என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைகோ"

    • மதிமுக தொழிற்சங்க பொதுக்குழு கூட்டத்தில் வைகோ தெரிவித்துள்ளார்.
    • 2026 சட்டமன்ற தேர்தலில் அதிக சீட்டுகளை பெற திட்டமிட்டுள்ளேன்.

    ராஜ்யசபா பட்டியலில் என் பெயர் வராமல் கூட போகலாம் என்று மதிமுக தொழிற்சங்க பொதுக்குழு கூட்டத்தில் வைகோ தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " ராஜ்யசபா பட்டியலில் என் பெயர் இல்லாவிட்டால் அதற்காக யாரும் திமுகவை திட்டி சமூக வலைதளங்களில் எழுதக் கூடாது.

    ராஜ்யசபா சீட்டை விட்டுக்கொடுத்து, வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிக சீட்டுகளை பெற திட்டமிட்டுள்ளேன்.

    அதன்படி, 2026 தேர்தலில் குறைந்சபட்சம் 10 எம்எல்ஏக்களை மதிமுகவில் இருந்து சட்டமன்றத்துக்கு அனுப்ப இலக்கு வைத்துள்ளேன்" என்றார்.

    • தமிழ்நாட்டு அரசியல் களத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. வலிவுடன் தழைத்தோங்கி நிற்க பணியாற்றுவோம்.
    • முதன்மைச் செயலாளர் சகோதரர் துரை வைகோ அவர்களுக்கும் உறுதுணையாக இருப்பேன்.

    ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சமூக ஊடகங்களில் வந்த பதிவுகளால் கழகத்தில் கசப்புணர்வு ஏற்படுகின்ற நிலையும், அதனால் மறுமலர்ச்சி தி.மு.கவின் கட்டுப்பாட்டுக்கு ஊறு நேருகின்ற நிலையும் ஏற்பட்டதற்கு இன்று கழக நிர்வாகக் குழுவில் எனது மனப்பூர்வமான வருத்தத்தை என் உயிர் தலைவர் வைகோ அவர்களிடமும், நிர்வாகக் குழு உறுப்பினர்களிடமும் தெரிவித்துக் கொண்டேன். இது போன்ற சூழல் இனி எதிர்காலத்தில் நிகழாது.

    திராவிட ரத்னா தலைவர் வைகோ அவர்களுக்கும், கழகத்தின் எதிர்காலம் முதன்மைச் செயலாளர் சகோதரர் துரை வைகோ அவர்களுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்று நான் உறுதி அளித்தேன்.

    இதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு சகோதரர் துரை வைகோ அவர்கள் முதன்மைச் செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயல்படுவேன் என்று நிர்வாகக் குழுவில் அறிவித்தது எனக்கும், கழகத் தோழர்களுக்கும் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    நானும், முதன்மைச் செயலாளர் சகோதரர் துரை வைகோ அவர்களும் இணைந்த கரங்களாக தலைவர் வைகோ அவர்களுக்கும், கழகத்திற்கும் துணையாக செயல்படுவோம். கழகத்தைக் கட்டிக் காப்போம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    தமிழ்நாட்டு அரசியல் களத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. வலிவுடன் தழைத்தோங்கி நிற்க பணியாற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஒற்றுமையாக இருந்து இயக்கத்தை வலுப்படுத்துவோம் என இருவரும் தெரிவித்துள்ளனர்.
    • இருவரும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி இணைந்து பணியாற்றுவோம் என உறுதி அளித்தனர்.

    மதிமுக நிர்வாக குழு மேடையில் துரை வைகோவையும், மல்லை சத்யாவையும் வைகோ சமாதானம் செய்து வைத்தார். பின்னர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களைச சந்தித்து பேசினார்.

    அப்போது" நீரடித்து நீர் விலகாது" என்று மல்லை சத்யா, துரை வைகோ கருத்து வேறுபாடு குறித்து வைகோ விளக்கம் அளித்தார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    துரை வைகோ- மல்லை சத்யா இடையேயான கருத்து வேறுபாடு குறித்து பல்வேறு கருத்துகள் நிலவின. துரை வைகோவும், மல்லை சத்யாவும் மனம் விட்டு பேசினார்கள். பிரச்சனையை நாகரிகமாக கையாண்டார்கள்.

    இனி இதுபோன்ற சூழலுக்கு இடம் கொடுக்க போவதில்லை என மல்லை சத்யா உறுதிமொழி அளித்துள்ளார்.

    முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கு பக்கபலமாக இருப்பேன் என மல்லை சத்யா உறுதி அளித்துள்ளார்.

    ஒற்றுமையாக இருந்து இயக்கத்தை வலுப்படுத்துவோம் என இருவரும் தெரிவித்துள்ளனர்.

