search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நியூயார்க்"

    • நியூயார்க் நகரில் ஆண்டுதோறும் இந்திய தின பேரணி நடத்தப்பட்டு வருகிறது.
    • இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த பேரணி நடத்தப்பட்டு வருகிறது.

    அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் பலவேறு அமைப்புகள் ஒன்றாக இணைந்து இந்தியா தின பேரணியை நியூயார்க் நகரில் நடத்தினர். இதில் பாலிவுட் நட்சத்திரங்கள் சோனாக்சி சின்ஹா, பங்கர் திரிபாதி, ஜாகீர் இக்பால் கலந்து கொண்டனர். அதேபோல் மனோஜ் திவாரி எம்.பி.யும் கலந்து கொண்டார்.

    ஏராளமானோர் இந்திய கொடி ஏந்திச் சென்றனர். வாகன ஊர்வலம் நடைபெற்றது. பேரணியில் ராமர் கோவில் இடம் பிடித்திருந்தது. மரக்கட்டைகள் மூலம் உருவாக்கப்பட்ட ராமர் கோவில் போன்ற மாதிரி வாகனம் மூலம் எடுத்துக் செல்லப்பட்டது.

    தேசபக்தி பாடல்கள் இசைக்கப்பட்டன. கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. 40-க்கும் மேற்பட் இசைக்குழுக்கள் இந்த பேரணியில் இடம் பெற்றனர். இந்த பேரணி கிழக்கு 38-வது தெருவின் மேடிசன் அவென்யூவில் இருந்து கிழக்க 27-வது தெரு வரை நடைபெற்றது.

    இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் நியூயார்க்கில் இந்திய தின பேரணி நடைபெறுகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலான நடத்தப்படுகிறது. இந்த வருடம் நடைபெற்றது 42-வது வருட இந்திய தின பேரணியாகும்.

    • 2022-ம் ஆண்டு டைனோசரின் புதைப்படிவம் கண்டுபிடிக்கப்பட்டது.
    • நியூயார்க்கில் உள்ள சோதேபிஸ் ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது.

    நியூயார்க்:

    அமெரிக்காவில் டைனோசர் எலும்புக்கூடு ரூ.372 கோடிக்கு ஏலம் போய் இருக்கிறது. மேற்கு அமெரிக்க மாகாணமான கொலராடோவில் மோரிசன் அகழ்வாராய்ச்சி தளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு தாவரத்தை உண்ணும் ஸ்டெகோசொரஸ் என்ற டைனோசரின் புதைப்படிவம் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதை ஜேசன் கூப்பர் என்பவர் கண்டுபிடித்தார். இந்த டைனோசருக்கு அபெக்ஸ் என்று பெயரிடப்பட்டது. ஸ்டெகோசொரஸ் டைனோசர் 11 அடி உயரமும், மூக்கிலிருந்து வால் வரை 27 அடி நீளமும் கொண்டது. இந்த டைனோசரின் எலும்புக்கூடு அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள சோதேபிஸ் ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது.

    இதில் 7 பேர் பங்கேற்று ஏலம் கேட்டனர். இதில் டைனோசரின் எலும்புக்கூடு 44.6 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ( இந்திய மதிப்பில் ரூ. 372 கோடி) ஏலம் போனது. இதற்கு முன்பு கடந்த 2020-ம் ஆண்டு ஸ்டான் என்று அழைக்கப்படும் டி ரெக்ஸ் என்ற டைனோசரின் எலும்புக்கூடு ரூ.265 கோடிக்கு ஏலம் போயிருந்தது. அதை அபெக்ஸ் முறியடித்தது.

    இதுகுறித்து சோதேபிஸ் ஏல நிறுவனம் கூறும்போது, இதுவரை ஏலத்தில் விற்கப்பட்டவற்றில் மிகவும் மதிப்புமிக்க புதைபடிவமாக அபெக்ஸ் உள்ளது. இந்த புதைபடிவம் அதன் விற்பனைக்கு முந்தைய மதிப்பீட்டை விட 11 மடங்கு அதிகமாகும். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய ஸ்டீகோசொரஸ் வகை டைனோசரின் புதைபடிவம் இதுவாகும் என்று தெரிவித்தது.

