என் மலர்
நீங்கள் தேடியது "சமூக வலைதளம்"
- ஏப்ரல் 14-ம் நாள் ஆண்டுதோறும் சமத்துவ நாளாகக் கடைப் பிடிக்கப்படுகிறது.
- படைப்புகளை 30-ந்தேதிக்குள் அனுப்பி வைக்கலாம்.
சென்னை:
தமிழக சட்டசபையில் 13.4.2022 அன்று முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் "வடக்கே உதித்த சமத்துவச் சூரியன், பலர் வாழ்வில் கிழக்காய் இருந்த பகலவன்" நமது அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் நாளை, "சமத்துவ நாளாக" கொண்டாடுவது என்று 110 விதியின் கீழ் அறிவித்தார்.
அதனடிப்படையில், ஏப்ரல் 14-ம் நாள் ஆண்டுதோறும் சமத்துவ நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது.
அவரது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் ஊடக மையம் வாயிலாக "சமத்துவம் காண்போம்" என்ற தலைப்பில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்கு பெறும் வகையில் சமூக ஊடகங்களான எக்ஸ் தளம் (எக்ஸ்), படவரி (இன்ஸ்டாகிராம்), முகநூல் (பேஸ்புக்), புலனம் (வாட்ஸ்அப்), வலையொளி (யூடியூப்) வாயிலாக இன்று முதல் 30-ந்தேதி வரை பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
"சமத்துவம் காண்போம்" என்கிற முழக்கம் சமூகநீதி என்ற கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இப்போட்டிகளில் வெற்றி பெறும் வெற்றியாளர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்குப் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி சிறப்பிக்க உள்ளார்.
எனவே, பொது மக்கள் மற்றும் மாணவர்கள் அதிக அளவில் இப்போட்டிகளில் பங்கேற்கு மாறும், தங்களது படைப்புகளை அனுப்பிவைக்குமாறும் கேட்டுக் கொள்வதாக அரசு அறிவித்துள்ளது.
போட்டி 1 :- ஒரு கதை சொல்லட்டுமா?
சமூகநீதி அல்லது கல்வியின் முக்கியத்துவம் (அல்லது) உங்களுக்குப் பிடித்த இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எது? என்பது குறித்துக் கதைக ளைப் பதிவிட வேண்டும். வடிவங்கள் : ரீல்ஸ் (1 நிமிடம்) அல்லது ஒரு பக்கக் கதை.
போட்டி 2: ஓவியம் வரைதல் போட்டி, சமத்துவம் காண்போம், அளவு : 1 எம்பி
போட்டி 3: வினாடி - வினாப் போட்டி, அடிப்படை உரிமைகள் (அல்லது) இந்திய அரசியல் அமைப்பு - அடிப்படைகள்.
போட்டி 4: மீம்ஸ் போட்டி
போட்டியாளர்கள் பெண் கல்வி, சமத்துவம் அடிப்படையில் மீம்ஸ்களை உருவாக்கி அனுப்ப வேண்டும். அளவு : அளவு1 எம்பி
போட்டி 5: வலையொலி, "நான் அண்ணல் அம்பேத்கராக இருந்தால்" - நீங்கள் அண்ணல் அம்பேத்கராக மாறினால், தற்போதைய உலகில் எந்தெந்த மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள்? (அல்லது) அண்ணல் அம் பேத்கரின் கொள்கைகள் - இன்றைய காலத்திற்கேற்ற அதன் பங்கு. அளவு : 1 முதல் 3 நிமிடங்கள் வரை (2 எம்பி), படைப்பாளிகள் தங்களது படைப்பினை ஒலி வடிவில் (தமிழில்) பகிர்ந்து கொள்ள வேண்டும்.
