என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சபரிமலை கோவில் நடைதிறப்பு"

    • நேரடி தரிசனம் மூலம் பக்தர்களுக்கு முழுமையான ஐயப்ப தரிசனம் கிடைக்கும்.
    • நாளை முதல் 19-ந்தேதி வரை தினமும் பல்வேறு பூஜை, வழிபாடுகள் நடைபெறுகிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி மாத பூஜைக்காக நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

    தந்திரி கண்டரரு ராஜீவரரு, பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார்.

    தொடர்ந்து நாளை முதல் 19-ந்தேதி வரை தினமும் பல்வேறு பூஜை, வழிபாடுகள் நடைபெறுகிறது. 19-ந்தேதி இரவு அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    முன்னதாக, "பங்குனி மாத பூஜை முதல் பக்தர்கள் 18-ம் படி ஏறி கொடி மரத்தில் இருந்து நேராக, கோவிலுக்குள் நுழைந்து சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக பக்தர்கள் மேம்பாலத்தை சுற்றி வந்து தரிசனம் செய்வதற்கான நேரம் மிச்சமாகும் என திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

    மேலும், அவர், "பக்தர்கள் கூடுதல் நேரம் ஐயப்பனை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும். தற்போது வரை 80 சதவீதம் பக்தர்களுக்கு முழுமையான ஐயப்ப தரிசனம் கிடைப்பது இல்லை என்ற நிலை இருந்து வந்தது. நேரடி தரிசனம் மூலம் பக்தர்களுக்கு முழுமையான ஐயப்ப தரிசனம் கிடைக்கும்" என தெரிவித்தார்.

    சபரிமலையில், பங்குனி ஆராட்டு திருவிழாவையொட்டி ஏப்ரல் 1-ந்தேதி மாலையில் மீண்டும் நடை திறக்கப்படும் என்றும் 2-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் ஆராட்டு விழா தொடங்குகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், 11-ந்தேதி ஆராட்டுடன் விழா நிறைவு பெறும் என கூறப்பட்டுள்ளது.

    சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களுக்கு மத்தியில் இன்று சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. #SabarimalaProtests #SabarimalaVerdict
    பத்தனம்திட்டா:

    கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்புக்கு எதிராக கேரள மாநிலத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ன. குறிப்பாக இந்து அமைப்புகளைச் சோந்த பெண்கள் சாரை சாரையாக திரண்டு வந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
     
    உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதால் பல்வேறு பகுதிகளில் பெண்கள், ஐப்பசி மாதம் நடை திறந்ததும் சபரிமலை செல்வதற்காக விரதம் தொடங்கினர். ஆனால் அவர்களை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க மாட்டோம் என போராட்டக்குழுவினர் எச்சரித்து வந்தனர். இதனால் சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இது ஒருபுறமிருக்க போராட்டக்குழுவினர் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். அடிவார முகாம்களில் முகாமிட்டு கோவிலுக்கு வரும் பெண்களை தடுத்து நிறுத்தினர்.

    குறிப்பாக நிலக்கல்லில் இருந்து சபரிமலை செல்லும் அனைத்து வாகனங்களையும் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 10 வயதுக்கு மேல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் இருந்தால் அவர்களை வலுக்கட்டாயமாக வாகனங்களில் இருந்து இறக்கி விட்டனர். சில இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்ததால், நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். தொடர்ந்து சபரிமலை செல்லும் அனைத்து பாதைகளிலும் போராட்டம் வலுவடைந்து வருகிறது.



    இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஐப்பசி மாத சிறப்பு பூஜைக்காக சபரிமலை கோவிலில் இன்று மாலை 5 மணியளவில் நடை திறக்கப்பட்டது. கோவிலுக்கு வரும் பெண்கள் அனைவரையும் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதால், இன்று பெண்கள் யாரும் கோவிலுக்கு வரவில்லை. #SabarimalaProtests #SabarimalaVerdict
    ×