என் மலர்
நீங்கள் தேடியது "சந்திரசேகர ராவ்"
- மக்களிடையே வெறுப்புணர்வு பரப்பப்படுகிறது.
- எதிர்க்கட்சி தலைவர்கள் மீது தாக்குதல் நடக்கிறது.
ஐதராபாத் :
தெலுங்கானா மாநில முதல்-மந்திரியும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ், மெகபூப்நகரில் புதிய ஒருங்கிணைந்த மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தை திறந்து வைத்தார். கட்சியின் மாவட்ட அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.
பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:-
தெலுங்கானாவின் முன்னேற்றத்துக்கு பிரதமர் மோடியும், மத்திய அரசும் முட்டுக்கட்டை போடுகிறார்கள். மாநிலத்தின் மொத்த உற்பத்தி ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக உள்ளது. மத்திய அரசின் ஒத்துழைப்பு இருந்திருந்தால், ரூ.14 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக உயர்ந்து இருக்கும். ரூ.3 லட்சம் கோடி வருவாய் போய்விட்டது.
இப்படி மாநிலத்தின் முன்னேற்றத்தை தடுப்பது நியாயமா? நீங்களும் வேலை செய்வதில்லை. மற்றவர்களையும் வேலை செய்ய அனுமதிப்பது இல்லை. யாராவது கேள்வி கேட்டால், உங்கள் அரசை தூக்கி எறிவோம் என்கிறீர்கள்.
பிரதமர் மோடி சொல்கிறார். ''சந்திரசேகர ராவ், உங்கள் அரசை தூக்கி எறிவேன்'' என்கிறார். இதில் இருந்து நமக்கு என்ன தெரிகிறது?. உங்களைப் போல், நாங்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லையா? மக்கள் ஆதரவு இல்லாமலா ஆட்சி அமைத்துள்ளோம்?.
என்ன காரணத்துக்காக ஆட்சியை தூக்கி எறிவீர்கள்?. ஒரு பிரதமர், மேற்கு வங்காளத்துக்கு சென்று, ''உங்கள் எம்.எல்.ஏ.க்களில் 40 பேர் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள்'' என்று பேச முடியுமா?. அவர் சொல்வாரா?
தெலுங்கானா ராஷ்டிர சமிதி எம்.எல்.ஏ.க்களிடையே பிளவை ஏற்படுத்த சில திருடர்கள் வந்தனர். அவர்கள் இப்போது ஜெயிலில் இருக்கிறார்கள்.
யார் ஆள வேண்டும், யார் எதிர்க்கட்சி வரிசையில் இருக்க வேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள். மாநில அரசு, எந்த இடையூறும் இன்றி 5 ஆண்டுகள் ஆள அனுமதிக்கப்பட வேண்டும்.
அற்ப அரசியல் ஆதாயத்துக்காக நாட்டின் உயிர்நாடியையே பா.ஜனதா பாழாக்குகிறது. மக்களிடையே வெறுப்புணர்வு பரப்பப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் மீது தாக்குதல் நடக்கிறது.
கிருஷ்ணா நதிநீர் பிரச்சினையில் தெலுங்கானாவின் பங்கை அளிக்க மத்திய அரசு முன்வரவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
- மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து ஆந்திராவை 2-ஆக பிரித்து அநீதி இழைத்து விட்டார்.
- சந்திரசேகர ராவுக்கு ஆந்திர மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.
திருப்பதி:
திருப்பதியில் அமைச்சர் ரோஜா வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் சொர்க்கவாசல் வழியாக ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
தரிசனம் முடித்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சந்திரசேகர ராவ் தனது தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை தற்போது பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி என தேசிய கட்சியாக மாற்றி உள்ளார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் அவரது கட்சி ஆந்திராவில் 150 இடங்களில் போட்டியிட உள்ளதாக சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
அவரது கட்சியை ஆந்திராவிற்குள் அனுமதிக்க கூடாது. மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து ஆந்திராவை 2-ஆக பிரித்து அநீதி இழைத்து விட்டார்.
அந்த கட்சி மீண்டும் ஆந்திராவில் காலடி எடுத்து வைக்க நினைப்பது எவ்வளவு அநியாயம் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். சந்திரசேகர ராவுக்கு ஆந்திர மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேசிய கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்தது.