போட்டி 6: உரிமைகளுக்கான ராப் பாடல் அனைவரும் சமம் என்ற தலைப்பில் பிரீ ஸ்டைல் ராப் செய்து ஒலி வடிவில் அனுப்ப வேண்டும். அளவு : 1 முதல் 3 நிமிடங்கள் வரை (2 எம்பி)
போட்டி 7: செல்பி மற்றும் ஹாஷ்டாக் போட்டி அண்ணல் அம்பேத்கர் சிலை அல்லது போஸ்டர்க ளுடன் செல்பி "இந்திய அரசியலமைப்பு" புத்தகத்து டன் செல்பி, அரசியல் அமைப்பின் முன்னுரையுடன் செல்பி என்ற ஹாஷ்டாக்குடன் பதிவு களை உங்கள் சமூக ஊடகக் கணக்குகளில் பதிவிட்டு, tndipr சமூக ஊடகக் கணக்கை குறிச்சொல் செய்ய வேண்டும். உங்கள் நண்பர்கள் மற்றும் பின் தொடர்பவர்களும் சமத்துவத்திற்கான உயர்வு என்ற ஹாஷ்டாக்குடன் இப்பதிவுகளைப் பகிர்ந்து கொள்ளலாம். (அளவு: 1 எம்பி)
போட்டி 8: சமூக ஊடகங்களின் மூலம் விழிப்புணர்வு பங்கேற்பா ளர்கள் தங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் இன்ஸ் டாகிராம் ஸ்டோரியில் அண்ணல் அம்பேத்கரின் மேற்கோள்கள் அல்லது அரசியலமைப்பின் முன்னுரையைப் பதிவிட வேண்டும். அதைத் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும் பத்தினரையும் பகிர்ந்து கொள்ளச் செய்யவேண்டும்.
அதிக எண்ணிக்கையிலான ஸ்டேட்டஸ் ஸ்கிரீன்சார்ட் பகிரப்பட்ட தன் அடிப்ப டையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேற்கண்ட இப்போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் tndiprmhsamathuvamkanbom @gmail.com என்ற மின்ஞ்சல் மற்றும் (கியூ ஆர் கோடு) வாயிலாகத் தங்கள் படைப்புகளை 30-ந்தேதிக்குள் அனுப்பி வைக்கலாம்.
இவ்வாறு அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கும் முழு நடவடிக்கைகள் கடந்த வாரம் நிறைவு பெற்றன.
- ட்விட்டர் தலைமையகத்திற்கு சென்ற எலான் மஸ்க் கையில் சின்க் ஒன்றை எடுத்து செல்லும் வீடியோ வைரலானது.
ட்விட்டர் நிறுவனம் வெரிபிகேஷனை பயன்படுத்த ஒவ்வொரு மாதமும் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர பணியை சரியான காலக்கெடுவுக்குள் செய்து முடிக்க தவரும் ஊழியர்களை எலான் மஸ்க் பணி நீக்கம் செய்ய முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த வாரம் ட்விட்டர் மற்றும் எலான் மஸ்க் இடையே நிறுவனத்தை விலைக்கு வாங்கும் பரிவர்த்தனை நிறைவு பெற்றது. ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 54.20 டாலர்கள் வீதம் மொத்தம் 44 பில்லியன் டாலர்கள் கொடுத்து எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி இருக்கிறார். ட்விட்டரை கைப்பற்றியதும் அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மற்றும் தலைமை நிதி அலுவலர் ஆகியோரை எலான் மஸ்க் பணி நீக்கம் செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது ட்விட்டர் புளூ சந்தாவுக்கு மாதம் 4.99 டாலர்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சேவையில் இருந்து அதிக வருவாய் ஈட்டும் வகையில், வெரிபிகேஷன் சேவையையும் இதில் கொண்டுவர ட்விட்டர் முடிவு செய்து இருப்பதாக தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. அதன் படி ட்விட்டர் புளூ சந்தாவுக்கான மாதந்திர கட்டணம் 19.99 டாலர்கள் என மாறும் என கூறப்படுகிறது.
