு, தீப்பெட்டிகள், காய்கறிகள் உள்பட ரூ.200 கோடி மதிப்பிலான பொருட்கள் 2 நாட்களில் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் அதில் தொடர்புடை யவர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.
இதே போல கர்நாடகா வழியாக வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் வெங்காயம், பருப்பு வகைகள், மக்காச்சோளம், கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள், தானிய வகைகள், பூண்டு, எண்ணை வகைககள், தக்காளி, பீட்ரூட், கேரட், முட்டை கோஸ், காலிபிளவர், ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி உள்பட பழ வகைகள், தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உபகரணங்கள், கொண்டு வரப்படுவதும் முற்றிலும் தடை பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் உள்ள காய் கறி மார்க்கெட்டுகள், பழ மார்க்கெட்டுகள், தொழில் நிறுவனங்களுக்கு தேவையான பொருட்கள் வரத்து குறைந்துள்ளது . இதனால் அந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தால் லாரி உரிமையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதுடன், டிரைவர், கிளீனர்கள் உள்பட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். எனவே இந்த போராட்டத்தை கர்நாடக அரசு உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது அனைவரின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
- கர்நாடகாவில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் லாரிகள் இயங்கவில்லை.
- மாநிலங்களிடையேயான சரக்கு லாரிகள் போக்குவரத்து சேவை முடக்கம்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதற்கு லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அதனை வாபஸ் பெறாவிட்டால் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் மாநில அரசு அதனை கண்டு கொள்ளவில்லை.
இதையடுத்து டீசல் விலையை திரும்ப பெற வேண்டும், எல்லையில் உள்ள சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடகாவில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் லாரிகள் இயங்கவில்லை.
இந்த போராட்டத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான லாரிகள் பங்கேற்றுள்ளதால் மாநிலங்களிடையேயான சரக்கு லாரிகள் போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கி உள்ளது.
குறிப்பாக கர்நாடக மாநிலம் வழியாக மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு தினசரி தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் லாரிகள் செல்கின்றன.
இதே போல வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு தினசரி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் கர்நாடகா வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வருகின்றன.
கர்நாடகாவில் லாரி ஸ்டிரைக் தொடங்கி உள்ளதால் அந்த மாநிலம் வழியாக லாரிகள் இயக்கினால் கற்கள் வீசப்படலாம், மேலும் டிரைவர்களை தாக்கி லாரிகளை சேதப்படுத்தலாம் என்ற நிலை உள்ளதால் அந்த வழியாக லாரிகளை இயக்க வேண்டாம் என்று தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
இதனால் கர்நாடகா வழியாக தமிழகத்தில் இருந்து வட மாநிலம் செல்லும் லாரிகள் இயக்கப்பட வில்லை. இதே போல வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் லாரிகளும் இயக்கப்பட வில்லை. இதனால் தமிழகத்தில் இருந்து செல்லும் லாரிகள் கிருஷ்ணகிரி மவாவட்ட எல்லை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அத்தியாவசிய தேவைகளுக்காக செல்லும் லாரிகள் ஆந்திரா மாநிலம் வழியாக சுற்றி சென்று வருகின்றன. இதனால் கூடுதலாக 200 கி.மீ. தூரம் வரை சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து வடமாநிலத்திற்கு செல்லும் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் இங்கிருந்து வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் தேங்காய், ஜவுளி, ஜவ்வரிசி, தீப்பெட்டி, மஞ்சள், முட்டை, கறிக்கோழி, இரும்பு தளவாடங்கள், காய்கறிகள் உள்பட பல்வேறு பொருட்கள் கொண்டு செல்ல முடியாமல் தேக்கம் அடைந்துள்ளன .
பால், மருந்து பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்படும் லாரிகள் மட்டும் இயக்க அனுமதிக்கபபடுகிறது. இதே போல வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் பூண்டு, எண்ணை வகைகள், வெங்காயம், பருப்பு, மக்காச்சோளம் மற்றும் காய்கறிகள் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுவது முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழகம் மற்றும் கர்நாடகாவிற்கு இடையே 700 சரக்கு லாரிகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 50 சதவீத லாரிகளில் தக்காளி, பீட்ரூட், கோஸ், கேரட் ஆகியவை சென்னை உள்பட பல்வேறு மார்க்கெட்களுக்கு கொண்டு வரப்படுகிறது.
