search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமேசான்"

    • வேலையில் என் மீது இருந்த காழ்ப்புணர்ச்சியால் எனது மனைவியை மயக்க பல முயற்சிகளில் ஈடுபட்டார். அதில் அவர் வெற்றியும் பெற்றார்.
    • நான் உங்களுக்கு கூறுவதெல்லாம் அதுபோன்ற [பணிச்சூழல்] பாம்புப் புற்றுகளை விட்டு சுதாரித்து உடனே வெளியே வந்துவிடுங்கள்.

    ஏதன் ஈவென்ஸ் [Ethan Evans] தனது மண வாழ்வுக்கு வேலையிடத்தால் வந்த வினையை குறித்து மனம் திறந்துள்ளார். லிங்க்கிட்- இன் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நான் தொடக்கத்தில் வேலை செய்து வந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் சிஇஓ, வேலையில் என் மீது இருந்த காழ்ப்புணர்ச்சியால் எனது மனைவியை மயக்க பல முயற்சிகளில் ஈடுபட்டார். அதில் அவர் வெற்றியும் பெற்றார்.

    எனது மனைவியும் நானும் விவாகரத்து பெற்று பிரிய நேர்ந்தது. நான் எனது வேலையையும் விட்டுவிட்டு அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறினேன். அந்த சிஇஓவின் செயல்கள் குறித்து நான் முன்னரே அறிந்திருந்தாலும் எனது பொருளாதார சூழல் காரணமாகவும், அவர் எப்படியும் அவரது முயற்சிகளில் ஜெயிக்க முடியாது என்ற நம்பிக்கையிலும், அங்கு தொடர்ந்து வேலை செய்து பெரிய தவறு செய்துவிட்டேன். அந்த தவறுக்கு நான் பெரிய விலை கொடுக்க நேர்ந்தது.

     

    நான் உங்களுக்கு கூறுவதெல்லாம் அதுபோன்ற [பணிச்சூழல்] பாம்புப் புற்றுகளை விட்டு சுதாரித்து உடனே வெளியே வந்துவிடுங்கள். இதுபோன்ற [ஸ்டார்ட் அப் சிஇஓ] பாம்புகளை எப்படிக் கண்டறிய வேண்டும் என்றால் அவர்கள் பின்புலம் குறிக்கும், அவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பது குறித்து முன்னரே அறிந்துகொள்ளுங்கள் என்று கார்ப்பரேட் கலாச்சாரம் குறித்து ஊழியர்களுக்கு அட்வைஸ் வழங்கியுள்ளார். ஏதன் அமேசான் சிஇஓ ஜெப் பெசோசை பற்றி தான் கூறுகிறாரா என்று பலர் கேள்வியெழுப்பிய நிலையில் ஏதன் அமேசானில் பணிக்கு சேர்வதற்கு முன்னர் பணியாற்றிய நிறுவனம் குறித்து இங்கு கூறியுள்ளார் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ள்ளது. 

     

     

    • ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் 5G சுதந்திர தின விற்பனையின்போது சிறப்பு விலையில் கிடைக்கும்.
    • சியோமி 43X ப்ரோ டிவி 43 இன்ச் டிஸ்ப்ளே மாடல் ரூ.28,999க்கு விற்பனையாகிறது.

    சுதந்திர தினம் அன்று (ஆகஸ்ட் 15) ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற பல ஆன்லைன் வலைதளங்கள் பெரிய விற்பனை நிகழ்வை நடத்தும். அதேபோல் சியோமி தனது அதிகாரப்பூர்வ Mi.com இணையதளத்தில் இதேபோன்ற விற்பனையை நடத்துவதாக அறிவித்துள்ளது.

    மேலும் இந்த தளத்தில் கிடைக்கும் சலுகைகள் மற்ற ஆன்லைன் தளங்களிலும் (அமேசான் போன்றவை) வழங்கப்படும். சுதந்திர தின விற்பனை இன்று (ஆகஸ்ட் 6) தொடங்கும் சியோமி என்று அறிவித்துள்ளது.

