என் மலர்
நீங்கள் தேடியது "மலைப்பாம்பு"
- ஒரு கம்பி மூலம் கால்வாயில் இருந்து மலைப்பாம்பை மேலே இழுக்கிறார்.
- பயனர்கள் பலரும் அந்த வாலிபரின் துணிச்சலை பாராட்டி பதிவிட்டனர்.
நீர்நிலைகளையொட்டிய பகுதிகளில் மலைப்பாம்புகளை பார்த்தால் உடனடியாக பொது மக்கள் வன ஊழியர்கள் மற்றும் வன ஆர்வலர்களுக்கு தகவல் தெரிவிப்பார்கள். உடனடியாக அவர்கள் வந்து மலைப்பாம்பை பிடித்து பாதுகாப்பாக கொண்டு செல்வார்கள்.
இந்நிலையில் தற்போது இணையத்தில் பரவி வரும் ஒரு வீடியோவில், ஓடும் கால்வாயில் இருந்து ஒரு ராட்சத மலைப்பாம்பை வாலிபர் ஒருவர் வெறும் கையால் அசால்ட்டாக பிடிக்கும் காட்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.
இன்ஸ்டாகிராமில் 'விஷால் ஸ்னேக் சேவர்' என்ற பயனரால் பகிரப்பட்ட அந்த வீடியோவில், வாலிபர் ஒருவர் தரைப்பாலத்தின் மீது நிற்கிறார். பாலத்தின் கீழ் பகுதி வழியாக கால்வாய் செல்கிறது. அப்போது கால்வாயில் ராட்சத மலைப்பாம்பு செல்வதை கண்ட வாலிபர் பாலத்தில் இருந்து கால்வாய்க்குள் இறங்குவது போன்று காட்சிகள் உள்ளது.
பின்னர் ஒரு கம்பி மூலம் கால்வாயில் இருந்து மலைப்பாம்பை மேலே இழுக்கிறார். தொடர்ந்து மலைப்பாம்பை வெறும் கையால் பிடித்து மேலே தூக்குகிறார். அந்த பாம்பு அதிக நீளம் கொண்ட ராட்சத பாம்பாக இருக்கிறது. பாம்பை அவர் மேலே தூக்கும் போது சீறுகிறது. எனினும் அவர் துணிச்சலாக அதனை கையாள்கிறார். இந்த வீடியோ 3.6 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்ற நிலையில் பயனர்கள் பலரும் அந்த வாலிபரின் துணிச்சலை பாராட்டி பதிவிட்டனர்.
கூடலூர் பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த வனப்பகுதி மற்றும் தேயிலை தோட்டங்கள் இருக்கிறது. வனப்பகுதியில் காட்டுயானை, புலி, மான், காட்டெருமை, சிறுத்தைப்புலி, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. மேலும் மலைப்பாம்பு, ராஜ நாகம், கட்டு விரியன் என பல வகை பாம்புகளும் வசித்து வருகின்றன.
வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் மற்றும் பாம்புகள் அடிக்கடி தேயிலை தோட்டங்கள், குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
கூடலூர் தாலுகா கீழ்நாடுகாணியில் ஒரு தனியார் தேயிலை தோட்டம் உள்ளது. இங்கு வழக்கம்போல் நேற்று தோட்ட தொழிலாளர்கள் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தேயிலை செடிகளுக்கு அடியில் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து வந்தது. இதை கண்ட தொழிலாளர்கள் பயத்தில் அலறியடித்தவாறு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். மேலும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் தேவாலா வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர்.
தொடர்ந்து கீழ்நாடுகாணியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் அந்த பாம்பை பத்திரமாக விட்டனர்.