என் மலர்
நீங்கள் தேடியது "வேலூர்"
- எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.
- திரைப்படம் மே மாதம் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
உறியடி படத்தை இயக்கி அதில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார் விஜய்குமார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஃபைட் கிளப் படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.
அதைதொடர்ந்து 'சேத்துமான்' படத்தை இயக்கிய தமிழ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எலக்சன்' எனும் திரைப்படத்தில் விஜய்குமார், 'அயோத்தி' புகழ் பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, 'வத்திக்குச்சி' திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம், நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை சி. எஸ். பிரேம்குமார் கையாண்டிருக்கிறார்.
வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கிறார். படத்தின் பாடலான எலக்சன் பாடல் சில நாட்களுக்கு முன் வெளியாகி யூடியூபில் 1 மில்லியன் பார்வையை இதுவரை பெற்றுள்ளது. திரைப்படம் மே மாதம் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
அதைதொடர்ந்து படத்தின் அடுத்த பாடலான 'தீரா' பாடலின் லிரிக் வீடியோ யூடியூபில் நேற்று வெளியாகியது. படத்தின் டிரைலரை இன்று மாலை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.
படத்தின் டிரைலர் சாதி அரசியல் பற்றியும், குடும்ப அரசியல் பற்றியும், இளைஞர்கள் அரசியலை எப்படி பார்க்கிறார்கள் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. டிரைலர் மிகவும் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது.
- தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் இன்று 3 இடங்களில் வெயில் சதம் அடித்தது. தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது.
இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.
இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு:-
திருத்தணியில் 102.3, கரூர் பரமத்தியில் 101, வேலூர் 99.68, திருத்தணி 102.38, சென்னை மீனம்பாக்கம் 99.32, கோயம்பத்தூர் 97.16, மதுரை விமானநிலையம் 98.96, நாமக்கல் 98.6, சேலம் 98.78, திருச்சி 95 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
சுற்றுலா தளங்களில் பதிவான வெப்பநிலை விவரங்கள் பின்வருமாறு:-
கொடைக்கானல் 67.64, குன்னூர் 75.2, ஊட்டி 72.32
- தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது.
- இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று 6 இடங்களில் வெயில் சதம் அடித்தது. தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 105.44 டிகிரி வெயில் கொளுத்தியது.
இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.
இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு:-
கரூர் பரமத்தி - 104.9, வேலூர் - 104.36, திருத்தணி - 102.56, நாமக்கல் - 102.2, திருச்சி - 100.58, சென்னை மீனம்பாக்கம் - 99.68, கோயம்புத்தூர் - 98.24, மதுரை விமான நிலையம் - 97.88, சேலம் - 96.8 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
சுற்றுலா தளங்களில் பதிவான வெப்பநிலை விவரங்கள் பின்வருமாறு:-
ஊட்டி - 68, கொடைக்கானல் - 69.44, குன்னூர் - 75.2, வால்பாறை - 79.7
- ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.
- தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் இன்று 3 இடங்களில் வெயில் சதம் அடித்தது. தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 102.92 டிகிரி வெயில் கொளுத்தியது.
இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.
இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு:-
வேலூர் 102.74, திருத்தணி 102.38, கரூர் பரமத்தியில் 102.2, நாமக்கல் 101.3, மதுரை விமானநிலையம் 100, சென்னை மீனம்பாக்கம் 98.6, கோயம்புத்தூர் 92.48, சேலம் 98.06,திருச்சி 99.86 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
சுற்றுலா தளங்களில் பதிவான வெப்பநிலை விவரங்கள் பின்வருமாறு:-
கொடைக்கானல் 66.74, ஊட்டி 69.62, குன்னூர் 72.14, வால்பாறை 78.8
- தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது.
- இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று 4 இடங்களில் வெயில் சதம் அடித்தது. தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 103 டிகிரி வெயில் கொளுத்தியது.
இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.
இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு:-
திருத்தணி 102, ஈரோடு 101, கரூர் 100, திருப்பத்தூர் 99, தருமபுரி 99, மதுரை 98, சென்னை 98 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
சுற்றுலா தளங்களில் பதிவான வெப்பநிலை விவரங்கள் பின்வருமாறு:-
கொடைக்கானல் 68, ஊட்டி 72, குன்னூர் 73, வால்பாறை 80 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
- ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.
- தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் இன்று 3 இடங்களில் வெயில் சதம் அடித்தது. தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 102.56 டிகிரி வெயில் கொளுத்தியது.
இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.
இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு:-
திருத்தணி - 102.38, கரூர் பரமத்தி - 102.2, வேலூர் - 101.66, நாமக்கல் - 100.4, சென்னை மீனம்பாக்கம் - 96.8, கோயம்புத்தூர் - 96.26 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
சுற்றுலா தளங்களில் பதிவான வெப்பநிலை விவரங்கள் பின்வருமாறு:-
குன்னூர் - 75.2, கொடைக்கானல் - 69.98, ஊட்டி - 73.76, வால்பாறை - 78.8
- வேலூர் தங்க கோவிலில் இன்று காலை தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம்.
- பாரதப் பிரதமரின் ஒவ்வொரு வளர்ச்சியையும் மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.
வேலூர்:
வேலூர் தங்க கோவிலில் இன்று காலை தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வந்தே பாரத் ரெயில் தற்போது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்த ரெயில் மூலம் பயணம் செய்வதால் நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது. இந்த ரெயிலை அறிவித்த பாரத பிரதமருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இது நாட்டின் மிகப்பெரிய வளர்ச்சி இதனை பொறுத்துக் கொள்ளாத எதிர்க் கட்சியினர் பிரித்தாள்கிறது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர் இதனை பொதுமக்கள் நம்ப மாட்டார்கள்.
பாரதப் பிரதமரின் ஒவ்வொரு வளர்ச்சியையும் மக்கள் அனுபவித்து வருகிறார்கள். விரைவில் சென்னையில் இருந்து மைசூருக்கு புல்லட் ரெயில் வர உள்ளது.
நடைபெற்று முடிந்த 4 கட்ட தேர்தலில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க எவ்வளவு இடங்கள் வேண்டுமோ அவ்வளவு கிடைத்துவிட்டது.
எதிர்க்கட்சியினர் சுயநலத்துக்காக வாக்குகளை கேட்கின்றனர். ஆனால் பிரதமர் மோடி மக்களின் நலன் கருதி வாக்குகளை கேட்டு வருகிறார்.
தமிழக அரசு இந்தியா கூட்டணியில் இருந்து வரும் நிலையில் தமிழகத்திற்க்கு 2.5 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டுமென ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் தமிழக அரசு இதற்கு எந்தவித அழுத்தமும் கொடுக்கவில்லை. காங்கிரசும் தி.மு.க.வும் கூட்டணியில் இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்று தமிழக மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்தபோது காவிரி தண்ணீருக்காக போராட்டம் நடத்தினார்.
டாஸ்மாக் கடைகளுக்கும் போராட்டம் நடத்தினார். காவிரியில் தண்ணீர் கொண்டு வரவில்லை. ஆனால் அதிகமாக டாஸ்மாக் கொண்டு வந்தார்கள் இதுதான் தி.மு.க.வின் சாதனை. தமிழக அரசு எல்லா விதத்திலும் தோல்வி அடைந்து வருகிறது.
கஞ்சா வழக்கில் ஜாபர் சாதிக்கை தி.மு.க. அரசு காப்பாற்ற நினைக்கிறது. தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உயர்நீதிமன்றமே கஞ்சா விற்பவர்களுக்கும் காவல் துறையினருக்கும் தொடர்பு இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். தமிழகத்தில் கஞ்சா கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுவதற்கும், விபத்துக்கள் அதிகரிப்பதற்கும் போதை தான் காரணம். போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருவதால் அதற்கான இடங்களை தமிழக அரசு கூடுதல் ஆக்க வேண்டும்.