    சலுகை விவரங்கள்:

    ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் 5G சுதந்திர தின விற்பனையின்போது சிறப்பு விலையில் கிடைக்கும். இதன் 8ஜிபி + 128ஜிபி மெமரி மாடல் ரூ.27,999 விற்பனையாகிறது.

    அதேசமயம் 12ஜிபி + 256ஜிபி மாடல் ரூ.29,999 விலையில் விற்பனை செய்யப்படும். 512ஜிபி வேரியண்ட் வாங்க விரும்புவோர் ரூ.31,999 செலவழிக்க வேண்டும்.

    உங்கள் பட்ஜெட் ரூ. 15,000க்கு குறைவாக இருந்தால், சியோமி அதன் பட்ஜெட் ரெட்மி 13 5G ஸ்மார்ட்போனுக்கு சூப்பர் சலுகை வழங்குகிறது. இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,999 என்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மாடல் விலை ரூ.14,499 என்றும் மாறி இருக்கிறது.

    கூகுள் டிவி மூலம் இயங்கும் சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ் சீரிஸ் சிறப்பு சலுகைகளுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. சியோமி 55X ஜிடிவி 55 இன்ச் டிஸ்ப்ளே மாடல் ரூ.34,999-க்கு விற்பனையாகிறது.

    சியோமி 43X ப்ரோ டிவி 43 இன்ச் டிஸ்ப்ளே மாடல் ரூ.28,999க்கு விற்பனையாகிறது. இந்த டிவிக்களில் 4K ரெசல்யூஷன், டால்பி விஷன், HDR10 உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

    அமேசானில் ரெட்மி நோட் 13 ப்ரோ, ரெட்மி 12 5ஜி, நோட்13 ப்ரோ+, சியோமி 14 மற்றும் பல அமேசான் சுதந்திர தின (Amazon Great Freedom Festival) விற்பனையின்போது தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

    • அமேசன் நிறுவனம் இன்றும் முதல் நாளை வரை மிகப்பெரிய அளவிலான தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது.
    • அமேசான் 11,101 ரூபாய் தள்ளுபடி வழங்குகிறது.

    அமேசான் நிறுவனம் இன்றும் முதல் நாளை வரை மிகப்பெரிய அளவிலான தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. அமேசான் "பிரைம் டே" என பெயரிட்டு தள்ளுபடியை அறிவித்துள்ளது. அமேசான் சந்தாதாரரர்கள் இந்த சலுகையை பெற முடியும்.

    ஐ-போன் 13 அதன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் 59,900 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அமேசான் 11,101 ரூபாய் தள்ளுபடி வழங்குகிறது. இதனால் 48799 ரூபாய்க்கு அமேசானில் வாங்க முடியும். எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ கார்டுகள் வைத்திருப்பவர்கள் மேலும் 750 ரூபாய் வரை சலுகை பெறலாம். 128GB ஸ்டோரேஜ், ஏ15 பயோனிக் சிப் பிராசரர், 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்பிளே வசதி கொண்டதாகும்.

    • அமேசான் தனது 10வது பிரைம் டே நிகழ்வை ஜூலை 16 மற்றும் 17 தேதிகளில் நடத்த இருக்கிறது.
    • அமேசான் பிரைம் உறுப்பினர்கள் இன்னும் பிரைம் கேமிங் லீட் அப் தலைப்புகளை பெறலாம்.

    அமேசான் பல நாடுகளில் பிரைம் டே விற்பனையை நடத்த தயாராக உள்ளது. அதற்கு முன்னதாக, பிரைம் டே விற்பனையின்போது பிரைம் உறுப்பினர்களுக்கு Suicide Squad: Kill the Justice League, Chivalry 2 மற்றும் பல்வேறு பிரபல டைட்டில்களை கொண்ட கம்ப்யூட்டர் கேம்களை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

    அமேசான் பிரைமில் கூடுதல் கட்டணமின்றி இந்த கேம்களை எவ்வாறு பெறலாம் என்பதை விரிவாக பார்க்கலாம்.

