என் மலர்
நீங்கள் தேடியது "ஐநா சபை"
- பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
- பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது நடத்தப்படவில்லை என இந்திய ராணுவம் உறுதிப்படுத்தியது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது நடத்தப்படவில்லை என இந்திய ராணுவம் உறுதிப்படுத்தியது.
இதனையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் ராணுவக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கோரிக்கை விடுத்தார்
இது தொடர்பாக பேசிய ஐநா சபை பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர், "எல்லை கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லையைத் தாண்டி இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியதற்கு ஐநா சபை பொதுச்செயலாளர் கவலை தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் அதிகபட்ச இராணுவ நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுக்கிறார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ மோதலை உலகம் தாங்காது" என்று தெரிவித்ததாக கூறினார்.
- சீனாவில் அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
- மக்கள் நடத்தும் அமைதி வழி போராட்டத்திற்கு அரசு மதிப்பளிக்க வேண்டும் என ஐ.நா. அறிவுறுத்தியது.
நியூயார்க்:
சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது வேகமெடுத்து வருகிறது. கடந்த சில நாட்களாக 40 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. வைரஸ் பரவல் அதிகரிப்பால் பல்வேறு மாகாணங்களில் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை சீனா விதித்து வருகிறது.
ஜிங்ஜங்க் மாகாணத்தில் 100 நாட்களுக்கு மேலாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த மாகாணத்தின் உரும்யூ நகரில் கடந்த 24-ம் தேதி ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். ஊரடங்கு காரணமாக அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளை அதிகாரிகள் சீல் வைத்து மூடினர். இதனால் அங்கு தீ பற்றியபோது வீடுகளை விட்டு மக்கள் வெளியேற முடியாமல் உயிரிழந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இதற்கிடையே, சீன அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக அங்குள்ள மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் சீன அரசுக்கு எதிராகவும், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தவும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே, கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டம் சீனா முழுவதும் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைதி வழியில் போராடும் மக்களின் உணர்வுகளுக்கு சீன ஆட்சியாளர்கள் உரிய மதிப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
- அமெரிக்க நிறுவனங்களைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்களின் டுவிட்டர் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியது.
- இது மிகுந்த மன உளைச்சலை அளிக்கிறது என்றார் ஐ.நாவின் தகவல் தொடர்புகளுக்கான துணைப் பொதுச்செயலாளர்.
நியூயார்க்:
அமெரிக்காவின் பல்வேறு செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்கள் பலரின் டுவிட்டர் கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு முடக்கியது. டுவிட்டரின் புதிய தனியுரிமைக் கொள்கைகளின் ஒரு பகுதியாக, மற்றவர்களின் நல்வாழ்வுக்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் இந்த கணக்குகள் முடக்கப்பட்டதாக டுவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
அதேசமயம், எலான் மஸ்க்கின் ஒவ்வொரு அசைவுகளையும் ரகசியமாக கண்காணித்து அவர் குறித்து செய்திகளை வெளியிட்டு வந்ததற்காக பத்திரிகையாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பத்திரிகையாளர்களின் கணக்குகளை முடக்கியதன் மூலம் ஊடக சுதந்திரத்தைப் பறிப்பதாக கூறி டுவிட்டர் நிறுவனத்துக்கு ஐ.நா. மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஐ.நா.வின் உலகளாவிய தகவல் தொடர்புகளுக்கான துணைப் பொதுச்செயலாளர் மெலிசா பிளவ்மிங் கூறுகையில், டுவிட்டரில் பத்திரிகையாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டது மிகுந்த மன உளைச்சலை அளிக்கிறது. ஊடக சுதந்திரம் என்பது பொம்மை அல்ல. சுதந்திரமான பத்திரிகை ஜனநாயக சமூகங்களின் அடித்தளம் ஆகும். மேலும் அது தீங்கு விளைவிக்கும் தவறான தகவல்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கிய கருவியாகும் என தெரிவித்தார்.
