என் மலர்
நீங்கள் தேடியது "நக்சலைட்"
- காயமடைந்தவர்கள் அல்லது கொல்லப்பட்டவர்களை நக்சலைட்டுகள் காட்டுக்குள் இழுத்துச் சென்றனர்.
- அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே இன்று கடுமையான துப்பாக்கிச்சூடு சண்டை நடந்தது. இதில், 4 முதல் 6 நக்சலைட்கள் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. ஆனால், இதில் இவர்கள் உயிருடன் இருக்கிறார்களா அல்லது படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனரா என்று தெரியாமல் அதிகாரிகள் குழம்பியுள்ளனர்.
காரணம், துப்பாக்கிச்சூடுக்கு பிறகு அந்த இடத்தில் நக்சலைட்களின் உடல்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அல்லது கொல்லப்பட்டவர்களை நக்சலைட்டுகள் காட்டுக்குள் இழுத்துச் சென்றதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சிந்தாகுஃபா மற்றும் கிஸ்டாரம் காவல் நிலைய எல்லையில் உள்ள மாவோயிஸ்டுகளின் கோட்டையான சோடேகெட்வால் கிராமத்தின் வனப்பகுதியில் நடந்த இந்த என்கவுண்டரில் மாநில காவல்துறையின் மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் எலைட் கமாண்டோ பட்டாலியன் ஃபார் ரெசல்யூட் ஆக்ஷன் (கோப்ரா) ஆகியவற்றைச் சேர்ந்த பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் விரைவு நடவடிக்கைக் குழுக்கள் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.
- நக்சலைட்டுகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.
மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் காவல்துறையினருடன் இன்று நடந்த என்கவுன்டரில் 4 நக்சலைட்டுகள் உயிரிழந்துள்ளனர்.
மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், நாசகார செயல்களில் ஈடுபடும் நோக்கத்தில், தெலுங்கானாவில் இருந்து சில நக்சலைட்டுகள், பிரன்ஹிதா நதியைக் கடந்து கட்சிரோலிக்குள் நுழைந்ததாக, நேற்று மதியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கட்சிரோலி காவல்துறையின் சிறப்புப் போர்ப் பிரிவான சி-60 மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் விரைவு நடவடிக்கைக் குழுக்கள் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.
ரெப்பன்பள்ளி அருகே உள்ள கோலமார்கா மலைப்பகுதியில் இன்று காலை சி-60 பிரிவு குழு ஒன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது, நக்சலைட்டுகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். அதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட்ட பிறகு, அப்பகுதியில் தேடுதல் நடத்தப்பட்டது. இதில், நான்கு ஆண் நக்சலைட்டுகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும், அவர்களிடம் இருந்து ஒரு ஏகே-47 துப்பாக்கி, ஒரு கார்பைன், இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், நக்சல் புத்தகம் மற்றும் பிற பொருட்களும் மீட்கப்பட்டதாக அதிகாரி கூறினார்.
உயிரிழந்த நக்சலைட்டுகள் வர்கீஸ், மக்து, இருவரும் வெவ்வேறு நக்சல் குழுக்களின் செயலாளர்கள் மற்றும் படைப்பிரிவு உறுப்பினர்களான குர்சங் ராஜு மற்றும் குடிமெட்டா வெங்கடேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- ஆறு மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 12 பேர் சுட்டுக்கொலை.
- இரண்டு பாதுகாப்புப்படை வீரர்கள் காயம் அடைந்தனர்.
சத்தீஷ்கர் மாநிலம் எல்லை அருகே உள்ள மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டம் வண்டோலி கிராமத்தில் போலீசாருடன் இணைந்து கமோண்டோ படை வீரர்கள், நக்சலைட்டைடுகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. சுமார் ஆறு மணி நேரம் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சண்டையில் 12 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த சண்டையில் இரண்டு பாதுகாப்புப்படை வீரர்கள் காயம் அடைந்தனர்.
12 நக்சலைட்டுகளின் உடல்களை மீட்ட நிலையில் போலீசார் ஏகே 47 துப்பாக்கிகள், இரண்டு INSAS துப்பாக்கிகள் உள்ளிட்டவைகளை கைப்பற்றினர்.
நக்சலைட்டுகளுக்கு எதிரான இந்த சண்டையில் ஈடுபட்ட போலீசார் மற்றும் கமோண்டோ வீரர்களுக்கு 51 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என மகாராஷ்டிர மாநில உள்துறை மந்திரி துதேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.