லாரிகள் வேலை நிறுத்தத்தால் காய்கறிகள் வரத்து பாதிப்பு ஏற்படும். இதனால் இந்த பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் அதற்கான விலை உடனடியாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே லாரி உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறுகையில் கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு டீசல் விலையை உயர்த்திய போது லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. மாநில அரசின் சிறிய விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்னர்.
புதுச்சேரியை தவிர கர்நாடகாவில் தான் டீசல் விலை தென்னகத்திலேயே மலிவானது. பொது நலனுக்காக வேலை நிறுத்தத்தை அவர்கள் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- கர்நாடகாவில் ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.2 அதிகரித்துள்ளது.
- ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.89.02-ல் இருந்து ரூ.91.02 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், 10 கிலோ இலவச அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஊக்கத்தொகை, இல்லத்தரசிகளுக்கு மாதம் தலா ரூ.2 ஆயிரம் உதவித்தொகை ஆகிய 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.
இந்த உத்தரவாத திட்டங்களால் அரசுக்கு செலவு அதிகமாகி வருகிறது. இதனால் அரசின் நிதி நிலை மோசமாகி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் கர்நாடக அரசு பஸ், மின்சாரம், மெட்ரோ ரெயில் கட்டணங்கள், பால் விலையை உயர்த்தி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதாவது கடந்த ஜனவரி மாதம் பஸ் கட்டணமும், அதற்கு அடுத்து பிப்ரவரி மாதம் பெங்களூருவில் மெட்ரோ ரெயில் கட்டணமும் உயர்த்தப்பட்டது. அதைதொடர்ந்து மின்சார கட்டணம் யூனிட்டுக்கு 36 காசும், பால் விலை லிட்டருக்கு ரூ.4-ம் அதிகரித்து கர்நாடக அரசு அதிரடி உத்தரவிட்டது.
இந்நிலையில் கர்நாடக அரசு டீசல் மீதான விற்பனை வரியை உயர்த்தியுள்ளது. தற்போது ஒரு லிட்டர் டீசலுக்கு கர்நாடக அரசின் விற்பனை வரி 18.44 சதவீதமாக உள்ளது. அது 21.17 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. அதாவது தற்போது 2.73 சதவீதம் விற்பனை வரி அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.2 அதிகரித்துள்ளது. அதாவது ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.89.02-ல் இருந்து ரூ.91.02 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், டீசல் விலை உயர்வை விமர்சிக்கும் விதமாக கர்நாடக பாஜக தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் சித்தராமையாவின் புகைப்படத்துடன் பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசல் புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டுள்ளது.
அந்த பதிவில், "சித்தராமையாவை காஸ்ட்லீ டீசல் என்று கிண்டலடித்த பாஜக, வின் டீசல் என்றால் பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் (Fast & Furious), சித்தராமையா ஸ்கேம் அண்ட் இன்ஜுரியஸ் (scam and injurious)" பாஜக விமர்சித்துள்ளது.
- கர்நாடகத்தில் நேற்று முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கர்நாடகத்தில் டீசல் விலை குறைவாக உள்ளதாக அரசு தனது முடிவை நியாயப்படுத்தியுள்ளது.