    இருவரும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி இணைந்து பணியாற்றுவோம் என உறுதி அளித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும், மதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூன் மாதம் நடைபெறும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

    • வக்பு திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
    • ம.தி.மு.க. சார்பில் வருகிற 26-ந்தேதி சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் மண்டல வாரியாக ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    சென்னை:

    ம.தி.மு.க. நிர்வாக குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரிய உயரத்தை தமிழ்நாடு அடைந்திருக்கிறது.

    தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு ஆளுமைத் திறனோடு வழி நடத்தும் திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதுடன் 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று நல்லாட்சி தொடர வேண்டுமென்று ம.தி.மு.க. நிர்வாகக்குழு விரும்புகிறது.

    50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சட்டப் பேரவையில் மாநில சுயாட்சித் தத்துவத்திற்கு செயல் வடிவம் கொடுப்பதற்கு உயர்நிலைக் குழுவை அமைத்திருக்கிற தமிழ்நாடு அரசுக்கு ம.தி.மு.க. நிர்வாகக் குழு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

    இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுவதையும், கவர்னர் பொறுப்பை அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்தி வருவதையும் சுப்ரீம் கோர்ட்டு தெளிவாக உணர்ந்து கொண்டு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

    கவர்னர் பதவியில் நீடிக்கும் தார்மீக தகுதியை ஆர்.என்.ரவி இழந்து விட்டார். எனவே அவரை ஜனாதிபதி தமிழ்நாடு கவர்னர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று ம.தி.மு.க. நிர்வாகக் குழு கேட்டுக்கொள்கிறது. வக்பு திருத்தச் சட்டம் நாட்டின் பன்முகத் தன்மைக்கும் அரசியல் சட்டத்தின் தனி மனித உரிமைக்கும் சவால் விடுகிறது. இச்சட்டத்தை எதிர்த்து ஜனநாயக வழியில் போராடி முறியடிக்க வேண்டும். வக்பு திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

    தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் குறித்து இந்தியப் பிரதமர் இலங்கை அதிபரிடம் கண்டனத்தை பதிவு செய்யாததை இக்கூட்டம் கண்டிக்கிறது.

    மேற்கண்டவை உள்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ம.தி.மு.க. சார்பில் வருகிற 26-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் மண்டல வாரியாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • துரை வைகோ மற்றும் மல்லை சத்யாவுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலால் ஆங்காங்கே மல்லை சத்யாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் நடப்பது பற்றி பேசப்பட்டது.
    • ம.தி.மு.க. முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகியது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    சென்னை:

    ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே உருவான மோதலில் துரை வைகோ திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இன்றைய நிர்வாக குழு கூட்டத்தில் மட்டுமே பங்கேற்பதாகவும், வருங்காலத்தில் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் பங்கெடுக்கப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.

    அவரது இந்த முடிவு கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    ம.தி.மு.க.வில் இருந்து மூத்த நிர்வாகிகள் பலர் விலகிய போதும் கடந்த 32 ஆண்டுகளாக வைகோவுடன் இருப்பவர் மல்லை சத்யா. வைகோவின் நிழலாக இருப்பவர், மூத்த நிர்வாகி என்பதால் கட்சியில் அவருக்கென்று தனி செல்வாக்கும் இருக்கிறது.

    ஆனால் துரை வைகோவின் வருகைக்கு பிறகு நிலைமை மாறியது. துரை வைகோவுக்கும் ஆதரவாக சிலர் மாறினார்கள். அதே நேரம் மல்லை சத்யா கட்சிக்குள் பெயர் வாங்குவது பிடிக்கவில்லை.

    இதை அடுத்து அவரை மட்டம் தட்டும் வேலைகள் ரகசியமாக தொடங்கியது. சென்னையில் நடைபெறும் எந்த நிகழ்ச்சிக்கும் மல்லை சத்யாவை அழைக்க கூடாது. அவரது போட்டோவையும் பேனர்களில் போடக் கூடாது என்று உத்தரவிட்டனர்.

    இப்படி கொஞ்சம் கொஞ்சமாக உருவெடுத்த இந்த ஆவேச 'பொறி'க்கு துரை வைகோவின் ஆதரவு வட்டாரங்கள் நெய் ஊற்றி எரிய வைத்தன. அதன் தொடர்ச்சியாக மாவட்டங்களில் மல்லை சத்யாவுக்கு எதிராக தீர்மானங்கள் போட தொடங்கினார்கள்.

    இந்த சூழ்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தாயகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மல்லை சத்யா கட்சிக்கு களங்கம் விளைவிப்பதாக துரை வைகோ நேரடியாகவே குற்றம் சாட்டினார். அவ்வாறு மோதிக் கொண்டது வைகோவுக்கும் பிடிக்கவில்லை. இதை அடுத்து கூட்டத்தில் இருந்து துரை வைகோ வெளியேறினார்.

    இந்த விவகாரம் தொடர்பாக விவாதித்து பிரச்சனைக்கு தீர்வு காணத்தான் இன்று நிர்வாக குழு கூட்டத்தை வைகோ கூட்டினார்.

