என் மலர்
நீங்கள் தேடியது "கேல் ரத்னா விருது"
- கேல் ரத்னா விருது தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு அளிக்கப்படுகிறது.
- செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் மத்திய அரசால் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது. இதேபோல் அர்ஜுனா விருது, துரோணாச்சாரியா விருது, தயான்சந்த் விருது ஆகிய விருதுகளும் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு அளிக்கப்படுகிறது.
இதேபோல், அர்ஜூனா விருதுக்கு 25 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கிச் சுடும் வீராங்கனை இளவேனில் வாலறிவன், பேட்மிண்டன் வீரர் லக்ஷயாசென், எச்.எஸ்.பிரனோய் உள்பட 25 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், வாழ்நாள் சாதனையாளர் விருது, புரஸ்கார் விருது உள்ளிட்டவையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய விருது வழங்கும் விழா இம்மாதம் 30-ம் தேதி நடைபெறும் என விளையாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- விளையாட்டுத் துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதாகும்.
- பாரிஸ் ஒலிம்பிக்கில் மனு பாக்கர் இரு வெண்கலப் பதக்கங்கள் வென்றார்.
மத்திய அரசால் விளையாட்டுத் துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதாகும். கேல் ரத்னா விருதுக்கு தகுதியான வீரர்- வீராங்கனைகளின் பெயர்களை சம்பந்தப்பட்ட விளையாட்டு சம்மேளனங்கள் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்கின்றன.
இந்தாண்டுக்கான கேல் ரத்னா விருதுகள் குறித்த அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் இரு வெண்கலப் பதக்கங்கள் வென்ற துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பதிவு வைரலானது.
அவரது பதிவில், "கேல் ரத்னா விருதுக்கு நான் தகுதி வாய்ந்தவரா?" என்று அவர் பதிவிட்டுள்ளார். அதில் 2 வெண்கல பதக்கத்துடன் அவர் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவு வைரலானதும் நெட்டிசன்கள் மனு பாக்கரை கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். தனது பதிவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததும் அந்த பதிவை மனு பாக்கர் நீக்கியுள்ளார்.
- மத்திய அரசின் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- துப்பாக்கிச்சூடு வீராங்கனை மனு பாக்கருக்கும் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு விளையாட்டு வீரர்களுக்கான கேல் ரத்னா விருதுகளை அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு மத்திய அரசின் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 2 பதக்கங்களை வென்ற வீராங்கனை மனு பாக்கருக்கும் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் மற்றும் பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற பாரா தடகள வீரர் பிரவீன்குமாருக்கும் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நான்கு வீரர்களுக்கு வரும் 17ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்க உள்ளார்.

- தமிழக வீரருமான குகேஷ் உள்பட 4 வீரர்களுக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- அர்ஜுனா விருதுக்கான பட்டியலில் 3 தமிழக வீராங்கனைகள் உள்பட 32 வீரர்- வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
விளையாட்டு வீரர்களுக்கான கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி செஸ் வீரரும் தமிழக வீரருமான குகேஷ், ஹர்மன்ப்ரீத் சிங், பிரவீன்குமார், மனு பாக்கர் ஆகியோருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஜுனா விருதுக்கான பட்டியலில் 3 தமிழக வீராங்கனைகள் உள்பட 32 வீரர்- வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
அர்ஜூனா விருதுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ள விளையாட்டு வீரர்- வீராங்கனைகளின் பெயர்கள்:-
1. ஜோதி -யர்ராஜி தடகளம்
2. அன்னு -ராணி தடகளம்
3. நிது -குத்துச்சண்டை
4. சவீட்டி -குத்துச்சண்டை
5. வந்திகா அகர்வால் -செஸ்
6. சலிமா டெட் -ஹாக்கி
7. அபிஷேக் -ஹாக்கி
8. சஞ்சய் -ஹாக்கி
9. ஜர்மன்ப்ரீத் சிங் -ஹாக்கி
10. சுக்ஜீத் சிங் -ஹாக்கி
11. ராகேஷ் குமார் பாரா -வில்வித்தை
12. ப்ரீத்தி பால் பாரா -தடகளம்
13. ஜீவன்ஜி தீப்தி -பாரா தடகளம்
14. அஜீத் சிங் -பாரா தடகளம்
15. சச்சின் சர்ஜேராவ் கிலாரி -பாரா தடகளம்
16. தரம்பிர் -பாரா தடகளம்
17. பிரணவ் சூர்மா -பாரா தடகளம்
18. எச் ஹோகடோ செமா -பாரா தடகளம்
19. சிம்ரன் -பாரா தடகளம்
20. நவ்தீப் -பாரா தடகளம்
21. நிதேஷ் குமார் -பாரா பேட்மிண்டன்
22. துளசிமதி முருகேசன் -பாரா பேட்மிண்டன்
23. நித்யா ஸ்ரீ சுமதி சிவன் -பாரா பேட்மிண்டன்
24. மனிஷா ராமதாஸ் -பாரா பேட்மிண்டன்
25. கபில் பர்மர் -பாரா ஜூடோ
26. மோனா அகர்வால் -பாரா ஷூட்டிங்
27. ரூபினா பிரான்சிஸ் -பாரா படப்பிடிப்பு
28. ஸ்வப்னில் சுரேஷ் குசலே -படப்பிடிப்பு
29. சரப்ஜோத் சிங் -துப்பாக்கி சூடு
30. அபய் சிங் -ஸ்குவாஷ்
31. சஜன் பிரகாஷ் -நீச்சல்
32. அமன் -மல்யுத்தம்
அர்ஜுனா வாழ்நாள் சாதனையாளர்கள் விருதில் 2 பேர் இடம் பெற்றுள்ளனர். தடகளத்தில் சுச்சா சிங்கும் பாரா நீச்சல் போட்டியில் இடம் பெற்ற முரளிகாந்த் ராஜாராம் பெட்கரும் வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு மற்றும் விளையாட்டுகளில் சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது பட்டியலில் 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.