வெரிபைடு பயனர்கள் 90 நாட்கள் வரை புளூ டிக் வைத்திருக்க முடியும். அதற்குள் சந்தா செலுத்தாத பட்சத்தில் புளூ டிக் நீக்கப்பட்டு விடும். இதற்கான வசதியை ட்விட்டரில் செயல்படுத்த நவம்பர் 7 ஆம் தேதி கடைசி நாள் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதை செய்ய தவறும் பட்சத்தில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் என தகவல் வெளியாகி உள்ளது.
- ட்விட்டர் தளத்தில் புளூ டிக் பெற விரும்புவோர் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
- ட்விட்டர் புளூ சேவைக்கான கட்டண விவரங்களை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார்.
ட்விட்டர் தளத்தில் ஏற்கனவே உள்ள ட்விட்டர் புளூ சந்தா முறைக்கு கட்டணம் செலுத்துவதால் கிடைக்கும் பலன்களை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார். அதன்படி ட்விட்டர் புளூ சந்தாவுக்கு கொடுக்கும் கட்டணத்தில் "புளூ டிக்" வெரிபிகேஷன் பேட்ஜ் வழங்கப்படுகிறது. வெரிபிகேஷன் வழங்க ஒவ்வொரு மாதமும் 20 டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. எனினும், தற்போது இந்த கட்டணம் 8 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 660 ஆகும்.
ட்விட்டர் புளூ சேவைக்கு சந்தா செலுத்தும் போது ட்விட்டர் பயனர்களுக்கு புளூ டிக் உள்பட நான்கு பலன்கள் கிடைக்கும். ட்விட்டரில் வருவாய் ஈட்டும் முறையில் விளம்பரதாரர்களை மட்டும் சார்ந்திருக்க முடியாது. ட்விட்டரில் ஏற்கனவே பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை மோசமானது, கட்டணம் ஒவ்வொரு நாடுக்கும் ஏற்ப மாற்றியமைக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார்.

புளூ டிக் மட்டுமின்றி ட்விட்டர் புளூ சந்தா வைத்திருப்பவர்களுக்கு கட்டணம் செலுத்தாதவர்களுக்கு வருவதில் பாதி விளம்பரஙகள் மட்டுமே வழங்கப்படும். மேலும் இவர்களால் நீண்ட வீடியோக்கள் மற்றும் ஆடியோவை பதிவேற்ற முடியும்.
ட்விட்டர் புளூ சந்தா பலன்கள்:
புளூ கட்டணம் மாதம் 8 டாலர்கள்
ரிப்ளை, மென்ஷன் மற்றும் சர்ச்களில் முக்கியத்துவம்
நீண்ட வீடியோ, ஆடியோ பதிவேற்றும் வசதி
பாதி விளம்பரங்கள்
பப்லிஷர்களுக்கு பேவால் பைபாஸ் வசதி
புளூ அக்கவுண்ட் ஸ்பேம்/ஸ்கேம் செய்தால் அக்கவுண்ட் உடனடியாக நீக்கப்படும்
- எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்து ஏராளமான மாற்றங்கள் மற்றும் புது விதிகளை அறிவித்து வருகிறார்.
- ட்விட்டரில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புது அம்சங்கள் பற்றிய அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றி இருக்கும் எலான் மஸ்க், அதில் பணியாற்றி வந்த ஏராளமான ஊழியர்களை பணிநீக்கம் செய்து இருக்கிறார். உலகம் முழுக்க ட்விட்டரில் பணியாற்றி வரும் ஊழியர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருந்தது. அந்த வகையில், இந்தியாவில் உள்ள ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுமார் 50 சதவீத ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ட்விட்டர் இந்தியாவில் பணியாற்றி வந்த ஒட்டுமொத்த விளம்பர குழுவும் நீக்கப்பட்டு இருக்கிறது. இதே போன்று பொறியியல், பிராடக்ட் மற்றும் தகவல் தொடர்பு துறைகளில் பணியாற்றி வந்த ஏராளமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். உலகளவில் நிறுவனம் மாற்றியமைக்கப்பட்டு வருவதால், ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள் என்றும், இதன் காரணமாக திங்கள் கிழமை முதல் பணிக்கு வர வேண்டாம் என்றும் ட்விட்டர் தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்து இருக்கிறது.