    • நியூயார்க்கில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 19-வது லீக் போட்டி நடைபெற்றது
    • ஈகோ கிளாஸை எளிதாக விளக்கும் வகையில் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை இந்த போட்டிக்கு வந்த நபர் ஒருவர் அரங்கேற்றியுள்ளார்.

    டி20 உலகக்கோப்பை 2024 போட்டிகள் அமெரிக்காவில் நடந்து வரும் நிலையில் நியூயார்க்கில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 19-வது லீக் போட்டி நடைபெற்றது. இதில், முதலில் விளையாடிய இந்தியா 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியை காண வந்த பாகிஸ்தானை சேர்ந்த யூடியூபர் ஷாத் அகமத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கிரிக்கெட்டை விளையாட்டு என்று கருதுவதையும் தாண்டி இரண்டு நாடுகளுக்குமாக ஈகோ கிளாசாக ரசிகர்கள் மாற்றத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அந்த ஈகோ கிளாஸை எளிதாக விளக்கும் வகையில் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை இந்த போட்டிக்கு வந்த நபர் ஒருவர் அரங்கேற்றியுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த ரேசா கான் என்ற அந்த கன்டன்ட் கிரியேட்டர், தனது பாகிஸ்தானிய தந்தையையும், இந்திய மாமனாரையும் போட்டிக்கு அழைத்து வந்து இந்தியா பாகிஸ்தான் அணிகள் விளையாடும்போது அவர்களின் ரியாக்சன்களைப் படம்பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதைத் தொடர்ந்து வீடியோ வைரலாகி வருகிறது.

    மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி நடிப்பில் வெளிவந்த உயிரே படத்தில் இருவேறு சித்தாந்தங்களைக் கொண்ட தகப்பன்கள் மும்பையில் நடக்கும் மதக் கலவரத்தின்போது தங்களுக்குள் உள்ள வித்தியாசங்களையும் பிரிவினையையும் எதிர்கொள்ளும் தருணத்தை சந்திப்பர். இந்த வீடியோ அதை நினைவுபடுத்துவதாக உள்ளது.   

    • டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.
    • நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி மைதானத்தில் இன்று அரங்கேறுகிறது.

    9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த கிரிக்கெட் திருவிழாவில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கும் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் (ஏ பிரிவு) நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரங்கேறுகிறது.

    34 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட இந்த ஸ்டேடியத்திற்கு இந்திய ரசிகர்களின் வருகையே அதிகமாக இருக்கும் என்பதால், அவர்களின் உற்சாகம் நமது வீரர்களுக்கு கூடுதல் உத்வேகத்தை கொடுக்கும்.

    இந்திய அணி

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் பந்தாடியது. அயர்லாந்தை 96 ரன்னில் மடக்கிய இந்தியா 12.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டிப்பிடித்தது.

    கேப்டன் ரோகித் சர்மாவின் அரைசதமும், துணை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (3 விக்கெட்), அர்ஷ்தீப்சிங் (2 விக்கெட்), ஜஸ்பிரித் பும்ரா (2 விக்கெட்) ஆகியோரது விக்கெட் ஜாலமும் வெற்றியை சுலபமாக்கின.

    ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான சவால் வேறு மாதிரியானது. அந்த அணியில் ஷகீன் ஷா அப்ரிடி, முகமது அமிர், நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப் என்று அபாயகரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள்.

    நியூயார்க் ஆடுகளத்தில் பந்து தாறுமாறாக பவுன்ஸ் ஆவதால், இவர்களை திறம்பட சமாளிப்பதை பொறுத்தே வெற்றி வாய்ப்பு கிட்டும். அதை மனதில் வைத்து விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா சிறப்பு பயிற்சியில் ஈடுபட்டனர்.

