search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 189940"

    தலைவாசல் அருகே நாய்கள் கடித்ததில் 13 ஆடுகள் பலியான சம்பவத்தால் பொதுமக்களும், விவசாயிகளும் அச்சமடைந்து உள்ளனர்.
    தலைவாசல்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே காட்டுக்கோட்டை புதூரைச் சேர்ந்தவர் முகமது சுல்தான். விவசாயி. இவர் தனது விவசாய தோட்டத்தில் கொட்டகை போட்டு அதில் 30 ஆடுகளை வளர்த்து வந்தார்.

    நேற்று அதிகாலை முகமது சுல்தானின் மனைவி நூர்ஜகான் ஆட்டு கொட்டகைக்கு சென்றார். அப்போது அங்கு ஆடுகள் செத்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி கணவருக்கு தகவல் கொடுத்தார். முகமது சுல்தான் வந்து பார்த்தபோது 13 ஆடுகள் செத்து கிடந்தன.

    இதுகுறித்து முகமது சுல்தான் கிராம நிர்வாக அலுவலர் ரகுபதியிடம் தெரிவித்தார். இதையடுத்து காட்டுக்கோட்டை கால்நடை உதவி மருத்துவர் மணிவேல் அங்கு வந்து பரிசோதனை செய்தார். பின்னர் ஆட்டின் உடல்கள் புதைக்கப்பட்டன. நாய்கள் கடித்ததில் ஆடுகள் செத்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதுபற்றி அந்த கிராம மக்கள் கூறும்போது, காட்டுக்கோட்டை சுடுகாட்டில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதேபோல் கறிக்கடை பகுதிகளிலும் நாய்கள் சுற்றுகின்றன. இவற்றை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த சில நாட்களில் இதே ஊரைச் சேர்ந்த சிலருடைய 100 கோழிகள், 30 ஆடுகள், ஒரு கன்றுகுட்டி ஆகியவற்றை நாய்கள் கடித்துக் கொன்றன. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் அச்சமடைந்து உள்ளனர். எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும், என்றனர். 
    பழனி அருகே, தெருநாய்கள் கடித்ததில் 5 ஆடுகள் இறந்தன. தெருநாய்கள் தொல்லையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    கீரனூர்:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள மேல்கரைப்பட்டி நால்ரோட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாயி. இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் கொட்டகை அமைத்து அதில் ஆடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ராஜேந்திரனின் தோட்டத்துக்குள் தெருநாய்கள் புகுந்து கொட்டகையில் இருந்த ஆடுகளை கடித்து குதறின. இதில் படுகாயமடைந்த 5 ஆடுகள் துடிதுடித்து இறந்தன.

    நேற்று காலையில் வழக் கம்போல் தோட்டத்துக்கு சென்ற ராஜேந்திரனிடம் தெருநாய்கள் கடித்ததில் 5 ஆடுகள் இறந்து போனதை அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தோட்டத்துக்கு சென்று இறந்த ஆடுகளின் உடல்களை பார்த்தார். பின்னர் ஊராட்சி நிர்வாகத்திடம் இதுகுறித்து புகார் அளித்த அவர், தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார். அதையடுத்து இறந்த ஆடுகள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அவருடைய தோட்டத்திலேயே புதைக்கப்பட்டது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட மேய்ச்சலுக்காக விடப்பட்ட கன்றுக்குட்டியை தெருநாய்கள் கடித்து கொன்றன. மேலும் ஆடு, கோழிகள் மற்றும் சாலையில் நடந்து செல்பவர்களையும் துரத்திச்சென்று கடிக்கின்றன. இதனால் எங்கள் பகுதி மக்கள் சாலையில் நடமாடவே அச்சப்படுகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த ஊராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். 
    மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜெயின் சமூகத்தினரின் எதிர்ப்பால் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஆடுகள் ஏற்றுமதி செய்வதை அம்மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது. #SheepExport #Maharashtra
    மும்பை:

    விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஏற்றுமதி செய்ய மகாராஷ்டிர அரசு முடிவு செய்தது. அதன்படி முதற்கட்டமாக இரண்டாயிரம் ஆடுகளை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நேற்று மதியம் ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

    ஆனால், இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெயின் சமூகத்தினர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் ஆதரவு கோரி ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் நோக்கி மிகப்பெரிய பேரணியை நடத்தினர். இதனால், ஆடுகள் ஏற்றுமதி திட்டத்தை அம்மாநில அரசு ஒத்திவைத்துள்ளது. போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, ஏற்றுமதி குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பேசிய திகம்பர் ஜெயின் மகாசபா சமிதியின் தலைவர், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க இதைவிட சிறந்த வழிகள் பல இருப்பதாகவும், ஆடுகளை ஏற்றுமதி செய்வதற்கு நாங்கள் முழுமையாக எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். #SheepExport #Maharashtra
    செஞ்சி அருகே கடித்து குதறிய காயங்களுடன் இறந்து கிடந்த 6 ஆடுகளை கொன்றது சிறுத்தையாக இருக்கலாம் என்று பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மலைப்பகுதியின் அடிவாரத்தில் இல்லோடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 2 ஆயிரம் பொதுமக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆடு-மாடுகளையும் வளர்த்து பராமரித்து வருகிறார்கள்.

    இல்லோடு கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 37). இவர் 11 ஆடுகளை வளர்த்து வந்தார். தினமும் மேய்ச்சலுக்கு சென்று வந்ததும், அந்த ஆடுகளை விவசாய நிலத்தில் உள்ள கொட்டகையில் அடைத்து வைப்பார்.

    நேற்று முன்தினம் மாலையில் 11 ஆடுகளையும் கொட்டகையில் அடைத்து விட்டு, சேகர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் சேகர் வந்து பார்த்தபோது 6 ஆடுகள் கழுத்து, வயிறு, கால் பகுதியில் விலங்கு கடித்து குதறியதற்கான காயங்களுடன் இறந்து கிடந்தன. மேலும் 2 ஆடுகள் காணாமல் போய் இருந்தன. இதைப்பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதற்கிடையே இந்த தகவல் காட்டுத்தீ போல அந்த கிராமம் முழுவதும் பரவியது. இதையடுத்து ஆண்களும்-பெண்களும் திரண்டு மலை அடிவாரப்பகுதிக்கு வந்தனர். இறந்து கிடந்த ஆடுகளை பார்த்தனர்.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் முத்துகுமார் மற்றும் வனச்சரகர் பாபு ஆகியோர் அங்கு விரைந்து வந்து இறந்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டனர். மேலும் நள்ளிரவு நேரத்தில் புகுந்த மர்ம விலங்குகளின் கால் தடத்தை ஆய்வு செய்தனர். வந்து சென்றது எந்த வகையை சேர்ந்த விலங்கின் கால்தடம் என்பதை ஆராய்ந்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த மலைப் பகுதி அடிவாரத்தில் 4 இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. வனச்சரகர்களும் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்துக்குள் சிறுத்தை நடமாட்டம் இருந்தது. தற்போது கோடை காலம் என்பதாலும், மலைப்பகுதியில் உணவு இல்லாததாலும் விலங்குகள் மலை அடிவாரத்துக்கு வந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துகின்றன. நள்ளிரவில் வந்தது சிறுத்தையாக இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது. இந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த கிராம பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
    ×