    அமேசான் தனது 10வது பிரைம் டே நிகழ்வை ஜூலை 16 மற்றும் 17 தேதிகளில் நடத்த இருக்கிறது.

    இந்த விற்பனையின்போது, Suicide Squad: Kill the Justice League, Chivalry 2, and Rise of the Tomb Raider உள்ளிட்ட மூன்று கேம்களை அமேசான் பிரைம் சந்தா வைத்திருப்போர் பெற்றுக் கொள்ளலாம்.

    அமேசான் பிரைம் உறுப்பினர்கள் இந்த கேம்களை ஜூலை 16 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 48 மணிநேரத்திற்கு இலவசமாக பெறலாம். இந்த இலவச கேம்கள் எபிக் கேம்ஸ் ஸ்டோர் (Epic Games Store) மூலம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமேசான் பிரைம் உறுப்பினர்கள் இன்னும் பிரைம் கேமிங் லீட் அப் தலைப்புகளை பெறலாம். இதில், Thieves of the Heart, The Invisible Hand, Forager, Heaven Dust 2, Soulstice, Wall World, Hitman Absolution, Call of Juarez: Bound in Blood, and Call of Juarez ஆகியவை தற்போது கிடைக்கின்றன.

    ஜூலை 11 முதல், பிரைம் உறுப்பினர்கள் Knights of the Old Republic II — The Sith Lords, Alex Kidd in Miracle World DX, Teenage Mutant Ninja Turtles: Shredder's Revenge, and Samurai Bringer ஆகிய கேம்களை பெறலாம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சாப்ட்வேர் என்ஜினியர்களான பெங்களூருவை சேர்ந்த தம்பதி அமேசானில் எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலரை ஆர்டர் செய்துள்ளனர்.
    • பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    ஆன்லைன் ஷாப்பிங் செய்வோரிடம் பெரும் வரவேற்பை பெற்ற தளம் அமேசான். இருந்த இடத்தில் இருந்துகொண்டே வாங்க நினைக்கும் பொருளை ஆன்லைனில் ஆர்டர் செய்ய நினைக்கும் போது பெரும்பாலானவர்களுக்கு நினைவுக்கு வருது அமேசான் தான். அவ்வாறு ஆர்டர் செய்பவர்களுக்கு தவறுதலாக பொருட்களை மாற்றி அனுப்பும் நிகழ்வுகளும் பல நடந்துள்ளது.

    ஆனால், தாங்கள் ஆர்டர் செய்த பொருளுடன் கூடுதலாக வந்த ஜீவனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் பெங்களூருவை சேர்ந்த தம்பதியினர்.

    சாப்ட்வேர் என்ஜினியர்களான பெங்களூருவை சேர்ந்த தம்பதி அமேசானில் எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலரை ஆர்டர் செய்துள்ளனர். அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அமேசானில் இருந்து பார்சல் வந்தது. அவர்கள் ஆர்டர் செய்த கண்ட்ரோலருடன் உயிருடன் நாகப்பாம்பு இருந்தது. ஆர்டர் செய்யப்பட்ட பொருளுடன் பாம்பை நெளிந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து அத்தம்பதி எக்ஸ் தள பக்கத்தில், அமேசானில் இருந்து ஒரு எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலரை ஆர்டர் செய்தேன். அதனுடன் இலவசமாக பாம்பு கிடைத்தது என்று பதிவு செய்தனர். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இந்த பதிவை கண்ட அமேசான் நிறுவனம், அமேசான் ஆர்டரில் உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்தை அறிந்து வருந்துகிறோம். இதை சரிபார்க்க விரும்புகிறோம். தேவையான விவரங்களை தருமாறும், விரைவில் எங்கள் குழு உங்களை தொடர்பு கொள்ளும் என்று கூறியுள்ளது.