    பயிற்சியின் போது கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பந்து தாக்கி பெருவிரலில் காயம் ஏற்பட்டது. ஆனால் களம் இறங்குவதில் சிக்கல் இருக்காது என்று தெரிகிறது. சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஷிவம் துபே ஆகியோரும் பேட்டிங்கில் கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். பந்து வீச்சில் பும்ரா, அர்ஷ்தீப்சிங், சிராஜ், பாண்ட்யா கூட்டணி மிரட்ட காத்திருக்கிறது.

    பாகிஸ்தான் அணி

    பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் மண்ணை கவ்வியது. இதனால் பாகிஸ்தானுக்கு நெருக்கடி அதிகம். ஏனெனில் இந்தியாவிடமும் தோற்றால் ஏறக்குறைய அவர்களின் சூப்பர்8 கனவு கலைந்து விடும்.

    எனவே களத்தில் முழுமூச்சுடன் போராடுவார்கள். பாபர் அசாம், முகமது ரிஸ்வான், இப்திகர் அகமது, பஹர் ஜமான் ஆகியோரைத் தான் அந்த அணி பேட்டிங்கில் நம்பி இருக்கிறது. இவர்கள் நிலைத்து நின்று ஆடினால் வலுவான ஸ்கோரை எட்ட முடியும்.

    இந்த தொடரை பொறுத்தவரை ஆடுகளம் தான் இப்போது ஹீரோ. வழக்கத்துக்கு மாறாக பந்து வீச்சுக்கு நிறையவே ஒத்துழைக்கிறது. இந்த ஆடுகளத்தில் நிறைய வெடிப்புகள் காணப்படுவதால் சீரற்ற பவுன்ஸ்களை எதிர்கொள்ள முடியாமல் பேட்ஸ்மேன்கள் திணறுகிறார்கள்.

    ஆடுகளம் சரியில்லை என்று ஐ.சி.சி. வரை புகார் சென்று விட்டது. 150-160 ரன் எடுத்தாலே அது பெரும்பாலும் வெற்றிக்குரிய ஸ்கோராக பார்க்கப்படுகிறது. அதனால் நெருக்கடியை சாதுர்யமாக கையாண்டு, சூழலுக்கு ஏற்ப தங்களை கனகச்சிதமாக மாற்றிக் கொண்டு எந்த அணி ஆடுகிறதோ அந்த அணியின் கையே ஓங்கும் என்பதில் சந்தேகமில்லை.

    இந்தியா- பாகிஸ்தான் ஆட்டத்துக்கு பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இதனால் போட்டிக்கு மைதானத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே அல்லது ஜெய்ஸ்வால், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல் அல்லது குல்தீப் யாதவ், பும்ரா, அர்ஷ்தீப்சிங், முகமது சிராஜ்.

    பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், பாபர் அசாம் (கேப்டன்), உஸ்மான் கான், பஹர் ஜமான், ஷதப் கான், அசம் கான் அல்லது சைம் அயுப், இப்திகர் அகமது, ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா, முகமது அமிர் அல்லது அப்பாஸ் அப்ரிடி.

    இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • விராட் கோலி இன்னும் அமெரிக்கா புறப்படவில்லை.
    • கொல்கத்தா அணி வீரர் ரிங்கு சிங் அமெரிக்கா செல்லவில்லை.

    டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நேற்று அமெரிக்காவிற்கு புறப்பட்டு சென்றுள்ளது.

    கேப்டன் ரோகித், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பீல்டிங் பயிற்சியாளர் திலீப் மற்றும் இந்திய வீரர்களான பண்ட், ஜடேஜா, சிவம் துபே, சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் ஆகியோர் முதல் கட்டமாக அமெரிக்கா சென்றுள்ளனர்.

    விராட் கோலி இன்னும் அமெரிக்கா புறப்படவில்லை. அடுத்தக்கட்ட வீரர்களுடன் அவர் அமெரிக்கா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று நடைபெறும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. அதனால் கொல்கத்தா அணி வீரர் ரிங்கு சிங் இன்று அமெரிக்கா செல்லவில்லை.