பயிற்சியாளரின் பெயர்
1. சுபாஷ் ராணா -பாரா ஷூட்டிங்
2. தீபாலி தேஷ்பாண்டே -துப்பாக்கி சூடு
3. சந்தீப் சங்வான் -ஹாக்கி
வாழ்நாள் விருது:-
பயிற்சியாளரின் பெயர்
1. எஸ் முரளிதரன் - பூப்பந்து
2. அர்மாண்டோ அக்னெலோ கோலாகோ - கால்பந்து
- 4 பேருக்கு நாட்டின் உயரிய விருதான கேல் ரத்னா விருதை மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.
- அர்ஜுனா விருதுக்கான பட்டியலில் 3 தமிழக வீராங்கனைகள் உள்பட 32 வீரர்- வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
விளையாட்டு வீரர்களுக்கான மத்திய அரசின் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ், மனு பாக்கர், ஹர்மன்ப்ரீத் சிங், பிரவீன்குமார் ஆகிய 4 பேருக்கு நாட்டின் உயரிய விருதான கேல் ரத்னா விருதை மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், அர்ஜுனா விருதுக்கான பட்டியலில் 3 தமிழக வீராங்கனைகள் உள்பட 32 வீரர்- வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், கேல் ரத்னா விருது, அர்ஜூனா விருதுகளை பெற்ற தமிழக வீரர்- வீராங்கனைகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நமது உலக செஸ் சாம்பியன் குகேஷ், நாட்டின் உயரிய விளையாட்டு விருதான மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது 2024க்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
நமது பாரா தடகள வீரர்கள் மற்றும் பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசன், நித்யா ஸ்ரீ சுமதி சிவன் மற்றும் மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கு மதிப்புமிக்க அர்ஜுனா விருதுகள் கிடைத்ததில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.
நம் அனைத்து விளையாட்டு வீரர்களும் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறோம். மேலும், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் இன்னும் பெரிய உயரங்களை அடைய வேண்டும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 4 பேருக்கு நாட்டின் உயரிய விருதான கேல் ரத்னா விருதை மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.
- அர்ஜுனா விருதுக்கான பட்டியலில் 3 தமிழக வீராங்கனைகள் உள்பட 32 வீரர்- வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
விளையாட்டு வீரர்களுக்கான மத்திய அரசின் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ், மனு பாக்கர், ஹர்மன்ப்ரீத் சிங், பிரவீன்குமார் ஆகிய 4 பேருக்கு நாட்டின் உயரிய விருதான கேல் ரத்னா விருதை மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், அர்ஜுனா விருதுக்கான பட்டியலில் 3 தமிழக வீராங்கனைகள் உள்பட 32 வீரர்- வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், விருது பெறும் தமிழக வீரர்- வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டு விளையாட்டுத் துறையின் வளர்ச்சியை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்த நம் சாதனை வீரர்களுக்கு ஒன்றிய அரசின் விருதுகள் வழங்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி!
கேல் ரத்னா விருது பெற்றுள்ள குகேஷ் மற்றும் அர்ஜூனா விருது பெற்றுள்ள துளசி மதி, நித்தியஸ்ரீ, மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கு என் வாழ்த்துகள்! வெற்றிகள் தொடரட்டும்!
தமிழ்நாட்டில் இருந்து சாதனை படைப்போரின் எண்ணிக்கை வருங்காலங்களில் உயர்ந்துகொண்டே இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- டி.குகேஷ் சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.
- இந்த விருது 2025-ம் ஆண்டில் இன்னும் கடினமாக உழைக்க மற்றும் நாட்டிற்காக அதிக விருதுகளை அடைய என்னை ஊக்குவிக்கும்.
புதுடெல்லி:
விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு விருதுகளை வழங்கி வருகிறது. 2024-ம் ஆண்டுக்கான விருது பெறுவோரின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் துப்பாக்கி சூடு வீராங்கனை மனு பாக்கர், செஸ் வீரர் டி.குகேஷ், ஆக்கி வீரர் ஹர்மன்பிரீத் சிங், மாற்று திறனாளி வீரர் பிரவீன்குமார் ஆகியோர் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையை சேர்ந்த டி.குகேஷ் சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். இளம் வயதில் உலக செஸ் பட்டத்தை வென்றவர் என்ற சாதனையை குகேஷ் படைத்தார்.