மேலும் ஊழியர்களின் பணி நீக்க நடவடிக்கைகள் முழுமை பெறும் வரையில் அடுத்த வாரம் வியாழன் கிழமை வரை உலகளவில் செயல்பட்டு வரும் ட்விட்டர் அலுவலகங்களை மூடவும், ஊழியர்கள் அலுவலகத்திற்குள் நுழையவும் எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார்.
ட்விட்டர் இந்தியா நிறுவனத்தில் சுமார் 300 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். இவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எனினும், எத்தனை பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர் என்ற விவரங்களை ட்விட்டர் இதுவரை வெளியிடவில்லை.
- எல்.ஆா்.ஜி. மகளிா் கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு இணைய வழி குற்றங்களைத் தடுப்பது தொடா்பான சிறப்பு முகாம் நடைபெற்றது
- இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் எழிலி வரவேற்றாா்
திருப்பூர் :
திருப்பூா் எல்.ஆா்.ஜி. மகளிா் கல்லூரியில்திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, திருப்பூா் தெற்கு காவல் துறை சாா்பில் சட்ட விழிப்புணா்வு, இணைய வழி குற்றங்களைத் தடுப்பது தொடா்பான சிறப்பு முகாம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் (பொறுப்பு)
எழிலி வரவேற்றாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆதியன் பேசியதாவது:-
மாணவிகள் அடிப்படை சட்டங்கள் மற்றும் பெண்களுக்கான சட்டங்கள் குறித்து தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். மாணவிகளுக்கு விருப்பம் இல்லாத ஒரு செயலை செய்ய மற்றவா்கள் கட்டாயப்படுத்துவதுகூட குற்றம் என்று பகடிவதை சட்டம் சொல்கிறது. மாணவ, மாணவிகள் செல்போன்களையும், இணையதளங்களையும் படிப்பதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். சமூக வலைதளங்களில் உள்ள ஆபத்துகளை உணராமல் அதற்கு அடிமையாகிவிடக்கூடாது என்றாா்.
- ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றியதில் இருந்து ஏராளமான மாற்றங்கள் தளத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.
- முன்னதாக உலக நாடுகளில் ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஏராளமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
எலான் மஸ்க்-இன் சமூக வலைதளமான ட்விட்டர், சில வெரிபைடு அக்கவுண்ட்களுக்கு "Official" லேபல் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் முன்னணி செய்தி நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் அடங்கும். இந்த வழிமுறை புதிய 8 டாலர்கள் சந்தா முறை அமலுக்கு வரும் போது பயன்பாட்டுக்கு வரும். ட்விட்டரில் எட்டு டாலர்கள் சந்தா முறையை செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
ட்விட்டர் நிறுவனத்தின் பிராடக்ட் பிரிவு அதிகாரி எஸ்தர் கிராஃபோர்டு ட்விட்டர் புளூ சந்தா முறையில் ஏராளமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதை உறுதிப்படுத்தி இருக்கிறார். அதன்படி புதிய ட்விட்டர் புளூ சந்தா முறை பயனர்களுக்கு வெரிபைடு புளூ டிக் வழங்கும். இவ்வாறு வழங்கும் போது எந்த விதமான சோதனையும் மேற்கொள்ளப்படாது. இந்த வழிமுறைக்கு பலரும் எதிர்ப்பு மற்றும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக வெரிபை செய்யப்பட்டு புளூ டிக் பெற்று இருக்கும் அக்கவுண்ட்களுக்கு புதிய "Official" லேபெல் வழங்கப்படாது. எனினும், இதனை பணம் கொடுத்து வாங்கிட முடியாது. இந்த லேபெல் முதன்மையாக அரசாங்கங்கள், வர்த்தக நிறுவனங்கள், வியாபாரங்கள், முன்னணி செய்தி நிறுவனங்கள் மற்றும் சில பொது நபர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக வழங்கப்பட இருக்கிறது.