ஐரோப்பிய கூட்டமைப்பின் ஆணையர் வேரா ஜூரோவா, டுவிட்டர் நிறுவனம் ஊடக சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளை மதிக்க வேண்டும். எலான் மஸ்க் அதைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கவேண்டும். டுவிட்டர் நிறுவனம் தொடர்ந்து எல்லை மீறினால் ஐரோப்பாவின் புதிய டிஜிட்டல் சேவைகள் சட்டத்தின் கீழ் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என எச்சரித்தார்.
- பாகிஸ்தானுக்கு ஆதரவாக பல பயங்கரவாதிகளை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்ப்பதை சீனா தடுத்து நிறுத்தியது.
- அப்துல் ரகுமான் மக்கியை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது.
பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவர் அப்துல் ரகுமான் மக்கி. இவர் அந்த அமைப்பின் தலைவரும், மும்பை, தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவருமான ஹபீஸ் சயீத்தின் உறவினர் ஆவார்.
அப்துல் ரகுமான் மக்கி, ஜம்மு, காஷ்மீரில் இளைஞர்களை வன்முறையில் ஈடுபடுத்துவதிலும், தாக்குதல் நடத்த திட்டமிடுவதிலும் நிதி திரட்டுவதிலும் ஈடுபட்டதாக இந்தியா குற்றம்சாட்டியது.
இதையடுத்து இந்தியாவும் அமெரிக்காவும் அப்துல் ரகுமான் மக்கியை பயங்கரவாதியாக அறிவித்தன. இவரை சர்வேதச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க இந்தியாவும் அமெரிக்காவும் ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தீர்மானம் கொண்டு வந்தன. ஆனால் சீனா தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அந்த தீர்மானம் நிறைவேறாமல் தடுத்தது. இதேபோல் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பல பயங்கரவாதிகளை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்ப்பதை சீனா தடுத்து நிறுத்தியது.
இந்தநிலையில் அப்துல் ரகுமான் மக்கியை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது.
அல்-கொய்தா தடை குழுவின் கீழ் அப்துல் ரகுமான் மக்கி உலக அளாவிய பயங்கரவாதியாக பட்டியலிடப்பட்டுள்ளான். இது தொடர்பாக ஐ.நா.சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.எஸ்.ஐ.எல். அல்-கொய்தா தடை குழுவின் கீழ் அப்துல் ரகுமான் மக்கியை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2016-ன் படி சொத்துகள் முடக்கம், பயண தடை, ஆயுதத் தடை உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
அப்துல் ரகுமான் மக்கியை ஐ.நா. சபை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
இவருக்கு மும்பை தாக்குதலில் தொடர்பு உண்டு. மேலும் இந்தியாவில் நடந்த செங்கோட்டை தாக்குதல் (2000-ம் ஆண்டு) ராம்பூர் சி.ஆர்.பி.எப். முகாம் தாக்குதல் (2008-ல்), ஸ்ரீநகர் தாக்குதல் (2018) உள்ளிட்ட பயங்கரவாத தாக்குதல்களும் தொடர்புடையவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2020-ம் ஆண்டு பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்ததாக, அப்துல் ரகுமான் மக்கிக்கு பயங்கரவாத எதிர்ப்பு நீதி மன்றம் சிறை தண்டனை விதித்தது.
- ஆப்கானிஸ்தானில் பெண்கள் பள்ளி, கல்லூரி செல்லக்கூடாது, பணிக்கு செல்லக்கூடாது, வாகனங்கள் ஓட்டக்கூடாது.
- தலை முதல் கால் வரை முழுவதுமாக மறைக்கும் வரையில் புர்கா அணிய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை தலிப்பான்கள் விதித்தனர்.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு முதல் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது.
அப்போதில் இருந்து அந்நாட்டில் பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்து வருகின்றனர். கடந்த 1 ஆண்டுகளாக தலிபான் ஆட்சியில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.
பெண்கள் பள்ளி, கல்லூரி செல்லக்கூடாது, பணிக்கு செல்லக்கூடாது, வாகனங்கள் ஓட்டக்கூடாது, தலை முதல் கால் வரை முழுவதுமாக மறைக்கும் வரையில் புர்கா அணிய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர்.