    இந்திய அணி ஜூன் 5 ஆம் தேதி தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது மற்றும் ஜூன் 9 ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

    • வார இறுதி நாட்கள் மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட ஆண்டு முழுவதும் திறந்திருக்கும்.
    • அனைத்து விடுமுறை நாட்களிலும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும் என்று தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மக்களின் அவசர தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதரகம், வார இறுதி நாட்கள் மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட ஆண்டு முழுவதும் திறந்திருக்கும். அனைத்து விடுமுறை நாட்களிலும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும் என்று தெரிவித்துள்ளது. அவசரகால விசா, அவசரச் சான்றிதழ் போன்ற பயண ஆவணங்களின் அவசரத் தேவைகளுக்கு மட்டுமே இந்த வசதி அளிக்கப்படும்.

    • வீட்டில் இருந்து வெளியே சென்ற பெலின் கோஜா மாயமானார்.
    • அவர் பைபோலார் டிஸ்ஆர்டர் நோய் பாதிப்புக்கு உள்ளானவர் என தெரிவித்துள்ளது.

    வாஷிங்டன்:

    இந்தியாவை சேர்ந்த பெரின் கோஜா (25) என்ற பெண், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வந்தார்.

    இந்நிலையில், குயின்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து வெளியே சென்ற பெலின் கோஜா மாயமாகி உள்ளார். அவர் பைபோலார் டிஸ்ஆர்டர் நோய் பாதிப்புக்கு உள்ளானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாயமான பெலின் கோஜாவை போலீசார் தேடி வருகின்றனர்.

    அவரது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அவரை பற்றி தகவல் தெரிவித்தால் போலீசாருக்கு உடனே தகவல் அளிக்கும்படி பொதுமக்களை போலீசார் கேட்டுக் கொண்டனர்.

    • அமெரிக்க கடன் சுமை தற்போது $34 ட்ரில்லியனை தாண்டி விட்டது
    • இந்திய மதிப்பில் அமெரிக்க கடன், சுமார் ரூ.2,82,68,62,00,00,00,000.00 ஆகும்

    நியூயார்க் நகரை மையமாக கொண்டு இயங்கும் பன்னாட்டு நிதி நிறுவனம், ஜேபி மோர்கன் (JP Morgan).

    மிகப்பெரும் நிதி முதலீட்டு ஆலோசனை மற்றும் நிதி சேவைகள் ஆகியவற்றில் நீண்ட அனுபவம் மிக்க இந்நிறுவனம், உலக நாடுகளின் நிதி நிலவரம் குறித்து அவ்வப்போது கருத்துக்கள் வெளியிடுவது வழக்கம்.

    அமெரிக்க கடன் சுமை தற்போது $34 ட்ரில்லியன் ($34 trillion) தொகையை தாண்டி விட்டது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,82,68,62,00,00,00,000.00 ஆகும்.

    "2030-ஆம் ஆண்டிற்குள் கடனுக்கான வட்டி தொகையை மட்டுமே கணக்கிட்டால் அது அமெரிக்காவின் மொத்த வருமானத்தை விட பல மடங்கு அதிகமாக பெருகி விடும்" என அமெரிக்க பட்ஜெட் அலுவலகம் சமீபத்தில் தெரிவித்தது.

    2024-ஆம் ஆண்டிற்கான அமெரிக்காவின் எதிர்கால நிதி நிலை குறித்து ஜேபி மோர்கன் கருத்து வெளியிட்டுள்ளது.

    அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

    மலை போல் குவிந்திருக்கும் அமெரிக்க கடன் சுமை "தண்ணீரில் கொதிக்கும் தவளை" நிலையை போன்று உள்ளது.

    பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. கடன் சுமையை சமாளிக்க மேலும் பெரும் நிதி தேவைப்படுகிறது. ஆனால், அரசு தொடர்ந்து கடன் வாங்குவதை நிறுத்தவில்லை.