- இன்ஸ்டாகிராம் செயலியில் பதிவுகளை முன்கூட்டிய ஷெட்யுல் செய்யும் வசதி வழங்கப்பட்டு வருகிறது.
- எனினும், இந்த வசதி அனைவரும் பயன்படுத்தும் பொதுவான அக்கவுண்ட்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை.
இன்ஸ்டாகிராம் சேவையில் பதிவுகளை ஷெட்யுல் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. நீண்ட காலமாக வழங்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது இந்த வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதுவரை பயனர்கள் விரும்பும் நேரத்தில் அவர்களாகவே பதிவுகளை வெளியிடும் வசதி மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக பலர் மூன்றாம் தரப்பு மென்பொருள்களை பயன்படுத்தி பதிவுகளை ஷெட்யுல் செய்து வந்தனர்.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் செயலியில் உள்ள புரோபஷனல் அக்கவுண்ட்ஸ்-களுக்கு மட்டும் பதிவுகளை ஷெட்யுல் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புது அம்சம் வழங்கப்பட்டு இருப்பதை இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் தெரிவித்து இருக்கிறார். நீண்ட காலத்திற்கு முன்பே வெளியாகி இருக்க வேண்டிய அம்சம் ஒருவழியாக வழங்கப்பட்டு இருக்கிறது.

மெட்டா, ட்விட்டர், டிக்டாக் மற்றும் யூடியூப் என பல்வேறு சமூக வலைதளங்களில் பதிவுகளை குறிப்பிட்ட நேரத்தில் தானாக பதிவு செய்ய வைக்கும் ஷெட்யுல் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் பதிவுகளை ஷெட்யுல் செய்வதோடு, மெட்டா கிரியேட்டர் ஸ்டூடியோ மூலமாகவும் ஷெட்யுல் செய்ய முடியும்.
ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று போஸ்ட் ஷெட்யுல் அம்சம் ப்ரோபஷனல் பயனர்கள், அதாவது கிரியேட்டர் மற்றும் பிஸ்னஸ் அக்கவுண்ட்களை பயன்படுத்துவோருக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. புது அம்சம் கொண்டு பயனர்கள், போட்டோ, ரீல்ஸ் மற்றும் கரௌசல் போஸ்ட்களை அதிகபட்சம் 75 நாட்களுக்கு முன்பே ஷெட்யுல் செய்யலாம்.
பதிவுகளை ஷெட்யுல் செய்ய, வழக்கம் போல் பதிவுகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின் போஸ்ட் செய்யும் முன் "அட்வான்ஸ்டு செட்டிங்ஸ்" ஆப்ஷனில் "ஷெட்யுல் திஸ் போஸ்ட்" ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இனி எந்த தேதி மற்றும் நேரத்தில் குறிப்பிட்ட போஸ்ட் வெளியாக வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
- ட்விட்டர் சமூக வலைதளத்தில் கடந்த சில நாட்களாக பெருமளவு மாற்றங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- மேலும் ட்விட்டர் நிறுவன ஊழியர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
ட்விட்டர் பயன்படுத்துவோருக்கு புளூ சந்தாவின் கீழ் புளூ செக்மார்க் வழங்கும் முறை ஐஒஎஸ் பயனர்களுக்கு மட்டும் அமலுக்கு வந்தது. புளூ செக்மார்க் மட்டுமின்றி புதிய ட்விட்டர் புளூ சந்தாவில் புது அம்சங்களை முன்கூட்டியே பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது. தற்போது புதிய புளூ சந்தா முறை அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் லண்டன் போன்ற நாடுகளில் வழங்கப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக ட்விட்டர் புளூ சந்தாவுக்கான விலை மாதம் 7.99 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இது அறிமுக சலுகை என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஐஒஎஸ்-இல் ஏற்கனவே ட்விட்டர் புளூ சந்தா வைத்திருப்பவர்கள் புதிய விலைக்கு அப்டேட் செய்து கொண்டால் புளூ செக்மார்க் வழங்கப்படும்.