தற்போது அங்கு 6-ம் வகுப்புக்கு மேல் பெண்கள் படிக்க முடியாத நிலை உள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி பயில தடை விதிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு ஐக்கிய நாடுகள் சபையில் மனிதாபிமான பிரிவு தலைவர் மார்ட்டின் கிரிபித்ஸ், ஐ.நா. துணை பொதுச்செயலாளர் அமீனா முகமது ஆகியோர் தலைமையிலான குழுவினர் ஆப்கானிஸ்தான் சென்று பெண்களுக்கு எதிரான செயல்கள் பற்றி விசாரணை நடத்தினர். அப்போது மனிதாபிமான நடவடிக்கைகளில் பெண்களின் செயல்பாட்டை வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் அதிகாரிகளால் உருவாக்கப்பட்டு வருவதாக தலிபான்கள் தரப்பில் ஐ.நா. குழுவிடம் தெரிவிக்கப்பட்டது.
இதனால் அந்நாட்டில் மீண்டும் பெண்கள், சிறுமிகள் படிக்க வாய்ப்பு உருவாகும் என்று கருதப்பட்டது. ஆனால் தலிபான்கள் பெண் உதவி பணியாளர்களுக்கும் தடை விதித்துள்ளனர். இது பல முக்கியமான மனிதாபிமான திட்டங்களுக்கு மரண அடி என்று ஐக்கிய நாடுகள் சபையில் மனிதாபிமான பிரிவு தலைவர் மார்ட்டின் கிரிபித்ஸ் கூறினார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், தலிபான்கள் இந்த கட்டளைக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும். இல்லையென்றால் இதுபேரழிவை ஏற்படுத்தும் என்றார்.
- உலகின் மகிழ்ச்சியான நாடுகளுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது.
- இதில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக, ஐரோப்பிய நாடான பின்லாந்து முதலிடத்தில் உள்ளது.
நியூயார்க்:
உலக மகிழ்ச்சி தினம் ஆண்டுதோறும், மார்ச் 20ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலை ஐ.நா. சபையின் நீடித்த வளர்ச்சி தீர்வுகள் அமைப்பு வெளியிட்டு உள்ளது.
வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம் மற்றும் ஊழல் இல்லாமை ஆகிய காரணிகள் அடிப்படையில் பல்வேறு நாடுகளில் இதற்கான ஆய்வு நடத்தப்பட்டது.
இந்நிலையில், இந்தப் பட்டியலில் தொடர்ந்து 6-வது ஆண்டாக ஐரோப்பிய நாடான பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. டென்மார்க், ஐஸ்லாந்து ஆகியவை முறையே 2, 3-ம் இடத்தைப் பிடித்துள்ளன.
இந்தப் பட்டியலில் இந்தியா 125-வது இடத்தில் நீடிக்கிறது. அண்டை நாடுகளான நேபாளம், சீனா, வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளை விட இந்தியா பின்தங்கி உள்ளது. தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான் இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
- தென்கொரியா 23 ஓட்டுகளும் , சீனா 19 ஓட்டுகளும் , யு.ஏ.இ. 15 ஓட்டுகளும் பெற்றன.
- ஐநா புள்ளியியல் ஆணையத்திற்கு 4 ஆண்டு காலத்திற்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை, ஐநா புள்ளியியல் ஆணையத் தேர்தலில் அதிக பெரும்பான்மையுடன் இந்தியா 46 ஓட்டுக்களை பெற்றுவெற்றி பெற்றது.
இதன் அடுத்தபடியாக தென்கொரியா 23 ஓட்டுகளும் , சீனா 19 ஓட்டுகளும் , யு.ஏ.இ. 15 ஓட்டுகளும் பெற்றன. தென் கொரியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் இரண்டாவது வேட்பாளர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
மீதமுள்ள ஆசிய பசிபிக் மாநிலங்களின் உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு செயல்முறை மீண்டும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதே நேரத்தில் அர்ஜென்டினா, சியரா லியோன், ஸ்லோவேனியா, உக்ரைன், தான்சானியா ஐக்கிய குடியரசு மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஜனவரி 1, 2024 முதல் நான்கு ஆண்டு பதவிக் காலத்திற்கான அங்கீகாரத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டன.