பெங்களூரு:
சித்தராமையா தலைமையிலான இந்த அரசு 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், 10 கிலோ இலவச அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஊக்கத்தொகை, இல்லத்தரசிகளுக்கு மாதம் தலா ரூ.2 ஆயிரம் உதவித்தொகை ஆகிய 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இந்த உத்தரவாத திட்டங்களால் அரசுக்கு செலவு அதிகமாகி வருகிறது. இதனால் அரசின் நிதி நிலை மோசமாகி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் கர்நாடக அரசு பஸ், மின்சாரம், மெட்ரோ ரெயில் கட்டணங்கள், பால் விலையை உயர்த்தி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதாவது கடந்த ஜனவரி மாதம் பஸ் கட்டணமும், அதற்கு அடுத்து பிப்ரவரி மாதம் பெங்களூருவில் மெட்ரோ ரெயில் கட்டணமும் உயர்த்தப்பட்டது. அதைதொடர்ந்து நேற்று முன்தினம் முதல் மின்சார கட்டணம் யூனிட்டுக்கு 36 காசும், பால் விலை லிட்டருக்கு ரூ.4-ம் அதிகரித்து கர்நாடக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
அதுபோல் பெங்களூருவில் குப்பை கழிவுகளுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் கண்டு வரும் நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தியால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புதிய நிதி ஆண்டு தொடங்கிய முதல் நாளான நேற்று முதலே விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளதால் அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கர்நாடகத்தில் நேற்று முதல் சுங்கச்சாவடி கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது பெங்களூரு-மைசூரு, பெங்களூரு-திருப்பதி, பெங்களூரு-தேவனஹள்ளி சாலைகளில் அதிக சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் 3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை சுங்கச்சாவடி கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கர்நாடக அரசு டீசல் மீதான விற்பனை வரியை உயர்த்தியுள்ளது. தற்போது ஒரு லிட்டர் டீசலுக்கு கர்நாடக அரசின் விற்பனை வரி 18.44 சதவீதமாக உள்ளது. அது 21.17 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. அதாவது தற்போது 2.73 சதவீதம் விற்பனை வரி அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.2 அதிகரித்துள்ளது. அதாவது ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.89.02-ல் இருந்து ரூ.91.02 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக நள்ளிரவு முதலே அமலுக்கு வந்துள்ளது.
இந்த விலையை உயர்த்திய பிறகும் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கர்நாடகத்தில் டீசல் விலை குறைவாக உள்ளதாக அரசு தனது முடிவை நியாயப்படுத்தியுள்ளது.
பால் விலை, மின்சார கட்டணம், குப்பைக்கு வரி விதிப்பு ஆகியவை நேற்று அமலுக்கு வந்த நிலையில் அரசு தற்போது டீசல் விலையை உயர்த்தி மக்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
டீசல் விலை உயர்வை எதிர்த்து பிரான்சில் கடந்த 3 வாரங்களாக பொதுமக்கள் மஞ்சள் நிறத்தில் மேலாடைகளை அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பாதுகாப்பு கருதி தலைநகர் பாரிசில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான சாம்ஸ் எலிசீசை போலீசார் நேற்று மூடினர். மேலும் அங்குவந்த பொதுமக்களை சோதனை செய்தனர்.
இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதை முன்கூட்டியே எதிர்பார்த்து பல கடைகள், வங்கிகள் மற்றும் ஓட்டல்கள் மூடப்பட்டன.
இதற்கிடையே, போலீசார் மீது போராட்டக்காரர்கள் மஞ்சள் நிற பெயிண்டை வீசினர். அதனால் வன்முறை வெடித்தது. எனவே அவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள்.

இதுதொடர்பாக, பியுனஸ் அய்ரஸ் நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பேச்சுவார்த்தை மற்றும் விவாதம் மூலமாக எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வுகாண அரசு தயாராக உள்ளது. வன்முறையை நான் ஒருபோதும் ஏற்றுகொள்ள மாட்டேன் என தெரிவித்தார்.
கடமையாற்றும் அதிகாரிகள் தாக்கப்படுவதையும், பொது சொத்துகள் சேதமாவதையும், தொழில் நிறுவனங்கள் முடங்கிப் போவதையும்,பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுவதையும், யாரும் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இதற்கு காரணமானவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தி தண்டிக்கப்படுவார்கள் எனவும் மேக்ரான் எச்சரித்துள்ளார். #neveracceptviolence #Macron #Parisprotests
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் கடந்த மாதம் 28-ந்தேதி நடைபெற்றது. கூட்டத்தில் இலங்கை கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டிப்பது. டீசல் விலையேற்றத்தால் மீன்பிடி தொழில் முற்றிலும் நஷ்டமாகி வருகிறது. அதனால் வரி விலக்கு அளிக்கப்பட்ட டீசல் வழங்க வேண்டும். விசைப்படகு ஒன்றிற்கு 3 ஆயிரம் லிட்டர் மானிய டீசல் வழங்க வேண்டும். சிறிய படகுகளுக்கு 420 லிட்டர் மானிய டீசல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் அனைத்து விசைப்படகு மீனவர்களும் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று முதல் நாகை மாவட்டத்தில் அனைத்து விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 60-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் பங்கேற்றனர். வேலைநிறுத்த போராட்டத்தால் நாகை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 500 விசைப்படகுகளும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் துறைமுக கரைகளில் பாதுகாப்பாக மீனவர்கள் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் நாகை கடுவையாற்றுக்கரையில் ஏராளமான விசைப் படகு மற்றும் பைபர் படகுகளை பாதுகாப்பாக மீனவர்கள் நிறுத்திவைத்துள்ளனர்.