- பொது கூட்டத்திற்காக சாலைகள் முழுவதும் பேனர்கள், தோரணங்கள் கட்டப்பட்டு பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
திருப்பதி:
தெலுங்கானா முதல்-அமைமைச்சர் சந்திரசேகர ராவ் தன்னுடைய தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை பாரத ராஷ்டிரிய சமிதி என்று தேசிய கட்சியாக அறிவித்தார்.
இவரது தேசிய கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்தது. இதையடுத்து சந்திரசேகர ராவ் தனது கட்சி ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தேர்தலில் போட்டியிடப் உள்ளதாக அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியின் பொதுக்கூட்டம் கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் தலைமையில் கம்மத்தில் உள்ள மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது. பொது கூட்டத்திற்காக சாலைகள் முழுவதும் பேனர்கள், கட்-அவுட்கள், தோரணங்கள் கட்டப்பட்டு பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
பொது கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கின்றனர். பினராயி விஜயன் விமானம் மூலம் கன்னவரம் விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கம்மத்திற்கு வருகிறார்.
அரவிந்த் கெஜ்ரிவால் விமான மூலம் பேகம் பேட்டை விமான நிலையத்திற்கு வருகிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் கம்மத்திற்கு சென்று பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி தேசிய கட்சியாக அறிவித்து பல்வேறு மாநிலங்களில் போட்டியிட போவதாக சந்திரசேகரராவ் அறிவித்த நிலையில் கேரளா மற்றும் டெல்லி முதலமைச்சர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
இதனால் பினராயி விஜயன் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் கூட்டணி வைத்து தேர்தலில் சந்திரசேகர ராவ் போட்டியிட உள்ளதாக அரசியல் கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
+3
- பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துக் கட்சிகளும் காங்கிரசின் யாத்திரையைத் தவிர்த்துவிட்டன.
- பாஜக அல்லது காங்கிரசின் ஆதரவின்றி எந்த மூன்றாம் அணியும் இதுவரை வெற்றி பெற்றதில்லை.
ஐதராபாத்:
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தன்னுடைய தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை பாரத ராஷ்டிரிய சமிதி என்று தேசிய கட்சியாக அறிவித்தார். பல்வேறு மாநிலங்களில் போட்டியிட உள்ளதாகவும் கூறினார். இந்நிலையில், பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியின் முதல் பொதுக்கூட்டம் கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் தலைமையில் கம்மத்தில் உள்ள மைதானத்தில் இன்று இரவு பிரமாண்டமாக நடைபெற்றது.
காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வரும் சந்திரசேகர ராவ், அதற்கான முதல் படியாக, கட்சியின் முதல் பொதுக்கூட்டத்தை இன்று நடத்தி உள்ளார். இதில், ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தேசிய அரசியலில் சந்திரசேகர ராவ் கால் பதிப்பதை ஆதரித்து வரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி, கர்நாடகாவில் பஞ்சரத்ன ரத யாத்திரை மேற்கொண்டு வருவதால், அவர் இன்றைய பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நிறைவுபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றிருப்பது, தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்று சந்திரசேகர ராவின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துக் கட்சிகளும் காங்கிரசின் யாத்திரையைத் தவிர்த்துவிட்டன.
பாஜகவுக்கு எதிராக வலுவான அணியை அமைப்பதற்கான சந்திரசேகர ராவின் முயற்சிக்கு பலன் கிடைக்குமா? என்பது விரைவில் தெரியவரும்
அதேசமயம், பாஜக அல்லது காங்கிரசின் ஆதரவின்றி எந்த மூன்றாம் அணியும் இதுவரை வெற்றி பெற்றதில்லை. முன்னாள் பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான ஆட்சிக்கு பா.ஜ.க.வின் ஆதரவு இருந்தது. அவருக்குப் பின் வந்த சந்திரசேகர், தேவகவுடா மற்றும் ஐகே குஜ்ரால் தலைமையிலான அரசுகளுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது.
- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை ராஜ்பவனில் தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார்.
- கருத்து வேறுபாடு காரணமாக ஐகோர்ட்டு உத்தரவையும் மீறி முதலமைச்சர் சந்திரசேகர ராவ் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி:
குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் உள்ள போலீஸ் பயிற்சி மைதானத்தில் குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு குடியரசு தின விழா ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவிற்கும், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக விரிசல் ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டும் கொரோனாவை காரணம் காட்டி செகந்திராபாத்தில் குடியரசு தின விழாவை மாநில அரசு ரத்து செய்தது. இதுகுறித்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு மாநில அரசு சார்பில் தகவல் அனுப்பி இருந்தனர். அதில் ராஜ் பவனில் தனியாக குடியரசு தின விழாவை நடத்திக் கொள்ளலாம் என தெரிவித்து இருந்தனர்.