இதன்படி ஐநா புள்ளியியல் ஆணையத்திற்கு 4 ஆண்டு காலத்திற்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
- பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
- ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவும், அமெரிக்காவும் தீவிரவாதி அப்துல் ரவூப் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானம் கொண்டு வந்தன.
நியூயார்க்:
பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தீவிரவாதி அப்துல் ரவூப் அசார். இவர் அந்த அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் ஆவார்.
தீவிரவாதி அப்துல் ரவூப், 1999-ம் ஆண்டு இந்திய விமான கடத்தல். 2001-ம் ஆண்டு இந்திய பாராளுமன்றம் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல பயங்கரவாத தாக்குதல்களை திட்டமிட்டு செயல்படுத்துவதில் ஈடுபட்டார்.
இந்நிலையில் தீவிரவாதி அப்துல் ரவூப் அசாரை பயங்கரவாத தடை பட்டியலில் சேர்க்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தீர்மானம் கொண்டு வந்தது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 1267 ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் அல்கொய்தா தடைகள் பட்டியலில் அப்துல் ரவூப்பை சேர்க்க இந்தியா தனது முன் மொழிவை வைத்தது.
இதற்கு பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவும், அமெரிக்காவும் தீவிரவாதி அப்துல் ரவூப் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானம் கொண்டு வந்தன.
இதை சீனா தனது வீட்டோ அதிகாரம் மூலம் நிறுத்தியது. இதற்கு முன்பும் பல பாகிஸ்தான் தீவிரவாதிக்கு எதிராக தீர்மானங்களை சீனா நிறுத்தி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவில் குழந்தை தொழிலாளர் தடை சட்டம் ஏற்கனவே அமலில் இருக்கிறது.
- உடல் ரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள்.
கொத்தடிமைகளாக இருந்து மீண்டு தங்கள் உழைப்பால், சாதனையால் கெத்து காட்டும் தேவி-துர்கா சகோதரிகள்
சுகத்தையும், சந்தோசத்தையும் மட்டுமே சுமக்க வேண்டிய பருவம் குழந்தை பருவம். அப்படிப்பட்ட பருவத்தை கஷ்டத்தை சுமக்க வைக்கும் பருவமாக மாற்றுவது வேதனையானது.
தோளில் புத்தக பையும், முகத்தில் புன்னகையுமாக துள்ளித்திரிய வேண்டிய பருவத்தில் அவர்களை தொழிலாளர்களாக்கி கல், மண் சுமப்பது முதல் கடினமான பல வேலைகளை செய்யும் தொழிலாளர்களாக மாற்றுவதை ஏற்றுக் கொள்ள மறுத்தாலும் குழந்தை தொழிலாளர்கள் எண்ணக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.
இந்தியாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் அதிகம் இருப்பதாக ஐ.நா. சபையின் யுனிசெப் நிறுவன தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் குழந்தை தொழிலாளர் தடை சட்டம் ஏற்கனவே அமலில் இருக்கிறது. ஆனாலும் குடும்ப வறுமை காரணமாக குழந்தை தொழிலாளர்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்.
2021-22 கால கட்டத்தில் தமிழ்நாட்டில் 2,586 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டார்கள். அதே நேரம் 28 சதவீதமாக இருந்த குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை கொரோனாவுக்கு பிறகு 79 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.
இவர்களுக்கு கடினமான பணிகளை கொடுப்பதால் வளர் இளம் பருவம் முற்றிலுமாக சிதைந்து போகிறது. உடல் ரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள்.
மண்ணுக்கு மரம் பாரமா.... பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா...? என்று பெருமையுடன் கூறிக் கொண்டாலும் குடும்பத்தின் மொத்த பாரத்தையும் சுமக்கும் கட்டாயத்துக்கு குழந்தைகளை ஆக்கி விடுகிறார்கள்.
