என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புழல் சிறை"

    • நாகராஜ் திடீரென தன்னிடம் இருந்த மாத்திரை, மருந்தை அளவுக்கு அதிகமாக தின்றார்.
    • உடல்நிலை பாதிக்கப்பட்ட நாகராஜை உடனடியாக மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    செங்குன்றம்:

    கொருக்குப்பேட்டை, ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் நாகராஜ் (32). பழைய வண்ணாரப்பேட்டை போலீசார் இவரை போக்சோ வழக்கில் கைது செய்து இருந்தனர். அவர் தண்டனை கைதியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

    ஜெயிலில் இருந்த போது நாகராஜிக்கு உடலில் சொறி, சிரங்கு நோயால் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக அவருக்கு சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் மாத்திரை மற்றும் மருந்துகள் கொடுக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நாகராஜ் திடீரென தன்னிடம் இருந்த மாத்திரை, மருந்தை அளவுக்கு அதிகமாக தின்றார். இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவரை உடனடியாக மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை நாகராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புழல் சிறையில் நேர்காணல் செய்திடும் அறையில் சிறைவாசிகளிடம் உறவினர்கள் பேசுவதற்கு இன்டர்காம் வசதி அமைக்கப்பட்டது.
    • இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் ஏ.சி., வெல்டிங் மெஷின், ஹோம் அப்ளையன்சஸ் 3 மாத கால பயிற்சி ஆண் சிறைவாசிகளுக்கு அளிக்கப்பட்டது.

    சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக அம்ரீஸ் பூஜாரி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு புதிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    புழல் சிறையில் நேர்காணல் செய்திடும் அறையில் சிறைவாசிகளிடம் உறவினர்கள் பேசுவதற்கு இன்டர்காம் வசதி அமைக்கப்பட்டது. சிறை பாதுகாப்பினை மேம்படுத்திட 5 நவீன கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன.

    இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் ஏ.சி., வெல்டிங் மெஷின், ஹோம் அப்ளையன்சஸ் 3 மாத கால பயிற்சி ஆண் சிறைவாசிகளுக்கு அளிக்கப்பட்டது. டெய்லரிங் மற்றும் எம்பிராய்டரி பயிற்சி முடித்த பெண் சிறைவாசிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    ஊடுகதிர் அலகிடும் எந்திரம் ரூ.180 லட்சம் செலவில் கொள்முதல் செய்து நிறுவப்பட்டு இயங்கி வருகிறது. ஆயத்த ஆடை வடிவமைப்பு பயிற்சி முடித்த 20 சிறைவாசிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    சிறைவாசிகளுக்கு தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம் மூலமாக வாய்ப்பாட்டு பயிற்சி மற்றும் இதர இசை கருவிகள் வாசிப்பு பயிற்சி தொடங்கப்பட்டது.

    கனரக தொழில்கூட சலவை எந்திரம் சிறைவாசிகளின் பயன்பாட்டிற்கென வாங்கி பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறைவாசிகளால் உருவாக்கப்பட்ட மூலிகை நர்சரியும் தொடங்கப்பட்டுள்ளது.

    • மனிதாபிமான அடிப்படையில் கழிவறைக்கு செல்ல அனுமதித்த போலீசாரை ஏமாற்றி அங்கிருந்து ரியாஸ் கான் ரசாக் தப்பியோடிவிட்டார்.
    • விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, விக்கிரவாண்டி மற்றும் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் அனுப்பினார்.

    விக்கிரவாண்டி:

    இலங்கை திரிகோண மலையைச் சேர்ந்த அப்துல் முஸ்தபா மகன் ரியாஸ் கான் ரசாக் (வயது 39). இவர் மதுரை பகுதியில் சந்தேகப்படும் படியாக சுற்றிவந்தார். இவரை விசாரித்ததில் ஆவணங்கள் இன்றி மதுரையில் தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடத்து மதுரை தெற்கு வாசல் போலீசார் இவர் மீது கடந்த 2019-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கு விசாரணைக்காக மதுரை கோர்ட்டில் நேற்று வந்தது. இதற்காக ரியாஸ் கான் ரசாக்கை புழல் சிறையில் இருந்து மதுரைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வழக்கு விசாரணை முடிந்து மீண்டும் சென்னை புழல் சிறைக்கு திரும்பினர்.

    அப்போது இரவு 8.45 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பேரணி கூட்ரோடு அருகே உள்ள ஓட்டலில் போலீஸ் வாகனத்தை நிறுத்தி விட்டு குற்றவாளியை அழைத்துக் கொண்டு போலீசார் சாப்பிட சென்றனர். அப்போது தனக்கு வயிறு கோளாறாக உள்ளது என்று கூறிய ரியாஸ் கான் ரசாக் கழிவறைக்கு சென்று வருவதாக போலீசாரிடம் கூறினார்.

