என் மலர்
நீங்கள் தேடியது "எப்பிஐ"
- இண்டியானாவில் உள்ள மைக் பென்ஸ் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
- ஏற்கனவே அதிபர் ஜோ பைடன் இல்லத்தில் எப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீடுகள் மற்றும் தனிப்பட்ட அலுவலகத்தில் கடந்த மாதம் எப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆவணங்கள் ஜோ பைடன் துணை அதிபராக இருந்த காலகட்டத்தைச் சேர்ந்தவை ஆகும். இதுதொடர்பாக விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவின் இண்டியானாவில் உள்ள முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.
ஏற்கனவே, கடந்த 22-ம் தேதி டேலாவேரில் உள்ள அதிபர் ஜோ பைடனின் கடற்கரை இல்லத்தில் எப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
- 1983-ம் ஆண்டு மார்ச் மாதம் ராணி 2-ம் எலிசபெத் தனது கணவர் மன்னர் பிலிப்புடன் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார்.
- போலீஸ் அதிகாரி மற்றும் போலீசில் பேசிய நபரின் பெயர்கள் திருத்தப்பட்டு உள்ளன.
வாஷிங்டன்:
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந்தேதி தனது 96-வது வயதில் மரணம் அடைந்தார். இந்த நிலையில் 1983-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட அவரை கொல்ல முயற்சி நடந்ததாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
இது தொடர்பாக ஆவணங்கள், அமெரிக்க மத்திய புலனாய்வு பிரிவின் (எப்.பி.ஐ.) இணையதளத்தில் வெளியிட்டுள்ளன. இதில் ராணி எலிசபெத்தின் அமெரிக்க பயணம் தொடர்பாக சேமிக்கப்பட்ட கோப்புகள் வெளியிட்டு உள்ளது. 1983-ம் ஆண்டு மார்ச் மாதம் ராணி 2-ம் எலிசபெத் தனது கணவர் மன்னர் பிலிப்புடன் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார்.
அதற்கு முன்பாக சான்பிரான்சிஸ்கோ போலீஸ் அதிகாரிகளுக்கு வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய நபர், வடக்கு அயர்லாந்தில் தனது மகள் ரப்பர் புல்லட்டால் கொல்லப்பட்டதாகவும் அதற்காக ராணி எலிசபெத் படகில் செல்லும் போது கோல்டன் கேட் பாலத்தில் இருந்து ஒரு பொருளை வீசி ராணிக்கு தீங்கு விளைவிக்க முயற்சிப்பேன் அல்லது யோசெமிட்டி தேசிய பூங்காவுக்கு அவர் வரும் போது கொல்ல முயற்சிப்பேன் என்று தெரிவித்தார்.
இதையடுத்து ராணி எலிசபெத் படகு அருகில் வரும் போது பாலத்தின் நடைபாதைகளை மூடுவதற்கு உளவுத்துறையால் உத்தேசிக்கப்பட்டதாக அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
யோசெமிட்டி தேசிய பூங்காவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதா? அல்லது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்து சொல்லப்படவில்லை.
மேலும் போலீஸ் அதிகாரி மற்றும் போலீசில் பேசிய நபரின் பெயர்கள் திருத்தப்பட்டு உள்ளன. 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தகவல் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- காஷ் படேல் எப்.பி.ஐ. இயக்குநராக நியமனம் செய்யப்பட்டதை அமெரிக்க செனட் சபை உறுதிசெய்தது.
- இதுவரை டிரம்பின் அனைத்து அமைச்சரவை தேர்வுகளுக்கும் அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்தது.
வாஷிங்டன்:
கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். கடந்த மாதம் டிரம்ப் அதிபராக பொறுப்பேற்றார். அதற்கு முன் தனது புதிய அரசில் இடம்பெறவிருக்கும் அமைச்சர்கள் மற்றும் கேபினட் அந்தஸ்தை கொண்ட முக்கிய அதிகாரிகளை அவர் அறிவித்தார்.