கருணாநிதி பற்றிய பாடம் 9 மற்றும் 10-ம் வகுப்பு ஆகிய பாடப் புத்தகங்களில் இடம்பெற்று இருந்தது.தற்போது 8-ம் வகுப்பிலும் அவரைப் பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது.
பா.ஜ.க. கல்வியில் ஏதோ ஒரு சின்ன மாற்றம் கொண்டு வந்ததற்காக கல்வி காவியமாக்கப்படுகிறது என்று கூறினார்கள். இன்று தமிழகத்தில் கல்வி கலைஞர் மயமாக்கப்பட்டு வருகிறது.
ஒரு தலைவரைப் பற்றி எத்தனை பாட புத்தகங்களில் கொண்டு வருவீர்கள். எனவே இதற்கு ஒரு வழிகாட்டும் முறைகள் இருக்க வேண்டும்.
எத்தனையோ அறியப்படாத தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி புத்தகங்களில் இடம்பெற வேண்டும். குழந்தைகள் மனதில் விதைப்பது எல்லாம் நல்ல விதைகளாக இருக்க வேண்டும்.
57 வருடமாக காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் வளர்க்க தவறிவிட்டதாக இப்போது செல்வ பெருந்தகை கூறுகிறார். தி.மு.க.வின் தோளில் அமர்ந்து கொண்டு காங்கிரசை எப்படி வளர்க்க முடியும்.
நாங்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தனித்து நிற்கிறோம். தி.மு.க.வை விட்டு ஒருபோதும் காங்கிரசால் வெளியே வர முடியாது.
அரசியலுக்காக தற்போது செல்வ பெருந்தகை இப்படி பேசியுள்ளார். இது ஒரு புறமிருக்க தற்போது நடந்து வரும் தி.மு.க. ஆட்சி தான் காமராஜர் ஆட்சி என ஈ . வி. கே. எஸ். இளங்கோவன் சொல்கிறார்.
இது ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
- மே மாதத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்தது.
- ண்டும் தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று 8 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக சென்னையில் 105.08 டிகிரி வெயில் கொளுத்தியது.
ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசியது
இதனையடுத்து தமிழகத்தில் மே மாதத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்தது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சி நிலவியது.
இந்நிலையில் வங்கக்கடலில் உருவான ரீமால் புயல் நேற்று வங்கதேசம் அருகே கரையை கடந்தது. இதனால் மீண்டும் தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இனிவரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு:-
சென்னை - 105.08, கடலூர் - 101.12, ஈரோடு - 100.76, மதுரை விமான நிலையம் - 101.12, புதுச்சேரி - 101.12, தஞ்சாவூர் - 102.2, திருத்தணி -100.58, வேலூர் - 103.82, கோயம்புத்தூர் - 90.68, கரூர் பரமத்தி - 97.7 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
சுற்றுலா தளங்களில் பதிவான வெப்பநிலை விவரங்கள் பின்வருமாறு:-
குன்னூர் - 77, கொடைக்கானல் - 75.2, ஊட்டி - 74.84, வால்பாறை - 76.1
தமிழகம் முழுவதும் இன்று 12 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக சென்னையில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது. நடப்பாண்டில் சென்னையில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை இதுவாகும்.
ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசியது
இதனையடுத்து தமிழகத்தில் மே மாதத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்தது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சி நிலவியது.