எதுவும் புரியாத அந்த வயதில் வருமானத்துக்காக, வரும் துயரத்தை உணராமல் தொழிலாளர்களாக்கி விடுகிறார்கள்.
உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அந்த குழந்தைகள் அனுபவிக்க வேண்டிய ஆசைகள், கனவுகள் அனைத்தும் சிதைக்கப்படுகின்றன.
குழந்தை தொழிலாளர்கள் நடத்தப்படும் விதமும், அவர்கள் அனுபவிக்கும் வேதனைகளும் வலி நிறைந்தது. குறைந்த கூலி கொடுத்து நிறைய லாபம் சம்பாதிக்கலாம் என்ற உணர்வுடன்தான் தொழில் நடத்துபவர்கள் அவர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள்.
இந்த மாதிரி வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களும் சரி, வேலைக்கு அமர்த்துபவர்களும் சரி அந்த குழந்தைகளின் விருப்பு வெறுப்பை பற்றி யோசிப்பது கிடையாது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமான இன்று இருளர் சமூகத்தைசேர்ந்த இளம் பெண்களான தேவி (23), துர்கா (25) என்ற சகோதரிகள் இருவரும் மீட்கப்படும் கொத்தடிமை தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தி வருகிறார்கள்.
இதற்கு காரணம் இவர்களும் கொத்தடிமைத் தொழிலாளர்களாக இருந்து மீண்டவர்கள். தாங்கள் அனுபவித்த வேதனைகளையும், கஷ்டங்களையும் மற்ற குழந்தைகளும் அனுபவிக்க கூடாது என்ற வைராக்கியத்துடன் பணியாற்றுகிறார்கள்.
இருளர் சமூகத்தில் பிறந்து அடிமைத் தொழிலாளர்களாக இருள் சூழ்ந்த வாழ்க்கை வாழ்ந்ததையும் மலரும் நினைவுகளாக பகிர்ந்து கொண்டார்கள்.
எங்கள் இருளர் சமூகத்தில் கல்வி அறிவு அவ்வளவாக கிடையாது. நாங்கள் பெற்றோருக்கு மொத்தம் உள்ள 5 சகோதரர்களில் நாங்கள்தான் கடைசி பிள்ளைகள். எங்கள் சமூகத்தில் அவ்வளவாக யாரையும் பள்ளிக்கு அனுப்பமாட்டார்கள்.
அதே போல்தான் சிறு வயதிலேயே எங்களையும் திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் ரைஸ்மில் வேலையில் ஈடுபட வைத்தார்கள். அந்த மில்லில் வேலைக்கு கொத்தடிமை தொழிலாளர்களாக அமர்த்தப்பட்டிருந்தோம்.
எங்கள் தாத்தா 20 ஆயிரம் ரூபாயை அந்த மில் உரிமையாளரிடம் முன் பணமாக வாங்கியிருக்கிறார். தனது மகன் மாரியின் திருமணத்துக்காக வாங்கிய அந்த பணத்தை அவரால் திருப்பி செலுத்த முடியாததால் வேலை செய்து கழித்து கொள்வதாக சொல்லி வேலையில் சேர்ந்தோம். திருமணம் முடிந்த மாரி மற்றும் அவரது மனைவி மல்லிகாவும் அதே மில்லில் வேலைக்கு சேர்ந்தார்கள்.
அந்த மில்லில் இரவில் நெல் அவிப்பார்கள். பகலில் அதை உலர வைத்து அள்ளி மூட்டை கட்ட வேண்டும். அதிகாலை 3 மணிக்கெல்லாம் மில் உரிமையாளர் வந்து எங்களை எழுப்புவார். ஏற்கனவே இரவில் நீண்ட நேரம் வேலை பார்த்த களைப்பால் தூக்கம் தூக்கமாக வரும். தூங்கி வழிந்தாலும் அடிப்பார்கள். அந்த அடியை வாங்கிக் கொண்டு வலியோடு வேலை செய்ய ஓடுவோம்.