    மனிதாபிமான அடிப்படையில் கழிவறைக்கு செல்ல அனுமதித்த போலீசாரை ஏமாற்றி அங்கிருந்து ரியாஸ் கான் ரசாக் தப்பியோடிவிட்டார்.

    இது குறித்து விழுப்புரம் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, விக்கிரவாண்டி மற்றும் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் அனுப்பினார். தப்பிச் சென்ற குற்றவாளியை உடனடியாக பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தப்பியோடிய குற்றவாளியை பிடிக்க விழுப்புரம் மாவட்ட போலீசார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதனால் விக்கிரவாண்டி பகுதி மீண்டும் பரபரப்பாகியுள்ளது.

    இது தவிர, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்ட போலீசாருக்கு இத்தகவல் அனுப்பப்பட்டது. 

    • உணவு முறை மற்றும் உணவு அளவினை ஆண்டுக்கு ரூ.26 கோடி கூடுதல் செலவினத்தில் மாற்றியமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
    • கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி இந்த புதிய உணவு திட்டத்தை புழல் சிறையில் அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.

    தமிழகத்தில் 9 மத்திய சிறை, 3 பெண்கள் தனிச்சிறை மற்றும் மாவட்ட சிறைகள், கிளை சிறைகள் என 138 சிறைகள் உள்ளன.

    சிறைகளில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறைகளில் உள்ள கைதிகள் இதுவரை ஏ பிரிவு கைதிகள், பி பிரிவு கைதிகள் என பிரிக்கப்பட்டு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    கைதிகளுக்கு வாரத்தில் ஒரு நாள் சிக்கன் கறி வழங்கப்பட்டு வந்தது. முட்டையும், காய்கறி உணவுகளுடன், காலையில் பொங்கல், உப்புமா, கஞ்சி சட்னியும் வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் சட்டசபையில் மானிய கோரிக்கையின் போது சிறைவாசிகள் நலனுக்காக நிபுணர் குழுவினர் அறிக்கையின் படி உணவு முறை மற்றும் உணவு அளவினை ஆண்டுக்கு ரூ.26 கோடி கூடுதல் செலவினத்தில் மாற்றியமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. உணவுக்கு ஒரு நபருக்கு ரூ.96-ல் இருந்து ரூ.135 ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது

    இதைத்தொடர்ந்து முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி இந்த புதிய உணவு திட்டத்தை புழல் சிறையில் அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.

    இதில் சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த திட்டத்தின் படி றைவாசிகளுக்கு வழங்கப்படும் உணவு முறைகள்:-



    • பெட்ரோல் பங்க் மூலம் சிறைத் துறைக்கு நல்ல வருவாய் கிடைப்பதுடன், கைதிகளும் சம்பாதித்து வருகின்றனர்.
    • ரூ. 1.92 கோடி மதிப்பில் 1,170 சதுர மீட்டர் பரப்பளவில் மற்றொரு பெட்ரோல் பங்க் கட்டப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழக சிறைத் துறை, கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 2018-ம் ஆண்டு கைதிகள் பெட்ரோல் பங்க், சென்னை புழலில் முதல் முறையாக திறக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து திருச்சி, வேலூர், கோவை உள்ளிட்ட இடங்களிலும் சிறைத் துறை சார்பில் பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்பட்டன. இந்த பங்க்குகளை தற்போது ஆண் கைதிகள் இயக்கி வருகின்றனர்.

    நன்னடத்தை கைதிகள் தேர்வு செய்யப்பட்டு, உரிய பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர் பெட்ரோல் பங்க்குகளில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பெட்ரோல் பங்க்கு மூலம் சுமார் 25 கைதிகள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    பெட்ரோல் பங்க் மூலம் சிறைத் துறைக்கு நல்ல வருவாய் கிடைப்பதுடன், கைதிகளும் சம்பாதித்து வருகின்றனர்.

    இந்த திட்டத்தை மேலும் விரிவாக்கும் வகையில், புழல் சிறை வளாகத்தில் பெண்கள் தனிச்சிறை அருகே ரூ. 1.92 கோடி மதிப்பில் 1,170 சதுர மீட்டர் பரப்பளவில் மற்றொரு பெட்ரோல் பங்க் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த பெட்ரோல் பங்க்குகளை பெண் கைதிகள் மட்டுமே இயக்க உள்ளனர்.

