search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊட்டி"

    ஊட்டியில் போலீசாரின் மனஅழுத்தத்தை குறைக்க நிறைவாழ்வு பயிற்சி தொடங்கியது. இதனை கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
    ஊட்டி:

    தமிழ்நாடு காவல்துறை சார்பில் பணியின் போது போலீசாருக்கு ஏற்படும் மனஅழுத்தத்தை குறைப்பதற்கு ஆலோசனை மற்றும் நிறைவாழ்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்ட காவல்துறை மூலம் முதல் கட்டமாக போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 40 போலீசாருக்கு மனஅழுத்தத்தை குறைப்பதற்கான நிறைவாழ்வு பயிற்சி தொடக்க நிகழ்ச்சி ஊட்டி ஜெ.எஸ்.எஸ். கல்லூரி அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கார்த்திகேயன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:-

    தமிழகத்தில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகள், போலீசார் தங்களது பணிகளை சிறப்பாக மேற்கொள்ள முழு முயற்சிகளை எடுக்கும் போது, அவர்களுக்கு குடும்பம் மற்றும் அதை சார்ந்த சில நேரங்களில் மனஅழுத்தம் ஏற்படுகிறது. இந்த மனஅழுத்தத்தை குறைக்க நாட்டிலேயே தமிழகத்தில் தான் முதல் முறையாக நிறைவாழ்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்கும் அதிகாரிகள், போலீசாருக்கு வேலைப்பளு, பாதுகாப்பு பணியில் ஏற்படும் அழுத்தம் காரணமாக சரியான முறையில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படக்கூடும். இதனால் இதுபோன்ற பயிற்சி அவசியமானது ஆகும்.

    போலீசாருக்கான மருத்துவ முகாம், அவர்களது குடும்பத்தினருக்கான மருத்துவ முகாம் நடத்தப்படும் போது, முழு அளவில் முகாமில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. மது பழக்கம் உள்ள போலீசார், அதில் இருந்து வெளியே வராத நிலைமையும் இருக்கிறது. தங்களுக்கு உள்ள பிரச்சினைகளை உணர்ந்து ஒப்புக்கொள்ள வேண்டும். அப்போது தான் அதில் இருந்து விடுபட முடியும். மனதில் எதிர்பார்ப்பும், உண்மையும் கிடைக்காமல் இருக்கும் போது மனஅழுத்தம் ஏற்படும்.

    மாநகர காவல்துறைகளில் போலீசாருக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் பங்கேற்ற பலர் மன அழுத்தத்தில் இருந்தும், உடல் பெலவீனத்தில் இருந்தும் விடுபட்டு உள்ளனர். இதுபோன்ற மனஅழுத்தத்தில் இருந்து விடுபடக்கூடிய பயிற்சிகள், ஆலோசனைகள், சிந்தனைகளை வளர்த்துக்கொண்டால் நம்மாலும் சிறப்பாக பணிபுரிய முடியும். போலீசார் தங்களது குடும்பத்திலும் மகிழ்ச்சியாக வாழலாம். நீலகிரி மாவட்டத்தில் காவல்துறையில் அதிகாரிகள் அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மனஅழுத்தத்தை குறைப்பதற்கு பயிற்சி பெற்ற ஆலோசகர்கள் போலீசாருக்கு மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கிறார்கள். முதல் இரண்டு நாட்கள் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்படும். 3-வது நாள் அவர்களது குடும்பத்தினருக்கும் சேர்த்து எந்த சூழ்நிலையில் பணிபுரிகிறார்கள், வேலைப்பளு குறித்து பயிற்சியுடன் ஆலோசனை வழங்கப்படும். வார இறுதி நாட்களில் தொடர்ந்து ஓராண்டு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். நேற்று தொடங்கிய நிறைவாழ்வு பயிற்சி இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கோபி, தம்பிதுரை, துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி, கல்லூரி முதல்வர் தனபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து உள்ளது.
    ஊட்டி:

    தமிழக பள்ளிகளில் காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டு உள்ளது. மேலும் முகரம் பண்டிகையொட்டியும் விடுமுறை அளிக்கப்பட்டதால் பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். குறிப்பாக குளிர்பிரதேசமான ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    பூங்காவில் உள்ள உயரமான வெளிநாட்டு மரங்கள், அலங்கார செடிகள், ஜப்பான் பூங்கா, இலைப்பூங்கா, நியூ கார்டன், பெரணி இல்லம், இத்தாலியன் பூங்கா போன்றவற்றை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். 2-வது சீசனையொட்டி நடவு செய்யப்பட்டு உள்ள மலர் செடிகளில் பல்வேறு வண்ணங்களில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் ரசித்ததுடன், தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும் மலர்களை கொண்டு அமைக்கப்பட்ட செல்பி ஸ்பாட்டில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பூங்காவின் பெரிய புல்வெளி மைதானத்தில் தங்களது குடும்பத்தினருடன் அமர்ந்து பூங்காவின் எழில்மிகு அழகை ரசித்தனர்.

    ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளுக்காக படகு சவாரி இயக்கப்பட்டு வருகிறது. அங்கு மிதி படகு, துடுப்பு படகு மற்றும் மோட்டார் படகுகளில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்து மகிழ்ந்தனர். சவாரியின் போது, பசுமையான மரங்கள், கரையோரத்தில் உள்ள பூங்காவில் உள்ள கடமான்களை கண்டு ரசித்தனர். அங்கு நிலவிய சீதோஷ்ண காலநிலையை அனுபவித்தனர். படகு இல்ல வளாகத்தில் விற்பனை செய்யப்படும் கிவி, மங்குஸ்தான், ரம்பூட்டான் உள்ளிட்ட பழங்களை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

    கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 636 மீட்டர் உயரத்தில் அமைந்து உள்ள தொட்டபெட்டா மலைசிகரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் தொலைநோக்கி மூலம் அப்பர்பவானி, ஊட்டி நகரம், கர்நாடகா மாநில எல்லை, குண்டல்பெட், கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களை பார்த்தனர். அங்கு காட்சி முனையில் நின்ற படி இயற்கை அழகு மற்றும் அடர்ந்த வனப்பகுதியை கண்டு ரசித்தனர். இதேபோல் ஊட்டி ரோஜா பூங்கா, ஊட்டி-கூடலூர் சாலையில் உள்ள சூட்டிங்மட்டம், பைக்காரா நீர்வீழ்ச்சி, பைக்காரா படகு இல்லம் ஆகிய சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது. 
    ×