ஆண்ட்ராய்டு மற்றும் வெப் பயனர்களின் புளூ சந்தாவை அவர்களாகவே ரத்து செய்து கொள்ளலாம். மாறாக ட்விட்டர் தரப்பில் பயனர்களுக்கு தகவல் கொடுத்த பின் சேவை ரத்து செய்யப்படும். புது மாற்றங்களின் பழைய ட்விட்டர் விதிகளின் கீழ் வெரிபைடு புளூ செக்மார்க் பெற்றவர்கள் மற்றும் புதிய புளூ சந்தாவின் கீழ் புளூ செக்மார்க் பெற்றவர்கள் என இரண்டு புளூ செக்மார்க்குகள் உள்ளன.
ட்விட்டர் புளூ சந்தாவின் கீழ் புளூ செக்மார்க் பெற்ற அக்கவுண்ட்களில், புதிய ட்விட்டர் விதிகள் பின்பற்றப்பட்டதா என்பது போன்று எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
- எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்து அந்நிறுவனத்தில் ஏராளமான மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன.
- முன்னதாக ட்விட்டர் புளூ சந்தாவுடன் எவ்வித வெரிபிகேஷன் இன்றி புளூ டிக் வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுமார் 3 ஆயிரத்து 500 ஊழியர்களை எலான் மஸ்க் கடந்த வாரம் பணி நீக்கம் செய்வதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து வார இறுதியில் மேலும் பல ஆயிரம் ஊழியர்களை ட்விட்டரில் இருந்து பணி நீக்கம் செய்வதாக எலான் மஸ்க் அறிவித்தார். பணி நீக்கம் பற்றிய முழு விவரங்களை ட்விட்டர் இதுவரை வெளியிடவில்லை.
இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஒப்பந்த ஊழியர்களில் பலரை பணிநீக்கம் செய்து இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இரண்டாம் கட்ட பணிநீக்க நடவடிக்கையில் 4 ஆயிரத்து 400-இல் இருந்து அதிகபட்சம் 5 ஆயிரத்து 500 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என கூறப்படுகிறது.
இம்முறை பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு எந்த விதமான தகவலோ அல்லது அறிவிப்போ முன்கூட்டியே வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. ஒப்பந்த ஊழியர்களில் பலர் திடீர் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என தகவல் வெளியாகி உள்ளது. பணிநீக்கம் செய்வதற்கு முன் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த அலுவல்பூர்வ மின்னஞ்சல் மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் நிறுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
ட்விட்டரில் ஊழியர்களை பணியமர்த்த ஒப்பந்தம் எடுத்திருந்த நிறுவனத்திற்கும் பணிநீக்கம் தொடர்பான மின்னஞ்சல் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி கடைசி நேரத்தில் அனுப்பப்பட்டதாக கூறுப்படுகிறது. இதோடு பணிநீக்கம் ட்விட்டர் நிறுவனத்தின் "சேமிப்பு மற்றும் மறுமதிப்பீடு" நடவடிக்கையின் அங்கமாக நடத்தப்பட்டதாக மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. பணிநீக்கம் செய்யப்பட்டவர்களின் கடைசி பணி நாள் நவம்பர் 14 என குறிப்பிடப்பட்டுள்ளது.
- எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல்லாயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
- மேலும் ட்விட்டர் தளத்தில் ஏராளமான மாற்றங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைவர் எலான் மஸ்க் தனது ஊழியர்கள் தன்னை கேள்வி எழுப்புவதை விரும்பவில்லை என்பது வெளிப்படையாக அம்பலமாகி இருக்கிறது. ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து ஏராளமானோர் சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டனர். எனினும், பொறியாளராக பணியாற்றி எரிக் ஃபிரான்ஹோஃபர்-ஐ மட்டும் எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தில் வைத்து பணிநீக்கம் செய்து இருக்கிறார்.
