search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மும்பை"

    • விலை உயர்ந்த ஜூகு தாரா பகுதியில் அலுவலகம் அமைந்துள்ளது.
    • ரூ,7.84 கோடிக்கு அடமானம் வைத்து கடன் பெற்று இருக்கிறார்.

    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த வருடம் வெளியான ரஜினியின் ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு தமன்னா ஆடிய குத்தாட்டம் ரசிகர்களை கவர்ந்தது.

    இந்தியில் பிசியாக நடித்து வரும் தமன்னா தற்போது மும்பையில் 6 ஆயிரத்து 65 சதுர அடி கொண்ட அலுவலகத்தை ரூ,18 லட்சம் மாத வாடகைக்கு எடுத்துள்ளார்.

    5 ஆண்டுகளுக்கு வாடகை ஒப்பந்தம் போட்டு இருக்கிறார். இதற்காக ரூ,75 லட்சம் செக்யூரிட்டி டெபாசிட் செலுத்தி உள்ளார். விலை உயர்ந்த ஜூகு தாரா பகுதியில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது.

    அதுமட்டுமன்றி தமன்னா அந்தேரி வீர் தேசாய் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனக்கு சொந்தமான மூன்று வீடுகளை வங்கியில் ரூ.7.84 கோடிக்கு அடமானம் வைத்து கடன் பெற்று இருக்கிறார். இதற்காக ரூ,4.70 லட்சத்துக்கு முத்திரை கட்டணமும் செலுத்தி இருக்கிறார்.

    தமன்னா தற்போது ஜான் அபிரகாமுடன் வேதா படத்திலும் ஸ்ரத்தா கபூர், ராஜ்குமார் ராவ் ஆகியோருடன் ஸ்த்ரீ 2 படத்திலும் நடித்து வருகிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மராட்டியத்தில் ஆட்சி மாற்றம் தேவைப்படுகிறது.
    • சிவசேனா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணியாகப் போட்டியிடும்.

    மும்பை:

    மராட்டியத்தில் 2019 பேரவைத் தோ்தலில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தது. ஆனால், முதல்-மந்திரி பதவியைத் தர மறுத்ததால் பா.ஜனதாவுடனான கூட்டணியை முறித்த சிவசேனா, எதிா்க்கட்சிகளாக இருந்த தேசியவாத காங்கிரஸ்-காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. சிவசேனா தலைவா் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆனார்.

    ஆனால், 2022-ம் ஆண்டு சிவசேனா மூத்த தலைவா் ஏக்நாத்ஷிண்டே கட்சியை உடைத்து, பா.ஜனதாவுடன் கைகோர்த்தாா். இதனால், உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவியை இழந்தாா். ஷிண்டே புதிய முதல்- மந்திரி ஆனார்.

    பா.ஜனதாவின் தேவேந்திரபட்னாவிஸ் துணை முதல்-மந்திரி ஆனார். இதன்பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்த சரத்பவாரின் நெருங்கிய உறவினா் அஜித்பவாரும் ஆளும் கூட்டணியில் இணைந்து துணை முதல்-மந்திரி பதவியைப் பெற்றாா்.

    சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்றத் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி மொத்தமுள்ள 48 இடங்களில், 30 தொகுதிகளில் வென்றது. பாராளுமன்றத் தோ்தலில் பா.ஜனதா தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் போனதற்கு மராட்டியத்தில் ஏற்பட்ட தோல்வியும் முக்கியக் காரணமாக இருந்தது.

    இந்த நிலையில், சட்டசபை தோ்தலில் எதிா்க்கட்சிகளின் கூட்டணி ஆளும் கூட்டணிக்கு கடும் சவால் அளிக்க இருக்கிறது.

    இந்த நிலையில் புனேயில் நிருபர்களுக்கு பேட்டியளித்த சரத்பவாா் கூறியதாவது:-

    மராட்டியத்தில் ஆட்சி மாற்றம் தேவைப்படுகிறது. அதை மக்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டியது எதிா்க்கட்சிகள் கூட்டணியின் கடமையாகும். எனவே, சட்டசபைத் தோ்தலில் (சரத்பவாா் தலைமை) தேசியவாத காங்கிரஸ், (உத்தவ்தாக்கரே தலைமை) சிவசேனா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணியாகப் போட்டியிடும்.

    தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை இதுவரை தொடங்கப்படவில்லை. எனினும், விரைவில் இது தொடா்பாக கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெறும். பாராளுமன்றத் தோ்தலில் எங்கள் கூட்டணிக்கு மக்கள் நல்ல வரவேற்பை அளித்தாா்கள்.

    இடதுசாரிகள், பி.டபிள்யூ.பி. கட்சி ஆகியவையும் எங்கள் கூட்டணியில் உள்ளன. பாராளுமன்றத் தோ்தலில் அக்கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்க முடியவில்லை. எனினும், சட்ட சபைத் தோ்தலில் அவா்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிப்பது எங்கள் கடமை என்றாா்.

    பெண்களுக்கு மாதம் ரூ.1,500 நிதியுதவி, ஆண்டுக்கு மூன்று எரிவாயு சிலிண்டா் இலவசம் உள்ளிட்ட பல்வேறு கவா்ச்சிகரமான வாக்குறுதிகளை மராட்டியத்தில் ஆளும் கூட்டணி இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, 'இந்த அறிவிப்புகள் எதற்காக என்பது அனைவருக்கும் தெரியும்.

    சில நாட்களுக்கு வேண்டுமானால் இதை வைத்து பரபரப்பாகப் பேச முடியும். கையில் பணம் இல்லாமல் சந்தைக்கு பொருள் வாங்கச் செல்வதுபோல உள்ளது ஆளும் கட்சியின் நிலை.

    இவ்வாறு சரத்பவாா் கூறினார்.

    • போலியான 2 இறப்பு சான்றிதழ்களிலும் டாக்டர் யாதவ் என்பவர் கையெழுத்திட்டதும் தெரிய வந்தது.
    • இந்த மோசடி அம்பலமானதும் குற்றம் சாட்டப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

    இறந்ததாக போலி சான்றிதழ் வாங்கி 1.1 கோடி இன்சூரன்ஸ் பணத்தை பெண் ஒருவர் மோசடி செய்த சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது.

    மும்பையில் 2021 ஆம் ஆண்டு 11 ஆம் தேதி கஞ்சன் ராய் என்பவர் இதய நோயால் மரணமடைந்துள்ளார். கஞ்சன் ராயின் இறப்பு சான்றிதழை சமர்ப்பித்து அவரது மகன் தன்ராஜ் 20.4 லட்சம் இன்சூரன்ஸ் பணத்தை பெற்றுள்ளார்.

    இதே இறப்பு சான்றிதழை பயன்படுத்தி இன்னொரு இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் 25 லட்ச ரூபாயை தன்ராஜ் பெற்றுள்ளார்.

    பின்பு 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி பவித்ரா என்பவர் உயிரிழந்துள்ளார். பவித்ராவின் இறப்பு சான்றிதழை சமர்ப்பித்து அவரது கணவர் ரோகித் 24.2 லட்ச ரூபாயை பெற்றுள்ளார்.

    இந்நிலையில் இந்தாண்டு ஜனவரி 30 ஆம் தேதி இன்சூரன்ஸ் நிறுவனம் ஆடிட்டிங் செய்த போது ஒரே முகவரியில் இரண்டு வெவ்வேறு பெயர்களில் இன்சூரன்ஸ் பெற்றுள்ளதை பார்த்து சந்தேகம் அடைந்தது.

    இதனையடுத்து இன்சூரன்ஸ் நிறுவனம் இது சம்பந்தமாக போலீசில் புகாரளித்தது.

    இந்த வழக்கின் விசாரணையில், 2 தனித்தனி ஆதார் மற்றும் பான் கார்டுகளை பயன்படுத்தி 5 இன்சூரன்ஸ் நிறுவனங்களில் காஞ்சன் ராய் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருப்பது தெரிய வந்தது.

    மேலும், காஞ்சன் ராய், பவித்ரா என்ற பெயரில் சமர்ப்பிக்கப்பட்ட போலியான 2 இறப்பு சான்றிதழ்களிலும் டாக்டர் யாதவ் என்பவர் கையெழுத்திட்டதும் தெரிய வந்தது.

