search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சி.பி.ஐ."

    • 17 வங்கிகள் இணைந்து 34,000 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் டி.எச்.எப்.எல். வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்து விசாரித்து வருகிறது.
    • இது நாட்டிலேயே மிகப்பெரிய வங்கி கடன் மோசடியாகும்.

    திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (DHFL) நிறுவனத்தின் இயக்குநர் தீரஜ் வதாவன், ₹34,000 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் சி.பி.ஐ.யால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

    2022 ஆம் ஆண்டு இந்த வழக்கு தொடர்பாக தீரஜ் வதாவன் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

    17 வங்கிகள் இணைந்து 34,000 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் டி.எச்.எப்.எல். வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்து விசாரித்து வருகிறது. இது நாட்டிலேயே மிகப்பெரிய வங்கி கடன் மோசடியாகும்.

    ஏற்கனவே யெஸ் வங்கியின் கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே இருந்த தீரஜ் வதாவனை மீண்டும் சி.பி.ஐ. கைது செய்துள்ளது.

    தீரஜ் வதாவனை நேற்று கைது செய்த சி.பி.ஐ. இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாகவும் அவருக்கு மே 30 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • வந்தாரை வாழவைக்கும் திருப்பூருக்கு வந்திருக்கிறேன் - முதல்வர் ஸ்டாலின்
    • நேற்று நடந்த ராகுல் காந்தியின் கூட்டம் பாகுபலி படம் போல பிரமாண்டமாக இருந்தது

    கோவை அவிநாசியில், நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா மற்றும் திருப்பூர் தொகுதி சி.பி.ஐ வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது பேசிய அவர், "வந்தாரை வாழவைக்கும் திருப்பூருக்கு வந்திருக்கிறேன். மலைகளின் அரசியாகவும், நீர் வீழ்ச்சியின் எழுச்சியாகவும். மக்கள் மனங்களில் மகிழ்ச்சியாகவும் உள்ள இடத்திற்கு வந்துள்ளேன்.

    நேற்று நடந்த ராகுல் காந்தியின் கூட்டம் பாகுபலி படம் போல பிரமாண்டமாக இருந்தது. ஒரே ஒரு கூட்டம் டோட்டல் பாஜகவும் குளோஸ். ராகுல் காந்தியின் ஒரு நாள் வருகையே பிரதமர் மோடியின் மொத்த பிரசார பயணத்தையும் காலி செய்துவிட்டது.

    தமிழ்நாட்டு மக்களை உண்மையான அன்பால் மட்டுமே ஆள முடியும் என்பதை ராகுல் காந்தி நிரூபித்துவிட்டார். ராகுல் எந்த அளவுக்கு தமிழ்நாட்டை மதிக்கிறார். என்பது அவரின் பேச்சின் மூலம் தெரிந்திருக்கும்.

    மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தார் என்றால், முதலில் இட ஒதுக்கீட்டைதான் ரத்து செய்வார். ஏனென்றால் சமூகநீதி என்றாலே பாஜகவுக்கு அலர்ஜி.

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா விளங்க காரணம், இந்திய அரசியலமைப்பு சட்டம். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால், புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கிய அந்த அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றிவிடுவார்.

    திருப்பூரில் ஜி.எஸ்.டி குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை, பாஜகவினர் தாக்கியுள்ளனர். இதுதான் பாஜக மக்களை மதிக்கும் லட்சணம். இதுதான் பாஜக பெண்களுக்கு கொடுக்கிற மதிப்பு. மக்களை மதிக்காமல் அராஜகம் செய்கிற பாஜகவினர் திருப்பூரை மணிப்பூராக்கிவிடுவார்கள். மோடியும், பாஜகவும் வீட்டுக்கும் கேடு; நாட்டுக்கும் கேடு.