    'இந்தியாவிலேயே முதல் முறையாக பெண் கைதிகள் மட்டும் இயக்கக் கூடிய பெட்ரோல் பங்க் புழலில் தான் திறக்கப்படுகிறது. இது ஒரு மாதத்தில் திறக்கப்படும்' என்று சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி தெரிவித்தார்.

    இந்த பெட்ரோல் பங்க்கின் ஒரு பகுதியில் கைதிகள் தயாரிக்கும் பொருள்களும் விற்பனை செய்யப்படும்.

    பெட்ரோல் பங்க் கட்டுமானப் பணிகளை தமிழக சட்டம், நீதி, சிறைகள் சீர்திருத்தப் பணிகள் துறை அமைச்சர் ரகுபதி ஆய்வு செய்தார். அவருடன் சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி, சிறைத்துறை டி.ஐ.ஜி.க்கள் கனகராஜ், முருகேசன் ஆகியோர் இருந்தனர்.

    பின்னர் அமைச்சர் ரகுபதி, புழல் சிறை வளாகத்தில் நடைபெற்ற 'சிறைகளின் கலை' என்ற புதிய திட்ட தொடக்க விழாவில் பங்கேற்றார்.

    இந்தத் திட்டத்தின்படி, கைதிகளுக்கு தியானம், யோகா, இசை, நாடகம், இலக்கியம், விளையாட்டு போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

    • பரத் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    புழல் சிறை காவலராக பணிபுரிந்து வருபவர் பரத். இவர் மீது தேனாம்பேட்டையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அதில் பரத் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நவீன் குமாரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    • புதுக்கோட்டையைச் சேர்ந்த பாலாஜி என்ற கைதியிடம் 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    செங்குன்றம்:

    புழல் சிறையில் தண்டனை கைதிகள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் கஞ்சா வழக்கில் கைதாகி தண்டனை சிறையில் இருக்கும் கைதி ஒருவரை சந்திக்க, சென்னை, அண்ணாநகரை சேர்ந்த நவீன் குமார்(24) என்பவர் வந்தார். அப்போது அவர் தின்பண்டங்களை பையில் கொண்டு வந்தார். சந்தேகம் அடைந்த சிறை போலீசார் அந்தப் பையை சோதனை செய்தனர். அதில் 10 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    விசாரணையில் நவீன் குமார் அந்த கஞ்சாவை தண்டனை சிறையில் இருக்கும் நண்பரான கோபி நாத் என்பவருக்கு கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து நவீன் குமாரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். புழல் சிறையில் சிறை காவலர்கள் 20-க்கும் மேற்பட்டோர் திடீர் சோதனை செய்தனர். அப்போது சோதனை செய்தபோது உயர் பாதுகாப்பு பிரிவு அறை அருகே கேட்பாரற்று கிடந்த செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் திருட்டு வழக்கில் கைதாகி 5 ஆண்டு சிறை தண்டனை பெற்ற செங்குன்றத்தை அடுத்த எடப்பாளையம் பகுதியைச் சேர்ந்த திவசந்தகுமார் என்பவரிடம் 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் புதுக்கோட்டையைச் சேர்ந்த பாலாஜி என்ற கைதியிடம் 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களுக்கு ஜெயிலுக்குள் கஞ்சா, செல்போன் கிடைத்தது எப்படி என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 20 பேர் கொண்ட அதிகாரிகள் அதிரடியாக சென்று புழல் ஜெயிலுக்குள் சோதனை நடத்தினார்கள்.
    • போலீசார் பிடத்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்து செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

    செங்குன்றம்:

    புழல் ஜெயலில் வெளிநாடுகளை சேர்ந்த விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் செல்போன்களை பயன்படுத்துவதாக தகவல் கிடைத்தது.

    இதையடுதது 20 பேர் கொண்ட அதிகாரிகள் அதிரடியாக சென்று புழல் ஜெயிலுக்குள் சோதனை நடத்தினார்கள். அப்போது இலங்கையை சேர்ந்த அலெக்சாண்டர், கொலம்பியாவை சேர்ந்த எட்வின், நைஜீரியாைவ சேர்ந்த டேவிட், அகஸ்டின், எர்ணாவூைர சேர்ந்த ராம்குமார் ஆகியோரை சோதனை போட்டதில் அவர்கள் செல்போன்களை பயன்படுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் பிடத்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்து செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

    • செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு வெளிநாட்டு கைதிகள் வெவ்வேறு அறைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
    • கைதி இஜிபா அகஸ்டின் சிபிக்கி வேறு அறைக்கு மாற்றுவது தொடர்பாக கடும் வாக்குவாதம் செய்தார்.