    • இந்த சீசனில் மொத்தம் 10 எபிசோடுகள் உள்ளது.
    • இது தொடர்பான அறிவிப்பு டீசரும் வெளியாகியுள்ளது.

    பாலிவுட் வெப் சீரியஸான மிர்சாபூர்' தொடரின் 3ஆவது சீசன் வரும் ஜூலை 5-ம் தேதி வெளியாகும் என அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனம் அறிவித்துள்ளது.

    இந்த சீசனில் மொத்தம் 10 எபிசோடுகள் உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு டீசரும் வெளியாகியுள்ளது.

    2008 ஆம் ஆண்டு கரன் அனுஷ்மான், குர்மீத் சிங் இயக்கத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியான பாலிவுட் வெப்சீரிஸ் 'மிர்சாபூர்' மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இதில், பங்கஜ் திரிபாதி, அலி ஃபசல், ஸ்வேதா திரிபாதி ஷர்மா, ரசிகா துகல், விஜய் வர்மா, இஷா தல்வார், அஞ்சும் ஷர்மா, ராஜேஷ் தைலாங், ஷீபா சதா, மேக்னா மாலிக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    2020 ஆம் ஆண்டு வெளியான இந்த தொடரின் 2-வது சீசனும் மக்களிடையே வரவேற்பை பெற்றது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நாடு முழுவதிலும் சிதறிக் கிடக்கும் தொழிலாளர்களுக்கு முறையான உரிமைகள் கிடைக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
    • அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் 30 டிகிரி செல்ஸியஸ் வரையிலான வெப்பத்தை வேலையிடத்தில் உணர முடிவதாக தெரிவிக்கின்றனர்.

    பன்னாட்டு ரீடெயில் வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியா நெடுகிலும் வலுவாக கட்டமைப்பை ஏற்படுத்தி தன்னை ஸ்திரத்தன்மையுடன் நிறுவிக்கொண்டுள்ளது. ஆன்லைன் ஆர்டர் டெலிவரியில் இந்தியாவில் தொடங்கப்பட்ட பிளிப்கார்ட் நிறுவனத்துக்கும் அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்ட அமேசான் நிறுவனத்துக்கும் இடையில் கடுமயான போட்டி நிலவி வருகிறது.

    இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பொருட்களுக்கான தேவை மனிதர்களிடம் அதிகரித்துள்ளதால் இந்த வகை நிறுவனங்களின் தேவையும் மக்களிடம் திணிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் கட்டமைப்பு வலுவடைத்திருந்தாலும் நாடு முழுவதிலும் சிதறிக் கிடக்கும் அதன் தொழிலாளர்களுக்கு முறையான உரிமைகள் கிடைக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    இந்தியாவில் தற்போது நிலவி வரும் அதீத வெப்பம் காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவரும் வரும் நிலையில் வெயிலின் தாக்கம் தொழிலாளர்களுக்கு பெருஞ்சுமையாக மாறி வருகிறது. இந்நிலையில் அமேசான் இந்தியா தொழிலாளர்களுக்கு வேலையிடத்தில் அடிப்படை வசதிகள் கூட ஏற்படுத்தப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

     

    அமேசான் இந்தியா தொழிலாளர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தர்மேந்திர குமார் கூறுகையில், வேலை செய்யும் இடத்தில் அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவது வெப்ப அலை வீசும் தற்போதைய காலச் சூழலில் தொழிலாளர்களுக்கு அதிக அசௌகரியங்களை ஏற்படுத்தி வருகிறது.

    ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களை இருப்பு வைத்து நகர்த்தும் அமேசான் கிடங்குகள் நாடு முழுவதும் பரவி உள்ள நிலையில் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் 30 டிகிரி செல்ஸியஸ் வரையிலான வெப்பத்தை வேலையிடத்தில் உணர முடிவதாக தெரிவிக்கின்றனர்.