- 5 பேர் கொண்ட நக்சலைட் குழு உணவு பொருட்கள் வாங்க வந்தபோது போலீசார் சுற்றி வளைத்தனர்.
- துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் 4 பேர் தப்பி ஓட்டம்.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் ஹெப்ரி போலீஸ் எல்லைக்குட்பட்ட கபினாலே வனப்பகுதியில் நேற்று இரவு 5 நக்சலைட்டுகள் கொண்ட குழுவினர் உணவு பொருட்களை வாங்க வந்தனர்.
இதுப்பற்றி நக்சல் எதிர்ப்புப்படை போலீசாருக்கு தகவல் தெரியவந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது போலீசாருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் நக்சலைட் தலைவர் விக்ரம் கவுடா என்பவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். மற்ற 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
கேரளாவில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கை தீவிரம் அடைந்ததையடுத்து நக்சலைட்டுகள் கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை நோக்கி வந்துள்ளனர். இதில் விக்ரம் கவுடா என்கவுன்டர் செய்யப்பட்டார். மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என்றனர். இந்த துப்பாக்கி சண்டை கபினாலே பஸ் நிலையத்தில் இருந்து 7 கி.மீ, தூரத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
- பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட 10 நக்சலைட் உடல்கள் மீட்பு.
- ஏ.கே. 47 உள்ளிட்ட துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 10 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். பெஜ்ஜி காவல் நிலைய அதிகார வரம்பிற்கு உட்பட்ட காட்டுப் பகுதியில் பாதுகாப்புப்படையினர் நக்சலைட்டுக்கு எதிரான ஆபரேசனில் ஈடுபட்டனர்.
கோன்டா மற்றும் கிஸ்தாரம் பகுதியில் உள்ள கேராஜ்குடா, தந்தேஸ்புரம், நகராம், பந்தர்பாதர் கிராமங்களில் நடைபெற்ற சண்டையில் 10 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
கொல்ல நக்சலைட்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. ஐ.என்.எஸ்.ஏ.எஸ். ஏ.கே. 47 போன்ற துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாவட்ட ரிசர்வ் காவலர்கள், சிஆர்பிஎஃப் வீரர்கள் தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுக்மா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நக்சலைட்டுகளுக்கு எதிரான நடைபெற்ற என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 207 நக்சலைட் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
- இந்த என்கவுண்டரில் நான்கு சிறார்கள் காயமடைந்தது உறுதி செய்யப்பட்டது.
- சிறுவனின் தொண்டையில் இருந்து தோட்டா அகற்றப்பட்டது
சத்தீஸ்கரில் 2024 ஆம் ஆண்டில் 287 நக்சலைட்டுகளைக் பாதுகாப்பு படையினர் கொன்றதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் அறிவித்தார்.
இதில் உயர்மட்டத் தலைவர்கள்14 பேரும் அடங்குவர். மேலும் 1,000 பேரைக் கைது செய்யப்பட்டனர் என்றும் ஒரு வருடத்தில் 837 பேர் சரணடைந்தனர் என்றும் அவர் கூறினார். சத்தீஸ்கரில் பாஜக ஆட்சிக்கு வந்து ஒரு வருட நிறைவை ஒட்டி பேசிய அமித் ஷா, மார்ச் 31, 2026 க்குள் நாகசலிசம் ஒழியும் என கவுண்டவுனையும் தந்துள்ளார்.
ஆனால் இந்த வெற்றி உள்ளூர் பழங்குடியினருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தொகை குறைதல், மனித உரிமை மீறல்கள் மற்றும் அரசின் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் நியாயத்தன்மை பற்றிய விவாதங்கள் சமூக ஆர்வலர்களால் முன்வைக்கப்படுகின்றன.
நக்சலிசத்தை எதிர்த்துப் போராடுவதற்கான அரசின் முயற்சிகள், அப்பாவிப் பொதுமக்களின் பாதுகாப்பு, பழங்குடிப் பகுதிகளின் இராணுவமயமாக்கல் மற்றும் பெருநிறுவன நலன்களுக்காக நடக்கும் அத்துமீறல் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளன.