    இந்த மோசடி அம்பலமானதும் குற்றம் சாட்டப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் தலைமறைவாகியுள்ளனர். இந்த மோசடியில் இன்சூரன்ஸ் நிறுவனம், நகராட்சி அதிகாரிகள் உட்பட பலருக்கும் தொடர்பு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மும்பை விமான நிலையத்தில் மேள தாளங்களுடன் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன.
    • இந்தியா கேட்டின் முன் திரண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் ஒருவருக்கொருவர் வெற்றிகளிப்பை பரிமாறிக்கொண்டனர்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தியா பெற்றுள்ள இந்த வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது.

    நள்ளிரவில் பிரதான நகரங்களில் தெருக்களை ஆக்கிரமித்த ரசிகர்கள் இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் இந்தியாவின் வெற்றியை கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். மும்பை விமான நிலையத்தில் மேள தாளங்களுடன் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. நிலையத்தில் உள்ளவர்களுக்கு இனிப்புகள் பரிமாறப்பட்டன.

    இந்தியா கேட்டின் முன் திரண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் ஒருவருக்கொருவர் வெற்றிகளிப்பை பரிமாறிக்கொண்டனர். குறிப்பாக மத்திய பிரதேச மாநில பாஜக அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா தெருவில் இறங்கி தேசியக்கொடியை அசைத்து ரசிகர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். மேலும் உத்தரப் பிரதேசம் கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலத் தலைநகரங்களிலும் கொண்டாட்டங்கள் கலைக்கட்டியுள்ளன. 

    • ஜூலை 12-ந்தேதி முதல் 3 நாட்கள் பிரமாண்டமாக நடக்கிறது.
    • திருமண ஏற்பாடுகளை முகேஷ் அம்பானி-நீதா செய்து வருகிறார்கள்.

    பிரபல தொழில் அதிபரும் உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி-நீதா தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச் சண்ட் திருமணம்.

    மும்பையில் வருகிற ஜூலை 12-ந்தேதி முதல் 3 நாட்கள் பிரமாண்டமாக நடக்கிறது. திருமண ஏற்பாடுகளை முகேஷ் அம்பானி-நீதா செய்து வருகிறார்கள்.

    இதற்கிடையே நீதாஅம்பானி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றார். அங்கு தனது மகன் திருமண அழைப்பிதழை சாமியின் பாதத்தில் வைத்து தரிசனம் செய்தார்.

    நீதா அம்பானி, வாரணாசியில் உள்ள ஒரு தெருவுக்குள் நடந்து சென்று பட்டுச்சேலையினை வாங்கினார். அவர் பட்டுச் சேலைகளை பார்த்து கடை ஊழியர்களிடம் விசாரிக்கும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் லக்கா பூட்டி பனாரசி ரக சேலைகளை வாங்கினார்.

    • ரூ.975.08 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
    • பங்குகள் மற்றும் பத்திரங்கள் முடக்கப்பட்டுள்ளன.

    மும்பை:

    மராட்டிய மாநிலம் மும்பையை தலைமை இடமாக கொண்டு மந்தனா என்ற பெயரில் ஜவுளி தொழிற்சாலை இயங்கி வருகிறது.

    இந்த நிறுவனத்தின் அதிபர் மற்றும் செயல் இயக்குனர்கள் அங்குள்ள பரோடா வங்கியில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் கடன் பெற்றனர். ஆனால் இந்த கணக்கு 2016-ம் ஆண்டு செயல்படாத சொத்தாக அறிவிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக நடத்தப்பட்ட தணிக்கையில் அந்த நிறுவனம் ரூ.975.08 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் புருஷோத்தம் சகன்லால் மந்தனா, முன்னாள் நிர்வாக இயக்குனர் மணீஷ் பிஹாரிலால் மந்தனா உள்ளிட்டோர் மீது வங்கி நிர்வாகம் சி.பி.ஐ.யில் புகார் செய்தது.

    புகாரின் பேரில் மந்தனா நிறுவனத்தின் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

    இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மந்தனா நிறுவனத்துடன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் மும்பை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அப்போது 140-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள், 5 லாக்கர்கள் மற்றும் ரூ.5 கோடி மதிப்புள்ள பங்குகள் மற்றும் பத்திரங்கள் முடக்கப்பட்டுள்ளன.