    அரசு எடுக்கும் ஒவ்வொரு நிதி ஊக்க நடவடிக்கைகளும், கடன் சுமையை தாங்க முடியாமல் வெடிக்கும் நிலையை நோக்கி நாட்டை கொண்டு செல்கிறது. அந்த நிலைமையும் ஒரு நாள் வெடித்து விடும்.

    இவ்வாறு ஜேபி மோர்கன் தெரிவித்துள்ளது.

    கொதிக்கும் தண்ணீரில் போடப்பட்ட தவளை அதை உடனே உணர்ந்து கொண்டால் வெளியே குதித்து தப்பி விடலாம். ஆனால், அது உணர தாமதித்தால், சிறுக சிறுக வெந்து, தப்பிக்க முடியாமல் உயிரிழக்கும்.

    அதே போன்று ஒரு நெருக்கடியான நிலையில் தவறை உணர்ந்து உடனடியாக செயலாற்ற வேண்டியவர்கள் செயலாற்ற தவறினால் அந்த நெருக்கடி வளர்ந்து, மீண்டும் மீளவே முடியாத அளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

    இந்நிலை நிர்வாக மேலாண்மையில், "தண்ணீரில் கொதிக்கும் தவளை நிலை" என குறிப்பிடப்படும்.

    • மயக்கம் தெளிந்த பல பெண்களுக்கு என்ன நடந்தது என நினைவில்லை.
    • புகார் அளிக்கப்பட்டதையடுத்து டாக்டர் செங்கை மருத்துவமனை பணிநீக்கம் செய்தது.

    அமெரிக்காவில் உள்ள டாக்டர் ஒருவரின் மீது கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகளை காவல்துறை பதிவு செய்துள்ளது.

    அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள நியூயார்க் ப்ரெஸ்பிடேரியன் குயின்ஸ் மருத்துவமனையில் குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை நிபுணராக பணி புரிந்தவர் 33 வயதான ஜி ஆலன் செங் (Zhi Alan Cheng). இவரது இல்லம் அஸ்டோரியா பகுதியில் உள்ளது.

    கடந்த டிசம்பர் மாதம், தனது காதலியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார் டாக்டர் செங். அங்கு அவரை மயக்கமடைய செய்திருக்கிறார்.

    மயக்கம் தெளிந்து அப்பெண்ணுக்கு நினைவு திரும்பியது. ஆனால் தனக்கு என்ன நடந்தது என அவருக்கு நினைவில்லை.

    அங்கு அவருக்கு ஒரு வீடியோ கிடைத்தது. அதில் டாக்டர் செங் அவரை பாலியல் பலாத்காரம் செய்யும் காட்சிகள் இருந்தன. இவை மட்டுமின்றி டாக்டர் செங் மேலும் சில பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதும் அதில் பதிவாகியிருந்தது.

    இது குறித்து அப்பெண் காவல்துறையிடம் புகார் அளித்தார். இதனையடுத்து டாக்டர் செங்கை அந்த மருத்துவமனை பணிநீக்கம் செய்தது.

    இந்த விசாரணையின் போது டாக்டர் செங்கின் அலைபேசி, லேப்டாப் உள்ளிட்ட உடைமைகள் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் டாக்டர் செங், தான் வேலை செய்து வந்த மருத்துவமனையிலும், வீட்டிலும் பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது பதிவாகியிருந்தது.

    இதனையடுத்து அவரது வீட்டை சோதனை செய்த புலனாய்வு அதிகாரிகளுக்கு ஃபென்டனில், கீடமைன், எல்எஸ்டி மற்றும் அறுவை சிகிச்சைக்கான மயக்க மருந்துகள் உட்பட பல போதை மருந்துகளும் சிக்கின.

    தற்போது அவர் மீது சுமார் 50 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில், கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல், தாக்குதல், போதை பொருள் வைத்திருத்தல் மற்றும் சட்டவிரோதமாக பிறரை கண்காணிப்பது உட்பட பல பிரிவுகள் அடங்கும்.

    விசாரணையில் டாக்டர் செங் பெண்களை திரவ மயக்க மருந்துகளின் மூலம் மயக்கமடைய செய்து அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார் என தெரிய வந்துள்ளது.

