என் மலர்
நீங்கள் தேடியது "பெங்களூர்"
- தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிப்பு.
- வாலிபரை அடையாளம் காணும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூரு:
வடமாநிலத்தை சேர்ந்தவர் ஹேமந்த் தாஸ் இவருக்கும் மகாலட்சுமி (26) என்ற பெண்ணுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இவர்கள் கர்நாடக மாநிலம் நெலமங்களா பகுதியில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரை விட்டு பிரிந்து மகாலட்சுமி பெங்களூரு வயாலிகாவல் அருகே உள்ள விநாயகர் நகர் பைப் லைன் பகுதியில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.
இவர் இங்கிருந்து பெங்களூரில் உள்ள ஒரு மாலில் வேலை பார்த்து வந்தார். இவரை தினமும் ஒரு வாலிபர் வேலைக்கு அழைத்து சென்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2-ந் தேதியிலிருந்து மகாலட்சுமி வேலைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. அவரது செல்போனுக்கு உறவினர்கள், நண்பர்கள் பலமுறை தொடர்பு கொண்டும் எந்த பதிலும் வரவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் மற்றும் சகோதரி நெலமங்காலவில் இருந்து மகாலட்சுமி வசித்த வீட்டிற்கு நேற்று வந்தனர். அப்போது வீடு பூட்டப்பட்டிருந்தது. மேலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.
இதையடுத்து அவர்கள் பக்கத்து வீட்டினரிடம் கேட்டபோது மகாலட்சுமி நடமாட்டம் வெளியே இல்லை என்றும். அவரது விட்டில் இருந்து கடந்த 2 நாட்களாக கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து மகாலட்சுமியின் சகோதரி வயாலிகாவல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீடு முழுவதும் துர்நாற்றம் வீசிய நிலையில் மகாலட்சுமியை போலீசார் பல இடங்களில் தேடி பார்த்தனர்.
அப்போது சந்தேகத்தின் பேரில் வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியை திறந்து பார்த்த போது அங்கு மகாலட்சுமி கொலை செய்யப்பட்டு அவரது உடல் 30 துண்டுகளாக வெட்டி கூறுபோட்டு வைக்கப்பட்டிருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் உடல் பாகங்ககளை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டில் இருந்த கைரேகைகளையும் தடயவியல் நிபுணர்களை வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
இதற்கிடையே மகாலட்சுமியை தினமும் வேலைக்கு அழைத்து சென்று வந்த வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர் யார்? என்றும் அவரை பிடிக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கணவரை பிரிந்து வாழ்ந்த மகாலட்சுமி தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அவரை தினமும் ஆண் நண்பர் ஒருவர் வேலைக்கு அழைத்து சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2-ந் தேதியிலிருந்து மகாலட்சுமி வெளியே வரவில்லை. மேலும் அந்த நபரும் காணவில்லை எனவே காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு என்ன விவகாரம் என்று தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் கொலை செய்யப்பட்ட மகாலட்சுமியின் செல்போன் கைப்பற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக அவர் யாரிடம் பேசினார். எவ்வளவு நேரம் பேசினார். அடிக்கடி அவரை தொடர்பு கொண்டு பேசியது யார்? என்றும் விசாரணை நடக்கிறது.
மேலும் மகாலட்சுமி வீட்டிற்கு வந்து சென்ற வாலிபரை அடையாளம் காணும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மகாலட்சுமியை கடந்த 10 நாட்களுக்கு முன்பே கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் தான் உடல் பாகங்கள் அழுகி புழு வைத்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நுரையீரலை பாதிக்கும் புது வகையான வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
- ஓசூரில், எந்த பாதிப்பும் கண்டறியப்பட வில்லை.
ஓசூர்:
சீனாவில் கண்டறியப்பட்டுள்ள எச்.எம்.பி.வி. என்ற நுரையீரலை பாதிக்கும் புது வகையான வைரஸ் தொற்று, கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்த, 8 மாதம், 3 மாத குழந்தை என இருவருக்கு இருப்பது நேற்று கண்டறியப்பட்டுள்ளது.