    கலவரம் செய்வது பாஜகவின் DNAவில் ஊறிப் போன ஒன்று. அமைதியான இடத்தில்தான் தொழில் வளரும், தொழில் வளர்ச்சி இருக்கும், நிறுவனங்களை நடத்த முடியும். பாஜக போன்ற கலவரக் கட்சிகளை உள்ளே விட்டால், அமைதி போய்விடும். தொழில் வளர்ச்சி போய்விடும்.. நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியாது" என்று தெரிவித்தார்.

    மோடி ஆட்சியில் பத்திரிக்கையாளர்களும், ஊடக நிறுவனங்களும் நிம்மதியாக செயல்பட முடியவில்லை. பத்திரிக்கையாளர்கள் படுகொலையை ஒன்றிய அரசு வேடிக்கை பார்க்கிறது. மோடி ஆட்சியில் பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டதன் விளைவுதான், ஊடக சுதந்திரத்தில் 161 இடத்தில் இந்தியா இருக்கிறது. நமது பழம்பெரும் ஜனநாயகத்திற்கு மோடி ஏற்படுத்திய அவமானம் இது

    பன்னீர் செல்வத்தை தர்ம யுத்தம் நடத்த வைத்தது, பழனிசாமியை முதலமைச்சராக கொண்டுவந்தது, இரு துருவங்களாக இருந்த பன்னீரையும், பழனிசாமியையும் சேர்த்தது, தினகரனை கைது செய்து தங்களின் அடிமையாக மாற்றியது, அரசியலுக்குள் சசிகலாவை வரவிடாமல் தடுத்தது, தற்போது பன்னீரையும், தினகரனையும் மிரட்டி தேர்தலில் நிற்க வைத்திருப்பதும் பாஜகதான். இப்படி டிவி சீரியல்களில் வருவதுபோல், திடீர் திடீர் என காட்சிகளை மாற்றி சதி நாடகம் நடத்துகிறது பாஜக" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். 

    • சொத்து பத்திரங்களை வாங்கி வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர்.
    • பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

    பல்லடம் :

    பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த உமா மகேஸ்வரி, பிரியா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நபர்கள் மோசடி நபர்களிடம் இருந்து பணத்தை மீட்டுத் தரக்கோரி மனு அளித்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது :- எங்களிடம் பல்லடத்தை சேர்ந்த சிவகுமார், அவரது அண்ணன் விஜயகுமார் மற்றும் விஜயகுமார் மகன் ராகுல் பாலாஜி மற்றும் பிரவினா உள்ளிட்டோர் எங்களுக்கு கடன் வாங்கி தருவதாகவும், தொழிலில் பங்குதாரராக சேர்த்து கொள்வதாகவும் கூறி, எங்களது சொத்து பத்திரங்களை வாங்கி வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர். இதுகுறித்து ஏற்கனவே பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. பணத்தை இழந்து அவதிப்பட்டு வருகிறோம். இந்த மோசடியால் எங்களது குடும்பங்கள் பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது.

    இது குறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து ஒரு மாதத்திற்கு பின்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு ஆஜர்படுத்துமாறு பல்லடம் நீதிமன்றம் ஒரு மாதத்திற்கு முன் பிடிவாரண்ட் பிறப்பித்தும் போலீசார் அவர்களை கைது செய்ய தாமதப்படுத்துகின்றனர். மோசடி கும்பல் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். ஆனால் போலீசார் தலைமறைவாக உள்ள அவர்களை கைது செய்யாமல் உள்ளனர். இதனால் மோசடி கும்பலுக்கு போலீசார் துணை போவதாக எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இந்த மோசடி வழக்கினை சிபிஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • முன்னாள் அமைச்சர்களை விசாரிக்க அனுமதி கேட்டால் சி.பி.ஐ.க்கு கொடுக்கதான் வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
    • அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக ரூ.14 லட்சம் மதிப்பில் ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு, நுண்ணறிவுக்கான வரைபடங்கள் உள்ளிட்டவற்றுடன் அமைக்கப்பட்ட உணர்வுகள் ஒருங்கிணைப்பு மற்றும் சிகிச்சை பூங்கா, முழு உடற்பரிசோதனை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் மையம் ஆகியவற்றை மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. முத்துராஜா, மருத்துவ கல்லூரி முதல்வர் பூவதி, நகராட்சி தலைவர் திலகவதி செந்தில், இருக்கை மருத்துவர் இந்திராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது :-