இதுகுறித்து குகேஷ் கூறியதாவது:-
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் எனக்கும் எனது சாதனைகளை அங்கீகரிக்கவும் மதிப்புமிக்க மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதை அறிவித்ததை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இந்திய அரசு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இந்த விருது 2025-ம் ஆண்டில் இன்னும் கடினமாக உழைக்க மற்றும் நாட்டிற்காக அதிக விருதுகளை அடைய என்னை ஊக்குவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2024-ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது.
- இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையையும் படைத்திருந்தார் குகேஷ்.
2024-ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது. இதில், கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் 2 பதக்கங்கள் வென்ற மனு பாகர் மற்றும் ஆண்கள் ஹாக்கியில் வெண்கலப் பதக்கம் வென்றஇந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் (பஞ்சாப்), சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்ற தமிழகத்தை சேர்ந்த டி.குகேஷ், பாரிஸ் பாராலிம்பிக்ஸில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற பிரவீன் குமார் ஆகியோருக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.
இதில் 18 வயதாகும் சென்னையை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் கடந்த மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப்பில், சீனாவின் டிங் லிரெனை வீழ்த்திசாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இதன்மூலம் இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையையும் படைத்திருந்தார்.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசிய விளையாட்டு விருதுகளை வழங்கினார். அப்போது குகேஷ் மற்றும் மனுபாகருக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.


இதேபோல் கேல் ரத்னா விருது பெற்ற விராட் கோலி மற்றும் பிற தேசிய விளையாட்டு விருதுகளைப் பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கும் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.
‘விளையாட்டுத் துறையில் பல ஆண்டு கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் செயல் திறனால் வீரர்களுக்கு இந்த விருதுகள் கிடைத்துள்ளன. நமது விளையாட்டு வீரர்களை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது’ எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
தேசிய விளையாட்டு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று விருதுகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது. #ManmohanSingh #HappyBirthdayDrSingh #ModiWishes
சர்வதேச அளவில் சாதிக்கும் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு, அவர்களின் சாதனை அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
அவ்வாறு விளையாட்டு துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருது இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி கேபடன் விராட்கோலி, உலக பளுதூக்குதல் சாம்பியனான மீராபாய் சானு ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
இதற்கு காமன்வெல்த் போட்டியிலும் ஆசிய விளையாட்டிலும் தங்கப்பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா அதிருப்தி தெரிவித்தார். புள்ளிகள் அடிப்படையில் தாம் அதிக புள்ளிகளை எடுத்த போதும், விருது வழங்காமல் ஏன் என்னை புறக்கணித்தனர் என கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக அவர் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரதோரை சந்தித்து பேசினார். பின்னர் அவர் பஜ்ரங் பூனியா நிருபர்களிடம் கூறியதாவது:-
கேல் ரத்னா விருதுக்கு எனது பெயரை ஏன் பரிசீலிக்கவில்லை என மந்திரியிடம் கேட்டேன். அதற்கு அவர் நான் விருதுக்கான புள்ளிகளை பெறவில்லை என்று கூறினார். அது தவறு. விராட்கோலி, மீராபாய் சானுவை விட நான் அதிக புள்ளிகள் பெற்று உள்ளேன். எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எனக்கு நீதி கிடைக்க வேண்டும். அதில் எனக்கு சாதகமான பதில் வரவில்லை என்றால் கோர்ட்டுக்கு செல்வேன் என்றார்.

அவரது இந்த கருத்து சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் புள்ளிகள் என்பது வீரர்களின் சாதனையை ஒட்டுமொத்தமாக வேறுபடுத்தி கணக்கிடுவது அல்ல. ஒரு வீரர் அவர் சார்ந்த விளையாட்டு துறையில் சாதித்ததை மட்டுமே அடிப்படையாக வைத்து கணக்கிடப்படுகிறது.
எனவே, டெஸ்ட், ஒருநாள், டி20 என்ற மூன்று வித போட்டிகளின் ஐசிசி தரவரிசை பட்டியளில் இரண்டு விதமான போட்டிகளில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். இந்தியாவில் மீரா பாய் சானு மட்டுமே ஒலிம்பிக் சாம்பியனாக உள்ளார். இதன் அடிப்படையிலேயே அவர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர் என விளக்கம் அளித்துள்ளது.
இதற்கிடையே, கோர்ட்டுக்கு செல்வதாக கூறிய பஜ்ரங் பூனியாவை அவரது பயிற்சியாளர் சாமாதானப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #RajivGandhiKhelRatna #BajrangPunia
இந்த விருதுக்கான பெயரை அந்தந்த விளையாட்டு சங்கங்கள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யும். வீரர்களின் செயல்பாட்டை ஆராய்ந்து மத்திய அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். அதனடிப்படையில் விராட் கோலி, மீராபாய் சானு உள்பட பல வீரர்களின் பெயர்கள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கும், பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவிற்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.