    மேலும் லெக்சஸ் மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட 3 உயர்ரக கார்களும் ரோலக்ஸ், ஹூப்லாட் போன் பிரபல பிராண்டுகளின் கைக்கடிகா ரங்கள் மற்றும் ஏராளமான டிஜிட்டல் சாதனங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • காதலித்து கரம் கோர்த்துள்ள சோனாக்ஷி - சாஹீர் இஃபால் ஜோடிக்கு திரபிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • இஸ்லாமியர் ஒருவரை சோனாக்ஷி திருமணம் செய்துள்ளதை வலதுசாரி அமைப்பினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

    கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'லிங்கா' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சயமானவர் பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா. இவர் பல வருடங்களாக சாஹீர் இஃபால் என்ற நடிகரை காதலித்து வந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இருவருக்கும் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் சூழ திருமணம் நடந்து முடிந்துள்ளது.

    மும்பையில் உள்ள சோனாக்ஷியின் பாந்திரா அபார்ட்மெண்ட் குடியிருப்பில் பாரம்பரிய சடங்குகள் ஏதுமின்றி எளிய முறையில் நடந்த இந்த திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    காதலித்து கரம் கோர்த்துள்ள சோனாக்ஷி - சாஹீர் இஃபால் ஜோடிக்கு திரபிரபலங்களும், ரசிகர்களும், இணையவாசிகளும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக கணவர் சாஹீர் இஸ்லாமிய மதத்தைச் சேர்நதவர் என்பதால் சோனாக்ஷி இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறுவாரா என்ற கேள்வி எழுந்தது.

    இதற்கு பதிலளித்த சோனாக்ஷியின் தந்தையும் மூத்த நடிகருமான சத்ருகன் சின்ஹா, சோனாக்ஷி மதம் மாறப்போவதில்லை என்று தெளிவுபடுத்தியிருந்தார்.

    ஆனால், இஸ்லாமியர் ஒருவரை சோனாக்ஷி திருமணம் செய்துள்ளதை வலதுசாரி அமைப்பினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

    அதன் தொடர்ச்சியாக சோனாக்ஷி - சாஹீர் இஃபால் ஜோடி தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த திருமண புகைப்படங்களில் பலரும் மோசமாக கமெண்ட் செய்து வந்தனர். இதனால் அந்த பதிவில் யாரும் கமெண்ட் செய்யமுடியாதபடியும் கமெண்ட்களை படிக்க முடியாத படியும் மாற்றியுள்ளனர்.

    இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஸ்ரீநாத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "7 வருட காதலுக்கு பின்பு ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அவர்கள் அன்பை எதிர்பார்த்தனர். ஆனால் தங்கள் மீது வீசப்பட்ட வெறுப்பை தவிர்க்க பதிவின் கமெண்ட் பகுதியினை தடை செய்துள்ளனர். உங்கள் இருவரையும் நான் வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தியா வளர்ச்சிப்பாதையில் பயணிக்கிறது என்றும் அதன் வளர்ச்சியை உலகமே தற்போது கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
    • தாராவியை புனரமைத்து அங்குள்ள 10 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயரத்தப்போகிறோம்

    இந்தியாவின் பெரும் பணக்காரரான கவுதம் அதானி இன்று [ஜூன் 24] தனது 62 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி விமானம், துறைமுகம், சோலார் என பல்வேறு துறைகளில் கால்பதித்து வெற்றிகரமாக இயங்கி வரும் அதானி குழுமத்தின் பங்குதாரர்களிடம் அதானி உரையாடியுள்ளார்.

     

    அப்போது பேசிய அவர், இந்தியா வளர்ச்சிப்பாதையில் பயணிக்கிறது என்றும் அதன் வளர்ச்சியை உலகமே தற்போது கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் தற்போது நிலவி வரும் புவிசார் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியிலும், நிச்சயத்தன்மையற்ற சூழலிலும்கூட இந்தியாவின் உறவுகள் தொடர்ந்து வலுவடைந்து வருகிறது.