     

    தொழிலாளர்கள் கழிவறையை பயன்படுத்துவதற்குக் கூட மறுக்கப்பட்டு இடைவேளை இல்லாமல் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர். இது தொடர்பாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். 

    • மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    • இந்த ஸ்மார்ட்போனிற்கு இதர சலுகைகளும் வழங்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் மிட்ரேஞ்ச் ஸ்மார்ட்போன் பிரிவில் R சீரிஸ் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாடல் ஒன்பிளஸ் 11R. இந்த ஸ்மார்ட்போன் தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அமேசான் இந்தியா வலைதளத்தில் ஒன்பிளஸ் 11R ஸ்மார்ட்போனிற்கு ரூ. 2 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 27 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. இதுதவிர இந்த ஸ்மார்ட்போனிற்கு இதர சலுகைகளும் வழங்கப்படுகிறது.

     


    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 11R ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 39 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது அமேசான் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனிற்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 27 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது.

    இத்துடன் வட்டியில்லா மாத தவணை முறை சலுகை, முதல் முறை அமேசான் பே ஐ.சி.ஐ.சி.ஐ. கார்டு பயன்படுத்துவோருக்கு அறிமுக சலுகை, கனரா வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 500 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    • ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் மூன்றுவித நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனின் பேஸ் மாடல் விலை ரூ. 11 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போனிற்கு அமேசான் வலைதளத்தில் ரூ. 1250 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    அதன்படி ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கிறது. ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 11 ஆயிரத்து 999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 12 ஆயிரத்து 499 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 14 ஆயிரத்து 499 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

     


    தற்போது அமேசான் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடலுக்கு ரூ. 1250 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 10 ஆயிரத்து 749 என மாறி இருக்கிறது.

    இத்துடன் தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 750 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதை சேர்க்கும் போது ஸ்மார்ட்போனின் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என மாறிவிடும். இந்திய சந்தையில் ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் சில்வர், புளூ மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. 

    • எக்சேன்ஜ் சலுகையின் மூலம் இதன் விலையை மேலும் குறைக்கலாம்.
    • எப்போது வரை வழங்கப்படும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

    அமேசான் வலைதளத்தில் ஐபோன் 13 ஸ்மார்ட்போனிற்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தள்ளுபடி எப்போது வரை வழங்கப்படும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. ஐபோன் 13 மாடலின் பேஸ் வேரியன்டில் 128 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 50 ஆயிரம் பட்ஜெட்டில் வாங்கிட முடியும்.

    முன்னதாக ஐபோன் 13 மாடலின் 128 ஜி.பி. மாடல் ரூ. 59 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 51 ஆயிரத்து 790 என மாறி இருக்கிறது. இதன் 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 61 ஆயிரத்து 990 என மாறி இருக்கிறது.

    விலை குறைப்பு மட்டுமின்றி ஒன்கார்டு கிரெடிட் கார்டு மாத தவணை முறை பரிவர்த்தனைகளுக்கு ரூ. 1750 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் எக்சேன்ஜ் சலுகையின் மூலம் இதன் விலையை மேலும் குறைக்க முடியும்.

    அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 13 மாடலில் 6.1 இன்ச் OLED சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, 2532x1170 பிக்சல் ரெசல்யூஷன், ட்ரூ டோன், செராமிக் ஷீல்டு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட், 128 ஜி.பி., 256 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. மெமரி, ஐ.ஒ.எஸ். 17 வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 12MP பிரைமரி கேமரா, OIS, ட்ரூ டோன் ஃபிளாஷ், 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 12MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, ஜிகாபிட் கிளாஸ் எல்.டி.இ., வைபை 6, ப்ளூடூத் 5, என்.எஃப்.சி. மற்றும் ஜி.பி.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமெரிக்காவில் 2022 இறுதியில் இருந்தே ஆட்குறைப்பு தொடங்கியது
    • 50 சதவீத ஊதிய குறைப்புக்கு முன்வந்தாலும் பணி கிடைப்பது கடினமாக உள்ளது

    கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அமெரிக்காவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

    2022 இறுதியில் தொடங்கி, டெஸ்லா, எக்ஸ், மெட்டா, கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் உட்பட பல நிறுவனங்கள் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்கின.

