என் மலர்
நீங்கள் தேடியது "நெல்லை"
- தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகளான கடனாநதி, ராமநதி உள்ளிட்ட ஆறுகளிலும் தண்ணீரின் வரத்து இயல்பை விட அதிகரித்தது.
- கருவறை முதல் பிரகார மண்டபம் வரை தண்ணீர் புகுந்து சுமார் ஒன்றரை அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்தது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்தது. இந்தத் தொடர் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகளான கடனாநதி, ராமநதி உள்ளிட்ட ஆறுகளிலும் தண்ணீரின் வரத்து இயல்பை விட அதிகரித்தது.
மேலும் சமவெளி பகுதிகளில் உள்ள தண்ணீரும் இணைந்து தற்போது தாமிரபரணி ஆற்றில் இயல்பை விட அதிகரித்துச் செல்கிறது. எனினும் பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி தாமிரபரணி ஆற்றில் வழக்கம்போல நீராடி வருகின்றனர். டவுன் குறுக்குத்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முருகன் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் கருவறை முதல் பிரகார மண்டபம் வரை தண்ணீர் புகுந்து சுமார் ஒன்றரை அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது. இதையடுத்து கோவில் ஊழியர்கள் மின்மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை.
- சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
நெல்லை:
மாலத்தீவு அருகே நீடித்த காற்று சுழற்சியானது வங்க கடல் ஈரப்பதத்தை தென் தமிழகத்தின் ஊடாக இழுப்பதன் காரணமாக தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று பாபநாசம், மணிமுத்தாறு, மாஞ்சோலை ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது. தொடர்ந்து, மழை பெய்வதால் முக்கிய ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று 4-வது நாளாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
நெல்லை மாநகர பகுதிகளில் சந்திப்பு, தச்சநல்லூர், தாழையூத்து, டவுன், பாளையங்கோட்டை, கே.டி.சி. நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தெருக்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
மாநகர பகுதிகளின் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
மழை காரணமாக அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மணிமுத்தாறு, நாங்குநேரி, பாபநாசம் ஆகிய பகுதிகளிலும் பல இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. மேலும், பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்து, கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவில் நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 88.03 அடியாகவும், பாபநாசம் அணையின் நீர்மட்டம் 80.80 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 93.57 அடியாகவும் உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 86.35 அடியாக இருந்த நிலையில், இன்று மேலும் 7 அடி உயர்ந்துள்ளது.
மணிமுத்தாறு அணைப்பகுதியில் 23.8 மில்லி மீட்டரும், பாபநாசத்தில் 48 மில்லி மீட்டரும், சேர்வலாரில் 42 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.
பாபநாசம் அணைக்கு வினாடிக்கு சுமார் 1,900 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. மணிமுத்தாறு அணைக்கு சுமார் 675 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பாபநாசம் அணையில் இருந்து 1,100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
தமிழ்நாட்டில் மிக அதிகமான மழை நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டியில் 123 மில்லி மீட்டர் (12.3 சென்டி மீட்டர்) மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தேமாங்குளம் 117 மில்லி மீட்டர் மழையும், ஸ்ரீவைகுண்டத்தில் 106 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.
தூத்துக்குடி, நெல்லை தென்காசி மாவட்டங்களில் 96 இடங்களில் மிதமான மழையும், 17 இடங்களில் கனமழையும், 2 இடங்களில் மிக கனமழையும் பதிவாகி உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான ஊத்தில் 79 மில்லி மீட்டரும், நாலுமுக்கில் 74 மில்லி மீட்டரும், காக்காச்சியில் 67 மில்லி மீட்டர், மாஞ்சோலை யில் 60 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
- வெயில் கொளுத்திய நிலையில் திடீர் மழையால் குளிர்ச்சி நிலவியது.
- பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் பகலில் வெயில் அடித்த நிலையில், பிற்பகலில் வானில் கருமேகங்கள் திரண்டன. மதியம் 1 மணி அளவில் பரவலாக மழை பெய்தது. அவ்வப்போது பலத்த மழையாகவும், திடீரென சாரல் மழையாகவும் பெய்தது. வெயில் கொளுத்திய நிலையில் திடீர் மழையால் குளிர்ச்சி நிலவியது.
மாநகரில் டவுன், சந்திப்பு, வண்ணார்பேட்டை, பெருமாள்புரம், பாளை, புதிய பஸ் நிலையம், மார்க்கெட், கே.டி.சி. நகர் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பரவலாக பெய்த சாரல் மழையால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
சில இடங்களில் சாலையோர பள்ளங்களில் தண்ணீர் தேங்கியது. சந்திப்பு பஸ் நிலையத்தில் சுமார் 30 நிமிடங்கள் பெய்த மழையில் ஷேர் ஆட்டோக்கள் நிற்கும் இடத்தில் குளம்போல் மழைநீர் தேங்கியது. பாளையில் 12 மில்லிமீட்டரும், நெல்லையில் 11 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் அருகே பழைமையான கட்டிடத்தின் சுவர் ஒரு பகுதி இடித்து விழுந்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை திருப்பி விட்டனர்.