தி ஃப்ரண்ட்லைன் இதழின் அறிக்கைப் படி, என்கவுன்டர்களில் கொல்லப்பட்ட நக்சலைட்டுகளின் எண்ணிக்கை - 2023 இல் 20 இலிருந்து 2024 இல் 287 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நபர்களில் பலர் அப்பாவி பொதுமக்கள், அரங்கேற்றப்பட்ட என்கவுண்டர்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழப்பைக் குறைப்பதில் அரசு வெற்றி பெற்றதாகக் கூறினாலும், உள்ளூர் கிராம மக்கள் மற்றும் ஆர்வலர்கள் இந்த புள்ளிவிவரங்களை மறுக்கின்றனர்.
சத்தீஸ்கரின் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் கொடுத்துள்ள விலை அதிகம். ஜனவரி 2024 இல், தெற்கு சத்தீஸ்கரின் பிஜப்பூரில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆறு மாத பெண் குழந்தை கொல்லப்பட்டது.
இந்த சம்பவம் ஆண்டு முழுவதும் நிகழ்ந்த இதேபோன்ற துயரங்களின் ஒரு பகுதியாகும். டிசம்பர் 11 மற்றும் 12ம் தேதிகளில் சத்தீஸ்கரின் நாராயண்பூர் மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களின் எல்லையில் உள்ள அபுஜ்மத்தின் கும்மாம்-லேகாவாடா கிராமங்களில் மாவோஸ்யிடுகளை என்கவுன்டர் செய்ததாக பாதுகாப்புப் படையினர் கூறினர். இதில் 7 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால் கொல்லப்பட்ட ஏழு பேரில் ஐந்து பேர் மாவோயிஸ்ட் இயக்கத்துடன் தொடர்பில்லாத பொதுமக்கள் விவசாயிகள் என்று குற்றம் சாட்டியுள்ளனர். இந்த என்கவுண்டரில் நான்கு சிறார்கள் காயமடைந்தது உறுதி செய்யப்பட்டது.
உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, ஒரு சிறுவனின் தொண்டையில் தோட்டா பாய்ந்துள்ளது, இதை மருத்துவர்களின் எக்ஸ் ரே உறுதி செய்தது. டிசம்பர் 20 அன்று, ராய்பூரில் உள்ள DKS சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, சிறுவனின் தொண்டையில் இருந்து தோட்டா அகற்றப்பட்டது. இதற்கிடையில், தண்டேவாடாவில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு குழந்தைகள், போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

என்கவுன்ட்டர்களில் கொல்லப்பட்டவர்களில் பலர் மாவோயிஸ்டுகள் அல்ல, அப்பாவி பொதுமக்கள் என்று உள்ளூர் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் 2024 இல் என்கவுன்டரில் கொல்லப்பட்ட இளம் பெண் கம்லி குஞ்சம் அதற்கு உதாரணம். அவரது தந்தை சோம்லி குஞ்சம், அவரது மகள் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு கொள்ளவில்லை என்றும் வன்முறை அராஜக என்கவுண்டருக்கு அவர் இறையனார் என்றும் கூறுகிறார்
இதுபோல சத்தீஸ்கரின் பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகளில் வரம்பு மீறிய அதிகாரம் வெளிப்படைத்தன்மை இல்லாதது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இப்பகுதியில் வளர்ந்து வரும் இராணுவமயமாக்கல் பழங்குடி சமூகங்களின் உரிமைகளை மீறுகிறது என்றும் , நீதிக்கு புறம்பான கொலைகள் மற்றும் மக்கள் தங்கள் மூதாதையர் நிலங்களில் இருந்து கட்டாயமாக இடம்பெயர்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்று மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய இராணுவ நடவடிக்கைகள் நக்சல் கிளர்ச்சியை ஒடுக்குவதை விட சுரங்கத் துறை கார்ப்பரேட் நலன்களை பாதுகாப்பதற்காகவே அதிகம் முனைப்புடன் நடக்கிறது என்று பழங்குடி ஆர்வலர்கள் வாதிடுகின்றனர்.
குறிப்பாக நக்சல்கள் மிகவும் தீவிரமாக செயல்படும் பஸ்தரில், அரசு செய்யும் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகள், அதிக பாதுகாப்பு முகாம்களை நிறுவுதல் என்பதுடன் அங்கு அதிகரித்துள்ள சுரங்க நடவடிக்கைகளுக்கு ஆதரவாக உள்கட்டமைப்பு விரிவாக்கம் ஆகியவற்றுடன் ஒத்துப்போகிறது
இந்தப் பழங்குடிப் பகுதிகளில் சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் அமைப்பது பல ஆதிவாசிகளால் உள்ளூர் இயற்கை வளங்களை கார்ப்பரேட் நலன்களால் சுரண்டுவதை எளிதாக்கும் ஒரு கருவியாகக் கருதப்படுகிறது. இது உள்ளூர் மக்களிடையே பரவலான எதிர்ப்பைத் தூண்டியுள்ளது.