    வீடியோவில் உள்ள பதிவுகளின்படி சில பாதிக்கப்பட்டவர்களை காவல்துறை தேடி வருகிறது.

    மருத்துவமனையில் டாக்டர் செங் துன்புறுத்திய ஒரு பெண் உட்பட அவரால் பாதிக்கப்பட்ட பல பெண்களை காவல்துறை கண்டறிய முயற்சிப்பதாகவும், தாய்லாந்து, நியூயார்க், லாஸ் வேகாஸ், ஸான் பிரான்ஸிஸ்கோ ஆகிய இடங்களில் உள்ள ஓட்டல் அறைகளிலும், வீடுகளிலும் இவரால் பாதிக்கப்பட்ட 5 பேரை காவல்துறை தேடி வருவதாகவும் தெரிகிறது.

    ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் டாக்டர் செங் மறுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 76 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த காட்டுத்தீ எரிந்து வருகிறது.
    • சுமார் 160 மில்லியன் டன் கார்பன் இதுவரை வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    வாஷிங்டன் :

    கனடாவின் ஆல்பர்ட்டா பகுதியில் கடந்த மாதம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. 76 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த காட்டுத்தீ எரிந்து வருகிறது. இதன் காரணமாக சுமார் 160 மில்லியன் டன் கார்பன் இதுவரை வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் அண்டை நாடான அமெரிக்காவின் டெட்ராய்ட், சிகாகோ மற்றும் மினியாபோலீஸ் நகரங்களில் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளது. இதனால் அங்கு சுமார் 8 கோடி மக்கள் மோசமான காற்றை சுவாசிப்பதாக அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த புகையினை சுவாசித்தால் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் தேவையில்லாமல் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், அவ்வாறு வெளியில் செல்லும்போது என்-95 முக கவசங்களை அணிந்து கொள்ளும்படியும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • மக்கள் வசிப்பதற்கு செலவு மிகுந்த ஆடம்பர நகரங்கள் பட்டியலில் நியூயார்க், சிங்கப்பூர் முதன்மை இடங்களை வகிக்கின்றன.
    • வசிப்பதற்கு செலவு குறைந்த நகரங்களில் டமாஸ்கஸ், திரிபோலி ஆகியவை முதன்மை இடங்களை வகிக்கின்றன.

    நியூயார்க்:

    எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் அமைப்பின் உலகளாவிய வாழ்க்கைச் செலவு கணக்கெடுப்பின்படி உலக அளவில் மக்கள் வசிப்பதற்கு செலவு மிகுந்த ஆடம்பர நகரங்கள் பட்டியலில் நியூயார்க், சிங்கப்பூர் ஆகிய நகரங்கள் முதன்மை இடங்களை வகிக்கின்றன.

    வீடு, போக்குவரத்து, உணவு, ஆடைகள் உள்பட 200-க்கும் மேற்பட்ட வி‌ஷயங்களுக்கு ஆகும் செலவுகள், ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. அன்றாட வாழ்க்கைச் செலவு அடிப்படையில், ஆடம்பர நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுக்கு 172 நகரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன.

    உலக அளவில் வசிப்பதற்கு செலவு குறைந்த நகரங்களில் சிரியாவின் தலைநகரம் டமாஸ்கஸ் மற்றும் லிபியா நாட்டின் திரிபோலி ஆகியவை முதன்மை இடங்களை வகிக்கின்றன.

    அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனைக்குள் இன்று துப்பாக்கியுடன் நுழைந்த நபர் இரண்டு முதியவர்களை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டான்.
    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் இருக்கும் வல்ஹல்லாவில் உள்ள வெஸ்ட்செஸ்டர் மருத்துவமனைக்குள் உள்ளூர் நேரப்படி இன்று துப்பாக்கியுடன் நுழைந்த நபர் 70 வயது மிக்க இரண்டு பேரை சுட்டுக்கொன்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கொலையாளி பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், கொலையாளி குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
    ×