இதுகுறித்து ஐதராபாத்தை சேர்ந்த சீனிவாஸ் என்பவர் தற்போது கொரோனா தொற்று பரவல் இல்லாத நிலையில் மாநில அரசு வேண்டும் என்றே கவர்னரை தவிர்க்க வேண்டும் என்பதற்காக கொரோனாவை காரணம் காட்டி குடியரசு தின விழாவை ரத்து செய்துள்ளது எனவே குடியரசு தின விழாவை நடத்த உத்தரவு வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். அவரது வழக்கை விசாரித்த ஐதராபாத் ஐகோர்ட்டு வழக்கம்போல் குடியரசு தின விழாவை செகந்திராபாத்தில் நடந்த வேண்டுமென உத்தரவிட்டது.
இருப்பினும் இன்று காலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ராஜ்பவனில் தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார். குடியரசு தின விழாவில் முதலமைச்சர் சந்தரசேகர ராவ் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். நிகழ்ச்சியில் மாநில அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சந்திரகுமாரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கருத்து வேறுபாடு காரணமாக ஐகோர்ட்டு உத்தரவையும் மீறி முதலமைச்சர் சந்திரசேகர ராவ் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சந்திரசேகர ராவ் சொன்னபடி தலித் ஒருவரை முதல்வராக்க வேண்டும்.
- சந்திரசேகரராவ் தேர்தலின் போது பல வாக்குறுதிகளை அளித்து முதல்வரானார்.
திருப்பதி:
தெலுங்கானா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவரும், ஜெகன் மோகன் ரெட்டி தங்கையுமான ஷர்மிளா தனது தாயுடன் சேர்ந்து தெலுங்கானா முழுவதும் பாதயாத்திரை நடத்தி வந்தார்.
அப்போது முதலமைச்சர் சந்திரசேகர ராவ் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்.
இந்த நிலையில் கடந்த மாதம் பாதயாத்திரை சென்ற ஷர்மிளா மீது முதலமைச்சர் சந்திரசேகர ராவை அவதூறாக பேசியதாக கூறி அவரது பிரச்சார வாகனத்தின் மீது கற்களை வீசினர்.
பின்னர் பிரசார வாகனத்திற்கு தீ வைத்து எரித்தனர். இதனால் பாதயாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முதல்-அமைச்சர் சந்திரசேகர ராவுக்கு ஒரு ஜோடி ஷூக்களை அனுப்ப உள்ளதாக ஐதராபாத்தில் நிருபர்களிடம் ஷர்மிளா கூறினார்.
தனது ஆட்சி அற்புதமாக இருப்பதாக முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கூறி வருகிறார். தெலுங்கானாவில் எந்த பிரச்னையும் இல்லை என நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து விலகுகிறேன்.
இது உண்மை இல்லை என்றால் சந்திரசேகர ராவ் மக்களிடம் மன்னிப்பு கேட்டு முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும்.
சந்திரசேகர ராவ் சொன்னபடி தலித் ஒருவரை முதல்வராக்க வேண்டும். சந்திரசேகரராவ் தேர்தலின் போது பல வாக்குறுதிகளை அளித்து முதல்வரானார்.
ஆனால், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சந்திரசேகர ராவுக்கு தைரியமும், ஆட்சியில் நம்பிக்கையும் இருந்தால் ஒரு நாள் பாத யாத்திரைக்கு என்னுடன் வர வேண்டும்.
இதற்காக தான் ஒரு ஜோடி ஷூக்களை முதலமைச்சர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கிறேன். ஷூ சைஸ் சரியாக இல்லாவிட்டால் எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ள பில் கூட அனுப்புகிறேன்.
தொப்பி அணிந்து கொண்டு தனி விமானத்தில் சுற்றி வராமல் தங்களது கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்களை பற்றி சிந்திக்க வேண்டும். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் குறைகள் இன்றி வாழ்ந்தனர்.
பொதுமக்கள் முதல்வரை சந்தித்து குறைகளை தெரிவித்தனர். ஆனால் தற்போது முதலமைச்சரை பொதுமக்கள் யாரும் சந்திக்க முடியாத சூழ்நிலை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்யும் விவகாரத்தை சந்திரசேகர ராவ் பேசினார்.
- கடந்த 8 ஆண்டுகளில் 8 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெலுங்கானா, போலீசில் ரெய்து ஸ்வராஜ் வேதிகா அறிக்கை தெரிவித்துள்ளது.