வேலைநிறுத்த போராட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நாகை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், அந்த ஆர்ப்பாட்டத்திலேயே அடுத்த கட்ட போராட்டத்தினை அறிவிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த தொடர் வேலை நிறுத்த போராட்டத்தால் மீன்பிடி தொழில் சார்ந்த தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று பெட்ரோல் விலை 18 காசு உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.87-க்கு விற்பனை செய்யப்பட்டது. 5 நாட்களாக மாற்றம் இல்லாமல் இருந்த டீசல் விலையானது நேற்று 10 காசு உயர்ந்து ஒரு லிட்டர் டீசல் 78 ரூபாய் 20 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் இந்திய ரூபாய் மதிப்பின் ஏற்ற இறக்கத்தால் பெட்ரோல், டீசல் விலையானது கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் டீசல் விலை மட்டும் கடந்த 18-ந் தேதி முதல் 5 நாட்களாக மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் டீசல் 78 ரூபாய் 10 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் டீசல் விலையானது 5 நாட்களுக்கு பிறகு நேற்று 10 காசு அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் 78 ரூபாய் 20 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் விலையானது நேற்று 18 காசு அதிகரித்தது.
அதன்படி, நேற்று முன்தினம் 85 ரூபாய் 69 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்று 85 ரூபாய் 87 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. பெட்ரோல் விலையை பொறுத்தவரையில் இன்னும் 13 காசுகள் அதிகரித்தால் 86 ரூபாயை எட்டும் நிலையில் உள்ளது.
தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் பெரிதும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பெரும்பாலான வாகன ஓட்டிகள் தங்கள் பயண திட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி சொந்த வாகனங்களில் பயணிப்பதை குறைத்து, பொது வாகன பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. #PetrolDieselPrice #PetrolPriceHike
பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
இது அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாகிவிடும் என்பதால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்கவும் மத்திய அரசை வலியுறுத்தி வந்தன.
இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், அதைக் கட்டுப்படுத்தக்கோரியும் நேற்று நாடு தழுவிய அளவில் பொது வேலைநிறுத்த போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. நாடு முழுவதும் 21 கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., த.மா.கா., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்பட பல கட்சிகள் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தன. அதேபோல், சில வணிக அமைப்புகளும், தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்கியிருந்தது. ஆனால், ஆளும் கட்சியான அ.தி.மு.க. மட்டும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் தமிழ்நாட்டில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பஸ், ரெயில், வேன், ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின. அரசு - தனியார் அலுவலகங்களும், பள்ளி - கல்லூரிகளும் வழக்கம்போல் இயங்கின. கடைகளும் அதிக அளவில் திறந்து இருந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
தலைநகர் சென்னையை பொறுத்தவரை, காலை முதலே வழக்கம்போல் பரபரப்பாக இயங்கியது. பஸ், ரெயில், ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின. பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டிருந்தன. ஒரு சில பகுதிகளில் மட்டும் குறைந்த அளவிலான கடைகள் மூடப்பட்டிருந்தன. வணிகப் பகுதிகளான தியாகராயநகர், புரசைவாக்கம், பெரம்பூர், வண்ணாரப்பேட்டையில் கடைகள் அனைத்தும் திறந்திருந்தன. கோயம்பேடு மார்க்கெட் வழக்கம்போல் இயங்கியது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் ஒரு சில பகுதிகளில் கடைகளை அடைக்கச் சொல்லி வியா பாரிகளை வற்புறுத்தினர். ஆனாலும், வியாபாரிகள் கடைகளை அடைக்க வில்லை. சென்னையில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றாலும், தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் நடைபெற்ற கல்வீச்சு சம்பவத்தில் பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை உள்ளிட்ட சில இடங்களில் சாலை மறியலிலும் போராட்டக்காரர்கள் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
அந்த வகையில், சென்னையில் 430 பேரும், காஞ்சீபுரத்தில் 550 பேரும், திருவள்ளூரில் 400 பேரும் கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் மொத்தம் 15 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்திய முழு அடைப்பு போராட்டத்துக்கு பொதுமக்களின் ஆதரவு இல்லை என்ற போதிலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு அலைகள் இருந்ததையும் காண முடிந்தது. #BharathBandh #PetrolDieselPriceHike
பெட்ரோல், டீசல் விலை கடந்த இரு வாரங்களாக வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு கட்டுப்படுத்த முடியாதபடி உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வில் இருந்து பொதுமக்களைக் காப்பாற்றும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால், அந்த கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்து விட்டது.
இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சரக்கு லாரி போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. சிறு-குறு தொழில்கள், விவசாயம், மீன்பிடி உள்பட பல தொழில்களில் பாதிப்பு உணரப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், அதை கட்டுப்படுத்த கோரியும் 10-ந்தேதி (இன்று) நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் மற்றும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத் தது. காங்கிரசுக்கு நாடு முழுவதும் 21 கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. தமிழ்நாட்டில் தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., த.மா.கா., விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்பட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
கட்சிகள் மட்டுமின்றி நாடு முழுவதும் ஏராளமான வணிக-தொழில் அமைப்புகளும், வணிக சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன. தொழிற்சங்கங்களும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவாக களம் இறங்கின. வட மாநிலங்களில் சமாஜ் வாடி, ராஷ்டீரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்பட பல கட்சிகள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்தன.
எதிர்க்கட்சிகள் அறிவித்தப்படி இன்று (திங்கட்கிழமை) நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடந்தது. ஆனால் தமிழ் நாட்டில் முழு அடைப்பு போராட்டம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பஸ், ரெயில், ஆட்டோ, தனியார் வாகனங்கள், பள்ளி-கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல இயங்கியதால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
ஆனால் வடஇந்தியாவில் முழு அடைப்புப் போராட்டத்தால் பாதிப்பு ஏற்பட்டது. கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் முழு அடைப்பு முழுமையாக இருந்தது. பெரும்பாலான மாநிலங்களில் எதிர்க்கட்சியினர் ஒன்று திரண்டு ஊர்வலம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர்.
தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஊர்வலம் நடத்தினார்கள். முன்னதாக காலை 8.25 மணிக்கு ராகுல்காந்தி டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்துக்கு சென்றார். அங்கு அவர் மலர் தூவி காந்திக்கு மரியாதை செலுத்தினார்.
பிறகு ராஜ்காட்டில் இருந்து ராம்லீலா மைதானத்துக்கு ஊர்வலமாக புறப்பட்டு வந்தார். ராகுலுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்தனர்.
அவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து முழக்கம் எழுப்பியபடி வந்தனர். ஊர்வலத்தில் வந்தவர்கள் விலை உயர்வுக்கு எதிரான வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி வந்தனர்.

அவர்களுடன் கூட்டணி கட்சித் தலைவர்களான முலாயம் சிங் யாதவ், சரத்பவார், சரத் யாதவ் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் அமர்ந்திருந்தனர். பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் திரண்டிருந்தனர். அவர்கள் பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷம் எழுப்பியபடி இருந்தனர்.
டெல்லியில் பல இடங்களில் காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டனர். மராட்டியம், குஜராத், பீகார் மாநிலங்களில் பெரிய அளவில் மறியல்கள் நடத்தப்பட்டன. மராட்டியத்தில் ராஜ்தாக்கரேயின் நவநிர்மன் சேனா தொண்டர்களின் போராட்டம் போலீசாருக்கு சவால் விடும் வகையில் இருந்தது.