பொது வெளியில் எலான் மஸ்க்-இடம் வாக்குவாதம் செய்த காரணத்தால் எரிக் பணிநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். ட்விட்டரில் வாக்குவாதம் செய்த எரிக் பணிநீக்கம் செய்யப்பட்டதாக, எலான் மஸ்க் ட்விட்டரிலேயே தெரிவித்து இருந்தார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆனது. பொறியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக எலான் மஸ்க் பதிவிட்ட ட்விட்-ஐ அவர் அழித்து விட்டார்.

"பெரும்பாலான நாடுகளில் ட்விட்டர் மிக மோசமாக செயல்படுவதற்கு மன்னிக்கவும். செயலி மிக மோசமாக பேட்ச் செய்யப்பட்ட 1000-க்கும் மேற்பட்ட RPC-க்களால் ஹோம் டைம்லைனை ரெண்டர் செய்ய இயலவில்லை" என எலான் மஸ்க் ட்விட் செய்து இருந்தார். இதற்கு பதில் அளித்த எரிக், "நான் ஆறு ஆண்டுகளாக ட்விட்டர் ஆண்ட்ராய்டு செயலியில் பணியாற்றி வருகிறேன், இது பொய் என்பதை என்னால் கூற முடியும்." என பதில் அளித்து இருந்தார்.
இதைத் தொடர்ந்து எலான் மஸ்க் மற்றும் எரிக் இடையே ட்விட்டரில் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இடையே பொது மக்களும் எலான் மஸ்க் உடன் இணைந்து எரிக் பொது வெளியில் வாக்குவாதம் செய்வது தவறு என கருத்து தெரிவித்தனர். இது தொடர்பான வாக்குவாதத்தில் எலான் மஸ்க் அளித்த பதில் ஒன்றில் எரிக் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

தான் பணிநீக்கம் செய்யப்பட்டதை எலான் மஸ்க் பதிவிட்ட ட்விட் மூலம் அறிந்து கொண்ட எரிக், அதற்கு சல்யுட் அடிக்கும் எமோஜியை பதிலாக பதிவிட்டார். 41 வயதான எரிக் கடந்த எட்டு ஆண்டுகளாக ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பின் இது பற்றி ஃபோர்ப்ஸ்-க்கு எரிக் பேட்டி அளித்து இருக்கிறார். அதில், "எனது லேப்டாப் ஷட் ஆஃப் ஆகி விட்டது தற்போது, அதனை என்னால் இயக்க முடியவில்லை." என்று தெரிவித்து இருக்கிறார்.
"நிறுவனத்திற்குள் யாரும் யாரையும் நம்புவதில்லை. எப்படி உங்களால் செயலாற்ற முடியும்? ஊழியர்கள் புதிய நிர்வாகத்தை நம்பவில்லை. நிர்வாகமும் ஊழியர்களை நம்பவில்லை. இந்த சூழலில் எப்படி வேலை பார்க்க முடியும்? இதன் காரணமாக தான் ப்ரோடக்ஷன் தடைபடுகிறது, துணை தலைவர்களின் அனுமதி இன்றி பணியை மேற்கொள்ள முடியாது," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
- ட்விட்டர் சமூக வலைதளத்தில் கடந்த சில வாரங்களாக ஏராளமான மாற்றங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
- எலான் மஸ்க் ட்விட்டர் தலைமை பொறுப்பை ஏற்றதில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியதில் இருந்து அந்நிறுவனம் பற்றிய தகவல்கள் வைரலாகி வருகின்றன. நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர்களில் பல்லாயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இதுதவிர ட்விட்டர் புளூ சந்தா, புளூ டிக் விவகாரம் என ஏராளமான புது மாற்றங்கள் ட்விட்டரில் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நிலையில், ட்விட்டர் டைரக்ட் மெசேஜஸ் அம்சத்தில் புதிதாக பாதுகாப்பு அம்சம் சேர்க்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ட்விட்டர் டைரக்ட் மெசேஜஸ்-இல் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வசதி விரைவில் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றிய தகவல் வெளியானதில் இருந்தே, புதிய பாதுகாப்பு அம்சம் ட்விட்டர் தளத்தை வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமை விட பாதுகாப்பானதாக மாற்றுமா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

ட்விட்டர் மெசேஜஸ்-இல் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வசதியை செயல்படுத்தும் விவரங்களை ஆப் ஆய்வாளர் ஜான் மன்குன் வொங் கண்டறிந்துள்ளார். மேலும் இந்த தகவல்களை அவர் தனது ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார். அதில், "ட்விட்டர் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் வழங்குவதற்காக புது அம்சம் உருவாக்கப்படும் அறிகுறிகளை பார்க்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.