    ம.தி.மு.க. நிர்வாக குழு கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் இன்று நடந்தது. வைகோ தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் துரை வைகோ, அவைத் தலைவர் அர்ஜூன் ராஜ், துரை வைகோ, துணை பொதுச் செயலா ளர்கள் மல்லை சத்யா, ஏ.கே.மணி, முருகன், உதயா, ராஜேந்திரன் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் துரை வைகோ மற்றும் மல்லை சத்யாவுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலால் ஆங்காங்கே மல்லை சத்யாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் நடப்பது பற்றி பேசப்பட்டது.

    ம.தி.மு.க. முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகியது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    துரை வைகோவின் விலகல் குறித்து நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரிடமும் கருத்து கேட்கப்பட்டது. கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெற்றது.

    கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் துரை வைகோவின் விலகல் கடிதத்தை ஏற்கக்கூடாது. முதன்மை செயலாளர் பொறுப்பில் துரை வைகோ தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    மேலும் தேர்தல் பணிகள், கட்சி வளர்ச்சி பணிகள், மாநாடுகள், போராட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டன.

    • துரை வைகோவின் ஆதரவாளர்கள், கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது.
    • திடீரென கட்சியின் முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ நேற்று அறிவித்தார்.

    சென்னை:

    மறுமலர்ச்சி தி.மு.க.வை கடந்த 1994-ம் ஆண்டு வைகோ தொடங்கினார்.

    கட்சியின் பொதுச்செயலாளரான வைகோவின் மகன் துரை வைகோ, தொடக்க காலங்களில் அரசியலில் ஈடுபடாமல் பொது சேவைகளில் மட்டுமே ஈடுபட்டு வந்தார்.

    கட்சியினரின் விருப்பம் காரணமாக கட்சிக்குள் வந்த துரை வைகோ, சாதாரண தொண்டராகவே இருந்தார். பின்னர் தலைமை நிலையச் செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு நடந்த ம.தி.மு.க.வின் 29-வது பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் முதன்மை செயலாளராக துரை வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இதற்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிருப்தி அடைந்த அவர்கள் கட்சியில் இருந்து வெளியேறினார்கள்.

    இதற்கிடையே, துரை வைகோவின் ஆதரவாளர்கள், கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது.

    சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றினார்கள். இதேபோல, பல்வேறு மாவட்டங்களிலும் மல்லை சத்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற திட்டமிட்டனர்.

    இதையடுத்து இந்த விவகாரத்தில் தலையிட்ட கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, இதுபோன்ற தீர்மானம் ஏதும் நிறைவேற்றக்கூடாது என்றும், இதுகுறித்து கலந்து ஆலோசித்து முடிவெடுக்க ஏப்ரல் 20-ந் தேதி (அதாவது இன்று) கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறும் எனவும் அறிவித்தார்.

    இதையடுத்து திடீரென கட்சியின் முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ நேற்று அறிவித்தார்.

    இந்த நிலையில், ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நிர்வாகக்குழு கூட்டம் இன்று கூடியது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மல்லை சத்யா மட்டும் வைகோவின் சேனாதிபதி என சொந்தம் கொண்டாட முடியாது.
    • ம.தி.மு.க. முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகியதில் மாற்றம் இல்லை.

    ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கு எதிராகவே, கட்சி பதவியை துரை வைகோ துறந்ததாக கூறப்படும் நிலையில் பொதுச்செயலாளர் வைகோவின் சேனாதிபதி நான் என மல்லை சத்யா அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் இதுதொடர்பாக எம்.பி. துரை வைகோ கூறுகையில்,

    * வைகோவுக்கு மல்லை சத்யா மட்டும் சேனாதிபதியில்லை.

    * மல்லை சத்யா மட்டும் வைகோவின் சேனாதிபதி என சொந்தம் கொண்டாட முடியாது.

    * ம.தி.மு.க. முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகியதில் மாற்றம் இல்லை.

    * ம.தி.மு.க.வுக்காகவும், வைகோவுக்காகவும் உழைத்த தொண்டர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர் என்று கூறினார்.

    • ராமனின் மோதிரத்தை அனுமன் சீதைக்கு காட்டியதை போல் வைகோவின் முகம் பதித்த மோதிரமே எனது அடையாளம்.
    • துரை வைகோ - மல்லை சத்யா விவகாரம் குறித்து பேச இன்று அவசரமாக ம.தி.மு.க. நிர்வாகக்குழு கூடுகிறது.

    ம.தி.மு.க.வில் துரை வைகோவின் ஆதரவாளர்கள், கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கு இடையே உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில் கட்சியின் முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்து உள்ளார்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நிர்வாகக்குழு கூட்டம் இன்று கூடுகிறது.

    இந்த நிலையில் ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா வெளியிட்டுள்ள பதிவில்,

    * ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் சேனாதிபதி நான்.