    ஸ்திரத்தன்மை , கூட்டுறவு மற்றும் வளர்ச்சியில் இந்தியா தொடந்து முன்னேறி வருகிறது. இது இந்தியாவிற்கான தருணம். நாட்டின் உள்கட்டமைப்பில் மத்திய மாநில அரசுகள் தனி கவனம் செலுத்தி அதிக முதலீடுகளை செய்து வருகின்றன. ரூ.11 லட்சம் கோடி வரை மத்திய அரசு இந்த நிதியாண்டில் நாட்டின் உள்கட்டமைப்புக்காக செலவிட்டுள்ளது. இது இதற்கு முந்தையதை விட 16 சதவீதம் அதிகம் ஆகும்.

    அரசாங்கத்திற்காக நாம் கடந்த 2023 ஆம் ஆண்டு பல வெற்றிகரமான பெரிய அளவிலான திட்டங்களை செயல்படுத்த உதவி வருகிறோம். அதானி பசுமை சக்தி நிறுவனத்தின்மூலம்  குஜராத்தில் உலகிலேயே பெரிய சுத்தீகரிப்பு சக்தி கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். பலநூறு கிலோமீட்டர்களுக்கு நீண்டிருக்கும் இந்த கட்டமைப்பு மூலம் 30,000 மெகாவாட் மின்சார தயாரியப்பு செய்யும் திட்டம் வருங்காலங்களில் இந்தியாவிற்கே மின்சாரம் அளிக்கும் அளவில் விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் மும்பையில் உள்ள உலகின் மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவியை புனரமைத்து அங்குள்ள 10 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயரத்தப்போகிறோம் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார். இதற்கிடையில் தாராவியை ஆக்கிரமிக்கவே அதானி குழுமத்திடம் இந்த திட்டம் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது என்று அப்பகுதி மக்களும் எதிர்க்கதிகளும் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. 

    • திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
    • கணவர் சாஹீர் இஸ்லாமிய மதத்தைச் சேர்நதவர் என்பதால் சோனாக்ஷி இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறுவாரா என்ற கேள்வி எழுந்தது.

    கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'லிங்கா' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சயமானவர் பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா. இவர் பல வருடங்களாக சாஹீர் இஃபால் என்ற நடிகரை காதலித்து வந்தார். இந்நிலையில் இன்று மாலை இருவருக்கும் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் சூழ திருமணம் நடந்து முடிந்துள்ளது.

    மும்பையில் உள்ள சோனாக்ஷியின் பாந்திரா அபார்ட்மெண்ட் குடியிருப்பில் பாரம்பரிய சடங்குபிகள் ஏதுமின்றி எளிய முறையில் நடந்த இந்த திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

     

     

    காதலித்து கரம் கோர்த்துள்ள சோனாக்ஷி - சாஹீர் இஃபால் ஜோடிக்கு திரபிரபலங்களும், ரசிகர்களும், இணையவாசிகளும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக கணவர் சாஹீர் இஸ்லாமிய மதத்தைச் சேர்நதவர் என்பதால் சோனாக்ஷி இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறுவாரா என்ற கேள்வி எழுந்தது.

     

    இதற்கு பதிலளித்த சோனாக்ஷியின் தந்தையும் மூத்த நடிகருமான சத்ருகன் சின்ஹா, சோனாக்ஷி மதம் மாறப்போவதில்லை என்று தெளிவுபடுத்தியிருந்தார். தபாங், ரவுடி ராதோர் ஆகிய படங்களில் நடித்துள்ள சோனாக்ஷி சின்ஹா கடைசியாக சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய ஹீரமந்தி வெப் சீரிஸில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.     

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

     

    • அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா மட்டும் மனுதாக்கல் செய்து இருந்தார்.
    • போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.

    மும்பை:

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பிரபுல் படேல் தனது மேல்சபை எம்.பி. பதவியை ராஜினாமா செய்து இருந்தார். இதனால் மராட்டியத்தில் ஒரே ஒரு இடம் காலியானது.

    இந்த மேல்சபை எம்.பி. பதவிக்கு மராட்டிய துணை முதல்-மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா மட்டும் மனுதாக்கல் செய்து இருந்தார்.

    இந்த நிலையில் சுனேத்ரா பவார் மேல்சபை எம்.பி.யாக போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை மராட்டிய சட்டமன்ற செயலாளர் ஜிதேந்திர போலே தெரிவித்தார்.