தி ஃப்ரண்ட்லைன் அறிக்கையின்படி, சட்டவிரோதமாக நிலம் கையகப்படுத்துதல் மற்றும் சுரங்கம் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பழங்குடி சமூகங்களின் ஒப்புதல் இல்லாதது குறித்து ஏராளமான புகார்கள் வந்துள்ளன.
சத்தீஸ்கர் மாநில பழங்குடியினர் ஆணையத்தின் (CGSTC) அறிக்கையில், 'சர்குஜா மற்றும் சூரஜ்பூர் மாவட்டங்களில் சுரங்கம் தோண்டுவதற்கு போலி ஆவணங்கள் மூலம் ஒப்புதல் பெறப்பட்டது, பஞ்சாயத்துகள் சட்டத்தின் கீழ் பழங்குடியினரின் உரிமைகளை மீறியது.
ஆதிவாசிகள் அவர்களது நிலங்களில் இருந்து கட்டாயமாக இடம்பெயர்வதும், அவர்களின் எதிர்ப்பைக் குற்றமாக கருதுவதும், பழங்குடியினரின் உரிமைகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் சட்டப் பாதுகாப்புகளை அரசு புறக்கணிப்பதை எடுத்துக்காட்டுகிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினரின் வரம்பு மீறிய அதிகாரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்களின், குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
நக்சலிசத்தை ஒழிப்பதற்காக பாஜக அரசாங்கம் நிர்ணயித்துள்ள காலக்கெடு அப்பாவிகளின் உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தும் நடவடிக்கை என பூபேஷ் பாகேல் எச்சரித்துள்ளார்.
அக்டோபர் 2024 இல், பழங்குடியினரின் உரிமைகளுக்காகப் போராடும் அமைப்பான மூலவாசி பச்சாவ் மஞ்ச் (MBM) ஐ சத்தீஸ்கர் அரசாங்கம் தடை செய்தது.
அரசாங்கம் ஆதரவளிக்கும் வளர்ச்சித் திட்டங்களை எதிர்ப்பது மற்றும் பாதுகாப்பு முகாம்களுக்கு எதிராக எதிர்ப்பைத் திரட்டுவது உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது. 2021 இல் சில்கர் கிராமத்தில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 4 பேரை கொன்றது உட்பட தொடர்ச்சியான மனித உரிமை மீறல்களை எதிர்த்து இதுபோன்ற அமைப்புகள் போராடி வந்தன.
நக்சல் எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரில் கார்ப்பரேட் நலன்கள் மற்றும் இராணுவமயமாக்கலுக்கு முன்னுரிமை அளிக்கும் தற்போதைய உத்தி, சத்தீஸ்கரில் பழங்குடியின மக்களின் துன்பத்தை அதிகப்படுத்துகிறது என்று அரசியல் விமர்சகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாதிடுகின்றனர்.
இதற்கு பதிலாக கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை , உள்ளூர் சமூகங்களின் குறைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்தல் உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண மனித உரிமை ஆர்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.
பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களை வேட்டையாட தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.
அவ்வகையில், சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு நவம்பர் 12, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் தேர்தலை சீர்குலைப்பதற்காகவும், வன்முறை தாக்குதல்களை நடத்துவதற்காவும் நக்சலைட்டுகள் திட்டமிட்டுள்ளதால் அவர்களை வேட்டையாட மாநிலம் முழுவதும் சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இங்கு முதல்கட்ட தேர்தலை சந்திக்கவுள்ள பஸ்ட்டார், நாராயணப்பூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 62 நக்சலைட்டுகள் இன்று ஆயுதங்களை போலீசாரிடம் ஒப்படைத்து சரணாகதி அடைந்தனர்.