    * ராமனின் மோதிரத்தை அனுமன் சீதைக்கு காட்டியதை போல் வைகோவின் முகம் பதித்த மோதிரமே எனது அடையாளம்.

    * வைகோ முகம் பதித்த மோதிரம், சட்டை பாக்கெட்டில் வைகோ புகைப்படம் இதுவே என் அடையாளம் என்று தெரிவித்துள்ளார்.

    மல்லை சத்யாவுக்கு எதிராகவே, கட்சி பதவியை துரை வைகோ துறந்ததாக கூறப்படும் நிலையில் இந்த பதிவை அவர் வெளியிட்டுள்ளார்.

    துரை வைகோ - மல்லை சத்யா விவகாரம் குறித்து பேச இன்று அவசரமாக ம.தி.மு.க. நிர்வாகக்குழு கூடுகிறது.

    • கட்சியின் மூத்த தலைவருக்கும் துரை வைகுாவிற்கும் இடையில் கருத்து வேறுபாடு.
    • கட்சியின் முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிக்கை.

    மதிமுக கட்சியின் முதன்மை செயலாளராக இருக்கும் வைகோவின் மகன் துரை வைகோவுக்கும், கட்சியில் உள்ள மூத்த தலைவர் ஒருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பதாக தெரிகிறது.

    இந்த நிலையில் மதிமுக முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் கட்சித் தலைவர்கள் அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் வைகோ மகன் துரை வைகோவிற்கு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அன்புக் கட்டளையிட்டுள்ளார்.

    சென்னை அண்ணா நகரில் உள்ள இல்லத்தில் வைத்து துரை வைகோவை வைகோ சமாதானம் செய்து வருவதாகவும், பதவி விலகல் முடிவை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு அன்பு கட்டளையிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • அரசியல் பொது வாழ்வில் எங்கள் குடும்பம் ஒரு உயிரையே தந்திருக்கிறது.
    • என்னால் இயக்கத்திற்கோ, இயக்க தந்தைக்கோ எள் முனை அளவு கூட சேதாரம் வந்து விடக்கூடாது என்று தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன்.

    ம.தி.மு.க. கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக துரை வைகோ கூறியிருப்பதாவது:

    அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தாமரை இலைத் தண்ணீர் போல இருந்தவன் நான் என்பதை அனைவரும் அறிவர். 2018 ஆம் ஆண்டு இயக்கத் தந்தை வைகோ அவர்கள் திடீரென உடல் நலம் குன்றி இதய பாதிப்புக்கு உள்ளானார். அந்த நேரத்தில் கனடா நாட்டில் எனது குழந்தைகள் படிப்புக்காக சென்று தங்கி இருந்த நான் உடனடியாக நாடு திரும்பினேன். தலைவருக்கு இதய சிகிச்சை அளிக்கப்பட்டு பேஸ் மேக்கர், ஸ்டன்ட் வைக்கப்பட்டது. இதனால் எப்போதும் சுற்றுப் பயணங்களில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்த எனது தந்தை வைகோ வழக்கம் போல செயல்பட முடியாத நிலை உருவானது. தலைவர் என்பதை தாண்டி என் தந்தை உடல் நலத்தை பாதுகாக்க அவரை கண்ணை இமை காப்பது போல் பாதுகாக்க முடிவு எடுத்து அவருக்கு கடமையாற்றி வந்தேன். சென்னையில் நடந்த மாநாட்டிலும் தலைவருடன் இருந்து கவனித்துக் கொண்டேன்.

    இந்த சூழ்நிலையில் தான் கழகத்தின் முன்னணி நிர்வாகிகள் தலைவர் உடல்நலமின்றி இருப்பதால் தங்கள் இல்லத் திருமண நிகழ்ச்சிகளில் என்னை கலந்து கொள்ள அன்போடு அழைத்தனர். அதைப்போல கட்சியை சேர்ந்தவர்களின் குடும்பங்களின் துக்க நிகழ்வுகளிலும் பங்கு கொண்டு ஆறுதல் கூறினேன். என் தந்தை தலைவர் வைகோ அவர்களுக்காக இத்தனை ஆண்டு காலம் எத்தனையோ சோதனைகளை தாங்கிக் கொண்டு தங்கள் கைப் பொருளை செலவிட்டு கட்சிக்காக உழைத்து வரும் ம.தி.மு.க. நிர்வாகிகள் தொண்டர்கள் கட்சியை காப்பாற்றி வருகிறார்களே, அவர்களின் சுக துக்கங்களில் பங்கேற்பது என்னுடைய கடமை என்பதை உணர்ந்தேன். அப்படி செல்லுகிற தருணங்களில் அவர்களின் நிபந்தனையற்ற அன்பு என்னை நெகிழ்ச்சி அடையச் செய்தது. தலைவர் மீது வைத்துள்ள பாசத்தால் கட்சியினர் என் மீது காட்டுகிற நேசம் வளர்ந்தது.