இதற்கிடையே, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நியமனம் செய்திருந்தார். அவரது நியமனத்திற்கு ஜனநாயகக் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், எப்.பி.ஐ. இயக்குநராக காஷ் படேல் நியமனம் செய்யப்பட்டதை அமெரிக்க செனட் சபை உறுதிசெய்தது. அதன்படி 51-49 என்ற வாக்குகளின் அடிப்படையில் அவரின் நியமனம் அங்கீகரிக்கப்பட்டது. இதுவரை டிரம்பின் அனைத்து அமைச்சரவை தேர்வுகளுக்கும் அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 2016-ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீட்டை வெளிக்கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்த
காஷ் படேல், டிரம்பின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
- எப்.பி.ஐ. இயக்குநராக காஷ் படேல் நியமனம் செய்யப்பட்டதை அமெரிக்க செனட் சபை நேற்று உறுதிசெய்தது.
- பொறுப்புணர்வுள்ள மற்றும் நீதியை உறுதி செய்யும் ஒரு FBI ஐ பெற அமெரிக்க மக்கள் தகுதியானார்கள்.
கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். கடந்த மாதம் டிரம்ப் அதிபராக பொறுப்பேற்றார். அதற்கு முன் தனது புதிய அரசில் இடம்பெறவிருக்கும் அமைச்சர்கள் மற்றும் கேபினட் அந்தஸ்தை கொண்ட முக்கிய அதிகாரிகளை அவர் அறிவித்தார்.
இதற்கிடையே, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நியமனம் செய்திருந்தார். அவரது நியமனத்திற்கு ஜனநாயகக் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், எப்.பி.ஐ. இயக்குநராக காஷ் படேல் நியமனம் செய்யப்பட்டதை அமெரிக்க செனட் சபை நேற்று உறுதிசெய்தது. 51-49 என்ற வாக்குகளின் அடிப்படையில் அவரின் நியமனம் அங்கீகரிக்கப்பட்டது. இதுவரை டிரம்பின் அனைத்து அமைச்சரவை தேர்வுகளுக்கும் அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 2016-ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீட்டை வெளிக்கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்த காஷ் படேல், டிரம்பின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உதவியாளரும் வெள்ளை மாளிகையின் துணைத் தலைவருமான டான் ஸ்கேவினோ, காஷ் படேலை FBI இயக்குநராக உறுதி செய்த பிறகு வாழ்த்த பாலிவுட் மீம் வீடியோ ஒன்றைப் பயன்படுத்தினார்.
அந்த மீம்ஸில் ரன்வீர் சிங் நடித்த 'பாஜிராவ் மஸ்தானி' திரைப்படத்தின் ஒரு காட்சி இடம்பெற்றிருக்கிறது. தனது நியமனம் குறித்து பேசியிருந்த காஸ் படேல், "வெளிப்படையான, பொறுப்புணர்வுள்ள மற்றும் நீதியை உறுதி செய்யும் ஒரு FBI ஐ பெற அமெரிக்க மக்கள் தகுதியானார்கள்" என்று தெரிவித்திருந்தார்.
- காஷ் படேல் எப்.பி.ஐ. இயக்குநராக நியமனம் செய்யப்பட்டதை அமெரிக்க செனட் சபை உறுதிசெய்தது.
- அதன்படி 51-49 என்ற வாக்குகளின் அடிப்படையில் அவரின் நியமனம் அங்கீகரிக்கப்பட்டது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யின் புதிய இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நியமனம் செய்திருந்தார்.
காஷ் படேல் நியமனம் செய்யப்பட்டதை அமெரிக்க செனட் சபை நேற்று உறுதிசெய்தது. அதன்படி 51-49 என்ற வாக்குகளின் அடிப்படையில் அவரின் நியமனம் அங்கீகரிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்துக்களின் புனித நூலான பகவத்கீதை மீது சத்தியம் செய்தபடி காஷ் படேல் எப்.பி.ஐ. இயக்குனராக பதவியேற்றுக் கொண்டார்.
அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய காஷ் படேல், நான் அமெரிக்கக் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அமெரிக்க கனவு இறந்துவிட்டதாக நினைக்கும் எவரும், இங்கே பாருங்கள். உலகின் மிகப் பெரிய தேசத்தின் சட்ட அமலாக்க முகமைக்கு தலைமை தாங்கவிருக்கும் முதல் தலைமுறை இந்தியருடன் நீங்கள் பேசுகிறீர்கள். அது வேறெங்கும் நடக்காது. எப்.பி.ஐ-க்குள்ளும் அதற்கு வெளியேயும் பொறுப்பு இருக்கும் என உறுதியளிக்கிறேன் என தெரிவித்தார்.