பல ஆண்டுகள் அங்கேயே அடைத்து வைக்கப்பட்டு இருந்தோம். ஒரு தம்பதி அவர்களது சின்ன குழந்தை மற்றும் எங்களை நெல் ஊற வைத்த தொட்டியை கழுவ வைப்பார்கள். சரியாக கழுவவில்லை என்றாலும் முதலாளி அடிப்பார்.
எத்தனையோ நாட்கள் வலி தாங்க முடியாமல் அழுதிருக்கிறேன். அந்த நெல் ஊற வைத்த தொட்டிக்குள் ஒருமுறை நான் தவறி விழுந்து காப்பாற்றப்பட்டதாகவும் என் அம்மா கூறியிருக்கிறார்.
இரவு பகல் பாராமல் வேலை பார்ப்போம். சரியாக தூங்க முடியாது. தூங்குவதற்கு விரிப்பு கூட கிடையாது. தரையில்தான் படுத்து தூங்க வேண்டும். ஒருவேளை சாப்பாடு கூட வாய்க்கு ருசியாக கிடைக்காது. பெரும்பாலும் பழைய கஞ்சிதான் தருவார்கள்.
திடீரென ஒருநாள் எனது தாத்தா இறந்து போனார். அவரது இறுதிச் சடங்குக்கு கூட எங்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.
அந்த மில் அருகிலேயே உடலை அடக்கம் செய்தார்கள். அப்போதும் எங்களை தப்பி சென்று விடாமல் பார்த்து கொள்வதற்காக மில்லின் கணக்காளர் எங்களோடு நின்று கொண்டார்.
அந்த மில்லில் இருந்து எப்படியாவது விடுதலையாக வேண்டும் என்று நினைத்தாலும் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அப்போது ஒரு நாள் எனது சகோதரர் ரகுபதியும், மாமாவும் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்து கொண்ருந்தார்கள்.
அப்போது தண்ணீரில் மூழ்கி மாமா இறந்து போனார். அவரது உடலை ஊருக்கு கொண்டு செல்ல உரிமையாளருடன் பெரும் போராட்டமே நடத்தினோம். ஊருக்கு சென்ற பிறகு திரும்பி வேலைக்கு செல்ல மறுத்தேன். இதனால் எங்களை மட்டும் ஊரில் விட்டு விட்டு அம்மாவும், அப்பாவும் மீண்டும் வேலைக்கு சென்று விட்டார்கள்.
தொடர்ந்து அங்கு நடந்த சித்ரவதைகளை தங்க முடியாத எனது பெற்றோர் ஒரு பொது தொலைபேசியில் இருந்து போன் மூலம் உதவி கேட்டுள்ளார். அந்த தகவல் அடிப்படையில் அரசு அதிகாரிகள் அந்த மில்லுக்கு வந்து அடிமைப்பட்டு கிடந்த அனைவரையும் மீட்டனர் என்று தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்தார்கள்.
வெளியே வந்ததும் எல்லோரும் படிக்க ஆசைப்பட்டுள்ளார்கள். ஆனால் தேவியின் அண்ணன்கள் சின்னராசு, ரகுபதி அக்காள் நாகம்மாள் ஆகியோர் வயது அதிகமாகி விட்டதால் பள்ளியில் சேர்ந்து படிக்க முடியாமல் ஆகி விட்டது.
அந்த நேரத்தில் தந்தையும் குடும்பத்தை விட்டு பிரிந்து விட்டதால் குடும்பத்திற்காக போராட வேண்டியிருந்துள்ளது. அந்த சூழ்நிலையிலும் கஷ்டப்பட்டு துர்கா 12-வது வகுப்பு வரை படித்துள்ளார்.
அதன் பிறகு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து தனது தங்கை தேவியை நர்சிங் படிக்க வைத்துள்ளார். நர்சிங் படித்துள்ள தேவிக்கு அரசு ஆஸ்பத்திரியில் வேலைக்கு சேர்ந்து ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஆசை. அந்த ஆசை நிறைவேறுமா? என்ற கனவோடு காத்திருக்கிறார்.
- போர் நீடித்தால், சித்ரவதை மற்றும் பிற மனிதாபிமானமற்ற செயல்கள் குறித்து மேலும் பல அறிக்கைகள் வெளிவரலாம்.