    இந்த சூழ்நிலையில் தான் கொரோனா காலத்தில் மீண்டும் இயக்கத் தந்தை வைகோ உடல் நலம் பாதிக்கப்பட்டார். ஏழு எட்டு மாதங்களுக்கு மேலாக வெளியே போக முடியாத அளவுக்கு வீட்டிலேயே சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அதன் பிறகும் முன்பு போல பயணங்கள் மேற்கொள்ளவோ, கூட்டங்களில் வீர முழக்கம் செய்யவோ முடியாத நிலை தலைவருக்கு ஏற்பட்டது.

    இந்த சூழ்நிலையில் தான் ஊரக உள்ளாட்சி தேர்தல் வந்தது. எந்த குருவிகுளம் ஒன்றிய சேர்மனாக என் தந்தை வைகோ பொறுப்பு வகித்தாரோ அதே குருவிகுளம் ஒன்றியக் குழுத் தலைவர் பொறுப்பில் மறுமலர்ச்சி தி.மு.க.வை சேர்ந்த ஒருவரை அமர வைக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டேன். அதைக் களத்தில் நிறைவேற்றிக் காட்டி தமிழ்நாட்டில் தி.மு.க.வை தவிர பிற கட்சிகள் ஒன்றியத் தலைவர் பதவியை ஒரு இடத்திலே கூட பிடிக்க முடியாத நிலைமையில் ம.தி.மு.க. குருவிகுளம் பஞ்சாயத்து யூனியனைக் கைப்பற்றியது.

    ம.தி.மு.க. ஒன்றியக் குழுத் தலைவர் பதவி ஏற்றதும் இயக்கத் தந்தை வைகோ அந்த அலுவலகத்தில் சேர்மன் இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்தபோது நானும் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்களும் அடைந்த நெகிழ்ச்சிக்கு அளவு இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் கழகத் தொண்டர்கள் நிர்வாகிகள் என்னை கட்சியில் ஈடுபடுத்திக் கொள்ள விருப்பம் தெரிவித்து அழைத்த வண்ணம் இருந்தனர்.

    கழகத் தொண்டர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முன்வந்த தலைவர் நிர்வாக குழு கூட்டத்திற்கு அறிவிப்பு வெளியிட்டார். நிர்வாக குழு கூட்டத்தில் கலந்து கொண்ட 106 பேரில் 104 பேர் கழகத்தில் நான் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வாக்குகளை அளித்தனர். இப்படியாகத்தான் கழகத்தின் தலைமைக் கழகச் செயலாளராக, அதன் பின்னர் பொதுக்குழுவில் முதன்மைச் செயலாளராக கட்சியில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் ஒருபோதும் எந்த பொறுப்பையும் தலைமை பதவியையும் விரும்பியதில்லை. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்ற இந்த மாபெரும் இயக்கத்தில் நான் ஒரு முன்னணி தொண்டனாக இருந்து இயக்கத்திற்கும், தொண்டர்களுக்கும், இயக்கத் தந்தை வைகோ அவர்களுக்கும் பணியாற்ற வேண்டும், அது என் கடமை என்று மனதில் உறுதி ஏற்றுக் கொண்டேன்.

    சட்டமன்றத் தேர்தல் வந்தபோது கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஆறு இடங்களில் சாத்தூர் தொகுதியும் ஒன்றாகும். அத்தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று இயக்கத் தோழர்களும் சாத்தூர் தொகுதி மக்களும், அதைவிட மேலாக கூட்டணி தலைமையும் விரும்பிய நிலையில் நான் போட்டியிடாமல் அந்த வாய்ப்பு கட்சியில் மாவட்ட செயலாளராக பணியாற்றி வரும் டாக்டர் ரகுராமனுக்கு கிடைக்கச் செய்தேன். அதன் பின்னர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வந்ததும் எல்லா மாநகராட்சிகளிலும் கழகத்திற்கு பிரதிநிதித்துவம் கிடைக்கவும் பேரூராட்சி நகராட்சிகளில் கழகத்தினர் உறுப்பினர்களாக பதவிக்குச் செல்லவும் நான் என்னால் முடிந்தவரை முயற்சிகளை மேற்கொண்டேன். அதற்காக கூட்டணி தலைமையுடன் பல நேரங்களில் கோரிக்கை வைத்து அதனை நிறைவேற்றி இருக்கிறேன்.

    தமிழகத்தில் நகராட்சி தலைவராக மாங்காடு முருகன் அவர்களின் மனைவி சுமதி முருகன் பொறுப்பு ஏற்கவும், ஆவடி மாநகராட்சி துணை மேயர் பொறுப்பை சூர்யகுமார் ஏற்கவும், பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் துணைத் தலைவர்களாக நமது இயக்கத் தோழர்கள் இடம் பெற செய்யவும் என்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றோம் என்பதை கழக தோழர்கள் நன்கு அறிவார்கள்.