இந்த நடவடிக்கைக்காக சத்தீகர் மாநில முதல் மந்திரி ரமண் சிங் மற்றும் காவல்துறை டி.ஜி.பி. ஆகியோருக்கு மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தொலைபேசி மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார். #62Naxals #Naxalssurrender #NaxalsChhattisgarh
சத்தீஷ்கார் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே நேற்று முன்தினம் துப்பாக்கி சண்டை நடந்தது. அதில், 2 போலீசாரும், அவர்களுடன் சென்ற தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் அச்சுதானந்த் சாகுவும் பலியானார்கள். தூர்தர்ஷன் நியூஸ் சேனலின் உதவியாளர் மூர்முகுத் சர்மா, பத்திரிகையாளர் தீரஜ் குமார் ஆகியோர் உயிர்தப்பினர்.
முன்னதாக, துப்பாக்கி சண்டைக்கு நடுவே, மூர்முகுத் சர்மா தனது தாயாருக்காக பேசி, வீடியோவில் பதிவு செய்தார். ஒரு கால்வாய்க்குள் படுத்தபடி அவர் பதிவு செய்த வீடியோவில், துப்பாக்கி குண்டுகள் சீறிப்பாயும் காட்சி தெரிகிறது.
அதில், ‘அம்மா, இந்த தாக்குதலில் நான் கொல்லப்படலாம். உயிர் பிழைத்தால் நன்றி சொல்வேன். மரணம் என்னை நெருங்கியபோதிலும் எனக்கு பயம் இல்லை’ என்று அவர் பேசி உள்ளார். அந்த வீடியோவை, ‘டுவிட்டர்’ பக்கத்தில் தூர்தர்ஷன் வெளியிட்டுள்ளது. #Chhattisgarh #NaxalsAttack #DoordarshanCrewKilled
ஆர்.ஏ.எப். என்று அழைக்கப்படுகிற அதிவிரைவுப்படை உருவாக்கப்பட்டதின் 26-வது ஆண்டு விழா, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஆயுதப்படை முகாமில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நமது நாட்டில் நக்சலைட்டுகள் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை, சில காலத்துக்கு முன்பாக 126 ஆக இருந்தது. இப்போது அந்த எண்ணிக்கை, வெறும் 10 அல்லது 12 என்ற அளவில் குறைந்து விட்டது.
நமது நாட்டில் இருந்து நக்சலைட்டுகளை அடியோடு ஒழித்துக்கட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை. 1 அல்லது 2 அல்லது 3 வருடங்களில் ஒழித்துக்கட்டுவோம். இது உங்களது உறுதியாலும், துணிச்சலாலும், கடின உழைப்பாலும் சாத்தியப்படும்.
இடதுசாரி பயங்கரவாதம் பாதித்த பகுதிகளில் நீங்கள் ஆற்றிய பணிகள் பாராட்டத்தகுந்தவை. இதுவரை 131 மாவோயிஸ்டுகளையும், பயங்கரவாதிகளையும் கொன்று குவித்திருக்கிறீர்கள். 1,278 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 58 பேரை சரண் அடையவும் வைத்திருக்கிறீர்கள்.
காஷ்மீரில் பயங்கரவாத தடுப்பு படையாக மத்திய ஆயுத போலீஸ் படை செயல்பட்டு வருகிறது. காஷ்மீரை இந்தியாவின் ஒரு அங்கம் என்ற நிலையில் இருந்து யாராலும் பிரிக்க முடியாது. அங்கே சில இளைஞர்கள், பயங்கரவாதத்துக்கு தவறாக வழிநடத்தப்பட்டிருக்கலாம். அதே நேரத்தில் இந்தப் படையினர் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
கலவரங்களின்போதும், போராட்டங்களின் போதும் நீங்கள் விரைவாகவும், அதிரடியாகவும் செயல்பட வேண்டும். ஆனால் ஒருபோதும் பொறுப்பற்று இருந்து விடக்கூடாது.
அனைத்து போலீஸ் படையினரும் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும். எந்த நிலையிலும், மிருகத்தனமானவர்கள் என்று கூறத்தக்க விதத்தில் நடந்து கொள்ளக்கூடாது.
கூட்டத்தை கட்டுப்படுத்துகிறபோது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஒவ்வொருவரும் உணர்ந்து நடக்க வேண்டும். எப்போது பலத்தை பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து, அதற்கு ஏற்ப நடக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் ஐ.ஜி. சுந்தர் ராஜ் தலைமையில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது எடப்பால் பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகளை போலீசார் சுற்றிவளைத்தனர்.
இதனால், நக்சலைட்டுகள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது போலீசாருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் நக்சலைட் ஒருவர் கொல்லப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த பகுதியில் இருந்து துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. #Naxalgunneddown