இந்நிலையில் வங்கக்கடலில் உருவான ரீமால் புயல் நேற்று வங்கதேசம் அருகே கரையை கடந்தது. இதனால் மீண்டும் தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இனிவரும் நாட்களில் தமிழகத்தில் வெப்பநிலை 2-3 டிகிரி அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மே 4 அன்று தமிழ்நாட்டில் தொடங்கிய கத்திரி வெயில் இன்றுடன் முடிவடைந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு:-
சென்னை மீனம்பாக்கம் - 106, சென்னை நுங்கம்பாக்கம் - 106, திருத்தணி - 104, வேலூர் - 104, திருப்பத்தூர் - 102, மதுரை நகரம் - 101, பரங்கிப்பேட்டை - 101, மதுரை விமான நிலையம் - 101, புதுச்சேரி - 101, நாகப்பட்டினம் - 101, தஞ்சாவூர் - 100, கடலூர் - 100 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
சுற்றுலா தளங்களில் பதிவான வெப்பநிலை விவரங்கள் பின்வருமாறு:-
குன்னூர் - 77, கொடைக்கானல் - 73.04, ஊட்டி - 73, வால்பாறை - 75.2
- மீண்டும் இந்தியாவில் வெப்ப அலை வீச தொடங்கியுள்ளது
- தமிழகத்தில் வெப்பநிலை 2-3 டிகிரி அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று 18 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக திருத்தணியில் 108.5 டிகிரி வெயில் கொளுத்தியது.
ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசியது
இதனையடுத்து தமிழகத்தில் மே மாதத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்தது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சி நிலவியது.
இந்நிலையில் மீண்டும் இந்தியாவில் வெப்ப அலை வீச தொடங்கியுள்ளது. வடஇந்தியாவில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இனிவரும் நாட்களில் தமிழகத்தில் வெப்பநிலை 2-3 டிகிரி அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவான இடங்கள்
திருத்தணி - 108.5, மீனம்பாக்கம் - 107, வேலூர் - 107, மதுரை விமான நிலையம் - 104, நுங்கம்பாக்கம் - 104, பரங்கிப்பேட்டை - 104, மதுரை நகரம் - 104, புதுச்சேரி - 104, ஈரோடு - 104, நாகப்பட்டினம் - 103, கடலூர் - 103, திருச்சி - 102, தஞ்சாவூர் - 102, தொண்டி - 101, திருப்பத்தூர் - 101, காரைக்கால் - 101, கரூர் பரமத்தி - 100, தூத்துக்குடி - 100 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
சுற்றுலா தளங்களில் பதிவான வெப்பநிலை விவரங்கள் பின்வருமாறு:-
குன்னூர் - 76.64, கொடைக்கானல் - 71.6, ஊட்டி - 72, வால்பாறை - 78
- கொலை-கொள்ளை, சட்டம் ஒழுங்கு சரியில்லை.
- கஞ்சா போதை கூலிப்படையை வைத்து கொலை செய்வது அதிகரித்துவிட்டது.
வேலூர்:
வேலூர்மாவட்டம், குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் சித்த மருத்துவமனையில் தெலுங்கானாவின் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தை குமரி ஆனந்தன் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
இன்று பிறந்தநாள் காணும் தமிழிசை சவுந்தரராஜன், தந்தையை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் வாங்க முடிவு செய்தார். இதனால் தந்தையை பார்ப்பதற்காக தமிழிசை சவுந்தரராஜன் ரெயில் மூலம் காட்பாடிக்கு வந்தார். காட்பாடி ரெயில் நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
என்னுடைய பிறந்தநாளும் ஜுன் 2 தான், தெலுங்கானாவும் பிறந்தது ஜூன் 2 தான். மீண்டும் மோடி பிரதமராக நன்றியுடன் வாக்களித்த மக்களுக்கு நன்றி. தமிழகத்திலும் பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி, வாக்கு சதவிகிதமும் அதிகரிக்கும். வேங்கை வயல் பிரச்சினைக்கு தீர்வில்லை.
கொலை-கொள்ளை, சட்டம் ஒழுங்கு சரியில்லை. கஞ்சா போதை கூலிப்படையை வைத்து கொலை செய்வது அதிகரித்துவிட்டது.