மும்பை, செம்பூரில் கழுதை கழுத்தில் பிரதமர் மோடி படத்தை தொங்கவிட்டு அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பீகாரில் ராஷ்டீரிய ஜனதா தளம் தொண்டர்களும், ஜன் அதிகார் கட்சி தொண்டர் களும் ரெயில்களை மறித்து போராட்டம் நடத்தினார்கள்.
மும்பையில் பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை. ஆனால் ஆட்டோ-டாக்சி வழக்கம் போல ஓடின. சில இடங்களில் வாகனங்கள் மீது கல் வீசப்பட்டதால் பதட்டம் ஏற்பட்டது.
கேரள மாநிலத்தில் இன்று நடந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக மாநிலத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை. வாடகைக்கார்கள், ஆட்டோக்களும் இயக்கப்படவில்லை.
திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம் பகுதிகளில் பெரும்பாலான கடைகள் மூடிக்கிடந்தன. வணிக நிறுவனங்களும் செயல்படவில்லை. பஸ் நிலையங்கள், தெருக்களில் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படவில்லை.
கேரளாவில் உள்ள கல்லூரிகளில் இன்று பல்கலைக்கழக தேர்வுகள் நடக்க இருந்தது. முழு அடைப்பு காரணமாக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் பாதுகாப்பு அளித்து அனுப்பி வைத்தனர். இது போல ஆஸ்பத்திரி வாகனங்கள், விமான நிலையங்களுக்குச் செல்லும் வெளிநாட்டு பயணிகள் வாகனங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
கர்நாடகத்தில் இன்று பெங்களூர், மங்களூரு உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் 23 ஆயிரம் அரசு பஸ்கள் ஓடவில்லை.
பெங்களூரு அரசு பஸ்கள் இயங்கவில்லை. மாநிலம் முழுவதும் தனியார் பஸ்கள் ஓட வில்லை. டாக்சிகள், ஆட்டோக்கள் முழுமையாக ஓடவில்லை. தனியார் டாக்சி நிறுவனங்களும் இன்று வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதால் வாடகை கார்களும் இயங்கவில்லை. வங்கி ஊழியர்கள் வேலைக்கு வராததால் வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
கர்நாடகம் முழுவதும் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. ஒரு சில பெட்ரோல் பங்க்குகளை தவிர பெரும்பாலான பெட்ரோல் பங்குகள் செயல்படவில்லை.
பெங்களூரு நகரில் முக்கிய வணிக வளாகங்கள் இன்று காலை 6 மணி முதல் திறக்கப்படவில்லை. கடைகளும் மூடப்பட்டிருந்தன. ஓட்டல்கள், மார்க்கெட்டுகள், சினிமா தியேட்டர்கள், ஐ.டி. நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கியமான தனியார் நிறுவனங்கள் அனைத்தும் இன்று செயல்படவில்லை.
குஜராத் மாநிலத்தில் ஏராளமான இடங்களில் காலை மறியல் நடந்தது. முக்கிய சாலைகளில் காங்கிரசார் டயர்களை எரித்தனர். இதனால் குஜராத்தில் முக்கிய நகரங்களில் வாகனப் போக்குவரத்து முடங்கியது.

மராட்டிய மாநிலம் புனே நகரில் அரசு பஸ்சுக்கு நவநிர்மாண் சேனா தொண்டர்கள் தீ வைத்தனர். இதில் அந்த பஸ் எரிந்து நாசமானது. பெங்களூரில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பெட்ரோல் நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. கிழக்கு ரெயில்வே மண்டலம் 12 எக்ஸ்பிரஸ் ரெயில்களை ரத்து செய்தது.
ஜெய்ப்பூர், சூரத், லக்னோ, பாட்னா, புவனேசுவரம், ஆக்ரா, சண்டிகர், கயா, கவுகாத்தி உள்பட பல நகரங்களில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மைசூரில் சுற்றுலா பயணிகள் வருகையில் 60 சதவீதம் குறைந்திருந்தது.
மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் கடைகள் அனைத்தும் திறந்து இருந்தன. அரசு மற்றும் தனியார் பஸ்கள், வாகனங்கள் வழக்கம் போல ஓடின. இதனால் கொல்கத்தாவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. விஜயவாடாவில் பாதி கடைகள் மூடப்பட்டு இருந்தன.