    உலகெங்கும் இருந்து அந்நிறுவனங்களில் பணியாற்ற சென்ற ஊழியர்களுக்கு வேறு வேலை கிடைக்காததால் விசா காலம் நிறைவடைந்து அமெரிக்காவில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.

    இந்தியாவிலிருந்தும் அவ்வாறு பணியாற்ற சென்று ஆட்குறைப்பு நடவடிக்கையில் பணியிழந்தவர்களில் பலர் மீண்டும் தாயகம் திரும்பினர்.

    ஆனால், அவர்களுக்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    2023ல் இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கி விட்டன.

    இங்கு பணியிழக்கும் ஊழியர்கள் ஊதியம் குறைந்தாலும், வேறு வேலை கிடைத்தால் போதும் எனும் முடிவில் கிடைக்கும் நிறுவனங்களில் உடனடியாக பணியில் சேர்கின்றனர்.

    அமெரிக்காவிலிருந்து வரும் இந்திய ஊழியர்கள் பெற்ற ஊதியத்துடன் ஒப்பிட்டால் இங்கு பணியில் இருப்பவர்களுக்கும், வேலையிழப்பினால் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு வருபவர்களுக்கும் நிறுவனங்கள் வழங்க வேண்டிய ஊதியம் மிகக் குறைவு.

    எனவே, அங்கிருந்து வருபவர்களுக்கு தகுதி இருந்தும் வேலை கிடைப்பது கடினமாக உள்ளது.

    அமெரிக்காவுடன் ஒப்பிட்டால் தகவல் தொழில்நுட்ப துறையில் காலியிடங்கள் மிக குறைவாக உள்ளதாகவும், ஒரே பணிக்கு 100க்கும் மேற்பட்ட திறமை வாய்ந்த ஊழியர்கள் விண்ணப்பிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் மனிதவள நிபுணர்கள் தெரிவித்தனர்.

    சுமார் 50 சதவீதம் வரை ஊதியத்தை குறைத்து கொள்ள அவர்கள் முன்வந்தாலும், மீண்டும் பணி கிடைப்பதே கடினமாகி வருகிறது.

    அங்கும் வேலை இழந்து, இங்கும் வேலை கிடைக்காமல், பல வருட சேமிப்புகளும் நாளுக்கு நாள் கரைந்து அவர்களின் நிலை நலிவடைந்து வருகிறது.

    2024-ஆம் வருடத்திலும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை நீடித்தால், மேலும் பல சாஃப்ட்வேர் துறை ஊழியர்கள் பணி இழக்கும் அபாயம் ஏற்படலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    • மின்சாதனங்களுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
    • உண்மை விலையை விட ரூ. 35 ஆயிரம் குறைவு.

    அமேசான் கிரேட் ரிபப்லிக் சேல் சிறப்பு விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டின் முதல் சலுகை விற்பனையில் பல்வேறு பொருட்களுக்கும் ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப் என மின்சாதனங்களுக்கும் அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    அதன்படி சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலை ரூ. 1 லட்சத்து 14 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும். இது அதன் உண்மை விலையை விட ரூ. 35 ஆயிரம் குறைவு ஆகும்.

     


    இந்த சலுகை ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு வழங்கப்படுகிறது. மேலும் இது, கேலக்ஸி S23 அல்ட்ரா பேஸ் வேரியண்டிற்கும் பொருந்தும். இதுதவிர கேலக்ஸி S23 அல்ட்ரா 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடலுக்கும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி இந்த வேரியண்ட் விலை ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இத்துடன் வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடல் ஃபேண்டம் பிளாக், கிரீன் மற்றும் கிரீம் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. 

    ×