திருப்பதி:
தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் வெளி மாநில முதல் கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
அந்த கூட்டத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்யும் விவகாரத்தை சந்திரசேகர ராவ் பேசினார்.
இந்த பேச்சை சுட்டிக் காட்டி தெலுங்கானாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது குறித்து ஓய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி தலைவரும் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையுமான ஷர்மிளா கேள்வி எழுப்பி உள்ளார்.
மகாராஷ்டிராவில் விவசாயிகள் தற்கொலை பற்றி முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பேசியது நல்லது. அதே போல் தெலுங்கானாவில் எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்ற கேள்விக்கும் பதில் தர வேண்டும் அல்லவா?
தெலுங்கானாவில் கடந்த 8 ஆண்டுகளில் 8 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெலுங்கானா, போலீசில் ரெய்து ஸ்வராஜ் வேதிகா அறிக்கை தெரிவித்துள்ளது. அந்த விவசாயிகளின் உயிர்களுக்கு மதிப்பில்லையா?.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அதானியிடம் மத்திய அரசு ஏன் விசாரணை நடத்தவில்லை.
- தெலுங்கானா மாநிலத்தில் மட்டும்தான் அதானி குழுமத்துக்கு எந்த திட்டங்களும் கொடுக்கப்படவில்லை.
திருப்பதி:
ஐதராபாத்தில் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) தலைவரும், தெலுங்கானா முதல்-அமைச்சருமான சந்திரசேகரராவ் மகளும், எம்எல்சியுமான கவிதா நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த நாட்டில் பொது மக்களுக்காக உழைக்கும் ஒரு அரசை கொண்டுவருவதுதான் பி.ஆர்.எஸ். கட்சியின் செயல்திட்டம். நாட்டில் வளர்ச்சி ஏற்படாததற்கு பெரும்பாலான பொறுப்பு காங்கிரசையே சேரும். அதற்கு பிறகு பா.ஜ.க.வை சேரும்.
இப்போது பி.ஆர்.எஸ். ஒரு தேசிய கட்சி. இதனால் காங்கிரஸ் உட்பட எந்த கட்சியின் ஆதரவையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயார்.
அதானி விவகாரத்தில் பார்லிமென்ட் கூட்டு குழு அல்லது சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். அதானி குழும முறைகேடு காரணமாக மக்கள் ரூ.10 லட்சம் கோடியை இழந்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தில் மட்டும்தான் அதானி குழுமத்துக்கு எந்த திட்டங்களும் கொடுக்கப்படவில்லை. தேர்தல்கள் நெருங்கும் போதெல்லாம், அமலாக்க துறை, சிபிஐ,வருமான புலனாய்வுத்துறை போன்ற அமைப்புகளை பா.ஜ.க. பயன்படுத்துகிறது.
எனக்கு எதிரான மதுபான முறைகேடு வழக்கும் இதேபோன்றதுதான். நான் இந்திய பிரஜை என்ற முறையில் சிபிஐ விசாரணைக்கு நன்கு ஒத்துழைத்தேன். இதேபோல் அதானியிடம் மத்திய அரசு ஏன் விசாரணை நடத்தவில்லை. அதானி விவகாரத்தில் மத்திய அரசு மவுனமாக இருப்பது ஏன்? ஏனென்றால், மத்திய அரசுக்கு அதானி மிகவும் நெருக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தியாவில் ஆப்கானிஸ்தானாக தெலுங்கானா மாநிலம் மாறி வருகிறது.
- தலிபானாக முதல் மந்திரி சந்திரசேகர ராவ் உள்ளார் என ஆந்திர முதல் மந்திரி சகோதரி கூறியுள்ளார்.
ஐதராபாத்:
ஆந்திர முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் ஜெகன்மோகனின் ரெட்டி. இவரது சகோதரி ஷர்மிளா, தெலுங்கானா மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், தெலுங்கானாவில் மெஹபூபாபாத் நகரில் ஷர்மிளா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சந்திரசேகர ராவ் சர்வாதிகாரி, கொடுங்கோலனாக உள்ளார். இங்கு இந்திய அரசியல் சாசனம் அமலில் இல்லை. சந்திரசேகர ராவின் சாசனம் தான் உள்ளது. இந்தியாவின் ஆப்கானிஸ்தானாக தெலுங்கானா உள்ளது. அதன் தலிபானாக சந்திரசேகர ராவ் உள்ளார் என தெரிவித்தார்.