காங்கிரசின் மாவட்டத்தலைவர் கொலைக்கு தடயமும், தீர்வும் கிடைக்கவில்லை. இவ்வளவு தோல்விகளை வைத்துகொண்டும் ரேஷன் அரிசி கடத்தல், மின் கட்டணம் பால், பத்திரபதிவு கட்டணம் உயர்வு. இலாகா இல்லாத ஒரு அமைச்சர் ஊழலால் சிறையில் உள்ளார். மக்கள் இதனால் வெறுப்படைந்துள்ளனர்.
வருங்காலத்தில் இதனை உணர வேண்டும். பாரத தேச மக்கள் வளர்ச்சிக்காகவும், ஊழலுக்கும் எதிராக வாக்களித்துள்ளனர். நாங்கள் நாட்டின் பாதுகாப்பிற்காக வாக்களிக்கிறோம் என மக்கள் மகிழ்ச்சியாக சொல்கின்றனர்.
மக்கள் நாட்டின் பாதுகாப்பை உணர்ந்தே பா.ஜ.க.வுக்கு வாக்களி த்துள்ளனர். பிரதமர் மீது, மக்கள் அபரிவிதமான அன்பை வைத்திருகின்றனர்.
தமிழகத்தில் இன்னும் அதிகமான எண்ணிக்கையை எதிர்பார்த்தோம். தி.மு.க. கூட்டணி பலமாக உள்ளது. ஆனால் எதிர் வாக்கு சிதறுகிறது.
இருந்தாலும் தமிழக கருத்து கணிப்பை விட அதிக எண்ணிக்கையை பெறுவோம். திராவிட மாயையுடன் தவறுகள் நடக்கிறது. இதனை மக்கள் புரிந்துகொள்வார்கள். கன்னியாகுமரிக்கு மோடி தியானம் செய்ய வந்தார். ஆனால் ஸ்டாலின் கொடைக்கானால் கோள்ப் விளையாடினார். இதையெல்லாம் கேமரா இல்லாமலே படம் எடுத்தனர். மோடி எங்கு சென்றாலும் தியானம் செய்யலாம்.
ஆனால் கன்னியாகுமரி ஒரு தியாக பூமி. அது பார்வதி மாதா தவம் செய்த இடம். விவேகானந்தர் தவம் செய்த இடம். இப்படிப்பட்ட ஆன்மீக இடமாக கன்னியாகுமரி உள்ளது என்பதை எடுத்து சொல்ல தான் மோடி அங்கு தியானம் செய்து திருவள்ளூவர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
பிரதமர் அங்கு தியானம் செய்ததால் அதன் முக்கியத்துவம் அதிகமாக தெரிகிறது. பிரதமர் செல்லும் போது தியானம் செய்த இடம் குறித்து மக்களுக்கு அதற்கான முக்கியத்துவம் தெரியவரும்.
பிரதமர் மோடி தினமும் காந்தி சிலைக்கு பூதூவி தான் அலுவலகத்தில் பணியை தொடங்குகிறார்.
மோடி எதை செய்தாலும் அது திணிக்கப்படுகிறது .ஒரு நடிகர் சொல்கிறார் மோடி ஷுட்டிங்க் நடத்துகிறார் என்று. தி.மு.க. அலுவலகத்தில் எல்லாம் இப்போது தான் தேசிய கொடியை ஏற்றுகின்றனர்.
முரசொலியில் காந்தியை பற்றி தலையங்கம் எழுதுகின்றனர். இதற்கு அவர்களை எழுத வைக்க மோடி தான் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இன்று ராணிப்பேட்டை, வேலூரில் கனமழை வாய்ப்பு இருக்கிறது.
- சென்னையில் 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவிவருவதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது.
இந்த வாளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று ராணிப்பேட்டை, வேலூரில் கனமழை வாய்ப்பு இருக்கிறது.
அதேபோல 5-ந்தேதியை பொறுத்தவரைக்கும் தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல்லில் ஆகிய பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்த வரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் சில பகுதிகளில் மிதமானது முதல் லேசானது வரை மழை பெய்யலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடங்கியதன் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்த தென்மேற்கு பருவ மழையின் காரணமாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னும் 2 நாட்களுக்கு மழை இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.