- சித்ரவதை செய்த நபர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
நியூயார்க்:
ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைன் மீது 2022ம் வருடம் பிப்ரவரி மாதம் ராணுவ நடவடிக்கையை தொடங்கி முக்கிய பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது. ரஷியாவுக்கு உக்ரைன் படைகள் பதிலடி கொடுத்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் ரஷியாவுக்கு எதிராக தொடர்ந்து போரிட்டு வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் போரில் கைது செய்யப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் போர்க் கைதிகளை ரஷிய படைகள் சித்ரவதை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த செயல் ரஷிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு செயலாக இருக்கலாம் என ஐ.நா. சபை கூறியுள்ளது.
இதுபற்றி ஐ.நா. சபையின் அறிக்கையாளரான அலிஸ் ஜில் எட்வர்ட்ஸ் கூறியிருப்பதாவது:
உக்ரைனில் உள்ள ரஷியப் படைகள், உக்ரைன் குடிமக்கள் மற்றும் ராணுவ போர்க்கைதிகளை தொடர்ச்சியாக, வேண்டுமென்றே உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் துன்புறுத்துவதாக சில அறிக்கைகள் மற்றும் சாட்சியங்கள் மூலம் அறிந்ததும் நான் அதிர்ச்சி அடைந்தேன். இந்த சித்ரவதை நடவடிக்கைகளில் மின்சார ஷாக் கொடுத்தல், முகத்தை மூடி தாக்குதல் மற்றும் மரண அச்சுறுத்தல்கள் ஆகியவை அடங்கும்.
இந்த குற்றச்சாட்டுகள் உறுதிபடுத்தப்பட்டால், அவை அரசால் அங்கீகரிக்கப்பட்ட சித்ரவதையின் ஒரு மாதிரியாகவும் இருக்கலாம் என தோன்றுகிறது. இந்த சித்ரவதைகளை பார்க்கும்போது, உயர் அதிகாரிகளிடமிருந்து நேரடி அங்கீகாரம் பெற்று, வேண்டுமென்றே கொள்கை ரீதியாக செய்ததுபோல் தெரிகிறது.
சித்ரவதை ஒரு போர்க்குற்றம் மட்டுமின்றி இந்த நடைமுறை மனிதகுலத்திற்கே எதிரான குற்றமாகும். உயர்ந்த இடத்திலிருந்து வந்த உத்தரவு அல்லது அரசின் கொள்கை வழிகாட்டுதலுக்கு கீழ்ப்படிந்து கைதிகளை சித்ரவதை செய்வதை நியாயப்படுத்த முடியாது. சித்ரவதை செய்த நபர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
சித்ரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படுபவர்கள், உக்ரைனுக்குள் ரஷியப் படைகள் கட்டுப்பாட்டில் உள்ள தங்குமிடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உள் உறுப்புகள் சேதம் அடைந்துள்ளன. எலும்பு முறிவுகள், பக்கவாதம் மற்றும் நாட்பட்ட நோய்களின் தாக்கம் காணப்படுகிறது. சிலர் பிரமை பிடித்தவர்கள் போன்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.
போர் இன்னும் நீண்ட காலம் நீடித்தால், சித்ரவதை மற்றும் பிற மனிதாபிமானமற்ற செயல்கள் குறித்து மேலும் பல அறிக்கைகள் வெளிவரலாம்.
பொதுமக்கள் மற்றும் போர்க்கைதிகள் எல்லா நேரங்களிலும் பாதுகாக்கப்படுவதையும் மனிதாபிமானத்துடன் நடத்தப்படுவதையும் அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
மேலும், ஐ.நா. மனித உரிமை நிபுணர்களுடன் இணைந்து ரஷியாவிற்கு கடிதம் எழுதி உள்ளதாகவும், அதில் தங்கள் கவலைகளை தெரிவித்திருப்பதாகவும் அலிஸ் ஜில் எட்வர்ட்ஸ் கூறியுள்ளார்.