    தமிழ்நாட்டு அரசியலில் மறுமலர்ச்சி தி.மு.க. நம்பிக்கை தரக்கூடிய வகையில் வெற்றி நடை போடத் தொடங்கியதும் இயக்கத்திற்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது. அதன் பிறகு தமிழ்நாடு முழுவதும் தொடர் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ள தொடங்கினேன். இயக்கத் தோழர்களுக்கு தொண்டர்களுக்கு பாதுகாப்பு அரணாகவும் தலைவருக்கு துணையாகவும் செயல்பட்டு வரும் எனக்கு தலைமைக் கழக நிர்வாகிகள் ஊக்கமளித்தனர்.

    பாராளுமன்றத் தேர்தல் நிதி திரட்டும் பணிகளில் நமது கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு கணிசமான நிதியையும் திரட்டித் தந்து தலைவரை மகிழ்வித்தனர். பாராளுமன்றத் தேர்தல் குறித்து நிர்வாகக் குழுவில் கருத்துப் பரிமாற்றம் நடந்தபோது கிடைக்கிற ஒரு சீட்டை கட்சியில் சீனியராக இருக்கிற சிறப்பாக செயல்படுகிற விசுவாசம் மிக்க ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என்று தான் வலியுறுத்தினேன். ஆனால் நூற்றுக்கு நூறு விழுக்காடு நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நான்தான் திருச்சி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அக்கூட்டத்தில் வலியுறுத்தினார்கள்.

    பாராளுமன்றத் தேர்தலில் ஒரு புதிய சின்னமாகத் தீப்பெட்டி சின்னத்தை தேர்வு செய்து 15 நாட்களில் மக்களிடையே எடுத்துச் சென்று திருச்சி தொகுதியில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஆதரவோடு வியக்கத்தக்க வெற்றியை நாம் பெற்றோம். எனக்கு வாய்ப்பினை தந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பெருமை சேர்க்கிற வகையில் தான் பாராளுமன்றத்தில் கிடைத்த வாய்ப்பை எல்லாம் பயன்படுத்துகிறேன். திருச்சி தொகுதியில் மக்கள் கழகத்திற்கு பேராதரவு தரும் வகையிலும் ,தொகுதி பிரச்சனைகளுக்கு வேண்டிய தீர்வு கிடைக்கும் வகையிலும் பணியாற்றுகிறேன். ஒன்றிய அமைச்சர்கள் மூலம் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களுக்கு இயக்கத்தந்தையை அழைத்துக் கொண்டு நேரடியாக போய் சந்தித்து அவற்றை நிறைவேற்றுவதற்கு முனைந்து வருகிறேன். அதைப்போல மாநில அரசுக்கும் மக்கள் கோரிக்கைகளை நேரடியாக எடுத்துச் சென்று தீர்வு காணுவதற்கு பெரு முயற்சி மேற்கொள்கிறேன். இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக மறுமலர்ச்சி தி.மு.க.வுக்கு வலிமை சேர்ப்பதாக இருக்கும் என்பதால் தளராத ஊக்கத்துடன் மக்கள் பணியை செய்து வருகிறேன்.

    இயக்க தந்தையை நேசிப்பதை போல என்னையும் கழகத் தோழர்கள் பாராட்டி வருவது எனக்கு பொறுப்பை அதிகரிப்பதாக இருக்கிறதே என்ற கவலையுடன் தான் தினம்தோறும் என் பணிகளை மிகுந்த கவனத்தோடு செய்கிறேன். தலைவர் உருவாக்கிய மறுமலர்ச்சி தி.மு.க. என்கிற இந்த திராவிட இயக்கம் தமிழ்நாட்டு அரசியலில் வலிவும் பொலிவும் பெற வேண்டும் என்று லட்சக்கணக்கான தொண்டர்கள் நினைப்பதை போல நானும் அதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறேன்.

    நம்முடைய இயக்கத் தந்தை அரசியலுக்கு வந்து இழந்தது தான் அதிகம். அவர் பெற்றது தமிழ்நாட்டின் உரிமைக்கு போராடி வரும் "வாழ்நாள் போராளி" என்கிற விருது மட்டும்தான். மதுவிலக்கு போராட்டத்தில் கலிங்கப்பட்டியில் உண்ணாவிரதம் மேற்கொண்ட எனது பாட்டி மாரியம்மாள் அதனாலயே உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிர் துறந்தார்கள். தலைவர் வைகோ மீது பழிச்சொல்லை வீசியதை தாங்க முடியாமல் தான் எங்கள் உறவினர் ஒருவர் உயிர் தியாகம் செய்தார். சிவகாசி இரவி தீக்குளித்தபோது எழுந்த மன வேதனையில் இருந்து தலைவர் மீள்வதற்குள் எங்கள் குடும்பத்தில் இந்த துயரமும் நிகழ்ந்தது.