இதையடுத்து, ஷர்மிளாவைக் கண்டித்து சந்திரசேகர ராவ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது கொடும்பாவியை எரித்ததுடன் மாநிலத்தை விட்டு வெளியேறு என கோஷம் போட்டனர்.
- இரைப்பை பிரச்சனையால் அவதிப்பட்ட அவரை குடும்பத்தினர் ஏஐஜி மருத்துவமனையில் சேர்த்தனர்.
- வயிற்று வலி மற்றும் பிற உடல்நலக் கோளாறுகள் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவிற்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது.
இரைப்பை பிரச்சனையால் அவதிப்பட்ட அவரை, அவரது குடும்பத்தினர் ஐதராபாத், கச்சிபவுலியில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு மருத்துவர்கள் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
அவருக்கு வயிற்று வலி மற்றும் பிற உடல்நலக் கோளாறுகள் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சாதாரண மருத்துவ பரிசோதனைக்காக சந்திரசேகரராவ் மருத்துவமனைக்கு வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
சந்திரசேகரராவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் நாகேஸ்வரரெட்டி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
காலையில் வயிற்றில் அசவுகரியமாக இருப்பதாக சந்திரசேகர ராவ் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
அவருக்கு சி.டி., எண்டோஸ்கோபி பரிசோதனைகள் செய்யப்பட்டது. அவருக்கு அல்சர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அல்சர் பிரச்சினையில் இருந்து சந்திரசேகரராவ் விரைவில் குணமடைவார். மற்ற அனைத்து வகையான சோதனைகளும் இயல்பானவை. அவருக்கு தேவையான மருந்துகளை கொடுத்துள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, இரவு 7.15 மணிக்கு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சந்திரசேகர ராவ் பிரகதி பவன் சென்றார்.
- அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலை போன்று கட்டப்பட்டு சுற்றுலா தலமாக மாற்றப்பட உள்ளது.
- ரூ.148.50 கோடியில் சுமார் 11.80 ஏக்கர் நிலத்தில் என்டிஆர் கார்டன் பகுதியில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பதி:
ஐதராபாத் ஹூசைன் சாகர் பகுதியில் நாடாளுமன்ற கட்டிட வடிவில் அம்பேத்கருக்கு 125 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளையொட்டி, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அம்பேத்கர் சிலையை இன்று மதியம் 2 மணியளவில் திறந்து வைக்கிறார்.
இந்த சிலை அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலை போன்று கட்டப்பட்டு சுற்றுலா தலமாக மாற்றப்பட உள்ளது.
ரூ.148.50 கோடியில் சுமார் 11.80 ஏக்கர் நிலத்தில் என்டிஆர் கார்டன் பகுதியில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணிகளுக்கு எஸ்சி நலத்துறை நிதி வழங்கிய நிலையில், கட்டுமானப் பொறுப்பு சாலைகள் மற்றும் கட்டிடங்கள் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு ஒரு வருடத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
ஸ்தூபியை நிர்மாணித்த பிறகு, சிலையின் பாகங்கள் டெல்லியில் தயாரிக்கப்பட்டு ஐதராபாத்திற்கு கொண்டுவரப்பட்டன. கனரக கிரேன்களின் உதவியுடன் அவை முறையாக நிறுவப்பட்டுள்ளன.
இயற்கைப் பேரிடர்களைத் தாங்கும் வலிமையான உலோகப் பொருட்கள் கொண்டு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலையின் அடிப்பாகத்தில் இருந்து, சிலையை முழுவதுமாக கண்டுக்களிக்க படிக்கட்டு மற்றும் சாய்வுதளத்துடன் 15 பேர் அமரக்கூடிய 2 லிப்ட்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் அமைக்கப்படுகிறது.நூலகத்தில் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் வைக்கப்பட உள்ளது. சிலையின் கீழ், தூணில் உள்ள நினைவு கட்டிடத்தில் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டுள்ளது.
அம்பேத்கரின் வாழ்க்கை தொடர்பான முக்கிய நிகழ்வுகள் அடங்கிய அருங்காட்சியகம் மற்றும் புகைப்படத் தொகுப்பு இங்கு நிறுவப்பட்டுள்ளது. கட்டிடத்தின் உள்ளே ஆடியோ காட்சி அறைகள் உள்ளன.