மாவட்டத்திலும் நாங்குநேரி, அம்பை, களக்காடு, மூலைக்கரைப்பட்டி, சேரன்மகாதேவி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக சேரன்மகாதேவி 27.40 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. நாங்குநேரியில் 13 மில்லிமீட்டரும், அம்பையில் 12 மில்லிமீட்டரும் மழை பெய்தது. களக்காட்டில் 5 மில்லிமீட்டரும், கன்னடியனில் 10 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. வீரவநல்லூர் பகுதியில் 30 மில்லிமீட்டர் மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று பெய்த பரவலான மழையால் அணைகளுக்கு சற்று நீர்வரத்து ஏற்பட்டது. பிரதான அணையான பாபநாசம் அணை நீர்பிடிப்பு பகுதியில் 18 மில்லிமீட்டர் மழை பெய்தது. அணைக்கு வினாடிக்கு 270 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மணிமுத்தாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் 11 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 14 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள ராமநதி, கருப்பாநதி அணைகளில் நீர்பிடிப்பு பகுதிகளில் மட்டும் லேசான சாரல் மழை பெய்தது. ராமநதியில் 7 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், மணியாச்சி, கயத்தாறு சுற்றுவட்டார பகுதிகளில் பிற்பகலில் சிறிது நேரம் கனமழை பெய்தது. கோவில்பட்டியில்யில் பெய்த மழையில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்சமாக 11.50 மில்லிமீட்டர் மழை பெய்தது. சூரங்குடி, கீழ அரசடியில் விட்டு விட்டு லேசான சாரல் அடித்தது.
- 3 பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
- பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் செல்வகுமரேசன் (வயது 38). இவர் நக்சல் தடுப்பு பிரிவில் பணியாற்றி வருகின்றார்.
இந்நிலையில் கடந்த 10-ந்தேதி இரவு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் செல்வகுமரேசன் வீட்டுக்குள் புகுந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவருடைய காரை, அரிவாளால் வெட்டியும் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும் சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது, சேரன்மகா தேவி அருகே உள்ள சங்கன்திரடு பகுதியை சேர்ந்த முப்புடாதி என்பவர் தனது கூட்டாளிகளுடன் வந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்வகுமரேசன் சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போது, வழக்கு ஒன்று தொடர்பாக முப்புடாதி மற்றும் அவரது கூட்டாளிகளை செல்வகுமரேசன் கைது செய்தார். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் முப்புடாதி உள்பட 3 பேரும் கொடைக்கானலில் உள்ள நண்பர் ஒருவருக்கு சொந்தமான கட்டிடத்தில் பதுங்கி இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையின் கீழ் இயங்கும் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று 3 பேரையும் சுற்றி வளைத்தனர். போலீசாரை பார்த்ததும் முப்புடாதி, சேரன்மகா தேவியை சேர்ந்த செல்வகுமார் மற்றும் அய்யப்பன் ஆகிய 3 பேரும் தப்பிப்பதற்காக கட்டிடத்தின் மாடியில் இருந்து குதித்துள்ளனர். இதில் முப்புடாதிக்கு முதுகு மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
அதேபோல் அய்யப்பனுக்கு கையில் சவ்வு விலகி இறங்கியது. செல்வகுமாருக்கு கையில் முறிவு ஏற்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்து சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த சம்பவத்தில் மேலும் 2 பேருக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.
போலீசாரிடம் சிக்கிய முப்புடாதிக்கு சென்னையில் பாலியல் பலாத்கார வழக்கும், அய்யப்பனுக்கு திருச்சியில் ரூ. 30 லட்சம் திருட்டு வழக்கிலும், செல்வகுமாருக்கு சேரன்மகாதேவியில் பெட்ரோல் பங்கில் அரிவாளை காட்டி மிரட்டியது உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, நீலகிரி, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தான் தென்மேற்கு பருவமழை அதிகம் பெய்யும். மற்ற மாவட்டங்களில் அதிக அளவில் மழையை எதிர்பார்க்க முடியாது.
இந்நிலையில் தென்மேற்கு பருவமழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ‘தென்மேற்கு பருவமழை காரணமாக நெல்லை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) சில இடங்களில் கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது’ என்றனர்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-
வால்பாறை 17 செ.மீ., சின்னகல்லார் 12 செ.மீ., பெரியாறு 11 செ.மீ., தேவலா 10 செ.மீ., பொள்ளாச்சி 7 செ.மீ., குந்தாபாலம், குழித்துறை தலா 4 செ.மீ, போடிநாயக்கனூர், உத்தமபாளையம், அம்பாசமுத்திரம், திருக்கோவிலூர் தலா 3 செ.மீ., மயிலம், ஊட்டி, பூதப்பாண்டி, தக்கலை, கூடலூர், பாபநாசம், செங்கோட்டை, ராதாபுரம், இரணியல், பண்ருட்டி, வந்தவாசி தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது.
மேலும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் தலா 1 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.