இவரது ட்விட்டர் பதிவுடன், குறியீட்டு விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவை என்க்ரிப்ஷன் வசதி வழங்கப்படுவதை உணர்த்துகிறது. இதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், இவரது பதிவுக்கு எலான் மஸ்க் கண் சிமிட்டும் எமோஜியை பதிலாக அளித்து இருக்கிறார். இவரது பதிலில் இருந்தே ட்விட்டர் மெசேஜஸ்-இல் என்க்ரிப்ஷன் வசதி வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.
எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வசதியை வழங்குவதன் மூலம் ட்விட்டர் டைரக்ட் மெசேஜஸ் அம்சம் சிக்னல் மற்றும் வாட்ஸ்அப்-க்கு இணையாக பார்க்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த அம்சம் சரியான தருணத்தில் கொண்டுவரப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வசதி பயனர் அனுப்பும் குறுந்தகவல்களை யாரும் பார்க்க முடியாத வகையில் பாதுகாப்பானதாக மாற்றும்.
- உலகளவில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வரும் முன்னணி குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்அப் விளங்குகிறது.
- தற்போது வாட்ஸ்அப் பயனர் விவரங்கள் விற்பனைக்கு வந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
வாட்ஸ்அப் உலகின் பிரபல குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக உள்ளது. தினந்தோரும் கோடிக்கணக்கானோர் தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ்அப் முக்கிய பாலமாக திகழ்கிறது. இத்தனை பிரபலமாக இருக்கும் வாட்ஸ்அப் செயலி அதே அளவுக்கு பாதுகாப்பு குறைபாடு தொடர்பான சர்ச்சைகளுக்கும் ஆளாகி இருக்கிறது.
இந்த வகையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டு சுமார் 500 மில்லியன் பயனர் விவரங்கள் திருடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் ஒருவர் சுமார் 487 மில்லியனுக்கும் அதிகமான வாட்ஸ்அப் பயனர் விவரங்களை ஹேக்கிங் கம்யுனிட்டியில் விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் வெளியிட்டு இருக்கிறார் என சைபர்நியூஸ் தெரிவித்து இருக்கிறது.

இதில் உலகம் முழுக்க 84 நாடுகளை சேரந்த பயனர் விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது. இதில் 32 மில்லியன் பயனர்கள் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இதுதவிர எகிப்து, இத்தாலி, சவுதி அரேபியா, பிரான்ஸ் மற்றும் துருக்கியை சேர்ந்த வாட்ஸ்அப் பயனர் விவரங்களும் விற்பனைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் வாட்ஸ்அப் பயனர் விவரங்கள் 7 ஆயிரம் டாலர்கள் எனும் விலைக்கு விற்பனைக்கு பட்டியலிடப்பட்டு இருக்கிறது. லண்டன் டேட்டாபேஸ் விவரங்களின் விலை 2 ஆயிரத்து 500 டாலர்களும், ஜெர்மனி விவரங்களின் விலை 2 ஆயிரம் டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் லீக் ஆகி இருக்கும் மொபைல் போன் நம்பர்களை கொண்டு ஏராளமான மோசடிகளை செய்ய முடியும் என்ற வாய்ப்பும் அதிகரித்து இருக்கிறது.