    செங்குன்றம்:

    புழல் தண்டனை சிறையில் 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். கடந்த வாரம் ஒரு அறையில் இருந்த வெளிநாட்டு கைதிகள் 4 பேர் செல்போன் பயன்படுத்தி வந்தது அதிகாரிகள் சோதனையில் தெரிந்தது.

    இதையடுத்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு வெளிநாட்டு கைதிகள் வெவ்வேறு அறைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

    நேற்று இரவு நைஜீரியா நாட்டை சேர்ந்த போதைப் பொருள் வழக்கில் தண்டனை பெற்று வரும் இஜிபா அகஸ்டின் சிபிக்கி (41) என்பவர் வேறு அறைக்கு மாற்றப்பட்டார்.

    அப்போது அவ்வழியாக சிறை துணை ஜெயிலர் சாந்தகுமார் நடந்து வந்து கொண்டு இருந்தார். அவ ரிடம் கைதி இஜிபா அகஸ்டின் சிபிக்கி வேறு அறைக்கு மாற்றுவது தொடர்பாக கடும் வாக்குவாதம் செய்தார். மேலும் அவரை தாக்கி சாப்பாட்டு தட்டை வீசினார். இதில் துணை ஜெயிலர் சாந்தகுமாருக்கு கையில் காயம் ஏற்பட்டது. அவருக்கு சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இது குறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சண்முகம் நைஜீரியா நாட்டு கைதி இஜிபா அகஸ்டின் சிபிக்கி மீது வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

    புழல் சிறையில் துணை ஜெயிலர் மீது வெளிநாட்டு கைதி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் கஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செங்குன்றம்:

    மப்பேடு பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 63). மறைமலை நகரில் நடந்த ஒரு கொலை தொடர்பாக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந் தேதி முதல் கஜேந்திரன் புழல் சிறையில் இருந்தார்.

    இந்நிலையில் கழிவறைக்கு சென்ற கஜேந்திரன் நீண்ட நேரமாக திரும்பி வரவில்லை. சிறிது நேரம் கழித்து மற்ற கைதிகள் சென்ற போது கழிவறையில் உள்ள ஜன்னலில் துண்டால் கஜேந்திரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மன அழுத்தத்தில் கஜேந்திரன் தற்கொலை செய்தாரா? அல்லது மற்ற கைதிகளுடன் மோதல் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கொள்ளை வழக்கில் ஜாமினில் வெளிவந்த காந்திமதி திருச்சி ஜீயர் நகர் பகுதியில் கொலை வழக்கு ஒன்றில் சிக்கினார்.
    • ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் காந்திமதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது.

    செங்குன்றம்:

    சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி என்கிற காந்திமதி. 65 வயதான இவர் வேளச்சேரியில் லட்சுமி தேவி என்பவரின் வீட்டில் வேலை செய்து வந்தார். கடந்த 2014-ம் ஆண்டு லட்சுமியை கட்டிப்போட்டு விட்டு 14 பவுன் நகை மற்றும் ரூ.45 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த வழக்கில் கைதான காந்திமதி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    பின்னர் இந்த வழக்கில் ஜாமினில் வெளிவந்த அவர் திருச்சி ஜீயர் நகர் பகுதியில் கொலை வழக்கு ஒன்றில் சிக்கினார். மூதாட்டி ஒருவரை கொன்று நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட காந்திமதி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் இலவச சட்ட உதவி மூலமாக காந்திமதிக்கு ஜாமின் கிடைத்தது. ஆனால் அவரை அழைத்துச் செல்வதற்கு உறவினர்கள் யாரும் புழல் சிறைக்கு செல்லவில்லை. இதனால் மனமுடைந்த காந்திமதி புழல் சிறை கழிவறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் காந்திமதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது.

    • செந்தில்பாலாஜி கடந்த மாதம் 12-ந்தேதி சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • காலை 6.30 மணிக்கு சென்னை ஒமந்தூரார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    சென்னை:

    சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் 14-ந்தேதி அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது செந்தில்பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    பின்னர் உடல் நலம் தேறியதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு நீதிமன்ற காவல் அடுத்தடுத்து நீடிக்கப்பட்டு வருவதால் தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார்.

    இதற்கிடையே சிறையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த மாதம் 12-ந்தேதி சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொண்ட சிறப்பு மருத்துவ குழு, தேவையான சிகிச்சைகளை வழங்கி வந்தது.

    இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று காலை 6.30 மணிக்கு சென்னை ஒமந்தூரார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×