    • யுமோ பிராண்டு ஐஸ் கிரீமை ஆன்லைனில் ஆர்டர் செய்திருந்தார்.
    • ஐஸ் கிரீமில் இருந்த மனித விரலை தடயவியல் சோதனைக்கு அனுப்பினர்.

    மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் ஐஸ் கிரீம் வாங்கி சாப்பிட்டார். மும்பையை அடுத்த மலாத் பகுதியில் வசிக்கும் இந்த பெண் யுமோ பிராண்டு ஐஸ் கிரீமை ஆன்லைனில் ஆர்டர் செய்திருந்தார்.

    ஆர்டர் செய்த ஐஸ் கிரீமை சாப்பிட துவங்கியதும் அதில் மனித விரல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஐஸ் கிரீம் நிறுவனத்தின் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

    மேலும் ஐஸ் கிரீமை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். ஐஸ் கிரீமில் இருந்த மனித விரலை தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட ஐஸ் கிரீம் உற்பத்தியாளரின் தயாரிப்பு ஆலைக்கு சென்ற உணவு பாதுகாப்பு துறையினர், அங்கு அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    இது குறித்து விசாரணை மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறையினர், ஐஸ் கிரீம் உற்பத்தியாளருக்கு வழங்கியிருந்த உரிமத்தை ரத்து செய்தனர். சம்பந்தப்பட்ட ஐஸ் கிரீம் உற்பத்தியாளர் பூனேவை சேர்ந்த நிறுவனம் என்றும், மத்திய அரசு உரிமம் பெற்று இயங்கி வந்ததாகவும் உணவு பாதுகாப்பு துறை தெரிவித்து இருக்கிறது.

    தற்போது உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையில், அந்நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இருப்பதாகவும், அவற்றை ஆய்வு செய்ய முடிவு செய்திருப்பதாகவும் உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. 

    • ஐஸ் கிரீமை ஆன்லைனில் ஆர்டர் செய்தார்.
    • சுவைத்துக் கொண்டிருந்த போது நாக்கில் ஏதோ தட்டுப்பட்டது.

    மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக உடலையும் மனதையும் ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஆன்லைனில் ஐஸ் கிரீம் வாங்கி சாப்பிட முடிவு செய்தார். மும்பையை அடுத்த மலாத் பகுதியில் வசிக்கும் இந்த பெண் யுமோ பிராண்டு ஐஸ் கிரீமை ஆன்லைனில் ஆர்டர் செய்தார்.

    ஐஸ் கிரீம் ஆர்டர் செய்து, அதனை ருசிக்க காத்திருந்த பெண்ணுக்கு சிறிது நேரத்தில் குளு குளு ஐஸ் கிரீம் டெலிவரி செய்யப்பட்டது. கொளுத்தும் வெப்பத்தில் ஐஸ் கிரீம் நம்மை காப்பாற்றிவிடும் என்ற எண்ணத்தில் ஐஸ் கிரீம் சாப்பிட துவங்கினார்.

     


    ஐஸ் கிரீம் ருசியில் மெய்மறந்த பெண், அதனை சுவைத்துக் கொண்டிருந்த போது நாக்கில் ஏதோ தட்டுப்பட்டது. ஐஸ் கிரீமில் என்ன இருந்துவிட போகிறது என அதை உற்று நோக்கியவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. தான் ஆசை ஆசையாய் வாங்கி சுவைத்த ஐஸ் கிரீமில் துண்டிக்கப்பட்ட மனித விரல் இருந்தது.

    அதிர்ச்சியுடன் துரிதமாக செயல்பட்ட பெண், தான் சுவைத்த ஐஸ் கிரீம் உருகுவதற்குள் அதனை புகைப்படம் எடுத்துக் கொண்டு, உடனடியாக மலாத் காவல் நிலையம் விரைந்தார். அங்கு தான் ஆர்டர் செய்து சுவைத்த ஐஸ் கிரீமில் கைவிரல் இருந்தது குறித்து புகார் அளித்தார்.

    புகாரை எடுத்துக் கொண்ட மலாத் காவல் துறை அதிகாரிகள் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஐஸ் கிரீம் நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்து, ஐஸ் கிரீமை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஐஸ் கிரீமில் இருந்த மனித விரலை தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

    ×