    அரசியல் பொது வாழ்வில் எங்கள் குடும்பம் ஒரு உயிரையே தந்திருக்கிறது. அதை கூட நாங்கள் தாங்கிக் கொண்டோம். தலைவருக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் தொடர்ந்து பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் செய்திகளை கொடுத்து கட்சியை சிதைக்கின்ற வேலையை மறைமுகமாக செய்து வருகிறார் ஒருவர். நான் தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தான் அதை சகித்துக் கொள்ள முடியாமல் நான்கு ஆண்டுகளாக, இப்படி கட்சிக்கும் தலைமைக்கும் தீராத பெரும் பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில் கட்சியின் 'முதன்மை செயலாளர் "என்று தலைமைக் கழக பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றிட என் மனம் விரும்பவில்லை எனவே கழகத்தின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.

    ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறும் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்பேன். ஆனால் அதன் பிறகு தலைமைக் கழகத்தின் மிக முக்கிய முடிவுகள் மேற்கொள்ளும் கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்ள மாட்டேன். என்னால் இயக்கத்திற்கோ, இயக்க தந்தைக்கோ எள் முனை அளவு கூட சேதாரம் வந்து விடக்கூடாது என்று தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன். அதே நேரத்தில் மறுமலர்ச்சி தி.மு.க.வின் முதல் தொண்டனாக இருந்து கட்சிக்காக உழைப்பேன் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். திருச்சி தொகுதி மக்கள் மகத்தான வெற்றி பெற செய்து தங்கள் பிரதிநிதியாக பாராளுமன்றத்திற்கு என்னை அனுப்பி வைத்துள்ளார்கள். அந்த மக்களுக்காக ஒரு எம்பி என்ற வகையில் கண்ணும் கருத்துமாக கடமையாற்றுவேன். எப்போதும் போல இயக்கத் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அரணாகவும் சுக துக்கங்களில் பங்கேற்கும் தோழனாகவும் இருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கடந்த ஏழு ஆண்டுகளாக நான் மேற்கொண்ட முயற்சிகளை கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் தொடர வேண்டும். எந்த சூழ்நிலையிலும் நம் தலைவர் மனம் கலங்கி விடாமல் அவரைப் பாதுகாக்க வேண்டும் என்று இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருகிற 20-ந்தேதி வைகோ தலைமையில் நடைபெறும் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
    • வைகோவிடம் இருந்து என்னை பிரிக்கும் ஆற்றல் மரணத்துக்கு மட்டுமே உண்டு என்று தனது அரசியல் பயணத்தை பற்றி நீண்ட பதிவை வெளியிட்டு உள்ளார்.

    சென்னை:

    ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும், துரை வைகோ எம்.பி.க்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி தொகுதியில் மல்லை சத்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வருகிற 20-ந்தேதி வைகோ தலைமையில் நடைபெறும் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

    இதற்கிடையில் மேலும் சில மாவட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டித்துள்ளார். கழக கட்டுப்பாட்டுக்கு எதிராக மாவட்டங்களில் கூட்டங்கள் நடத்துவது, தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என்று எச்சரித்து உள்ளார். இந்த விவகாரத்துக்கு நிர்வாகக் குழுவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று கட்சி நிர்வாகிகள் கூறினார்கள்.

    அதேநேரம் மல்லை சத்யா தனது முகநூல் பக்கத்தில் எனது பாரம்பரியம் என்பது வைகோ பாரம்பரியம் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன். நம்பி கெட்டான் சத்யா என்று வேண்டுமானால் சொல்லலாம்.

    ஆனால் நம்பிக்கை துரோகம் செய்தான் மல்லை சத்யா என்று ஒருபோதும் வரக்கூடாது என்ற உறுதியோடு ம.தி.மு.க.வில் பயணிக்கிறேன்.

    வைகோவிடம் இருந்து என்னை பிரிக்கும் ஆற்றல் மரணத்துக்கு மட்டுமே உண்டு என்று தனது அரசியல் பயணத்தை பற்றி நீண்ட பதிவை வெளியிட்டு உள்ளார். இந்த சிக்கலுக்கு 20-ந்தேதி வைகோ எப்படி தீர்வு காணப்போகிறார் என்பதே ம.தி.மு.க.வினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • 20-ந்தேதி நிர்வாக குழுவை கூட்டி தலைவர் வைகோ விவாதிக்கிறார்.
    • மகனா? மல்லை சத்யாவா? என்ற கேள்வி வரும் போது வைகோ என்ன முடி வெடுப்பார்.

    சென்னை:

    ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளராக இருப்பவர் மல்லை சத்யா. கட்சியின் மூத்த நிர்வாகி என்பதோடு கட்சி தொடங் கப்பட்டது முதல் வைகோவுடன் பயணித்து கொண்டு இருப்பவர்.