- பல்நாட்டு கூட்டு முயற்சி தேவைப்படுவதாக பிரிட்டனின் தூதர் பார்பரா உட்லேண்ட் கூறியிருக்கிறார்.
- செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுக்கு உரிமம் வழங்கும் அமைப்பை உருவாக்க ஓபன்ஏஐ ஆலோசனை வழங்கி உள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) ஏற்படுத்தப்போகும் தாக்கம் குறித்து உலகெங்கிலும் பல விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டின் மூலம் வரக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபை, முதல் முறையாக ஒரு கூட்டத்தை நடத்த இருக்கிறது. இந்த கூட்டத்தை பிரிட்டன் அரசாங்கம் ஏற்பாடு செய்திருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டினால் வரக்கூடிய அனுகூலங்களை உணர்ந்திருந்தாலும், அவற்றை அணு ஆயுதங்களை கட்டுப்படுத்த பயன்படுத்தும் போது அதனால் வரக்கூடிய ஆபத்துக்கள் குறித்தும் கவலை கொள்ள வேண்டியுள்ளதால் இந்த கூட்டம் பிரிட்டனால் நடத்தப்படுகிறது.
"விஞ்ஞானிகளும், நிபுணர்களும், அணுசக்தியால் ஏற்படக்கூடிய போர் அபாயத்திற்கு இணையாக செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்திற்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்கும் என அறிவித்து, இதனை கட்டுப்படுத்தும் விதமாக செயல்பட உலகிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்" என்று ஐ.நா. தலைவர் கூறியிருக்கிறார்.
செப்டம்பரில் செயற்கை நுண்ணறிவு குறித்த ஒரு ஆலோசனைக் குழுவை நியமிக்க திட்டமிருப்பதாகவும் ஐ.நா. பொதுச்செயலாளர், அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்தார்.
"செயற்கை நுண்ணறிவு விளைவிக்கப்போகும் சாதக, பாதகங்களை குறித்து தீர்மானிக்க ஒரு பல்நாட்டு கூட்டு முயற்சி தேவைப்படுகிறது" என பிரிட்டனின் தூதர் பார்பரா உட்வார்ட் கூறியிருக்கிறார்.
ஓபன்ஏஐ (OpenAI) நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் கூறும்போது, "அமெரிக்க அல்லது உலகின் சில நாடுகளின் கூட்டு முயற்சியால் சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுக்கு உரிமம் வழங்கவும், தேவைப்பட்டால் அந்த உரிமத்தை ரத்து செய்யவும் அதிகாரம் உள்ள ஒரு அமைப்பை உருவாக்கலாம்" என ஆலோசனை வழங்கியுள்ளார்.
பிரிட்டன் பிரதம மந்திரி ரிஷி சுனக் கூறுகையில், "உலகளாவிய பலதரப்பு விவாதத்தை நாங்கள் நடத்த முடியும். இதற்காக இந்த ஆண்டின் பிற்பகுதியில் செயற்கை நுண்ணறிவு பற்றிய உச்சிமாநாட்டை பிரிட்டன் நடத்தும்" என்று தெரிவித்தார்.
- ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான கூட்டம் இன்று நடக்கிறது.
- இந்தக் கூட்டத்திற்கு பிரிட்டன் வெளியுறவுத் துறை செயலாளர் ஜேம்ஸ் தலைமை தாங்குகிறார்.
நியூயார்க்:
செயற்கை நுண்ணறிவு (AI) ஏற்படுத்தப் போகும் தாக்கம் குறித்து உலகெங்கிலும் பல விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உலக பொருளாதாரத்துக்கும், சர்வதேச பாதுகாப்புக்கும் எவ்வாறு பயன்படுத்துவது என்று பல்வேறு உலக நாடுகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், நியூயார்க் நகரில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான முதல் கூட்டம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இன்று நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்திற்கு பிரிட்டன் வெளியுறவுத் துறை செயலாளர் ஜேம்ஸ் தலைமை தாங்குகிறார். மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் நன்மை, தீமைகள் குறித்தும் முக்கிய விவாதம் நடைபெற உள்ளது.