    முன்னாள் அமைச்சரிடம் விசாரணை நடத்த வேண்டுமென சிபிஐ அனுமதி கேட்டால் அனுமதி கொடுத்து தான் ஆக வேண்டும். இது குறிதது தமிழக முதல்வர் உரிய முடிவை எடுப்பார்.

    அதே சமயம் குட்கா விவகாரத்தில் முன்னாள் அமைச்சரை விசாரிக்க வேண்டுமென சிபிஐ அனுமதி கேட்டுள்ளதாக தகவல் மட்டும் வெளியாகி உள்ளது. இது குறித்து முழு விவரங்கள் இனிமேல் தான் அதிகாரிகளிடம் கேட்டு ஆலோசிக்க உள்ளேன்.

    தற்போது முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் மத்திய அரசின் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. நாங்கள் எங்கெல்லாம் சோதனை நடத்தினோமோ அங்கெல்லாம் சோதனை நடத்தப்படுகிறது. நாங்கள் சோதனை நடத்தும் போது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறியவர்கள் வருவான வரித்துறை சோதனை குறித்து வாய் திறக்கவில்லை.

    சிறைகளில் கைதிகள் செல்போன்கள் பயன்ப டுத்த அலுவலர்கள் உடந்தையாக இருந்தால் அவர்கள் மீது பணியிடை நீக்கம், பணி நீக்கம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். 

    பீகார் மாநிலத்தில் அரசு நிதியுதவி பெறும் சிறுமியர் காப்பகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை தொடர்பான விசாரணை இன்று மத்திய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது. #CBIinvestigation #abuseofminorgirls #MuzaffarpurShelterHome
    பாட்னா:

    பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள சாஹூ சாலையில் அரசு நிதியுதவி பெறும் சிறுமியர் காப்பகம் ஒன்றுள்ளது. இங்கு சுமார் 40 சிறுமியர் தங்கியுள்ளனர். இந்த காப்பகத்தின் நிர்வாகிகள் சிறுமிகளை கற்பழித்ததாகவும், ஒரு பெண்ணை அடித்துக் கொன்று காப்பக வளாகத்துக்குள் புதைத்து விட்டதாகவும் புகார்கள் எழுந்தன.

    இதைதொடர்ந்து, இங்குள்ள சிறுமிகளை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்தபோது அவர்களில் பெரும்பாலானோர் ஏதோ ஒரு காலகட்டத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்தது.

    காப்பகத்தில் உள்ள இரு சிறுமிகள் அளித்த தகவலின் அடிப்படையில் மோப்ப நாய்களுடன் வந்த போலீசார் காப்பக வளாகத்தில் புதைக்கப்பட்ட பிணைத்தை கைப்பற்றுவதற்காக தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனைக்கு மறுப்பு தெரிவித்த காப்பகத்தை சேர்ந்த சுமார் பத்து பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக மாநில அரசு விசாரணை நடத்தினால் உண்மை வெளிவராது என சமூக ஆர்வலர்கள் கருதினர். இதே கருத்தை முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் மகனான தேஜஸ்வி யாதவ் நேற்று வலியுறுத்தினார்.

    இந்நிலையில், இந்த காப்பகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை தொடர்பான விசாரணை இன்று மத்திய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது.

    பீகார் மாநில அரசின் பரிந்துரையை ஏற்று இந்த காப்பகத்தில் உள்ள சிறுமியர்களுக்கு மனதளவிலும், உடல்ரீதியாகவும் ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை தொடர்பாக காப்பக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிக்க தொடங்கி உள்ளனர். #CBIinvestigation #abuseofminorgirls #MuzaffarpurShelterHome
    ×