    கட்சி நலிவடைந்த போது எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், பாலவாக்கம் சோமு போன்ற முக்கிய நிர்வாகிகள் வெளியேறினார்கள். ஆனாலும் எந்த சலனமும் இல்லாமல் மல்லை சத்யா வைகோவுடனேயே இருக்கிறார்.

    இந்த நிலையில் துரை வைகோவுக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே எழுந்துள்ள மோதல் உச்ச கட்டத்தை அடைந்து திருச்சி யில் ம.தி.மு.க.வினர் மல்லை சத்யாவை நீக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றும் அளவுக்கு சென்றிருக்கிறது.

    இந்த நிலையில் நேற்று முன் தினம் சென்னை தாயகத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் இந்த விவகாரம் வெடித்தது. வைகோ முன்னிலையில் கூட்டத்தில் இருந்து துரை வைகோ வெளியேறினார். இதனால் கட்சிக்குள் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையில் துரை வைகோவின் ஆதரவாளர் சத்யகுமரன், இது துரை வைகோவின் காலம். அவரது கட்டளையை ஏற்காத, பின்பற்றாத, மதிக்காத யாராக இருந்தாலும் பெட்டியை கட்டிக் கொண்டு வாயை பொத்திக் கொண்டு வெளியேறுங்கள் என்று அறிக்கை வெளியிட்டார்.

    இதற்கு பதிலடி கொடுத்து மல்லை சத்யா வெளியிட்ட பதிவில் ம.தி.மு.க.வில் 32 ஆண்டுகள் உழைத்ததற்கு வெகுமானமாக புற்றுநோய், பகட்டு வேஷம், நம்பிக்கை துரோகி, பத்தினிவேஷம், வெளியேறு என்ற விருதுகளை எனக்கு அளித்துள்ளார்கள். அவர்கள் யார்? எப்படிப்பட்டவர்கள் என்பதையும் விசுவாசமுள்ள கட்சியினர் அறிவார்கள்.

    விளிம்பு நிலை தலைமுறையில் இருந்த என்னை குன்றின் மேல் வைத்து அழகு பார்த்து, அரசியல் அங்கீகாரம் வழங்கிய வைகோவுக்கு காலம் முழுவதும் நன்றியோடு இருப்பேன். என் விசுவாசம், நம்பகத் தன்மையை வைகோ அறிவார் என்று குறிப்பிட்டு உள்ளார்.

    இன்று வைகோவின் அழைப்பின் பேரில் கோயம்பேட்டில் அம்பேத் கார் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியிலும் மல்லை சத்யா பங்கேற்றார்.

    இது தொடர்பாக கருத்து கேட்க மல்லை சத்யாவை தொடர்பு கொண்ட போது எதுவும் கூற மறுத்துவிட்டார்.

    அவருக்கு நெருக்கமான சிலரிடம் விசாரித்த போது, துரை வைகோ கட்சி பொறுப்புக்கு வந்த பிறகு அவரை சுற்றியிருக்கும் சிலர் மல்லை சத்யாவை காயப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள்.

    கடந்த 4 ஆண்டுகளாக அவரது பெயரை கூட சென்னையில் எந்த நிகழ்ச்சியிலும் போடக் கூடாது. சுவர் விளம்பரங்கள், பேனர்களிலும் பெயர் போட்டோக்கள் இடம் பெறக் கூடாது என்று கட்டுப்பாடு போட்டு உள்ளார்கள்.

    கட்சி தொடங்கியதில் இருந்து எவ்வளவு போராட் டங்கள், எத்தனை முறை ஜெயில் என்று கட்சிக்காகவே உழைத்து கொண்டிருப்பவர். தன் மீது போடப்பட்ட பல வழக்குகளை கோர்ட்டில் சந்தித்து வென்று இருக்கிறார். அவரையே அசிங்கப்படுத்தி ஓரம் கட்ட வேலை பார்க்கிறார்கள்.

    நேற்று முன் தினம் கூட்டத்தில் இருந்து வெளியேறிய துரை வைகோ வை சமாதானப்படுத்த ஓடியவர்களில் ஒருவர் மல்லை சத்யாவை நான் தாக்குகிறேன் தலைவரே என்று சொன்னபோதும் அதை துரை வைகோ கண்டிக்கவில்லை. எனவே அவரது மனநிலை புரிகிறது.

    20-ந்தேதி நிர்வாக குழுவை கூட்டி தலைவர் வைகோ விவாதிக்கிறார். மகனா? மல்லை சத்யாவா? என்ற கேள்வி வரும் போது வைகோ என்ன முடி வெடுப்பார் என்று தெரிய வில்லை. நிச்சயம் மல்லை சத்யா கட்சியை விட்டு விலக வாய்ப்பு இல்லை. ஆனால் அவரை வெளி யேற்ற வாய்ப்பு இருப்ப தாகவே கருதுகிறோம் என்றனர்.

    நிர்வாக குழுவில் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    ×