அந்த குழந்தைகளுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. எச்.எம்.பி.வி., வைரஸ் தொற்று, ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு மிக அருகாமையிலுள்ள, தமிழக எல்லையான ஓசூரை சேர்ந்த மக்கள் பல ஆயிரம் பேர், பல்வேறு தேவைகளுக்காக தினமும் பெங்களூரு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், பெங்களூருவில் எச்.எம்.பி.வி., வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதால், தமிழக எல்லையை உஷார்படுத்தி, ஓசூர் மாநகராட்சி நிர்வாகம், நோய் தொற்று தடுப்பு பணிகளை மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து, ஓசூர், மாநகர நல அலுவலர் அஜிதா கூறுகையில், ஓசூரில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் காய்ச்சலுக்கு வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்வோர் குறித்த விபரங்கள் பெறப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை ஓசூரில், எந்த பாதிப்பும் கண்டறியப்பட வில்லை என்றார்.
- போலீசார் ஊழியர்கள் 6 பேரை பிடித்து விசாரித்தனர்.
- பல மோசடிகளில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரு:
பெங்களூருவில் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் ஊழியர்கள் சிவு, சமீர், மனோகர், கிரிஷ், ஜக்கேஷ், ஜஸ்வந்த் ஆகிய 6 பேர் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பாமல் சுழற்சி முறையில் ஒவ்வொரு எந்திரத்திலும், பணத்தை மாற்றி, மாற்றி வைத்து ரூ. 43.76 லட்சத்தை மோடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து நிறுவன அதிகாரிகள் அவர்கள் மீது மகாலட்சுமி லேஅவுட் போலீசில் புகார் செய்தனர். போலீசார் ஊழியர்கள் 6 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ஒரு கொள்ளை திரில்லர் படத்தை பின்பற்றி ஏ.டி.எம்.மில் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ. 52 லட்சம் மதிப்புள்ள ரொக்கம், ரூ. 40 லட்சம் மதிப்புள்ள 3 சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் இவர்கள் பல மோசடிகளில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மாற்றுத்திறனாளி தடகள வீரருக்கு நிதி உதவியை கலெக்டர் வழங்கினார்.
- தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் பெங்களூரில் நடைபெறுகிறது.
சிவகங்கை
தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் பெங்களூரில் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தின் சார்பில் 100 மீட்டர், 200 மீட்டர் போட்டிக்கு மாற்றுத்திறனாளி வீரரான சிவகங்கை மாவட்டம், சிவல்பட்டி கிராமத்தை வினோத்குமார் தகுதி பெற்றுள்ளார்.
அவருக்கு பாராலிம்பிக் கமிட்டியால் நுழைவு கட்டணம், போக்குவரத்து, உணவு, தங்குமிடம், மருத்துவ உதவிகளுக்காக ரூ. 25 ஆயிரம் நிதி உதவியை பாராலிம்பிக் கமிட்டியின் சிவகங்கை மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி தலைமையில் வழங்கினார்.
அப்போது சிவகங்கை மாவட்ட பாரா ஒலிம்பிக் விளையாட்டு செயலாளர் பாபு, துணைத் தலைவர் சரவணன், பொருளாளர் ராஜபாண்டி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பேருந்து இருக்கைகளில் ஆண்கள் அமர்ந்து சென்றால் அபராதம் வசூலிப்பது வழக்கம்.
- அரசு போக்குவரத்து ஊழியர்கள் நடத்திய சோதனையில் சுமார் 170 ஆண்கள் பயணம் செய்தது தெரியவந்துள்ளது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஓடும் நகரப்பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்காக தனியாக இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ள பெண்களுக்கான இருக்கையில் ஆண்கள் அமர்ந்து சென்றால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், பெங்களூருவில் போக்குவரத்து கழக ஊழியர்கள், நடத்திய சோதனையில் 170 ஆண்கள் பல்வேறு நகர பேருந்துகளில் பெண்களுக்கான இருக்கையில் அமர்ந்து பயணம் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பயணிகளிடம் இருந்து ரூ.17 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பி.எம்.டி.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