மும்பையில் 9.45 மணி அளவில் காங்கிரசார் அசோக் சவான் தலைமையில் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
முழு அடைப்புப் போராட்டம் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே நடைபெறும் என்று அகில இந்திய காங்கிரஸ் அறிவித்துள்ளது. எனவே வட மாநிலங்களில் இன்று மாலை இயல்பு நிலை திரும்பும். #BharathBandh #PetrolDieselPriceHike #RahulJoinBandh

பெட்ரோல் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. கடந்த 10 நாட்களாக பெட்ரோல் விலை மிகவும் அதிகரித்து உச்சத்தை எட்டி வருகிறது.
கடந்த 5-ந்தேதி 1 லிட்டர் பெட்ரோல் ரூ.82.51-க்கு விற்கப்பட்டது. நேற்று லிட்டருக்கு 10 காசு உயர்ந்து ரூ.82.62-க்கு விற்கப்பட்டது. நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 51 காசு அதிகரித்து ரூ.83.13-க்கு விற்றது.

இதேபோல் டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. கடந்த 3-ந்தேதி 1 லிட்டர் டீசல் ரூ.75.19-க்கு விற்கப்பட்டது. 4-ந்தேதி 20 காசு அதிகரித்துள்ளது. ரூ.75.39 ஆக உயர்ந்தது. 5-ந்தேதி அதே விலையில் நீடித்தது. நேற்று முன்தினம் லிட்டருக்கு 22 காசுகள் உயர்ந்து ரூ.75.61-க்கு விற்கப்பட்டது. நேற்று 56 காசுகள் அதிகரித்து ரூ.76.17-க்கு விற்கப்பட்டது. இன்று லிட்டருக்கு 47 காசுகள் அதிகரித்து ரூ.76.64-க்கு விற்கப்படுகிறது. #PetrolPriceHike
பெட்ரோல், டீசல் விலை உயர்வு பலதரப்பினரை பாதித்துள்ளது. கடந்த மாதம் 75 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் இன்று 83 ரூபாயை எட்டியுள்ளது.
முன்பெல்லாம் பெட்ரோலுக்கும், டீசலுக்கும் குறைந்தது 10 ரூபாய் வித்தியாசம் இருக்கும். ஆனால் தற்போது பெட்ரோல் விலைக்கு நிகராக டீசல் விலையும் உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வு மீனவர்களையும் கடுமையாக பாதித்துள்ளது. கடந்த 4 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் நேற்று வாபஸ் பெற்றனர். வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தும் மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆர்வம் காட்டவில்லை.
ராமேசுவரத்தில் 750-க்கும் மேற்பட்ட டீசல் விசைப்படகுகள் உள்ளன. ஒருமுறை கடலுக்கு செல்ல சிறிய அளவிலான விசைப் படகுக்கு ரூ.16 ஆயிரமும், பெரிய அளவிலான விசைப் படகுக்கு ரூ.40 ஆயிரம் வரை டீசல் செலவாகும்.
ஆனால் தற்போது விலை ஏற்றம் காரணமாக மீனவர்களால் அதனை சமாளிக்க முடியவில்லை. இதனால் பலர் நாட்டு படகுகளில் மீன்பிடிக்க செல்கின்றனர்.
இன்று காலை கடலுக்கு செல்ல 450 விசைப் படகுகளுக்கு மீன்வளத்துறை அனுமதி டோக்கன் வழங்கியது.
அதில் 100 முதல் 150 பெரிய அளவிலான விசைப்படகுகள் மட்டுமே கடலுக்கு மீன்பிடிக்க சென்றது. அனுமதி டோக்கன் பெற்ற மற்றவர்கள் கடலுக்கு செல்ல ஆர்வம் காட்டவில்லை.
நாளுக்கு நாள் டீசல் விலை உயர்ந்து வருவதால் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளோம். டீசல் போட்டு சென்றாலும் அதற்கேற்ற மீன்வரத்து கிடைக்குமா? என்பது சந்தேகம்தான். இதனால் தற்போது நாட்டு படகிலேயே மீன்பிடிக்க செல்கிறோம்.
பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தங்களது இஷ்டத்துக்கு உயர்த்தி வருகிறது. இதற்கு கடிவாளம் போட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.