நினைவிடத்திற்கு வெளியே பசுமைக்காக. 2.33 ஏக்கர் காலி நிலம். ராக் கார்டன், லேண்ட்ஸ்கேப்பிங், தோட்டம், நீர் ஊற்று உள்ளது. இந்த வளாகத்தில் சுமார் 450 கார்களை நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் மாநிலத்தின் அனைத்து பகுதி மக்களும் பங்கேற்கும் வகையில் போக்குவரத்து வசதிகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சுமார் 750 பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சுமார் 50 ஆயிரம் பேர் உட்காருவதற்கு வசதியாக நாற்காலிகள் மற்றும் இதர வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், தெலுங்கானா அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
- மத்திய அரசு கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கியும் தெலுங்கானா வளர்ச்சி அடையாமல் இருக்க காரணம் முதல்வரின் செயல்பாடுதான் என்று விளாசினார்.
- சந்திரசேகரராவுக்கு தி.மு.க. மீது லேசாகவாது சந்தேக கோடு விழ வைக்கலாம்.
அரசியல்வாதிகள் என்றாலே அதிரடி, பல்டி, அந்தர்பல்டி... என்று களத்தில் எந்த பக்கம் நின்றாலும் எப்படியும் அடித்து ஆடக்கூடியவர்கள்.
அப்படி இருக்கும் போது ஒட்டுமொத்தமாக இந்திய அரசியல் களத்தில் விளையாடும் மோடியின் அரசியல் கில்லாடித் தனத்தை சாதாரணமாக எடைபோட்டு விட முடியுமா...?
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி தெலுங்கானா மற்றும் தமிழ் நாட்டில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
பிரதமர் கலந்துகொள்ளும் அரசு நிகழ்ச்சிகளில் அந்த அந்த மாநில முதலமைச்சர் கலந்துகொள்வது மரபு. ஆனால் தெலுங்கானாவில் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் அந்த மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் கலந்து கொள்ளவில்லை.
இதை பிரதமர் மோடி தனக்கே உரிய பாணியில் வெளுத்து வாங்கினார். அதாவது அரசு வேறு அரசியல் வேறு. இப்படி ஒரு முதல்வர் அரசு திட்டங்களையும் அரசியல் கண்ணோட்டத்தில் பார்த்தால் எப்படி மாநிலம் வளரும்.
மத்திய அரசு கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கியும் தெலுங்கானா வளர்ச்சி அடையாமல் இருக்க காரணம் முதல்வரின் செயல்பாடுதான் என்று விளாசினார். அங்கிருந்து சென்னைக்கு வந்த மோடி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டார். வந்தே பாரத் ரெயிலை தொடங்கி வைக்க செல்லும் இடத்துக்கு செல்ல 2 பேட்டரி கார்கள் தயாராக நிறுத்தப்பட்டிருந்தன.
அதில் ஒரு காரில் முதல்வர், கவர்னர், அமைச்சர்கள் ஏறியிருந்தனர். ஒரு கார் மோடி ஏறுவதற்காக நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் மோடியோ தனது காருக்கு வரும்படி மு.க.ஸ்டாலினையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். கொடி அசைத்தபோதும் மு.க.ஸ்டாலினை தன் அருகில் நிற்க வைத்து கொண்டார்.
இதன்மூலம் அரசியலில் இருவரும் மோடியின் எதிரிகளாக இருந்தாலும் சந்திரசேகரராவை விட மு.க.ஸ்டாலின் மக்கள் நலனுக்காக பாடுபடுகிறார் என்று உணர வைத்து மக்கள் மத்தியில் சந்திரசேகரராவின் செல்வாக்கை சாய்ப்பதற்கான யுக்தி ஒன்று.
இன்னொரு விதத்தில் பார்த்தால் சந்திரசேகர ராவ் அமைக்கும் கூட்டணிக்கு மு.க.ஸ்டாலினும் செல்வார் என்று எதிர் பார்க்கும் நிலையில் தன்னுடன் நெருக்கமாக இருப்பதாக காட்டிக் கொண்டால் சந்திரசேகரராவுக்கு தி.மு.க. மீது லேசாகவாது சந்தேக கோடு விழ வைக்கலாம்.
மூன்றாவதாக என்ன தான் தி.மு.க. மோடியை வசை பாடினாலும் அவரது பெருந்தன்மையை பார் என்று தமிழக மக்கள் யோசிப்பார்கள். அதன் மூலம் மோடியின் இமேஜ் வளரவும் வாய்ப்பு உண்டு.
அதாவது ஒரே கல்லில் இரண்டுக்கும் மேற்பட்ட மாங்காய்களை மோடி வீழ்த்தி இருக்கிறார். அரசியலில் மோடி கில்லாடி தான்.